தமிழ் அரங்கம்

Saturday, January 13, 2007

ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்?

ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்?

பி.இரயாகரன்
13.01.2007



ரலாற்று ரீதியாக இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்று. வரலாற்று ஆய்வுகளில் உள்ள குளறுபடிகள், அதை மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் தெளிவாக சில வரலாற்று முடிவுகளை, வரலாறு சார்ந்து எடுக்கமுடியும்.


1. ஆரியர்கள் என்போர் வந்தேறிகளே. அவர்கள் கி.மு 1000 க்கும் கி.மு 2000 ஆண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில், இந்தியாவின் ஒரு பகுதியை வந்தடைந்தவர்கள்.


2. ரிக்வேதம் ஆரியருடையதும், ஆரியரால் பின்பட்ட ஒரு வாழ்வுமுறையுடன் கூடிய ஒரு சடங்கு முறையை அடிப்படைiயாகக் கொண்டது. ரிக்வேத உள்ளடக்கமும் அதன் வாழ்வியல் முறையும், இந்திய சமுதாயத்துடன் தொடர்பற்ற ஒன்று.


3. ஆரியர் என்று கருதப்பட்டவர்கள் தான், இன்றைய பார்ப்பனர்கள் என்ற நேர்கோட்டு எடுகோள் தவறானது. மாறாக ஆரியரின் ஒரு பிரிவு, அதுவும் இந்திய சமுதாய கலப்பின் ஊடாகத்தான் பார்ப்பனர்களானார்கள். மற்றைய ஆரிய பகுதி இந்திய சமூகத்துடன் ஒன்று கலந்து இனம் காணமுடியாது போய்விட்டனர். அத்துடன் இன்றைய பார்ப்பனர்களின் ஒரு பகுதி, ஆரிய கலப்பற்றவர்கள். அதாவது இவர்கள் ஆரிய பார்ப்பனர்களால், பார்ப்பனர்களானவர்கள்.


4. ஆரியரின் எந்தப் பகுதி பெரும்பகுதி பார்ப்பனர்களானார்கள் என்றால், ஆரியரில் இருந்த பூசாரிகள் தான். அனைத்து ஆரியரும் பார்ப்பனராகவில்லை.


5. பார்ப்பனம், பார்ப்பனீயம் தோன்றுமளவுக்கு ஆரிய சமூகத்தின் சிதைவு நிகழ்ந்துள்ளது. இதன் விளைவு அதன் மூலமொழியை இழந்து போகுமளவுக்கு நிகழ்ந்துள்ளது.


6. ஆரிய சமூக அமைப்பை வழிநடத்திய பூசாரிகள், சமுதாய எண்ணிக்கையில் மிகச்சிறிய பிரிவினராவர். ஆனால் பொருளாதார ரீதியாக வலுவுள்ள ஆதிக்க பிரிவினராகும். தமது பலத்தினை நிலைநிறுத்தக் கூடிய வகையில், குதிரைகளை சொந்தமாக கொண்ட ஒரு பிரிவும் கூட. ஆரிய சமூக சிதைவின் போது, அவர்கள் தனிமைப்படுமளவுக்கு தனித்துவமான சடங்குகளை பேணும் ஒரு குழுவாக எஞ்சினர். அவர்கள் தமது தனித்தன்மையை பேணியபடி, தனிச் சலுகையையும் கொண்டபடி, இந்த பூசாரிகளும் சமுதாயத்தினுள் சிதைந்தனர். இந்த சிதைவின் மூலம் தமது மூல வேத ஆரிய மொழியை இழந்தனர். ஆனால் தனிச் சலுகை பெற்;ற ஒரு பூசாரிக் குழுவாக இருந்ததாலும், வழிபாட்டு முறைகள் ஏற்கப்பட்டதாலும், அந்த பழைய சடங்கை அவர்கள் பாதுகாக்க முடிந்தது. ஆனால் தனது சொந்த மூல மொழியை இதனூடாக பாதுகாக்க முடியவில்லை. அதாவது வேத ஆரிய கால சடங்குகளை மற்றொரு மொழி ஊடாக செய்ய முனைந்தன் மூலம் தான், அது தப்பிப்பிழைத்தது. சமுதாயத்தில் சிதைந்ததன் மூலம், ஆரிய வேத மூல மொழியையே இழந்தனர்.


இந்த நிகழ்வு நீண்ட நீடித்த ஒரு கால பகுதியில், அதாவது சில தலைமுறைக்குள்ளான ஒன்றாக இருந்துள்ளது. சடங்கு நிலையில் எஞ்சிய அவர்களின் வாழ்வுமுறை மிகவும் தனிமைப்பட்ட நிலையிலும், சமுதாய போக்கில் ஒன்றிணைந்ததன் விளைவு, அவர்கள் ஆரிய வேத மொழியின் நீட்சியை இழந்தனர். எஞ்சி இருந்த சடங்கு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தின் சடங்காக மாறிய போது, சிதைந்த மூல மொழியில் இருந்தும், வாழ்ந்த சமுதாயத்தின் மொழிகளுடனும் கலந்து சமஸ்கிருதம் என்ற இரகசிய பூசாரிகளின் மொழி உருவானது. இது சமுதாயத்தின் பேச்சு மொழியாக உருவாகவில்லை. சொல்லப்போனால் ஆரியர்கள் அனைவரும் பேசும் மொழியாக மீள் உருவாக்கம் செய்யப்படவேயில்லை.


7 .வேதகாலச் ஆரிய சடங்குகளை செய்யக் கூடிய இந்த ஆரிய வழிவந்த பிரிவு, சமுதாயத்தில் தனிச்சலுகை பெற்ற ஓன்றாக மாறியது. இது சலுகை பெற்ற ஒரு தனியான சுரண்டும் வர்க்கமாக, தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், அதை இரகசியமாக்கவும், தனது பழைய மொழியின் சிதைவில் இருந்து ஒரு மொழியை தக்கவைத்துள்ளது. அதுதான் சமஸ்கிருதம். இதை கடவுளுக்கு மட்டும் தெரிந்த ஒரு மொழியாக கூறிக்கொண்டதுடன், கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியவர்களின் ஒரு இரகசிய மொழியாகவும் இதைப் புனைந்தனர். இந்த மொழியைத் தெரிந்தவர்கள், கடவுளுடன் பேசக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது.


8. இந்த சமஸ்கிருத மொழியின் தோற்றம், அதுவும் பார்ப்பனரால் மட்டும் பேசப்பட்ட மொழியாக வரலாறு இந்த மொழியை அடையாளம் கண்டுள்ளது. இதை கடவுள் மொழி என்று கூறிக்கொண்டனர். மறுபக்கத்தில் ஆரிய மூல மொழியை மீட்க முடியாத அளவுக்கு, ஆரிய சிதைவு சமுதாயத்தினுள் நிகழ்ந்துள்ளது.


9. இந்த ஆரிய வேத மொழி சிதைவும், பார்ப்பனர் மட்டும் பேசும் சமஸ்கிருத மொழியின் தோற்றமும், ஆரியரின் சிதைவை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இடைப்பட்ட இக் காலத்தில் ஆரியர் என்ற அடையாளமே இன்றி, அது ஓரு தனித்துவமான மக்கள் கூட்டம் என்ற அடையாளமே இன்றியே, அது அழிந்துபோனது.


ஆரிய சமூகம் ஆரிய வேத மொழியை பேசிய காலத்தில், பல்வேறு தொழில்களைச் செய்யும் ஒரு சமூகமாகவே அது இருந்துள்ளது. அது வெறும் பூசாரிகளை மட்டும் கொண்ட கற்பனைக் கூட்டமல்ல. ஒரு சமுதாய அலகாக, தனது சமுதாயத்தினுள்ளான தேவைகளை பூர்த்தி செய்யும் பலதுறை சார்ந்த ஒரு குழுதான் ஆரியர். இதை நாம் ஆரிய ரிக்வேத சடங்குகளிலும் காணமுடியும். இரண்டாவதாக ஆரிய நாடோடி வாழ்க்கை அதன் முழுச் சிதைவு வரை, பல தலைமுறை கொண்டது. நாடோடிகளாக இந்தியாவின் ஒருபகுதியை வந்தடைந்த காலம் வரை, தனது சமூகத்தின் தேவையை அது தனக்குள்ளேயே பூர்த்தி செய்தது. இப்படி பல்வேறு சமூகத் தேவையையொட்டி, சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினை அதற்குள் இருந்தது. இந்த ஆரிய நாடோடிகள், அப்படியே இரத்த உறவு கொண்ட பார்ப்பனராக இடம் பெயரவில்லை. அப்படி காட்சிப்படுத்துவது என்பது, அப்படி நம்புவது என்பது, மூடர்களினதும், முட்டாள்களினதும் பிழைப்புவாதிகளினதும் செயலாகும்.


இப்படி வந்த நாடோடி ஆரிய சமூகம் இந்தியாவினுள் தனித்துவமாகவும், ஆரிய சமூகமாகவும் நீடிக்க முடியவில்லை. இந்திய சமூகத்தை வென்று அடக்கவும் முடியவில்லை. அவர்கள் சிதைந்தனர். சிதைந்த போது தமது சடங்கு முறை மூலம், இந்திய சமூகத்துக்கு நஞ்சிட்டனர். அந்த நஞ்சு தான், பார்ப்பனீயமாகி சாதியாக நீடிக்கின்றது. இந்த ஆரிய சடங்கு முறையைத் தவிர, ஆரிய மூலம் எதுவும் இனம் காணமுடியாத வகையில் அது சிதைந்துள்ளது.


மீட்கப்பட்ட ஆரிய வேத சடங்குமுறை தனது மூலத்தை தக்கவைத்தபடி, இன்றைய எல்லைவரை அது பலவாக திரிந்து வந்துள்ளது. ஆரிய வேத நாடோடி மக்களின் சிதைவு, தனது மொழியையும், அதன் மூலத்தையும் இழந்தது. தனது நாடோடித் தனித்துவத்தை பேண முடியாத ஒரு காரணத்தினால் தான் அழிந்து, பொதுவான சமூக ஓட்டத்தில் சிதைந்து கலந்தனர். இப்படி அந்த வேத ஆரிய மொழி சிதைவுற்று, அதன் மூல மொழி அழிகின்றது. இதன் மூலம் அவர்களின் இரத்த வழியான சமூக நாடோடி உறவு முறையே அழிகின்றது.


ஆனால் வேத ஆரிய சடங்குகளை பின்பற்றும் ஒரு பிரிவினர், இருக்கத்தான் செய்தனர். ஆனால் அவர்கள் ஆரியராகவோ, ஆரிய வேத மொழியை பேசுபவராகவோ இருக்கமுடியவில்லை. அதன் பெயரால் அவர்கள் தம்மைத்தாம் அடையாளப்படுத்தவும் கூட முடியவில்லை. அவர்கள் வாழ்ந்த சமூதாயத்தில் சிதைந்தபடி, தமது சடங்கை பின்பற்றுபவராக இருந்துள்ளனர். இந்த மதச் சடங்கை பின்பற்றியோர், பெருமளவில் ஆரியரில் இருந்த பூசாரிப் பிரிவாகும். இவர்களால் மட்டும் தான், தனது சடங்குகளையும் அது சார்ந்த நினைவுகளையும் தொடர முடிந்தது. மதம் ஊடாகவும் அவர்களின் பராம்பரியமாக மனப்பாடம் செய்யும் கல்வி முறையூடாகவும் இதைப் பேண முடிந்தது. அதாவது வசதியும் வாய்ப்பும் கொண்ட, உழைப்பில் ஈடுபட்டு வாழவேண்டிய தேவை இல்லாத பிரிவு மூலம் தான், இது ஒரு மதச் சடங்காக பாதுகாக்கப்பட்டது.


மறுபக்கத்தில் தனிச்சொத்துரிமை குடும்ப அலகை அடிப்படையாக கொண்டது என்ற வகையில், ஆரம்ப உழைப்பு பிரிவினைகள் பரம்பரைத்தன்மை கொண்டவையாகவே இருந்தது. அதாவது அது இயற்கையானது கூட. உற்பத்தி சார்ந்த அறிவு, அது சார்ந்த நுட்பத் திறன், அது பற்றிய கல்விமுறை பெற்றோர் வழியாக குழந்தைக்கு சென்றது. குழந்தை பிறந்தது முதலே, இது ஒரு வாழ்வாக மாறிவிடுகின்றது.


இந்த வகையில் ஆரியவேதச் சடங்குகளை, பூசாரிகள் தம் குழந்தைகள் ஊடாக பரம்பரையாக கடத்தப்பட்டது. ஆனால் இந்த பாரம்பரிய சடங்கை வேத ஆரிய மொழியில் தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவிய மொழியில், வெறும் சடங்குகளாகவே அவை சிதைந்து வெளிப்பட்டது. வேத ஆரிய மொழிச் சிதைவு கலந்த ஒரு மந்திரமாகவே, சமஸ்கிருத மொழியின் முந்தைய வடிவங்கள் நீடித்தன. சமஸ்கிருத மொழி மந்திரம் என்ற நிலையைக் கடந்து, ஒரு மொழியாக உருவாகியது என்பது, ஆரிய வேத சடங்குக்கு இருந்த சமுதாய மதிப்பு தான் அடிப்படைக் காரணமாகும். இப்படி சமஸ்கிருதம் ஒரு சுரண்டும் வர்க்கத்தின் இரகசிய மொழியாகியது. இந்த மொழி ஒரு மக்கள் கூட்டத்தால் பேசப்படவில்லை. மாறாக மற்றவர்களை ஏமாற்றி தொழில் செய்யும் ஒரு கூட்டத்தின், தொழிலுக்குரிய மொழியாகியது.


இப்படி இந்த சமஸ்கிருதம் ஒரு குறித்த பூசாரிகளின் கூட்டத்தின் மொழியாவது என்பது, வேதஆரிய சடங்குகள் சமுதாயமயமாகியதன் பின் நிகழ்கின்றது. வேத ஆரியரின் முன்னயை சடங்கு முறைகள் சமுதாயத்தில் மதவழிபாடாக ஆதிக்கம் பெற்ற போது, சமஸ்கிருதமே அந்தச் சடங்குக்குரிய மந்திர மொழியாகின்றது.


10. இந்த தனி மொழியின் தேவை ஏன் எதனால் எழுகின்றது? வேதகால ஆரிய மதச்சடங்கு நல்ல வருவாயுள்ள ஒன்றாகவும், சுரண்டல் வாழ்க்கைக்கு அத்திவாரமானதன் விளைவு, அந்த சடங்கு மந்திரங்கள் தனித்தன்மை பெற்று அவை இரகசியமாகின்றது. வருவாயுள்ள தொழிலை மற்றவர் தெரியக் கூடாது என்பதால், இந்தச் சடங்கை மற்றவர்க்கு புரியாத, புரிய முடியாத வகையில் கட்டுப்படுத்த தனிமொழியின் தேவை அந்த சுரண்டும் வர்க்கத்துக்கு நிபந்தனையாகின்றது. இதை சில இரகசிய மந்திரங்கள் மூலம் செய்வதையும் உறுதி செய்வது, தனிச்சொத்துரிமை அமைப்பின் சுரண்டல் விதியாகும். மற்றவர் புரியாத மொழியில் செய்வது மட்டும் தான், இந்த சுரண்டலை தனித்தன்மையுடன் பாதுகாக்கவும், அதன் தனித்தன்மையை சிலர் கொண்டிருக்கவும், அதை பரம்பரைத்தன்மை வாய்ந்ததாக மாற்றுவது, வர்க்க சுரண்டல் அமைப்பில் வாழ்வுக்கான அடிப்படை விதிகளில் ஒன்று. தனிச்சொத்துரிமை அமைப்பில் இது எல்லா தொழிலுக்கும், அன்றும் இன்றும் பொருந்துகின்றது.


வேத ஆரிய சடங்கை இரகசியமாக்க உருவான, இரகசிய சுரண்டல் மொழிதான் சமஸ்கிருதம். இதை அந்த பூசாரிகள் மட்டும் பேசுகின்ற வகையில் தனித்தன்மை பெற்று, அவர்கள் மொழியானது. இந்த மொழி ஒரு கூட்டத்தின் மொழியாக இருந்த போது, சமூகத்தில் மற்றொரு மொழியே மக்கள் மொழியாக இருந்தது. இந்த மொழியின் இருப்பு என்பது, பூசாரிகள் ஒரு சுரண்டும் வர்க்கமான போது அதாவது அவர்கள் சுரண்டும் பார்ப்பனர்களாகியதால், அவர்களின் பேசும் மொழியாகியது. இந்த சுரண்டும் சமஸ்கிருத மொழி, பொதுவான பூசாரிகளில் இருந்து அவர்களை பிரித்து பார்ப்பனராக்கியது.


இந்த மொழிக்கு என்று சமுதாய மூலம் எதுவும் கிடையாது, இந்த மொழிக்கு என்று தனி வரலாறு கிடையாது. இது பூசாரிக் கூட்டத்தின், அதாவது பார்ப்பனியரின் சுரண்டும் ஓரு இரகசிய மொழி. இந்த மொழியை சாதிய அமைப்பு மேலும் இறுக்கமாக்கி, அதை ஒரு சாதிய மொழியாக்கியது. இது என்றும் எங்கும் ஒரு மக்கள் மொழியாக இருந்ததில்லை. இதனால் இதற்கென்று வரலாறு கிடையாது. இதை ஆரிய வேதச் சடங்கின் மூலம் மட்டும் தான், இனம் காணவேண்டியுள்ளது.


ஆனாலும் சுரண்டும் பூசாரி வர்க்கப் பிரிவின், ஆதிக்கம் பெற்ற ஒரு இரகசிய மொழியாக இருந்தது. இப்படி வேத ஆரியரை சடங்குகள் மூலம் தம்மை மீள் உருவாக்கம் செய்தவர்கள் தான் பாரப்பனர்கள். அவர்களினது சுரண்டும் இரகசிய மொழி தான் சமஸ்கிருதம்.


இந்த அடிப்படையில் தான் வேத ஆரிய பார்ப்பன வரலாற்றின் தொடர்ச்சியை நாம் இனம் காணமுடியும். ஆரிய வேத மக்களின் மூலத்தை, அதன் வாழ்வியல் கூறையும், இந்திய சமுதாயத்தில் தொடர்ச்சியாக அதன் மூலத்துடன் இனம் காணமுடியாது. வேத ஆரிய சடங்குகள் மூலம் அவை மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. ஆரியரின் தொடர்ச்சியில் வந்த பூசாரி பிரிவுகளால் அவை மீள் அறிமுகமாகியது. இந்த பூசாரிகள் ஆரியராக அறிமுகமாகவில்லை, மாறாக சமுதாயத்தில் சுரண்டித் தின்னும் பார்ப்பனராக, புதியதொரு வர்க்கமாக, தமது சடங்குகள் மூலம் அறிமுகமாகின்றனர். இதுவே வருண அமைப்பில் வீற்று இருக்கும் பார்ப்பானாகின்றான். பார்ப்பான் வருண அமைப்பில் ஒரு சுரண்டும் ஒரு உறுப்பாகத்தான், வரலாற்றில் அவன் மீளவும் ஆரிய வேத சடங்கு மூலம் அறிமுகமாகின்றான். சாதி அமைப்பில் இது மற்றொன்றாக வேறுபடுகின்றது. இதை தனியாக நான் விளக்கியுள்ளேன்.


தனது சுரண்டல் தொழிலின் இரகசியம், அது சார்ந்த இழிந்த கேடுகெட்ட வாழ்க்கை முறை, உழைப்பின் மீதான வெறுப்பு, இயல்பாகவே அவர்களை பண்பு ரீதியாக பண்பு கெட்ட சூழ்ச்சிக்காரராக, சதிகாரராக வரலாறு முழுக்க வாழவைக்கின்றது. அது மட்டும் தான், அவர்கள் உருவாக்கிய வாழ்க்கை முறையாகியது. இதற்காக எதையும் செய்யவும், எப்படியும் வாழ்வும், சமுதாயத்தை எப்படியும் இழிவுபடுத்தவும், அவர்கள் ஒருகணம் கூட தயங்கியதில்லை. அவர்கள் வாழ்க்கையே சூழ்ச்சியாகி சதியாகியது. இந்த வாழ்க்கை முறை மூலம், முழு இந்தியாவையும் தனக்கு அடிமைப்படுத்தியது. அதில் ஒன்று தான் சாதிய வடிவம். இவற்றை தனியாக நான் ஆராய்ந்துள்ளேன்.


11. இங்கு ஒரு அடிப்படைக் கேள்வி எழலாம். இன்றைய பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு அடியைச் சேர்ந்த, 4000 வருட வழி வந்த இரத்த உறவு வாரிசுகளா? எனின் இல்லை. வர்க்க அமைப்பின் விதி, தனிச்சொத்துடமை அடிப்படையில் யாரையும் சாதிய அமைப்பு போல் கட்டுப்படுத்துவதில்லை. சாதிய அமைப்பில் சொத்துடைமையை, அதாவது வர்க்க நிலையை சில சாதிகளின் உரிமையாக்கியது. ஆனால் வருண வர்க்க அமைப்பு அப்படி இருக்கவில்லை. வருண அமைப்பில் சொத்துடைய யாரும் மேலே உயர முடியும். அதேநேரம் சொத்தை இழந்தவர்கள் கீழே விழமுடியும். இதை கட்டுப்படுத்தும் எந்த சாதிய விதியும், அங்கு கிடையாது. பாhப்பனர்கள் முதியவர்கள் போன்ற தகுதிக்குரிய அந்தஸ்தை சிறப்பாக பெற்று இருந்தபோது, தனிச்சொத்துடமை விதி பலமானது. அது ஒரு இயற்கை விதியாக, தனிச்சொத்துரிமை அமைப்பின் போக்கில் அதை நிர்ணயம் செய்தது.


இந்த வருண அமைப்புக்கு முன்னமே வேத ஆரிய மூலத்தையும், அந்த மொழியையும், வாழ்ந்த சமுதாயத்தினுள்ளாக சிதைந்ததன் மூலம், தமது இரத்த உறவு வழியான தூய்மை என்று சொல்லக் கூடியதையே இழந்தனர். ஆரியர் என்ற வரலாற்று மூலத்தைக் கூட இழந்து காணப்பட்ட ஒரு சமூகத்தில் தான் பார்ப்பனர்கள் உருவானார்கள். கலப்பு அடிவந்த ஆரிய பரம்பரை தான் இன்றைய பார்ப்பனர்கள். ஆனால் இதற்கு வெளியில் பலர் பார்ப்பனரானார்கள்.


பார்ப்பன பூசாரி சுரண்டும் வர்க்கம் வேத ஆரிய சடங்குமுறையையும், அதன் இரகசியத்தை தனிமொழி மூலம், தனிச்சொத்துரிமை வருண அமைப்பில் தற்பாதுகாக்க முடியாது போனது. தற்பாதுகாப்பு அடிப்படையில் உருவான இரகசிய மொழியான சமஸ்கிருதம் வெறும் மொழியே ஒழிய, சாதி போல் வலுவுள்ள தற்பாதுகாப்பு ஆயுதமல்ல. சாதியில் மட்டும், அதுவும் நிலபிரபுத்துவ காட்டுமிராண்டி அடக்குமுறைச் சமூக அமைப்பில் மட்டும், அது இரத்த உறவு பரம்பரை முறையை பாதுகாக்க முடிந்தது. ஆனால் வருண அமைப்பில், அதன் பரம்பரைத்தன்மையை, இரத்த வாரிசு உறவுக்கு வெளியில் இட்டுச் சென்றது.


வருண அமைப்பின் விதிக்கமைய அதாவது வர்க்க விதிக்கமைய, பார்ப்பனரின் வர்க்க வீழ்ச்சியும், பணம் சம்பாதிக்கும் விதியும், குருகுலக்கல்வி முறையும், ஒரு இரத்த உறவு கொண்ட பரம்பரைக்குரிய ஒன்றாக, ஆரிய வேதச் சடங்கை பாதுகாக்க முடியவில்லை. நல்ல வருவாய் கொண்ட இந்த சுரண்டலில், பலர் புதிய பார்ப்பனரானார்கள். ஆரிய வேதச் சடங்குகள் அதாவது பார்ப்பனீயம் மற்றைய மதங்களைப் போல் துறவை, மனித சேவையை முன்வைக்கவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தி, தன்னை கடவுளாக்கி, அது தனக்கேயுரிய சுரண்டலை முன்வைத்தது. இந்த வகையில் ஆரிய வேத சடங்கு வருவாயுள்ள பார்ப்பனீய தொழிலாகியது. மற்றைய மதங்கள் போல் துறவை மேற்கொண்டு, மக்களிடம் கையேந்தி உண்ணவில்லை. மக்களைச் சுரண்டித் தின்றது. உழைத்து வாழ விரும்பாத சமூக பொறுக்கிகளின் தூய தங்குமிடமாக, வேத ஆரிய சடங்கு மாறியதில் ஆச்சரியமில்லை. சூதும், சூழச்சியும் கொண்ட சதிகள் மூலம், சதியாளர்கள் புதிய பார்ப்பனரானார்கள்.


இந்த ஆரிய வேத சடங்கு ஒரு மதமாக இந்திய சமுதாயத்தில் வெற்றிபெற்றதற்கான மூலம், இது தனக்காக சுரண்டிய மதம் என்பதால், அது செயலூக்கமுள்ள ஒன்றாக எப்போதும் இருந்ததால் இருப்பதால் வெற்றிபெற்றது. அது தோற்ற போதெல்லாம், வென்றதை செரித்தபடி சமுதாயத்தின் கூறுகள் மீது பார்ப்பனீயத்தை நஞ்சாயிட்டது. சமுதாயத்தினுள் பார்ப்பனீயம் நஞ்சை இடுவதில், அதன் சுரண்டும் வர்க்க மூலம் மீட்சிக்கான கூறாக இருந்ததும், இன்றும் இருந்தும் வருகின்றது.


இரத்த உறவைத் தாண்டியே, இந்த பார்ப்பனீயம் பலரை பார்ப்பனீயமாக்கியது. சுரண்டும் ஆரிய வேதச் சடங்கின் செல்வாக்கு, குறித்த இடத்தைத் தாண்டிச் செல்ல ஊக்கியாக்கியது. பல பிரதேசத்தை சேர்ந்த தூர இடங்களில் இருந்து வந்து கற்கவும், அதை தெரிந்து கொள்ளவும் இது தூண்டியது. இந்த சுரண்டும் சூது வாதுகளை கற்பிப்பது நல்ல வருவாயுள்ள தொழிலாகியது. இது குருகுலக் கல்விக்கூடாக, புதிய பார்ப்பனர்களை உருவாக்கியது. இந்தக் கல்வி இரகசிய மொழியான அதே சமஸ்கிருத்தில் கற்றதாலும், கற்று வந்ததாலும், சமஸ்கிருதம் அவர்களுக்குரிய ஒரு தனிமொழியாகியது. எந்த சமூக பொருளாதார அடிப்படையிலான எந்த தொடர்ச்சியுமற்ற இந்த சமஸ்கிருத மொழி, வேத ஆரிய சடங்கு மூலம் சுரண்டலை செய்தவரிடையேயான ஒரு மொழியாக நீடிக்க முடிந்தது. இது ஒரு சுரண்டும் வர்க்கத்தின் இரகசிய மொழியாகவும், அதை மட்டும் இந்த மொழி ஆதாரமாக்கியதால் அதன் இருப்புக்கான அடிப்படையாகியது. மற்றொரு வகையில் இந்த மொழியில் மட்டுமே, வேத ஆரிய சடங்குமுறைகள் இருந்ததுடன், அதை கடவுளின் மொழியாகவும் கற்பிக்கப்பட்டு இருந்தது.


வரலாறு தெரிந்த காலம் முதலே, வேத ஆரிய பார்ப்பனீய சடங்கை முன்னிலைப்படுத்தி வெளிவந்த அனைத்தும், சமஸ்கிருத்தில் எழுதப்பட்டது மட்டுமின்றி, அவை பார்ப்பனரால் தன்னை தான் முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டது. சாதியக் கோட்பாட்டை மதக் கோட்பாடாக்கியதுடன், பார்ப்பனீயம் இப்படித்தான் சமூகமயமாகியது.


12 .ரிக் வேத ஆரிய வரலாறு தொடங்கி, இந்தியாவில் அவர்கள் நிலைபெறல் வரையிலான காலத்தை உள்ளடக்கிய வேதம், நாகரிகம் பெற்று சமூகத்தை அடிப்படையாக கொள்ளவில்லை. அவர்களின் போர்கள் நாகரிக சமூகத்துக் எதிராக இருந்துள்ளது. அவர்கள் போற்றும் ரிக்வேதம் தொடங்கிய இடத்தில் இருந்து நிலைபெற்ற வரையிலான வேத காலத்தில், அவர்களின் போராட்டம் நாகரிக கோட்டைகளை அழித்தலாகும். நிலையாக உழைத்து வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை அழித்தலாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்து அதில் அவர்கள் வாழ முயலவில்லை. அழித்தல் என்பது சூறையாடலை அடிப்படையாக கொண்டது. நெருப்பு சார்ந்த சடங்குகள், விலங்கு பலியிடல் அனைத்தும் இதற்கு உட்பட்டதே. இதைத் தனியாக பின்னர் பார்ப்போம்.


இந்திரன் கோட்டையை அழிக்கும் ஒரு கடவுளாகவே, ஆரியர் முன் நிற்கின்றான். அப்படித்தான் ஆரிய வேத மக்கள் இந்திரனை நம்பினர். ரிக் வேதத்தில் கோட்டை கட்டி ஆரியர் வாழ்ந்ததாக எந்த குறிப்பும் கிடையாது. சாராம்சத்தில் கோட்டை தமது கடவுள் கோட்பாட்டுக்கு எதிரானதாகவும் கூட மாறிவிடுகின்றது. நாகரிக எதிர்ப்பாளரான ஆரியர் வாழ்வியல் முறை, அவர்களின் வழிபாடாக மாறிவிடுகின்றது. ரிக்வேத ஆரிய மந்திரம் ஒன்று, அக்கினியிடம் கோட்டையை காப்பாற்றுவது போன்று, எம்மையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரி வழிபடுகின்றனர்.


இப்படி அக்கால நாகரிக அமைப்புக்கு வெளியில் ஒரு நாடோடிகளாகவே ஆரியர் வாழ்ந்தவர்கள். அதனால் தான் அவர்களின் அழிவு வரை, அவர்களால் நிலைபெற்று வாழ முடியவில்லை. அவர்களின் பின் பல பண்பாட்டு கூறுகள் ஓட்டிக்கொண்டு வருகின்றது. குதிரை, இருப்பு முதல் இறந்தவரை புதைத்தல் எரித்தல் வரை பல கலப்பு பண்பாட்டின் கலவைகளாக வேத ஆரிய வழிபாடு அறிமுகமாகின்றது. அவர்கள் பற்றி எந்த வரலாற்றுக் குறிப்பையும், இந்த சடங்கு முறைக்கு வெளியில் பெற முடியவில்லை. வரும் வழியெங்கும் சிலவற்றை உள்வாங்கினர், சிலவற்றை இழந்தனர். தொடங்கி முடியும் வரலாற்றுக்கு இடையில் பிணத்தை எரிப்பு முதல் புதைப்பது வரை, அவர்களின் பண்பாட்டுத் தளமே அதிர்ந்தது. இந்த நாடோடிக் குணாம்சம், மூலமேயின்றி சடங்கு முறையுடன் எஞ்சி அழிந்தனர். அவர்களின் கோட்பாடு நாகரிகத்துக்கு எதிராக இருந்ததால், அவர்கள் நிலைபெற்று ஒரு சமூகமாக நாகரிகமாக உழைத்து இன்றுவரை வாழ முடியவில்லை.


நகரும் ஒரு நாடோடிச் சமூகமாக, அதையே பல தலைமுறை செய்ததால் நாகரீகத்தின் மூச்சை அவர்களின் வரலாற்றின் பின் இனம் காணமுடியாது. வரும் வழியெல்லாம் அவர்கள் கொள்ளையிடுகின்றனர். கால்நடைகளை திருடுகின்றனர். இதை ரிக் வேதம் இத் திருட்டையும் கொள்ளையையும், இந்திர கொடையாக கூறுகின்றது. இப்படி கொள்ளையிட்டு, அதை புசித்து உண்டு வாழும் சமூகம் காட்டுமிராண்டி சமூகமாக இருப்பது ஆச்சரியமன்று. இப்படி கொள்ளையடித்த கால்நடைகளை பலியிட்டு உண்டபடி தான், அதுவும் பல தலைமுறை ஊடாக குறிக்கோளின்றி இந்தியா வரை வந்தடைந்த ஆரியர் வாழ்வியல் முறை அரைக் காட்டுமிராண்டித்தனமானது தான்.


நீண்ட பல தலைமுறை கொண்ட ஒரு நாடோடி அரைக் காட்டுமிராண்டிகளை, குறைந்தபட்சம் நாகரிகப்படுத்தியது என்றால் அவர்களின் வாழ்வியல் நெருக்கடிதான். இந்த நாடோடிகள் உணவுக்காக கொள்ளையிட்ட போதும், அது அவர்களின் வாழ்வைப் பூர்த்தியாக்கும் வகையில், கொள்ளை வளம் போதுமானதாக இருக்கவில்லை. முதலில் எரியூட்டியவர்கள், ஒரேயடியாக பலியிட்டவர்கள், இதில் இருந்து தப்பிப்பிழைக்க கால்நடைகளை பராமரிப்பது பெருக்குவதை அவசியமாக்கியது. அன்றைய இருப்பில் கால்நடை இன்றிய நகர்வு, தற்கொலைக்கு ஒப்பானது. உணவை நகரும் பாதையில் பெறுவது என்பது சாத்திமற்ற ஒன்று. எனவே கால்நடைகளை தொடர்ந்து பராமரிப்பதும், அதை இனவிருத்தி செய்வதும் அவசியமாக இருந்தது. ஒருபுறம் ஆரிய வேதம் கூறுவது போல் வரும் வழியெங்கும் சடங்கின் பெயரில் கால்நடைகளை தின்பதும், மறுபுறம் கால்நடை வளர்ப்பும் அவசியமானதாக இருந்தது.


அத்துடன் இது சிறியளவிலான தேவையை ஓட்டி சிறிதுகாலம் தங்குவது, பயிர் செய்கையை செய்வதும் உருவானது. இது ஒரு நிலையான பிரதேசத்தில் அல்ல, நகரும் வழிகளில் இதை அவர்கள் செய்தனர் அல்லது கொள்ளையிட்டு அழித்த சமூகத்தின் பயிர் செய்கையை பராமரித்து, அதை அறுவடை செய்து பாதுகாத்தனர். இது தான் அவர்களின் காட்டுமிராண்டிகளற்றதாக காட்டுகின்ற ஒரு உயர்ந்தபட்ச நாகரிகம். அத்துடன் அங்கு இருந்த உழைப்புக் கருவிகளையும், தற்பாதுகாப்பு கருவிகளையும் திருடிக்கொண்டு தம்மை பலப்படுத்தினர். இதை வைத்து முகர்ந்து தேடும் ஆய்வாளர்கள், அவர்களை நாகரிக சமூகமாக காட்ட அலைகின்றனர்.


இந்த ஆரிய நாடோடிகளின் பெயர்வு நிலையற்ற ஒரு நீண்ட பல தலைமுறை கொண்டது. அப்படித்தான் சமூக இருப்பு கொண்ட ஆதி சமூகங்கள் பல இருந்துள்ளது. மனிதன் கால்படாத பல புதிய பகுதியூடான இடப்பெயர்ச்சி, பல இடத் தரிப்புகளை கொண்டதாக இருந்தது. வளமும் வாய்ப்பும் நிறைந்த பூமியில், கொள்ளையும் கொழுப்பும் நிறைந்த இடத்தில், அந்த வளம் வற்றும் வரை தங்கி வாழ்தல் மூலமே ஆரிய இடப்பெயர்ச்சி மெதுவாக நடந்தது. பெண்கள் குழந்தைகள் முதல் முதியவர் ஈறாக கொண்டு, கால்நடைகளை பராமரித்தபடியான இந்த இடப்பெயர்ச்சியை ஒரு புள்ளியாக, ஒரு நேர் கோடாக சுருக்க முடியாது. இது போன்ற வாழ்க்கை முறையுடன் கூடிய நாடோடி வாழ்க்கை முறை, செவ்விந்திய மக்கள் மத்தியில் அமெரிக்காவின் அழித்தொழிப்பு நிகழ்ந்த காலத்திலும் கூட காணப்பட்டுள்ளது. இங்கு அது இயற்கை மாற்றத்தை ஒட்டி இந்த இடப்பெயர்ச்சி பருவகாலத்தின் போக்கில் நடந்தது.


மெதுவான ஆரிய இடப்பெயர்ச்சி மூலம், அவர்கள் கொள்ளையடித்து வைத்திருந்த குதிரைகள் இனவிருத்தி ஊடாக பெருகியதுடன், சுற்றுச்சூழலுக்கு அவை இசைவாக்கம் அடைந்தது. உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் குதிரையைக் கூட பலியிட்டு உண்டனர். அதாவது முதிர்ந்த, செயலற்ற, நகர்வுக்கு தடையாக பெருகிவிட்ட, உணவு இல்லாத நிலையில் குத்pரை கூட பலியிடப்பட்டது. வேத ஆரிய பார்ப்பனீய சடங்கின் போது, பலியிடப்பட்ட குதிரையுடன் அரசி புணரும் சடங்கு பின்னால் ஒரு சூக்குமம் உள்ளது என்பது தெளிவு. அது முறையற்ற ஒரு செயலின் மீதான குற்ற உணர்வை நீக்குவதாக இருக்கலாம்;.


இதற்கு நல்ல உதாரணம் டார்வின் ஆய்வு நடத்திய காட்டுமிராண்டி சமூகத்தில், வேட்டை கிடைக்காத போது தமது வேட்டைக்கு உதவும் நாய்களுக்கு உணவிட, வேட்டையாட முடியாத முதியவர்களை கொன்று நாய்க்கு உணவிட்டதை அவர் பதிவாக்கியுள்ளார். இந்த வகையில் இந்த நாடோடி ஆரிய நகர்வு நடந்தது. ஆரிய இடப்பெயர்ச்சி என்பது ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்தை நோக்கி போதலை அடிப்படையாக கொண்டதல்ல. பல வரலாற்று ஆய்வாளார்கள் இதைக் காணத் தவறி, ஆரிய வரலாற்றை அங்குமிங்கும் முகர்ந்து ஆரிய மூத்திரம் தென்படுகின்றதா என்று முகர்ந்து தேடுகின்றனர்.


ஆரிய சமூகம் நிலையான சமூகமாக உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அல்ல. அதனால் வரலாற்றில் நிலையான வாழ்வற்றவர்கள். ஆதிய சமூகத்தில் நிலையான வாழ்வமைத்து, உற்பத்தி உறவுடன் பின்னிப்பிணையாது அலைந்துதிரியும் காட்டுமிராண்டி சமூக குழுக்களில் ஒன்று தான் ஆரியர். இதற்குள் நிலைபெற்ற நாகரிக பண்பாட்டை அகழ்வாராய்ச்சியில் தேட முடியாது.


பிரதானமான வேள்வி முறையையும், அக்கினி சடங்குகளையும் கொண்ட வேத ஆரியரின், அக்கினி பலிபீடங்களை தேடியவர்களுக்கு அதன் சுவடே காணமுடியவில்லை. அக்கினி வழிபாடு மற்றும் பலியிடல், ஆரிய சடங்கில் கொள்ளையிட்ட சமூகத்தின் மீதான எதிர்வினைதான். இவை ஒரு நிலையான சமூகமாக இல்லாத ஒரு நாடோடிகள் என்பதால், வேள்வி முதல் பலியிடல் வரை வந்த இடத்துக்கு ஏற்ப தற்காலிகமானது தான். அவை அழிந்து போகக் கூடிய எல்லைக்குள், அவை வரலாற்றில் காணாமல் போய்விடுகின்றது.


ஆரிய வேத சடங்கு முறைகள் சிலவற்றை கொண்ட, அதன் எச்சத்தை மீளமைப்பு செய்த பார்ப்பனீயம் இல்லையென்றால் ஆரிய வரலாற்றைப் பற்றிய எந்தக் குறிப்பும் எமக்குக் கிடையாது போய் இருக்கும். இது போன்ற எத்தனையோ சமூகத்தின் தனிக் குறிப்புகள் இல்லாமல் போனது போல் ஆகியிருக்கும். இது ஒன்றும் வரலாற்றுக்கு புதிதல்ல.


------------------------------------------------------------------------------------------


எனது கட்டுரையின் உள்ளடக்கம் புத்தகம் வெளிவரும் வரை, தொடர்ச்சியான திருத்தத்துக்கும், இணைப்புக்கும், நீக்கத்துக்கும் உள்ளாக்குகின்றது. அதேபோல் கட்டுரையின் தலைப்பு, கட்டுரைகள் வரவேண்டிய இடம், கட்டுரையின் உள் மேலும் கீழுமாக இடம்மாறும். அந்த வகையில் இவை தொடர்பான எனது கற்றலும், உங்கள் ஆக்கபூர்வமான விவாதமும் இதற்கு உதவும். இந்த வகையில் உங்கள் தர்க்கங்கள், வாதங்களையும், ஆலோசனைகளையும் கூட எதிர்பார்க்கின்றேன்.


10 comments:

தமிழரங்கம் said...

"அறிவிலியே,

நீ இங்கே கஷ்டப்பட்டு டைப் அடித்துள்ள எல்லாக் கற்பனை, பொய் மூட்டைகளும், இணையத்திலும் வரலாற்று அறிஞர்களிடையிலும் விவாதிக்கப் பட்டு புறந்தள்ளப் பட்டவை.

அதுவும் சம்ஸ்கிருதம் பற்றி எழுதியிருப்பது படித்து சிரிப்பு தான் வருகிறது. எந்த உலகத்தில் இருக்கிறாய் நீ? இந்த 'ரகசிய" மொழியை எத்தனையோ மேல் நாட்டவர்கள், மேலும் இந்தியாவிலேயே உள்ள எல்லா சாதிக்காரர்களும் கற்று அதிலுள்ள அறிவுக் கருவூலங்களை (தத்துவம், மருத்துவம், யோகம், கலைகள், இலக்கியம் ..) மெச்சிப் பயின்று வருன்கின்றனர்!

இவர்களுக்குள்ள அறிவுத் திறனிலும், தேடலும் 1ஃ100 கூடத் தேறாத நீயெல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளனா? இந்தக் குப்பையை வைத்துப் புத்தகம் வேறு எழுதப் போகிறாயா ? நல்ல காமெடி!"

உங்கள் எதிர்வினை உங்கள் குறுகிய சமூக வாழ்க்கை முறையின் அடிப்படையில் சரியானது. உங்களால் விவாதிக்க வக்கு இல்லாத போது, பிதற்றுவதே பார்ப்பனீய மரபு. எங்கே தான் விவாதித்துள்ளது பார்ப்பனீயம்! எங்கேதான் ஜனநாயகத்தை ஒரு சமூக அமைப்பில் கொள்கை அளவில் பார்ப்பனீயம் கையாண்டுள்ளது?

நீங்கள் கூறுகின்றீர்கள் 'எல்லாக் கற்பனை, பொய் மூட்டைகளும், இணையத்திலும் வரலாற்று அறிஞர்களிடையிலும் விவாதிக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டவை." நல்லது எங்கே? எப்போது?, யாரால்? எப்படி? அல்லட்டது, அதை முன்வைப்பதை தான் நாம் எதிர்பார்க்கின்றோம். முடியுமா?

"அதுவும் சம்ஸ்கிருதம் பற்றி எழுதியிருப்பது படித்து சிரிப்பு தான் வருகிறது. எந்த உலகத்தில் இருக்கிறாய் நீ? இந்த 'ரகசிய" மொழியை எத்தனையோ மேல் நாட்டவர்கள், மேலும் இந்தியாவிலேயே உள்ள எல்லா சாதிக்காரர்களும் கற்று அதிலுள்ள அறிவுக் கருவூலங்களை (தத்துவம், மருத்துவம், யோகம், கலைகள், இலக்கியம் ..) மெச்சிப் பயின்று வருன்கின்றனர்!" ஐயா 'எல்லா சாதிக்காரர்களும் கற்று" என்கின்றீர்களே. யாரை எமாற்றுகின்றிர்கள். தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் பாடசாலைக்கே செல்ல முடியவில்லை. அதற்கு உள்ள சமஸ்கிலுதம் படிப்பதாக பிதற்றுவது என்? சொந்த மொழியில் கடவுளை வழிபட உரிமையில்லை, சரி சமஸ்கிருத்திலை வழபடும் உரிமையைக் கேட்டால் அந்த உரிமை இலலை என்கின்றீர்களே.. இதற்குள்ளே நீங்கள் ஆகயாக சமஸ்கிலதம் அனைத்து மக்கள் மொழி என்கின்றிர்கள்.

இந்த எதிhப்பை மீறித்தான் எல்லாச் சாதிக்காரனும் சமஸ்கிருதத்தை பயன்றனர், பயில்கின்றனா. எனது விவாதம் அன்றைய காலத்தில் சமஸ்கிருதம் யாரால்? எப்படி? எந்த நிலையில்? எதற்காக? பேசப்பட்டது என்பது பற்றியது.

எல்லா சாதிக்காரனும் படிக்கின்றான் என்ற உங்கள் புலம்பலைத் தாண்டி எமது கேள்விகள் அடிப்படையாது. இந்த மொழியை எந்த நாட்ட மக்கள், எந்த இன மக்கள், எந்த பிரதேச மக்கள், எப்போது எங்கே பேசினார்கள்? எங்கே பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்? பார்பானிய கிராமங்கள் பேசியதுக்க அப்பால், ஒரு சமூகம் எங்கே எப்போது பேசியது. 2000 வருடமாக எமாற்றிய மூடர்களே, வாயைத் திறவுங்கள்.

'மேலும் இந்தியாவிலேயே உள்ள எல்லா சாதிக்காரர்களும் கற்று அதிலுள்ள அறிவுக் கருவூலங்களை (தத்துவம், மருத்துவம், யோகம், கலைகள், இலக்கியம் ..) மெச்சிப் பயின்று வருன்கின்றனர்!" சமஸ்கிருத்தில் உள்ள தத்துவங்கள் பற்றியோ, அதில் என்ன உள்ளது என்பது பற்றியோ நான் எழுதவில்லையே! நான் அதை ஒரு மொழி என்பதை கூறும் போது, ஒரு மொழி பலதையும் கொண்டு தானே இருக்கும். இதை நான் மறுக்கவில்லையே!

ஒரு சாதிய அமைப்பில் பார்ப்பனர் மட்டும் கற்பிக்கவும் கற்கவும் கொண்டிருந்த உரிமை, இயல்பாக சமூக கூறு அனைத்தையும் சமஸ்கிலுதமாக்கின்றது. இந்தியாவின் அறிவையே சமஸ்கிருத மொழி ஊடாக பார்ப்பனீயம் திருடிக்கொண்டது.
பி.இரயாகரன்

bala said...

//இந்தியாவின் அறிவையே சமஸ்கிருத மொழி ஊடாக பார்ப்பனீயம் திருடிக்கொண்டது. //

தமிழ்வட்டம் அய்யா,
என்ன அவ்வளவு திமிரா? இந்தியாவின் அறிவையே திருடிவிட்டதா?அறிவு திருட முடியாத ஒன்று,கொடுக்கக் கொடுக்க குறையாத ஒன்று என்று சொன்ன அறிஞர்கள் பொய் சொன்னார்களா?என்ன ஆணவம்.
ஒரு FIR பதிவு செய்து பார்பனீயத்தை ஜெயிலில் போடவேண்டுமய்யா.

பாலா

தமிழரங்கம் said...

"தமிழ்வட்டம் அய்யா,
என்ன அவ்வளவு திமிரா? இந்தியாவின் அறிவையே திருடிவிட்டதா?அறிவு திருட முடியாத ஒன்று,கொடுக்கக் கொடுக்க குறையாத ஒன்று என்று சொன்ன அறிஞர்கள் பொய் சொன்னார்களா?என்ன ஆணவம்.
ஒரு குஐசு பதிவு செய்து பார்பனீயத்தை ஜெயிலில் போடவேண்டுமய்யா."

சக மனிதனின் மீதான ஒடுக்குமுறை வைத்துக் வைத்துக் கொண்டு குறையாத அறிவை பெற முடியாது. திருட்டுக் குற்றம் தான், அதில் என்ன சந்தேகம்;! பார்ப்பனீயம் என்பதே மனித இனத்துக்க எதிரானது. அது சாதாரன முதலாளித்துவ ஜனநாயகத்தை, சுதந்திரத்தைக் கூட சக மனிதனுக்கு பார்ப்பனீயம் அனுமதிப்பதில்லை. மனிதனை மனிதனாய்க் கூட அங்கிகரிப்பதில்லை. ஆகவே அது அழிக்கப்பட வேண்டிய ஒன்று.

பி.இரயாகரன்

Thamizhan said...

சொன்னால் கோபித்துக் கொள்பவர்கள் சரியான பதில் அளிக்கமுடியாதவர்களாக இருப்பது பரிபாதம்.
சமச்கிருதம் என்பதற்குப் பொருள் என்ன?திருத்தப்பட்டது என்றால் எதிலிருந்து எப்படி என்று கேட்கலாமா கூடாதா?
சோமபானத்திலேயும் மிருகவேள்வியேலேயும் மிருகங்களை எப்படிக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் இருந்தவர்கள் புலால் உண்ணாத சோமபானம் அருந்தாத பார்ப்பனர்கள் ஆனது எப்படி?
ஆரியர்கள் இந்தியா நுழைந்த போது் இருந்த மக்களின் பழக்க வழக்கங்கள் என்ன?அவை எவ்வள்வு வந்தவர்களால் அவர்களையே மாற்றிக்கொள்ள உதவின?
அந்த ஆரியர்கட்கும் இன்றுள்ள பார்ப்பனர்கட்கும் உள்ள வரலாற்று உண்மைகள் பற்றி பேசுவதே தவறா?
அவர்கள் சொல்லுவது வேதம் மற்றவர்கள் சொல்வது பேதமா?

rajavanaj said...

//அதுவும் சம்ஸ்கிருதம் பற்றி எழுதியிருப்பது படித்து சிரிப்பு தான் வருகிறது. எந்த உலகத்தில் இருக்கிறாய் நீ? இந்த "ரகசிய" மொழியை எத்தனையோ மேல் நாட்டவர்கள், மேலும் இந்தியாவிலேயே உள்ள எல்லா சாதிக் காரர்களும் கற்று அதிலுள்ள அறிவுக் கருவூலங்களை (தத்துவம், மருத்துவம், யோகம், கலைகள், இலக்கியம் ..) மெச்சிப் பயின்று வருன்கின்றனர்!//

மரியாதை தெரிந்த அறிவாளி ஒரே டமாஸ் பன்றாருபா..

எல்லா மக்களில் மொழியாகவும் இருந்திருந்தால் இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே புத்தர் ஏன் பாலியிலும் பிராக்ருதத்திலும் தன்னுடைய போதனைகளை மக்களிடம் சொன்னார்?

வேதம் கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றச் சொன்னது எந்த சாஸ்திரம்?

அசுரன் said...

ஆரியர் குறித்தும், பார்ப்னியம் குறித்தும் நாம் பேசும் போதெல்லாம் சதிராடிய கூட்டத்தாரை இங்கு வாதாட அழைக்கிறேன்.

ஆரியர் என்ற வார்த்தைக்கு உயர்ந்த என்ற சொல் உருவான வரலாறு குறித்து அவர்கள் பரிசீலிப்பார்களா? அசுரன் என்ற சொல் கெட்டவர்களை குறிப்பது ஏன் என்று வரலாற்றை அவர்கள் ஆய்வார்களா?

இவர்கள் கொன்றுவிட்டு கொண்டாடும் அசுரர்கள் எந்த தவறு செய்தார்கள் என்று இன்று வரை அவர்களால் சொல்ல இயலவில்லை. ஆயினும் கொண்டாடுகிறார்கள், அசுரன் என்ற பெயரை கெட்ட விசயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

//உங்கள் எதிர்வினை உங்கள் குறுகிய சமூக வாழ்க்கை முறையின் அடிப்படையில் சரியானது. உங்களால் விவாதிக்க வக்கு இல்லாத போது, பிதற்றுவதே பார்ப்பனீய மரபு. எங்கே தான் விவாதித்துள்ளது பார்ப்பனீயம்! எங்கேதான் ஜனநாயகத்தை ஒரு சமூக அமைப்பில் கொள்கை அளவில் பார்ப்பனீயம் கையாண்டுள்ளது? //

அருமையான் பதிலடி!!!

