தமிழ் அரங்கம்

Tuesday, August 5, 2008

கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக...

சென்னைகுரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கழகம் மூலம் 7ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ. 1,500, 11ஆம் வகுப்புக்கு ரூ. 2,500, அரசு இலவசமாகத் தரும் பாடப்புத்தகங்களுக்கு ரூ.100 என கடந்த ஆண்டில் பல லட்ச ரூபாயை மாணவர்களிடம் கொள்ளையடித்த நிர்வாகம், இவ்வாண்டு வசூல் வேட்டையை நடத்தியது. இதனையறிந்த புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியினர், ""பெற்றோர்ஆசிரியர் கழகம் எனும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டியடிப்போம்! சட்டவிரோத கட்டாய நன்கொடைக்கு முடிவு கட்டுவோம்!'' எனும் முழக்கத்துடன் துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் இப்பகுதியில் விரிவாகப் பிரச்சாரம் செய்து, அதன் தொடர்ச்சியாக பெற்றோர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டி 17.6.08 அன்று காலை 11 மணியளவில் பள்ளித் தலைமையாசிரியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெருந்திரளாகப் பெற்றோர்களும் மாணவர்களும் சூழ, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த முற்றுகைப் போராட்டத்தால் அரண்டு போன பள்ளி நிர்வாகமும் பெற்றோர்ஆசிரியர் கழகப் புள்ளிகளும் இனி நன்கொடை ஏதும் வாங்கமாட்டோம்; வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று உறுதியளித்தனர். மாவட்டக் கல்வி அதிகாரிகள் இப்போராட்டச் செய்தியை அறிந்ததும், மறுநாளே அப்பள்ளியில் சோதனை நடத்தி, மாணவர்களிடம் கட்டாயமாகப் பறித்த தொகையை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். நன்கொடை எதுவும் மாணவர்களிடம் வாங்கக் கூடாது என்று அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமணா அறிவித்துள்ளார்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: