தமிழ் அரங்கம்

Saturday, July 28, 2007

ரிலையன்ஸ் ஃபிரெஷ் எதிர்ப்பு : வாழ்வுரிமைக்கான போராட்டம்

ரிலையன்ஸ் ஃபிரெஷ் எதிர்ப்பு : வாழ்வுரிமைக்கான போராட்டம்

""சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் நுழைவதால், சிறு வியாபாரிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது'' என ஆளும் கும்பலும், அவர்களது எடுபிடிகளும் நடத்தி வரும் பிரச்சாரத்திற்கு, சிறுவணிகர்கள் ஏமாந்து போய்விடவில்லை.

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும், சிறு வணிகர்களின் ஆதரவோடு, மே 1, தொழிலாளர் தினத்தன்று, சென்னையில் ரிலையன்ஸ் ஃபிரஷ் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தின.

மே 5 அன்று சேலத்தில் நடந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாட்டில், சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில்லறை வணிகத்தில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மாவட்டம் முழுவதும் காய்கறி வியாபாரிகள், தள்ளுவண்டி சிறு வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மே 18ஆம் நாளன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தியதோடு, ஈரோடு நகரில் மாபெரும் கண்டன ஊர்வலத்தையும் நடத்தியுள்ளனர்.

ஜார்கண்டு மாநிலத் தலைநகர் ராஞ்சியில், மே 12 அன்று, சிறு வணிகர்களும், காய்கறி வியாபாரிகளும் இணைந்து ரிலையன்ஸ் பிரெஷ்ஷûக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் பொழுது, அவர்கள் ரிலையன்ஸின் கடைகள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதோடு, அக்கடைகளுக்குள் நுழைந்து கலகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராஞ்சி நகரிலுள்ள ஐந்து ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடைகளையும் இனி போலீசு பாதுகாப்போடுதான் நடத்த முடியும் என்ற அச்சுறுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், காய்கறி வியாபாரிகள் மே 20 அன்று முகேஷ் அம்பானியின் உருவ பொம்மையை எரித்துத் தங்களின் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

சிறு பொறியாக எழுந்துள்ள இப்போராட்டங்களை ""வன்முறை'' என்றும், வளர்ச்சிக்கு எதிரானவை என்றும் ஆளும் கும்பல் அவதூறு செய்து வருகிறது.

இந்தியாவில் ஏறத்தாழ 4 கோடி குடும்பங்கள் சிறு வணிகத்தை நம்பித்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றன. சில்லறை வணிகத்தில் நுழைந்துள்ள அம்பானியும், டாடாவும், பிர்லாவும், பாரதியும், அவர்களின் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளான வால் மார்ட்டும், காரஃபோரும் இந்த 4 கோடி குடும்பங்களை அழித்துத்தான், 12 இலட்சம் கோடி ரூபாய் புரளும் சில்லறை வணிகச் சந்தையைக் கைப்பற்றத் திட்டம் போடுகின்றன. நான்கைந்து முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக, 4 கோடி குடும்பங்கள் அழிக்கப்படுவது வன்முறை இல்லையாம்; அது பொருளாதார வளர்ச்சியாம்! தனியார்மய தாராளமயத்தின் நீதி எப்படியிருக்கிறது பாருங்கள்.

சட்டமே, இந்தச் சந்தை பயங்கரவாதத் தாக்குதலைப் பாதுகாக்கும் பொழுது, நாம் ஏன் இந்தச் சட்டத்திற்கு அடிபணிந்து நடந்து கொண்டு போராட வேண்டும்? சட்டத்தையும், ஓட்டுக் கட்சிகளையும் புறக்கணித்து விட்டு, கலகத்திலும், போராட்டத்திலும் இறங்குவதன் மூலம் மட்டுமே, இச்சந்தை பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும்.

ராஞ்சி நகர சிறு வியாபாரிகள் ரிலையன்ஸ் பிரெஷ்ஷûக்கு எதிராக நடத்தியிருக்கும் ""சட்டத்தை மீறிய வன்முறை போராட்டம்'' இந்த உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

Friday, July 27, 2007

புலித் தமிழீழமும், புலியொழிப்பும், தமிழ்மக்களின் பிரச்சனையைத் தீர்க்குமா!

புலித் தமிழீழமும், புலியொழிப்பும், தமிழ்மக்களின் பிரச்சனையைத் தீர்க்குமா!


பி.இரயாகரன்
26.07.2007


திக்கம் பெற்று நிற்கும் எதிர்புரட்சிகர சக்திகள் அனைத்தும், இதற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வைக் காட்டமுனைகின்றனர். இப்படி கடந்தகால வரலாறு முழுக்க, இதற்குள்ளாகவே ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்று போட்டனர். இந்த இரண்டு எதிர்புரட்சிகர வழிக்கும் வெளியில், தமிழ்மக்கள் சிந்திப்பதை செயல்படுவதை இருதரப்பும் அனுமதிப்பதில்லை. அப்படியான முயற்சிகளையும், சிந்தனைகளையும், படுகொலைகள் மூலம் இருதரப்பும்; தடுத்து பதிலளித்தனர். படுகொலை சாத்தியமற்ற நிலையில், இந்த வழிமுறையை முடிந்தவரை இழிவுபடுத்தினர்.


இருதரப்பும் தமிழ் மக்களைச் சார்ந்து நிற்பதை அரசியல் ரீதியாகவே மறுக்கின்றனர். அரசியல் ரீதியாக மக்களின் உரிமையை அங்கீகரிப்பது கிடையாது. மக்களின் உரிமைகளை, தமது சொந்த வர்க்க நலனுக்கு எதிரானதாகவே பார்க்கின்றனர். இப்படிப்பட்டவர்கள், தாம் தமிழ்மக்களில் அக்கறை உள்ளவராக காட்டி நடிப்பதன் மூலம், தமிழ் மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர்.


புலிகளை எடுத்தால் அவர்கள் பேரினவாதத்தைக் காட்டுகின்றனர். ஆகவே புலித் தமிழீழத்தை வைத்து தமிழ் மக்களை அடக்குகின்றனர்.


புலியெதிர்ப்பை எடுத்தால் பாசிசப் புலியை காட்டுகின்றனர். ஆகவே புலியொழிப்பை வைத்து தமிழ் மக்களை அடக்குகின்றனர்.


இவர்கள் தமிழ்மக்களின் பிரச்சனையை இரண்டாக பிரித்துக் காட்டுகின்ற போது, தமிழ் மக்கள் இதற்குள்ளாக மட்டும் வாழவில்லை. அதாவது இரண்டில் ஒன்றே தமிழ் மக்களின் பிரச்சனை என்று இவர்கள் கூறுவது போல், தமிழ் மக்களின் மொத்த பிரச்சனையை மறுக்கின்றனர்.


பேரினவாதம் தமிழ்மக்களின் மீதான ஒடுக்குமுறையை தீவிரமாக்கிய போது அனைவரும் தமிழீழம் என்றனர். அப்போதும் அனைவரும் சமூக விடுதலையை உள்ளடக்கிய வகையில் தீர்வையும் விடுதலையையும் முன்வைத்தனர். இப்படி சமூகப் பிரச்சனைகளுடன் மக்களை அணுகியவர்கள், நடைமுறையில் அதற்காக போராடவும் மறுத்தனர். மற்றவர்கள் அதற்காக போராடுவதைக் கூட எதிராகப் பார்த்தனர். இப்படி சமூகப் பிரச்சனையை தீர்க்கவே மறுத்தனர். இப்படியே தான் எதிர்புரட்சிகரத் தலைமைகள் உருவானது.


சமூக பிரச்சனையின் அடிப்படையில் அணிதிரண்டவர்கள், சமூகப் பிரச்சனையை முன்வைத்தபோது அவர்களை அடக்கினர். அதை மீறிய போது கொன்றனர். இப்படி எதிர்புரட்சிகர அரசியல் வரலாறே தொடங்கியது. மக்களை ஏமாற்றிய அரசியல் வரலாற்றுத் தொடர்ச்சி, இன்று புலித் தமிழீழம், புலியொழிப்பாகி நிற்கின்றது. புரட்சிகரமான மக்கள் அரசியல் மறுக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு இழிவாடப்படுகின்றது.


தமிழீழம் என்று தமிழ்மக்களின் பெயரில் அவர்களைக் கொன்ற எமது எதிர்புரட்சிகர தலைமைகள், அன்று போல் இன்றும் புரட்சிகரமான சிந்தனையை அனுமதிப்பதில்லை.


தமது வர்க்க நலனை சார்ந்து தமிழ்மக்களை பயன்படுத்தும் எதிர்புரட்சிகர செயல்பாடுகளை, தமிழ் மக்களின் புரட்சிகர செயல்பாடாக காட்டுகின்றனர். இந்த எதிர்புரட்சிகர துரோக வரலாற்றையே தமிழ் மக்களின் தலைவிதியாக, தீர்வாக காட்டுகின்ற அனைத்து முயற்சியையும் முறியடிக்காத வரை, தமிழ் மக்களுக்கு விடுதலை என்பது கிடையாது.



Thursday, July 26, 2007

தருமபுரி பேருந்து எரிப்பு தீர்ப்பு: குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க

தருமபுரி பேருந்து எரிப்பு தீர்ப்பு:
குற்றக் கும்பலின் கூடாரமே அ.தி.மு.க



ரியாக ஏழாண்டுகள் ஏழு நாட்களுக்குப் பிறகு பார்ப்பன பாசிச ஜெயலலிதா கும்பல் ஏற்படுத்திய பல்வேறு தடைகளயும் மீறி தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அ.இ.அ.தி.மு.க வின் மூன்று பிரமுகர்களுக்குத் தூக்குத் தண்டனையும் மேலும் அபராதத்தோடு ஏழாண்டு சிறையும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் அக்கட்சியின் 25 பிரமுகர்களுக்கு அபராதத்தோடு ஏழாண்டு மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் சொகுசு ஓட்டல் முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 2000-ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது அதற்கு எதிராக மாநிலம் முழுவதும் அக்கட்சி அராஜகம் - வன்முறை வெறியாட்டம் நடத்தியது. அப்போது கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய கோவை வேளாண் பல்கலைக்கழகப் பேருந்தை மறித்துக் கொளுத்தியதில் , மூன்று மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்ற வழக்கில்தான் இத்தீர்ப்பு வந்துள்ளது.



கடுகளவு பெறாத விவகாரங்களில் எல்லாம் நாளும் அறிக்கை விடுவதையே அரசியல் அரும்பணியாகக் கொண்டுள்ள ஜெயலலிதாவோ, காயடிக்கப்பட்ட பன்றியைப் போல மேடைகள் தோறும் கதறும் வைகோவோ, அவர்களின் பக்கபலமாக நிற்கும் சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பன ஊதுகுழல்களோ முன்வாயையும் பின்வாயையும் பொத்திக் கொண்டுள்ளது வியப்புக்குரியதில்லை. ”மரண தண்டனை எதிர்ப்பு மனிதாபிமானிகளும்” அவர்கள் அடியொற்றி மௌனம் சாதிப்பதும் வியப்புக்குரியதில்லை. அதேசமயம் நடந்தவை முன் கூட்டியே திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட கொலைகள் அல்ல என்பதால் மரணதண்டனை மிகையானதென்று அ.இ.அ.தி.மு.க அனுதாபிகள் முணுமுணுக்கின்றனர். இந்தக் கொலைகளில் உள்நோக்கம் எதுவுமில்லை என்று கூறுவதே தவறானது. ” அரசியல் பதவி ஆதாயத்துக்காக மட்டுமே இந்த மனிதத்தன்மையற்ற, கொடூரமான பயங்கரமான கொலைகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று நீதிபதி விளக்கியிருக்கிறார்.



ஆயிரத்தெட்டு கனவுகளோடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுப்பப்பட்ட தம் மக்கள், கதறித் துடிதுடிக்க எரிந்துக் கரிக்கட்டைகளாக் கிடந்ததைப் பார்த்த பெற்றோர், ஏழாண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நீதி கிடைத்ததாக ஆறுதல் பெருமூச்சு விடுகின்றனர். தங்கள் அன்பு மகள்கள் துடிதுடித்து இறந்ததைப் போல, குற்றவாளிகளும் துடிதுடித்துச் சாக வேண்டும், தங்கள் மகள்களுக்கு நேர்ந்த கதி இனி யாருக்கும் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இத் தீர்ப்பு உறுதியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் வற்றிய துயர முகத்தோடு கூறுதிறார்கள். அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொண்ட நடுத்தரவர்க்க அறிவுஜீவிகள், தமது கோபாவேசத்தை தொலைக்காட்சிகளில் குறுஞ் செய்திகளாகவும், செய்தி ஏடுகளில் ஆசிரியருக்கு வாசகர் கடிதங்களாகவும் அனுப்பிக் குவித்தனர். அவர்கள் தமது ஆத்திரத்தை அரசியலற்றவாதத்தில் தோய்த்து பொதுவில் தமது வர்க்க எதிரிகளாகக் கருதும் அரசியல்வாதிகளுக்கு எதிராகச் சீறினர். தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தரப்பட்டுள்ள தீர்ப்பு சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அராஜக- வன்முறை மற்றும் அதிகார முறைகேடுகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்ட எல்லா அரசியல்வாதிகளுக்கும் ” குற்றம் புரிந்துவிட்டு தப்பி விட முடியாது” என்றவாறு தரப்பட்டுள்ள எச்சரிக்கை –தண்டனை – படிப்பினை என்று சித்தரித்தனர். ஆனால், இந்தப் பார்வை முழுக்கவும் காலியாகிக் கொண்டிருக்கும் அக்கிரகாரத் திண்ணையில் சாய்ந்து கொண்டுள்ள பழைய பஞ்சாங்கப் பார்ப்பன அறிவுஜீவிகளின் புலம்பல்கள் தவிர வேறொன்றுமில்லை.



பேருந்துக்குத் தீ வைத்தபோது ” எல்லோரையும் சேர்த்துக் கொளுத்துங்கடா .. அப்போது தான் புத்தி வரும்” என்று கொலையாளி கூச்சலிட்டிருக்கிறான். ஆனால் அதனைக் கண்டும் அனுபவித்தும் கூட சிறிய அதிர்வுக்கும் கூட அஞ்சி கூட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் இந்த எலும்பில்லாத நடுத்தரவர்க்க நத்தைகளுக்கு ”புத்தி” வரவில்லை. வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனை குற்றவாளிகளான அரசியல்வாதிகளுக்கான எச்சரிக்கை, படிப்பினை என்றால் இந்தக் குற்றச் சம்பவமோ, அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பதன் மூலம் தன்னலத்தோடு, பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடிக் கொள்ள எப்போதும் எத்தனிக்கும் நடுத்தரவர்க்கத்திற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை படிப்பினை அல்லவா ? ” இராமன் ஆண:டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையுமில்லை” என்ற நடுத்தர வர்க்கத்தின் விட்டேத்தித்தனம் உண்மையில் ஒரு வகை பிழைப்புவாதம் தான். போட்டி போட்டுக் கொண்டு கட்சித்



தலைமைக்குத் தனது விசுவாசத்தைக் காட்டி, அரசியல் பதவி ஆதாயம் அடைவதற்கான வேறொரு வகை பிழைப்புவாதம்தான், இந்த மனிதத் தன்மையற்ற, கொடூரமான கொலைவெறிக்கு அடிப்படையாய் இருந்தது.



தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கையும், தீர்ப்பையும் மேலவளவு சாதிவெறிப் படுகொலை வழக்கையும் தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. இரண்டு வழக்குகளுமே கொஞ்சமும் மனிதத்தன்மையற்ற, கொடூரமான முறையில் கும்பல் வெறியால் நிகழ்த்தப்பட்டவை. முதல் சம்பவம் பிழைப்புவாத அரசியல் நோக்கில் நடத்தப்பட்டது இரண்டாவது, சாதிவெறி அரசியல் நோக்கில் நடத்தப்பட்டவை. இரண்டுமே, கொடூரம் நிகழ்ந்த மாவட்டங்களில் வழக்கு நடத்தப்பட்டால் நீதி கிடைக்காதென்று சேலம் நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. மேலவளவு படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனை விதிக்கப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 14 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், அவர்களையும் பிணையில் அனுப்பி சுதந்திரமாக திரியவிட்டும் ஆதிக்க சாதிவெறிக்குக் கருணை காட்டியது நீதித்துறை. ஆனால், தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் நடுத்தர வர்க்கத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான அநீதிஅக்கிரமம் கண்டு கொதித்துப்போன நீதித்துறை, அதன் மீதே நம்பிக்கை இழந்துவிடக் கூடாதென்று அதிகபட்சத் தண்டனையான மரண தண்டனையை வழங்கியது.



அதிகபட்சத் தண்டனையாக மரண தண்டனை எதற்காக விதிக்கப்படுகிறது? ""குற்றவாளிகள் வெளியே வந்தால் சமூ கம் நிம்மதியாக வாழ முடியாது'' என்கிறார் அரசு வக்கீல். ""இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்கக் கூடாது'' என்கிறார், மாணவி கோகிலவாணியின் தந்தை. ""எங்கள் மகளுக்கு ஏற்பட்ட கதி இனி யாருக்கும் ஏற்படக்கூடாது... இத்தீர்ப்பு உறுதியாக நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவார்கள்'' என்கிறார் மற்றொரு மாணவி காயத்ரியின் தந்தை.



அவர்களின் நம்பிக்கை பலிக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வி. இந்த நம்பிக்கை நிச்சயமாக பலிக்காது தோற்றுப்போகும். இந்தக் கேள்விக்கான பதில், தீர்ப்பிலேயே பொதிந்திருக்கிறது. ""பயங்கரமான கொடூரமான இந்தச் செயல்களின் நோக்கம் அரசியல் லாபத்திற்காகவும் தங்களுடைய தலைவர்களிடம் நல்ல பெயர் எடுக்கவும் கொஞ்சம் கூட இரக்கமற்றமுறையில், இருதயம் இல்லாதவர்களாக கொலைகள் செய்துள்ளனர்'' என்கிறார் நீதிபதி. இத்தகைய பிழைப்புவாத கிரிமினல் குற்றவாளிகளை ஊட்டி வளர்க்கும் ஒரு அரசியல் கட்சி இந்த மாநிலத்தில் பத்தாண்டுகள் ஆளுங்கட்சியாகவும், இப்போதும் முதன்மையான எதிர்க்கட்சியாகவும் இருக்கிறது.



தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் என்னென்ன குற்றங்களுக்காக ஏழாண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோ, அதே குற்றங்களை அதேநாளில் அக்கட்சியின் பலநூறு உறுப்பினர்கள் புரிந்துள்ளனர். மேலும், தர்மபுரி கொலைக்குற்ற வழக்கில் தடையங்களை அழிப்பது, குற்றவாளிகளுக்கு மாதம் 5000 ரூபாய்வரை ஊதியம் வழங்குவது, சாட்சியங்களைப் பிறழச் செய்வது போன்ற பல குற்றங்களை அக்கட்சியும் அதன் அரசாங்கமும் செய்திருக்கிறது. கிருட்டிணகிரி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தபோது, இரண்டே நாட்களில் 22 அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.



கொளுத்தப்பட்ட மாணவி கோகிலவாணியின் தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டு, அரசும், போலீசும் கடும் கண்டனத்துக்குள்ளாகி, வழக்கு சேலத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகும் உயர்நீதி மன்றம் பரிந்துரைத்தவரை சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க மறுத்து, மேலும் மேலும் மேல் முறையீடு செய்து வழக்கை இழுத்தடித்தது. ஜெயலலிதா அரசும், அதிகாரிகளும் நீதிமன்ற அவமதிப்புத் தண்டனையிலிருந்து தப்பமுடியாத நிலையில் அரசு வழக்கறிஞரை நியமித்தனர். பிறகும், வழக்குத் தொடர முடியாதவாறு வழக்கு ஆவணங்கள் தொலைந்து போனதாக நாடகமாடியது. கொளுத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் கோடீசுவர முதலாளிகளை அனுப்பி விலைக்கு வாங்கிடச் செய்த முயற்சி பலிக்காதபோது, கொலைமிரட்டல்கள் விடப்பட்டன. எல்லாத் தடைகளையும் கடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு, அவர்களின் குடும்பங்களுக்குப் பல இலட்சம் ரூபாய் ""கருணைத் தொகை'' ஏற்பாடு செய்துள்ளது ஜெயலலிதா கட்சி.



தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மட்டுமல்ல, பொதுவில் ஓட்டுக்கட்சி அரசியலில் கொள்கை, கோட்பாடு, தத்துவம் ஏதுமற்ற பிழைப்புவாதமே மேலோங்கியுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு. க.வோ, முழுக்கவும் அரசியல் பிழைப்புவாதக் கிரிமினல்களின் கட்சியாக உள்ளது. கட்சிக்குள்ளேயே சுயநலத்துக்காக ஒருவரை ஒருவர் படுகொலைகள் செய்வதும், கட்சித் தலைமையே தனது கட்சிப் பிரமுகர்கள் மீதே கொலைவெறித் தாக்குதல்களை ஏவி விடுவதும், பதவி ஆதாயத்துக்காகவும் தலைமையின் கருணைப் பார்வையை ஈர்ப்பதற்காகவே நாக்கை அறுத்துக் கொள்வதும், விரலைத் துண்டித்துக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் வழக்கமாக உள்ளது.



