தமிழ் அரங்கம்

Sunday, August 6, 2006

புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?

புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?

பி.இரயாகரன்
06.08.2006

து இராணுவம் மீதான தாக்குதல் அல்ல. முஸ்லீம்கள மீது மிகவும் திட்டமிட்டு நடத்திய ஒரு இனவெறி தாக்குதலே. இதன் போதே இராணுவம் தாக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் திட்டமிட்ட படுகொலைகள் நடந்துள்ளது. பல பத்து பேர் புலிகளால் கடத்தப்பட்டுள்ளனர். சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளது. சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது. மிக மோசமான கொடூரமான நடத்தைகளால் பல பத்தாயிரம் மக்களின் புலம்பெயர்வுக்கே இது வித்திட்டுள்ளது. நடத்ததோ மறுபடியும் முஸ்லீம் மக்கள் மீதான புலிகளின் மற்றொரு இனவழிப்புத் தாக்குதல் தான்.

இந்த கொடூரத்தின் முழுமையான உண்மை, மெதுவாக ஆனால் அழுத்தமாக மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. தமிழ் செய்தி ஊடகங்களின் வக்கிரமான உண்மைக்கு புறம்பான செய்திகளையும மீறி, இவை மனித இனத்தின் நாடி நரம்புகளையே உலுக்கும் வகையில் மெதுவாக கசியத் தொடங்கிவிட்டது.

பலரும் கருத முனைந்தது போல் அண்மைய மூதூர் யுத்தம் போரை நோக்கிய ஒரு நகர்வல்ல. அது குறுகிய சொந்த நலனை அடிப்படையாக கொண்டதும் தமிழ் மக்களுக்கு எதிரானதுமான, ஒரு குறுந்தேசிய வெறியாட்டம். இது நீரை பாதுகாப்பதற்கான புலிகளின் எதிர் யுத்தமுமல்ல. பேரினவாதம் நடத்திய திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் மீதான ஒரு யுத்தமும் அல்ல. மாறாக மறுபடியும் முஸ்லீம்கள் மீதான திட்டமிட்ட இனவெறித் தாக்குதலே.

மே இறுதி வாரத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெளிவந்த துண்டுப்பிரசுரம் மூலம் விடப்பட்ட ஒரு எச்சரிக்கையின் அடிப்படையில் முழுமையாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
அந்தத் துண்டுப்பிரசுரம் கூறும் வாசகம் என்ன? இதுதான்.

'மூதூர் மக்களுக்கு

கடந்த காலங்களாக வடக்கு கிழக்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதும் கடத்தப்படுவதும் அவர்களது சொத்துக்கள் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் சாதாரண செயலாக மாறிவிட்டது. இதில் உச்சக்கட்டமாக கடந்த காலங்களில் அரச துணைப்படைகளாலும், அவர்களோடு ஒன்றிணைந்துள்ள முஸ்லீம் ஆயுத அருவருடிக் குழுக்களாலும் மூதூர் பகுதியில் வைத்து பல தமிழர்கள் பட்டப்பகலில் ஈவிரக்கமற்ற முறையில் கட்டாக்காலி நாய்களைப் போல் இராணுவ துணைப்படைகளின் உதவியுடன் முஸ்லிம் ஆயுத குழுக்களால் நாளாந்தம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அழிக்கப்படுகின்றனர்.
அவற்றைப் பார்த்து பரவசப்படும் முஸ்லிம் தலைமைகள் இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த இருபது வருடங்களாக நடந்து வரும் தமிழீழ தாயக மீட்புப் போராட்டத்தில் மூதூரில் நிகழ்ந்ததைப் போன்ற மானக்கேடான ஒரு நிகழ்வை எந்தவொரு தமிழனும் எந்தப் பிரதேசத்திலும் அனுபவித்தது கிடையாது. இதனால் பொறுத்தது போதும் இழந்தது போதும் தமிழீழ
தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை மூதூரில் தமிழர்கள் முஸ்லீம் ஆயுத அருவருடிக் குழுக்களால் கொலை செய்யப்பட்டதை எந்த ஒரு முஸ்லீம் தலைமையும் கண்டிக்கவும் இல்லை. அவர்களை தண்டிக்கவும் இல்லை.

இதனால் மானத்தை இழந்து உடமையை இழந்து. உயிரையும் இழந்து வாழ்வதை விட தமிழீழ மீட்புப் போராட்டத்தில் மூதூர் மீட்புப் போராட்டம் ஆரம்பித்து விட்டது. எனவே முஸ்லிம் மக்களே தங்களால் கண்டிக்கப்படாதவர்கள் எங்களால் தண்டிக்கப்படப் போகிறார்கள்.

தங்களுக்கும் இப்படுகொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று எண்ணும் மக்கள் மூதூரை விட்டு இன்னும் மூன்று தினங்களுக்குள் வெளியேறிவிட வேண்டும். அப்போது தான் எமது தமிழ் மக்களின் அகதி வாழ்வின் அர்த்தம் தங்களுக்கும் புரியும். இதையும் மீறி மூதூரில் தான் இருப்போம் என்று ஆவேச வார்த்தை பேசுபவர்கள் தமிழீழத்திற்கு எதிரானவர்களாகவே கருதப்படுவார்கள். ஏன் எமது மூதூர் மீட்பில் மாண்டும் போவார்கள்.
இது தங்களுக்கான விரட்டலும் அல்ல. பயமுறுத்தலும் அல்ல. எமது தமிழீழ தாயக மீட்புப் போராட்டத்தில் முதலில் மூதூர் மீட்புப் போராட்டம் ஆரம்பித்து விட்டது என்பதற்குரிய அழைப்புமணியே.

பொறுத்ததிற்காக தமிழன் பயந்தவன் அல்ல. மீட்பதற்காகவே அவன் பொறுத்துள்ளான் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரியும்.
சொல்லிச் செய்பவன் தமிழனடா அதையும் அஞ்சாமல் செய்பவன் தமிழ் மறவனடா.


தமிழீழ தாயக மீட்புப் படை"

இது முஸ்லீம் மக்களுக்கு எதிராக மே இறுதிவாரத்தில் புலிகளால் மக்களின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம். (கடும் எழுத்தால் அடையாளப்படுத்தி காட்டியது நாம்.) 'இன்னும் ஒருசில நாட்களில் தெரியும்" என்பதையே நடைமுறையில் நடத்திக்காட்டிய ஒரு தாக்குதலே இது. 'தமிழீழ தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்." என்ற கூறிய அடிப்படையில் ஒரு குறுந்தேசிய வெறியாட்டம் நடந்துள்ளது. அகதி ஆக்குவதும், அவர்களை கொன்று ஒழிப்பதும் என்பது எல்லாம் முன் கூட்டியே திட்டமிடப்பட்டவைதான், அதை இந்த முன்கூட்டிய துண்டுப்பிரசுரம் அம்பலமாக்குகின்றது.

மனித இனம் மீதான காட்டுமிராண்டித்தனம்

இலங்கை பேரினவாத அரசும், குறுந்தேசிய புலிகளும் நடத்துகின்ற இனவாத குறுகிய நடத்தைகள், மக்கள் வாழ்விற்கான அனைத்து சமூக ஆதாரங்களையும் தவுடுபொடியாக்குகின்றன. மக்கள் எதுவும் செய்ய முடியாத ஏதிலிகளாக, தமது மனித வாழ்விழந்து கொலைகார மனிதவிரோதக் கும்பல்களின் காலடியில் சிதைகின்றனர். மறுபுறத்தில் தேசியம் காட்டுமிராண்டித்தனமான ஒன்றாகவே தன்னை வக்கிரப்படுத்தி இழிந்து நிர்வாணமாகி நிற்கின்றது.

எங்கும் கோரமான இனவெறி அவலங்கள். மனித பிளவுகள். சமூக வக்கிரங்கள். குறுகிய மலினப்பட்ட இனவுணர்வுடன் நடத்தும் வக்கிரமான குதிராட்டம். இதுவே புலம்பெயர்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு குஷியான பொழுது போக்கான வம்பளப்பாகிவிட்டது. இந்த மனித அவலத்தையிட்டு, இந்த இனவழிப்பில் மரணப்போரின் வாழ்வுபற்றி அக்கறையற்ற பொழுது போக்குக்கு, இதுவே அவர்களின் விதண்டவாதமான வம்பளப்புக்கு தீனியாகிவிட்டது.

