தமிழ் அரங்கம்

Saturday, February 28, 2009

புலிகள் தம்மை சுயவிமர்சனம் செய்யாது எடுக்கும் எந்த முடிவும், தமிழ் மக்களுக்கு எதிரானதே

புலிகள் நிபந்தனையுடன் ஆயுதங்களைக் கையளித்த சமாதானம்! எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் இதை ஆராய முனைகின்றோம். இடைவிடாத அரசியல் கொந்தளிப்புகள், நிலைமைகளில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள், எம்மையும் எம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் குழப்புகின்றன. எமது மாறாத கண்ணோட்டத்தையும், பார்வையையும் அதிரடியாகவே திகைப்பூட்டி திணற வைக்கின்ன்றது. ஒரு புரட்சி அல்லது அழிவில், இவை அதிரடியாக நிகழக் கூடியதுதான்.


அதனடிப்படையில், எம்மை நோக்கி ஒரு தோழர் எழுப்பிய கேள்விகளைப் பார்ப்போம்.

'புலிகள் ஆயுதத்தைக் கீழே வைப்பது தொடர்பான உங்கள் கருத்துக்களைப் படித்தேன். இதில் எனக்குக் குழப்பமான விடயம் ஒன்று உண்டு. புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பது ஒன்றே சாகும் மக்களைக் காக்க இருக்கும் ஒரே வழி என்று நான் சிந்தித்து வருகிறேன். இந்த முடிவுக்கு நான் வரக் காரணங்களாக அமைவன,

No comments: