தமிழ் அரங்கம்

Sunday, September 20, 2009

உங்கள் ஓட்டு அம்பானிகள் ஆட்சி

அம்பானி சகோதரர்களிடையே மீண்டும் சொத்துத்தகராறு வெடித்து, உலகமே பார்க்க நடந்து வருகிறது. ஆனால்,அந்தச் சொத்தோ அவர்களுக்குச் சொந்தமானது கிடையாது என்பதுதான் இந்த இரண்டாம் கட்டத் தகராறில் சுவராசியமான விசயம். அந்தச் சொத்து — கிருஷ்ணா — கோதாவரி நதிப்படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயு — இந்தியமக்களுக்குச் சொந்தமானது.

ஊரான் சொத்தை எப்படி பங்கு போட்டுக் கொள்வது என்பதையொட்டி அண்ணன் முகேஷ் அம்பானிக்கும், தம்பி அனில் அம்பானிக்கும் இடையே நடந்துவரும் இந்தச் சண்டை, பேராசை பிடித்தவர்களின் கீழ்த்தரமான கிரிமினல் குற்றமாக இந்திய மக்களின் முன் நிறுத்தப்படவில்லை. மாறாக, பாகப்பிரிவினை சட்டச் சிக்கலைப் போல இந்திய நீதிமன்றங்களால்கையாளப்படுகிறது. இந்தப் பொதுச் சொத்தைக் காக்கவேண்டிய பொறுப்பில் உள்ள இந்திய அரசோ, இந்தச்சொத்துத் தகராறில் அண்ணன் முகேஷ் அம்பானிக்கு எந்தவிதமான பாதகமும் நேர்ந்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு காய்களை நகர்த்தி வருகிறது.

பிரதம மந்திரி அலுவலகம், நிதி அமைச்சகம், பெட்ரோலிய அமைச்சகம், சட்ட அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் இயக்குநர் அலுவலகம் என...
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: