தமிழ் அரங்கம்

Wednesday, December 17, 2008

இலங்கைக்கு ஈழம்! இந்தியாவுக்கு காசுமீர்!


— இரண்டு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமாக நடைபெறத் தொடங்கியபொழுது, ஒரு காஷ்மீர் முசுலீம் முதியவர் தன்னிடம் இப்படிக் கூறியதாக எழுத்தாளர் அருந்ததிராய், ''காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை'' என்ற தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழ விடுதலையை ஆதரித்துக் கருத்துச் சொல்லியிருக்கும் தமிழக மக்களில் கூட பெரும்பாலானவர்கள் அந்த காஷ்மீர் முசுலீம் முதியவரின் கருத்தை ஆதரிப்பாளர்களா என உறுதியாகச் சொல்ல முடியாது. காஷ்மீருக்குச் சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பது ஒருபுறமிருக்கட்டும்; ஈழத்தில் உடனடியாக சிங்கள அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ஒருமித்த குரலில் கூறும் தமிழகம்; அதற்காகச் சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் போராட்டங்களை நடத்தி வரும் தமிழக மக்கள், இந்திய அரசு காஷ்மீரில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் எனக் கோரச் சொன்னால், அதிர்ந்துதான் போவார்கள்.
வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: