தமிழ் அரங்கம்

Sunday, January 7, 2007

ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்கள் உள்ளனரா?

ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்கள் உள்ளனரா?

(ஒரு விவாவதத்தின் தொடர்)
பி.இரயாகரன்
07.01.2006


ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனரே இன்றைய பார்ப்பனர் என்ற பொதுவான உள்ளடக்கம், இயங்கியல் ரீதியாக கேள்விக்குரியதே. பொதுவாக ஆரியரே இன்றைய பார்ப்பனர் என்ற நேர்கோட்டு வாதம் சிதிலமடைந்து காணப்படுகின்றது. இது பார்ப்பனீய ஒழிப்பில், அதாவது சாதிய ஓழிப்பில் தவறாக இட்டுச் செல்லுகின்றது. இது வராலாற்று இயங்கியல் தன்மையை தவறாக எடுத்துச் சென்று, தவறான மதிப்பீடுகளை உருவாக்கி அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கத் தூண்டி, தவறான வழிகாட்டலையும் செய்கின்றது.

அன்றைய ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனரே இன்றைய பார்ப்பனச் சாதி என்பது, தொடர்ச்சியாக பிறப்பு சார்ந்த இரத்த வழி எல்லைக்குள் பார்ப்பனீயத்தை முடங்கிவிடுகின்றது. இது உள்ளடகத்தில் பார்ப்பனீயம். சாதிய அமைப்பு தோன்ற முன் இரத்த உறவு ரீதியான இறுகிய சமூகக் கூறு என்பது, சாதிய நிபந்தனைக்கு அப்பாற்பட்டது. சாதிய அமைப்புக்கு பின்பான, இரத்த உறவு வழி பார்ப்பனீய கோட்பாடு தான் பாhப்பனீயமாகியது என்ற போதும், அது பிறப்பு சார்ந்த ஓன்றாக இன்று குறுகி பார்பானுடன் தன்னை நிலைநிறுத்திவிடவில்;லை. பார்ப்பனீயம் சமுதாயமயமாகியது. பார்ப்பனீயம் பார்ப்பான் வாழ்வியல் முறை என்பதுக்கு அப்பால், இதுவே இன்று இந்துத்துவமாகியுள்ளது. உண்மையில் பிறப்பில் இருந்து பார்ப்பனீயத்தை விடுவிப்பதும், அதே நேரம் அதை ஓழித்துக் கட்டுவதும் வரலாற்று இயங்கியலின் ஒரு அரசியல் கூறாகவேயுள்ளது.

ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்களே இன்றைய பார்ப்பனர் என்று கூறுவதில், ஜெர்மனைச் சோந்த மாக்ஸ்முல்லர்தாம்; பங்கே முதன்மையானது. அவரைப் பொறுத்தவரை தமது நாட்டுக்கு ஒரு நகரிகத்தின் தொடர்ச்சியையும், இரத்த உறவு கொண்ட ஒரு ஆரிய தூய்மையை உருவாக்கவும், ஆரியம் பற்றிய மிதமிஞ்சிய கற்பனை புனைந்தாh. 1859 இல் தொடங்கி அவரின் இந்த முயற்சி, அந்த நூற்றாண்டின் இறுதிவரை அதற்காக முயன்று ஒரு ஆரியமாயை உருவாக்கினார். எல்லாம் ஆரியர் என்று கூறிதன் மூலம், உலக நாகரிகமே ஆரியம் என்று கூறி, பார்ப்பனீயத்தை ஆரியமயமாக்கினார். உண்மையில் இதை ஜெர்மனியுடன் இனைக்க முனைந்தார். இதன் மூலம் ஜெர்மனியருக்கு ஒரு உயர் தகுதியை உருவாக்க முனைந்தாh. ஒன்றுபட்ட ஜெர்மனிக்கு தேவையான இந்த ஆரிய மாயையும், அதற்குரிய ஒரு கோட்பாட்டு தகுதியை உருவாக்க முனைந்தார்.

