தமிழ் அரங்கம்

Friday, April 21, 2006

'யாக்கோப் நக'ரும் யாக்கோப்பின் கல்லறையும்

'யாக்கோப் நக'ரும் யாக்கோப்பின் கல்லறையும்...

சுதேகு
21.04.06

கரங்களின் வளர்ச்சியோடு, கிராமப்புற சமூதாய அமைப்பு வீழ்ச்சியடைந்து -அரசு தோன்றியது. தொழிலாளர்கள், விவசாயிகள், பூசாரிகள், கைவினைஞர்கள், அதிகாரிகள் போன்ற பல்வேறு மக்கட் பிரிவினர் இவ் அரசுக்குத் தலைமைதாங்கினர். பின்னர் இதுவே வர்க்கங்களாகவும் சாதிகளாகவும் நிலைபெற்றது. இம்மாற்றமானது பள்ளத்தாக்கு நாகரீகங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது.

கி.மு 3200 - 2700 வரையிலான காலத்தில் விவசாயம் ஈட்டிக்கொடுத்த உபரியில் இருந்து நகரத்துக்கான சொத்துகள் சேகரிக்கப்பட்டு, அனுபவிக்கப்பட்டன. இந்த உபரியின் அளவு குறைவடைய சிறிய பகுதியினரே அதை அனுபவிக்கத் தொடங்கினர். அதாவது விவசாயத்தில் இருந்து தம்மை முற்றுமுழுதாக விலக்கிக்கொண்டவர்கள், சுரண்டுபவர்களாக மாறி இவற்றை அனுபவித்தனர். ஏனையவர்கள் கொத்தடிமைகளாக்கப்பட, முரண்பாடுகளும் தவிர்க்கமுடியாத யுத்தங்களும் உருவாகின. உழவர்களும் - அடிமைகளும் நிலச் சொந்தக்காரராக இருந்தபோதும், இவர்களது உழைப்பும் அதனூடான உற்பத்தியும் வாடகை, வரி, குத்தகை ஊடாக நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டது. அரசன் எல்லா அதிகாரங்களைக் கொண்ட நடுநாயகனாக (சூரியனாக) கொண்டிருக்க, நிலப்பிரபுக்கள் ஆளும் வர்க்கத்தின் வழித்தோன்றலாக பல்வேறுபட்ட குலதெய்வ சமய அதிகாரங்களுடாக சூரியனைச் சுற்றுகின்ற பிற கிரகங்களின் கோட்பாட்டுடன் இவ்வரசு நிர்ணயிக்கப்பட்டது. நடுநாயகமான அரசன் தெய்வீகத் தன்மை கொண்டவனாக இருத்தி வைக்கப்பட்டான். பல அரசர்களின் இருப்பு பல மதக்கருத்துக்களைக் கொண்ட இருப்பாக இருந்தது. பல அரசுகள் கைப்பற்றப்பட்டு பேரரசுகள் உருவானபோது, ஆதிக்கத்தில் வரும் அரசன் சார்பான மதம் மெய்யான மதமாக எடுத்துரைக்பப்பட்டது.

சிறிய சிறிய மதக் கலாச்சாரத்துக்குரிய மக்கள் குழுக்களைக் கைப்பற்றி பேரரசு தோன்றிய போதும், இக்குழுக்களுக்கிடையினான முரண்பாட்டுக்கான மதச்சார்பான தீர்வு கடினமானதாவே இருந்தது. ஒர் பேரரசுக்குரிய உத்தியோகபூர்வமான மதம் அதன் வளர்ச்சிப்போக்கில் பேரரசுக்குரிய அரசனது அதிகாரத்துக்கு இணையான அதிகாரப் போட்டியாக மாறியது. அரசன் வீழ்த்தப்படுவதும், புதிய அரசன் தோன்றுவதும் சாதாரண நிகழ்வாக இருந்ததால், நிலையான இறையரசுக்கான நம்பிக்கைக்கு வெளியே மதநிறுவன அரசை தோற்றுவித்தது.

இம்மத அரசு அழியாத ஒரு நிலையான அரசாக, நேரடியாக விண்ணுலகத்துக்கான அதிகார அரசாக தோன்றியது. இவ்வரசு ஒரு காலத்தில் எந்தச்சிரமமுமின்றி தனது மதத்தத்துவத்தினூடாக புதிய நகரங்களை உருவாக்கியது. முஸ்லீம்களுக்கு - 'மெக்கா'வும், இந்துக்களுக்கு - 'கங்கை, யமுனை'யும், புத்தர்களுக்கு - 'Bodh Gaya - Lhasa' வும், எகிப்தியருக்கு 'Karnak - Laxo' கிரெக்கருக்கு 'Delfi' , வடதுருவ மக்களுக்கு 'Nidaro sdomen -vedstena - Odensa, போன்றவைகளும் தோற்றுவிக்கப்பட்டது போல கிறீஸ்தவம் ரோமையும், யாக்கோப் நகரத்தையும் உருவாக்கியது.

உல்லாசப்பயணத்தின் தொடக்கம் பண்டைய காலத்தில் பபிலோனும் ஜெருசலேமுமாக இருந்தது. பின்னர் ரோமும், யாக்கோப் நகரமும் இதன் நோன்புக்கான இணைப்பிலிருந்தது. யாக்கோப் நகரம் நான்கு பிரதேச மக்களை இணைத்து உருவாக்கப்பட்ட போதிலும், இது அராபிய பாரம்பரிய மக்களைக் கொண்ட இணைப்பாகும். கி.பி 40 வருடத்தில் யூதர்களின் முதலாவது மத அரசனாக இருந்த யோசெப்பின் மகனும், இயேசுவின் சகோதரனுமான யாக்கோப்பின் கல்லறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இன்று ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வந்துபோகிற, கிட்டத்தட்ட 150 மைல்களைக் கொண்ட யாத்திரை ஸ்தலமாக இது இருக்கிறது. கடைசி காலத்தில் யாக்கோப் சுகயீனமுற்று இருந்ததாகவும், மருத்துவத்துக்காக ஸ்பானியாவில் வந்து தங்கியிருந்ததாகவும், ஸ்பானியாவிலுள்ள 'கலிசியா' குடாவில் தம் நண்பனுடன் படகில் தங்கியிருந்து மருத்துவம் செய்ததாகவும், இதன்பின் அவர் எங்கே புதைக்கப்பட்டடார் என்பது எவருக்கும் தெரியாமல் இருந்ததாகவும் கிறீஸ்தவம் சொன்னது.

'சவுல்' என்ற யூத இயற்பெயரைக் கொண்ட பவுல், தனது இறுதி அரைவாசி வாழ்க்கைக் காலத்தை ரோமப் பிரசையாகக் கழித்திருந்தார். ரோமப் பிரஜையாக உரிமையைப் பெற்றுக்கொண்ட இவர் சவுல் என்ற தனது பெயரை கிரேக்க மொழியில் பவுலாக மாற்றி வாழ்ந்தார். இயேசு யூதரின் அரசன் என்ற குற்றத்துக்காக சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாக கூறப்படும் காலத்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பின்னர், இதே ரோமர்களின் பேரரசில் - இயேசுவின் சகோதரனும் யூதனுமாகிய யாக்கோப் எப்படி மத அரசனாக அதுவும் ஜெருசலேம் மத அரசனாக சிம்மாசனம் ஏற்றப்பட்டார்? யாக்கோப்புக்கும் - பவுலுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டுக்குப் பின்னர் , பவுல் ஜெருசலேமுக்குள் நுழைந்தபோது யூதச்சட்டப்படி கைது செய்யப்பட்டார். இருப்பினும் இவர் ரோமப்பிரசையாக இருந்ததால் ரோமிடம் கையளிக்கப்பட்டார். இங்கே யாக்கோப் யூத கிறிஸ்தவ மதத்துக்குரியவராகவும், பவுல் யூதர் அல்லாதவருக்குமான கிறிஸ்தவ பாரம்பரியத்துக்குரியவராக (இயேசு பாரம்பரியம்) முரண்பட்டிருந்தனர். இவை இரண்டும் 700களின் பின்னர் முற்றாக இணைந்துவிட்டன.

கி.பி 813ல் கார்ல் சக்கரவத்திக்கு ஒரு விடிவெள்ளி யாக்கோப்பின் கல்லறைக்கான பாதையைக் காட்டியதாகவும், (இது யேசு பிறந்தபோது அவ்விடத்தை விடிவெள்ளி காட்டியதாக கூறியது போல) , இதன் உதவியுடன் சக்கரவத்தி யாக்கோப்பின் கல்லறையை ஸ்பானியாவில் கணடறிந்ததாகவும், பின்னர் அக் கல்லறையின் மேல் ஒரு கோவிலைக் கட்டியதாகவும் கூறினர். இக்கோவிலே ஸ்பானியாவிலுள்ள 'சென். யாக்கொப் சந்தியோகு தேவாலயம்' ஆகும். இது யாக்கொப்பின் பிறந்தநாளான யூலை 25ல் கொண்டாடப்படுவதாகக் கூறுகின்றனர். யாக்கோப்பின் இக் கல்லறைக் கோவில் உலகில் முக்கிய வணக்கத்துக்குரிய ஒரு தலமாக இருந்துவருகிறது. சக்கரவர்த்திக்கு விடிவெள்ளி காட்டிய பாதை 'யாக்கோப்பின் வழி' என அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று யாக்கோப்பின் கல்லறை எருசலேமின் அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்டது.


இயேசு காலத்தில் கலிலேயா...

கலிலேயா, யூதேயா, சமாரியா ஆகிய இடங்கள் இரண்டாவது யூத யுத்தத்தின் (கி.பி-132) பின்னரே இப் பெயர்களைப் பெற்றிருந்தன. இவ் மூன்று பிரதேசங்களும் வேறான தனித்தனி சமூகப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட பிரதேசங்களாகக் காணப்பட்டன. யூதேயா மிக நெருக்கமான யூதக் குடியேற்றங்களைக் கொண்டதாக இருந்தது. இது ஜெருசலேமையும், தாவீது பெத்தலேகமையும் உள்ளீடாகக் கொண்டிருந்தது. கலிலேயாவுக்கும் யுதேயாவுக்கும் இடையில் சமாரியா இருந்தது. இது வெளியாட்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட, இவ்விரு நகருக்கு வெளியே திருமணம் செய்த சந்ததியினரைக் கொண்டதாக இருந்தது. இருப்பினும் இது ஜெருசலேமுக்குரிய போதனைக்குரிய பிரதேசமாகவே இருந்து வந்தது. இருந்தும் கூட ஜெருசலேம் கோவிலைக் கட்டுவதற்கான உதவிசெய்யும் உரிமை சமாரியருக்கு சட்டபூர்வமாக மறுக்கப்பட்டிருந்தது.

கி.மு 100 முதல் கி.மு 67 ஆண்டுகள் வரையிலான சுமார் 37 வருடங்கள் கலிலேயாவும், யூதேயாவும் ரோம் சாம்ராட்சியத்தின் கீழ் இருந்தபோதிலும், இவை ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பிரதேசமாக இருந்திருக்கவில்லை. இக்காலத்தில் கலிலேயாவிலும், யூதேயாவிலும் வசித்த யூத மக்களின் உறவு முறையிலான நெருக்கம் மட்டுமே இவ்விரு பிரதேசங்களுக்குமான ஓர் பிணைப்பாக இருந்தது. ரோமப் பேரரசின் கீழான புதிய பிரதேசங்கள், அவர்களின் சொந்த கலாசார வடிவங்களைக் கொண்ட புதிய நகர அமைப்புக்களை உருவாக்க முற்ப்பட்டபோது - இவ் யூதேயா, கலிலேயாவைப் (100 வருடங்களின் பிற்பட்ட காலமான யேசுவின் காலத்தில் ) தமது புதிய நகரத்தின் மைய அதிகாரத்தின் கீழ் இவைகளைக் கொண்டுவந்தனர். இதற்கான அதிகார மொழியாக கிரேக்கத்தை பிரகடனப்படுத்தினர்.

ரோமப் பேரரசின் அதிகார அரசியல் ஆணைப் பிரதேச ஒழுங்கமைப்புக்குள், இந்நகரங்கள் ஆளப்பட்ட போது, இதற்குள் வளர்ந்து வந்த யூதப் புதிய தலைமுறையினருக்கு இடையே கலாச்சார முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தது. ஜேர்தான் நதிக்கரையில் இயேசுவுக்கு திருமுழுக்கு -ஞானஸ்நானம்- கொடுத்தவராகக் கருதப்படும் யோவான், யூதர்களின் ஒரு மத அரசனாகும். இவர் விவாகரத்துப் பெற்றிருந்த தனது சகோதரனின் மனைவியை திருமணம் செய்திருந்தார். இது ஒரு பெரிய விவகாரமாக அன்றிருந்தது. ஏனெனின் யூதர்களின் சட்டதிட்டங்கள் இதைத் துளியளவும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரோமர்களின் கலாசார சட்டதிட்டங்கள் இவருக்கு இசைவாகவே இருந்தது. யூத புதிய தலைமுறையினர் யோவானின் செயலுடன் உடன்பட்டு ஒத்துப்போனார்கள். ஆயினும் இச் செய்கையால் இவர் பிரசித்தி பெற்ற ஒரு மத அரசனாக மாறமுடியவில்லை. ரோமருக்கு இவரின் செய்கை தமது தமது கலாச்சார சட்டதிட்டங்களுக்கு இசைவாக இருந்ததால், யூதப்பழங்குடி சம்பிரதாயத்தின் மீது தமது கலாச்சாரம் படர்ந்து பழக்கப்படுவதை, ஒழுங்கமைக்கப்படுவதை விருப்புடன் வரவேற்றனர்.

ரோமப் பேரரசின் கீழிருந்த எல்ல பட்டிணங்களும்- நகரங்களும், அதன் மைய அரசுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை. சில நகரங்களை அப்பிராந்திய மக்களின் செல்வாக்குப் பெற்ற மதத்தலைவர்களிடம் கடவுளின் பரிசாகக் கொடுத்து, அவர்களின் மூலமாகவே நிர்வகித்தனர். பொதுகாக பட்டிண - நகர நிர்வாகிகள் உயர் வர்க்கத்தினராகவே இருந்தனர். இவர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்திருந்தனர். சில நகரங்களில் ரோமர்கள் பரம்பரை விவசாயிகளாக வாழ்ந்து வந்ததால், இவர்கள் ஜனநாயக வழிப்பட்ட முதலீடுகளைக் கொண்டு, இந்நகரங்களை தமது பேரரசுடன் இணைக்கும் மாற்று வழிகளில் விருப்பங் கொண்டிருந்தனர். நகருக்குரிய ஆளுமை பேரரசுக்குரியதாகவும், கிராமப்புறங்களிலிருந்து கொள்வனவு செய்யும் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவையை இவர்களுக்கு அனுமதித்திருந்தனர். இருந்தும் நிர்வாக மற்றும் வாத்தக மொழியாக கிரேக்கமே அங்கீகாரத்தில் இருந்தது. உள்ளுர் பேச்சு மொழியாக அவரவர் சொந்தமொழிக்கு உரிமை வழங்கப்பட்டிருப்பினும், வர்த்தக கலாச்சார நிர்வாக மொழியாக கிரேக்க மொழி பல நூற்றாண்டுகாலமாக வழக்கில் இருந்தது.

ரோமப் பேரரசுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான வர்த்தகப் போக்குவரத்துப் பாதைகளை, பேரரசின் இராணுவம் திறம்பட செப்பனிட்டது. கட்டுப்பாடற்ற திறந்த வர்த்தகத்துக்கான பாதைகளாக இவைகள் கட்டியமைக்கப்பட்டன. கிரேக்கரும், பொனிக்கரும் கி.மு பல நூற்றாண்டு காலமாக இப்பிரதேசங்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். யூதர்களும் தமது சிறு நகரங்களிலிருந்து கி.மு 500 ஆண்டுகளில் இருந்து சிறு வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். சாம்ராட்சியமானது மத்திய சமுத்திரத்தையும், கருப்புக் கால்வாயையும் சூழ்ந்திருந்தது. இஸ்பானியாவின் தெற்குப் பகுதியான குரோடாபாவில் யூதக் குடியேற்றமானது கி.மு பல நூற்றாண்டு காலமாக இருந்து வந்திருக்கின்றது. பொனிக்கரின் தலைமை வர்த்தக நகரங்களாக Tyrus மற்றும் Sidon கலிலேயாவுக்கு பக்கமாக இருந்தது. பொருட்களின் வணிகம் கிழக்கிலிருந்து இருந்து மிகவேகமாக ஒட்டக முதுகுகளில் ஏற்றப்பட்டு Sephoris ஐயும் ஊடறுத்து, மத்திய சமுத்திரம் வரை பரந்திருந்தது. கப்பல் வழியான வணிகம் நாம் அறிந்த நகரங்களான அலஸ்சாண்டிரியா, அந்தியோக்கியா, குரிந், கர்த்தாக்கோ, கத்தக்கொணியா நகரங்களுக்கு இடையான வர்த்தகமாக இருந்தது. குறிப்பாக கருவாடு, விதை பயிர்களுடன் மத்திய கிழக்கில் பழரசங்களும்- வைன் - கொள்வனவு செய்யப்பட்டன. இந்த வர்த்தகத்தில் பெரிய பணக்காரர்களாக யூதர்களும், கிரேக்கர்களும், பொனிக்கரும் இலாபமீட்டினர்.

அலெஸ்சாண்டிரியாவில் ஒரு இலட்சம் யூதர்கள் கிறிஸ்து பிறந்ததாக கூறப்படும் காலத்துக்கு முன்பே, பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இங்கே ஒரு தனியான கல்வி நிலையமும் இருந்தது. ஆனால் தொடர்புகளுக்கான மொழியாக கிரேக்க மொழியே பாவனையில் இருந்தது. இங்கிருந்தவர்களே பழைய யூத விவிலியங்களை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தனர். இவர்கள் தமது இளைய தலைமுறையினருக்கு, தமது யூத மதத்தையும், கலாச்சாரத்தையும் இதனூடாவே போதித்தனர்.

(பி.குறிப்பு)கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் மற்றும் பிளாட்டொவின் எஜமானர்களுக்குத் துணைபோகும் வரட்டுஅறிவியல் சாதனைகளில் கிரேக்க அறிவியல் அஸ்தமானமாகுவதற்கு முன்பு இந்த அலேஸ்சாண்டியாவில் பொற்காலம் தோன்றியது. அரிஸ்டாடிலின் மாணவரான அலெஸ்சாண்டரின் பரவலான ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட பதிய சந்தையினூடாக இவ் அறிவியல் புத்துணர்ச்சி பெற்றிருந்தது. அலெஸ்சான்டிரியாவில் பித்தொலமிஸ் காலத்திய அருங்காட்சியகம் பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே மிகப் பெரிய நூல் நிலையமும், ஆய்வுகூடமும் இதில் அடங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ் ஆய்வு கூடத்தில் ரட்டொஸ்தினிஸ் பூமி பூகோள வடிவமானதென்றும், அதன் சுற்றளவும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. கிப்பொச்சரஸ் விண்மீன்களின் பிறப்பு இறப்புக்களைக் கண்டுபிடித்திருந்தார். இங்கு யூக்லீட் கண்டுபிடித்திருந்த வடிவியல் கணித உண்மைகள் அவருக்குப் பின் 23 நூற்றாண்டு காலமாக மாறாமல் இருந்தன. இங்கு பூமி சூரியனைச் சுற்றி வருவது நிரூபிக்கப்பட்டிருந்தது. எல்லாச் செடி கொடிகளும், விலங்குகளும் இனவாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இவைகள் 1500 வருடங்களுக்குப் பின்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டன. கி.பி 370ல் அலெஸ்சாண்டிரியாவின் ஆர்ச் பிசப்பான சிரிலின் தலைமையில் கிறிஸ்தவ மதபீடம் இந்த நூலகத்தையம், ஆய்வு கூடத்தையும் சூறையாடி, எல்லாப் புத்தகங்களையும் தீயிட்டுக் கொழுத்தியது. நூலகத்தின் தலைவரும், பெண் விஞ்ஞானியுமான கிப்பாட்டியா பயங்கரமான சித்திரவதைக்குப் பின்னர் உயிருடன் கொளுத்தப்பட்டார். சிரில் மதத்தலைவராக உயர்த்தப்பட்டார். இங்கு நிச்சயமாக உண்மையான யூதவரலாற்றும் எரிந்து சாம்பலாகி இருக்கும்.

ரோமப் பேரரசின் கிழக்கு - தெற்குப் பகுதிகள் பெரும் பழத்தோட்டங்களைக் கொண்டதாக இருந்தது. எகிப்தில் இருந்து கோதுமையும், விதைகள், பழங்கள் என்பனவும் ஏற்றுமதி செய்யப்பட்டன. குறிப்பாக அத்திப்பழம், ஒலிவம்பழம் போன்றவை குறிப்பாக கிழக்கிலிருந்து ஏற்றுமதியாகின. அத்திப்பழமும், திராட்சைப்பழமும் பழரசம் செய்யப் பயன்படுத்தப்பட்டன. அத்திப்பழமும் திராட்சைப்பழமுமே பழரசத்துக்கான மூலப்பொருளாக அன்று இருந்தது. இக்காலத்தில் சீனி கண்டுபிடிக்கப் படவில்லை. இக்காலத்தில் இனிப்பான பழரசத்தைத் தயாரிப்பதற்கு, அவர்கள் தேனையே பயன்படுத்தினர். ஆனால் தேன் அன்று ஒரு வரையறுக்கப்பட்ட பண்டமாகவே இருந்தது. கரும்பும், வாழைமரமும் முதன் முதலாக இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. கொலம்பஸினதும், வாஸ்கொடகாமாவினதும் பயணங்களின் பின்னரே இது இங்கே அறிமுகமானது. இதனால் இவர்கள் இனிப்பானதும்,போதை கூடியதுமான பழரசங்களை உருவாக்கினர். இவை அன்று ஏற்றுமதியில் தங்கமாக இருந்தது. இவை ரோமுக்கு ஏற்றுமதியாகின. இக்காலத்தில் ரோமப் பேரரசு முழுவதும், ரோம இராணுவத்தினர் முந்திரிகை நடுகையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மத்திய சமுத்திரம் பெரிய மீன் வருவாயைக் கொடுக்கும் இடமாக இருந்தது. இங்கு கருவாடு செய்யப்பட்டு ரோம் இராட்சியம் முழுவதும் அனுப்பப்பட்டது. கலிலேயாவின் வாழ்வின் உயிர்நாடியாக பழத்தோட்டம் இருந்தது. இதற்கு இது நல்ல சூரியப்படுகை இடமாகவும், தகுந்த தகவெப்பம் கொண்ட பிரதேசமாவும் காணப்பட்டதே இதன் சிறப்பம்சமாகும். கலிலேயா சிறிதளவு கோதுமையையும் கொண்டிருந்தது. வடக்குப்பக்க மலைப்பிரதேசம் ஒரு நல்ல மக்கள் வாழ் நிலமாகவும், செல்வமாக நல்ல குடிதண்ணீரையும் கொண்ட வளமான இயற்கையாக இருந்தது. நிலத்துடனான இம் மக்களின் பிணைப்பு, விதைப்பயிர் செய்கையுடனும், மீன்பிடியுடனும் கலந்து நகரின் சந்தை மையத்துடனும் சூழவுள்ள குக்கிராமங்களாக இணைந்திருந்தது.
தொல்பொருள் ஆய்வுகளின் படி, கலிலேயா ஒரு சிறந்த வர்த்தக சந்தை இணையமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வாங்கும் விற்கும் பெரும் சந்தைப்பிரதேசம் ஆகையால் கட்டிடக்கலைகளும், அபிவிருத்தி கொண்ட இடமாகவும் காணப்பட்டது. கடந்த இருபது வருட தொல்பொருள் ஆய்வுகளின் படி, கலிலேயா தனக்கான சொந்தப் பொருளாதாரத்தைக் கொண்ட நகரமாக, செல்வந்த இடமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கலிலேயாவின் இச்சிறப்புத் தன்மையால், பல புதிய நகர அமைப்புக்கள் இங்கு இலகுவானது. இதற்கு அடிப்படையாக நல்ல குடிதண்ணீரும், கழிவு நீர் கால்வாய் அமைப்புக்களும் இவற்றைத் துரிதமாகச் சாத்தியமாக்கியது. கிரேக்கத்தில் அமைப்புப்பெற்ற புதிய நகரில் ஒன்றான செப்கொரிஸ் (Sephoris) குறிப்பிடத்தக்கது. இங்கே அப்பலோக் கோவிலும், அக்கடமியும், விளையாட்டு -களியாட்ட இடங்களும், பெரிய கொட்டகைகளும் இவ் நகரத்தில் காணப்பட்டன. இங்கே 20.000 குடிமக்கள் வாழ்ந்தனர். இந்நகரம் இயேசு வாழ்ந்ததாகக் கூறப்படும் நசரேத்திலிருந்து ஏழு மைல் தொலைவில் அமைந்திருந்தது. செப்கொரிஸ் வாங்கும் விற்கும் சந்தைப்பிரதேசமாக இருந்ததால், இங்கே தத்துவவாதிகளும், புத்ததுறவிகளும் நிறைந்து விவாதிக்கும் இடமாவும் இருந்தது. இக்காலத்து சந்தைவடிவமானது ஆண், பெண் வேறுபாடின்றி கூவி விற்கும் நடைமுறையைக் கொண்டதாகவும், புதிய அன்றாட செய்திகள் கூட கூவல் மூலமே மக்களுக்கு பரிமாறப்பட்டது. இம்மக்களுக்கு கிரேக்கமொழி ஒரு பிரச்சினையாக இருந்திருக்கவில்லை. ஏனெனில் கி.மு 340களில் அலெஸ்சாண்டரின் சாம்ராட்சியத்தில் இந்தியா சூழ்ந்த பகுதிகள் கூட இவ்விணைப்பில் இருந்தது. அலெஸ்சாண்டர் உள்ளுர் கலாச்சாரத்தில் கடும் போக்கைக் கொண்டிராமல் கிரேக்கத்தை கொண்டுவருவதில் கவனமாக இருந்தார். இதனால் தான் அலெஸ்சாண்டர் இறந்ததும், செல்வம் சரிந்து மூழ்கியது.

ரோமப் பேரரசின் காலத்தில், கலிலேயாவில் இயேசுவின் காலம் மூன்றாம் தலைமுறையாக இருந்தது. ஜோசேப் கூட அவரது ஆயுட்காலம் முழுவதும் ரோமப்பேரரசின் ஆட்சிக்காலத்தின் கீழேயே கழித்திருந்தார். ஆனால் ஜோசேப்பின் தகப்பனாரான யாக்கோப்பின் இளமைக்காலம் ரோமப் பேரரசின் கீழேயே இருந்தது. (கி.மு 63) . இவர்களின் இடப் பெயர்வுகளால் கிரேக்கம் அறிதல் மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் இவர்களுக்கு இருந்ததில் ஆச்சரியமில்லை. யூதர்கள் இடம்பெயர்ந்த வெளிநாட்டவர்களாக வாழ்ந்ததால், யூதேயா - கலிலேயா நகரத்து மக்களின் இவ் வெளி உறவுகளுக்கு இடையிலான கலாச்சார இணைவுகள் இவர்களுக்கு மிகவிரைவாக கிரேக்கத்தை உள்வாங்கிக் கொள்வதை விரைவுபடுத்தும் காரணிகளாக அமைந்தது. கலாச்சார வேறுபாட்டின் முரண்பாடுகளும், பலமத இணைவுக்கான (கூட்டுத்தலைமை ) முரண்பாடுகளும் தோற்றுவிக்கும் புதிய சிக்கலுக்கான ஒரு பொதுவான தீர்வாக கிரேக்கமொழி, மக்களிடம் காணப்பட்டதில் ஆச்சரியமில்லை. மதங்களின் கூட்டுத்தலைமை அதிகாரத்தின் கீழ், இத்தலைமுறை முரண்பாட்டுக்கான தீர்வாகவும், எதிர்காலத்தில் தம் மதத்தலைமையை நிலையாகத் தக்கவைக்கும் நிழல் யுத்தத்தில் யூதர்களும் பங்கேற்பது தவிர்க்கமுடியாத யதார்த்தமாவே இருந்தது. கிரேக்க ரோம சிந்தனைகளில் இருந்தும், ஏனைய மதக் கருத்துக்களில் இருந்தும் நடைமுறைப் பிரச்சனைக்கான தீர்வுகளைத் தேடுவதும், புதிய சமுதாயமாக மாறுவதும் யூதசிந்தனைக்கும் அவசியமானதாகவே இருந்தது. இங்கே உடனடிச் சமூகச் சீர்திருத்தம் ஒழுக்கத்தில் முனைப்புப் பெறுவதைக் காணலாம். யோவானின் கருத்துப்படி, சமாரியப் பெண்கள் யூதர்கள் அல்ல என்று உரைப்பதும், இயேசுவின் குரலாக 'பாவம் செய்யாதவன் கல்லெறியட்டும்' என்று ஓங்கி ஒலிப்பதும் நல்ல எடுத்துக்காட்டு.

லாசருவின் சகோதரிகளான (மார்த்தாவும், பெத்தானியா மரியாளும்) பெத்தானியா மரியாள் அவர்களின் கலாச்சாரத்தில் இருந்து வேறுபட்டபோது, அதை ஆதரித்த இயேசு மார்த்தாவிடம் அவளுக்கு உதவும்படியும், அவள் நல்ல பகுதியையே தேர்ந்தெடுத்ததாகக் கூறுவதும் பைபிளில் பார்க்கமுடியும். ரோம கிரேக்க கலாச்சாரத்தை உள்வாங்கும் இச்சமூகம் ஆண் -பெண்களுக்கு இடையிலான குறைந்த பட்ச சமத்துவத்தை -கிரேக்க ரோம அதிகாரங்கள் அங்கீகரிப்பதைப்போல - அங்கீகரிக்கக் கோரி துடித்தெழுந்த நாடியழுத்தமே இயேசு என்ற பாத்திரமாகும்.

அடிமை நிறுவன மூலதனம்

இயேசு பிறந்த காலத்தில் Augustus என்ற மன்னனின் ஆட்சி நடந்தது. (கி.மு 27 இல் இருந்த கி.பி 14 வரை) இம்மன்னரின் ஆட்சிக்காலத்தில் சமாதானம் என்ற முழக்கம் வலுவாக ஓங்கி ஒலித்தது. கிரேக்க - ரோம சாம்ராட்சியம் கிட்டத்தட்ட கி.பி 180ஆண்டு வரை தமது பொருளாதார அரசியலை கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. குறிப்பாக தமது ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் தமது இராணுவத்தினரை பொதுமைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவருவதும், மையப்படுத்தப்பட்ட நிர்வாக ஒழுங்குக்குள் கட்டியமைப்பதும் அவசியமானதாக இருந்தது. இதனால் அவர்கள் சமாதானம் என்ற கோசத்தை முன்வைக்க வேண்டியிருந்தது. இதனூடாக சட்டம், நல்ல வியாபாரத்துக்கான வசதிகள், கண்டுபிடிப்புக்கள், நல்ல வீதிகள் கொண்ட போக்குவரத்து, நகரத் தொடர்புகள், குறிப்பாக நல்ல குடிதண்ணீர் வசதி, கழிவுநீர் கால்வாய்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவற்றை செய்வதற்கு அவர்களுக்கு அமைதி தேவைப்பட்டது. இவ் அமைதியின் ஊடாகவே அடிமைகளைக் கொண்டு இவற்றைத் திறம்பட நிறைவேற்றலாம் என நம்பினர். இதற்கு சான்றாக இம்மன்னன் காலத்திலேயே நல்ல குடிநீர் கிடைத்ததை உலகம் அறியும்.

இக்காலத்தில் கலாச்சார, நிர்வாக, வியாபார (நுகர்வு) மொழியாக கிரேக்கமொழி இருந்தது. புதிய பட்டணங்கள் வடிவமைக்கப்பட்டன. 30,000 மக்கள் பார்வையிடக் கூடிய நாடகக் கொட்டகை வடிவமைக்கப்பட்டது. மக்கள் குழுமமும் பிற இடங்களாக களியாட்ட மைதானங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற பலவற்றை வடிவமைத்திருந்தனர். இவற்றுள் சிலவற்றை பின்னர் திருச்சபை - முதலாவது பாப்பாண்டவர் பேதுருவானவரின் இடம் ஆகப் பயன்படுத்தப்பட்டது. இம்மன்னர் ஆட்சியின் போது செல்வம் செழிப்பாகக் குவிந்தது. களியாட்டமையங்கள் அதிக வருவாயைத் தந்தது. மக்கள் பெருவாரியாக குவியப்படும் மையங்கள் அமைக்கப்பட்டதால் இவர்களது அரசியல், நிர்வாகஅமைப்பு முறைக்கான பிரச்சாரங்கள் இலகுவாகின. பிளாட்டோவையும், அரிஸ்டாட்டிலையும் பெரிதாக ஆட்டிய -மரணம் யாரால் நிகழ்தப்படுகின்றது என்ற- கேள்வியும், அதற்கான அவர்களின் விந்தையான தத்துவ முடிபுகளும் - இதிலிருந்து உறுதியாக்கப்பட்ட கடவுளும் பரலோக -பூலோக இராட்சிய அமைப்பு விளக்கங்களும் மரணத்தை அளிக்கும் தகுதி விண்ணுலகத்தில் எப்படி கடவுளுக்கு உண்டோ அவ்வாறு மண்ணுலகத்தில் அவரின் நேரடி வாரிசாக ஒருசிலருக்கே இருந்தது. இருப்பினும் இம்மன்னனின் மரணத்தீர்வைக்கான அதிகாரம் அம்மக்களின் அதிகளவு முரண்பாடுகளுக்கு உள்ளாகாமல் இருந்தது. இதற்கு இம்மன்னனின் ஆட்சிக்காலத்தில் நகர வடிவமைப்பு முன்னேற்றங்கள் மன்னனுக்கும் மக்களுக்கும் முன்பிருந்த இடைவெளியைக் குறைத்திருந்தது. பைபிளில் உள்ள இயேசுவுக்கு பிலாத்து மரணத்தீர்வை அளித்த விதம், இம்மன்னனைப் போலவே பிலாத்துவும் மக்களின் விருப்புக்கு மதிப்பளித்து தீர்ப்பளித்ததாக ஒரு நம்பிக்கையை அவர்களால் ஏற்படுத்த முடிந்தது.

இயேசு காலத்தில் ரோமாபுரியின் நிதியானது - அடிமை நிறுவன மூலதனமாகவே இருந்தது. அப்பொழுது அடிமைகள் மிக மலிவாகவே வாங்கப்பட்டனர். கி.பி 100 வருடங்கள் வரை அடிமைகளை வாங்கும் வழக்கம் இருந்து வந்தது. ரோம் சாம்ராட்சியத்தைப் பொறுத்தவரை வடக்கு நீர்ப்பிரதேசமாகவும் மேற்கு அத்திலான்டிக் கடலாகவும் தெற்கு சகாராப் பாலைவனமாகவும் இருப்பதால் அடிமைகளை பயன்படுத்தாமல் இவர்களால் மூலதனத்தை திரட்டுவது அன்று முடியாத காரியமாக இருந்தது. தொழில் நுட்பத்தில் இவர்களுக்கு அதிகளவு விருப்பு இருந்திருக்கவில்லை. ஏனெனில் அடிமைகள் இவர்களுக்கு அவ்வளவு மலிவாகக் கிடைத்தனர். 200 ஆண்டுகளின் பின்னரே இது சாத்தியமானது. இயேசுவின் காலத்தில் ரோம் சாம்ராட்சியத்தில் சரி அரைவாசிப்பேர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகள் மிகவும் வறியவர்களாகவும் கைவேலையில் ஒருவர் அல்லது இருவராக இணைந்து வேலை செய்தனர். வீட்டு வேலைகள் சமையல் கழுவுதல் முதற்கொண்டு அடிமைகளே பயன்படுத்தப்பட்டனர். இதில் புதுமை என்னவென்றால் புதியஏற்பாட்டில் அடிமை என்ற வார்த்தையே பயன்படுத்தப்படவில்லை. ஆனால் 'நா காமா'வில் கண்டெடுக்கப்பட்ட மரணச்சுருள்களும், எழுத்துருவச்சுருள்களும் இதை மெய்ப்பிக்கின்றன. இக்காலத்தில் ஒர் அடிமையின் விலை ஆகக்கூடுதலாக 30 வெள்ளிக் காசாக இருந்தது. இது இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக யூதாஸ் பெற்ற காசுக்குச் சமமாகவும் இருக்கிறது


இக்காலத்தில் அடிமைகள் வீட்டுப்பிராணிகள் போலவே கருதப்பட்டனர். இந்த அடிமைக்கு எந்த உரிமையும் கிடையாது. இவனுக்கு எந்தப்பாதுகாப்பும் கிடையாது. இதைவிடவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் எவற்றுக்கும் இவனுக்குத் துளியளவும் உரிமைகிடையாது. தமது வளர்ப்பு மிருகங்களையும், தமது உடைமைகள் அனைத்தையும் (மனைவி பிள்ளைகள் ) தமது எஜமானர்களுக்கு எந்தநேரத்திலும் இழக்கவேண்டும். இவர்கள் எப்பொழுதும் எஜமானர்களின் ஆயுதமாகவே இருக்கவேண்டும். இவ் அடிமைகள் மனிதரல்ல: வெறும் சடப்பொருளே. ஒர் அடிமையால் தனிப்பட எதுவும் பேசமுடியாது. அவன் பேசுவதெல்லாம் அவன் உரிமையாளனின் வசனங்களே. இவைகள் மீறப்படும்போது, உரிமையாளனால் இவன் கொல்லப்படவோ அல்லது ஆண்டவனின் தண்டனைக்கு அவனைக் கையளிப்பதோ ஒரு சாதாரண வழக்கமாக இருந்தது.

ஒர் அடிமை தன் எஜமானனை ஏமாற்றவோ , அவனுக்கு பிழைவிடவோ அல்லது பாசாங்காக நடித்து வாழ்ந்தாலோ அதைத்தண்டிக்கும் நேரடி உரிமை எஜமானர்களுக்கு இருந்தது. இவர்களின் உடலின் பகுதிகளைச் சீவவோ, வெட்டி எறியவோ அவர்களுக்கு பூரண உரிமையிருந்தது. இதை யூத அடிமைகள் அறிந்திருந்தனர்.

பேரரசின் மூலதனத்தால் அடிமைகளுக்கும் எஜமானர்களுக்கும் இடையிலான உள்ளடக்கத்தில் மெல்ல மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியது. அடிமைகள் யதார்த்தமான இயற்கை நடைமுறையின் ஊடாக அனுபவரீதியான உயர்ந்த அறிவைப் பெற்றிருந்தனர். எஜமானர்களின் வீட்டுவேலைகளின் ஊடாகவும் கிரேக்க மொழியை எழுதவும் வாசிக்கவும் கூடிய அறிவைப்பெற்றிருந்தனர். சில மூலிகை, கைவைத்தியத்துறையிலும், வியாபார விடயங்களிலும் அதிக அறிவைப் பெற்றிருந்தனர். இது அவர்களின் தொழில் ரீதியிலான தேடல் அறிவாக இருந்தது. அதிகமான அடிமைகள் அனுபவத்திறன் வாய்ந்த நுணுக்கமான கட்டிடக்கலையில் நிபுணத்துவத்திறனுடன் வளர்ந்திருந்தனர்.

இவ்வாறு இயற்கையுடன் கூடிய அறிவாற்றலுடன் வளர்ந்த தொழிற்துறை அறிவியல் சார்ந்து வளர்ந்த அறிஞர்கள் அடிமையிலிந்து பிறப்பெடுத்ததும் அடிமைகளின் அறிவியல் சார்ந்த மனிதவலு கவனிப்புக்கும், பெறுமதிக்கும் உட்பட்டது. இதனால் சக்கரவர்த்திகள் அடிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. இதனால் இயேசு காலத்தில் Lex Petronia அடிமைகளை எஜமானர்கள் தமது வளர்ப்பு மிருகங்களுக்குத் தீனியாக எறிவதையும், தண்டிப்பதையும் தடுக்கும் சட்டத்தை முதன் முதலாகப்பெற்றனர். அடிமைகள் தண்டிக்கப்பட முன் நீதி விசாரணைகளின் முன்னால் நிறுத்தப்படவேண்டும் என்ற கட்டளை சக்கரவர்த்தியால் விடப்பட்டிருந்தது.

நீரோ மன்னன் காலத்தில் அடிமைகளின் மீது சுமத்தப்படும் குற்ற வழக்குகளுக்கு, எதிராக தமது தரப்பு உரிமைகளைச் சுட்டிக்காட்டவும் எஜமானர்களுக்கு எதிராக சக்கரவத்தியிடம் முறையிடவும் முடிந்தது.

கலிலேயாவின் நான்கு வித வகுப்பினர்

கலிலேயா நகரை எடுத்துக் கொண்டால், அங்கே வாழ்ந்த எல்லோரும் அவ் நகர அமைப்புக்கு உரியவராகக் கணிக்கப்படுவதில்லை. அங்கீகரிக்கப்பட் நகரப்பிரசைகளே நகருக்குள் வரமுடியும். கிட்டத்தட்ட இன்றைய இலங்கை ரூபா 15,000 த்தை சொத்தாகக் கொண்டிருந்தவர்களே அன்று நகருக்கு உரியவர்களாகக் கருதப்பட்டனர். இந்த நகர அமைப்பில் பதிவுக்குரிய வகுப்பினராக சிலரே கணிக்கப்பட்டனர்.

தொடரும்...

Wednesday, April 19, 2006

நிகரில்லா பல்கலைக் கிரிமினல் கழகங்கள்

நிகரில்லா பல்கலைக் கிரிமினல் கழகங்கள் -தொடரும் மாணவர் போராட்டம்!

கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டு பத்திரிகைகள் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளிக்கும் "தீவிரவாதி'களைப் பார்த்திருக்கிறோம். அவர்களைப் போல, அடையாளம் தெரியாதபடி தமது முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு, போராடும் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பேட்டியளிப்பதைக் கண்டு தமிழகமே அதிர்ச்சியடைந்தது.

""கல்லூரி நிர்வாகம் "பறக்கும்படை' என்ற பெயரில் ஒரு குண்டர் படையை வைத்திருக்கிறது. அவர்கள் மாணவர்களைக் கண்காணிப்பார்கள். போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்து "டார்க் ரூம்' எனப்படும் கொட்டடியில் அடைத்து வைத்து ஆபாச வசவுகளுடன் காட்டுமிராண்டித்தனமாக அடிப்பார்கள். போராடிய குற்றத்திற்காக இதுவரை 80 மாணவர்களை நிர்வாகம் "சஸ்பெண்ட்' செய்துள்ளது. இத்தகைய பழிவாங்கலிலிருந்து தப்பிக்கவும் போராட்டத்தைத் தொடரவும் நாங்கள் எங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்'' என்று பேட்டியளித்தார்கள், போராடும் மாணவர்கள். தனியார் சுயநிதிக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மோசடிபகற் கொள்ளையையும் கிரிமினல் கொட்டங்களையும் மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டது, கடந்த இரு மாதங்களாகத் தொடரும் மாணவர் போராட்டம்.
நாடு முழுவதும் பொறியியல் கல்வியை முறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), கடந்த பிப்ரவரியில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. இக்கவுன்சிலின் அனுமதியின்றி பொறியியல் கல்வி வகுப்புகளைத் தொடங்கக் கூடாது; பொறியியல் பாடப் பிரிவுகளுக்கு கட்டாயம் கவுன்சிலின் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதுதான் அந்த அறிக்கையின் சாரம். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெறாமல் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் நடத்தும் படிப்புகள் செல்லாது என்றார். கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து நிகர்நிலைப் பல்கலைக் கழக முதலாளிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர்.

இதற்கிடையே தங்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட அச்சத்தில், இத்தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது, மழுப்பலான திமிர்த்தனமான பதில்தான் கிடைத்தது. ""நாங்கள் கொடுக்கும் சான்றிதழே போதுமானது. தொழில்நுட்பக் கவுன்சிலிடம் அங்கீகாரம் பெறத் தேவையே இல்லை. வீண் வதந்தியால் உங்கள் எதிர்காலத்தைப் பாழடித்துக் கொள்ளாதீர்கள்'' என்று உபதேசம் செய்து நிர்வாகம் எச்சரித்தது. ஆனால், அண்மையில் சென்னையில் நடந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்ற பன்னாட்டுஉள்நாட்டு தொழில் நிறுவனங்கள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்கள் தரமற்றவை என்று நிராகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஹெச்.சி.எல். நிறுவனமும் இத்தகைய தரமற்ற சான்றிதழ்களைக் கொண்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட தனது ஊழியர்களை வெளியேற்றியுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும் தன்னிடம் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் எவையெவை என்பதை இணையதளத்தின் மூலம் பகிரங்கமாக வெளியிட்டது.

இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டி தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியும் முறையான விளக்கம் தரப்படாததால், லட்ச லட்சமாகக் கொட்டிக் கொடுத்து படிக்கும் மாணவர்கள் தமது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட பீதியில், வேறு வழியின்றி போராட்டத்தில் குதித்தனர். எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தொடங்கிய போராட்டம், ஜேப்பியாரின் சத்தியபாமா, எம்.ஜி.ஆர். பாரத் முதலான பல்கலைக் கழகங்களிலும், ஏன், காஞ்சி மட சங்கராச்சாரியின் சந்திரசேகரரேந்திர விசுவமகா வித்தியாலயாவிலும் காட்டுத் தீயாகப் பற்றிப் படர்ந்தது. வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என போராட்டங்கள் தொடர்ந்தன. பீதியடைந்த இப்பல்கலைக் கழகங்களின் முதலாளிகள், குண்டர்களை வைத்து போராடும் மாணவர்களை அடித்து நொறுக்கினர். மாணவர்களை பகிரங்கமாக மிரட்டுவது, சான்றிதழ் தரமாட்டோம் என்று அச்சுறுத்துவது, போராடும் முன்னணியாளர்களைக் கண்டுபிடித்து இடைநீக்கம் செய்வது, போலீசை ஏவி கைது செய்து பொய் வழக்கு சோடிப்பது, குண்டர்களை வைத்து கல்லூரியைச் சேதப்படுத்திவிட்டு பழியை மாணவர்கள் மீது போடுவது என்பதாக கல்வி வியாபாரிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடியது. மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து இந்நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் காலவரையற்று மூடப்பட்டன.
ஜேப்பியாரின் சத்தியபாமா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயின்று வந்த ராபின்வாஸ் என்ற மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, ""உன் தந்தையிடம் சொல்லி சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விடுவேன்'' என்று முன்னாள் சாராய வியாபாரியும் இந்நாள் கல்வித் "தந்தை'யுமான ஜேப்பியார் மிரட்டியுள்ளார். அதனால் மனமுடைந்த ராபின்வாஸ் மார்ச் 3ஆம் நாளன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனாலும் ராபின்வாஸை தற்கொலைக்குத் தள்ளிய கொலைக் குற்றவாளி ஜேப்பியார் இன்றுவரை கைது செய்யப்படவில்லை.

""தனியார் மோசடி நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்! ஜேப்பியாரை கொலைக் குற்றத்தின் கீழ் சிறையி லடை!'' என்ற முழக்கங்களுடன் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களது பெற்றோர்கள் மார்ச் 2ஆம் நாளன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்கள் பிள்ளைகளை கல்லூரி நிர்வாகம் அடியாட்களை வைத்து தாக்குவதாகவும் மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர். நெல்லை பி.எஸ்.என். கல்லூரி மாணவர்கள், நிர்வாகம் தங்களிடம் பல லட்சம் நன்கொடை பிடுங்கி மோசடி செய்ததையும் குண்டர்களை வைத்து தாக்கியதால் ஏற்பட்ட காயங்களையும் காட்டியும் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரிடம் புகார் கொடுத்தனர். இப்பல்கலைக் கழகங்கள், வரும் கல்வியாண்டில் மாணவர்களைச் சேர்க்க தடை விதிக்கக் கோரி பொது நலவழக்குகள் தொடரப்பட்டன. அரசாங்கம் தலையிட்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டதும் குண்டர்களின் தாக்குதலை முறியடித்து மாணவர்கள் தொடர்ந்து போராடினர்.

ஆனால், தனியார் கல்விக் கொள்ளையர்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள உச்சநீதி மன்றம், அரசாங்கம் இத்தனியார் கல்லூரி நிர்வாகச் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என்று கடந்த ஆகஸ்டில் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை மேற்பார்வையிட நிறுவப்பட்ட சுப்பிரமணியன் கமிட்டியும், கல்விக் கட்டணங்களைப் பரிசீலிக்க நிறுவப்பட்ட இராமன் கமிட்டியும் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்குப் பிறகு முடமாகிவிட்டன.

தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களை எந்த அடிப்படையில் சேர்ப்பது, எந்தத் தேர்வு முறையைப் பின்பற்றுவது, எவ்வளவு கட்டணம் வசூலிப்பது, எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வது என்பதற்கு எந்த வரையறையும் கிடையாது. தனியார் கல்வி முதலாளிகள் இட்டதுதான் சட்டம்; வைத்ததுதான் திட்டம் என்கிற தனிகாட்டு தர்பார்தான் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் நடக்கிறது. தொழில்நுட்ப கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற ஏன் இந்த பல்கலைக் கழகங்கள் தயங்குகின்றன, ஏன் நீதிமன்றங்களுக்குப் படையெடுக்கின்றன என்ற கேள்வியே அவற்றின் மோசடியையும் கொள்ளையும் நிரூபித்துக் காட்டுகின்றன.

எஸ்.ஆர்.எம்; ஜேப்பியாரின் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் முதலானவை விதிவிலக்கானவை என்று சிலர் கருதலாம். விதிவிலக்காக இருந்தாலும் இதற்கு சட்டப்படி தீர்வு கண்டு நிவாரணம் வழங்கும் இடம் எது? இந்தக் கேள்வி ஜேப்பியார் கல்லூரிக்கு மட்டுமின்றி, பகற்கொள்ளையடிக்கும் அனைத்து தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

அண்மையில் சென்னை ஏற்றுமதித் தொழில் வணிக வளாகத்தில் கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்கள் இந்தியத் தொழிற்சட்டங்களை மதித்து நடக்கக் கோரி போராட்டம் நடத்தி கைதாகினர். தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழக மாணவர்கள் தொழில்நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெறக் கோரி போராட்டம் நடத்தி அடக்குமுறையைச் சந்தித்துள்ளார்கள். அங்கே தனியார்அந்நிய தொழில் முதலாளிகள்; இங்கே தனியார் கல்வி முதலாளிகள். இரு தரப்புமே சட்டங்களை மதிப்பதில்லை. பகற்கொள்ளையையும் கொத்தடிமைத் தனத்தையும் அடக்குமுறையையும் நிறுத்துவதில்லை. நீதிமன்றமோ அரசாங்கமோ தலையிட்டு தடுத்து நிறுத்துவதுமில்லை. இதுதான் தனியார்மயத்தின் மகிமை!

சுயநிதி கல்வி நிறுவனங்கள் வைத்து நடத்துவதென்பது ஓட்டுக் கட்சி அரசியல் போலவே கோடி கோடியாய் பணம் கொழிக்கும் தொழில். எனவேதான் அரசியல் கிரிமினல்கள், சாராய ரௌடிகள், கருப்புப் பண முதலைகள் நடிகர்கள், ஓட்டுக்கட்சி பிர முகர்கள் மட்டுமின்றி சங்கரமடமும் மேல்மருவத்தூர் பீடமும் சுயநிதி கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன. எனவேதான் எல்லா ஓட்டுக் கட்சிகளும் இவ்வளவு போராட்டங்களுக்குப் பின்னரும் தனியார் கல்வி வியாபாரம் குறித்து வாய் திறக்க மறுக்கின்றன.
இந்நிலையில், மாணவர் ராபின்வாஸ் மரணத்துக்குக் காரணமான ஜேப்பியாரைக் கைது செய்து சிறையிலடைப்பது, தொழில்நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத எஸ்.ஆர்.எம் சத்தியபாமா முதலான நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை அரசே ஏற்று நடத்துவது, அனைத்து தனியார் சுயநிதிக் கல்லூரிகளையும் அரசுடைமையாக்குவது ஆகிய உடனடிக் கோரிக்கைகளுடன் மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஜனநாயக இயக்கங்களும் போராட வேண்டும். ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, தனியார்மயத்துக்கு எதிரான போராட்டமாக இதை வளர்த்தெடுக்கவும் வேண்டும்.

— பு.மா.இ.மு. உதவியுடன்
பு.ஜ. செய்தியாளர்கள்.

Monday, April 17, 2006

ஆதாயம் தேடும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள்

பறவைக் காய்ச்சல்: சந்தைப் பொருளாதாரத்தின் கோர விளைவு ஆதாயம் தேடும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள்

""ஹெச் 5 என் 1 (ஏ5N1); கொடூரமான பறவைக் காய்ச்சல் நச்சுக் கிருமி இறக்கை கட்டி பரவுகிறது. நீர்ப்பறவைகள் தங்களின் குளிர்காலப் புகலிடமான இந்தியாவின நீர்தேக்கங்களில் வந்திறங்க ஆரம்பித்து விட்டன. அடுத்த 10 வாரங்களில் சீனாவிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தெற்கு ஆசியாவை நோக்கி இடம் பெயரும். இந்த அழகான பறவை கூட்டத்தின் ஊடாகவே அவற்றின் உடலில் 61 மனித உயிர்களை காவு கொண்ட ஹெச் 5 என் 1 நச்சுக் கிருமிகளும் பயணிக்கும். 1918இல் மேற்குறிப்பிட்ட நச்சுக் கிருமியை ஒத்த ஹெச் 5 என் 1, இலட்சக்கணக்கான மக்களைக் காவு கொண்ட பின்னணியில் இப்போது என்ன விபரீத விளைவுகள் ஏற்படுமோ என்று உயிரியல் வல்லுனர்கள் அச்சத்தில் உள்ளனர்.'' (மைக் டேவிஸ், 2005)

நீர்ப்பறவைகள் மூலமாகவோ அல்லது உலகமயமாக்கலின் விளைவாக நாடு விட்டு நாடு பாயும் கோழி மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் மூலமாகவோ 2005ஆம் ஆண்டு முதல் நம் நாட்டு கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் நோய் இருப்பதாக செய்தி கசிந்து கொண்டிருந்தது. பண்ணைகளில் கணிசமாக கோழிகள் இறக்க ஆரம்பித்தன. இது பறவைக் காய்ச்சல் என்று தொழிற்துறை வட்டாரத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தரகு முதலாளியான வெங்கடேஷ்வரா நிறுவனம் ""ஆட்டோகிளேவ்'' என்கிற முறையில் பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இச்செய்தியை ஒப்பந்த விவசாய நிறுவனங்களில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால், கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கும் வெளியுலகத்திற்கும் இது பற்றி தெளிவாகத் தெரியாது.

இந்த விசயத்தை கோழி வளர்ப்பில் (முட்டை மற்றும் இறைச்சி) ஏகபோக கட்டுப்பாட்டை வைத்திருக்கும் தரகு மற்றும் பன்னாட்டு ஒப்பந்த நிறுவனங்களான வெங்கடேஷ்வரா, சுகுணா, பயனீர், சரன்பாக்ஸ்பான்ட் (இந்தியா) போன்றவை திட்டமிட்டே மூடி மறைத்தன. கோழி, கருவறை முதல் கறியாகி உணவு மேசைக்கு வரும் வரை ஒட்டுமொத்த சங்கிலியும் இவர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதில் ஒரு விவசாயி ஒப்பந்த தொழிலாளிதான். அதற்கு மேல் எந்த ஒரு உரிமையும் இல்லை. கோழி வளர்ப்பில் கோடிகளைப் பார்க்கும் நிறுவனங்கள் இச்செய்தியை மறைப்பதன் மூலம் வியாபாரத்தை நீட்டித்தார்கள். அதாவது, மனித இனத்திற்கு ஆபத்துகள் ஏற்படும் சூழலைப் பற்றிக் கடுகளவு கூட கரிசனம் காட்டாமல் ""பிணம் விழுந்தாலும் பரவாயில்லை; பணம் (வருமானம்) குறைந்துவிடக் கூடாது'' என்பதில் தெளிவாக இருந்தனர்.

ஒரு வழியாக பறவைக் காய்ச்சல் பற்றிய செய்தி, பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்தபிறகு கூட வெங்கடேஷ்வரா மற்றும் சுகுணா நிறுவனங்கள், தங்களது கூட்டமைப்பின் மூலம் ""வந்தது பறவைக் காய்ச்சல் இல்லை'' என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டன. இப்படிப்பட்ட சூழலில், ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து வரும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்திவிட்டன. இதன் மூலம் 10 லட்சம் ஒப்பந்த கோழி விவசாயிகள் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கின்றனர். இலாபம் என்றால் ஒட்டுமொத்தமாக அள்ளிச் செல்ல நிற்கும் இந்நிறுவனங்கள், நட்டம் என்ற உடனே பண்ணைகள் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.

உலகளவில் பறவை காய்ச்சலின் ஊற்று மூலமே மேற்குறிப்பிட்ட வகையிலான ஒப்பந்த விவசாய நிறுவனங்களே ஆகும். இவர்களின் அதீத இலாபத்திற்காக, பரவலாக பல்இனக் கோழிகள் கொண்டு இயற்கை சார்ந்த பாரம்பரிய உற்பத்தியாக இருந்த புறக்கடை கோழி வளர்ப்பை ஒழித்துக் கட்டினர். அதற்கு மாறாக, ஒரு சில இனங்களைக் கொண்டு கோடிக்கணக்கான கோழிகளை குறிப்பிட்ட வட்டாரத்தில் குவித்து தொழிற்மயமாக்கி இயற்கைக்கு முரணாக அராஜக உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதனால் கோழிகளுக்கு இடையே நோய் பரவுவதும், கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுவதும் எளிதாக்கப்பட்டன. இப்படி கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் தொழிற்மயமாக்கப்பட்டதன் விளைவாகவும், வனம் மற்றும் சுற்றுப்புற சூழலை நாசமாக்கியதாலும் புதிய புதிரான நோய்களான சார்ஸ் எபோலா, பற வைக் காய்ச்சல் போன்றவை மனித இனத்தை உலுக்க ஆரம்பித்துள்ளன என்கிறார்கள், வல்லுனர்கள். (பிப். 23, 2006, தி இந்து)

ஒப்பந்த விவசாய நிறுவனங்களில் ஒன்றான வெங்கடேஷ்வரா அரசுக்குத் தெரியாமல் பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை உற்பத்தி செய்து, அதை பற்றி எந்த ஒரு உண்மையையும் தெரிவிக்காமல் (லேபிள் கூட ஒட்டாமல்) சிறு, நடுத்தர மற்றும் இதர ஒப்பந்த நிறுவனங்களுக்கு விற்று கோடிகளை அள்ளிக் கொண்டுள்ளது.

இன்னொரு பக்கம் ஹெச் 5 என் 1 நச்சுக்கிருமி மனிதர்களிடத்தில் நோயை உருவாக்குவதற்கான வீரியமிருந்த போதிலும், அதன் பரவும் ஆற்றல் மிகக் குறைவாக இருக்கிறது. இக்கிருமியின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு, நோய் உருவாகும் வீரியத்துடன் பரவும் ஆற்றலை பெற்றுவிட்டால் 1918, 1957, 1968 ஆகிய ஆண்டுகளில் இதேபோன்ற நோய்க்கிருமியால் பல லட்சக்கணக்கான மக்கள் மாண்டதுபோல இப்போதும் நேரிட வாய்ப்புள்ளது.

தற்சமயம் இந்த நோயை ஓரளவு குணப்படுத்தும் திறன் கொண்ட மருந்துகள் ""தேமி புளு'' மற்றும் ""ரிலின்சா'' ஆகியனவாகும். இப்பொழுது தேமிபுளு மட்டுமே உற்பத்தியில் உள்ளது. அமெரிக்காவை சார்ந்த ""கிளியெட் சயின்ஸ்'' நிறுவனம் காப்புரிமையை தேமிபுளுவுக்கு பெற்றுள்ளது. ""ரோகி'' என்ற நிறுவனம் ""கிளியெட் சயின்ஸ்''க்கு கப்பம் கட்டி உற்பத்திக்கும் விற்பனைக்கும் அனுமதி பெற்றுள்ளது. நோயின் சிக்கலையும் ""ரோகி''யின் உற்பத்தித் திறனையும் கணக்கில் கொண்டு, சில அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு கம்பெனிகளிடம் ஏகபோக கட்டுப்பாட்டை நீக்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால், இவ்விரு நிறுவனங்களும் இந்த வேண்டுகோளை மறுத்துவிட்டு தங்களுடைய வியாபாரத்தைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றன. இப்பொழுது இந்நிறுவனத்தின் (கிளியெட் சயின்ஸ்) பங்குதாரர்களான அமெரிக்க இராணுவ செயலாளர் ரம்ஸ்ஃபீல்ட், புஷ் தேர்தல் நிதி புரவலர் டேவிங்நன், ரீகன் மற்றும் புஷ்ஷின் முன்னாள் செயலாளர் ஜார்ஜ் சூல்ட்ச் மற்றும் புஷ்க்கு நெருக்கமான டீ விங்க் ஆகியோர் கோடிக்கணக்கான டாலர்களை இலாபமாகக் குவிக்கின்றனர்.
இன்னொரு பக்கம் இந்திய அரசு ""ரோக்கி''யிடமிருந்து துணை ஒப்பந்தம் பெற்றிருக்கும் ""ஹெட்ரோ'' என்ற நிறுவனத்திடமிருந்து ஒரு மாத்திரையை ரூ. 540க்கு வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொகையில் பெரும்பான்மையான பங்கு ராயல்டியாகும். இதே மருந்தை இந்திய நிறுவனமான ""சிப்லா'', ""27 ரூபாய்க்கு தயார் செய்கிறோம்; எங்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கொடுங்கள்'' என்று கேட்கிறது. ஆனால் இந்திய அரசு ""சிப்லா''வின் வேண்டுகோளுக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து மௌனம் காக்கிறது. ஏனென்றால், இது உலக வர்த்தகக் கழகத்தின் காப்புரிமைச் சட்டத்தை மீறுவதாகும். இப்படி உலக வர்த்தகக் கழகத்திற்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் எதிராக, இக்கட்டான சூழ்நிலையில் கூட சுயசார்புடன் மருந்தைத் தயாரிக்கும் அதிகாரத்தை இழந்து நிற்கிறது இந்திய அரசு.
அதீத இலாபத்திற்காக, இயற்கைக்கு முரணாக, அராஜக உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்த விவசாய நிறுவனங்கள் ஒருபுறம்; இந்நிறுவனங்கள் பெற்றெடுத்த பறவைக் காய்ச்சலில் கோடிகோடியாய் கொழுக்கும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் இன்னொருபுறம். இவ்விரு கொலைகார கொள்ளைக்கார கூட்டத்தின் நடுவே விவசாயிகளும் நாட்டுமக்களும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இக்கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மைக் டேவிஸ், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்த நாட்டில் இயங்கிவரும் சோசலிச தொழிலாளர் கட்சியில் உறுப்பினராகவும் இருக்கிறார். பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் பொழுது இந்தியாவில் நடந்த பட்டினிச் சாவுகளுக்கும், காலனி அரசின் வரி வசூலுக்கும் இருந்த தொடர்புகளை ""லேட் விக்டோரியன் ஹோலாகாஸ்ட்'' என்ற நூலின் மூலம் மைக் டேவிஸ் அம்பலப்படுத்தியுள்ளார். அவர் எழுதிய ""நமது வாசற்படியில் வேதாளம்'' என்ற நூலில் இருந்து இம்மேற்கோள் எடுத்தாளப்பட்டுள்ளது.

மு சுடர்

இந்தியாவில், ""எய்ட்ஸ்''க்கு அடுத்துப் பரவலாக அறியப்பட்ட நோயாக பறவைக் காய்ச்சல் நோய் உள்ளது. எய்ட்ஸைப் போலவே, பறவைக் காய்ச்சல் நோயும் ஏகாதிபத்தியங்கள் உலகுக்கு அளித்திருக்கும் ""கொடை''. கோழி வளர்ப்பை இயற்கைக்கு முரணாகத் தொழில்மயமாக்கியதன் விளைவுதான் இந்த நோய்.

இந்த நோய் தாக்குவதற்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காத இந்திய அரசு, இப்பொழுது கிராமம், கிராமமாகப் போய் கறிக் கோழிகளைக் கழுத்தை நெறித்துக் கொன்று புதைத்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் இத்தொழிலில் பல கோடி ரூபாய் நட்டமேற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நட்டத்தைத் தாங்குபவர்கள் யார்? கோழிக் கறிக் கடைகளின் போர்டுகளில் காணப்படும் சுகுணா, வெங்கடேஷ்வரா, பயனீர் போன்ற கறிக்கோழி விற்பனையை ஏகபோகமாக நடத்திவரும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இந்த நோயால் சல்லிக் காசு கூட நட்டம் கிடையாது. மாறாக, இந்நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கோழி வளர்ப்புத் தொழிலை நடத்திவரும் சிறுவீத உற்பத்தியாளர்கள் விவசாயிகள்தான் இந்த நட்டத்தைத் தாங்கிக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் மட்டும் ஏறத்தாழ 20,000 பேர் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தொழிலே போண்டியாகிப் போன பிறகு, இவர்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான வட்டியில் 4 சதவீதம் தள்ளுபடி செய்வதாக டாம்பீகமாக அறிவித்துள்ளது, இந்திய அரசு.

இது மட்டுமின்றி, உலக வர்த்தகக் கழகத்தின் காப்புரிமை சட்டத்தைக் காட்டி, உள்நாட்டிலேயே குறைந்த செலவில் பறவைக் காய்ச்சலுக்கான மருந்து தயாரிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டது, மன்மோகன் சிங் கும்பல். ஒருபுறம், கறிக்கோழி விற்பனையை ஏகபோகமாகக் கொண்டுள்ள தரகு முதலாளித்துவ நிறுவனங்களும், இன்னொருபுறம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் பறவைக் காய்ச்சல் நோயால் ஆதாயம் அடைந்து வருவதை இக்கட்டுரை சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.

Friday, April 14, 2006

தன்னெழுச்சியான பிரஞ்சு மாணவர் எழுச்சி

தன்னெழுச்சியான பிரஞ்சு மாணவர் எழுச்சி, மனித குலத்துக்கே போராடக் கற்றுக் கொடுக்கின்றது.

பி.இரயாகரன்
13.04.2006

(இக்கட்டுரை எழுதி முடித்து வெளியிட இருந்த அன்று, பிரஞ்சு அரசு தான் கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டத்தை மீளப் பெற்று இருந்தது. இதனால் இதன் ஒரு பகுதி நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு திருத்தப்பட்டுள்ளது.)

'டிமக்களுக்கான ஒப்பந்தம்" ( Contrat Pour Esclaves) என்று மாணவர்களால் சரியாகவே வருணிக்கப்பட்டு, இதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பிரஞ்சு சமூகத்தையே விழிப்புற வைத்தது. பிராஞ்சு மாணவர்களின் இந்த போராட்டம் அரசியல் மயப்படுத்தப்படாத போதும் கூட, அது உக்கிரமான அரசியல் கோரிக்கைகளுடன் கொழுந்துவிட்டு எரிந்தது. 30 லட்சம் மாணவர்களும் மக்களும் வீதியில் இறங்கி மீண்டும் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்ததன் மூலம், தமது போராட்டத்தின் உறுதியை வெளிப்படுத்தினர். அமைதியான ஆர்ப்பாட்டம் என்ற அரசியல் நடைமுறை படிப்படியாக, இயல்பான போர்குணாம்சம் பெறத் தொடங்கியது. அரச இயந்திரத்தை முடக்கும் வகையில் திடீர் நடவடிக்கைகளாகவே அவை வளர்ச்சி பெற்றன. போராட்டம் போர்க்குணாம்சம் பெற்ற நிலையில், ஒரு சில ஆயிரம் பேர் (அண்ணளவாக 3000 மேற்பட்டோர்) கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் போராட்டங்களை முடக்கும் வகையில், பொலிசாரை வன்முறைக்கு தயாரான தயாரிப்புடன் போராட்ட களங்களில் குவித்தனர். மறுபக்கத்திலோ பல்கலைக்கழகங்களை மாணவர்கள் தமது சொந்தக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு சிலவற்றை பொலிசார் வன்முறைகள் மூலம், ஒரு மோதலின் பின்பே கைப்பற்றினர். பொலிசார் நுழைந்து கைப்பற்றுவார்கள் எனக் கருதிய இடங்களில், அதை தடுத்த நிறுத்த தடுப்பு அரண்கள் நிறுவப்பட்டன. இவை போராட்டத்தின் சட்டபூர்வ உரிமைக்குள், போர்க்குணாம்சம் மிக்க நடவடிக்கையாகவே மாற்றம் பெற்றன.
போராட்டம் நீடித்து சென்ற நிலையில், உற்சாகம் குன்றாத நிலையில் போராட்ட வடிவங்களும் மாற்றம் அடைந்தன. அரசை முடக்கும் திடீர் நடவடிக்கைகள், எந்த அறிவுப்புமின்றி ஆங்காங்கே தொடங்கியது. சர்வதேச போக்குவரத்துகளை தடை செய்யும் வகையில், விமானநிலையத்தின் ஒடுபாதையில் புகுந்து குறுகிய நேரத்துக்கு அதை முடக்குகினர். சர்வதேச புகையிரத சேவைகளை முடக்கும் வகையில் பெருமளவு மாணவர்கள் புகையிரத வீதிகளில் திரன புகுந்து, குறுகிய நேரம் போரட்டங்களை நடத்தினர். அரசின் முக்கிய தலைவர்கள் இது தொடர்பான முக்கிய அறிவிப்பை தொலைக்காட்சியல் நிகழ்த்தும் போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீடிர் ஆர்ப்பாட்டங்களையும், திடீர் கூட்டங்கள் மூலமும் கூட்டாகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். திடீர் போராட்டங்கள் மூலம் வீதிப் போக்குவரத்துகளை முடக்கத் தொடங்கினர். உதாரணமாக ஜனாதிபதி இது தொடர்பாக தொலைக்காட்சியில் தோன்றி இதில் சில திருத்தத்துடன் அமுல் செய்வதாக கூறிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரின் உரை முடிந்தவுடன் பிரான்சின் பல பாகத்தில் ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்தி மாணவர்கள், உடனடியாகவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாரிசில் நடந்த ஊர்வலம் ஜனாதிபதி மாளிகையை நோக்கி நகர்ந்தது. இது இரவு 4 மணிவரை ஒரு மோதலூடாகவே, சில மைல் தூரம் நகர்ந்து சென்றது. இதன் போது ஆளும் கட்சி அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டன.

இப்படியான போராட்டங்கள் ஜரோப்பிய நாடுகளுக்கான பாதைகளை முடக்குவது முதல் மூலதனச் செயல்பாட்டுக்கான விநியோகங்கங்களை (supply) குறுகிய நேரம் அதிரடியாக முடக்குவது என்று பல போராட்டங்கள் தொடர்ச்சியாக திடீர் தீடிரென நடத்தப்பட்டன. ஒரு பலமான ஒன்றிணைந்த திகதியிடப்பட்ட போராட்டத்துக்கு, இடைப்பட்ட காலத்தில் குறுகிய பல போராட்டங்கள் அங்காங்கே திடீரென்று திட்டமிட்டு நடத்தப்பட்டது. போராட்ட வடிவம் மாறுகின்ற நிலைமைகளில் பொலிஸ் தலையீடு, மோதல்கள், கைதுகளின்றி அவை தானாக நிறுத்தப்படவில்லை.

இதன் மறுபக்கத்தில் மாணவர்கள் சமூகம், புதியதொரு கல்வியை தமது வாழ்வில் முதல முறையாகவே கற்கத் தொடங்கினர். மாணவர்கள் தமது போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்ட தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கினர். மக்கள் பற்றியும், கடந்தகாலத்தில் மூலதனத்தினால் ஏற்பட்டுவரும் சமூக அவலங்களைப் பற்றியும் கூட, கருசனையுடன் தமது சொந்தக் கவனத்தை திருப்பினர். பல உரையாடல்களை, விவாதங்கள், கூட்டு நடவடிக்கைளை நடைமுறைப்படுத்தினர். பொது வேலை நிறுத்ததை தொடங்கத் தடையாக உள்ள, கடந்தகால காட்டிக்கொடுப்புகள் ஏற்படுத்திய மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை மாற்ற, மாணவர்கள் தீவிரமாக முனைந்தனர். இதன் ஒரு அம்சமாகவே தொழிற்சாலைகளை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கினர். இந்தளவுக்கும் மாணவர்கள் அரசியல் உணர்வு பெற்று இதில் ஈடுபடவில்லை. எதார்த்த நிலைமை வலுக்கட்டாயமாக அவர்களை அதற்கு இட்டுச் சென்றது. தொழிலாளர்களின் கடந்தகால நிகழ்கால பிரச்சனைகள் மீது, ஒரு கரிசனைமிக்க இயல்பான ஒரு அரசியல் உரையாடலை நடத்தினர். இதன் முதற்படியாகவே மாணவர்கள் தொழிலாளர்கள் இணைந்த திடீர் நடவடிக்கைகள் படிப்படியாக வளர்ச்சி காணத் தொடங்கியது.

இதன் போது வீதிகளை மறித்து வாகனத்தில் செல்வோருக்கு தமது நிலை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவை கோரினர். மாணவ தலைவர்கள் தொழிற்சங்க தலைமை முதல், தொழிலாளர்களின் அடிமட்டம் வரை அடிக்கடி கூடிக் கதைத்தனர். பொதுப்போராட்டங்களை நடத்துவதிலும், ஒருகிணைந்த உணர்வை வெளிப்படுத்துவதிலும்; கருசனை எடுத்தனர். வேலையில்லாத அலுவலகங்களைக் கைப்பற்றி, வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்த கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தினர்.
பொதுவாக சமூகத்தை கீழ் இருந்து மேலே பார்க்கும் அணுகுமுறையைத் தொடங்கினர். வாழ்க்கை என்றால் என்ன? உழைப்பு என்றால் என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? என்று அனைத்து சமூக மதிப்பீடுகள் மீதுமான சுயபரிசீலனை, கூட்டு விவாதங்கள், கூட்டு முடிவுகள் என பலதளத்தில் நடத்தினர். இது தன்னியல்பாகவும், ஏன் திட்டமிட்டும் கூட நடத்தப்பட்டன. தன்னியல்பாக தொடங்கிய இந்தப் போராட்டம், படிப்படியாகவே அரசியல் மயமாகத் தொடங்கியது. இதன் விளைவாக அரசு சட்டத்தை மீளப் பெற்ற பின்பும் கூட, போராட்டத்தைக் கைவிட ஒரு பகுதி மாணவர்கள் தீவிரமாக மறுத்தனர். பல்கலைக்கழக செயற்பாட்டை முடக்கியதுடன், வீதி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். கடந்தகாலத்தில் மாணவர்களுக்கு எதிராக கொண்டுவந்த அனைத்து சட்டங்களையும் மீளப் பெறும் வகையில், போராட்டம் அரசியல் கோரிக்கையாக மாறி நிற்கின்றது.

உண்மையில் இந்த போராட்டம் தொடங்கிய போது மிகவும் பலவீனமான ஒரு நிலையில் தொடங்கியது. இதுவே படிப்படியாக பலம்பொருந்திய ஒன்றாக மாறியது. போராட்டம் தொடங்கிய போது அரசியல் எதுவுமற்ற ஒன்றாக, தன்னியல்பான ஒன்றாகவே இருந்தது. இது படிப்படியாக அரசியல் மயமாகும் முதல் படியைத் தொட்டது. சமூகம் பற்றி ஒரு அரசியல் கல்வியை இது முன்னிலைப்படுத்தி, எதிர்கால சமூதாயத்தின் ஒரு அரசியல் மயமாக்கலை நோக்கி நகர்வதற்கான படிமுறையில் இது தன்னை வெளிப்படுத்தியது. பிரான்சில் நடப்பனவற்றைக் கண்டு, உலகிலுள்ள மக்களும் மாணவர்கள் புதுமையானதாகவும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மாணவர்கள் என்ன கோருகின்றனர் என்று தெரியாது மூக்கை சொறிகின்றனர்.

மறுபக்கம் சமூக ரீதியாகவே, சமூகத்துகாக போராடுபவர்கள் மகிழ்ச்சியால் உந்தப்படுகின்றனர். போராட்டமின்றி மனித வாழ்வில்லை. ஆம் மனித போராட்ட வரலாறு என்பது மக்களின் சொந்த அதிகாரத்தை நோக்கிப் போராடுதல் என்பதையே, பிரஞ்சு மாணவர்கள் அவர்கள் தாமே அறியாது மீண்டும் உலகுக்கு உணர்த்திவிட்டனர். இதை தடுத்து நிறுத்த மூலதனத்தால் முடியாது என்பதையே, மாணவர் போராட்டம் மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்தி நிற்கின்றது.

மாணவர்களின் போர்க்குணாம்சமான இந்த நிலைமையையிட்டு யார் கவலைப்படுகின்றனர். பிரஞ்சு முதலாளிகளும் அவர்களின் அரசியல் பொருளாதார எடுபிடிகளுமே. உலக முதலாளிகளும் அவர்களின் தொங்கு சதைகளும் மிரண்டு போய் நிற்கின்றனர். எலும்புகளை கவ்வும் ஒரு கூட்டம், இதையிட்டு தனக்குள் தானே நெழிகின்றது. நாசியக் கட்சிகள் பாசிச வெறியுடன் மாணவர்கள் வீதியில் இறங்குவதை தடுக்கும்படி கூக்கூரல் இடுகின்றனர். இவர்கள் எல்லோரும் ஜயோ ஜனநாயகத்துக்காக இந்தக் கேடா என்று புலம்பினர். வன்முறை மூலம் இதை அடக்கும்படி கோரினர். இதற்கு எதிரான சிறுபான்மையினரின் ஜனநாயகத்தை, பெரும்பான்மை வீதியில் இறங்கி தடுப்பதாகக் கூறினர். மூலதனம் உருவாக்கிய தனது ஜனநாயக சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தியே, இதை தடைசெய்யக் கோரினர்.

சமூக விரோத முதலாளித்துவ ஆதரவு சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமையே முதன்மையானது என்கின்றனர். இதற்கு எதிரான மாணவர்களின் ஜனநாயகம், வன்முறை கொண்டது என்றனர். ஜனநாயக பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை திரும்ப பெறக் கோருவது, ஜனநாயக விரோதம் என்;றனர். பெரும்பான்மை மக்கள் தமக்கு வாக்களித்துவிட்டதாக கூறி, மக்களுக்கு எதிராகவே சட்டம் கொண்டுவர தமக்கு உரிமை உண்டு என்று கூறி கூக்குரல் இட்டனர். இதைத்தான் ஜனநாயகம் என்று கூறி, ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தம்மையறியாமலேயே தோலுரிக்கவும் கூட அவர்கள் தயங்கவில்லை.

ஜனநாயகம் பற்றிய கேள்விகள் மாணவர்களிடையே ஒரு விவாதப் பொருளாகிவிட்டது. இதில் அவர்கள் அரசியல் கல்வி கற்று பட்டம் பெற்றுவருகின்றனர். பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை மீறிய, பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகம் பற்றிய கேள்வி, வீதியில் மாணவர்களால் நிறுத்தி வைத்தே கேட்கப்பட்டது. மக்களுக்கு எதிரான அரசையே ராஜினாமாச் செய்யக் கோரினர்.

முதலாளிகளுக்காகவே உள்ள ஜனநாயகம், முதலாளிகளுக்காகவே சேவை செய்யும் பொலிஸ் என்ற வன்முறை கொண்ட அடக்குமுறை இயந்திரத்தை, மாணவர்கள் தமது சொந்தப் போராட்டத்தின் மூலமே இனம் கண்டனர். இதை பாதுகாக்கும் அரசு இயந்திரங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக ஏன் செயல்படுகின்றன என்ற கேள்வி, ஜனநாயகம் பற்றிய பிரமை கொண்ட மாணவர்களிடையே மக்களிடையே ஒரு தெளிவை உருவாக்கி வருகின்றது. ஜனநாயகம் என்பது முதலாளிக்கு அதாவது மூலதனத்துக்கு சார்பானது. சட்டம் என்பது முதலாளிக்கு அதாவது மூலதன பெருக்கத்துக்கு சார்பானது. அரசு என்பது மூலதனத்தை வைத்துள்ளவர்களை பாதுகாக்க உருவானதே. இது ஒரு வன்முறை கொண்ட சர்வாதிகார அமைப்பாகும்.

இந்த ஜனநாயகத்தை நம்பி அரசியல் செய்யும் கட்சிகளும், அதை சொல்லி தொழிற்சங்கம் நடத்திப் பிழைக்கும் கும்பலும் கூட, ஜனநாயகத்தை பாதுகாக்க களத்தில் மாணவர் சார்பு நிலையை எடுத்தனர். இந்த விசித்திரமான அடிப்படையான உண்மை மட்டும், இதில் அம்பலமாகாது பொயத்;துவிடுகின்றது. மாணவர்கள் இந்த ஜனநாயக அமைப்பில் நம்பிக்கையை இழந்துவிடாது தடுக்கவும், ஒரு புரட்சிகரமான மக்கள் அதிகாரத்தை கோரும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாது தடுக்கவும், இந்த ஜனநாயகவாதிகள் விரும்பினர். அவர்கள் மாணவர்களின் பக்கத்தில் தாம் நிற்பது போல் நின்று, மாணவர்களின் விருப்பத்தை தமது கோரிக்கைக்குள் சரணடைய வைக்க முனைந்தனர்.

பேசித் தீர்த்தல், முன் கூட்டியே சட்டத்தை விவாதிக்க கோருதல், தாம் ஆட்சிக்கு வந்தால் இதை நீக்குவதாக கூறுதல், இது போன்ற சட்டங்களை உங்களுடன் பேசி முடிவு எடுப்பதாக கூறுதல், போராட்டம் சிதையும் வண்ணம் காலத்தை நீட்டியடித்தல், போராட்டத்தை சிதைக்கும் வண்ணம் சீர்திருத்தத்தை புகுத்துதல், பொது வேலை நிறுத்ததை இழுத்தடித்து பிற் போடுதல், தனித்தனியாக அரசுடன் பேசுதல், கூட்டுத் தலைமைக்கு புறம்பாக பேச முற்பட்டு போராட்டத்தை உடைத்தல், தொழிற் சங்கத்தை மாணவர்களில் இருந்து பிரித்து செயல்படுத்தல் போன்ற எண்ணற்ற இழிந்த வடிவங்களை இவர்கள் கையாண்டனர். உண்மையில் மாணவர்களின் கோரிக்கையை மழுங்கடிக்க, அதை சிதைக்க பலர் குறுக்குவழியில் இதற்குள் புகுந்து செயல்படுத்த முனைந்தனர்.

ஒரு அரசியல் மயப்படாத சமூகத்தில், இது போன்ற குறுக்குவழி அரசியல் நடைமுறைகள் பல சறுக்கல்களையும் தோல்விகளையும் வழிகாட்டத்தான் செய்தன. ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கையை, இவர்களால் மறுதலிக்க முடியாமையால் ஜனநாயகத்தின் குறுக்குவழி அரசியலால் திசைதிருப்ப முடியவில்லை. இதனால் போராட்டம் தொடர்ச்சியாகவும் சோர்வின்றியும் சவால்விட்டு நிமிர்ந்து நின்றது.

பிரங்சுப் பிரதமரோ தனது கருத்தில் போராட்டத்துக்கு பயந்து மூலதனத்துக்கு சார்பான இச் 'சட்டம் திரும்பப் பெற்றுக் கொண்டால், நாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சீர்திருத்தம் என்பதை மறந்துவிட வேண்டும். இது ஆபத்தான அடையாளமாகும்." என்றார். எனவே 'அரசாங்கம் விவாதத்திற்கிடமின்றி கஷ்டத்தில் இருக்கின்றது. நாம் ஒன்றுபடவேண்டும்," என்று அரசு, தனது வலதுசாரிய அதிர்ப்;தியாளர்களிடம் கூறினர். மறுபக்கத்தில் மாணவர்களின் உறுதியான நிலையை முறியடிக்க சட்டத்தில் திருத்தம் செய்வதாக அறிவித்தனர். இரண்டு வருட காலத்தை ஒரு வருடமாக குறைப்பதாக் கூறி, ஒரு பகுதி மாணவர்களை உடைத்துவிட முனைந்தனர். மாணவர்களின் உறுதியான எதிர்ப்பால் இது தோல்வி பெற்ற போது, புதிதாக மீண்டும் இதை நடைமுறைப்படுத்தும் காலத்தை ஆறு அல்லது ஒரு வருடத்துக்கு பிற் போடுவதாக அறிவித்தனர். இதுவும் தோல்வி பெற்றது. மாணவர்களின் பரீட்சை நெருங்கி வருவதைக்காட்டி, ஒரு உளவியல் விவாதத்தையே நடத்தி, மாணவர்களின் உணர்வுகளை சிதைக்க முனைந்தனர். இப்படிப் போராட்டத்தை நீந்து போகச் செய்யும் சதிகளையே அரசு ஜனநாயகமாக்கினர். ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள், இதை முறியடித்து தனது பலத்தை நிறுவிக்காட்டியதுடன், சமூக விரோதச் சட்டத்தை மீளப் பெற வைத்தனர்.

மூலதனத்தை பாதுகாக்கும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தைக் கண்டு, எதிர்கட்சிகள் பீதியில் உறைந்து நின்றனர். இந்த சட்டத்தை ஒட்டி 'இது எதில் போய் முடியுமோ என்ற கவலையில் நாங்கள் அனைவரும் உள்ளோம்" என்று சோசலிஸ்ட் கட்சியினர் கூறினர். அரசின் கடும்போக்கை கண்டு, ஐயோ ஜனநாயகத்துக்கு ஆபத்து அதிகரிப்பதாக கீச்சிட்டனர். புதிய அரசியல் மாற்று வழிகளை இது உருவாக்குவதாகவும், இது ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க இச்சட்டம் வழிவகுப்பதாக கூறியே, இந்த சட்டத்தை வாபஸ் வாங்கும்படி கோரினரேயொழிய மாறாக மாணவர்களின் நியாயமான கோரிக்கையின் மீதல்ல.

இந்த நிலையில் இருந்து தப்பிப்பிழைக்கவும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெல்ல விரும்புகின்ற, இனவாதியும் நாசியுமான உள்துறை அமைச்சர் சாக்கோசி, அரசின் சார்பாக இதைக் கையாளத் தொடங்கினார். அவர் தான் இந்தச் சட்டத்தின் அமுலாக்கத்தை 6 முதல் 12 மாதம் பிற் போடுதல் என்ற புதிய அரசியல் சூதாட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் தான் தேர்தலில் வெல்லும்வரை இதைப் பிற்போடுதல், இல்லையென்றால் இந்த நெருக்கடியை புதிய ஆட்சியிடம் தள்ளிவிடுதல் என்ற அரசியல் ஜனநாயக சூழ்ச்சியை முன்னிறுத்தினார். இந்த அரசியல் சூழ்ச்சியையும் மாணவர்கள் தெளிவாக நிராகித்தனர். உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டத்தை வாபஸ் வாங்கக் கோரினர்.

அவர்கள் இதற்கு எதிராக 'இளைஞர்களை தூக்கியெறிவதை நிறுத்து", 'கசக்கப்பட்ட எலுமிச்சம் காய்களாக எத்தனை காலம் இருப்பது?", 'க்ளீனெக்ஸ் ஒப்பந்தம் வேண்டாம்", 'பின்புற வழியாக அடிமை உழைப்பு", 'ஒப்பந்த வேலையை தூக்கி எறியுங்கள்;" 'உங்கள் இளமையை தூக்கி எறியாதீர்கள்!" இது 'அடிமக்களுக்கான ஒப்பந்தம்" என்று பல பத்து கோசங்களுடன் மாணவர்கள், அரசை எதிர்த்து வீதியில் மீண்டும் மீண்டும் இறங்கினர்.
இப்படித் தான் ஜனநாயகம் ஒரு அரசியல் நெருக்கடியில் சிக்கியது என்றால், அந்த மாணவர் போராட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்வது அவசியம்;. இந்த சட்டம் இரண்டு விடையங்களை உள்ளாக்கியது. முதல் வேலை ஒப்பந்தம்(CPE என்பது Contrat première embauche ) என்ற சட்டம், 26 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு எதிராக சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாவது சட்டம் முதியவர்களுக்கானது. குறுகிய கால ஒப்பந்தம் (Short-tem Contract for Seniors) என்பது, 57 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கான ஒரு சட்டம். இதுவும் மாணவர்களுக்கு எதிரானது.

முதல் வேலை ஒப்பந்தம் 26 வயதுக்கு உட்பட்டவர்களை ஒரு முதலாளி விரும்பிய நேரத்தில், விரும்பியவாறு இரண்டு வருடத்துக்குள் வேலை நீக்கம் செய்யும் சட்டமாகும். இதற்கு எதிராக சட்டப்படி வழக்கு தொடுக்க முடியாது. இதுவரை இருந்த உழைக்கும் அனைத்து தொழிலாளியையும் நீக்க வகை செய்யும் பொதுச்சட்டத்தை நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக 26 வயதுக்குட்பட்டவர்களை ஒரு சிறப்புச் சட்டத்தின் மூலம், அவர்களை விரும்பியவாறு முதலாளி கையாள அனுமதிக்கின்றது.

முதியர்களுக்கான குறுகியகால ஒப்பந்தம், தான் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு, உழைப்பில் தொடர்ந்து இருக்க வழிவகை செய்யும் சட்டம். இதன் மூலம் முதிய உழைப்பாளிகளின் சம்பளத்தைக் குறைக்க சட்டம் இயல்பாக வழிவகுக்கின்றது. முதுமைக்கு ஒய்வூதியம் என்பதை இது மறுக்கின்றது. மறுபக்கத்தில் ஒய்வூதியத்தை குறைத்த கடந்தகாலச் சட்டங்கள், இயல்பாக ஒய்வூதியத்தை விட சற்று அதிகமான கூலியை பெற்று தொடர்ந்தும் உழைக்க கோருகின்றது. ஒய்வூதியம் பெறாது தொழிலில் நீடிக்க சட்டம் கோருகின்றது. குறைந்த ஒய்வூதியத்தில் வாழமுடியாத நிலையில், வலுக்கட்டாயமாக அதை விட சற்று அதிகமான ஒரு எழும்பை போடுவதன் மூலம் ஒய்வூதிய வயதை அதிகரிக்கவைக்கின்றனர். இதன் மூலம் முதலாளி ஒய்வ+திய நிதியை கொடுக்க வேண்டியதில்லை. மிகச் சிறந்த அனுபவமுள்ள உழைப்பாளியின் உழைப்பை, மிக மலிவாக சுரண்ட இச் சட்டம் வழிவகுத்தது. இதன் எதிர்வினையில் இதுவே இளைஞர்களின் புதிய வேலை வாய்ப்பைத் தடுக்கின்றது. இதை உறுதி செய்யவே மற்றய சட்டம் உதவுகின்றது.
உண்மையில் 26 வயதுக்குட்பட்டவர்களின் வேலையின்மையை நிரந்தரமாக உருவாக்குகின்ற திட்டமிட்ட சதியாகும். ஒரு சேமிப்படையாக வைத்துக் கொண்டு பயன்படுத்திவிட்டு, துப்பிவிடும் மூலதனத்தின் முயற்சியாகும்;. 26 வயதுக்கு உட்பட்டவர்களை பெற்றோரில் தங்கிவாழ வைப்பதன் மூலம், முதலாளிகளின் மூலதனத்தை அதிகரிக்க வைக்கும் சட்டமாகும். 26 வயதுக்குட்பட்ட ஒருவனுக்கு பிரான்சில் எந்த சமூக உதவியும் வழங்கப்படுவதில்லை. அதாவது 18 வயதுக்கு கூடிய ஒருவன் சமூகத்தின் முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்ட பொதுவான சட்ட நடைமுறைகள் இருந்தபோதும் கூட, அவன் உழைத்துத்தான் வாழ வேண்டிய ஒரு நிலையிலும் கூட, அவன் 26 வயது வரை எந்த சமூக உதவியும் பெறமுடியாது. அதாவது பிரான்சில் 26 வயதுக்கு கூடிய ஒருவன் வேலையில்லை என்றால், அதிகுறைந்த சமூக உதவியைப் பெறமுடியும். அது 26 வயதுக்குட்பட்ட ஒருவனுக்கு கிடையாது. இது இயல்பில் பெற்றோரில் தங்கிவாழ வைக்கின்றது அல்லது சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வாழக் கோருகின்றது. இது முலதனத்துக்கு சார்பான ஒரு சட்டமாகவுள்ளது.
அதேநேரம் கல்வி கற்போருக்கென கட்டாயமான இலவசமான உழைப்பு முறை ஒன்று அமுலில் உள்ளது. 15 வயதுக்கு மேல் கல்வி கற்போர் கற்கும் காலத்தில், முதலாளிக்காக இலவசமாக உழைக்க வேண்டும். இதற்கு கூலி கிடையாது. இப்படி பல கோடி மணித்தியாலங்களை முதலாளிகள் கூலியின்றி பெறுகின்றனர். பல 100 கோடி ஈரோக்களை ஒவ்வொரு வருடமும் இலவசமாக கூலியின்றி முதலாளி பெறுகின்றான். இப்படி கூலியின்றி உழைக்கும் நேரத்தை, மாணவர்களின் ஒழுக்கத்தின் பெயரில் படிப்படியாக அரசு அதிகரித்து வருகின்றது. இப்படி ஒரு அப்பட்டமான சட்டப+ர்வமான கொள்ளையே, இந்த ஜனநாயக சட்டவாக்கத்தின் பின் ஆழச் செறிந்து காணப்படுகின்றது.

முதல் வேலை ஒப்பந்தம் நடைமுறையில் வந்து இருந்தால், குறிப்பாக வெளிநாட்டு இளைஞர்கள் அதிகளவில் நேரடியாக பாதிக்கப்படுவர். இன்று அதிகளவில் உள்ள வெளிநாட்டவர் வேலையின்மை (குறிப்பாக இது பிரதேசத்துக்கு பிரதேசம் 25 சதவீகிதம் முதல் 50 சதவீகிதமாக காணப்படுகின்றது.) இயல்பாகவே அதிகரிக்கும். இருக்கும் சட்டங்களே கணிசமாக வேலையைவிட்டு துரத்துபவர்களைக் கட்டுப்படுத்துகின்றது. இதை இல்லாதாக்கும் போது, வெளிநாட்டு இளைஞர்களை விரைவாகவே, வேலையில் இருந்து துரத்திவிடுவது அதிகரித்திருக்கும்.

பொதுவாக இச்சட்டம் 26 வயதுக்குட்பட்டவர்களை உளவியல் ரீதியாக அடிமைப்படுத்துவதையே கோருகின்றது. இதில் பெண்களை பாலியல் ரீதியாக, அதிகாரம் கொண்ட மூலதனம் நுகர்வதை கேள்விக்குள்ளாக்காத வகையில், பெண் இணங்கிப் போவதையே கோரியது. 26 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகத்தின் அனைத்துவிதமான சமூகக் கொடூமைக்கும் தானாக இணங்கிப் போவதை வரைமுறையின்றி இச்சட்டம் இணங்கவைக்க முனைந்தது. ஒரு தொழிற்சங்க செயல்பாட்டில் இருந்து, சமூக செயற்பாட்டில் இருந்த இளைஞர்களுக்கேயுரிய தீவிர உணர்வை இது கட்டுப்படுத்தி, மூலதனத்துக்கு அடங்கி இணங்கி இருக்கக் கோரியது. இளைஞர் சமூதாயம் அடங்கியொடுங்கி ஒழுக்கமாக, அதையே பண்பாக கொண்டு மூலதனத்துக்கு சேவை செய்வதை இது கோரியது. மக்கள் நலன், சமூக நலன் என எதையும் முன்னிறுத்தாத, மூலதன நலனுக்கு இணங்கிப் போகும் ஒரு வாழ்க்கை முறையையே, இச்சட்டத்தின் மூலம் நடைமுறையில் கோரியது. 26 வயதின் பின் இதுவே ஒரு வாழ்க்கை முறையாக தன்னைத் தான் மாற்றக் கோரும் ஒரு பயிற்சி காலமாக, 26 வயதுக்குட்பட்ட இளைஞர் இளையிகளின் வாழ்வு மீதான பயத்தை தனக்கு சார்பாக மாற்ற முனைந்தது. இதன் மூலம் மூலதனம் இளைஞர் யுவதிகளின்; உழைப்பின் திறனை, அதிகளவில் உயர்ந்தபட்சம் உறுஞ்சுவதையே இச்சட்டம் உறுதி செய்ய முனைந்தது. அதாவது 26 வயதுக்கு உட்பட்டவர்கள் கடுமையாக உழைப்பதன் மூலம், நாயாக வாழ்வதன் மூலம், தனது தொழிலைப் பாதுகாக்க முடியும் என்ற நப்பாசையையே இச்சட்டம் ஒரு பண்பாகவும் நடைமுறையாகவும் கோரியது.
மூலதனத்தின் அனைத்து அசைவுக்கும் இணங்கி அடிமைப்பட்டு அடங்கியொடுங்கி வாழ்வதையே இச்சட்டம், ஒவ்வொரு 26 வயதுக்குட்பட்டவனிடமும் கோரியது. இல்லையென்றால் அவர்கள் வலதுகுறைந்தவர்களாக மாறி, வாழ்வதற்காக பெற்றோரை தங்கியிருக்க கோரியது. இதுவுமில்லை என்றால் சமூகவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வாழும் லும்பன்களாகவே இருக்கக் கோரியது. இந்தவகையில் இச் சட்டம் மேலும் ஒரு சமூக இழிவைப் புகுத்தவே முனைந்தது. மூலதனத்தின் அடிமையாக, சுதந்திரமான உணர்வுகளை இழந்து இழிந்து இருத்தலைத் தான் ஜனநாயகம் என்றது. உளவியல் ரீதியாகவே அனைத்தையும் இழந்து சிதைந்து போன, சுயலாற்றல் அற்ற நிலையில் வாழ்வதே நாகரிகம் என்று இச்சட்டம் மூலம் புகட்ட முனைந்தனர்.

இன்று பிரான்சில் அண்ணளவாக 10 சதவீகிதம் பேர் வேலையின்றி இருப்பதாக அரசு அறிவிக்கின்றது. இதில் 26 வயதுக்குட்பட்டோரின் வேலையின்மை அண்ணளவாக 23 சதவீதமாகவுள்ளது. இந்த நிலைமை என்பது, 26 க்கு குறைந்த, உழைப்பில் அதிதிறன் ஆற்றல் உள்ள உழைக்கும் மனிதர்களின் இழிநிலையே இது. இதை மேலும் அதிகரிக்கும் வண்ணம், இச் சட்டம் வக்கிரமாகவே அவர்கள் மேல் ஈவிரக்கமின்றி பாய்ந்தது. 2003 இல் 26 வயதுக்கு உட்பட்டவர்களில் வேலை செய்தவர்களில் 58 சதவீகிதம் பேர் மட்டும் தான், நிரந்தரமான ஒரு வேலையைப் பெற்றனர். மிகுதிப் பேர் நிரந்தரமற்ற ஒரு நிலையில் காணப்பட்டனர். இச்சட்டம் இதை மேலும் அதிகரிக்க கோரியது. முதலாளிகள் தாம் நிரந்தரமாக வைத்திருக்க வேண்டிய தேவையை மறுக்கின்ற ஒரு சட்டத்தைத்தான் கோரினர். மாணவர்கள் இதன் எதிர் நிலையில் நின்று போராடினர்.

உண்மையில் இந்த சட்டத்தின் முன்பே நிலைமை மோசமானதாகவே இருந்தது. 2003 இல்; 21 சதவீகிதத்தினர் தங்கள் படிப்பு முடித்து ஒன்பது மாதங்களுக்கு பின்னரும் கூட, வேலை தேடிக் கொண்டிருந்தனர். இன்றைய ஒரு நிலையில் ஒரு இளைஞன் நிரந்தரமான ஒரு வேலை கிடைக்க 8 முதல் 11 ஆண்டுகள் செல்லுகின்றது. புதிய சட்டம் இதை மேலும் பல ஆண்டாக அதிகரிப்பதையே முன்வைத்தது. 70 சதவீகிதமான இளைஞர்கள் குறுகிய கால ஒப்பந்தம் மற்றும் தற்காலிகமான வேலைக்கே செல்லுகின்ற இன்றைய மனித அவலத்தை, இச் சட்டம் முழுமையான வாழ்க்கை முறையாக்க முனைந்தது. 2003 இல் 26 வயதுக்கு உட்பட்டோரில் வேலை செய்தவர்களில் 40 சதவீதம் பேர், அடுத்த வருடம் தமது வேலையை இழந்து இருந்தனர். இதை இச்சட்டம் இதை 100 சதவீகிதமாக்க முனைந்தது.
இதை ஆநுனுநுகு என்ற பிரெஞ்சு முதலாளிகளின் சங்கம் 'ஒழுங்குபடுத்தப்படாத குப்பைக்கூழம்" என்று கூறி, ஒழுங்குபடுத்தும் இச்சட்டம் தேவை என்றனர். தனது தேவைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்த இந்தச் சட்டம் உதவுகின்றது என்றனர். குப்பைகளான இளைஞர்களை வடிகட்டி, தூக்கியெறிய இச்சட்டம் உதவும் என்றனர்.

சரி இந்த ஜனநாயக சட்டத்தை அரசு கொண்டு வந்த விதமே நரித்தனமானது. மாணவர்களின் விடுமுறையின் போது தான் இச்சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தனர். நாள் பார்த்தும், சூனியம் செய்தும், மாணவர்கள் போராடாது இருக்கவும், தமது எதிhப்பை தெரிவிக்காத ஒரு நாளாக பார்த்தே நாட்களை தெரிவு செய்து இந்த சட்டத்தைக் கொண்டு வந்தனர். தை 28 ம் திகதி இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. மாசி 4 முதல் இரண்டு கிழமை தொடரும் விடுமுறைக்குள் எதிர்ப்புகள் விவாதங்கள் நீந்து போகச் செய்யும் வகையில், சமூகத்துக்கு எதிரான சட்டம் நயவஞ்சகமாகவே புகுத்தப்பட்டது.

பங்குனி 8 திகதி அதாவது பெண்கள் தினத்தன்று இச்சட்டம் சட்டவாக்கம் பெற்றது. பெண்களுக்கு எதிரான ஒரு புதிய சட்டம் தான். மனித உரிமையை கோரிப் போராடும் ஒரு நாளில் தான், இந்த மனித இழிவு சமூகத்தில் சட்டபூர்வமாக புகுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றது என்பது, எம்முன்னுள்ள சரியான வரலாற்றுப் பணியை உற்சாகத்துடன் வழிகாட்டுகின்றது. வரலாறு மக்களுக்கானது. போராடினால் தான் மனித வாழ்வு உண்டு. இதின்றி மனித உரிமை என எதுவுமில்லை.

Thursday, April 13, 2006

விவசாயிகளின் சிறுநீரகங்கள் விற்பனைக்கு!

''விவசாயிகளின் சிறுநீரகங்கள் விற்பனைக்கு!" தாராளமயத்தின் கோரம்

தை அதிர்ச்சி என்று சொல்வதா? அல்லது, நாட்டுக்கே அவமானம் என்று சொல்வதா?

""எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்!'', ""எங்கள் சிறுநீரகம் விற்பனைக்குத் தயார்!'' என மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களின் பல கிராமங்களில் அறிவிப்புப் பதாகையுடன் விவசாயிகள் தமது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்கும் புதுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தமது உடல் உறுப்புகளையும் தாம் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் பகிரங்கமாக விற்பனை செய்யத் துணிந்து விட்ட விவசாயிகளின் இச்செயல், வழக்கம் போலவே செய்தி ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு இப்போது மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளது.

""சிறுநீரக விற்பனை மையம்'' என்ற விளம்பரப் பதாகையுடன் ஒரு மூங்கில் கொட்டகை அந்தக் கிராமத்தின் நுழைவாயிலில் காணப்படுகிறது. ""ஆம்! இது உண்மைதான்! நாங்கள் எங்கள் சிறுநீரகங்களை விற்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மன்மோகன் சிங்கையும் அரசுத் தலைவர் அப்துல் கலாமையும் இந்தக் கடையைத் திறப்பு விழா செய்து விற்பனையைத் தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம்'' என்கிறார்கள் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்திலுள்ள ஷிங்னாபூர் கிராமத்து விவசாயிகள்.

""இதில் ஆச்சரியப்படவோ, அதிர்ச்சியடையவோ ஒன்றுமில்லை. நாங்கள் எங்கள் கிராமத்தை எங்களின் சிறுநீரகங்களை விற்கத் தடைவிதிக்காமல் ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் கடனில் மூழ்கி ஓட்டாண்டிகளாகி விட்டோம். எங்களிடம் விற்பதற்கு எதுவுமில்லை சிறுநீரகத்தைத் தவிர!'' என்கிறார் சம்பத்கிரி என்ற விவசாயி.

ஷிங்னாபூர் மட்டுமல்ல; டோர்லி, லெஹேகான், ஷிவ்னி ரசுலாபூர் முதலான மகாராஷ்டிராவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பல கிராமங்களில் சிறுநீரக விற்பனை குறித்த விளம்பரப் பதாகைகள் தொங்குகின்றன. ""எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்!'' என்ற அறிவிப்புப் பலகைகள் கிராமங்களின் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ளன. ""கடந்த 10 மாதங்களில் எங்கள் வட்டாரத்தில் 309 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர். முன்பு எனது நிலத்தில் கிணறு தோண்டி மின்சார மோட்டார் போட்டு விவசாயம் செய்து வந்த நான், இப்போது கடன்சுமையால் நிலத்தை இழந்து நிற்கிறேன். கூலி வேலையும் இப்பகுதியில் கிடைப்பதில்லை. எனது வீட்டில் உணவு இல்லை; துணி இல்லை; மின்சாரமில்லை. தெரு நாய்களைப் போல நாங்கள் பசியால் அலைந்து திரிகிறோம். வெறும் தண்ணீரைக் குடித்து எத்தனை நாட்கள் நாங்கள் உயிர் வாழ முடியும் என்று தெரியவில்லை. எங்களது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்க இப்படி விற்பனை அறிவிப்பு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை'' என்று குமுறுகிறார் அந்த விவசாயி.

ஒரு காலத்தில் ""வெள்ளைத் தங்கம்'' என்று பெருமையாகக் குறிப்பிடப்பட்ட பருத்தி விளையும் கரிசல் காட்டு சொர்க்க பூமியாக விளங்கிய மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியம், இப்போது சுடுகாடாகக் காட்சியளிக்கிறது. கடந்த 15 ஆண்டுகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயம் தோற்றுவித்த பயங்கரம் அப்பிராந்தியம் எங்கும் மரணஓலமாக எதிரொலிக்கிறது.

""எங்கள் வட்டாரத்திலிருந்து வண்டி வண்டியாக ஒரு காலத்தில் பருத்தியை ஏற்றிச் செல்வோம். இப்போது ஒரு வண்டி அளவுக்குக் கூட பருத்தி இல்லை. மாடுகளை விற்றுவிட்டோம்; இற்றுப் போன வண்டிகளை விறகாக்கினோம். பருத்தி விலை அடிமாட்டு விலைக்கு வீழ்ந்து விட்டது. உற்பத்திச் செலவோ 5 மடங்கு அதிகரித்து விட்டது. விலை வீழ்ச்சியால் இதர பயிர் சாகுபடிகளும் கட்டுபடியாகவில்லை. வங்கியில் வாங்கிய கடனைக் கட்ட முடியாததால், புதிதாக அங்கு கடன் தர மறுக்கிறார்கள். கந்துவட்டிக்காரர்களிடம் 10 வட்டி 12 வட்டிக்குக் கடன் வாங்கி போண்டியாகி நிற்கிறோம்'' என்று விம்முகிறார் சவாண் எனும் விவசாயி.

தாராளமயமாக்கலுக்குப் பிறகு சந்தையின் மீதான கட்டுப்பாட்டை அரசு தளர்த்தியது. பருத்தி கொள்முதல் நிலையங்களை அரசு படிப்படியாக மூடியது. அமெரிக்க, ஐரோப்பிய பருத்தி விவசாயிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுமாறு விவசாயிகளுக்கு உபதேசித்தது. ஆனால், அந்நாடுகளின் விவசாயிகளுக்கு அரசாங்கம் பல்லாயிரம் கோடி மானியம் கொடுத்து ஆதரிக்கிறது. இந்திய விவசாயிகளுக்கோ உலகவங்கி உத்தரவுப்படி ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மானியமும் வெட்டப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் எப்படி போட்டி போட முடியும்?

மேலும், இந்திய ஆட்சியாளர்கள் தாராளமயமாக்கலின் கீழ், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பருத்திக்கு 10% தான் இறக்குமதி தீர்வை விதிக்கப்படுகிறது. இதனால் கப்பல் கப்பலாக வெளிநாட்டுப் பருத்தி குவிகிறது. அதன் காரணமாக, உள்நாட்டுப் பருத்தி கடும் விலை வீழ்ச்சிக்குத் தள்ளப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு கச்சா பருத்தியின் விலை ஒரு கிலோ ரூ. 100 என்று இருந்தது. இன்று அதன் விலை பாதியாகச் சரிந்துவிட்டது.

ஒருபுறம், அன்னிய இறக்குமதியால் விலை வீழ்ச்சி; மறுபுறம் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, மானியக் குறைப்பு, மின்கட்டண உயர்வு என இரட்டைத் தாக்குதலின் கீழ் சிக்கிப் பருத்தி விவசாயிகள் கடனாளியாகி போண்டியாகிப் போனார்கள். இந்த நச்சுச் சூழலிலிருந்து மீள வழிதெரியாமல் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள்.

விதர்பா பிராந்தியமே வாழ்விழந்து பரிதவித்த நிலையில், வேலையில்லா விவசாய இளைஞர்கள் சிலர், மும்பைக்கு வேலைத் தேடிச் சென்று அங்கு கட்டுமானப் பணிகளில் கூலி வேலை செய்தனர். ஆனால் அங்கு வாரத்திற்கு 2 நாட்கள்தான் வேலை கிடைத்தது. சாலையோர நடைபாதைகளில் இரவில் படுத்துறங்கி, வேலை தேடி அலைந்த அவர்களுக்குத் தொடர்ச்சியாக வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி திருட்டு ரயிலேறி அவர்கள் ஊருக்குத் திரும்பி விட்டனர். இப்படி பல கிராமத்து இளைஞர்கள் வேலை தேடி மும்பை, தானே, புனே, நாக்பூர் என பெருநகரங்களுக்கு ஓடுவதும், அங்கும் வேலை கிடைக்காமல் பட்டினியோடு ஊருக்குத் திரும்புவதும் அவலத் தொடர்கதையாக நீள்கிறது.

வங்கி அதிகாரிகளும் கந்துவட்டிக்காரர்களும் கடனைக் கட்டச் சொல்லி எச்சரித்ததால், அவமானம் தாளாமல் கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று ஜகதீஷ் தேஷ்முக் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார். கணவனைப் பறிகொடுத்த அவரது மனைவி, காய்கறி பயிரிட்டு குடும்பத்தைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரது 12 வயது மகன் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு ஊர்ஊராக காய்கறி விற்கிறான். ""மின் வாரிய அதிகாரிகளோ, மின்கட்டண பாக்கியை உடனே செலுத்த வேண்டுமென எச்சரிக்கிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டால் காய்கறிகூட பயிரிட முடியாமல் நாங்கள் பிச்சை எடுக்க நேரிடும்'' என்று கண்கள் குளமாகக் கதறுகிறார் தேஷ்முக்கின் மனைவி.