கொல்லப்பட்டவனின் எண்ணிக்கை பற்றி கற்பனைப் பெருமைகள். யாரின் கட்டுப்பாட்டில் குறித்த பிரதேசம் என்ற பிரமைகள். இராணுவ வியூகம்பற்றி வகைவகையான தந்திரக் கதைகள். மனிதாபிமான யுத்தம் பற்றி வம்புப் பேச்சுகள். இப்படி பலவகையான, முண்டங்களாகவே பிறக்கும் முரணான அரசியல் வம்பளப்புகள். ஆனால் மனிதவினம் வரைமுறையின்றி சதா செத்துக் கொண்டிருக்கின்றது.

இதை தற்காப்பு என்றும், மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம் என்கின்றார்களே! யுத்தத்தின் நோக்கம் மக்களுக்கானதாக இருக்கின்றதா என்றால் இல்லை. ஒரு இளைய தலைமுறையை உயிருடன் பலியிட்டு, மக்களை நடுவில் நிறுத்தி கொன்று குதறுவது எதற்காக? குறுகிய சொந்த நலனை அடைய இனவாத வக்கிரங்கள் அவசியமாகிவிட்டது. முன்பெல்லாம் இனவாத பேச்சு அரசியல் செய்யவே போதுமானதாக இருந்தது. இன்று இனவாத கொலைகள், சூறையாடல்கள் அவசியமாகிவிட்டது.

ஏழை எளிய மக்களின் நீர் மீதான புலிகளின் தடை

புலிகள் நீர் மீதான தடையை தாம் செய்யவில்லை, மக்கள் தான் தடுத்தனர் என்று கூறிய படி, முஸ்லீம் மக்கள் மீதான இன அழிப்பை நோக்கி ஒரு யுத்தத்தை வலிந்து திணித்தனர். ஒரு நேரக் கஞ்சிக்கே வழியற்ற ஏழை எளிய தமிழ் மக்களின் பெயரில், இப்படி ஒரு அக்கிரமம் நடந்தேறியது. புலிகளின் பிரதேசத்தில் இந்த மக்களுக்கு புலியை விட அதிகாரம் உள்ளது என்று கூறியபடி, புலிகள் தமது சொந்தக் காதுக்கே பூச்செருகியபடி அரோகரா போடுகின்றனர்.

புலிகள் வலிந்து திணித்த நீர் மீதான தடை, கடந்தகால குடியேற்றத்தினை முடக்க முன்வைக்கப்பட்டதா எனின் இல்லை. தமது குறுகிய நலன் சார்ந்த பேரங்களுக்குள் இதை முன்னிறுத்தி, அரசியல் ஆட்டம் போட்டனர்.
சிங்கள் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப்பற்றி என்றுமே புலிகள் அக்கறைப்பட்டது கிடையாது. திட்டமிட்ட சிங்கள இனவாத குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் கூலித்தொழிலாளர்களையும், விவசாயிகளையும் புலிகள் சார்ந்து நின்றது கிடையாது. அவர்களுக்கே எதிரான அரசியலைக் கொண்ட வலதுசாரிப் புலிகள், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நிற்பதாக காட்டுவது அரசியல் வேடிக்கை.

இன்றைய புலித் தமிழ் தேசியம் திட்டமிட்ட குடியேற்றம் சார்ந்து உருவானது கிடையாது. குடியேற்றத்தின் போதெல்லாம் அதை அரசியல் சடங்குக்கு எதிர்த்தவர்களும் சரி, தீவிரமான ஆயுதப்போராட்டமாக மாறிய போதும் சரி, போராட்டமே யாழ் மேலாதிக்க குறுந் தேசியமாகவே வக்கிரப்பட்டது. கடந்த காலத்தில் குடியேற்றம் பற்றி ஒரு தெளிவான மக்கள் சார்புக் கோட்பாடே இருந்தது கிடையாது.

சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு உருவாக்கிய இனவாத திட்டங்கள் மூலம் தமிழ் மக்களின் பராம்பரிய பிரதேசங்களிலேயே அவர்களை சிறுபான்மை இனமாக்கினர். இதை விரிவாக படிக்க இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்

சிங்கள பேரினவாதம் தமிழ் இனத்தை சிறுபான்மையாக்கி, அவர்களின் வாழ்வை நாசமாக்கிய போது, அதற்காக இன்றுவரை போராடியது கிடையாது. ஆனால் அதை இனவழிப்புக்கு நிகராக, மேலும் குறுகிய தமிழ் குறுந்தேசிய வக்கிரத்துடன் சொந்த இனத்தையே இன்று அழித்து வருகின்றனர். தமிழ் இனத்தையே இந்த மண்ணில் இருந்து தேசியத்தில் பெயரால் ஒடோட அடித்து விர ட்டப்படுகின்றனர். இதுவே இன்றைய உண்மை நிலையாகும்.
தமிழ் தேசியம் கூட தனது பாரம்பரிய பிரதேசத்தை மீட்டெடுக்க வேண்டுமெனின், அந்த பிரதேசத்தில் வாழும் அனைத்து இன மக்களையும் வென்று எடுக்கும் வகையில் அல்லது தமிழ் இனமல்லாத மக்களை நடுநிலைப்படுத்தும் வகையில் அணுகுவது அவசியமானது. அதாவது அந்த மக்களை குறுகிய இனவாதிகளின் அதாவது எதிரியின் கையில் சிக்கவிடாது தடுப்பது அவசியமாகும். ஆனால் தேசியத்தின் பெயரில் குறுகிய தமிழ் இனவாத வக்கிரத்துடன், அந்த மக்களை மேலும் எதிர்நிலைக்கு தள்ளிவிட்டதும், தள்ளிவிடுவதும் நிகழ்கின்றது. மற்றயை இனத்தைக் குறைந்தபட்சம் நடுநிலைப்படுத்துவது மட்டும்தான், வெற்றிகரமாக பாரம்பரிய தமிழ் பிரதேசத்தை மீட்டு எடுக்க உதவும்.

நீர் மீதான பயன்பாட்டு உரிமையை இனங்களுக்கு இடையிலான பகையுணர்வுடன் பிரித்து கையாள்வது என்பது, மிக மோசமான இழிவான ஒரு இனவாத நடவடிக்கையாகும். இங்கு அந்த நீரை நம்பி வாழும் சிங்கள மக்கள், பேரினவாத சுரண்டலுக்கும் உள்ளாகிய அடிமட்ட ஏழை எளிய விவசாயிகள். இதில் தமிழர் முஸ்லீம்கள் என கணிசமான ஒரு பகுதியினர் அடங்குவர். இந்த மக்கள் இனவாத கூத்தில் குளிர் காயும் மக்கள் கூட்டமல்ல. அன்றாடம் உழைத்து வாழும் கஞ்சிக்கே வழியற்ற பரம ஏழைகள்;. அவர்களிடம் புலிகளின் சொந்த நடத்தை சார்ந்த அச்சத்தை தவிர, அவர்கள் எந்த எதிர்வினையையும் ஆற்றுபவர்கள் அல்லர். ஆனால் நீர் தடுப்பு அவர்களின் அன்றாட வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் அழித்ததுடன், தீவிர இனவாதிகளின் பிடிக்குள் அவர்களை வலிந்து தள்ளியதையே தமிழ் மக்களின் பெயரில் புலிகள் செய்துள்ளனர்.

பேரினவாதம் பேசும் இனவாத கட்சியாக தம்மை முழுமையாக அடையாளம் காட்டும் ஜே.வி.பி முதல் அனைவரும் இதையே எதிர்பார்த்து, எலும்பை சுவைக்க காத்திருக்கும் ஓநாய்களாக களத்;தில் இறங்குகின்றனர். சொல்லப் போனால் புலிகளின் இனவாத நடத்தைகள் தான், ஜே.வி.பி போன்ற பேரினவாதிகளின் அரசியலை தக்கவைக்கும் அரசியல் நெம்பு கோலாகிவிடுகின்றது.

தண்ணீரை பெறும் வாதத்துடன் பேரினவாதம் புலிகள் மீது ஒரு தாக்குதலை தொடங்கியது. பேரங்கள் பேச்சுகள் நடக்கமுடியாத வகையில் புலிகள் செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகினற ஒரு நிலையில், புலிகள் தமிழ் மக்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுக்கின்றது என்கின்றனர். அந்தக் கோரிக்கைகள் என்ன என்பதை மட்டும் அவர்கள் கூறவில்லை. பின்னால் ஒரு சில உலகவங்கி திட்டத்தை அரசு தடுத்ததாக கூறுவது நிகழ்கின்றது. ஒரு மோசடி அரசியல் மக்களின் பெயரால் புனையப்படுகின்றது.

மக்கள் நலன் எதையும் முன்வைக்க முடியாத பேரங்கள், குழு நலன் சார்ந்தே உருவானது. அரசு தனது பேரினவாத கோர முகத்துடன் தண்ணீருக்காக தாக்குதலை தொடங்கிய போது, அங்கு மக்கள் பற்றி மூக்கால் சிணுங்கி அழுதனர். தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை பேசித் தீர்க்கப் போவதாக வாய்ச்சவடால் அடிக்கும் இந்தப் பேரினவாதம், அதை ஒரு தலைப்பட்சமாக கூட முன்வைக்கத் தயாரில்லை. இதை சுயமாக எந்தக் கட்சியும், ஏன் பேசி தீர்க்க வேண்டும் என்ற கூறும் கட்சிகளும் கூட முன்வைப்பது கிடையாது. இதை புலிகளும் கூட கோருவது கிடையாது. பரஸ்பரம் இனவாத யுத்தத்தின்; மூலம் தங்களை தக்கவைக்கும் மக்கள் விரோதிகளாகவே, தாக்குதலை தமது குறுகிய பேரம் பேசலுக்காக செய்ய விரும்புகின்றனர். தாக்குதலை தண்ணீரின் பெயரில் அரசு தொடங்கியது. வெற்றி பெற முடியாத தாக்குதலை திணித்து, சமூகங்களை பிளந்து போடுவதில் காட்டும் ஆர்வத்தை, பேசித் தீர்ப்பதில் ஒரு துளி கூட நேர்மையாக இரண்டு தரப்பும் செய்வதில்லை. யுத்தம் அடிநாத கோசமாக, இதை தொடங்கியது யார் என்று குற்றம்சாட்ட, பரஸ்பர காரணங்கள் கூறியபடி தாக்குதலை தொடங்குகின்றனர். இந்த வகையில் தண்ணீரை முன்வைத்து அரசு தாக்குதலை நடத்தியது.
ஆனால் இதற்கு முன்பாகவே தாங்களாக வலிந்து செய்த கொண்ட ஒப்பந்தத்தை மீறி, கிளைமோர்கள், கிரனைட்டுகள் மூலம் அன்றாடம் மனிதவுயிரைப் பலிவாங்கி வந்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட புலியல்லாத நபர்கள் இனம் கண்டு அழிக்கப்படுகின்றனர் பேரினவாதம் புலி சுத்திகரிப்பு படுகொலைகளை நடத்துகின்றது.

யுத்தமும், தாக்குதலும் முன் கூட்டியே நடக்கின்றது. தண்ணீர் இரண்டு தரப்புக்கும் ஒரு சாட்டு. தண்ணீரைப் பயன்படுத்தும் தமிழ் சிங்கள் மக்களையிட்டு எந்த அக்கறையுமற்ற வக்கிர புத்தி கொண்ட இனவாத யுத்தவெறியர்கள், யுத்தத்தை தாக்குதலை மக்களின் பெயரில் வலிந்து திணித்து தமது குறுகிய நோக்கத்துக்காகவே நடத்துகின்றனர்.

மூதூர் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு, தண்ணீரை பயன்படுத்தியது

இது வரலாற்று ரீதியாக மன்னிக்க முடியாத, மன்னிப்புக் கேட்க முடியாத மற்றொரு அரசியல் குற்றமாகும். குற்றங்கள் தமிழ் மக்களின் பெயரில் மீண்டும் மீண்டும் தொடருகின்றது. தமிழ் இனத்துக்கு எதிராக, தொடர்ச்சியாக முஸ்லீம் மக்களை வலிந்து இது தள்ளிச் சென்றுள்ள ஒரு இழிவான நடவடிக்கையாகும்.

தமிழ் மக்கள் வாழாத ஒரு பிரதேசத்தின் ஊடாக, இராணுவம் மீதான தாக்குதல் என்றாலே தவறானது. எந்த அரசியல் அடிப்படையுமற்ற ஒரு நிலையில், முன்னைய காலத்தில் கசப்பான அனுபவங்களை முஸ்லீம் மக்களுக்கு உருவாக்கிய ஒரு இயக்கம், அந்த மக்கள் பிரதேசத்தின் ஊடாக தாக்குதலை தொடங்கிய போது அதன் விளைவு பாரதூரமானது. ஆனால் தாக்குதலின் நோக்கம் இராணுவம் மீதானதல்ல, முஸ்லீம் மக்கள் மீதானது என்பது படிப்படியாக அம்பலமாகி வருகின்றது. முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலை நடத்த, இராணுவம் மீதான தாக்குதல் அவசியமாகியது.

முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட இனவெறித் தாக்குதலே இன்று நிகழ்ந்துள்ளது. முன் கூட்டியே விடப்பட்ட எச்சரிக்கையின் அடிப்படையில், 'தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்" என்ற புலிகளின் "மக்கள்" கூற்றுக்கு இணங்க இது நிகழ்ந்தது. அந்த மக்களின் வாழ்விடங்கள் மேலான சிதைவின் மேல் நடத்தப்பட்ட புலிகளின் குறுந்தேசிய இனவாத தாக்குதல் என்பது, முன்கூட்யே அந்த மக்கள் மேல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இனச் சுத்திகரிப்பை எப்படி நடத்துவது என்பது முதல் யாரை கைது செய்வது என்பது வரை அனைத்தும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்;தப்பட்டது. முஸ்லீம் மக்கள் மேலான புலிகளின் தொடர்ச்சியான அச்சமூட்டுகின்ற படுகொலை நடவடிக்கையில், இதுவும் ஒன்றாகிவிட்டது.

குறித்த மக்கள் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின், அந்த மக்களின் பெரும் பகுதி புலிகளின் சுற்றி வளைப்புக்குள் சிக்கிய பின் அவர்களை சிதைத்தனர். கசப்பான இழிவான நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றனர். அவர்களின் அவலங்கள், அந்த மக்கள் சொல்லியழுகின்ற துயரங்கள் எண்ணற்றதாகி அவை அன்றாடம் கசிந்து வெளிவருகின்றன.

பிரச்சனை என்னவென்றால் முஸ்லீம் மக்கள் பற்றி நல்லெண்ணப்பாடு புலிகளிடம் கிடையவே கிடையாது. இதையே பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் சதா நஞ்சாக விதைக்கின்றனர். அங்கு இந்த நடத்தை நெறிகளே மிக மோசமானதும் இழிவானதுமான ஒன்றாகவே மாறிவிடுகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் பற்றியே நல்ல அபிப்பிராயம் அற்ற புலிகள், மக்களுக்கு ஜனநாயகம் அவசியமற்றது என்கின்றார்கள். இன்னுமொரு இனமான முஸ்லிம் மக்கள் பற்றி புலிகளின் கருத்து மிக இழிவானதும் மிக வக்கிரமானதுமாகும். முஸ்லீம் மக்கள் பற்றி வெறுப்பூட்டுகின்ற, இழிவுபடுத்துகின்ற, அடக்கியொடுக்கின்ற மனித விரோத வக்கிரத்துடன் ஆயுதபாணியாக்ப்பட்டவர்கள் தான் புலிகள். அவர்கள் முஸ்லீம் மக்களுக்கு அன்பையும் சமாதானத்தையும் அமைதியையும் போதிப்பவர்களல்ல.

அந்த மக்களை இழிவுபடுத்தி வெறுப்ப+ட்டும் வகையில் மீண்டும் மீண்டும் நடந்துவருகின்றனர். இது அம்பலமாகும் போது இதை மூடிமறைக்கவே அவசர நிவாரணம் என்ற பெயரில், பெயர்ப்பலகை அடித்து சில உதவிகளை வழங்கி அதை படமெடுத்து உலகுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற வேடிக்கையான மிக மோசமான இழிவாடலைத் தவிர, அவர்களால் எதையும் அந்த மக்களுக்கு இதைத் தாண்டிச் செய்ய முடியாது என்பதை மறுபடியும் புதிதாக நிறுவியுள்ளனர். அன்று யாழ் முஸ்லீம் மக்களை வெளியேற்றிய பின் அது தவறு என்ற போலி நாடகத்தை எப்படி இன்று நடத்திக் காட்டி வருகின்றனரோ, அதையே மறுபடியும் நிவாரணம் ஊடாக நடிக்கின்றனர்.

உண்மையில் இந்த புலி நடவடிக்கை, முஸ்லீம் மக்களை பேரினவாதத்தின் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மிக மோசமாக இட்டுச் சென்றுள்ளது. பாராளுமன்ற கதிரை அரசியலைலைத் தவிர, அந்த மக்களை வழிகாட்டி செல்ல யாருமற்ற நிலையில், அந்த மக்களை பகடைக்காயாக மாற்றுகின்ற அபாயம் அதிகரித்துள்ளது. இராணுவரீதியாக தம்மீதான அவலத்தை எதிர்கொள்ள முடியாத சமூகத்தை, எதிரி இலகுவாக பயன்படுத்தும் வகையில் இப்படையெடுப்பும் அதன் பின்னான ஒடுக்குமுறையும் வழிவிட்டுள்ளது. எதிரி மேலும் வலுவாக வெற்றி பெற்றுள்ளான்.

இராணுவ ரீதியான தாக்குதல் வெற்றிகளை மட்டும் கொண்டு இதை நாம் ஆய்வு செய்ய முடியாது. ஒரு இராணுவம் என்ற வகையில் இராணுவமும் புலிகளும், மிக பெரிய வெற்றிகரமான தாக்குதலை நடத்த முடியும். அதிலும் பேரினவாத இராணுவம் கூலிப்பட்டாளமாக இருப்பதால், புலிகளின் திடீர் தாக்குதல் சார்ந்த வெற்றிகள் சாத்தியமானதே. ஆனால் இது அரசியல் வெற்றியாக மாறிவிடாது. அரசியல் வெற்றி என்பது மக்களை அரசியல் ரீதியாக தம் பக்கம் வென்று எடுப்பதில் தங்கியுள்ளது.

உண்மையில் திருகோணமலை முழுக்க தமிழ் சிங்கள, முஸ்லீம் மக்களிடையான நல்லுறவை மேலும் சிதைத்தன் மூலம், பதற்றமான வாழ்வியல் சூழலைத்தான் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. நிம்மதியாக வாழ முடியாத அவலமும் சமூகச் சிதைவும் உருவாகுகின்றது. முஸ்லீம் மீதான புலியின் இனச்சுத்திகரிப்பை பயன்படுத்திய பேரினவாதிகள், புலிகளின் கட்டுப்பாட்டு ப் பிரதேசம் மீது நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மூலம், தமிழ் மக்கள் மேலான அழிவுகளும் சிதைவுகளும் செய்தியாக கூட யாரும் கொண்டுவரவில்லை. தமிழ் மக்களின் மேல் அக்கறையாக நடிக்கும் கயவர் கூட்டம் கூட, அதை ப+சிமெழுகிவிட்டன. இதை கூறும் தார்மீக பலத்தை, தவறான இழிவான புலி நடத்தைகள் மூடிமறைத்துவிடுகின்றது. அந்தளவுக்கு இழிவான ஒரு முஸ்லீம் விரோத நடவடிக்கை தான் மூதூர் சம்பவமாகும்.

தமிழ் மக்களின் தேசியத்துக்கு எதிரான, புலியின் குறுந் தேசியத்தின் குறுகிய நலன் சார்ந்த வக்கிர நடவடிக்கையே இதுவாகும். போலியான மன்னிப்பு கோரல்களைத் தாண்டியும், இது போன்ற இழிவான செயல்கள் கால இடைவெளியின்றி தொடரத்தான் செய்கின்றன. இதுவே இன்றைய எமது எதாத்தம்.

11 comments:

ENNAR said...

என்னமோ போங்க இதையெல்லாம் கேட்டால் மனது கஷ்டமாகத்தானிருக்கிறது

CAPitalZ said...

ஐயா.. இது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.

ஆனால், புலிகள் எங்களை [சைவ, கிறிஸ்தவ, முஸ்லிம் அல்லாத மற்றய மத] மக்களை மட்டும் மிகவும் அன்பாக பாலூட்டி பராமரிக்கவில்லை. அவர்களின் கரங்கள் இரும்புப் பிடியாகத் தான் இருந்திருக்கிறது, இருக்கிறது, இனியும் இருக்கும்.

அவர்களின் சில "வேண்டுகோள்கள்" செய்ய மறுப்பவர்களை நியாயமற்ற முறையில் தான் "திருத்தி வழிப்படுத்தி" இருக்கிறார்கள்.

ஆனால், இவையெல்லாம் "தமிழர் தாயகம்" என்ற வார்த்தையின் படிக்கட்டுகள் என்பதால் இவ்வாறான செயல்கள் அவசியமாகின்றன. "தமிழர் தாயகம்" ஒன்று உருவாகவேண்டுமென்றால் களையெடுத்தல்கள் மிகவும் அவசியம். இது தமிழருக்கு மட்டுமல்ல, உலக சுதந்திர போராட்ட வரலாற்றில் எல்லா தலைமைகளும் கடைப்பிடித்த வழிமுறைகள்.

கிறிஸ்தவனை சுட்டுவிட்டான் என்று கிறிஸ்தவ மக்களோ, சைவத்தவரை சுட்டு விட்டார்கள் என்று சைவ மதத்தவர்களோ புலிகளுக்கு உறுதுணையாக நிற்பதை நிறுத்தவில்லை என்பது நிதர்சனம். அப்படி நிறுத்தி இருந்தால் ஒரு புலி கூட இன்று இருந்திருக்காது. மாறாக இம் மதத்தவர்கள் சுடப்பட்டவர்கள்/ தண்டிக்கப்பட்டவர்கள் தமிழரின் சுயநிர்ணய இலக்குக்கு எதிரானவர்கள் என்பதை அடையாளங்கண்டுகொண்டு மதத்தின் பெயரால் பிளவு படாமல் ஒற்றுமையாய், தமிழனாய் ஒரு கரம் பற்றி புலிகள் பின் நிற்கிறார்கள்.

புலிகள் மற்றய இயக்கங்களை அழிக்கும் போது எத்தனயோ சைவத்தவன், கிறிஸ்தவன் கொல்லப்பட்டான். நித்திரைப்பாயில் வைத்து கொல்லப்பட்டார்கள். இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கையில் பல சைவ, கிறிஸ்தவ மக்கள் இந்திய இராணுவத்துடன் கதைததற்கே கொல்லப்பட்டார்கள். புலிகளுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்று இன்றும் பலர் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் ஒரு மதத்திற்கு எதிரான செயல் என்று சைவ மக்களோ, கிறிஸ்தவர்களோ எப்போதுமே எண்ணியதில்லை.

பிள்ளை பிழை செய்து விட்டான் என்று தந்தை கண்டித்தால், அப்பா நல்லமில்லை அம்மாவே நல்லம் என்று சொல்லும் பிள்ளை போல் இல்லாமல் எமது இலட்சியம் என்ன என்று தயவு செய்து அறியுங்கள்.

என்ன இருந்தாலும் நீங்கள் சொன்ன செய்தி உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/
htpp://1letter.wordpress.com/

ஈழநாதன்(Eelanathan) said...

//கடந்த காலங்களாக வடக்கு கிழக்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதும் கடத்தப்படுவதும் அவர்களது சொத்துக்கள் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் சாதாரண செயலாக மாறிவிட்டது. இதில் உச்சக்கட்டமாக கடந்த காலங்களில் அரச துணைப்படைகளாலும், அவர்களோடு ஒன்றிணைந்துள்ள முஸ்லீம் ஆயுத அருவருடிக் குழுக்களாலும் மூதூர் பகுதியில் வைத்து பல தமிழர்கள் பட்டப்பகலில் ஈவிரக்கமற்ற முறையில் கட்டாக்காலி நாய்களைப் போல் இராணுவ துணைப்படைகளின் உதவியுடன் முஸ்லிம் ஆயுத குழுக்களால் நாளாந்தம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அழிக்கப்படுகின்றனர்.//

இது தொடர்பில் நீங்கள் ஏதாவது 'கருத்துக்' கட்டுரை எழுதியிருந்தால் 'சிந்தனைகளை' பதிவு செய்திருந்தால் சுட்டி கொடுப்பீர்களா?வாசிக்க ஆவலாக உள்ளேன்

தமிழரங்கம் said...

சுரேஸ்

பேரினவாதத்தின் பொருளாதார தடை மட்டுமின்றி, பேரினவாதத்தின் கொடூரமான பல முகங்களை பற்றி நாம் மட்டுமான விரிவாக விவாதித்துள்ளோம். எமது இணைத்தில் இவைகளைப் பற்றி விரிவாக காணமுடியும்.
www.tamilcircle.net

தமிழரங்கம் said...

நட்புடன் ஈழநாதனுக்கு

உதாரணத்துக்கு ஒரு கட்டுரையின் ஒரு பகுதி இதில் உள்ளது. விரிவுக்கு


http://www.tamilcircle.net/Bamini/samar_01_31/samar29/samar_29_05.htm

முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களை தாக்கினார்களா?

நாம் தனித் தனியாக முஸ்லீம் மக்கள் மேலான ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் காரணங்களை ஆராய்வோம். முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் மேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என்பது, தமிழ் தரப்பின் முன்கூட்டிய ஆயுதம் எந்திய படுகொலைத் தாக்குதலை மூடிமறைப்பதாகும்;. அதாவது முஸ்லிம் மக்களில் இருந்து அன்னியமான கூலிப்படைகளின் தாக்குதல் கூட, இயக்கங்களின் வரைமுறையற்ற அப்பாவி முஸ்லீம் மக்கள் மேலான தாக்குதலின் விளைவாகும். அதாவது இந்தக் கூலிப்பட்டாளம் உருவாக இயக்கங்களின் குறித்த வன்முறையே காரணமாக இருந்தது என்பதை, இந்தக் குற்றச்சாட்டு மூடிமறைத்து அதை மேலும் ஊக்குவிக்கின்றது. இதே போன்ற குற்றச்சாட்டை சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு கூறின், என்ன தர்க்க நியாயம் இருக்க முடியும். இதேபோல் தான் முஸ்லீம் மக்கள் நிலையும். பலமான இனங்கள் பலவீனமான இனங்கள் மேல் தாக்குதலை நடத்தும் போது, பலவீனமான இனம் தவிர்க்க முடியாமல் எதிர் தாக்குதலில் இறங்குகின்றது. சிங்கள இனவாத சக்திகள் தமிழ் மக்கள் மேலும், தமிழ் குறுந் தேசியவாதிகள் முஸ்லீம் மக்கள் மேலும் நடத்தும் தாக்குதலுக்கு எதிர் மறையில் பதிலடி கொடுக்கின்றது. இங்கு மக்களில் இருந்து அன்னியப்பட்ட குழுக்கள் இதை நேரடியாக கையாளும் போது, இனத்தையே எதிரியாக காட்டி அழிப்பது நியாயப்படுத்தப்படுகின்றது. இங்கு அப்பாவி மக்கள் மேல் இனவாத சக்திகள் நடத்தும் இரண்டு பக்க வடிவத்தையும், நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இனவாதத்தை கட்டமைக்கும் இனவாதிகளை நோக்கி மக்கள் எதிர் தாக்குதலை, இனம் கடந்து நடத்த வேண்டும். இதை இனவாதிகள் செய்யக் கூடாது. இனவாதி மற்றொரு இனவாதி மேல் நடத்தும் தாக்குதல், படிப்படியாக இன மக்கள் மேலானதாக மாறிவிடுகின்றது. தமிழ் இனவாதிகள் முஸ்லீம் மக்கள் மேலும், சிங்கள மக்கள் மேல் நடத்திய தாக்குதல், முஸ்லீம் இனவாதிகள் தமிழ் மக்கள் மேல் நடத்திய தாக்குதல், சிங்கள இனவாதிகள் தமிழ் முஸ்லீம், மலையாக மக்கள் மேல் நடத்திய தாக்குதல் அனைத்தும் தேசிய இனவாதத்தை அடிப்படையாக கொண்டது. எதிரியை விட போராடும் இயக்கங்கள் மக்களை இனத் தன்மையில் கொல்லும் போது, அப்போராட்ட தியாகமே இனவாதமாகி சீரழிகின்றது. ஆனால் போராளிகள் அல்லாத இராணுவம் இனப்படுகொலைகளை நடத்தும் போது, கூலித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கி மேலும் இனவாதம் அம்பலமாகின்றது. தமிழ் குறுந்தேசிய இனவாத இயக்கங்கள் முஸ்லீம் மக்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதலின் விளைவால் தான், முஸ்லீம் இனவாத கூலிக்குழுக்கள் உருவாகியது மட்டுமின்றி எதிர் தாக்குதலை தமிழ் மக்கள் மேல் நடத்தும் நிலைக்கும் இட்டுச் சென்றனர். தமிழ் மக்கள் தமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் மற்றைய இன மக்களின் ஐக்கியத்தை அங்கீகரித்து, அவர்களுடன் இணைந்து போராடத் தவறினர். அம் மக்கள் மேல் அடக்குமுறையை கையாளும் போது, பிரதான எதிரி தனக்கு சார்பாக தாக்குதலுக்கு உள்ளான இனங்களை மாற்றி, தனது கூலிப்பட்டாளத்தை அந்த இனங்களிலும் உருவாக்கின்றது. இது தமிழ் மக்களுக்கும் கூட பொருந்தும்;. இந்த முஸ்லீம், தமிழ் கூலிப்பட்டாளங்களுக்கும் மக்களுக்கும் எந்தவிதமான அரசியல் உறவும் இருப்பதில்லை. மாறாக அந்த மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது. மக்களில் இருந்து தனிமைப்பட்ட பயங்கரவாத கூலிக்குழுவாக இயங்கும் இந்தக் குழுக்கள், தனக்கு எதிரான இன மக்கள் மேல் படுகொலைத் தாக்குதலை நடத்துகின்றது. இதை இனம் கடந்து கண்டிக்க வேண்டும். மக்களுக்காக போராடும் இயக்கங்கள் இந்தக் கூலிக்குழுக்களை அம்பலம் செய்து, இது போன்ற நடவடிக்கையில் தானும் ஈடுபடாது போராடவேண்டும்;. அதை விட்டு அந்தக் கூலிக் குழு சார்ந்த இன மக்களை தாக்கி அழிப்பது, போராட்டத்தை குறுந் தேசிய இனவாதமாக்கி சீரழிந்து செல்வதைக் கடந்து, எந்த விளக்கமும் அதற்கு இருப்பதில்லை.

முஸ்லீம் மக்கள் போராட்டத்தை காட்டி கொடுத்தனரா?

முஸ்லீம் மக்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்தனர் என்பது அர்த்தமற்ற வாதமாகும். காட்டிக் கொடுத்தனர் என்று இயக்கங்களால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை, முஸ்லீம் மக்களின் விகிதாசாரத்துக்கு ஒப்பிடின் மிக அதிகமானது. காட்டிக் கொடுப்பு என்பது எப்படி, எந்தக் காரணங்களால் நிகழ்கின்றது என்பதை விடுத்து, ஒற்றைப் பரிணாமத்தில் தண்டிக்கும் போது அப்பவிகள் கூட துரோகியாகின்றனர். போராட்டம் மக்களின் ஆதரவைப் பெற்று மக்கள் இயக்கமாக தலைமறைவாக இயங்கத் தவறி, மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு பகிரங்கமாக இயங்கிய குற்றம் யாருடையது. அது இயக்கத்தின் காட்டிக் கொடுப்பு அல்லவா. காட்டிக் கொடுக்கும் காரணத்தின் சமூக உறவாக்கம் ஆராயப்பட்டு தன்னை சுயவிமர்சனம் செய்யத் தவறி தண்டிப்பது, குற்றத்தை தனக்குள் மூடிமறைப்பதாகும். உண்மையில் காட்டிக் கொடுப்பவன் ஏன் செய்தான் என்ற காரணத்தை கண்டறிந்து தண்டிக்காதவரை, இயக்கத்தின் நோக்கமும் அதே காரணத்தால் கொச்சைப்படுத்தப்படுவது நிகழ்கின்றது. அதுவும் இந்தக் காட்டிக் கொடுப்பை இன்னொரு இனமான முஸ்லீம் மக்கள் மேலாக சுமத்தி கொச்சைப்படுத்துவது என்பது கேடுகெட்ட பச்சை இனவாதமாகும்;. அந்த இனங்களின் தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களின் ஜனநாயகத்தை செயல்வடிவமைக்க உதவாத வரை, காட்டிக் கொடுப்பு பற்றிக் கூறி துரோகியாக்க எந்த உரிமையும் எந்த இனத்துக்கும், குழுவுக்கும் கிடையாது.

முஸ்லீம் மக்கள் ~~தொப்பி பிரட்டி||களா?

முஸ்லீம் மக்கள் ~~தொப்பி பிரட்டிகள்|| என்று தமிழ் மக்களின் கொச்சையான இன அடையாள மொழி, தமிழ் மக்களின் தேசியத்துக்கு பச்சைத் துரோகம் துரோகமிழைத்த கூட்டணியால், தமது பச்சை இனவாத அரசியலுக்காக கட்டமைக்கப்பட்டவையே. ~~தொப்பி பிரட்டிகள்|| என்று சொன்னவனே தமிழ் மக்களுக்கு துரோகியாகிய போதும், அந்த எடுகோள்கள் மட்டும் துரோகமாகாமல், அதே இனவாத அரசியலில் வன்முறை மொழியாகி நடவடிக்கையாகின்றது. தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகம் போன்று, தமிழ் தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு தொடர்ந்து துரோகமிழைத்தனர். உண்மையில் அண்ணர்களான தமிழ் பாராளுமன்ற அரசியல் வாதிகள் முஸ்லீம் மக்களுக்கு செய்த துரோகத்துக்கு, பரிகாரம் தேடுவதற்குப் பதில் துரோகத்தை நியாயப்படுத்தி மூடிமறைக்க, தம்பிகள் தொடர்ந்தும் ~~தொப்பி பிரட்டிகள்|| என்று கேவலமாக தமது குறுந்தேசிய இனவாத அரசியலை கட்டமைத்தனர். தமிழ்த் தலைமைகள் முஸ்லீம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை கைவிட்டு, தானே தொப்பி பிரட்டியாக இருப்பதை மூடிமறைக்க, எதிர் தரப்புக்கு அவர்களின் தொப்பி மேல் அடையாளப்படுத்திக் கூறிய அரசியலே, எந்த வேறுபாடும் இன்றி இன்றுவரை அவர்கள் மேலான வன்முறையாக தொடருகின்றது.

முஸ்லீம் மக்கள் வந்தேறு குடிகளா?

முஸ்லீம் மக்கள் வந்;தேறு குடிகள் என்பதும், அவர்கள் தமிழ் தேசிய இனம் அல்ல என்பதும் அர்த்தமற்ற ஆதாரமற்ற இனவாதமாகும். இதைத் தான் பெருந்தேசிய இனவாதமும் தமிழ் இனத்துக்கு எந்த வேறுபாமின்றி கூறுகின்றது. இஸ்லாம் மதம் என்பது அரபு தேசத்தில் இருந்து இலங்கை வந்ததே ஒழிய, அங்கிருந்து அரபு மக்கள் வரவில்லை. அதாவது முஸ்லிம் மக்கள் அரபு வழிவந்தவர்கள் அல்ல. பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்கள், இஸ்லாம் மதக் தத்துவத்தை ஏற்றுக் கொண்டதற்கு அப்பால், அவர்கள் அங்கிருந்து வந்தவர்கள் அல்ல. சாதிய அடக்குமுறை உடன்கட்டை ஏற்றுதல் போன்ற காட்டுமிராண்டித் தனங்களைக் கொண்ட மதமாக இந்து மதம் தன்னை நியாயப்படுத்தி நீடிக்கும் போது, மற்றைய மதத் தத்துவங்களை மக்கள் ஏற்பது இயற்கையாக இருந்தது. ஏன் கிறிஸ்துவ மதம் கூட வெளியில் இருந்து காலனித்துவ வாதிகளால் காலனித்துவ நோக்கத்துக்காக கொண்டு வந்தவை தான்;. ஏன் இன்று எம் மண்ணில் இருக்கின்ற இந்துமதம் கூட, எம்மண்ணுக்கு புதியவைதான். எமது பாரம்பரிய மதமாக இன்று இருக்கும் இந்துமதம் என்றும் இருக்கவில்லை. வட இந்தியாவில் இருந்து வந்த இன்றைய இந்து மதம், எம் மண்ணில் பாரம்பரிய வழிபாடுகளை அழித்து அதன் மேல் தன்னை நிறுவிக் கொண்டதே. ஏன் பிள்ளையார் வழிபாடு முதல் இன்று அனுமார் வழிபாடு வரை இந்திய பார்ப்பணியத்தின் அதிகாரத்தின் வரலாற்று செல்வாக்குடன், எம் மண்ணில் அண்மைக் காலத்தில் புகுந்தவையே. இதை விட முஸ்லீம் வழிபாடுகள் காலத்தாலும் அறிவாலும் முந்தியவை.

வடக்கில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனக்கலவரம் ஏற்பட இருந்ததா?

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 1993 இல் பி.பி.சி க்கு வழங்கிய பேட்டியில் ~~யாழ்ப்பாணத்திலும் அப்போது தமிழ்-முஸ்லீம் கலவரம் பரவும் அபாயமிருந்தது. அதனால் தான் முஸ்லீம்களை தற்காலிகமாக யாழ்ப்பாணத்தை விட்டுச் செல்லுமாறு கூறினோம். அதையும் அவர்களின் பாதுகாப்புக்காகவே செய்தோம்.|| என்கிறார். யாழ்க்குடாநாட்டையும் வன்னியின் பெரும் பகுதியையும் கிழக்கின் ஒரு பகுதியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒரு இயக்கத்தின் தலைவரின் பேட்டி, அந்த இயக்கத்தின் குறுந்தேசியத்தின் இனவாத இயல்பை தெளிவாகவே பட்டவர்த்தமாக்கியது. வடக்கில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரம் (கவனிக்கவும்; இது மதக்கலவரம் அல்ல, ஒரு இனக் கலவரம். இது முஸ்லீம் இனத்தை இனமாக பார்க்கின்றதே ஒழிய மதமாக அல்ல) நடக்க இருந்தது என்பதை, வடக்கில் வாழ்ந்த எந்த தமிழனாவது ஒப்புக் கொள்வானா! தமிழ் மக்கள் சொந்த ஆளுமையில் செயற்படும் ஆற்றல் இழந்து இயக்கங்களின் ஆயுத வன்முறைக்கு அடிமையாகியதன் பின்பு, சுயேட்சையான செயல் என்பது கற்பனைக்குரியதே. அதுவும் ஒரு இனக் கலவரம் நடத்துமளவுக்கு! என்ன ஆச்சரியமான விளக்கம்! இந்த இனக் கலவர புனைவுகளை அங்கு வாழ்ந்த சாதாரண மக்கள் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அது சரி, ஒரு இனக்கலவரம் நடக்க இருந்தது எனின், இதை புலிகள் அரசியல் ரீதியாக எப்படி எதிர்த்துப் போராடினீர்கள். இதை தடுக்க என்ன செய்தீர்கள்;. முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் தான் எனின், தமிழ் மக்களின் இன உணர்வுகளை அல்லது மத உணர்வுகளை எதிர்த்து போராடி, முஸ்லீம் மக்களை பாதுகாத்து சகோரதத்துவத்தை நிலை நாட்டியிருக்க வேண்டுமல்லவா! எங்கே! எப்படி! முஸ்லீம் சகோரதத்துவத்தை பாதுகாத்தீர்கள்!; இனக் கலவரத்தை தடுக்க முஸ்லீம் மக்களை பாதுகாக்கவே வெளியேற்னீர்கள் எனின், அந்த மக்களின் உழைப்பை ஏன் ஈவிரக்கமின்றி கொள்ளையடித்தீர்கள்;? இது பகற்கொள்ளை இல்லை எனின், இது என்ன? அன்றாடம் சுரண்டலுக்குள்ளாகிய வண்ணம் கூலிக்குச் சென்று உழைத்த உழைப்பை அபகரிப்பதை என்ன என்பது? மீண்டும் சுரண்டியதற்கு அப்பால் வேறு எதுவுமில்லை. அவர்களின் உழைப்பிலான சொத்தை பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லச் சொன்னீர்களா? யாரிடம் பாதுகாக்க? நல்ல வேடிக்கையான வாதங்கள் தான். எங்கே அந்த மக்களின் சொத்துகள். அந்த மக்களின் உழைப்பை எல்லாம் ஏலம் விட்டு அரையும்குறையுமாக விற்ற பின்பு, அவர்களை பாதுகாக்கவே நாம் வெளியேற்றினோம் என்று சொல்வது, புலிகளின் அரசியல் நேர்மையை, புலிகளின் வாக்கை எல்லாத் தளத்திலும் நிபந்தனையின்றி; தகர்த்துவிடுகின்றது.


http://www.tamilcircle.net/Bamini/samar_01_31/samar29/samar_29_05.htm

Izzath said...

LTTE ஐ விமர்சித்து இக்கட்டுரையை எழுதிஉள்ளீர்கள். உங்கள் நேர்மையை, மனத்துணிவை பாராட்ட வார்த்தைகள் இல்லை இராயகரன் அவர்களே.புலிகள் இவ்வாறு செய்வது மிகவும் துயரம் தருவதாக உள்ளது. ஆழமான முறையில் அலசப்பட்டுள்ள கட்டுரை.

இஸ்ஸத்.

Izzath said...

Dear Erayakaran,
It is really GREAT you have the courage and honesty to crtitcise LTTE.

Anbudan
Izzath

Izzath said...

தமிழர்கள் ஒன்றினைவது 'ஈழ'த்திற்கு நல்லது என்பதே எனது புறிதல். மாறாக வேற்றுமையை வளர்த்தால் சிங்கள பேரினவதிகளுக்கே லாபமாய முடியும்

நான் வணக்கத்துடன் அவர்களின் இக்கருத்தை ஆதரிக்கின்றேன்.

தமிழரங்கம் said...

கைப்பிற்றலின் கருத்துக்கு

களையெடுத்தல் என்பது நாளந்தம் ஒன்று முதல் ஜவரை கொல்வது அல்ல. இது 1986 முதலாக தொடர்ச்சியாக நாள் தவறது நடக்கின்றது. இது போல் ஒரு இனத்தை முற்றாக துசித்து துரோகிய காட்டி வன்முறையை எவுவது அல்ல. முதூரில் 40000 முஸ்லீங்கள் இருந்தார்கள் என்றால், அவாகள் அனைவரை துரோகியாக கபட்டி கொன்றாலும் ஆதாரிக்கவும், விளக்கம் கொடுக்கவும் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் இலங்கை அரசுக்கு அல்லது புலியல்லாத ஒரு கட்சிக்கு வாக்குப் போட்டதாக கூறி நியாயப்படுத்தவதும் நிகழும். இத எமது கற்பனை அல்ல. இதுதான் இன்றைய புலித் தேசிய அரசியலாக உள்ளது.
இதன் பின்னால் ஒரு கும்பல் பிழைத்தபடி அலைகின்றது. மற்றொரு கும்பல் பொழுது போக்குக்காக கதைத்த வம்பளக்கின்றது. மனிதம் நாளந்தம் செத்து மடிகின்றது.

CAPitalZ said...

40000 முஸ்லிம்களை கொன்றார்களா? இல்லையே? அப்போ, நீங்கள் சொல்வது போல் ஏன் அந்த ஒரு சில "முஸ்லிம்களை"க் கொன்றார்கள்?

கொல்லப்பட்டவர்கள் "முஸ்லிம்கள்" என்று நீங்கள் பார்க்கிறீர்கள். கொல்லப்பட்டவர்கள் "தமிரின் துரோகிகள்" என்று தான் கிறிஸ்தவர்களும், சைவத்தார்களும் அன்றிலிருந்து இன்றுவரை உணர்ந்து ஒற்றுமையாய் நிற்கிறார்கள்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/
htpp://1letter.wordpress.com/

unarvukal said...

ஈழத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்களா? வந்தேறு குடிகளா? தொப்பி பிரட்டிகளா? போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்களா?

மேலேயுள்ள எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஓம், ஆம், YES...

ஈழத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்களா?

ஆம் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்கள், அதுவும் மிகவும் கொடூரமானமுறையில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தாக்கி, கிழக்கு மாகாணத்தில் பல தமிழ்க்கிராமங்களை அழித்தார்கள், அம்பாறை மாவட்டத்தில் சேனைக்குடியிருப்பு, நாலாம் கொலனி, துறைநீலாவணை, சத்துருக்கொண்டான், வீரமுனை, பிள்ளையாரடி, தானாமுனை, செங்கலடி,ஏறாவூர், குடியிருப்பு, குருக்கள் மடம், களுவாஞ்சிக் குடி, பெரிய கல்லாறு, கல்முனை, காரைதீவு போன்ற இடங்களிலெல்லாம் எப்படி முஸ்லீம் ஊர்காவல் படையின் ஜிகாதிகள் தனியாகவும், சிங்கள இராணுவத்துடன் இணைந்து தமிழர்களைப் படுகொலை செய்தார்கள் என்பதைச் சர்வதேச மனிதவுரிமைச் சங்கம் கூட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒருவருமில்லாமல் படுகொலை செய்து தமிழ்க் கிராமங்களை அழித்தவர்கள் முஸ்லிம்கள். அம்பாறை மாவட்டத்தில், சில கிராமங்களில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் அழித்தவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம்கள். இதற்கான ஆதாரங்கள் இணையத்தில் Google இல் நிறைய உண்டு, நான் சொல்வதை மட்டும் நம்பத் தேவையில்லை.

எந்தக் கிராமத்தில் முஸ்லீம்களை மட்டும் தெரிவு செய்து தமிழர்கள் அழித்தார்கள்?, இன்றும் கிழக்கில் மட்டுமல்ல, 95% தமிழர்கள் மட்டும் வாழும் வடக்கில் கூட முஸ்லீம் கிராமங்கள் உண்டு, மூதூருக்கு முஸ்லீம்களை அழிக்கப் போனதாக ஈழத்தமிழர்களில் உள்ள வெறுப்பில் சிங்கள அரசாங்கத்துக்காகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் பல வலைப்பதிவாளர்கள்.

முஸ்லீம்களை அழிக்க விரும்பினால் மூதூருக்கு ஏன் போக வேண்டும், யாழ்ப்பாணத்தில், மன்னாரில், தாராபுரத்தில், எருக்கலம்பிட்டியில், வவுனியாவில், விடத்தல் தீவில் எல்லாம் செய்ய முடியாதா?, சும்மா பம்மாத்துக் கதை விடுகிறார்கள், தமிழைப் பேசிக் கொண்டே தமிழினத்தின் முதுகில் குத்துகிறார்கள்.

முஸ்லீம் மக்கள் வந்தேறு குடிகளா?

முஸ்லீம்கள் வந்தேறு குடிகளென அவர்களே வாதாடும் போது, தமிழ்மணத்தில் உள்ள ஒருவர் மட்டும் அவர்கள் வந்தேறு குடிகள் இல்லையாம், தம்மை அரபுக்களின் வழிவந்தவர்களென பெருமைப்படும் இலங்கை முஸ்லிம்களை, இல்லையென மறுதலிக்கும் இவர் இதை இலங்கை முஸ்லீம்களிடம் சொன்னால் மூக்கையுடைத்து விடுவார்கள்.
இலங்கையிலுள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவரும் தமிழர்கள் தான் என்று வாதாடி, முஸ்லீம்களைத் தமிழர்களாக தம்மோடு இணையுமாறு, இன்று நேற்றல்ல 1880 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் கேட்டது மட்டுமல்ல, அவர் Royal Asiatic Society யின் முன்பு "The Ethnology of the Moors of Ceylon என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தார். அதில் சேர் இராமநாதன் வாதாடியது என்னவென்றால், எப்படித் தமிழர்கள் இந்துக்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்களோ, அதே போல் தான் முஸ்லீம்களாகவும் இருக்கின்றார்கள் என்றும், மொழி, கலை, கலாச்சார, பண்பாடு, பெரும்பாலான தமிழ் முஸ்லீம்களின் ஒருவமைப்பு எல்லாவற்றையும் ஆதாரம் காட்டி, இலங்கை முஸ்லீம்கள், தென்னிந்தியாவின் தமிழர்கள், ஒரு சில அரேபிய வியாபாரிகளின் திருமணத் தொடர்பு ஏற்பட்டுக் கலப்பேற்பட்டிருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் கலப்பற்ற, இஸ்லாத்தைத் தழுவிய தமிழர்கள் என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார் சேர் இராமநாதன். ஈழத்தமிழர்கள் மதரீதியில் பிளவு படுவதை 1880 யிலேயே ஈழத்தமிழ்த்தலைவர்கள் விரும்பவில்லை.

ஆனால் சேர் ராமநாதனின் இந்த தமிழ்ச்சகோதரத்துவத்தை மலே முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்த்தார்கள் இலங்கையின் "தமிழ்" முஸ்லீம்கள். கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையிருப்பதை மறுக்காத முஸ்லீம்கள், தாங்கள் தமிழர்களல்ல என்பதை மிகவும் உறுதியாகக் கூறியதுடன், இதற்குக் காரணம் ‘inevitable process of acculturation of a minority people’ என்று கூறினார்கள்.முஸ்லீம்கள் தமிழைப் பேசுவதற்குக் காரணம், இலங்கையின் துறைமுகங்களிலும், தென்னிந்தியத் துறைமுகங்களிலும், தமிழ் தான் வர்த்தகத்தின் மொழி( lingua franca’ of commerce) அதனால் தான் தமிழைப் பேசுகிறோம் என்று சேர் இராமநாதனுக்குத் திமிராகப் பதிலளித்தார்கள் "தமிழ்" முஸ்லீம்கள். அதே வேளையில் தம்முடைய உடலில் தமிழ் இரத்தக் கலப்புள்ளதையும் அவர்கள் மறுக்கவில்லை, ஆனால் அவர்களில் சிலருக்கு தமது உடலிலுள்ள சிறியளவு அரபு, அல்லது ஆப்கானிகளின் இரத்தம், தமிழை விட முக்கியமானது.


இலங்கை முஸ்லீம்கள் தொப்பி பிரட்டிகளா?

ஓம், தொப்பி பிரட்டிகள் தான் முஸ்லீம்களைத் "தொப்பி பிரட்டிகள்" என்று இலங்கையில் அழைப்பதற்குக் காரணம், அவர்கள் எங்கு போகிறார்களோ, அங்கு சூழ்நிலைக்கேற்றவாறு, சுயலாபத்துக்காக அடையாளத்தையும், விசுவாசத்தையும் மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள் என்பது தான். நான் சொல்லுவதென்னவென்றால் தமிழர்கள், இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் சுயநலத்துக்காகவும், சலுகைகளுக்காகவும் அவர்கள் தமது தமிழடையாளத்தை மறுதலித்தார்கள் என்பது தான் சரியானதாகும்.

யாழ்ப்பாணத்தில் தம்மைத் தமிழர்கள் எனவும், சிங்களப்பகுதிகளில் தாம் சிங்கள ஆதரவு முஸ்லீம்கள் எனவும், எங்கெல்லாம் ஒரு ரூபாய் கிடைக்குமோ, அங்கெல்லாம் தொப்பியைப் பிரட்டியவர்கள் இவர்கள், தாம் தமிழர்களல்ல என மறுத்தவர்கள் இவர்கள். நாங்களாவது முஸ்லீம்களை தமிழர்கள், எங்களின் சகோதரர்கள் என அரவணைக்கத் தயங்குவதில்லை. ஆனால் சிங்களவ்ர்கள் இன்றும் "மரக்கல மினுஸ்"* அதாவது கள்ளத்தோணியில் வந்தவர்கள் என்று தான் அழைக்கிறார்கள். அதைக்கூட முஸ்லீம்கள் பெருமையுடன் ஏற்றுக் கொண்டார்கள்.

இலங்கை முஸ்லீம்களும் தாம் முஸ்லீம்கள் அதாவது அரபுக்கள் மட்டும் தான் என்று ஒரு அடையாளத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் பிரச்சனையே இல்லையே, அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு கதை, கொழும்பில் ஒரு கதையென தொப்பியைப் பிரட்டுவதால் தான் இந்தப் பிரச்சனையே. அவர்களின் சந்தர்ப்பவாததைத் தான் இலங்கைத் தமிழர்கள் வெறுக்கிறார்கள், தமிழநாட்டில் அவர்கள் தமிழர்கள் என்றால் இலங்கையில் மட்டும் எப்படி அரபுக்களானார்கள், வெறும் சுயலாபத்துக்கான சந்தர்ப்பவாதம் தானே, எந்த இலங்கைத் தமிழர்களும், முஸ்லீம்களைத் தமிழராகும் படி கேட்கவில்லை, நானும் கூடக் கேட்கவில்லை, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத் தான் நான் வெறுக்கிறேனே தவிர முஸ்லீம்களையல்ல.

முஸ்லீம்களின், தாம் தமிழரல்ல எனும் தமிழெதிர்ப்பைத் தான் சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால் தான் சிங்கள ராணுவம், Muslim Home Guards ஐ உருவாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் "தமிழ்" முஸ்லீம்கள்,சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து, எத்தனை தமிழ்க்கிராமங்களைப் பூண்டோடழித்துப் படுகொலை செய்து, தமிழர்களைத் தமிழ்க்கிராமங்களை விட்டு வெளியேற்றினார்கள், எத்தனை தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து, புலிகளுக்கெதிராக உளவு பார்த்தற்காக, பிரபாகரன் முஸ்லீம்களை வெளியேற்றிய போது, யாராவது முஸ்லீம்கள் கொல்லப் பட்டார்களா? எந்த முஸ்லீம் பெண்ணாவது கற்பழிக்கப்பட்டாரா. சத்துருக்கொண்டான் கிராமத்தில் முஸ்லீம்கள் என்ன செய்து, தமிழர்களே இல்லாமல் செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்

நான் ஒன்றும் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதற்காக இதைச் சொல்லவில்லை, பிரபாகரன் கூட யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார், எந்த முஸ்லீமும் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டார்களா?

முஸ்லீம்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்கள்.

ஆம், காட்டிக் கொடுத்தார்கள், ஈழவிடுதலையின் ஆரம்பகால கட்டத்தில் தமிழர்களுடன், தமிழைப் பேசிக்கொண்டு தாயும், பிள்ளையும் போல், தமிழ்மண்ணில் வாழ்ந்து கொண்டே தமிழர்களுக்கெதிராக யாழ்ப்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்துக்கு உளவு பார்த்தார்கள், அதனால் சிங்கள இராணுவத்துக்கு வெற்றியையும், பல இளந்தமிழர்களின் சாவுக்கும் காராணமாக இருந்தார்கள், அதனால் ஈழவிடுதலைப் போரைக் காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால். பிரபாகரன் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றினார்.

அப்படி பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களை வெளியேற்றும் போதும், முஸ்லீம்களின் உயிருக்கோ, மானத்துக்கோ, உடைமைக்கோ எந்த விதப்பாதிப்பையும் ஏற்படுத்த ஈழத்தமிழர்களின் பெருந்தன்மையும், சகோதரவுணர்வும் இடங்கொடுக்கவில்லை. 2003 இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்குப் பிரபாகரன் பகிரங்க மன்னிப்புக் கேட்டு விளக்கமளித்த போது, முஸ்லீம் தலைவர்கள் பலரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டைக், கண்ணியத்தை, சகோதரவுணர்வை மெச்சியதை இத் தருணத்தில் நினைவு கூர்வது நல்லது.

மூதூரில் முஸ்லீம்களைக் கொல்வது தான் விடுதலைப் புலிகளின் நோக்கமென்றால், இந்தியப் பிரிவினையின் போது முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்றது போல், குஜராத்தில் முஸ்லீம்களைக் கொன்றது போல், யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களை வெளியேற்றும் போது விடுதலைப் புலிகள் முஸ்லீம்களைக் கொன்றிருக்க முடியாதா? மூதூருக்குப் போய்த்தான் கொல்ல வேண்டுமா, சொல்லுகிறவன் சொன்னா சொந்தப் புத்தி எங்கு போனது.

ஈழத்தமிழர்களின் மேலும், திராவிட இயக்கங்களிலும், விடுதலைப் புலிகளிலுமுள்ள காழ்ப்புணர்வால், ஈழவிடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தி, வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்கச் சிலர் முனைவதை ஈழத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம், இப்படிச் செய்து, தமிழனென்று தம்மை அழைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தும் ஈனத்தனத்தை தமிழர்களின் சரித்திரம் ஒரு போதும் மன்னிக்காது

http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=2067