இப்படிப்பட்ட குற்றவாளிகளின் கூடாரமாகிய ஒரு அமைப்பும் அது ஒரு அரசியல் கட்சியாகவும் நீடிப்பதே சமூகத்துக்கு தீங்கும் ஆபத்தும் விளைவிப்பதாக உள்ளது. இந்த உண்மைகளை முன்வைத்து அந்தப் பிழைப்புவாதக் கிரிமினல் கட்சியைத் தடை செய்யும்படி கோரும் அருகதையும் அக்கறையும் வேறு எந்த ஓட்டுக் கட்சிக்கும் கிடையாது. இதுதுõன் ஜெயலலிதா கும்பலின் பலத்திற்கும் துணிவுக்கும் அடிப்படை.



நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாட்சிமை குறித்து சண்டப்பிரசண்டம் செய்யும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளுக்கு, அதன் ஒரு அங்கமான ஓட்டுக்கட்சி அரசியல் இவ்வளவு தூரம் சீரழிந்து கழிசடை நிலையை அடைந்து, பெரும் சவாலாக வளர்ந்திருப்பது மட்டும் சகித்துக் கொள்ள முடியாததாக உள்ளது.

Wednesday, July 25, 2007

"புலியை அழிக்க பிசாசுடன் கூடியுள்ளோம்" புலியெதிர்ப்பு தத்துவஞானியின் பிரகடனம். மீள்பதிவு

"புலியை அழிக்க பிசாசுடன் கூடியுள்ளோம்" புலியெதிர்ப்பு தத்துவஞானியின் பிரகடனம்.



பி.இரயாகரன்
25.07.2007


க்களின் முதுகில் குத்தி உருவாகும் வரலாற்று துரோகிகள், பிசாசுடன் (ஏகாதிபத்தியத்துடன்) சேர்ந்து மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுத்தரப் போகின்றார்களாம். இந்த கேடுகெட்ட போக்கிரித்தனமான அரசியல் பிரகடனத்தை, நம்புங்கள். புலிகளின் பாசிசத்தில் இருந்து மக்களை மீட்க, புலியெதிர்ப்பு கும்பல் வைக்கும் ஒரேயொரு தீர்வு இதுதான். பிசாசுகளுக்கு உதவும் கூலிப்பட்டாளத்தை உருவாக்கும் வேலைத்திட்டம் தான், புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் நடவடிக்கைகள். இப்படி இந்தப் பிசாசுகள் பெற்றுத் தரும் ஜனநாயகம்? மக்களுக்கானதா? பிசாசுக்கானதா? அறிவு நாணயம் நேர்மை எதுவும் எஞ்சி உங்களிடம் இருந்தால், சொந்தமாக ஒரு மக்கள் அரசியல் உங்களிடம் இருந்தால், இந்த அரசியல் துரோகத்தனத்தை குறைந்தபட்சம் தட்டிக் கேட்பீர்கள். இல்லாது கூடி புலியெதிர்ப்பு கும்பலாக கும்மாளம் அடிக்கும் அனைவரும், இந்த நாற்றம் பிடித்த அரசியல் சாக்கடையில் புரளும் எருமை மாடுகள்தான்.



புலியெதிர்ப்புக் கும்பலின் மதியுரைஞர் சிவலிங்கம், பாரிஸில் நடைபெற்ற கலைச்செல்வனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினக்கூட்டத்தில் தான், பிசாசுடன் சேர்ந்து புலியை அழிக்கும் தமது 'ஜனநாயகப்" பிரகடனத்தைச் செய்தார். இப்படி மக்களின் எதிரிகள் புலிகளுக்குள் மட்டுமல்ல, புலியெதிர்ப்புக்குள்ளும் தான் உள்ளனர் என்பதையே, இது மறுபடியும் தௌளத்தெளிவாக அம்பலமாக்குகின்றது.



புலிகளுக்கு ஒரு மதியுரைஞர் பாலசிங்கம் எப்படியோ அப்படி புலியெதிர்ப்பு கும்பலுக்கு ஒரு மதியுரைஞர் சிவலிங்கம். இவர்கள் எல்லாம் மக்களின் தாலியை அறுத்து, அதில் அரசியல் செய்பவர்கள். இந்த கடைந்தெடுத்த ஈனத்தனத்தைச் செய்யவே, பிசாசுடன் கூடி நிற்கும் அரசியல் அசிங்கத்தை, ஒரு கொள்கைப் பிரகடனமாக பாரிஸில் எமக்கு எதிராக முன்வைத்ததன் மூலம், தமது சந்தர்ப்பவாத மூகமூடியை கழற்றி எறிந்தனர்.



அரசியல் ரீதியாக புலி எதிர்ப்புக்கு (ஒழிப்புக்கு) வெளியில், இவர்களிடம் வேறு எந்த அரசியலும் கிடையாது. மக்களுக்கு என்று சொல்ல எந்த மக்கள் பிரச்சனையும் இவர்களிடம் கிடையாது.



புலிகள் தமது பாசிசம் மூலம் மக்களுக்கு ஏன் ஜனநாயகத்தை மறுக்கின்றனர்? இதைக் கூட அரசியல் ரீதியாக விளக்க முடியாத கோவேறுக் கழுதைகள். புலிகளுடனான இவர்களின் அரசியல் முரண்பாடு என்பதே, புலிகளின் குறிப்பான கொலைகள் பற்றியது மட்டுமே. புலிகள் மக்களுக்கு முன்வைக்கும் அரசியல் தொடர்பானதல்ல. புலிகளின் மக்கள் விரோத அரசியலின், மிகத் தீவிர ஆதாரவாளர்கள் இவர்கள். கொள்கை ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக முரண்பாடு என்பது கிடையாது.



இவர்களின் முரண்பாடு என்பது, இவர்களுக்கு இடையிலான அதிகாரம் தொடர்பானதே. யார் தமிழ் மக்களை அடக்கியாள்வது என்பது தொடர்பானது. மக்களின் விடுதலை தொடர்பானதல்ல. இந்த வகையில் முன்னைய இன்றைய கொலைகார குழுக்கள் அனைத்தும் கூடிக்குலைக்கின்றனர். மாற்றுக் கருத்து என்ற பெயரில், தமது அதிகாரத்துக்காக புலிகளுடன் முரண்படுகின்றனர். மக்களை எட்டி உதைத்து, பிசாசுகளுடன் கூடி விபச்சாரம் செய்கின்றனர்.



புலிகள் மக்களுக்கு எந்த உரிமையை மறுக்கின்றனரோ, அதை புலியெதிர்ப்புக் கும்பலும் மக்களுக்கு மறுக்கின்றது. மக்கள் தமது சொந்த விடுதலைக்காக, தமது சொந்த அதிகாரத்துக்காக போராடுவதை புலிகள் போல் இவர்களும் அனுமதிப்பதில்லை. அதை கருவறுப்பதுதான் புலியெதிப்பு சிந்தாந்தக் குருவின் பிசாசுத் தத்துவம்.



கடந்தகால வரலாற்றில் யாரெல்லாம் மக்களின் உரிமையை மறுத்து, அதைக் கோரியவர்களைக் கொன்று ஒரு படுகொலை அரசியலை நடத்தினரோ, அவர்கள் எல்லாம் கூடி 'ஜனநாயகத்தை" மீட்கும் பிசாசுத் தத்துவத்தை ஒப்புப் பாடுகின்றனர். இலங்கையினதும் இந்தியாவினதும் கூலிக் குழுக்களாகவே செயல்படும் கொலைகாரக் கும்பல்கள், புலியை ஒழித்து "ஜனநாயகத்தை" மீட்க பிசாசுடன் சேருவதே முற்போக்கான அரசியல் என்கின்றனர்.



இவர்கள் முன்வைக்கும் அந்த பிசாசு யார்? அந்த பிசாசு வேறு யாருமல்ல, ஏகாதிபத்தியம் தான். புலியை ஒழிக்க, புலியிடமிருந்து தமது ஜனநாயகத்தை மீட்க, பிசாசுகளை விட்டால் வேறு என்னதான் அரசியல் வழி உண்டு என்று எம்மை பார்த்து ஆச்சரியமாக கேட்கின்றனர். இதையே தான் தன்னையும் மார்க்சியவாதியாக கூறிக்கொண்ட, சோலையூரனும் கேட்டார். அவர் தன்னை உள்ளடக்கி பொதுவில் ஏகாதிபத்தியவாதிகள் என்கின்றீர்களா என்றார்? மார்க்சியவாதியாக கூறிக்கொள்ளும் சோலையூரானின் பரிதாபகரமான 'மார்க்சிய" நிலை இது.



நாம் புலியை பாசிட்டுகள் என்று கூறும் போது, இந்த அளவீடு அதன் கீழ்மட்ட உறுப்பினர் வரை பொருந்தும். அந்த அரசியலை சித்தாந்த ரீதியாக ஏற்றுக் கொண்டு இருக்கும் வரை, அதை பிரதிநிதித்துவம் செய்யும் அனைவருக்கும் பொருந்தும். நீங்கள் ஏகாதிபத்திய துணையுடன் அதன் கோட்பாட்டை உள்வாங்கியபடி புலியை அழிக்க புறப்பட்ட பின், இதை ஏற்றுக்கொண்டு செயல்படும் அனைவருக்கும் பொருந்தும். தலைவர் அதன் தொண்டன் என்பதில், ஏகாதிபத்திய தன்மையில் வேறுபாடு கிடையாது. வேறுபாடு அறியாமையில், அப்பாவித்தனத்தில் கூலிக்கு மாரடிக்கும் செயல்தளத்தில் வேறுபாடு உண்டு. தமிழ் மக்களைச் சார்ந்து நிற்கத் தவறுகின்ற அனைத்தும், ஏகாதிபத்திய, மக்களின் சொந்த எதிரியுடன் கூடி நிற்கின்ற அனைத்தும், ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவை.



அன்று இயக்கங்கள் தொடங்கியது முதல், மக்களுக்கு எதிரான அரசியலையே இயக்க அரசியலாக வரிந்து கொண்ட காலம் முதலாக, மக்களை எதிரியாக கருதும் கும்பலா, மக்கள் ஜனநாயகத்தை மீட்கப் போகின்றார்கள்? இன்றும் அவையெல்லாம் மக்கள் விரோத இயக்கங்களாக, சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடித்துக் கொள்ளும் இவர்கள், அந்த மக்களின் பிரச்சனையில் இருந்து சமூகத்தை பார்க்கத் தவறுவது தான் வேடிக்கை.



அன்று பேரினவாதத்துக்கு எதிராக தொடங்கிய இயக்கங்கள் எப்படி மக்களுக்கு எதிராக சென்றனரோ, அதேநிலையில் தான் புலி பாசிச ஒழிப்பிலும் அரசியல் நிலையெடுக்கின்றனர். அன்று பேரினவாதத்தை எதிர்கொள்ள மக்களை எட்டி உதைத்த படி, இந்தியாவின் கூலிக் குழுவானவர்கள் தான், இன்று மக்களை அதேபோல் எட்டி உதைத்தபடி பிசாசுகளுடன் கூடி நிற்கின்றனர். மனித விரோத வரலாறு இப்படி நிர்வாணமாகவே காட்சி அளிக்கின்றது.



நாம்(ன்) அன்றைய கூட்டத்தில் இதை அம்பலப்படுத்திய போது, இந்த மனித விரோத பிசாசு செயல்பாடுகள் உணர்ச்சிகரமான குமுறலுடன் அம்பலமாகியது. அவர்களின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப, சந்தர்ப்பவாதிகளின் அரசியல் முடிச்சுமாற்றித்தனத்தின் உள்ளார்ந்த அரசியல் கூறை உடைத்தெறியும் வகையில், தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய விடையத்தை கருப்பொருளாக கொண்டு இதை அம்பலமாக்கினோம். தமிழ் மக்கள் தமது பிரச்சனைக்காக தாமே மட்டும் போராடுவதைத் தவிர, வேறு எந்த மாற்று வழியும் கிடையாது என்றோம். இதற்கு வெளியில் மாற்றுவழி உண்டென்றால், அதை முன்வைக்குமாறு சவால் விடுத்தோம். இதற்கு பதிலடியாகவே பிசாசுடன் கூடி புலியெதிர்ப்பை (புலிஒழிப்பை) மாற்றாக முன்வைத்தனர். மக்களுக்கு எதிராக பிசாசுகளுடன் கூடி, மக்களுக்கு ஜனநாயகத்தை பெற்றுத்தரப் போகின்றனராம்.



இப்படி கடந்தகாலத்தில் இந்தியாவுடன் கூடி தமிழீழத்தை பெற்றவர்கள், இந்த தமிழீழம் என்று இன்றும் கூறுபவர்கள் போல், பிசாசுடன் கூடி ஜனநாயகத்தை மக்களுக்கு பெற்றுத் தரப்போகின்றனராம். அரசியலில் பொறுக்கிகளின் சூழ்ச்சிகள் இவை. சொந்த மக்களில் நம்பிக்கை இல்லாதவர்கள். அந்த அரசியல் வழிமுறையை எப்படி என்றும், அது சாத்தியமற்றது என்றும் சதா கிண்டல் அடிப்பவர்கள். அந்த மக்களுக்கு இவர்கள் எப்படி உண்மையான இருப்பார்கள். ஒரு உண்மையான மக்கள் ஜனநாயகத்துக்காக எப்படி போராடுவார்கள். சொல்லுங்கள். அன்னியருக்கு ஒரு கூலிக் குழுவாக இருந்து, செயல்படுவதில் மட்டும் நம்பிக்கை கொண்டவர்கள். இது மட்டுமே சாத்தியம் என்பவர்கள். மக்கள் வழி சாத்தியமற்றது என்று கூறுவதன் மூலம், இதை மறைமுகமாக திணிப்பவர்கள்.

மாற்றுவழி என்பது, அவர்களே பிசாசுகள் என்று வருணிப்பவர்களுடன் சேர்ந்து புலியை ஒழிப்பது. இப்படி பிரகடனம் செய்வது மட்டுமல்ல, அதை எமக்கு எதிராக சவால் விடுகின்றனர். எப்படிப்பட்ட சமூக விரோத கும்பல் இவர்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.



மக்களை சார்ந்து நின்று, அந்த அரசியல் மூலம் மக்களின் தீர்வாக புலியொழிப்பை நாம் கோரிய போது, பிசாசுகளாக மாறியது மட்டுமின்றி பிசாசுகளாகவே பிரகடனம் செய்தனர். இதுதான் அன்றைய நிகழ்வும் நிகழ்ச்சியுமாகியது. இந்த பிசாசுக் கூட்டத்தில் ஆணாதிக்கத்தை ஒழிக்கப் போராடுவதாக கூறிக்கொள்பவர்களும், சாதி ஒழிப்புக்காக போராடுவதாக கூறிக்கொள்பவர்களும், யாழ் மேலாதிக்கத்துக்கு எதிராக போராடுபவராக கூறிக்கொள்பவர்களும், சுரண்டலை எதிர்ப்பதாக கூறிக்கொள்பவர்களும் பலரும் சேர்ந்து, மக்களின் இந்தப் பிரச்சனை புலி ஒழிப்புக்குள் அடங்காது என்கின்றனர். வேடிக்கையிலும் வேடிக்கை. இந்த மனித ஒடுக்குமுறை செய்பவர்களுடன் சேர்ந்து தான், புலியை ஒழிக்க முடியும் என்கின்றனர். இப்படித்தான் இது தமிழீழப் போராட்டத்திலும் அடங்கவில்லை என்றவர்களும் இவர்கள் தான். ஏன் புலிகளும் அதைத்தான், இன்று வரை கூறுகின்றனர். வரலாற்றைப் புரட்டினால், இது தெரியும். இப்படி கோரியவர்கள் கொன்றவர்கள் எல்லாம், மக்கள் போராட்டம் என்பது தமது அதிகாரத்துக்கு பிந்தைய விடையமாக கருதும் கருத்துடையவர்கள். இதைக் கோரியவர்கள், கோருபவர்களை கொன்றது மட்டுமின்றி, தமது எதிரியாகவும் பார்க்கின்றனர். இப்படி மக்களுக்கு எதிரான ஒரு அரசியல் நீட்சியாகவே, இன்றும் அவர்கள் உள்ளனர்.



மக்கள் ஜனநாயகம் என்பது மக்கள் தமது பிரச்சனையைப் பற்றி பேசுவது, அதற்காக போராடித் தீர்வைக் காண்பதும் தான். ஆனால் இதை மறுத்துத்தான் புலிகள் முதல் புலியல்லாத புலியெதிர்ப்பு வரை கொக்கரிக்கின்றது. மக்கள் தமது உரிமைக்காக போராடும் காலம் இதுவல்ல என்று கூறுபவர்கள், அந்த உரிமைகளுக்காக தாம் உண்மையாக இருப்பதாக காட்டிக்கொண்டு மக்களின் முதுகில் குத்துவதே இவர்களின் பிசாசுத் தத்துவம்.



புலி ஒழிப்பின் பின் தனித்தனியாக போராடப் போவதாக கூறுவது வேடிக்கை. புலி என்ன சொல்லுகின்றது. தமிழீழத்தை பெற்ற பின்னர் தான், தாம் இதற்காக போராடுவினமாம். அதாவது புலிகள் தமிழீழத்தை பெற்றபின் போராடுவினமாம். புலியெதிர்ப்பு கும்பலோ புலியை பிசாசுடன் சேர்ந்து ஒழித்த பின் இதற்காக போராடுவினமாம். கூட்டாகவே கொள்கை ரீதியாக, மக்களின் உரிமைக்காக போராட மறுக்கும் பிரகடனமும், அரசியல் உடன்பாடும் புலிக்கும் புலியெதிர்ப்புக்கும் ஒன்று தான்.



இப்படி மக்களின் பிரச்சனையை கைவிட்டுவிட்டு, மக்களை எப்படி எந்த வழியில் அணி திரட்டமுடியும். மக்கள் போராட்டம் என்பது இதற்கு வெளியில் கிடையாது. மக்களின் பிரச்சனைக்காக, அந்த மக்கள் தாம் தமக்காக போராடுவது தான் மக்கள் போராட்டம். அது சிலரின் வெறும் வரட்டு தமிழீழமோ அல்லது வெறும் வரட்டு புலியொழிப்போ அல்ல.



இவர்கள் பரஸ்பரம் தமக்குள் குற்றம் சாட்டியபடி, இதற்குள் வரட்டுத்தனமாக அனைவரையும் கட்டிப்போடுகின்ற மக்கள் விரோத வேலையைத் தான் இந்தக் கும்பல் செய்கின்றது. மக்களின் அடிப்படையான அனைத்து பிரச்சனைகளையும் அடையாளம் கண்டு, அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்க நாம் கோரியும், இதற்கு வெளியில் மக்களுக்கு சார்பான மாற்று அரசியல் வழி எதுவும் கிடையாது என்று நாம் சவால் விட்டோம். இதன் போது புலியெதிர்ப்புக் கும்பல் தாம் அம்பலமாவது கண்டு அதிர்ந்து போனது. எம் மீது புலியெதிர்ப்பு தத்துவமேதை சிவலிங்கம் உட்பட, சோலையூரன் முதல் கீரன் வரை காழ்ப்புடன் சீறிப் பாய்ந்தனர்.



கீரனோ நாலு சுவருக்குள் இருந்து, 20 பவுனில் இணையத்தில் மக்கள் புரட்சி நடத்துவதாக வெம்பிக் கொட்டினார். இந்த சம்பந்தமில்லாத எம்மீதான அரசியல் காழ்ப்பு, எப்படி தமிழ் மக்களின் அப்படை பிரச்சனைக்கு பதிலளிக்கின்றது என்பது அந்தக் கும்பலுக்குத் தான் வெளிச்சம். புலிகள் என்ன சொல்லினம் என்றால், கதைப்பதை வன்னியில் சென்று கதையுங்கள் என்கின்றனர். அங்கு சென்று போராடுங்கள் என்கின்றனர். இப்படி புலிகள் பேச புலியெதிர்ப்போ நாலு சுவர்களுக்குள் மக்கள் புரட்சியா என்கின்றனர். வன்னி மக்களின் சுதந்திரம் என்றழுகின்றனர்.



வன்னி மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு போராட முடியாதவர்கள் என்கின்றனர். அந்த மக்கள் இணையத்தை பார்க்க முடியாது என்கின்றனர். இதனால் பிசாசுக் கூட்டத்துடன் தம்மைப் போல் சேரக் கோருகின்றனர்.



பிசாசுடன் சேர்ந்து புலியெதிர்ப்பு (ஒழிப்பு) பிரச்சாரம் செய்யும் இவர்கள், அந்த மக்களிடம் செல்வதில்லை. ஏன் இணையம் பார்க்கும் மக்களிடம் கூட, மக்களின் பிரச்சனையை கொண்டு செல்வது கிடையாது. பிசாசுகளின் அரிதட்டில் இட்டு வடிகட்டி கிடைப்பதைப் பொறுக்கி, தாமே தமக்குள் வம்பளப்பதே இவர்களின் அரசியல். புலி ஊடகவியல் போல், புலியெதிர்ப்பு ஊடகவியல் மக்களின் பிரச்சனைகள் மீது விபச்சாரம் செய்கின்றனர்.



வன்னி மக்களின் சுதந்திரமான வாழ்வு மற்றும் இடப்பெயர்ச்சி பற்றி மட்டும் பேசும் இவர்கள், இலங்கை அரசு அதை மறுப்பதை இட்டோ, ஏன் ஏகாதிபத்திய நாட்டில் இது மறுக்கப்படுவதை இட்டோ அலட்டிக்கொள்ளாத, புலியெதிர்ப்பு ஜனநாயகத்தை பற்றி மட்டும் பேசும் பந்சோந்திகள்.



பிசாசுகளுடன் சேர்ந்து தாம் புலியை அழிப்போம் என்றவர்கள். இதை யாரும் தடுக்க முடியாது என்றவர்கள், இப்படி தனது நெற்றிக் கண்ணையே திறந்த சிவலிங்கம், தனது ஏகாதிபத்திய விசுபரூபத்தையே உலகுக்கு முழுமையாக காட்டினார். அற்புதத்திலும் அற்புதம். மானம் கெட்ட நாய்கள், ஏகாதிபத்திய கால்களை நக்குவதைத் தவிர வேறு எந்த மக்கள் அரசியலும் கிடையாது.



இந்த பிசாசு யார் என்ற சர்ச்சை பின்னால் வந்த போது, சொந்த சுயவிளக்கம் அளிக்க வெளிக்கிட்ட பரமபிதா சிவலிங்கம், அந்த சிவலிங்கத்துக்கேயுரிய ஆபாச வக்கிரத்துடன் பினாற்றுவதைத் தவிர வேறு எதையும், அற்புதமாக சோடிக்க முடியவில்லை.



தான் பிசாசு என்று குறிப்பிட்டது மனித உரிமை அமைப்புக்களையே என்றார். இப்படி தனது புலியெதிர்ப்பு அரசியல் செயல்பாட்டுக்கு மனித முகம் கொடுக்க முற்பட்டார். இப்படி சூழ்ச்சியான அரசியல் ஆய்வாளராக பாலசிங்கத்தையே மிஞ்சும் இந்த முட்டாள், முன்னால் இருப்பவனெல்லாம் மாங்காய் மடையன் என்ற நினைப்பு. சிவலிங்கம் தன் வீட்டு மாங்காய் என்ற அவரின் சொந்த நினைப்பு.



சரி சொன்னபடி எடுப்போம். மனித உரிமை அமைப்புக்கள் பிசாசுகள் என்றால், அப்படி பிசாசு என்று தெரிந்துகொண்டு செயல்படுபவன் எப்படிப்பட்ட பொறுக்கியாக இருப்பான். நாங்கள் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளின் அடிப்படையில், மக்களை அணிதிரட்ட முயலமாட்டோம் என்று கூறி, பிசாசுகளுடன் சேர்வோம் என்று கூறிய இந்த பொறுக்கி தான், புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் குரு. இந்த மக்கள் விரோத செயல்பாடு தான் புலியெதிர்ப்பு அரசியல்.



சரி இந்த பிசாசாக மனித உரிமை அமைப்புகளைக் காட்ட முற்பட்டது, உள்ளடகத்தில் ஏகாதிபத்தியத்தில் இருந்து இவ்வமைப்புக்கள் வேறானவை என இட்டுக்கட்டத்தான். தாம் செய்யும் ஏகாதிபத்திய செயல்பாட்டை, இல்லையென மழுப்ப அவ்வமைப்புக்கள் ஏகாதிபத்தியத்துக்கு அப்பாற்பட்டவையென காட்டி, மக்களுக்கு புலுடா விடுகின்ற முடிச்சுமாற்றித் தனம் தான் இந்த சுயவிளக்கம். இந்த மனிதவுரிமை அமைப்புகளை ஏகாதிபத்தியத்திலும் இருந்து சுயாதீனமானதாக காட்டுகின்ற, ஏகாதிபத்திய நரித்தனம், இதற்குள் வெளிப்படுவது மற்றொரு உண்மை. மனித உரிமைக்காக செயல்படுவதாக கூறுகின்ற இந்த ஏகாதிபத்திய அமைப்புகள், ஏகாதிபத்திய அமைப்புகளல்ல என்கின்றீர்களா? அரசியல் மோசடியில் உங்கள் செயல்பாட்டை நியாயப்படுத்துகின்ற வெளிப்படையான பொறுக்கித்தனம் இது.



மனிதவுரிமை அமைப்புக்கு யார் பணம் கொடுக்கின்றனர். ஏகாதிபத்திய பணத்தில், ஏகாதிபத்திய உலக ஒழுங்குக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அமைப்புகள் தான் இவை. அதற்காகவே அவை செயல்படுகின்றது. இவை ஏகாதிபத்திய நலன் சார்ந்த



1. மனித உரிமை மீறலுக்கான சமூகக் காரணங்களை ஆராய்வதில்லை.



2. மனித உரிமையை சொல்லி நடைபெறுகின்றதும், மனித உரிமை அறிக்கையின் அடிப்படையில் நடக்கும் தலையீட்டுக்கும், ஏன் அது உருவாக்கும் மனிதவுரிமை மீறலுக்கும் தாம் பொறுப்பாளியாக இருப்பதில்லை.



3. சக மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதை மனிதவுரிமை மீறலாகக் கூட அங்கீகரிப்பதில்லை.



இந்த மனித விரோதத்துக்கு, இப்படி வக்கிரமான பலவடிவங்கள் உண்டு. ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவாக மட்டும் மனித உரிமை மீறலைப் பற்றி பேசுகின்ற, அரசு சாராத அரச பணத்தில் இயங்குகின்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் இவை.



தமிழ் மக்களுக்கு காலாகாலமாக காதில் பூ வைத்து அரசியல் செய்த கூட்டம், இந்த மனித உரிமை அமைப்பு பற்றியும் பொய்மையை விதைக்க முனைகின்றனர். புலிகள் முதல் புலியெதிர்ப்பு வரை இப்படி இதில் ஒத்த நிலைப்பாடு கொண்டுள்ளனர். மனிதவுரிமை அமைப்புகள் ஏகாதிபத்திய நலன்களுடன் தொடர்புடைய அமைப்புகள். இப்படியாக இயங்குகின்ற அரசு சாராத ஏகாதிபத்திய நன்கொடையில் இயங்குகின்ற இந்த அமைப்புகள், மனித உரிமை முதல் பொருளாதார செயல்பாடுகள் வரை ஒன்றுடன் ஒன்று திட்டமிட்ட வகையில் பின்னிப் பிணைந்தவை. ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவாக செயல்படுகின்ற அதேநேரம், அதை மூடிமறைக்க மனிதத்தின் ஒரு பகுதியை கையில் எடுத்துக்கொண்டு, மொத்த மனிதனுக்கு விரோதமாக செயல்படும் அமைப்புகள் தான் இவை.



இல்லை இவை ஏகாதிபத்திய அமைப்புகள் அல்ல என்ற கூறும் தைரியம், நேர்மை இருந்தால், அதையும் விவாதிக்கவும் நாம் சவால் விடுகின்றோம். மக்களின் முதுகில் குத்தி அரசியல் ரீதியாக சோரம் போவதும், ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதும், பிறகு அதற்கு மனிதவுரிமை அமைப்பு என்று பச்சையாக சுயவிளக்கம் வழங்குவதும் விபச்சார தரகனுக்குரிய அதே குணம் தான். இப்படி தமது புனிதத் தன்மை பற்றி ஒப்பாரி வைப்பது, தம்மையும் தமது செயல்பாட்டுக்கும் புனித தன்மை பற்றி கூறி மக்களை ஏமாற்ற முயலுகின்ற வக்கிரம் தான், புலியெதிர்ப்பின் பின் அரங்கேறுகின்றது.



இன்றைய மனிதவுரிமை அமைப்புகள், மனித உரிமை மீறலுக்கான காரணத்தை ஏன் விமர்சிப்பதில்லை. மனிதவுரிமை மீறலுக்கு காரணம், ஏகாதிபத்திய உலக ஒழுங்கு தான். இந்த அடிப்படைக் காரணமே இப்படி வெளிப்படையாக இருக்க, அதை பற்றி பேசாது மனித உரிமை பேசுகிற ஏகாதிபத்திய நிறுவனங்கள் தான் இவை. ஏகாதிபத்திய சர்வதேச தலையீட்டுக்கான நிலைமைகளை தயாரிப்பது, இந்த அமைப்புகளின் தலையாய செயல்பாடுகளாகும். இப்படி மனித முகம் வழங்கி, தனது தூய்மை பற்றிய பிரமையை உருவாக்கி, சதி செய்து மக்களை ஒடுக்குவதற்கு துணை செய்கின்ற அமைப்புகள் தான் இவை.



இந்த கேடுகெட்ட வகையில் ஏகாதிபத்திய பணத்தில் இயங்கும் பிசாசுகளுடன், தான் சேர்ந்து செயல்படுவதாக, நெற்றிக் கண்ணைத் திறந்து சிவலிங்கம் தனது சுயவிளக்கத்தில் புலியெதிர்ப்புக் கும்பல் சார்பாக சூளுரைத்தார். இப்படி ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செய்கின்ற மனித விரோதத்தை, மூடிமறைக்கலாம் என்று இந்த புலியெதிர்ப்புக் கும்பல் நம்பியதால், அதை வீரமாகவே பிரகடனம் செய்தனர். நாய் வேஷம் போட்டு விசுவாசமாக நக்கிக் குலைக்க வெளிக்கிட்டாலும் கூட எதையும் யாராலும் மூடிமறைக்கவே முடியாது.



ஏகாதிபத்தியம் என்றால் என்ன? நீங்கள் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து செயல்படவில்லை என்று கருதினால், ஏது ஏகாதிபத்தியத்துடனான செயல்பாடு என்று அதைச் சொல்லுங்கள்? நடத்துவதோ மானம்கெட்ட அரசியல் விபச்சாரம். ஏகாதிபத்திய அரசியல்வாதிகள் முதல் எல்லாவிதமான ஏகாதிபத்திய நிறுவனங்களுடனும் சேர்ந்து கும்மியடிப்பதைத் தவிர, வேறு எதுவும் செய்வதில்லை. அதை புலியெதிர்ப்பு ஊடகவியல் மூலம் வாரியள்ளி கொட்டுவதன் மூலம், அதற்கு அவர்கள் இட்ட பெயர் தான் ஜனநாயகம். மக்கள் தமக்காக, தமது சமூக பொருளாதார உரிமைக்காக போராடுவது ஜனநாயகமல்ல என்பது இவர்கள் தத்துவம். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது ஜனநாயகமல்ல, அதுவே ஜனநாயக விரோதம் என்கின்றனர். இதனால் புலி முதல் புலியெதிர்ப்பு வரை போராட மறுத்து, இதை வேட்டையாடுவதையே போராட்டமாக்கியவர்கள்.



இந்த புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய செயல்பாடுகளை நாம் அம்பலப்படுத்துவதால், நாலு சுவருக்குள் இருந்து 20 பவுன் காசில் மக்கள் புரட்சி செய்வதாக பம்புகின்றனர். சரி இந்த வாதம் எப்படி, நீங்கள் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதில்லை என்பதனையோ அல்லது சேவை செய்வதையோ நியாயப்படுத்திவிடும்?



ஏகாதிபத்திய பிசாசுடன் சேர்ந்து செய்வது சரி என்பதையும், அதை எப்படிச் செய்கின்றோம் என்பதையும் வெளிப்படையாக மூடிமறைக்காது கூற வேண்டியதுதானே. ஏன் சுயவிளக்கம் கொண்ட பிசாசுத் தத்துவம். நாலு சுவருக்குள் 20 பவுன் காசில் இணையம் என்று, ஏன் பேயைக்கண்டது போல் அலறுகின்றீர்கள். மக்களின் முதுகில் குத்தி துரோகம் செய்யும் உங்கள் வண்டவாளங்கள், அந்த 'நாலு சுவருக்குள்" இருந்து அம்பலமாவதைக் கண்டு குமுறுவதன் பின்னனி எமக்கு புரிகின்றது. நாலு சுவர் இணையத்தை நிறுத்தக் கோரும் உங்கள் பிசாசு ஜனநாயகம், தலைகீழாக நின்று அழுவது புரிகின்றது.



ஜனநாயக விரோதிகள் புலிகள் மட்டுமல்ல, இந்த புலியெதிர்ப்புக் கும்பலும் தான். மக்களின் விடுதலையை கோரியோரைக் கொன்று குவித்த முன்னைய கொலைகார கும்பலும், இன்றைய கொலைகாரர்களுமான புளாட், ஈ.பிஆர்.எல்.எவ், ஈரோஸ், ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.டி.பி, ரெலோ முதல், கொலைகாரனுக்கு ஆள்காட்டியும் உதவிய கூட்டணி என்று அனைவரும், சேர்ந்து புலியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கப் போகின்றார்களாம். புலிகளிடம் அதிகாரத்தில் பங்கு கோரி நடத்தும் அரசியல் சண்டையை மூடிமறைக்க, புலிப் பாசிசம் பற்றி புலியெதிர்ப்பு ஆர்பாட்டங்கள்.



இந்த அதிகாரம் கிடைக்கும் முன்பே, சதியை அடிப்படையாகக் கொண்ட அதிகாரச் சண்டைகள் இவர்களுக்குள். பாரிஸ் கூட்டத்துக்கு முதல் நாள் கூடிய ஜெர்மனிய கூட்டத்தில் இவை அரங்கேறியது. தலித்தியவாதிகள், கிழக்குவாதிகளையும் அழைக்க கூடாது என்ற புலியெதிர்ப்பு ஜனநாயக சதி கூட விவாதிக்கப்பட்டது. யாரை அழைக்கக்கூடாது என்று முன் கூட்டியே திட்டமிட்டு அவர்கள் தடுக்கப்பட்டனர். விமான நிலையத்தில் அழைத்து வருவதில் கூட திட்டமிட்ட புறக்கணிப்புகள், சதிகள். இப்படி இந்த ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கின்றது. புலியெதிர்ப்பு சித்தாந்த குரு யாரின் பக்கம் என்று காட்டுவதில் உள்ளேயே ஒரு போட்டி, ஒரு சதி. இதைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுக்கள், அனைத்து இலங்கை இந்திய அரசுகளின் கூலிக் குழுக்கள். சிலதுகள் பிசாசுகளின் கூலிகள். இவர்கள் எல்லாம் கூடி நின்று, புலியின் ஜனநாயக மீறலைப் பற்றி தமக்குள் ஊளையிடுகின்றனர்.



இப்படி ஊளையிடுவதில் உள்ள கைக்கூலித்தனம் வெளிப்படையானது. இந்த ஏகாதிபத்திய நிலை என்பது அரசியல் ரீதியானது, கொள்கை ரீதியானது. புலியெதிர்ப்பின் உள்ளார்ந்த சித்தாந்தம், கொள்கை ரீதியாகவே ஏகாதிபத்திய தன்மை கொண்டது. இதை யாரும் மறுத்து நிறுவ முடியாது. ஏகாதிபத்தியத்துடன் அரசியல் ரீதியாகவே சோரம் போய், அதன் பின் வாலாட்டுபவர்கள். இந்த ஏகாதிபத்தியம் என்பதும், அதன் வடிவம் என்பதும் கொள்கை ரீதியானது மட்டுமின்றி வன்முறை வடிவமும் கொண்டது.



புலியெதிர்ப்புக் கும்பலின் செயல்பாடுகள் ஏகாதிபத்திய அதிகார மையங்களுடனும், அதன் மனித முகம் கொண்ட நிறுவனங்களுடன் தொடர்புக்கு உட்பட்டது. இன்று புலிகள் தாம் வேறு, தமது மனித செயல்பாடுகள் வேறு என்று எப்படி காட்ட முனைகின்றனரோ, அப்படிப்பட்ட ஒரு வேறுபாட்டைக் காட்டித் தான் (பலவற்றை மறைத்தபடி), புலியெதிர்ப்புக் கும்பல் தனது துரோகத்தை மனித செயல்பாடாக காட்டமுனைகின்றது.



நாலு சுவருக்குள் 20 பவுன் காசில் இணையம் நடத்துபவர்கள் என்று எம்மைக் கூறி, தாம் மக்கள் மத்தியில் செயல்படுவதாகவும் ஊர்வலங்களை நடத்துவதாகவும், எமக்கு அரசியல் பாடம் நடத்த முனைந்தனர். சரி இவர்களின் ஊர்வலங்கள் மக்களுடன் சம்பந்தப்பட்டதா? பிசாசுகளுடன் கூடித்தான் புலியை அழிப்போம் என்றவர்கள், அதற்கு முற்றாக முரணான வழியான மக்களுடன் கூடி புலியை எப்படி அழிக்கமுடியும். கேட்பவன் கேனயன் என்ற நினைப்பு. இவர்களின் மக்கள் போராட்டம் எப்படிப்பட்டது. சிங்கள உறுமய முதல் கொலைகார கூலிக் குழுக்களின் பிரதிநிதிகள் எல்லாம் கூடி நடத்துவது, மக்கள் போராட்டம் என்கின்றனர். புலியெதிர்ப்புக் கும்பல் தாமே கூடி ஊளையிடுவது மக்கள் போராட்டமல்ல. அதுவும் பிசாசுகளுக்கு மகஜர் கொடுத்துவிட்டு வந்து, பிசாசுக்கு பின்னால் வாலாட்டி திரிவது மக்கள் போராட்டமல்ல. மறுபக்கத்தில் இதை மக்கள் போராட்டம் என்றால், புலியும் தான் உங்களைவிட அதிகளவு உங்கள் போல் 'மக்கள் போராட்டம்" நடத்துகின்றது. உங்கள் போராட்டம் மக்கள் போராட்டம் என்றால், புலிப் போராட்டமும் மக்கள் போராட்டம் தான்.



புலிகள் பேரினவாதிகளின் மனிதவிரோத செயலை சொல்லி ஊர்வலம் நடத்தி மக்களின் முதுகில் எப்படி குத்துகின்றனரோ, அப்படி புலியைச் சொல்லி நீங்கள் மக்களின் முதுகில் குத்துவது மக்கள் போராட்டமோ? உங்களிடையே அரசியல் ரீதியாக என்ன வேறுபாடு உண்டு?



இந்த புல்லுருவிகளின் திடீர் தோற்றமும், அதன் திடீர் வரலாறும், வரவின் சூக்குமத்தை தெளிவுபடுத்த போதுமானது. இது வைத்த, திடீர் ஜனநாயகமும் அப்படிப்பட்டது தான்.



இலங்கையில் சமாதானம் அமைதி என்று கூறிக்கொண்டு ஏகாதிபத்திய தலையீடுகள் அதிகரித்த போதுதான், இந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும் அக்கம்பக்கமாக சமகாலத்தில் முளைத்தவர்கள்.



அதற்கு முன்னம் அரசியல் ரீதியாக இனம் காணப்படாதவர்கள். எந்த செயல்பாடுமற்ற உறங்கு நிலையில் இருந்தவர்கள். எதிர்ப்புரட்சிகர சூழல் இன்றி, அரசியல் போக்கற்று, அரசியல் அனாதைகளாகக் கிடந்தவர்கள். அதிகரித்த ஏகாதிபத்திய தலையீட்டுடன், எதிர்ப்புரட்சிகர திட்டத்துடன், பாசிச புலிகளின் நடத்தையை சாதகமாக கொண்டு திடீர் ஜனநாயகவாதியானவர்கள். இவர்களின் திடீர் ஜனநாயகமோ, கிலோ விலைக்கு விற்கப்படுகின்றது. ஏகாதிபத்தியத்தின் அதிகரித்த தலையீட்டுடன் உருவாகி புல்லுருவிக் கூட்டம் இது. அதற்கு ஏற்ப இதனிடம் மாற்று வேலைத்திட்டம் கிடையாது. மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகள் பற்றி, எந்த சமூக அக்கறையும் அற்றவர்கள். இதனிடம் பிசாசுடன் கூடிய, புலி அழிப்புத்திட்டம் தான் உள்ளது.



மக்கள் விரோத பாசிச புலியை அழிக்க வேண்டும் என்றால்



1. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த வழியில் குறுக்கிடும் புலிக்கு எதிராகப் போராடி அழிக்க வேண்டும். அதாவது தமது அதிகாரத்துக்காக, தமது சமூக பொருளாதார விடுதலைக்காக மக்கள் போராட வேண்டும்.



2. இல்லையென்றால் அரசு அல்லது இந்தியா முதலான ஏகாதிபத்தியங்களின் தலையீடு மூலம், அவர்களின் நலன்களுக்காக புலியை அழிக்க வேண்டும்



இதில் இரண்டாவது வழியைத் தான் புலியெதிர்ப்புக் கும்பல் வைக்கின்றது. இதுதான் பிசாசுத் தத்துவம். மக்களின் இன்றைய பிரச்சனைக்கு தீர்வை இரண்டாவது வழியில் தான், புலியெதிர்ப்பு வழி காட்டுகின்றது. இதனால் தான் அடிக்கடி தம்மிடம் மாற்று வழி இல்லை என்று நாசுக்காக கூறிக்கொண்டு, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு சாதகமான வழிக்குள் அழைத்துச் செல்லுகின்றனர். திட்டமிட்ட சதிகாரர்கள். நேரத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ற சந்தர்ப்பவாதிகள். தம்மை மூடிமறைத்தபடி சந்தர்ப்பத்துக்கு ஏற்ப குலைக்கின்ற, குதர்க்கப் பேர்வழிகள்.



ஏகாதிபத்திய தலையீட்டுடன் புல்லுருவிகளாக, திடீர் விட்டில் பூச்சிகளாக உலவுகின்றவர்கள். மக்களின் மனிதவுரிமை பற்றிய பிரச்சனை மீது தம்மை மூடிமறைத்துக் கொண்டு, அசல் ஏகாதிபத்தியம் போல் ஊர் உலகத்தையே ஏமாற்றுபவர்கள். உலகளவில் ஏகாதிபத்திய தலையீடுகளும், அதற்கான நியாயங்கள் எப்படி எந்த அரசியல் வழியில் உருவாக்கப்படுகின்றதோ, அதையே இலங்கை பிரதிநிதிகளாக நின்று செய்து முடிக்க முனைபவர்கள் தான், இந்த புலியெதிர்ப்புக் கும்பல். வரலாற்றில் வேறுவிதமாக இந்த கும்பலை வரலாறு பதிவு செய்வதற்குரிய எந்த தர்க்கமும், இதன் பிசாசு கோட்பாட்டில் கிடையாது. வரலாற்றுத் துரோகிகளாக, காலத்தின் போக்கில் உருவாகி நிற்பவர்கள் தான் இவர்கள். மக்களின் விடுதலைக்கே எதிரான புல்லுருவிகள். இதை இனம் காண்பது, வரலாற்றுத் தேவையாக உள்ளது.



Tuesday, July 24, 2007

தோற்ற வழியும், தோற்காத வழியும்

தோற்ற வழியும், தோற்காத வழியும்


பி.இரயாகரன்
24.07.2004


ரண்டு பத்து வருடமாக தோற்றுக் கொண்டே இருக்கும் இரண்டு பிரதான வழிகள், இலங்கையில் பல பத்தாயிரம் மக்களை கொன்று போட்டுள்ளது. இன்னமும் கொன்று போடுகின்றது. இப்படி மனித அவலங்களோ எல்லையற்ற துயரமாகி, அவை பரிணாமித்து நிற்கின்றது.


இப்படி இலங்கை மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு, எந்தத் தீர்வும் அந்த மக்களிடம் இருந்து இதுவரை கிடையாது. இப்படி சரியான தீர்வுகளின்றி, சரியான வழிகாட்டலின்றி, மனித அவலம், தொடர்ச்சியாக தீர்வாக மீண்டும் மீண்டும் திணிக்கப்படுகின்றது.


இந்த வகையில் பிரதான முரண்பாடாகி மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளோ இரண்டு. அவை பிரதேசத்துக்கு பிரதேசம் ஒன்று மற்றொன்றாகி முதன்மையாகின்றது. அவை எவை?


1. பேரினவாதம். இது தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து, தமிழனை பாசிச வழிகளில் அடக்கியொடுக்குகின்றது.


2. புலிகள். இது தமிழ் மக்களின் சுயாதீனமான அனைத்து செயல்பாட்டையும் ஒடுக்கி, தனது பாசிச வழிகளில் தமிழ் மக்கள் மூச்சுக் கூட விடமுடியாத வகையில் ஒடுக்குகின்றது.


இப்படி தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு பிரதான ஒடுக்குமுறை அம்சங்கள் காணப்படுகின்றது. இவ்விரண்டு தரப்பும் ஒன்றையொன்று எதிரியாக கருதியபடியே, தமிழ் மக்களை ஒடுக்குவதில் தமக்குள் ஒன்றுபடுகின்றது. ஏன் இப்படி மக்களை ஒடுக்குகின்றனர்? இந்தக் கேள்விக்கான விடையில் தான், இதைப் புரிந்து கொண்டு தீர்வுகளையும் காணமுடியும்.


ஆனால் இதை யாரும் உணர்வதுமில்லை, உணர்த்துவதுமில்லை. இதை உணராது இருக்க வேண்டும் என்பதிலும், இந்த இரண்டு போக்குக்கும் வெளியில் சிந்திக்காதவகையில் இருக்கும் அரசியலே, எங்கும் எதிலும் திணிக்கப்படுகின்றது. மக்களின் மேலான ஒடுக்குமுறைக்குரிய காரணங்களின் அடிப்படையில் யாரும் செயல்படுதுமில்லை. மாறாக தமிழ் மக்களை ஒடுக்குகின்ற அதே அரசியல் நோக்குடன் தான், அனைத்துத் தரப்பும் செயல்படுகின்றனர், செயல்பட முனைகின்றனர்.


உண்மையில் தமிழ் மக்களை வௌவேறு தளத்தில் ஒடுக்குகின்ற, இந்த இரண்டு பிரதான பிரிவுகளின் சமூக பொருளாதார நலன்கள் தான், ஓடுக்குமுறைக்கான அடிப்படைக் காரணமாகும். இதை யாரும் எந்த வகையிலும் மறுக்க முடியாது. இதுவல்லாத வெற்றிடத்தில், காரணமல்லாத எந்த நோக்கத்திலும், அரசியல் அல்லாத கற்பனையில், யாரையும் யாரும் ஒடுக்கமுடியாது. சமூகங்கள் கொண்டுள்ள பல்வேறு ஏற்றத்தாழ்வான சமூக முரண்பாடுகளைப் பாதுகாக்கவே, இரண்டு தரப்பும் முனைப்புடன் முனைவதால் தான் மக்களை ஒடுக்குகின்றனர். மக்கள் எதரிகளின் அரசியல் தளம், இதற்குள் தான் செயல்படுகின்றது.


இப்படியாக பேரினவாத அரசு மற்றும் புலிகளின் செயல்பாடுகள் உள்ளது. இதையொட்டி இதற்குள் இயங்கும் இரண்டு பினாமி பிரிவுகளும், விதிவிலக்கின்றி மக்களை ஒடுக்கும் அரசியலைக் கொண்டே தமது அரசியலை உமிழ்கின்றனர். இவர்களின் ஜனநாயகம் என்பது, மக்களின் சமூக ஒடுக்குமுறையை பேணிப் பாதுகாப்பது தான். இவர்கள் மக்கள் என்று கூறுவது எல்லாம், சமூக ஒடுக்குமுறையை பாதுகாக்கும் எல்லைக்கு உட்பட்டதே. இதைப் பேணி பாதுகாக்க முனைபவர்கள், சமூக முரணபாடுகளை தற்போதைக்கு தீர்க்க முடியாது என்று கூற முனைகின்றனர். புலிகளும் சரி, புலியல்லாத தரப்பும் சரி, இதைத்தான் சொல்லுகின்றது. புலிகள் அனைத்தையும் தமிழீழத்தின் பினனர் என்கின்றனர், புலியல்லாத தரப்பு அனைத்தையும் புலியொழிப்பின் பினனர் என்கின்றனர். இப்படி இருதரப்பும் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி, பொய்யான போலியான படுபிற்போக்கான அரசியலை மக்களுக்கு எதிராக திட்டமிட்டு திணிக்கின்றனர்.


பிரதான அதிகாரப் பிரிவுகள் சமூக முரண்பாட்டை மூடிமறைக்க, சமூக முரண்பாட்டின் ஒன்றை தீவிரமாக்கி விடுகின்றனர். இதற்குள் ஒரு யுத்தத்தை இவர்களே வலிந்து சமூகங்கள் மீது திணித்துவிடுகின்றனர். பின் யுத்தத்தைக் காரணம் காட்டி, சமூகங்களின் உள்ளார்ந்த அனைத்து சமூக முரண்பாட்டையும், எதுவுமற்ற ஒன்றாக காட்டவிட முனைகின்றனர் அல்லது இப்போதைக்கு இவை பிரச்சனைகளல்ல என்கின்றனர். இப்படியாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை திரித்து, தமது வர்க்க நோக்குக்கு ஏற்ப ஏதாவது ஒன்றை மக்களின் தலையில் கட்டி விடுகின்றனர்.


பின் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக இரண்டு வழியை வைக்கின்றனர்.


1. பேரினவாதத்தில் இருந்து விடுபட புலித் தமிழீழம்

2. புலிப் பாசிசத்தில் இருந்து விடுபட புலியொழிப்பு


இப்படி இதற்குள்ளாக இலங்கையின் முழு சமூகத்தையும் கட்டிப்போடுகின்றனர். இரண்டு தரப்பும் இதற்குள் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு, சமூகங்களை நார்நாராக பிளந்துபோடுகின்றனர். இதற்குள் தீர்வுகாணும் வழிகள் பற்றிய கற்பனையை விதைத்து, கடந்த இரண்டு பத்து வருடங்களாக பல பத்தாயிரம் உயிர்களை பலியிட்டனர். ஒருவரை ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லுகின்றனர்.


நேரடியாக செயல்படுவர்கள் ஒருபுறம். மற்றவர்களும் இந்த இரண்டு பிரிவுக்குள்ளும் பினாமிகளாக செயல்படுவதால், சமூக வழிகாட்டல் இன்றி மனித அவலங்கள் தொடர்ந்து பெருகுகின்றது. இதனால் இதற்கு வெளியில் மூன்றாவது மாற்றுவழி பற்றி, எந்த சமூக முன்முயற்சியும் யாராலும் முன்வைக்கப்படுவதில்லை, முன்னெடுக்கப்படுவதுமில்லை. புலித் தமிழீழம் அல்லது புலி ஓழிப்பு இதற்குள் தமிழ் மக்கள் நலமடிக்கப்படுகின்றனர். இதற்கு மாறாக செயல்பட்டவர்கள் அழிக்கப்பட்டனர். அத்துடன் திட்டமிட்ட வகையில், சமூக ஆதிக்கம் பெற்ற பிற்போக்கு கூறுகளைக் கொண்டு புறக்கணிக்கப்படுகின்றது. இதுதான் இன்றைய நிலை.


புலித் தமிழீழம், புலியொழிப்பு என்ற இரண்டும், இரண்டு பத்து வருடமாக தோற்றுப் போன இரண்டு வழிகளாகும். மக்களின் தீர்வாக முன்வைப்பட்ட இந்த வழிகள், இதுவரை எதையும் சாதிக்கவில்லை. ஆனால் இதற்குள் தான், இன்னமும் அரசியல் விபச்சாரம் தொடருகின்றது.


இந்த இரண்டு வழிகளும் மேலும் மேலும் மனித அவலத்தைத் தவிர, எதையும் உருப்படியாக வைக்கவுமில்லை, சாதிக்கவுமில்லை, இனியும் சாதிக்கப் போவதுமில்லை. புலித் தமிழீழமாகட்டும், புலியொழிப்பாகட்டும், இரண்டு பத்து வருடங்களுக்கு மேலாகவே தோற்றுக் கொண்டு இருக்கின்றது. இந்த தோற்றுப் போன வழிக்கு பின்னால் தான், மீண்டும் மீண்டும் வேதாளமாக ஏற முயலுகின்றனர். இதற்குள் புலியல்லாத தரப்பும் சரி, அரசு அல்லாத தரப்பும் சரி, இந்த ஓட்டைச் சட்டியில் குதிரை ஓட்ட முனைகின்றனர்.


கடந்தகாலம் முழுக்கவே தோற்றுப்போன இந்த இரண்டு வழிக்கப்பால், தோற்காத வழியுண்டு. இதுவரை யாரும் முன்னெடுக்காத வழி. இது மட்டும் தான், மக்களின் பிரச்சனைகளை தீhர்ப்பதற்கான ஒரேயொரு வழி. அது சமூகங்கள் தமது முரண்பாடுகளை தீர்ப்பதற்கான அடிப்படையில், தீர்வுகளை காண்பதற்கான வழி.


மேலே குறிப்பிட்டது போல் இதுவரை முன்னெடுக்காத, வெறும் வார்த்தையாக அது சிதைக்கப்பட்டுள்ளது. இதை முன்னெடுக்க மறுப்பவனும், ஒடுக்குபவனும், இதை தோற்றுப் போனதாகவே சதா காட்டமுனைகின்றான். இது சாத்தியமற்றது என்கின்றான். தமிழீழத்தின் பின் அல்லது புலியொழிப்பின் பின் என்று, இருவரும் ஒரே ரெக்கோட்டை ஒரேவிதமாக போடுகின்றனர்.


இதைக் கோரியவனை, முன்னெடுத்தவனை கொன்று போட்டபடி, இது சாத்தியமற்றது என்று அவனே கூறுகின்றான். அத்துடன் இதை இன்றைய உலகத்துக்கு சாத்தியமற்றதாகவும், அதற்கு எதிரான அவதூறையும் கட்டமைக்கின்றான். இதற்கு எதிராக எல்லாம் அவனாகவே இருக்கின்றான். இந்த வழி மீது நம்பிக்கையீனத்தை பலவழிகளில் திணிக்கின்றனர். மக்கள் தமக்காக தாம் போராடும் வழி, கடுமையான அவதூறையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கின்றது.


ஆனால் இது தோற்காத, தோற்க முடியாத வழி. மக்கள் தமக்காக தாம் போராடுவது. இது எப்படி தோற்றுப் போகும்? இந்த வழியில் தோற்பவன் யார் என்றால், ஒடுக்குமுறையாளன் தான். மக்களின் சமூக அவலத்தை விதைப்பவன் தான் தோற்றுப்போவான். புலி மற்றும் புலியல்லாத தளத்தில், இதை தடுத்து நிறுத்தும் அரசியல், இந்த வழியை இழிவுபடுத்துகின்றது, கேவலப்படுத்துகின்றது. மக்கள் தமது விடுதலையை தாம் பெறும் நோக்கில், சமூக முரண்பாடுகளையும் தீர்க்கும் வழியில் போராடுவதையும், போராடக் கோருவதையும் எதிர்த்து, அதை சிதைகின்றவன் யார் என்றால் மனித குலத்தின் எதிரி தான். மக்கள் தாம் தமக்காக போராடாத வழியில், சிலர் அதை தீர்ப்பார்கள் என்ற அரசியல் படுபிற்போக்கானது. மக்கள் தாம் தமக்காக போராடுவது என்பது, உயர்ந்தபட்ச ஜனநாயகத்தை அப்படையாகக் கொண்டது. இதைவிட உயர்ந்த ஜனநாயகத்தை யாராலும் முன்வைக்க முடியாது. இதைச் செய்ய மறுக்கின்ற புலி மற்றும் புலியல்லாத தரப்புகளில் இருந்து, இதற்கு கடும் எதிர்ப்புள்ளது. அதாவது மக்களின் எதிரிகளின் எதிர்ப்பு, இதற்கு இயல்பாகவுண்டு. இதை எதிர்த்து இதற்கு எதிராக செயல்படாது, தமிழ் மக்களின் பிரச்சனைக்கு வேறு எந்த தீர்வும் சாத்தியமற்றது.


Sunday, July 22, 2007

பிசாசுகளுடன் மட்டுமல்ல, பேய்களுடனும் சேர்ந்தும் புலியை ஒழிக்கும் துரோகிகள்

பிசாசுகளுடன் மட்டுமல்ல, பேய்களுடனும் சேர்ந்தும் புலியை ஒழிக்கும் துரோகிகள்

பி.இரயாகரன்21.07.2007

கிழக்கை பேரினவாதம் கைப்பற்றியது பற்றிய, புலி எதிர்ப்பு (ஓழிப்புக்) கும்பலின் அரசியல் நிலைப்பாடு இதுவாகவேயுள்ளது. குடும்பிமலை யத்தமும் பேரினவாதக் கூச்சலும் ஒன்றாகி, அதுவே கிழக்கு மக்களின் வெற்றிப் பிரகடனமாக, பேரினவாத பாசிசப் பேய்கள் அறிவிக்க, புலியெதிர்ப்புக் கும்பலோ புலிப் பாசிசத்தை ஒழித்ததாக கூறிக் கொண்டாடுகின்றது.

இப்படியாக பேரினவாதம் கிழக்கை புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாக ஒருபுறம். ஜனநாயகத்தை மீட்டதாகக் கூறி அதைக் கொண்டாடும் தமிழ் புல்லுருவிகள் மறுபுறம். புலிகளோ தாம் பின்வாங்கி இருப்பதாகவும், கொரில்லாப் போராட்டம் நடத்தப் போவதாகவும், பதிலடி உண்டு என்றும், ஒரு அரசியல் வித்தையைக் காட்டமுனைகின்றனர்.

மக்களோ இந்தக் கும்பலிடம் தோற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் அனாதைகளாக்கப்பட்டு, விதவைக்கோலம் திணிக்கப்பட்ட நிலையில், வாழ்வு மறுக்கப்பட்டுள்ளனர். இப்படியாக மக்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், வெற்றி பற்றியும் தோல்வி பற்றியுமான கொண்டாட்டங்களும் புறக்கணிப்புகளும். எதுவும் அந்த மக்களுக்காகவல்ல.

உண்மையில் இப்படியாக யார் வென்றனர்? யார் தோற்றனர்? மக்களிடமிருந்து அரசியல் ரீதியாக அன்னியமான கும்பல்களுக்கு இpடையிலான சண்டையும், அதன் வெற்றி தோல்வியும் அரசியலாக்கப்படுகின்றது. கிழக்கு வாழ் மக்கள் அனாதைகளாக, நடைப்பிணமாகி விட்டனர். மக்களோ அரசியலில் இருந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட நிலையில், அரசியலற்ற மந்தைகளாக உருத்தெரியாததாகப்பட்டுள்ளனர். ஆயுதமேந்திய கொலைகாரக் கும்பல்கள், அந்த மக்களின் வாழ்வின் எல்லாக் கூறுகளையும் நசுக்கிவிட்டனர். அந்த மக்கள் வாழ்விழந்து கிடப்பதையே, அரசியல் வெற்றியாக கருதி இந்த கும்பல் தனக்குள் தவளைகள் போல் சலசலக்கின்றது.

தவறான அரசியல் தவறான போராட்டமாகிவிடுகின்றது. இந்த தவறான போரட்டத்துக்கு எந்தக் கதி நடக்குமோ, அந்த கதியை கிழக்கு மறுபடியும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. மக்கள் மட்டும் தான், தமக்கான எந்த சொந்த வரலாற்றையும் உருவாக்க முடியும் என்பதை, புலிக்கு மட்டுமல்ல புலியல்லாத தரப்புக்கும், அதன் அரசியலுக்கும் கற்றுக்கொடுக்க முனைகின்றது.

மக்களின் அனைத்து உரிமையும் அரசியல் ரீதியாக நலமடிக்கப்பட்ட நிலையில், மக்களால் எதையும் கோரவோ எவையையும் தக்கவைக்கவோ முடியாது. மக்கள் மேல் இதையே வெற்றியாக கருதி பேரினவாதம் கொக்கரிக்கின்றது. மக்களின் சொந்த மீட்சிக்கான வாழ்வுக்கான அனைத்து வழிகளும் இல்லாதாக்கப்பட்டுவிட்டது. அந்த மக்களின் விடுதலை பல பத்தாண்டுகளும் நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் நலமடிக்கப்பட்டுள்ளது.

இந்த மனித அவலத்தை கொண்டாடும் அரசியல் கூத்துகள், அதில் சில முரண்பாடுகளுடன் புறக்கணிப்புகள் என பேரினவாத சக்திகளின் அரசியல் வக்கிரகங்கள். தமிழ் புல்லுருவிக் கூட்டம் இதற்குள் நீந்தி மீன் பிடிக்க முனைகின்றது. இப்படியாக மக்களின் மீட்சி பற்றியும், புலிகளின் பாசிசம் பற்றியும் அரசியல் பாடம் நடத்த முனைகின்றனர். சொந்தத் துரோகத்தையும், பேரினவாதத்தின் கால்களை கட்டிப் பிடித்த கிடக்கும் அரசியல் கோமளித்தனங்களையும் விளக்க முனைகின்றனர். பிசாசுகளுடன் மட்டுமல்ல, பேய்களுடன் கூடித்தான், புலி எதிர்ப்பை (புலி ஒழிப்பை) செய்யமுடியும் என்று கும்மியடிக்கும் அரசியல் விபச்சாரமும் ஒருங்கே அரங்கேறுகின்றது. பேரினவாத கூச்சலையும் ஒடுக்குமுறையையும் தான், இந்தக் கும்பல், ஜனநாயகத்தின் வெற்றி என்கின்றது. அதாவது பேரினவாதம் புலியொழிப்பில் வென்றதாக கூற, புலியெதிர்ப்புக் கும்பல் ஜனநாயகத்தை தாம் வென்றதாக கூறுகின்றது. மக்களின் துரோகிகளின் வெற்றி பற்றிய சாரம் இது தான். மக்கள் புலிகளிடம் தோற்றது போல், இந்த துரோகிகளிடமும் தோற்று அனாதைகளாகி, தமது உரிமைகள் இழந்து நாதியற்றுக் கிடக்கின்றனர்.