******

சில கேள்விகள்:

#1)
இங்கு ஆரிய சமூகம் இந்தியாவில் நுழையும் பொழுதே வேலைப் பிரிவினை கொண்டதாக வந்ததா?
அவர்கள் இந்தியாவுக்குள் நுழையும் பொழுது நான்கு வேதம் என்பது எழுத்து வடிவம் பெற்றிருந்ததா?

ஏனெனில் ராகுல் சங்க்ருத்தியாயனின் 'வால்கா முதல் கங்கை வரை' புத்தகத்தில் படித்ததிலிருந்து - இங்கிருந்த திராவிட நாகரிகம் அல்லது சிந்து சமவெளி நாகரிகம் ஒரு முன்னேறிய சமூக அமைப்பாக இருந்து , வேலைப் பிரிவினை, தெளிவான அரசு அமைப்பு, பூசாரி, சடங்கு முறைகள் கொண்ட சமூகமாக இருந்தது. இந்த அம்சங்களை சுவீகரித்து ஆரிய சமூகம் வர்ண அடிப்படையில் வேலைப் பிரிவினையை கெட்டிப்படுத்தியது என்றூ புரிந்து வைத்திருந்தேன்.

இது சரியா தவறா?


#2)
வர்ண அமைப்பு என்பது சாதிய கட்டுப்பாடுக்ளால் ஆனதல்ல என்பதை புரிந்து கொள்ள் முடிகிறது. ஆயினும் இது வர்க்க அமைப்புகளிலிருந்து எப்படி வேறுபட்டது?


அசுரன்

நம்பி.பா. said...

//ஆரியர் என்று கருதப்பட்டவர்கள் தான், இன்றைய பார்ப்பனர்கள் என்ற நேர்கோட்டு எடுகோள் தவறானது// மிகப்பலரால் ஏற்கனவே கேள்விக்குரிய இந்த கருத்தில் உங்கள் முடிவு ஒரளவு ஏற்புடையதாக இருக்கிறது.

வரலாற்று குளறுபடிகள் மற்றும் வரலாற்று ஆய்வுக் குளறுபடிகள் மிக அதிகம் இருப்பதாலும், Lobbyists அதிகம் இருப்பதாலும், இது போன்ற முடிவுகள் பெரும் ஆய்வுக்கும் கேள்விகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்.
தனி உணர்ச்சிகளை தூர எறிந்துவிட்டு முழு ஆய்வாகவோ ஆய்வுப் பத்திரிக்கையாகவோ இதை முதலில் நீங்கள் பதிப்பிக்க வேண்டும்.

1) நீங்கள் ஆரியர்களை "நோமட்"களின் (Nomads) வரிசையில்/வகையில் எங்கே வைக்கிறீர்கள்? அந்த தொடர்ச்சியாய்தான் உங்கள் கட்டுரை வருகிறதல்லவா?
2) சிந்து சமவெளி நாகரீகம் எங்கே
குறிக்கப்படுகிறது? ஆரியர்களின் பங்கு/தாக்கம் அதில் எங்கே வருகிறது?

இந்தக் கட்டுரைக்கு அளவற்ற முயற்சி தேவைப்பட்டிருக்குமென உணருகிறேன், இதை தெளிவாக்கி மேலும் எடுத்துச்செல்ல எனது வாழ்த்துக்கள்!

இது தவிர்த்து, எங்கோ படித்தது:-
புத்தரின் காலத்திலேயே, அவரின் தம்மபதத்தை, சமஸ்கிருத்தில் மட்டும்தான் எழுதிவைக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை மறுத்து, அவற்றை பாலியில் எழுதிவைத்தது மட்டுமல்லாமல், பிக்குகள் செல்லுமிடமெல்லாம் வட்டார மொழி வழக்கிலேயே தம்மபதத்தையும், கருத்துக்களையும் பரப்பச் செய்தவர் புத்தர்! யாரும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை
இது.

அன்புடன்,
நம்பி.பா.

தமிழரங்கம் said...

வணக்கம்

அசுரன் கேள்வியை ஒட்டி பகுதி கட்டுரைகள் அம்பேக்கா மற்றும் ஜோசப் இடமருது மீதான விமர்சனத்தை உள்ளடக்கிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இன்னமும் பிரசுரிக்கலில்லை. தொடர்ந்தும் சில நூல்களை படித்த முடிக்க வேண்டியுள்ளதாலும், எனது கருதுகள் பற்றி மீள் ஆய்வுகளையும் விமர்சனத்துக்குள்ளாக்கி சரிபார்ப்பதாலும், பிரசுப்பதை தற்காலிகமாக பின் போட்டுளேன். விரைவில் வெளியிட உள்ளேன்.

நம்பி உங்கள் கருத்துகளுக்கு நன்றி. சிந்துவெளி நாகரிகம் ஆரிய வரவுக்கு முற்பட்டது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இது திராவிட நாகரிகம் என்பது நிறுவப்படாத ஒன்று. அது வெறும் நம்பிக்கை. இது இரண்ட அல்லாத மற்றொரு தனித்தவமான நாகரிகமாக இருக்கும் வாய்பெ அதிகம்.

நாடோடிகள் தான் அவாகளின் ப+ர்விகம்;. ஆரிய வேத சடங்காக கிடைக்கம் அவாகள் பற்றி வரலாறு அது தான். இந்திரன் ஆயுதம் எழும்பிலானதாகி இறுதியில் பல உலோகம் வரையிலான ஆயுதங்களுடன் அவாகளின் கடவுளின் வரலாறு முடிகின்றது. நான் இதை விரிவுபடுத்த்p தற்போது எழுதிய வண்ணம் உள்ளேன். வரைவில் பிரசுரிக்க உள்ளேன்.

தற்பொது பிரசுரமானத மேலும் நுட்பமடக்கி விரிவாக்கப்படும். பிரசுரமானவை எனது இறுதி கட்டுரை வடிவம் அல்ல. இது நூலாக வெளியில் வரும்.

மற்றும் உணர்ச்சி பற்றி இரண்டு பதிவு குறிப்பகள் ஒண்டு. இது எனக்கு விளங்ககின்றது. இவைகளை குறிப்பாக உணர்த்தினால் நன்று. பதவுக்கு பதிலளிப்பதில் உள்ள உணாச்சி அவர்களின் எதிhவினைக்கு உட்பட்டதே. அதைவிட உணாச்சி வரலாற், கட்டுரைக்கு அவசியமற்றதாக நான் கருதவில்லை, ஆனால் உண்மையை அது மழுங்கடிக்கமால் இருத்தல் என்பது சரியானது. எதுவாக இருந்தால் அதை சுட்டிக்காட்டுங்கள், பரிசிலனைக்குரிய ஒன்று என்பதை மறுக்கவில்லை.

பி;.இரயா

ரவி said...

விரிவாக எழுதி இருக்கீங்க !!!! ஆரியன் இன்வேஷன் தியரி என்று கூகுளாண்டவரிடம் கொஞ்சம் வேண்டிப்பாருங்களேன்..!!!

அசுரன் said...

விரிவான உங்களது புத்தகத்திற்க்காக கத்திருக்கிறேன்.

அந்த புத்தகத்தில் இந்தியாவின் சிறப்பாக சொல்லப்படும் விசயங்களை எப்படி பார்ப்ப்னியம் திருடியது என்ற அம்சத்தையும் விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.(யோகா, வர்ம கலை, ஆயுர்வேத மருத்துவ முறை, வானவியல்). மேலும் அவை எப்படி இந்துத்துவத்தின் எல்லைக்கு வெளியே உள்ளது என்பதையும் விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தியன் என்ற பெருமை இந்து என்ற வரையறைக்கு வெளியே உள்ளதை அழுத்தமாக சுட்டுவீர்கள் என்பதை எதிர்பார்க்கிறேன்.

அசுரன்