இப்படி ஆரியம் பார்ப்பனீயம் கோட்பாடாக்கப்பட்டது. உண்மையில் ஆரியம் வேறு, பார்ப்பனீயம் வேறு என்பது நிராகரிக்கப்பட்டது. இன்று பார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக, அதாவது எல்லாமே ஒன்றாக காட்டுகின்ற போக்கே ஆதிக்கம் பெற்றுள்ளது. உண்மையில் இது பிறப்புவழி பார்ப்பனீய கோட்பாடே, இதற்கு எதிரான கோட்பாட்டிலும் ஆதிக்கம் பெற்று சமூகமயமாகி நிற்பதைக் காட்டுகின்றது. சாதியம் தோன்றாத சமூக அமைப்பில், இந்;த ஆரியம் பற்றி விளக்கம் தான் என்ன? அது பிறப்பு வழி சார்ந்த இரத்தவழியா? வரலாற்றின் தொடர்ச்சி சார்ந்த மாற்றங்கள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டுள்ளது. அதாவது சமூக பொருளாதார மாற்றங்கள், அதன் சமூக உட்கூறுகள் அனைத்தும் புறந்தளப்படுகின்றது.

ஆரியத்தை பிறப்பு சார்ந்த கோட்பாடாக வரையறுத்து, இன்று வரை அதுவே பார்ப்பனீயமாக தொடர்வதாக கூறுவது எப்படித் தான் சரியானது? பொதுவாக எல்லா ஆய்வளார்களும், சாதிக்கு ஏதிராக போராடிய அம்பேக்கா உட்பட, இக் கோட்பாட்டை கோட்பாடளவில் மறுதளிக்கினர். ஆனால் நடைமுறை எதார்த்தில், அதன் எதிர்வினையில் இதுவே ஆதிக்கம் பெற்றுள்ளது. இது பார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டத்தின் சரியான வரலாற்று இயங்கியலை இனம்காண முடியாத வெளிப்பாடாகும். அத்துடன் அவர்களின் இன்றைய அரசியல் நிலைகாரணமாகவும், இந்த குறுகிய போக்கு ஆதிக்கம் பெற்று நிற்கின்றது.

இதில் இருந்து இந்த போக்கை விடுவிக்க வேண்டியுள்ளது. ஆரியமாயை தகர்ப்பதன் மூலம, எதிர்நிலையில் கட்டப்படும் திரவிட மாயையும் நாம் கலைத்தேயாக வேண்டும். இந்த பாhப்பனீய மாயையில் இரண்டு கூறுகள் உண்டு.

1.பார்ப்பனீயம் துய்மையானதும், வெளியில் இருந்த வந்துமான ஆரிய வழிப்பட்ட இன்றைய பார்பானர்கள் தான், தாம் என்ற பிரமை.
2.பார்ப்பனீயம் துய்மையானதும் வெளியில் இருந்து வராதுமான இந்தியாவில் தோன்றி ஆரிய வழிப்பட்ட இன்றைய பார்பானர்கள் தான், தாம் என்ற பிரமை.

முதலாவது பிரிவில் பார்ப்பனர்கள் சாதி ரீதியாக தமது தூய்மைக்கும், மேற்கு வரை தமது நகரித்தை பற்றிய பிiமைக்கும், தூய்மைக்கும், தமது வெற்றிக்கும், பெருமைப்படுகின்ற ஒரு கூறாக இதைக் காட்டிக்கொள்கின்றனார். இதற்கு எதிராக வந்தேறிகள் என்ற தளத்தில், இதற்கு எதிhவினை உள்ளது. இதை மறுதளிக்க இரண்டாவது அம்சம் தோற்றுகின்றது. அதாவது முதலாவதின் எதிர்வினையை மறுக்க, நாங்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள், என்றும், தாம் வந்தேறிகள் அல்ல என்ற காட்டும் பார்ப்பன எதிர்வினையும் உள்ளது. வரலாற்றை திரித்து புரட்டுவதன் மூலம், முழு வரலாற்றையும் இக் கூறுகள் சிதிலமாக்கியுள்ளது. மறுபகத்தில் எதிர்வினைகள் திராவிடமே உலக நாகரிகத்தினை முழுமை என்ற காட்டுகின்ற பிரமை கட்டப்படுகின்றது. பொதுவாக மொழி ஆய்வை வைத்துக் கொண்டு, இதை இரண்டு பிரிவும் தத்தம் சமகால அரசியல் தளத்துக்கும், காலத்தின் தேவைகும் எற்ப திரித்துப் புரட்;டு;கின்றனார்.

மித மிஞ்சி கற்பனைகள் ஆய்வுகளாக வருகின்றது. இதில் மொழி ஆய்வு மூலம் இதை நிறவுதல் என்ற பெயரில், அனைத்ததையும் தவிடுபொடியாக்கி குழப்பிவிடுகின்றனார். மக்களின் சமூக கொருளாதார கூறை புறந்தள்ளி, மிகைப்படுத்தபட்ட கற்பனைக்குள் இவைகளை முடங்கி தமது சொந்த முரண்பாட்டுடன் விடுகின்றனர்.

இதில் இருந்து இதை விடுவித்து, தெளிவுபடுத்துவது மிகவும் கடினமானது. நம்பிகைகள், பிரமைகள் மீதான எதிர்வினையாகவே இது உள்ளதாலும், இவைகளை நம்பிய ஒரு போராட்ட வழியாக வாழ்வியலாக உள்ளதால், இது மேலும் விகரமாகி கடினமாககின்றது. மறுபக்கத்தில் கடந்தகால ஆய்வுகள், விளக்கங்கள் சமூக பொருளாதார நோக்கில் செய்யப்பாடமையால், அவை வெற்றிடமாகவே உள்ளது. சிக்கல் நிறைந்த இந்த விடையம் மீது பற்பல கேள்விகளை எழுப்பவும், அதை தர்க்க ரீதியாக விவாதிப்பதன் மூலம் உரு தெளிவை பொதுத்தளத்தில் எற்படுத்த முடியும்.

1.வெற்றி பெற்று வந்தாக கருதும் வந்தேறி ஆரியர்கள் எந்தப்பக்கதில் எப்படி ஆட்சி அமைத்தனர்?
2.வந்தேற முன் அவர்களின் பண்பாட்டு வேர் எங்கு இருந்தது. அதற்கு ஆதாரங்கள் எவை? அதன் அப்படைகள் எங்கே? வந்தேறாத குடிகள் என்றால் கூட, அதன் அடிப்படைகள், ஆதாரங்கள் எங்கே?
3.வெளியல் இருந்து வந்து வெற்றி பெற்ற அல்லது இந்த மண்ணில் வாழந்த ஆரியர்கள் ஏன் ஒரு நாட்டு மக்களாக இந்த மண்ணில் இல்லாமல் போனார்கள்? அவர்களின் வேத மொழி ஏன் வாழவில்லை?
4.அப்படி வந்தேறிகளிள் வெற்றி பெற்ற ஒரு ஆட்சி இருந்து இருந்தால் அல்லத இந்த மண்ணின் உருவான ஆரியர் என்றால், அந்த ஆரியர் ஆட்சியை அழித்து யார்? எப்படி ஏன் அழிக்கப்பட்டது?
5.அவர்கள் தான் இன்றைய இரத்தவழி உறவு பார்பானர்கள் என்றால் அதன் அடிப்படை தான் என்ன? இலலை என்றால் எப்படி?
6.வராலாறு தெரிந்த காலம் முதலே பார்ப்பனர் தனித்து இருந்து ஒரு நாடு அல்லது ஒரு தனி ஆட்சி இருந்ததாக வரலாறு கிடையாது. அதற்கு முந்திய வேத காலத்திலும் அது கிடையாது. அப்படியாயில் பார்hனருக்கு மட்டும் மொழயாக உரிய சமிஸ்கிருத மொழி எப்படி எங்கே உருவானது? அப்படியாயின் பாhபான் யார்?
7.பார்ப்பன சாதி ஒரு பூசாரி பிரிவாக, ஒரே மொழி பேசுகின்ற ஒரு சாதிப் பிரிவாக எப்படி நீடிக்க முடிந்தது. அதற்கான சமூக பொருளாதாரக் கூறு என்ன?
8.வேதகால மக்களின் வர்க்க அமைப்பு என்ன? அது ஒரு வர்க்க அமைப்பு என்பதால், அது எப்படி பார்பனீயமாக ஒருங்கினைந்தது அல்லது சிதைந்தது.?
9.இன்றைய பார்ப்பனர் மூலத்தை வேதத்தில் தேடினால் காணமுடியாது. வேத மக்கள் அதாவது அந்த ஆரியர், வாழ்வு சார்ந்த மக்கள் பற்பல தொழிகளை செய்ததுடன், தமது மக்களின் நலனைக் கோருவதே வேதத்தில் முதன்மை பெற்று நிற்கின்றது. தமது வழிபாட்டை பெருமைப்படுத்தி பேசுகின்றனர். இது எப்படி இன்றைய பார்ப்பனீயமாக இருக்க முடியும்;. அதன் நீட்சியாக எப்படி எந்த வகையில் இருக்கின்றது?
10.பார்பனீயம் எந்த வரலாற்று காலத்துக்கு பிந்தைய கோட்பாடு? இதற்கு முந்தைய வரலாற்றை எப்படி பொருத்துவது அல்லது விவக்குவது?

இப்படி பலபத்து கேள்விகளுக்கு, சமூக பொரளாதார எல்லைக்குள் வரலாறு விடை காணவேண்டியுள்ளது. விடை கண்டதாக கருதப்படுபவை அரூபமாகவேயுள்ளது. அவை பலசந்தர்ப்பத்தில் இலகுவாக பொடிப்பொடியாக தகர்ந்து போய்விடுகின்றது. திரவிடர், ஆரியர் என்ற எல்லைக்குள் இதை அய்வு செய்யமுடியாது. இந்தியா சமூகத்தை சாதி சமூகமாக, சாதி சமூக தோன்றுவதற்கு முந்தை வரலாற்றுக்குள்ளும் நகர்த்தி, அதற்குள் குண்டு சட்டியை ஓட்டுவது அபத்தம்;. பொதுவாக திராவிடர், ஆரியர் என்ஓ தம்மைச் சுற்றி ஒளிவட்டம் கட்டி, உலகம் நாகரிகமே தமது இந்த ஒளிவட்டத்தை சுற்றி நடந்தாக ஆய்வுகள் புனையப்பட்டுள்ளது. அதாவது பூமியைச் சுற்றி இந்த பால்வெளி முதல் சூரியன் வரை சுற்றிவந்தாக நம்பிய அதே அறிவு குருட்டுத்தனமே கொலோசி நிற்கின்றது. இந்தியாலில் மட்டுமல்ல, உலகிலேயே எந்தனை மக்கள் கூட்டம் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்து இருந்துள்ளது. தனித்தனியான சுயதீனமான நகரிகம் இருந்துள்ள்து. எல்லாவற்றையும் குதர்க்கமாக திராவிடம் அல்லது ஆரியம் என்று, எமது அறிவியல் பூதக்கண்ணடி கொண்டு தேடுவதே நிகழ்ந்துள்ள்து.

சமூகங்கள் பற்றிய ஆய்வும் அறிவும், சமூக பொருளாதார வாழ்வியல் எல்லைக்குள், மக்கள் என்ற கோணத்தில் வைத்து ஆய்வு செய்யபட வேண்டும்;. அது செய்யப்படவேயில்லை. குழப்பம் குதர்க்கம் ஆய்வாகி நிற்கின்றது. பாவம் மொழிகள். ஒரு மொழியின் தேமாற்றத்தையே எள்ளிநகையாடுகின்றனர்.. மொழி ஒரு மக்கள் கூட்டத்தின் சமூக பொருளாதார உறவுடன் தொடர்புடையது. மொழியின் ஆரமப் உச்சரிப்புகள், இயற்கையை சார்ந்து, அதன் அடியில் இருந்து இயற்கையாக உருவாகின்றது. அது பெரும்பாலும் இயற்கையின் எதிர்வினையாக இருப்பதால், அதை உள்வாங்கும் மனிதன் அதுவாகவே பிரதிபலிக்கின்றான். இதன் வேர் பொதுவாக எல்லா மொழிக்கும் ஓத்த தன்மை கொண்டவை. உச்சரிப்புத் தன்மையில் மட்டும் வேறுபட்ட உச்சரிப்பு உருவாகின்றது. வாழும் சூழழுக்கும் அவர்களின் சமூக பொருளாதார சூழலுக்கும் உட்பட்டு இயற்கையுடன் மறுபடுகின்றது. இயற்கையுடன் ஓசையை எப்பாத இயற்கை சார்ந்த பொருள் பற்றிய மொழி, பயன்பாட்டுன் தொடர்பு கொண்டதாக மாறுபடுகின்றது. இயற்கை சாhந்த சாரம் அதலி பிரதிபலித்த மொழியின் மரபு வேர் இணைகப்படுகின்து.

மொழியை ஆரியர், திராவிடர் என்ற எல்லைக்குள் திரிப்பதை அனுமதிக்க முடியாது. அதன் சமூக பொருளாதார வாழ்வியலுடன், இயற்கை சார்ந்து இனம் காணவேண்டும். கி.மு 1500 முதல் கி.மு5000 வருட வாழ்வில் மனித வாழ்வு, இயற்கையை சார்தே வாழ்வில் கூறுகள் பெருமளவில் இருந்தது. இந்தவகையில் மொழியில் இயற்கை அம்சமே செறிந்து காணப்படும். மொழியைக் கொண்டு ஆரியர், திராவிடர் என்று சமூகங்களை வகைப்படுத்திய ஆய்வுகள் பல புனைவுத்தன்மை பெற்று நிற்கின்றது.

No comments: