தமிழ் அரங்கம்

Sunday, December 31, 2006

முஸ்லீம் விரோதிகளே ஒரு கணம்

முஸ்லீம் விரோதிகளே ஒரு கணம்


நடுநிலையா அது என்ன? அப்படி உலகில் எதுவும் கிடையாது. உங்கள் கருத்தில் கூட!

சாதம் அன்று விஷவாயு மட்டுமல்ல, எந்தனையோ கொலைகளை செய்தபோது அதற்கு துணை நின்று யார்? நாங்களா இல்லயே! மூஸ்லீமா இல்லை! யார்? அமெரிக்கா தான். அதன் அருவடி விசுவாசிகளும் தான்.

ஈரான் அமெரிக்காவின் பொம்மையாக இருந்த பாசிட் மன்னனுக்கு பின்னால் நின்றதும் அமெரிக்க தான். அங்கு நடத்த கொலைகள் எத்தனை ஆயிரம். அந்த மன்னனுக்கு பின்னால் பாதுகாப்பு வழங்கியது யார்? எங்கே உங்கள் நீதி எங்கே போனது? ஐயோ உங்கள் ஜனநாயகம்?

பின் ஈரான் பழிவாங்க முகமாக ஈராக் மூலமான தாக்குதலை நடத்தியது யார்? நாங்களா? முஸ்லீமா? இன்று இதே குருடிஸ் இனமக்களின் மற்றொரு பகுதிக்கு எதிராக துருக்கி நடத்துதும் படுகொலைக்கு பின்னால் யார் உள்ளனர்? முஸ்லீங்களா? இல்லை. அதே அமெரிக்கா தான். சிலி, வியட்நாம்? பிலிப்பைன்ஸ் எத்தனை ஆதார வேண்டும்?.

சாதம் கொன்ற போதும் அவருக்கு வராத முஸ்லீம் உணர்வு, உங்களுக்கு எதிர்ப்பதற்கு வருகின்றது. எல்லாம் முஸ்லீம் என்று கண்ணை குறுக்கி குறண்டி பார்ப்பது அறிவு கெட்ட தனம். குறைந்த பட்சம் நடுநிலைத்தன்மை என்று நீங்கள் கருதும் உங்கள் அருகதை கூட உங்களுக்கு இல்லாமல் போகின்றது.

சமூகத்திதை பார்பனீயத்தின் ஊடாக பார்த்தல் எல்லாம் காவியாகத் தான் தெரியும். மலைக்கண் நோய் போல் இது காவி நோய். முதலில் மனிதனாக பார்க்க பழகுங்கள்.

மனித குலத்தின் எதிரிகளை மக்கள் மன்னிக்க மாட்டர்கள். குறுக்கி குருட்டு கண் மட்டும் தான் அதற்குள் இழிவாடி வாழ்கின்றது.

அன்று சாதம் அந்த மக்களை கொண்ற போது அதை எதிர்த்தவர்கள் நாங்கள். அன்று அதை ஆதாரித்தவாகள் இன்று போல் அன்றும் அமெரிக்கா விசுவாசிகள் தான். முஸ்லீம் விரோத உணர்வுடன், காவிக் கண் பார்த்தால் எல்லாம் பார்பனீயமாக தெரிவது ஆச்சரியமன்று. அதனால் தான் பார்பனீயம் அமெரிக்கா மயமாகின்றது.

பி.இரயாகரன்
31.12.2006

1 comment:

nagoreismail said...

கௌரவமிக்க விருதை பெற்றிருக்கும் மு.மேத்தா அவர்கள் ஒரு கவிதையில் இப்படி சொன்னார்கள்,
ஈராக் அழிந்த பிறகு தான் தெரிந்தது உலகை அழிக்கும் பேராயுதம் யாரிடம் இருக்கிறது என்பது - என்று,

ஆயுதம் இருக்கிறது என்று கூறி ஒரு நாட்டிற்குள் விசா இல்லாமல் கள்ளக் குடியேறி போல் நுழைந்தாயே, அப்படியே ஆயுதம் இருந்தாலும் உன் கிட்டே இருந்து தானேடா வாங்கியிருக்க முடியும், உன்னை தவிர யாரிடம் இருக்கிறது இத்தனை பயங்கர ஆயுதம்,

படுபாதகர்களே, என்னமோ கையில் ஆயுதம் விற்றதற்கு ரசீது வைத்திருப்பது போல் ஆயுதம் இருக்கிறது என்று தானேடா உள்ளே நுழைந்தீர்கள், ஆயுதம் இருக்கும் இடத்தை எல்லாம் அழிக்க வேண்டும் என்றால் உன்னையே நீயே அழித்துக் கொள், கொடுங்கோலனே,

மோடிக்கு விசா மறுப்பான், காரணம் கேட்டால் பல பேரை கொன்று குவித்தவன் என்பான், சதாமை தூக்கில் போடுவான், காரணம் கேட்டால் பல பேரை கொன்று குவித்தவன் என்கிறான், பழமொழியை மெய்பிக்க தான் இப்படி செய்கிறான், ஒரு உறையில் ஒரு கத்தி மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அது - நாகூர் இஸ்மாயில்