நாடெங்கும் தாராளமயம் தோற்றுவித்துள்ள பயங்கரத்துக்கும் அவலத்துக்கும் இன்னுமொரு சாட்சிதான் மகாராஷ்டிரா விவசாயிகளின் ""சிறுநீரக விற்பனை மையங்கள்.'' தொழில் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் பணக்கார மாநிலமாகச் சித்தரிக்கப்படும் மகாராஷ்டிராவின் நிலைமையே இப்படி இருக்கும்போது, நாட்டின் பிற பகுதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. விலை வீழ்ச்சியால் தக்காளியைத் தெருவில் கொட்டிவிட்டு கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், ஆலையிலிருந்து வெட்டுவதற்கான உத்தரவு வராமல் நட்டப்பட்டு, கரும்புக் காட்டையே கொளுத்தும் விவசாயிகள், உரிய விலை கிடைக்காமல் காய்கறிகளையும் பழங்களையும் தெருவிலே கொட்டி வேதனையை வெளிப்படுத்தும் விவசாயிகள், வேலை கிடைக்காமல் நாடோடிகளாக அலையும் விவசாயிகள் என நாடெங்கும் விவசாயிகள் படும் அவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் உயிர் மலிவாகி விட்டது; உடல் உறுப்புகள் மலிவாகி விட்டது. நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடும் அண்டப் புளுகை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது இந்த அவமானக் கறையைத் துடைத்தெறிய தாராளமயத்துக்கும் துரோக ஆட்சியாளர்களுக்கும் எதிராகப் போராடப் போகிறோமா?

மு குமார்

Wednesday, April 12, 2006

சித்திரையில், இப்புத்திரன் மரணமா?

சித்திரையில், இப்புத்திரன் மரணமா?

சுதேகு
12.04.06

யேசுவின் பிறந்த நாளை மார்கழி 25 இலும் -தை 6 இலும் கொண்டாடுவது போல, இறந்த நாளான 'பெரிய வெள்ளியை' ஒரு நிலையான திகதியில் இவர்கள் கொண்டாடுவதில்லையே ஏன்? இயேசு இறக்கும் போது அவருடன் கூடவே இருந்த சீடர்கள் கூட இதைச்சொல்லவில்லை. தீர்க்கதரிசனங்களோ, வெளிப்படுத்தல்களோ கூட இதைச் சொல்லிவைக்கவில்லை. கத்தோலிக்கத்தின் ஞான உபதேச வகுப்புக்களில் இயேசு 30 வயதில் காணாமற்போய் பின்னர், 33 வயதில் சிலுவையில் அறையப்பட்டதாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் 'சூரிய ஒளியினர்' இயேசு சித்திரை மாதம் 7ம் திகதி 30ம் ஆண்டு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறுகின்றனர் (07April 30). அன்றைய தினம் கருப்பு மேகங்கள் சூரியனை மறைத்ததாகவும், சுமார் 36 மணித்தியாலங்களாக பூமி சூடாகவும் அதிர்வுடனும் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

இயேசுவின் இறப்பு-உயிர்ப்பு நாட்களை பாஸ்காவின் கடைசி நாட்களில் கொண்டாடுகின்றனர். யூத வருடத்தின் முதல் மாதமாகிய நிசான், (சித்திரை) முதல் பிறை நிலாவின் தோற்றத்துடன் ஆரம்பமாகிறது. இந்த நாட்காட்டியின்படி நிசான் 14ம் தேதி அன்று இயேசுவின் இராப்போசனம் கணக்கிடப்படுகிறது. அன்று யூதர்கள் பழைய கிரேக்க கலண்டரையே பயன்படுத்தினர். இவர்களின் நோன்புகள் பூரண சந்திரனை ஒட்டியே பின்பற்றப்பட்டன. முக்கியமான கடன் திருநாட்கள், பாஸ்கா என்பனவும் பின்னர் கிறிஸ்தவர்களால் இவ்வழிமுறையிலேயே கடைப்பிடிக்கப்பட்டன.
கலண்டர் ஒரு வருடத்திற்கான படிவமாக பனிக்காலம், இலை துளிர்காலம், கோடைகாலம், இலையுதிர்காலம் என நான்கு காலங்களைக் கொண்டிருந்தது. ஒரு வருடம் 12 மாதங்களையும் கொண்டிருந்தது. இது சூரிய, சந்திர குடும்பங்களில் இருந்து பெறப்பட்டது. கலண்டர் இதுகாலவரை 3 விதமாகக் கணிக்கப்பட்டது.

1.பூமி தனது சுழற்றியில், அதன் நேர்கோட்டுக்கு சூரியன் வருதல்.இக்கணிப்பு உரு வருடம் -365 நாட்கள் 5மணி 48 நிமிடங்கள்
2.சூரியனையும்-மற்றைய கிரகங்களையும் வைத்து கணிப்பிடும் முறை. இது ஒரு வருடத்தில் 365 நாட்கள் 6மணி 9 நிமிடம் 10 செக்கண்டுகள்.
3.பூமி தனது சுழற்சியில் சூரியனுக்கு மிக அண்மையாக வருவதை வைத்துக் கணிப்பிடும் முறை. இது ஒரு வருடத்தில் 365 நாட்கள் 6மணி 13 நிமிடங்கள் 53 செக்கண்டுகள்

உலகின் முதலாவது கலண்டர் கி.மு 3000 வருடங்களாக பபிலோனியர்களால் பாவிக்கப்பட்டு வந்தது. இது 'யுனி சூரியக் கலண்டர்' என அழைக்கப்பட்டது. இது ஒவ்வொரு பௌர்ணமிகளை மாதங்களாகக் கணக்கிட்டு, 12 நிலா மாதங்களைக் கொண்ட வருடமாகக் கணிக்கப்பட்டது (கூடுதலாக ஒரு மாதம் இடையே வருவதுண்டு) .இவ் நிலா வருடம் 345 நாட்களைக் கொண்டது. (ஒரு மாதம் 29.5 சராசரி நாட்களைக் கொண்ட 12 மாதங்களை உள்ளடக்கிய ஒரு வருடம்) எகிப்த்தின் பழங் குடியினர் பபிலோனியரின் கலண்டரைத் தெரிந்து கொண்டிருந்தாலும், இவர்கள் நைல் நதி நாகரீக விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் ஆகையால் இவர்கள் சூரிய வருடத்தையே கணக்கிட்டனர். வருடம் 365 நாட்களைக் கொண்டதாகவும், மாதம் 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்களாகவும் கணக்கிடப்பட்டது. கடைசி 5 நாட்களும் அவர்களின் ஐந்து தெய்வங்களின் பிறந்தநாட்களாகக் கணிக்கப்பட்டது.

1 Osiris
2 Horus
3 Sels
4.Nephthys
5. Isis

இக்கலண்டர் கி.மு 100-44 லூலிய சீசரால் மாற்றியமைக்கப்பட்டது. இவர் கிரேக்க வானிலை அறிஞர்களின் உதவியுடன் 355 நாட்களைக் கொண்ட குறுகிய வருடத்தை உருவாக்கினார். மேலதிக நாட்களும் மாதங்களும் சேர்க்கப்பட்டன. ரோமப் பேரரசின் அரசியல் பொருளாதார காரணங்களுக்காக குறைந்த நாட்களைக் கொண்ட வருடத்தை உருவாக்கி,மிக விரைவாக செல்வத்தைத் திரட்டி அரச கல்லாக்களை நிரப்புவதையே குறியாகக் கொண்டிருந்தனர். இதனூடாக உரோமப் பேரரசை விஸ்தரிக்கும் பேராசையையும் அது கொண்டிருந்தது.

கி.பி 325ம் ஆண்டளவில் கிறிஸ்தவ வானிலை ஆய்வாளர்களால் பாஸ்கா பவுர்ணமி அன்றைய தேவாலயங்களுக்காக கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தப் பவுர்ணமி - கிறிஸ்துசபைக்குரிய குருசங்கத்தாரின் பூரண சந்திரன் என்று அழைக்கப்பட்டது. அதாவது பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றிவரும் பாதையில், பூமியின் நிலைக்கோட்டுக்கு எதிராக சூரியன் அண்மித்துவரும் வசந்தகாலத்தில் ஏற்படும் முதலாவது பௌர்ணமி ஆகும். இந்நிகழ்வு வருடம் தோறும் மார்ச் மாதம் 21ம் திகதி பூமியின் நிலைக் கோட்டுக்கு எதிராக சூரியன் வருவதால், இதன் பின்னர் வரும் முதலாவது பூரண நிலவு 'விடுதலை உற்சவத்திக்குரிய பௌர்ணமி' -பாஸ்கா பௌர்ணமி- என்று அழைக்கப்படுகிறது. இப் பௌர்ணமி மார்ச் 22ம் திகதி முதல் ஏப்பிரல் 25ம் திகதிகளுக்கு இடையில் வருவதால், பாஸ்காவும் ஒரு நிலையான திகதியில் இவர்களால் கொண்டாட முடிவதில்லை. இப் பவுர்ணமிக்குப் பின்னர் வரும் முதலாவது ஞாயிறு இயேசுவின் 'உயிர்த்த ஞாயிறா'கக் கொண்டாடப்படுகிறது. இதிலிருந்தே பாஸ்கா கணிப்பிடப்படுகிறது.
இயேசுநாதரின் 40 நாள் நோன்பையும் பாடுகளையும் நினைவுகூரும் வகையில் இன்று பாஸ்கா கொண்டாடப்படுகிறது. இது 46 நாட்களைக் கொண்ட பாஸ்கா நோன்பாகும். இவ் நோன்பு நாட்களில் வரும் 6 ஞாயிறு - ஓய்வுநாட்கள் இதிலிருந்து விலக்கப்பட்டதாக இருந்தது. பாஸ்காவின் கடைசி வாரம் 'குருத்தோலை ஞாயிறு'டன் ஆரம்பமாகிறது. யூதர்களின் பாஸ்கா திருவிழாவுக்காக தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு பலரும் நாட்டுப்புறங்களிலிருந்து யேருசலேமில் கூடுவது வழக்கமாக இருந்தது. இவ்வாறு கூடிய மக்கள் மத்தியில் இயேசு யெருசலேமுக்குள் நுழைகிறார் என்று கேள்விப்பட்டு குருத்தோலைகளை ஏந்தியவண்ணம் அவரை வரவேற்றதாகக் கூறப்படும் பாஸ்காவின் கடைசி வாரம், இக் 'குருத்தோலை ஞாயிறு'டன் ஆரம்பமாகிறது.

இக் குருத்தோலை ஞாயிறு உரோமப்பேரரசில் கி.பி 12ம் நூற்றாண்டுவரை வழக்கத்தில் இருந்திருக்கவில்லை. மேற்குலக நாடுகளில் முதன்முதலாக ஸ்பானியாவில் இது கொண்டாடப்பட்டதாக அறியமுடிகிறது. அதுவும் கி.பி நான்காம் , ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இது கொண்டாடப்பட்டது.

திங்கள்

யெருசலேமின் தேவாலயம் இந்நாளிலேயே தூய்மை செய்யப்பட்டதாக நம்பப்படுவதால், இந்நாளில் அதிக முக்கியமான விடயங்கள் எதுவும் இந்நாளில் நடைபெறுவதில்லை. மத்தேயு 21ம் அதிகாரம் 12ம்,13ம் வசனத்தை இதற்கு அறிக்கை இடுகின்றனர். அதாவது ''பின்பு இயேசு கோவிலுக்குள் சென்றார்: கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்'' ,''என் இல்லம் இறைவேண்டுதலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்'' என பரிசேயருக்கும் இயேசுவுக்கும் இடையில் நடைபெற்ற சம்பவமாக இதை நினைவு கூருகின்றனர்.

செவ்வாய்

இந்நாளில் இரண்டு சம்பவங்கள் நினைவு கூருவதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று -இயேசுநாதரை நாஸ்திகக் குறிப்பு ஒன்றை செய்ய ஆளாக்க முயன்றதாகவும் மற்றையது இயேசுநாதர் யெருசலேமின் அழிவுபற்றி ஒலிவமலைக் குன்றில் சமிக்ஞை தெரிவித்ததாகவும் இந்நாள் நினைவு கூரப்படுகிறதாம்.

முதாவது சம்பவம் அதிகாரப் போட்டியில் எழுந்த வினாக்களையே நாஸ்திகக் கருத்தாக இங்கு கூறப்படுகிறது. பரிசேயர்கள், தலைமைக்குருக்கள் மற்றும் மூப்பர்கள் ''எந்த அதிகாரத்தில் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்? என்ற தருக்கத்தில் இயேசுவை ஆளாக்கியதையே இங்கு கூறுகின்றர். இயேசு மறுமொழியாக ''யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் விண்ணுலகத்திலிருந்தா? அல்லது மனிதரிடமிருந்தா வந்தது? என்று திருப்பிக்கேட்டு, தனது அதிகாரம் எங்கிருந்து வந்தது என்று நானும் கூறமாட்டேன் என்று இயேசு சொன்னதான சம்பவத்தையே இங்கு குறிக்கின்றனர். ஒலிவ மலைமீது இயேசு அமர்ந்திருந்தபோது, அவரது சீடர்கள் எருசலேம் அழிவு எப்பொழுது நிகழும் என்று கேட்டபோது அவர் பதிலளித்ததையே இங்கு நினைவுகூருகின்றனர்.

ஆனால் 70ம் ஆண்டே யெருசலேம் கோவில் அழிவுக்கு உள்ளானது. 63ம் வருடம் வரையும் எந்த எருசலேம் வாசிகளும் இவ் அழிவை அறிந்திருக்கவில்லை. 63ம் வருடம் எருசலேமில் இருந்த ஒரு தனிமனித விவசாயி முதன் முதலாக எருசலேம் அழிவுபற்றி இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் பெரும் குரலெடுத்து அழுதார். ஊர்வாசிகளும், சில தலைவர்களும் அவரைத் தடுத்தும் அவர் இவ்வாறு தினமும் அழுதுகொண்டிருந்தார். அவரைப் 'பைத்தியக்காரன்' என்று நையாண்டி செய்து அவரைப் புறந்தள்ளி வைத்திருந்தனர். ஆனாலும் அவரின் இச்செயல் தொடரவே, அவர் தாக்கப்பட்டார். இருந்தும் இவர் சாகும்வரை இதைத் தொடர்ந்தார். இவர் இறந்து 7வருடங்களும் 5 மாதங்களும் முடிந்தவேளை எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது (70).

புதன்

இப்புதன் 'ஒற்றர் புதன்' என்றும் 'விபூதிப் புதன்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தான் இயேசுவை காட்டிக் கொடுக்க யூதாஸ் ஒத்துக்கொண்டு, திடடம் தீட்டப்பட்டதாகவும், விபூதிப் புதன் மனிதன் தன்னை புதிப்பித்துக் கொள்ளும் - தன்னை ஆன்ம மீட்புக்குப் தயார்ப்படுத்தும் நாளாகவும் நினைவு கூரப்படுகிறது

வியாழன்

இது 'பெரிய வியாழன்' என்று அழைக்கின்றனர். இயேசு தனது கடைசி இராப்போசனத்தை தம் சீடர்களுடன் நடத்தியதாக நினைவு கூரப்படுகிறது.

வெள்ளி

இது 'பெரிய வெள்ளி' என்றும் 'நல்ல வெள்ளி' என்றும் அழைக்கப்படுகிறது. அது இயேசுவை சிலுவையில் அறைந்த நாளாக நினைவு கூரப்படுகிறது. கி.பி 4ம் நூற்றாண்டிலேயே இவ்வெள்ளி தனியாகக் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை இயேசுவின் உயிர்ப்புடன் சேர்த்தே இது கொண்டாடப்பட்டது. இயேசுவின் மரணத்தைவிட உயிர்ப்பே பிரதானப்படுத்தப்பட்டது. உயிர்ப்பு ஓய்வுநாளில் வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். மற்றும் இயேசுவின் உயிர்ப்பு பற்றி யாக்கோப் போன்றவருக்கு கருத்து முரண்பாடு இருந்ததால் பவுல் போன்றவர்கள் உயிர்ப்பை பிரதானப்படுத்தினர் என்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.

சனி

இயேசுவின் திருப்பாடுகளின் 5 காயங்களைக் குறித்தும், அவர் உடலில் பூசப்பட்ட வாசனைத் தைலங்களைக் குறித்தும் இந்நாள் நினைவு கூரப்படுகிறது.

ஞாயிறு

இது 'உயிர்த்த ஞாயிறு' என்று அழைப்பர். இது இயேசுவின் உயிர்ப்பை நினைவுபடுத்தும் முகமாகவும், பாஸ்காவின் கடைசி நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இப்பாஸ்கா பண்டிகையுடன் பல மரபார்ந்த வடிவங்களும் இணைக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய சின்னமாக 'பாஸ்கா முட்டை' இன்றுவரை பிரபல்யமாகவுள்ளது. கிறிஸ்தவ உலகம் முழுவதும் பரந்த மதமாக தமது ஆக்கிரமிப்புக்களால் ஆக்கப்பட்டபோது, பண்டைய இந்தியா முதற் கொண்டு பொலிநீசியா வரைக்கும், மற்றும் ஈரான் உள்ளீடாக கிரீசில் இருந்து லற்வியா - எஸ்ரோனியா , பின்லாந்து வரையும், மத்திய அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரப் பகுதிகள் வரைக்கும் எல்லாப் பண்டைய பண்பாடுகளிலும் முட்டை மக்களின் வாழ்வின் சின்னமாகவே இருந்து வந்திருக்கிறது.

பழைய லத்தீன் பழமொழிகளில், சகல உயிர்ப்பும் முட்டையிலிருந்து உருவாவதாக எடுத்துரைக்கப்பட்டது. பண்டைய காலத்து பழங்குடியினரின் கருத்துப்படி, வசந்தகால மரபார்ந்த கிருகைகள் இந்த உலகம் முட்டையிலிருந்து உருவானதாக ஒருவகையில் உலகம் முழுவதும் நம்பப்பட்டது. முட்டை வடிவமான இந்த பூமியில் வசந்தகாலம் இம் முட்டையின் உயிர்ப்பாக பெரும்பகுதியான மக்கள் கூட்டத்தினர் நம்பினர். இவ் ஆரம்பகாலத்தில் இவ் வசந்தகாலத்தை பிரதிபலிக்கும் முகமாக முட்டைகள் வர்ணம் தீட்டப்பட்டு, ஒருவருக்கொருவர் பரிசளிக்கும் வழக்கமாக வளர்ந்த பூமியின் நிலைக்கோட்டுக்கு எதிராக சூரியன் அண்மித்துவரும் வசந்தகாலத்தில் பண்டைய பேஸியர் முட்டைகளை பரிசளிக்கும் இந் நம்பிக்கை கலாச்சார வடிவமாக பின்னர் பாஸ்காவுடன் இணைக்கப்பட்டது. கிறிஸ்தவம் பரப்பப்பட்ட காலத்தில், பெரிய வெள்ளி தனியாகக் கொண்டாடப்பட்ட காலத்தில் - பெரிய வெள்ளியன்று இடப்படும் முட்டையை 100 வருடங்கள் வரை பாதுகாத்து வைத்திருப்பின், அதன் மஞ்சட் கரு வைரமாக மாறும் என்ற நம்பிக்கை இவர்களால் மதம் சார்ந்து மக்களிடம் பரப்பப்பட்டது. பெரிய வெள்ளியில் இடப்படும் முட்டையை, உயிர்த்த ஞாயிறன்று சாப்பிட்டால் சடுதியான மரணங்கள் நிகழாது பாதுகாக்கப்படுவதோடு, விவசாய பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் வளமாகச் செழிக்கும் என்றும் பரப்பப்பட்டது.

பண்டைய பேஸியர் முதற் கொண்டு எகிப்து, கிரீஸ், ரோம் நாடுகளில் முட்டைகளுக்கு நிறமூட்டுதல் ஊடாக வசந்தகாலத்தை நினைவூட்டுதல் வழக்கத்தில் இருந்து வந்தது. 15ம் நூற்றாண்டளவில் மேற்கு ஐரோப்பிய மிசனரிகளால் இவை பரப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பாவில் புதுவருட மரங்களான வைகாசி வசந்த மரங்களிலும், சென்.ஜொன்ஸ் மரங்களிலும் நட்ட நடுக் கோடை காலத்திலும் முட்டைகள் வண்ணமிடப்பட்டு இதில் தொங்கவிடப்பட்டன.

இவ்வாறு வண்ணமிடப்படும் இம் முட்டைகள் வசந்தகால வரவை நினைவு கூருவதிலிருந்து விலக்கப்பட்டு, மதசார்பான வடிவங்களைப் பெறத்தொடங்கின. கிறிஸ்துவின் மரணப்பாடுகளை உணர்த்தும் முகமாக பெரிய வெள்ளியில் சிவப்பு நிற முட்டைகளும், பெரிய வியாழனில் இராப்போசனத்தை நினைவுபடுத்தும் முகமாக பச்சை நிறத்திலும் வண்ணம் தீட்டப்படது. பின்னர் இவை அதிகார வர்க்கத்தால் விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டது. முட்டை மட்டுமன்றி வசந்தகால பண்டைய தெய்வங்களுடன் தொடர்பிலிருந்த முயலும் கூட சின்னமாக இருந்தது. முயல்கள் அதிக இனப்பெருக்கத்தை உடையதாலும், நிலாத் தெய்வங்களில் நம்பிக்கை கொண்ட மரபினர், முயல் இமைப்பதற்குக் கூட கண்களை மூடுவதில்லை என்றும், பிறக்கும் போதும் கண்களைத் திறந்தபடியே தமது நிலவுத் தெய்வத்தைப் பார்ப்பதற்காகப் பிறப்பதாகவும் நம்பினர். பின்னர் இவையும் பாஸ்காவுடன் கலந்தது. இதைவிட வசந்தகால மலரான 'லில்லி' மலர்களும் இப்பாஸ்காவுடன் இணைக்கப்பட்டன. இருப்பினும் விற்பனையில் பாஸ்கா முட்டையே சந்தையில் பெரும் மூலதனத்தை ஈட்டிக் கொடுத்தது.
ரசியப் புரட்சிக்கு முன்னர் சென்.பெத்தர்பேர்கின் 'காரால் தொழிற்சாலை'யில் 600 நிரந்தர வேலையாட்களைக் கொண்டு பாஸ்கா முட்டை தயாரிக்கப்பட்டது. 1872ல் 140 விதங்களான வண்ணங்களில் இம்முட்டை தயாரிக்கப்பட்டது. இங்கே ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மிக விலையுயர்ந்த முட்டைகள் தயாரிக்கப்பட்டன. தங்கம், வைரம், இரத்தினம், பவளம், முத்து,....போன்ற நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட 6-36 சென்ரி மீற்றர் உயரம் கொண்ட ஒரு முட்டை தயாரிப்பதற்கு ஒரு வருடங்கள் கூட முடிந்திருக்கிறது. 1913ம் வருடம் 3,000 சிறிய வைரக்கற்களைக் கொண்ட முட்டை தயாரிக்கப்பட்டது. இது அந்தத் தொழிற்சாலையில் வேலைசெய்யும் ஒரு தொழிலாளியின் வருட வருமானத்தை போல் 125 மடங்கு பெறுமதியானது. இது இன்று 97,500 மில்லியாடர் இலங்கை ரூபாவுக்குச் சமமாகும்.

மதங்களின் பொதுச் சங்கத்தின் காலத்திலிருந்து 16 நூற்றாண்டுக்கு முன்னர், எகிப்திலிருந்த யூதர்கள் பெரிய விடுதலையை அனுபவித்ததை நினைவூட்டுகின்ற ஒரு பண்டிகையாக இப் பாஸ்கா நாள் இருந்ததாம். அந்தச் சமயத்தில் தலை ஈற்றான வெள்ளாட்டுக் குட்டியொன்றை இதற்குப் பலியாகச் செலுத்தினார்களாம்.

10,000 வருடங்களுக்கு முன்பிருந்தே, மனிதன் நல்ல நிலம் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்ட போது அவர்களது வீட்டுப்பிராணியாகவும், நல்ல நண்பனாகவும் வெள்ளாடு இருந்து வந்திருக்கின்றது. வெள்ளாடு இனத்தைப்பற்றிய பரிசோதனை முடிபுகளில் இருந்து, மூன்று விதமான வௌ;வெறு இனம் கொண்ட ஏழு மில்லியன் வெள்ளாடுகள் மனிதர்களின் உற்ற நண்பனாக, அவர்களுடன் இணைந்து நீண்ட காலங்கள் வாழ்ந்து வந்ததாக விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. வெள்ளாட்டை இவர்கள் பலியிடும் போதோ, அல்லது உணவுக்காக வெட்டும் போதோ அதன் இதயம் மனித இதயத்தோடு ஒத்திருந்தது. மற்றும் இனவிருத்தியிலும் ஒத்திசைவைக் கண்டனர்.வெள்ளாட்டைப் பலி கொடுப்பது என்பது தமது உற்ற நண்பனை, தமது உறவுகளில் ஒன்றைப் பலி கொடுப்பதாகவே அவர்கள் அன்று கருதியிருக்க வேண்டும்.

யூத முதற்பேறானவற்றின் இரட்சிப்பில் விளைவடைந்தது: அதற்கு மாறாக, எகிப்தின் முதற்பேறு அனைத்தையும் யெகோவாவின் தூதர் கொன்று போட்டார்.

(யாத்திராகமம் 12:21 24:27)

இக்கருத்தின் வழித் தோன்றலே பிற்காலத்தில் கடவுளின் தலைப்பேறான இயேசு பலி கொடுக்கப்பட்டு, உலகம் இரட்சிக்கப்பட்டதாக பைபிளை எழுதத் தூண்டுகோலாக அமைந்தது.

சிலுவை மரணம், அன்று அதி உயர் தண்டனையாக இருந்தது. யூதர்கள் கல்லால் அடித்துக் கொல்வதையே நீண்டகாலமாக வழக்கத்தில் கொண்டிருந்தனர். விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதற்காக ஒரு பெண்ணை கல்லாலடித்து கொல்ல முற்பட்டபோது, உங்களில் பாவஞ் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லெறியட்டும் என்று இயேசு சொன்னதாக 'பைபிள்' சொல்கிறது. அப்படியானால் இயேசுவின் காலத்தில் கல்லால் அடித்துக் கொல்வது வழக்கத்தில் இருந்தது தெரியவருகிறது. உரோமரின் ஆட்சியதிகாரத்துக்குள் உட்பட்ட பிரதேசத்தில் சிலுவை மரணங்கள் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இவ் யூதப்பிரதேசங்கள் கி.மு 63 இலேயே இவ்வதிகாரத்தைப் பெற்றிருந்தது. ஆயினும் இப்பிரதேசங்களில் சிலுவை மரணங்கள் நிகழ்த்தப்பட வேண்டுமென்றால் எல்லா மதக்குழுத் தலைவர்களினாலும் ஒருமித்த தீர்ப்பாகவே அவை இருக்கவேண்டும், அவ்வாறு ஒருவருக்கு வழங்கங்கப்படும் தண்டனையாகவே இவ்விடங்களில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஒருமித்த கருத்தில்லாத எந்தவொரு வழக்குக்கும் சிலுவை மரணத்தை தண்டனையாக வழங்குவதற்கு இவர்களுக்கு உரிமை கிடையாது. அவ்வாறானால் ஏன் இயேசுவை யூதர்கள் கல்லாலடித்துக் கொல்லவில்லை?

ரோமப் பிரதிநியான பிலாத்துவுடன் அன்றைய மதத்தலைவர்கள் இணைந்து இத்தண்டனையை வழங்கியதாக 'பைபிள்' கூறுகிறது. இதுமட்டும் இல்லாமல் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லுங்கள் என மக்கள்கூட்டத்தினரின் ஒரு பகுதியினர் கூவியதாகவும் கூறுகின்றது. ஆனால் இக்காலத்தில் ரோமரின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்கள் அமைதியாகக் காணப்பட்டபோதிலும் கலிலேயாவும், யூதேயாவும் அமைதி குலைந்த நிலையிலேயே இருந்தது. ஏனைய பிரதேசங்கள் ரோமரின் நேரடி அதிகாரத்தின் கீழ் இருந்தபோதும், யூதேயாவும், கலிலேயாவும் பல மதக் கூட்டுத்தலைமை அதிகாரத்தின் கீழிருந்தது. இவ் அமைதி குலைந்த பிரதேசத்தில் 'செலோத்தேனா' ஆயுதக்கிளர்ச்சி இயக்கத்தினரின் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகக் காணப்பட்டது என்பது இங்கு முக்கியமாகிறது. அதுமட்டுமல்லாது கிளர்ச்சி இயக்கத்தினரான செலோத்தினருக்கும் இயேசுவின் கருத்துகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்ததாக தெரிகிறது.

இது மட்டுமல்லாமல் அன்று பாஸ்கா ஜெருசலேமில் மிக விமர்சிகையாகக் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாகும். ஜெருசலேம் 20,000 குடிமக்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். ஆனால் இக் கொண்டாட்டத்தின் போது, சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை இக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், மற்றும் ஜெருசலேமைச் சூழவுள்ள குக்கிராமத்து மக்கள் அனைவரும் இங்கு கூடுவர். இயேசு பிறப்பதற்கு முன்பே அலெஸ்சாண்டிரியா போன்ற பிற நகரங்களில் நூற்றாண்டுகாலமாக இடம்பெயர்ந்து வாழும் யூதர்கள் அனைவரும் இங்கு வந்து கூடுவது வழக்கம். இந்த வருகையானது தாய்நாட்டு வருகைக்கான முக்கியத்துவமும், தமது கலாச்சார மற்றும் புனித மதக்கோவில் திருவிழாவாகவும், இது அவர்களின் ஒரு கடன் திருநாளாகவும் மிகவும் முக்கியம் பெற்றிருந்தது. அத்தோடு குக் கிராமவாசிகளுக்கும் இது ஒரு புதிய உலகமாக இருந்தது. யூதேயா, கலிலேயா பெற்ற உறவுகள் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் ஒரு பிணைப்பான தொடர்பாக இப் பாஸ்கா இருந்தது. இவர்கள் கோவில் வளவில் அல்லது அடிமைகளுக்கான சிலுவைத் தண்டனை கொடுக்கும் வெளியில் கூடுவர். இவ்வாறான ஒரு சம்பிரதாய நாளில் தமது மதத்தைச் சேர்ந்த பெறுமதியான ஒருவரை, தமது மீட்பரை, ஒரு குறைந்தளவு மக்கள் தீர்ப்பின் அடிப்படையில், எல்லா மதத் தலைவர்களின் கூட்டுச் சம்மதத்தில் இப் பெருந்தொகையான மக்கள் சன்னிதானத்தை மீறி இயேசுவை சுலபமாகச் சிலுவையில் அறைந்திருக்க முடியுமா?

அன்று சிலுவை மரணம் ஒரு நாளிகை என கணக்கிடப்பட்டது. ஒருவர் சிலுவையில் அறையப்பட்டு ஒருநாள் தொங்கவிடப்படுவார். மறுநாள் அவர் அகற்றப்படும் போது இறக்கவில்லையானால், அவரது கால்கள் முறிக்கப்பட்டு சாகடிக்கப்படுவர். இதுவே உரோம இராணுவத்தின் வழமையாக இருந்தது. இத்தண்டனை இரண்டு விதமாக வழங்கப்பட்டது. ஒன்று சிலுவையில் ஆணிகொண்டு அறைவது, மற்றது சிலுவையில் கயிற்றால் கட்டுவது. மரணத்துக்கு உரியவரை சிலுவையில் தொங்கவிடும் நிலையே இங்கு முக்கியமாகக் கணிக்கப்பட்டது. 'பைபிளின்' கருத்துப்படி இயேசுவோடு அன்று வேறு இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. யேசு சிலுவையில் அறையப்பட்ட பின் அவர் தண்ணீர் கேட்டதாகவும் ஏரிக் என்பவன் காடியை கடற் காளானில் தோய்த்து அவருக்கு பருகக்கொடுத்தபின்னர், அவர் உயிர் துறந்தார் என்றும் இருக்கிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த 'காடி' என்ன திரவத்தினால் ஆனது என்பது இங்கு தெளிவுபடுத்தப் படவில்லை. ஒரு வேளை மயக்கமருந்துக் கலவையாகக் கூட அது இருந்திருக்கலாம். இக்காலத்தில் மருத்துவத்தில் மயக்க மருந்துக்கு அபின் கலந்த பழச்சாறே பயன்படுத்தப்பட்டதாக அறிவியல் கூறுகிறது. அபின் எனப்படும் ஒருவகை 'பொப்பி' மரம் அப்பொழுது தாராளமாக கலிலேயாவிலும், யூதேயாவில் இருந்தது. இருப்பினும் இயேசுவுக்கு இவ்வகையான போதைப்பொருள்தான் கொடுக்கப்பட்டதா என்பது தெரியாதபோதும், அவர் ஏதோ குடித்தார் என்பது தெளிவாகிறது.

இயேசுவைச் சிலுவையில் அறைந்த இராணுவ வீரர்கள், அவரின் உடையைச் சீட்டுப்போட்டுப் பங்கிட்டதாகவும், அவரை சிலுவையில் அறைந்து விட்டு , இவர் மீட்பரானால் இவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று இறுமாப்புடன் சொன்ன இவ் வீரர்கள் அவரின் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்தனர் என்பது உப்புப் சப்பற்ற ஒரு வாதமாகும். இது ஒரு புறமிருக்க, இவர்கள் (பைபிள்) இயேசுவை சிலுவையில் அறைவதற்கான காரணமாக சுட்டிக்காட்டும் குற்றம் அதைவிட இன்னும் வேடிக்கையானது. ''இயேசு யூதரின் அரசன்!, இவன் தன்னையே இறைமகன் என உரிமை கொண்டாடுகிறான். ஜெருசலேம் கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டுவானாம்'' இவைகளே பைபிள் காட்டும் இயேசுவின் தண்டனைக்கான குற்றம். இங்கே விசித்திரம் என்னவென்றால் இக்காலத்தில் அனைத்து யூதத்தலைவர்களும் ரோமர்களுடன் அன்னியோன்னியமாக இணைந்து கடமையாற்றினர். மதத் தலைவர்களின் ஆட்சிக்காலம் ஆகக் கூடியது ஒரு வருடமாகவே இருந்தது. வருடத்துக்கு வருடம் புதிப்பிப்பதே உரோமப்பேரரசின் இராஜதந்திரமாக இருந்தது. இந்த இலட்சணத்தில் யூதனின் அரசன் என்று சொல்லுவது எப்படிக் குற்றமாகும்? ரோமர்கள் யூதசட்டத்தை மதித்தனர். பாஸ்கா கடன் திருநாளில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் உடல்களை அகற்றுவதை அலட்சியம் செய்திருக்கவில்லை. சம்மதித்தார்கள். யோவான் 18ம் அதிகாரம் 28ம் வசனத்தைப் பாருங்கள். ''அதன் பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு (பிலாத்துவிடம் - பிலாத்து யூதனல்ல) இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணும்முன் தீட்டுப்படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை'' அவர்கள் பாஸ்காவை எப்படி மதித்தனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. என்ன கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டுவேன் என்றது ஒரு குற்றமாம். ஜெருசலேம் கோவில் உண்மையில் இடிந்தபோது, இந்த யூதச்சட்டம் யாருக்கு மரணதண்டனையை வழங்கியது?
(ஜெருசலேம் கோவில் எரிக்கப்பட்டதற்காக இயேசுவின் குழுவினர் எனக்கூறப்பட்ட ஒருவரே பழிவாங்கப்பட்டார். இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் காலத்தின் பின், கிட்டத்தட்ட 40 வருடங்களின் பின்னர் இவர் பழிவாங்கப்பட்டார். இவர் எருசலேம் மக்களால் நகருக்கு வெளியே துரத்தி விரட்டப்பட்டு, இம்மக்களாலேயே யூதச்சட்டப்படி கல்லாலடித்துக் கொல்லப்பட்டார். இவரின் மரணச்சடங்கில் கலந்துகொண்ட இயேசு குழுவினர் ரோம் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டனர். இது பற்றி மேலும் விபரமாக வேறு அத்தியாயத்தில் ஆராய்வோம்.)

அப்போஸ்தலர் பவுலின் கருத்துப்படி, இயேசுவை சிலுவையில் இருந்து அகற்றிய இராணுவக்குழுவுக்கு தலைமைதாங்கியது லொகின் (Longin) என்று கூறியுள்ளார். அப்படியெனின் இயேசு இறந்ததற்கான அத்தாட்சி வழங்கியவர் இவரே. இயேசுவை சிலுவையில் இருந்து அகற்றும் போது, இவரோடு அறையப்பட்ட ஏனைய இருவரும் உயிருடனேயே இருந்தனர். அவர்களின் கால்கள் முறிக்கப்பட்டு, சாகடிக்கப்பட்டனர். இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தி, இறந்துவிட்டதாக, அரிமத்தியா வாசியான ஜோசேப்பிடமும், நிக்கோதேமு என்பவனிடமும் அவரின் சடலத்தை கையளித்ததாகக் கூறப்படுகிறது. இயேசுவை விலாவில் குத்தும் போது இரத்தம் ஓடியதாகக் கூறப்பட்டது. இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டபின் இருக்கும் சில காட்சிப்படங்களில் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலிருந்து மாறுபட்ட நிலையில் இருப்பதையும் காணலாம். இறந்தபின் ஒருவரின் உடலில் இரத்தம் பாய்வதும், இறந்த நிலையிலிருந்து மாறுபடுவதும் நடைமுறைக்கு ஒவ்வாத விடயங்கள். இங்கே இயேசு இறந்ததாக அத்தாட்சி வழங்கிய இராணுவ அதிகாரி லொகின், பின்னாளில் ஒரு கிறிஸ்துவ மேற்றாணியாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோவான் அதிகாரம் 18, 38-39ம் வசனங்களின் படி, அரிமத்தியா வாசியான ஜோசேப் இயேசுவின் அந்தரங்க சீடர்களில் ஒருவன் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இயேசுவுக்கு 12 சீடர்கள் என்பது பொய்யாகிறது. அப்படியாயின் இயேசுக்கு இன்னொரு அந்தரங்க வரலாறும் இருக்கவேண்டும், அது என்ன? இந்த நிக்கோதேமு என்பவன் இயேசு பிடிபடுவதற்க முன்னர் ஒரு இரவு வேளையில் 100 இறாத்தல் நிறையுள்ள வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்த சுகந்தத்தை இயேசுவிடம் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. இச்சுகந்தத்தை கலந்த துணியால் சுற்றியே, இவ்விருவரும் இயேசுவை அடக்கம் பண்ணியதாக பைபிள் கூறுகிறது. இத்துணியே இன்று கத்தோலிக்க திருச்சபையால், இயேசுவின் திருவுடல் அடையாளத்துணியாக மக்கள் காட்சிக்கு வைத்துள்ளது. இவ் அத்தசி நூல் ஆடையை திரளான மக்கள் புனிதப் பொருளாக இன்று தரிசித்து வருகின்றனர்.

இது ஒருவகை சணல் நூலால் நெய்யப்பட்ட ஆடை, அல்லது அத்தசி நூலால் நெய்யப்பட்ட ஆடை என்று சொல்லலாம். இவ் ஆடையானது இயேசுவை அடக்கம் செய்த கல்லறையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்து இறக்கப்பட்டதன் பின்னர், அவரது உடலைச் சுற்றி அடக்கம் பண்ணிய துணியாக இது கருதப்படுகிறது. இத்துணி 1990ல் இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்;படுத்தப்பட்டது.
இந்த அத்தசி நூல் ஆடை கிட்டத்தட்ட 100 இறாத்தல் நிறையுள்ள (33.3 கில்லோக் கிராம்) ஒரு வகை தாழை இனத்தைச் சோந்த கரியபோளத்தாலும், வெள்ளைப்போளத்தாலும் கலவை செய்யப்பட்டிருந்தது. ஜெருசலேம் பல்கலைக்கழக மாணவர்களான இஸ்ரேல், அல்மேனியரின் கருத்துப்படி இத்துணியானது முதல் 100 வருடங்கள் எடேஸ்சால்வில் (இன்றைய துருக்கியா) கொண்டு சென்று வைத்ததாகக் கருதுகின்றனர். எடேஸ்சா முதல் 100 ஆண்டுகள் ரோமப் பேரரசின் கீழ் இருந்திருப்பினும், இங்கு உத்தியோகபூர்வ மதமாக கிறிஸ்தவம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது யூத யுத்தத்தின் போது, யூதர்கள் இங்கே புலம் பெயர்ந்து வாழ்ந்தார்கள். இவர்கள் இங்கிருந்து வருடத்துக்கு ஒருமுறை ஜெருசலேம் கோவிலுக்கு வந்து போனார்கள். சத்தியம் தவறாத இந்த நினைவு நாளில், உலகில் இருந்து அனைத்து யூதர்களும் இந்தப் பெரிய நாளில் Yom Kippur ல் ஒன்று கூடுவர். இது அவர்களின் ஒரு வெளியேற்ற நாளாகவும், தண்டனைக்குரிய நாளாகவும், நோன்புக்குரிய நாளாகவும் கருதப்பட்டது.

யூத அகதிகள் தாம் வெளியேறிய போது, இத்துணியைத் தம்முடன் எடுத்துக் கொண்டு இன்றைய துருக்கியாவான எடேஸ்சாவுக்குச் சென்றனர். பின்னர் இத்துணி 1944 ல் கொன்சன்ரைன் ஒப்பிளில் வைக்கப்பட்டு, பயத்தின் காரணமாக இது பிரான்சுக்குக் கொண்டு செல்லப்பட்டது. 1350 களிலே இத்துணி பற்றி உத்தியோகபூர்வமாக விபரிக்கப்பட்டது. நூறு வருடங்களின் பின்னர் இத்தாலிய Savoy மன்னர் குடும்பத்தினருக்கு பரிசில் பொருளாக இது வழங்கப்பட்டது. இவர்கள் தொடர்ந்தும் பிரான்சில் வசித்து வந்ததால், 1532 ல் சம்பெரி நகரம் எரிந்தபோது இதன் சில பகுதிகள் பழுதுக்குள்ளானது. பின்னர் முதன் முதலாக 1578 ல் இத்தாலிக்கு (Torino)-ரொர்ரினோவுக்கு - மாற்றப்பட்டது. கடைசியாக 1983 ல் கத்தோலிக்க பாப்பாண்டவருக்கு இத்தாலிய மன்னனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இம்மன்னன் இரண்டாம் உலகயுத்தத்தின் போது போத்துக்கல்லில் வாழ்ந்து வந்தார்.
1990 ல் கத்தோலிக்கக் கோவிலின் இரண்டாயிரமாம் ஆண்டு நினைவுக் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இத்துணி 1.1 மீற்றர் அகலமும் 4.36 மீற்றர் நீளம் கொண்டதாகவும் காணப்பட்டது. ஒரு மனித உடலின் முன் பின் பாகங்கள் இதில் பதிந்து காணப்படுகிறது. இந்த மனிதனின் உருவம் 1.81மீற்றர் உயரங் கொண்டதாகவும், தாடியும் நீண்ட தலைமுடியும் கொண்ட கோலமாகக் காட்சி தந்தது. இந்த மனிதனின் முகம் வலதுபுறம் சாய்வாகவும் காட்சி தருகிறது.
இயேசுவின் திருமுகம் கிறிஸ்தவ காலத்தில் பலவிதமாக வரையப்பட்டது. இதன் பெரும் பகுதி ரோமப்பேரரசின் கிழக்குப்பகுதியிலிருந்து தொகையாக வெளியிடப்பட்டது. துணியில் காணப்படும் முகம், தலைமுடி சிறு சுருளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. 500களில் இயேசுவின் முக அச்சினைக் கொண்ட முத்திரைச் சின்னங்கள் பல காணப்பட்டன. சில வெள்ளி நாணய அச்சினை கூட இன்றைய துருக்கியாவில் அப்போது கண்டெடுக்கப்பட்டது. இவைகளை வைத்து இப்பொழுது பரிசிலுள்ள Louvre இயேசுவின் இராப்போசனப்படம் வரையப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது. இது சின்னையில் (Sinai) யில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். 600ம் ஆண்டுக்குரியது. இப்படத்தை, இத்துணியிலுள்ள முகத்துடன் ஒப்பிட முடியாத, நம்பகத் தன்மையற்றதாக இருப்பதாக கணிக்கப்படுகிறது. துணியில் இருக்கும் மனிதனின் முகம் ஒரு வாலிப இளைஞனுக்குரியதாக இருப்பதாகவும், ஆனால் படத்தில் தலைமயிரில் சுருள் அற்றதாகவும் இருப்பதாக ஒப்பீட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பாவுக்கு இத்துணி கொண்டுவரப்பட்டதும், இயேசுவின் முகம் இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. 1209 ல் இயேசு சிலுவையில் அறையப்பட்ட படம் வரையப்பட்டது. இது ஸ்டுடேனிக்காவில் இருந்து வெளிவந்தது. இதில் இயேசுவின் தலைமயிரின் சிறு சுருள், நீட்டு மூக்கும் வரையப்பட்டிருந்தது. 1100 ஆண்டுக்குரிய மற்றைய ஒரு படமான ஊயகயடல படமும் நம்பகத்தன்மை அற்றதாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இத்துணியின் இயல்பைப் பொறுத்தவரை இத்துணி மிகமிகத் தரம் வாய்ந்ததாகவும், மன்னர் பரம்பரையினர் பாவிக்கும் மிக விலையுயர்ந்த பொருளாகவும் இருக்கிறது. இத்துணியின் ஆயுட்காலம் 5000 வருடங்களையும் தாண்டக்கூடியதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது எகிப்தின் அகழ்வுகளில் இருந்து தெரிய வருகிறது. இத்துணி மருத்துவரீதியாக கரியபோளம், வெள்ளைப்போளம் கலக்கப்பட்ட துணியாகவும், மூச்செடுக்கக் கூடிய விதத்திலும், கடுங்காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இருந்ததாகவும் நோக்கப்படுகிறது. இத்துணி பற்றி மத்தேயு, மார்க்கு, லூக்காஸ் போன்றோர் குறிப்பிடும் போது, இதற்கு கிரேக்க சொல்லான Sidon என்ற சொல்லை பாவித்துள்ளனர். ஆனால் யோவான் othonium என்ற சொல்லைப் பாவித்துள்ளார். Sidon என்ற சொல்லை லத்தினுக்கு மொழி பெயர்க்கும் போது மூடும் துணி எனப் பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால் பழைய விவிலியமான எரேபிய மொழியிலுள்ள Sidon என்ற சொல்லுக்கு சாதாரண துணியான 'போர்வை' என்ற அர்த்தமே உள்ளதாக மொழி வல்லுனாகள் கூறுகின்றனர். போர்வை என்ற அர்த்தமானது உயிருள்ள மனிதர்களின் பாவனைக்குரிய சொல்லாகவே எழுதப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். லாசரு பற்றிய எழுத்துக்களில் லாசரசுக்குப் பாவிக்கப்பட்ட துணியை குறிக்கும் போது keiriaj என்ற சொல்லே பாவிக்கப்பட்டடுள்ளது. இது இறந்தவர்களுக்குப் பாவிக்கப்படும் துணியாகவே அர்த்தம் கொள்கிறது. யோவான் அதிகாரம் 20 ல் பயன்படுத்தும் othonia என்ற சொல்லுக்கு 'உடுப்பு' என்றே பொருள் படும் என்று இவர்கள் கூறுகின்றனர். இது லத்தினில் Sidon என்ற சொல்லாக பேசவும், மொழிபெயர்க்கவும் பட்டிருக்கிறது. இது இறந்தவர்களின் மீது போடும் மிக அழகான துணியாகப் பொருள்படும். ஆயினும் இலத்தீனில் குறிப்பிட்ட காலம் வரை இச்சொல் வழக்கத்தில் இருக்கவில்லை என்றே மொழி ஆய்வாளர்கள் மறுத்து வருகின்றனர்.

புதிய ஏற்பாட்டில் யோவான் 11ம் அதிகாரத்தில் கூறப்படுவதைக் கவனித்தால்...... பெத்தானிய கிராமத்தவரான லாசரு வியாதியால் இறந்திருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு, இறக்கும் தருவாயில் இருந்தபோது, அவரின் சகோதரிகளான பெத்தானியா மரியாளும், மார்தாளும் இச்செய்தியை இயேசுவிடம் ஆளனுப்பித் தெரிவித்தனர். இயேசு இதைக் கேள்விப்பட்டு இரு தினங்களின் பின்னர் ,யூதேயாவுக்குச் செல்வோமென தம் சீடர்களிடம் சொன்னபோது: ''ரபி, இப்போதுதான் யூதர்கள் உம்மைக் கல்லால் எறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா?'' என்றார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்ததாக் கூறப்படம் காலத்துக்கு மிகச்சமீபமாகவே இது கூறப்பட்டுள்ளது. அவ்வாறானால் ஏன் இயேசுவை சுலபமாகக் கல்லாலடித்துக் கொல்லவில்லை. பிலாத்துவிடம் இயேசுவைக் கொண்டு சென்றபோது கூட பிலாத்து, ''நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்கு தீர்ப்பு வழங்குங்கள்'' என்ற வார்த்தை மட்மே போதுமானது, இயேசுவை கல்லாலடித்துக் கொல்வதற்கு.
இதே அதிகாரம் 43ம் 44ம் வசனங்களின் படி, லாசருசே வெளியே வா! இயேசு உரத்துச் சத்தமிட்டார். அப்போது மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது. அவன் முகம் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. லாசரு யூதமுறைப்படியே அடக்கம் பண்ணப்படிருந்தார். இவ்வாறான யூதமுறைப்படியே இயேசுவும் அடக்கம் பண்ணப்பட்டதாக இதே யோவான் 19 ம் அதிகாரம், 40 வசனம் உறுதிப்படுத்துகின்றது. ஆனால் லாசருடைய அடக்கத்தில் 'பிரேதச்சீலை' எனவும், இயேசுவின் அடக்கத்தில் பிரேதச்சீலை என்ற சொல்லை இவர்கள் பாவிக்கவில்லை. வெறும் துணி என்ற அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது.
யோவான் 12ம் அதிகாரத்தில்,பாஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன், பெத்தானியாவிலுள்ள லாசருசின் வீட்டில் இயேசு இராப்போசனம் ஒன்றில் கலந்து கொள்கிறார் (கடைசி இராப்போசனம் அல்ல) அப்போது லாசரசின் சகோதரியான மரியாள், விலையேறப்பெற்ற கலங்கமில்லாத நளதம் என்னும் பரிமளதைலம் ஒரு இறாத்தலை இயேசுவின் பாதங்களில் பூசி,தனது கூந்தலால் துடைத்தாள். இதைப் பார்த்த யூதாஸ் கரியோத் (இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன்) இத்தைலத்தை 300 வெள்ளிக்கு விற்கலாம், இக்காசைத் தரித்திரியருக்குக் கொடுக்கலாம் என விசனப்படுகிறார். அதற்கு இயேசு இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள் என்று கூறுகிறார். இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக யூதாசுக்குக் கிடைத்த பணமோ வெறும் 30 வெள்ளிக் காசுகள். யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக் காசில், அவன் ஒரு நிலத்தை வாங்கியதாகவும், அவ் நிலம் பின்னர் 'இரத்த நிலமாக' அழைக்கப்பட்டதாகவும் பைபிள் சொல்கிறது. இயேசுவின் காலத்தில் ஒர் அடிமையின் விலை வெறும் 30 வெள்ளிக் காசுதான். அக்காலத்தில் ஒர் அடிமையின் விலைக்கு ஒரு நிலத்தை வாங்கக்கூடிய நிலைமை இருந்தது என்று சொல்லுவது வெறும் கற்பனைவாதமே! லாசரசின் சகோதரி இயேசுவின் கால்களில் பூசிய தைலத்தின் பெறுமதியோ இதைவிடப் பத்துமடங்கானது. யூதாசின் நிலத்தைப் போல் பத்துமடங்கு நிலம் வாங்கும் பெறுமதியை இயேசுவின் கால்களில் பூசுவதாக பைபிள் கூறினால், இயேசுவின் நண்பர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்! என்று நீங்கள் உணரலாம்.

இயேசு அறையப்பட்டு, ஞாயிறு அதிகாலை மரியாள் கல்லறைக்கு வருகிறாள். அதிகாலை இருட்டாக இருந்தும் மரியாள் கல்லறையைச் சுலபமாகக் கண்டுபிடிக்கிறாள். கல்லறை திறந்திருப்பதையும், இயேசுவின் உடலை அங்கு காணாமலும் பேதுருவிடத்திலும், யோவானிடத்திலும் இதை ஓடிவந்து சொல்லுகிறாள். இவர்களும் ஓடிப்போய்ப் பார்க்கிறார்கள். இறுதியாக வந்த பேதுருவானவர் கல்லறைக்குள் நுழைந்துபோய் பார்க்கிறார். இங்கு இயேசுவின் தலைக்கு மூடியதுணி தனியே பிறம்பாக சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார். உடலைப் போர்த்த துணி இன்னொரு பக்கமாகப் பிறம்பாக இருக்கிறது என்று சொல்கின்றனர். பிரேதச்சீலை என்று சொல்லவில்லை. ஆனால் மரியாள் இவர்களிடம் வந்து சொன்னபோது,''இயேசுவைக் கல்லறையில் காணவில்லை அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சொன்னதாக சிறுபிள்ளைத்தனமாக எழுதியுள்ளனர். மரியாளுக்கு இயேசுவை அரிமத்தியா ஜேசேப்பும் மற்றவரும் அடக்கம் பண்ணியது அவர்களுக்கு நன்கு தெரிந்ததே. அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமே என்று ஒரு வார்த்தை கூட இவர்கள் கூறவில்லை. பேதுருவும், யோவானும் அவர்களை விசாரிக்காமலே இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என வெளிப்படுத்திய சுவிசேசமென எழுதுகிறார்கள்.
அத்தசிச் துணியில் இருக்கும் படத்தின் கழுத்துப் பகுதி சலவை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. யூதர்களின் சவ அடக்க முறைப்படி, தண்டிக்கப்பட்டவர்களின் பிணம் கழுவப்படுவதில்லை. இதனால் இவர்கள் இயேசுவின் அடக்க முறை பற்றி இக்காரணத்தையே விளக்கமாகக் கூறுகின்றனர். வழக்கத்தில் பிணத்துக்கு மூடப்படும் துணியானது, இரண்டு நாட்களின் பின்னரே கல்லறையில் இருந்து அகற்றப்படும். ஆனால் ஞாயிறு காலையே யேசுவின் உடலைக் காணவில்லை. மரியாள் வந்து பார்த்தபோது, தலையில் சுற்றிய துணி பிறம்பாகவும் போர்வை பிறம்பாகவும் இருந்ததாகக் கூறுகிறார். அப்படியாயின் தலையைப் பிறிதொரு துணியால் சுற்றியிருப்பின் அத்துணி எங்கே? பிணத்துக்குச் சுற்றிய இயேசுவின் உருவம் பதிந்த அத்தசி துணியில் எவ்வாறு முகம், மற்றும் தலைமயிர்களின் தோற்றம் பதிந்துள்ளது?
இத்தாலியின் 50வது யூபிலியம் நடந்தபோது (1898), படப்பிடிப்பாளரும், வழக்கறிஞருமான Secondo Pia வுக்கு முதன்முதலாக படம்பிடிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படம் வெளியானதும், பலதரப்பட்ட அபிப்பிராயங்களும் வெளிவரத் துவங்கின. பலதரப்பினரும் இதுபற்றிய தத்தமது அபிப்பிராயங்களை வெளியிட்டனர். 1900ல் தனது கடைசி ஆறுமாதகால பரிசோதனை முடிபுகளை இயற்கை விஞ்ஞானம் வெளியிட்டது. அதன் முக்கிய கேள்வியாக அத்தசித் துணியில் இருக்கும் முகம் உண்மையானதா? அல்லது அது பின்னர் சேர்க்கப்பட்டதா? என்பதேயாகும். ஆனால் இத்துணி 2000 வருடங்களுக்கான பழைமை வாய்ந்தது என்ற கருத்தை இயற்கை விஞ்ஞானம் மறுத்தது. நம்பமுடியாது என்று கூறியது. பின்னர் முதல் தடவையாக இத்துணி, 1988ல் சி14 பரிசோதனையான -றேடியோ நுண்ணிழைக் காபன் 14 - பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, இது 1296 -98 இடைப்பட்ட காலத்துக்குரியது என முடிவு செய்யப்பட்டது. இம் முடிவு பைபிளையும் அது சார்ந்த இயேசுவின் முக சின்னங்கள், படங்கள், நாணயங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கின.

இத்துணியானது பருத்தியாலும், சணல் நூலினாலும் இணைத்து நெய்யப்பட்டது என்ற சந்தேகம் எழுந்தது. இதில் நெய்யப்பட்டுள்ள சணல் நூலானது, பருத்தி நுண் இழைகளுடன் இணைப்புக் கொண்டுள்ளதா என்ற பரிசோதனை முயற்சி மேற்கொள்ள முற்பட்டபோது, கத்தோலிக்க திருச்சபை இவ்விவகாரத்தை இடைநிறுத்தியது. மேற்படி தொடரவும், பரிசோதனைக்கு உட்படுத்தவும் மறுத்தது. மேற்படி தொடரப்படும் பரிசோதனைகள், இரசாயனப் படங்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.
கி.மு 100ம் ஆண்டு தொடக்கம், கி.பி 200ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் யூதேயா மற்றும் ஜெருசலேம் போன்ற பிரதேசங்களில் பங்கசு, பற்றிரியா போன்றவற்றை அடிமைகள் பயன்படுத்தி இருந்ததை இரண்டு அமெரிக்க மைக்கிரொ இரசாயன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கலிலேயா, யூதேயாவிலுள்ள பூஞ்செடிகளின் புந்தூள்-மகரந்தங்களையும், வசந்தகால மஞ்சள் பூவினத்தையும் கலந்து செய்யப்பட்ட சிலும்பலான ஒரு வகை காற்சட்டை ஜெருசலேமில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலும்பல்கள் 4 மில்லி மீற்றர் நீளமுள்ளதாகக் கண்டறியப்பட்டது. 1996ல் கண்டெடுக்கப்பட்ட நாணயம் மின்னிழைய நுண் பூதக்கண்ணாடியால் பரிசோதிக்கப்பட்டு, இது கி.பி 29ம் ஆண்டுச் சக்கரவத்தி Tiberi காலத்துக்குரியதென்றும் கண்டறியப்பட்டது. இக்காலத்தில் பிலாத்து யூதேயாவின் அரச ஆளுநராக இருந்தது குறிப்பிடத் தக்ககது.

அத்தசி துணியில் இருக்கும் இயேசுவின் முகமானது, வர்ணம் இடப்பட்டதாக இருக்கலாம் என முதன் முதலில் கருதப்பட்டது. பின்னர் இவை நவீன நுண்பரிசோதனைகள் மூலம் அழியாத ஒருவகை வர்ண நெசவுத்தன்மை, வர்ணப் பவுடர்கள் அல்லது ஊசி முனை கூரியமுள்ளால் குற்றுக்களால் ஆன வர்ணமுறையில் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உறுதியாக இது வர்ணம் கொண்டு தீட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
1532ல் இத்துணி தீவிபத்துக்கு உட்பட்டடிருந்ததை வைத்து இதை ஓர் வெப்ப உடையாகக் கணிக்கப்பட்டது. நீரை இதன் மீது தெளித்த போது, இது வேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. இதனால் இம் முகம் இதில் பதியப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்பட்டது. வர்ணக்கலையில் ஆவிமுறை (Burn mark) பதிதலை இதில் ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. துணியில் கரியபோளமும், வெள்ளைப்போளமும் பூசப்பட்ட துணியாக இது இருப்பதால் உயர்ந்த சுடுநிலையில் முகம் பதியப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இத்துணி 1983 வரை ஒரு தனிமனிதருக்குச் சொந்தமாக இருந்தது. இத்தாலிய மன்னரான Um berto 2 ஆல் இரண்டாவது உலக யுத்தத்தின் போது பாதுகாக்கப்பட்டு, பாப்பாண்டவருக்குக் கொடுக்கப்பட்டது. பாப்பாண்டவர் இதை இயற்கை விஞ்ஞான பரிசோதனைக்குப் பயன்படுத்த பலதடவைகள் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆய்வுகளின் முடிவுகள், இத்துணியிலிருக்கும் இரத்தத்துளிகளில் இருந்து இப்போர்வைக்குரியவர் இறக்காத -உயிருடனிருந்த ஒரு மனிதனுக்குரியது என்பதை திட்டவட்டமாக நிரூபித்துள்ளது.

இந்த அத்தசி துணி ஒன்று மட்டும் தான் உலகில் காணப்பட்ட ஒரேயோரு இயேசுவின் போர்வையாக இருந்திருக்கவில்லை. 1353ம் ஆண்டு இத்துணியின் சொந்தக்காரரும் பெரும் பணக்கார வயோதிபருமான Geoffroy de Charny இத்துணியே உண்மையான இயேசுவின் துணியென பிரகடனப்படுத்தியபோது, சுமார் 40க்கு மேற்பட்ட போர்வைகள் உலகில் காணப்பட்டன. எனினும் இதுவே உண்மையான போர்வை என இவர் கூறியபோதும், இது எவ்வாறு தன் கைகளுக்கு வந்தடைந்தது என்பதைக் கூறமறுத்துவிட்டார். இக்காலத்தில் சிறிய கண்ணாடியில் அடைக்கப்பட்ட இயேசுவின் தலைமயிர், இயேசுவுக்கு ஊட்டியதாக மரியாளின் தாய்ப்பால், இயேசுவின் சிலுவையில் இருந்த மாபிள் வாசகத் துண்டு உட்பட இன்னும் பல காட்சிப் பொருட்களாக தேவாலயங்களில் வைக்கப்பட்டன. இவைகளைப் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டு பணமாக்கப்பட்டு வந்தது. இந்நேரத்தில் Troyes விசப்பாக இருந்த Peter D'Arcis இது உண்மையான துணி அல்ல எனவும், இது வரையப்பட்டதென்றும், இவைகளை காட்சிப்படுத்த அனுமதிக்க வேண்டாமெனவும் பாப்பாண்டவரான Clemens க்கு எழுதியதால் இத்துணி தேவாலயத்தில் பார்வைக்கு வைப்பதற்கு விலக்கப்பட்டது.
1453ல் Geoffroy de Charny ன் பேத்தியான மாக்கிரட் இத்துணியை பல இடங்களுக்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்தினார். இவருக்கான தேவாலயம் இல்லாததால் இவர் இதை விற்பனை செய்யமுற்பட்டார். இவர் Savoy குடும்பத்தினருக்கு இதை விற்கமுற்பட்டபோதும், இது பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்டதாவே கூறப்பட்டது. ஆயினும் மாக்கிரட் பெரும் நிலத்தை இதற்கீடாகவும் பெற்றதாகக் கூறப்படுகிறது. மாக்கிரட் ஒரு தேவாலயத்தின் நிர்வாக அதிகாரத்தைப் பெற விருப்பம் கொண்டிருந்தபோதும், இத்துணியின் உரிமைப்பிரச்சனையில் குழப்பம் விழைவிக்காது 1460 ல் சமாதானமான மரணம் எய்தியதாகக் கூறப்படுகிறது.
இத்தாலியின் 50வது யூபிலியம் நடந்தபோது (1898), படப்பிடிப்பாளரும், வழக்கறிஞருமான Secondo Pia வுக்கு முதன்முதலாக படம்பிடிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படம் வெளியானதும், இதன் 'நெக்கட்டிவ்'வை 1930 இல் Pierre Barbet பரிசோதனைக்கு எடுத்தார். இவர் தனது 'ஸ்கனர்' முறையினூடாக நுணுக்கமாவும் விரிவாகவும் ஆராய முற்பட்டார். இத்துணியின் கைப்பகுதியை ஆராய்ந்த இவர் பெரும் தருக்கம் ஒன்றைக் கிளப்பினார். உள்ளங்கைகளில் ஆணி அடிக்கப்பட்டிருப்பதால் இச்சிலுவையில் தொங்கிய நபர் இளம் பிராயத்துக்குரிய 30 -33 வயதுக்குரிய வாலிபனாக இருக்கமுடியாது என வாதிட்டார். வாலிபரின் உடல்பாரத்தை உள்ளங்கை தாங்காது என வாதிட்டார். இவரின் வாதத்தை பல அறிஞர்கள் மறுத்துரைக்க முடியாமல் ஏற்றுக் கொண்டனர். அத்துடன் உள்ளங்கையில் அறையப்டும் போது விரல்களின் நிலை அத்தசி துணியில் இருப்பதைப் போல இருந்திருக்க விஞ்ஞான ரீதியான வாய்ப்புக்கள் எதுவுமில்லை எனவும் வாதிட்டார். இதனால் 1969ல் கத்தோலிக்கத் தேவாலயம் உத்தியோகபூர்வமான பரிசோதனைக்கு முதல்முதலாக விருப்பத்தை வெளியிட்டது. ஆயினும் விசேட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இச்சம்மதம் வெளியிடப்பட்டது. 1976ல் தேவாலயங்களுக்கு ஆன கமிட்டி தமது ஆய்வுகளை முடித்ததுடன், இத்துணி சந்தேகத்துக்கு இடமானதால் ஆய்வுகளை இடைநிறுத்தியது. 1978ல் மீண்டும் 4 குழுவினர் வௌவேறாக ஆய்வுகூடத்தில் ஆய்வுகளைத் தொடங்கினர். இக்குழு ஒன்றில் உலகப் பிரசித்திபெற்ற அமெரிக்க மைக்கிரொ ஆய்வாளரான Walter McCrone யும் இடபெற்றிருந்தார். ஆய்வுகளின் முடிவில் இவர் ஏனைய குழுவினர் பலரின் முடிவுகளுடன் முரண்பட்ட ஒரிருவரில் இவர் முதன்மையானவராகக் காணப்பட்டார். இவர் இத்துணியில் இரத்தத்துளிகளை கண்டறிய முடியவில்லை என்றும், இது சிவப்பு நிறத்தால் தீட்டப்பட்டதாகவும் முரண்பட்டார். இதனால் வத்திக்கான் தான் விதித்த விசேட உடன்படிக்கையின்படி இவர் தனது முடிவுகளை தன்னிச்சையாக வெளியிடமுடியாது எனத் தடைசெய்தது. எம்முடிவுகளும் உடன்படிக்கையின்படி தம்மூடாவே வெளியிட முடியுமென கடும் உத்தரவைப் பிறப்பித்தது. பின்னர் சில நாட்களின் பின்னர் இவரும் தாம் இரத்தத்துளிகளை கண்டறிந்ததாகவும், இத்துணி உண்மையான போர்வை எனவும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

எல்லாம் முடிந்தபின்னர், இன்று இத்துணிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2002ம் ஆண்டு , 62ம் ஆண்டுக்குரிய யாக்கோப்பின் கல்லறை வாசகக் கல்லு ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் வாசகத்தை பிரான்சைச் சேர்ந்த அராமிஸ்க் மொழியியல் ஆய்வாளரானAndr'e Lemaire வாசித்து ''ஜேசேப்பின் மகனும், இயேசுவின் சகோதரனுமான யாக்கோப்'' பின் கல்லறை இதுவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 50 செ.மீ நீளமும் , 30 செ.மீ அகலமும், 25 செ.மீ உயரமும் கொண்ட இக்கல்லறை வாசகக் கல்லும், யக்கோப்பின் எலும்புச் சிதைவுகளும்Royel Ontario Museum - Toronto வில் 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் வைக்கப்பட்டுள்து. யாக்கோப்பின் எலும்புச் சிதைவுகளும், அத்தசித் துணியிலுள்ள இரத்தத்துகள்களும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட இருப்பதே இப்புதிய சிக்கலாகும். DNA பரிசோதனைகளின் முடிவுகள் அறிவியலின் நேர்மையான பாய்ச்சலை எட்டுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தொடரும்