தமிழ் அரங்கம்

Sunday, December 30, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...13_14.

வன்முறை வெறியனுடைய வழக்கறிஞர்



நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு குஜராத் மாநில அரசாங்கத்தின் சட்ட ஆலோசகராக ஆஜராகும் அரவிந்த் பாண்ட்யா, "முஸ்லிம்களை முடமாக்குவது தான் அவர்களைக் கொல்வதை விட சிறந்தது" என தான் நம்புவதாகக் கூறினான்.

கோத்ரா சம்பவத்திறகுப் பின் குஜராத்தில் நிகழ்ந்த மனித இன படுகொலைகளில், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் கொலைகார கும்பலின் காவல் தெய்வமாக இருந்து அவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பி செல்ல உதவினான் என்பதை நாடு உறுதியாகவே நம்பியது. இந்நம்பிக்கையானது உறுதியான வலுவான உண்மையாக மாறுவதற்குக் காரணம், மோடியும் மற்றும் அவனுடைய கட்சியைச் சார்ந்தவர்களும் வெளிட்ட தெளிவான பேச்சுகள் மற்றும் அல்ல, மீடியாக்கள், மனித உரிமை குழுக்கள் மற்றும் தனியார் உண்மை கண்டறியும் அணிகள் என பல்வேறு தரப்பினர்கள் மோடி ஆட்சியின் மீது வைத்த பல்வேறு குற்றசாட்டுகளும் முக்கிய காரணமாகும்.

இம்மனித இனபடுகொலைகளைப் பற்றி அதிகாரபூர்வமாக விசாரணை நடத்தும் நானாவதி-ஷா ஆணையம், இப்போது சில ஆண்டுகளாக வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது. நானாவதி-ஷா ஆணையம் முன்பாக அரசாங்கத்தின் செயல்பாடுகளை நியாயபடுத்துவதற்காக நியமனம் செய்யப்படடுள்ள விஷேட அரசு தரப்பு வழக்கறிஞரான பாண்ட்யாவும் மற்ற அனைவரும் (சங்பரிவார சண்டாளர்கள்) நம்புவதைப் போன்றே, "மோடி இல்லாது இருந்திருந்தால் கோத்ரா சம்பவத்திற்காக ஹிந்துக்களால் பழிவாங்கி இருக்கமுடியாது" என்று கூறினான். பாண்ட்யா அரசு தகவல்களை இரகசியமாக பகிர்ந்து கொள்ளும் விஷயங்களில் பங்கெடுப்பதில் மட்டுமல்லாது, இந்த விஷயத்தில் (கோத்ரா சம்பவம்) மோடியின் சொந்த அபிப்பிராயத்தையும் அறியக் கூடியவனாக இருந்தான். "மோடியும் அவனது அரசாங்கமும் 2002ல் நடைபெற்ற இனபடுகொலையை ஆதரித்ததோடு அப்பாதகர்களுக்கு பின்னணியில் இருந்து முழுஉதவியும் செய்தது" என்ற குற்றசாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட வழக்கறிஞர்களின் படையை வழிநடத்தி செல்லும் பாண்ட்யா தெஹல்காவிடம் கூறியதாவது, "கலவரத்தின் போது மோடி காவல்துறையினர் ஹிந்துக்களுடன் இருக்க வேண்டும் (உதவியாக) என வாய் மொழியாக உத்தரவிட்டான்."

பாண்ட்யா கூறினான், "(கோத்ரா) சம்பவம் நடைபெறும் போது ஹிந்து அடிப்படையிலான அரசு இருந்தது. எனவே மக்களும் (காவி வெறியர்கள்) தயாராக இருந்தனர். இன்னும் மாநில(அரசு)மும் தயாராக இருந்தது... இது ஒரு மகிழச்சியான ஒருமித்த நிகழ்வாக அமைந்தது."

இந்த நிருபர் ஜுன் 6 மற்றும் 8 தேதிகளில் இருமுறை பாண்ட்யாவை சந்தித்தார். "பாஜக அல்லாத அரசாங்கம் 2002ல் இருந்திருக்குமானால், கலவரங்கள் ஒருபோதும் நடந்திருக்கவே முடியாது" என்று இவ்விரு சந்திப்பின் போதும் பாண்ட்யா மிகவும் வலியுறுத்தி கூறினான். கோத்ரா சம்பவத்திறகுப் பின் மோடி மிகவும் மனஉளைச்சல் அடைந்திருந்தான், அவனே அஹ்மதாபாத்தில் உள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியான ஜேத்புராவில் வெடிகுண்டுகளை வீசியிருக்க வேண்டும் என்னும் அளவுக்கு மனம்பாதித்தது - ஆனால் முதலமைச்சர் என்னும் அவனுடைய பதவியே அவ்வாறு செய்யவிடாமல் கட்டுபடுத்தியதாகவும் அவன் (பாண்ட்யா) கூறினான். குஜராத்தில் முஸ்லிம்கள் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டது "வெற்றி நாள்" என ஒவ்வொரு வருடமும் கொண்டாடப் படவேண்டும் என அவன் எண்ணியதாக பாண்ட்யா கூறினான். இன்னும் அவன் கூறியது என்னவென்றால், முஸ்லிம்களை முடமாக்குவது அவர்களை கொல்வதை விடவும் சிறந்ததாக இருந்திருக்கும். இன்னும் இது குறைந்த அளவுக்கு தண்டனையை (காவி வெறியர்களுக்கு) கொடுக்கக் கூடியது என்பதோடு மட்டுமல்லாமல், ஹிந்துக்களுக்கு எவ்வளவு வலிமையுள்ளது என்பதனை தெரியபடுத்தும் வாழும் விளம்பரமாக ஒவ்வொரு முடமான முஸ்லிமும் சேவையாற்றுவான். முஸ்லிம்களுக்கு பொருளாதாரத்தில் இழப்புகளை ஏற்படுத்தி கொடுமை செய்வதும் அவர்களை கொலை செய்வது போன்று முக்கியமானதே என்று கூறி முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகளை பாண்ட்யா நியாயபடுத்தினான்.

இவை எல்லாம் மட்டுமல்ல, ஆணையம் முன்பு அரசாங்கத்தின் செயல்படுகளை நியாயபடுத்த முயற்சிப்பதோடு, வன்முறை குற்றவாளிகளுக்காக வழக்குகளையும் பாண்ட்யா வாதாடி வருகிறான். அநேகமான வழக்குகளில் நீதிபதிகள் அவர்களுடைய முழு ஒத்துழைப்பையும் இன்னும் வழிகாட்டுதல்களையும் தருவதாகவும் அவன் (பாண்ட்யா) தெஹல்காவிடம் கூறினான்.

"எல்லா நீதிபதிகளும் என்னை அவர்களுடைய ஆலோசனை மண்டபத்திற்கு அழைக்கிறார்கள். இன்னும் எனக்காக முழு அனுதாபம் காட்டுகிறார்கள்....... முழு ஒத்துழைப்பை எனக்கு தருகிறார்கள். ஆனால் சிறிது தூரத்தை என்னிடத்தில் கடைபிடிக்கிறார்கள்.... அவ்வப்போது தேவைபடும் வழிகாட்டுதல்களையும் நீதிபதிகள் தருகிறார்கள்..... எப்படி வழக்கை போடுவது; இன்னும் எந்த தேதியில்.... ஏனென்றால் அவர்கள் எல்லாம் அடிப்படையில் ஹிந்துக்கள்...... எனவே எல்லா தரப்பு மக்களிடம் இருந்தும் உதவிகள் முன்வந்து கிடைத்தது. .... மக்கள் (காவி வெறியர்கள்) ஒற்றுமையுடன் இருந்தார்கள். இன்னும் அவர்களின் ஒரே குறிகோள் ஹிந்து மதத்தை வாழ (?) வைக்க வேண்டும் என்பதாக இருந்தது" என வழக்கறிஞர் (பாண்ட்யா) கூறினான்.

குஜராத்தில் முஸ்லிம்களின் பாதிப்புகளுக்கும் தொடச்சியான துன்புறுத்தல்களுக்கும் அங்குள்ள நீதிதுறை மட்டும் தான் குற்றத்தில் கூட்டு வைத்தது என்றல்லாமல், நானாவதி-ஷா ஆணையம் கூட விட்டு கொடுத்தது. ஆணைத்திற்கு தலைமை தாங்கிய KG ஷாவும், நானாவதியுடன் சேர்ந்து பாஜக-விற்கு அனுதாபம் காட்டினார்கள். நானாவதி பணத்தின் மீது மடடுமே ஆர்வம் கொண்டிருந்ததாக கூறி பாண்ட்யா அவரை ஏளனம் செய்தான். ஜுன் 8 2007 அன்று பாண்ட்யா அஹ்மதாபாத்தில் உள்ள அவனது இல்லத்தில் வைத்து தெஹல்காவுடன் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி இதோ வருகிறது

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...14.

"KG ஷா எங்களுடைய ஆள். நானாவதிக்கு பணத்தின் மீது தான் ஆசை" "(குஜராத் வன்முறை) குற்றவாளிகள் நானாவதி-ஷா ஆணையம் குறித்து பயப்பட வேண்டிய தேவையில்லை" என குஜராத் அரசு சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா தெரிவித்தான்.

தெஹல்கா: வன்முறை கலவரங்களின் போது யார் முன்னின்று நடத்தினார்?

பாண்ட்யா: சிலர் இருந்தார்கள் இன்னும் சிலர் இல்லை என்று சொல்லுவதே தவறாகும்.... சம்பவ இடங்களுக்குச் சென்ற ஒவ்வொருவர்களும் பஜ்ரங்தளிலிருந்தும் விஹெச்பியிலிருந்தும் போனார்கள்....

தெஹல்கா: ஜெய்தீப்பாய் சம்பவ இடத்திற்குப் போனாரா?

பாண்ட்யா: ஜெய்தீப்பாய் கூட போனார்... எந்தெந்த தலைவர்கள் எங்கெங்கே போனார்கள், யாருக்கு நேரடியான பங்கு (தொடர்பு) இருந்தது, யாருக்கு சந்தேகபடும் படியாக பங்கு (தொடர்பு) இருந்தது - ஆணையத்திறகு முன்பால் இந்த விளக்கங்கள் எல்லாமே இருக்கிறது, எல்லா கைதொலைபேசி எண்களும், யாரெல்லாம் எங்கே சென்றார்கள்..... இடங்கள் கூட எங்களிடம் உள்ளன......

தெஹல்கா: ஆம் சில சர்ச்சைகள் கூட நடந்தனவே.....

பாண்ட்யா: அது இப்போதும் உள்ளது.... இன்னும் யாருடைய கைதொலைபேசி எண்கள் அங்கே இருந்தது என்பதும் எனக்குத் தெரியும்..யார் யார் எவர்களிடம் எங்கிருந்து பேசினார்கள்.... என்னிடம் பேப்பர்கள் உள்ளது....

தெஹல்கா: எனவே இதனால் ஹிந்துக்களுக்கு ஏதேனும் சில பிரச்சனைகள் இருக்குமா?.... ஜெய்தீப்பாய்க்கு இன்னும்.......

பாண்ட்யா: ஐயா, நான் தான் வழக்குகளை எதிர்கொள்கிறவன்..... கவலைபடாதே.... இதுபற்றி கவலைபடாதே!, பிரச்சனைகள் ஏதும் இங்கே ஏற்பட போவதில்லை. ஒருகால் பிரச்சனை ஏதும் ஏற்பட்டாலும் நான் அதை தீர்தது விடுவேன்.......... நான் யாருக்காக இத்தனை ஆண்டுகளையும் செலவழித்துள்ளேன்?... எனது சொந்த இரத்தத்திற்காக.

தெஹல்கா: ஆணையத்தின் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு எதிராக போக வாய்ப்பு இருக்கிறதா?

பாண்ட்யா: இல்லை, இல்லை.... காவல்துறையினருக்கு சில பிரச்சனைகளை இது உருவாக்கலாம்.... அது அவர்களுக்கு எதிராக போகலாம்... பாருங்கள், நீதிபதிகள் காங்கிரஸால் தேர்வு செய்யபட்டவர்கள்.

தெஹல்கா: ஆம்...நானாவதி... இன்னும் ஷா.

பாண்ட்யா: அது மட்டுமே பிரச்சனை.... அந்த நேரத்தில் நம்முடைய தலைவர்கள் அவசரத்தால் சர்ச்சைக்குள் மாட்டிக் கொண்டனர்....... அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், நானாவதி சீக்கியர் கலவரம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளதால்..... காங்கிரஸ் நீதிபதியை அவர்கள் பயன்படுத்தினால் சர்ச்சைகள் வராது.....

தெஹல்கா: நானாவதி முழுமையாக உங்களுக்கு எதிராகவே உள்ளாரா?

பாண்ட்யா: நானாவதி சாமர்த்தியமான ஆள்... அவருக்கு பணம் வேண்டும்.... KG ஷா புத்தி கூர்மையுடையவர்... அவர் எங்களுடைய ஆள்... அவர் எங்களிடத்தில் அனுதாபம் உடையவர்....... நானாவதி பணத்திற்கு பின்னால் இருப்பவர்.....

தெஹல்கா: அவர் பணம் பெற விரும்புகிறார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்......

பாண்ட்யா: அது உள்விவகாரம்......

தெஹல்கா: நானாவதி-ஷா ஆணையம் ஹிந்துக்களுக்கு எதிராகப் போகலாம்....

பாண்ட்யா: அவர்கள் ஆணையத்தை ஆண்டுகள் கணக்கில் நடத்துகிறார்கள்... அவருக்குப் பணம் வேண்டும், வேறு ஒன்றும் இல்லை... அவர் காங்கிரஸ்காரர்.....

தெஹல்கா: ஷா?

பாண்ட்யா: இல்லை. ஷா, அவர் எங்களுடைய ஆள்...... நானாவதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இன்னும் ஷா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்...

• ••

பாண்ட்யா: கலவரம் தொடர்பான வழக்குகளின் அரசு சிறப்பு சட்ட ஆலோசகராக நான் இருக்கிறேன்... நான் இரண்டு விஷயங்களை மட்டுமே குறித்து வைத்துக் கொண்டேன்.... விஹெச்பியில் எவரும் ஆணையத்திடம் ஒருபோதும் வரகூடாது என நான் சொன்னேன்.... நீங்கள் என்னுடன் தொடர்பில் இருந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான்.... நான பாஜகவிடமும், "நீங்கள் என்னுடன் தொடர்பில் இருந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான்" என்றே கூறினேன்.... எங்கெல்லாம் நான் முகாம் நடத்துகிறேனோ அங்கு வரும்போது பெரும் பலத்துடன் வரவேண்டாம் இன்னும் மிக அறிந்த முகமுடையவர்களும் வர வேண்டாம் என சங்பரிவாரிடம் கூறினேன். நீங்கள் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.... எனக்கு ஏதேனும் தேவைபட்டால், உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும் அதற்கு மேல் எதுவும் இல்லை......... முகாம்கள் நடத்தப்பட்ட எல்லா இடங்களுக்கும் நான் சென்றேன். நானும் சொந்தமாக முகாம்கள் நடத்தினேன். உள்ளுர்வாசிகளின் ஆதரவை வென்றெடுப்பதற்காகவே நான் முகாம்களுக்குச் சென்றேன்... இது எப்படி நடக்க வேண்டும், என்ன நடக்க வேண்டும்.....

தெஹல்கா: வேறுவகையான பிரச்சனைகளை அது உருவாக்கியதா.....

பாண்ட்யா: வேலைபார்க்கும் பாணியே வித்தியாசமானது..... ஆணையம் என்னும் மனோநிலையை முழுமையாக உருவாக்கியவனே நான் தான்... அதனால் தான் முஸ்லிம்கள் தங்கள் களப்பணியாளர்களிடம் இந்த விவரத்தைக் கொடுத்தார்கள்.... பல்வேறு பேச்சுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில நுண்ணறிவு குழுவாலும் (Intelligence Bureau) பதிவு செய்யபட்டுள்ளது. அதாவது ஹிந்துவோ அல்லது ஹிந்து தலைவரோ சம்பந்தபட்டிருந்தால் அது ஆபத்தானது, ஆனால் அரவிந்த் பாண்ட்யா சம்பந்தபட்டிருந்தால் 2000 மடங்கு ஆபத்தானது.

தெஹல்கா: உங்களுக்கு எதிராக ஏதேனும் விசாரணை உள்ளதா?

பாண்ட்யா: ஒன்று தெஹல்கா சம்பந்தபட்டது.... நான் காவல்துறை அதிகாரி RB ஸ்ரீகுமாரை மிரட்டினேன்.... அந்தத் தகவல் வெளியே கசிந்து தொலைகாட்சிகளில் நாள் முழுவதும் ஓடி கொண்டிருந்தது.... ஆனால் முந்தைய தெஹல்கா.....

பகுதி 5 நிறைவுற்றது.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/

No comments: