தமிழ் அரங்கம்

Saturday, September 13, 2008

தெற்கு ஒசெட்டியா : அமெரிக்க – ரஷ்ய வல்லரசுகளின் பகடைக்காய்

ஆகஸ்ட் 7ஆம் நாள் பின்னிரவு. ரஷ்யாவை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு பிராந்தியமான தெற்கு ஒசெட்டியாவின் மீது ஜார்ஜியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. பீரங்கித் தாக்குதலில் அச்சிறு மாநிலத்தின் தலைநகரான ஷின்வெலி தரைமட்டமாக நொறுங்கியது. காகசஸ் மலைப் பிராந்தியமெங்கும் குண்டுகளின் வெடியோசை எதிரொலித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து ஐந்து நாட்கள் நீடித்த இப்போர்த் தாக்குதலில் தெற்கு ஒசெட்டியாவின் நாடாளுமன்றக் கட்டடம், மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்கள், தேவாலயங்கள் என அனைத்தும் நொறுங்கிக் கிடக்கின்றன. இக்கொடிய போர்த் தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி ஒசெட்டிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30,000க்கும் மேற்பட்ட மக்கள் உற்றார் உறவினர், வீடுவாசல்களை இழந்து அகதிகளாகியுள்ளனர்.

சோவியத் ஒன்றியம் 1991இல் சிதைந்த போது, அதுவரை ரஷ்யாவுடன் ஐக்கியப்பட்டிருந்த ஜார்ஜியா தனிநாடாகப் பிரிந்து சென்றது. ஜார்ஜியாவின் வடபகுதியில் ஒசெட்டியர்கள் எனும் தேசிய இனச் சிறுபான்மையினர் உள்ளனர். காகசஸ் மலையின் தெற்கேயுள்ள இப்பகுதி தெற்கு ஒசெட்டியா என்றழைக்கப்படுகிறது. வடக்கு ஒசெட்டியா, ரஷ்யாவுடன் இணைந்துள்ளது.

ஜார்ஜியா தனிநாடாகியபோது, தெற்கு ஒசெட்டியர்கள் சுயாட்சி உரிமை கோரிப் போராடினர். அதேபோல ஜார்ஜியாவின் மேற்குப் பகுதியிலுள்ள அப்காசியர்கள் எனும் சிறுபான்மை தேசிய இனத்தினரும் சுயாட்சி உரிமை கோரி போராட்டங்களைத் ..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: