தமிழ் அரங்கம்

Showing posts with label மலையக. Show all posts
Showing posts with label மலையக. Show all posts

Wednesday, March 25, 2009

புதியதோர் அத்தியாயம் : பிரதீபன்

இன்று நாம் கடக்கும் ஒவ்வொரு தினங்களும் இலங்கையின் குடிமக்களாக எமக்கு மிக முக்கியமான தினங்கள். இலங்கையின் கொடூரமான யுத்த வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு மனிதப் பேரழிவுகள் நடக்கும் தினங்களில் நாம் வாழ நேரிட்டிருக்கிறது. வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிர்ரைவுபெர்ரக்காத்திருக்கிறது. புதிய அத்தியாயங்கள் எப்படி இருக்கப் போகின்றது என்பதையெல்லாம் தீர்மானிக்கப்போகும் நாட்களை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். 30 வருடகால யுத்தமும் அதன் அனர்த்தங்களும் அடுத்து வரப்போகும் அத்தியாயத்தில் வரவிடாமல் பார்க்க வேண்டிய தருணமும் இதுவே.
மீண்டும் ஒரு முறை தவறிழைக்கும் பட்சத்தில் அழிவுகள் பாரதூரமானதாக இருக்கும். சிதறும் உடலின் துகள்கள் காற்றின் ஒவ்வொரு துணிக்கைகளிலும் கலந்துவிடும். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, தலித், வேளாள, பார்ப்பன, உடரட்ட, பிட்டரட்ட.... என யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாமல் போகும். ஒவ்வொருவரும் தத்தம் குழுவைக் காக்க பேரம் பேசப் புறப்பட்டால் சக மனிதனின் பிணங்களை மிதித்தே செல்ல வேண்டி இருக்கும்.
1.வரலாற்றைப் பதிந்து வைக்க மனிதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான ஊடகங்களைக் கையாண்டிருக்கிறார்கள். கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் எனப் பல வகையான வரலாற்றுப் பதிவுகள் நம்முன் உள்ளன. நவீன வரலாற்றுப் பதிவில் அதிமுக்கியம் வாய்ந்ததும் பொருத்தமானதுமாக புகைப்படங்களே கருதப்படுகின்றன.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்