தமிழ் அரங்கம்

Sunday, October 26, 2008

குறுகிய சுயநலமே தமிழ் தேசியமாகியது

புலிகள் முதல் தமிழ்நாட்டு சினிமாக் கழிசடைகள் வரை, தத்தம் சொந்த சுயநலத்தையே தமிழ் தேசியமாக்கினர். தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் மறுத்து, கூச்சல் போடுகின்றனர், கூத்தாடுகின்றனர்.

தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை பற்றி அக்கறையற்ற தமிழ் உணர்வு என்பது, தமிழ் மக்களுக்கு எதிரான பாசிசத்தைக் கொம்பு சீவி விடுவதுதான். தமிழ் இனத்தை பேரினவாதம் மட்டும் ஒடுக்கவில்லை. தமிழர்களும் ஒடுக்குகின்றனர். அதாவது பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறும் புலிகளும் தான் ஒடுக்குகின்றனர். இதைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வு என்பது, போலியானது பொய்யானது. அது ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரானது.

கருணாநிதி முதல் கழிசடை சினிமாக் கும்பல் வரை போடுகின்ற கூச்சல், தமிழ்மக்களின் அடிப்படையான உரிமைகள் சார்ந்ததல்ல. அது அவர்களின் சொந்த நலன் சார்ந்தது. அடுத்த தேர்தலை வெல்லுதல், யாருடன் அரசியல் கூட்டு என்ற உள்ளடகத்தில், அறிக்கைகள் கருத்துகள், பிளவுகள், கைதுகள் என்று எல்லாம் அரங்கேறுகின்றது.

இவை எவையும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

1 comment:

மாதவராஜ் said...

இப்படித்தான் இருக்கு.
நாம் பகிர்ந்து கொள்வோம்...

தீபாவளி வாழ்த்துக்கள் !