தமிழ் அரங்கம்

Saturday, January 10, 2009

இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம்!

ஓசூர்சிப்காட் பகுதியில், பேடர்பள்ளி அருகே டி.வி.எஸ். நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ராஜ்சிரியா என்ற ஆலை உள்ளது. இவ்வாலையில் நீண்ட காலமாகப் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு கூட வேலை நிரந்தரமோ, அடையாள அட்டையோ, சட்டரீதியான சலுகைகள்உரிமைகளோ கிடையாது. எவ்வித உரிமைகளுமின்றி தொழிலாளிகளைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்டி, இவ்வாலை இன்று 4 பிரிவுகளைக் கொண்ட பெரிய ஆலையாக வளர்ந்துள்ளது.

இவ்வாலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று கொதிகலனில்(பாய்லர்) தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் பேரொலியுடன் கொதிகலன் வெடித்துச் சிதறி, அருகே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளிகளின் உடலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. நாகவேணி என்ற பெண் தொழிலாளி அலறியபடியே, உடலெங்கும் தீப்பற்றியெரிய ஆலைக்கு வெளியே ஓடிவந்து விழுந்து துடித்தார். இந்த விபத்தினால் ஆலையின் மேற்கூரையே பிய்த்தெறியப்பட்டுள்ளதால், இங்கு வேலை செய்த தமிழ் தெரியாத அசாமிய, கன்னட கூலித் தொழிலாளிகளின் நிலைமை என்னவானது என்றே தெரியவில்லை.

இவ்விபத்தையே மூடிமறைக்க எத்தணித்த நிர்வாகம், தீயணைப்பு வண்டி வந்தபோது, குற்றுயிராகக் கிடந்த தொழிலாளிகளை கழிவறைக்குள் அடைத்து வைத்தது. பின்னர், தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து, வேறெந்த மருத்துவநிவாரண உதவியுமின்றி வேலையிலிருந்து விரட்டியடித்தது. படுகாயமடைந்த நாகவேணி, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் ஆலை நிர்வாகத்துடன் சண்டையிட்ட பின்னர், அவரை பெங்களூ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: