தமிழ் அரங்கம்

Sunday, August 10, 2008

இந்துமத வெறியர்களின் சதித்தனம் மண்ணைக் கவ்வியது

இந்தப் பனிலிங்கம் மற்றும் அதைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கும் பொறுப்பு, பேடாகுந்த் பகுதியில் வசிக்கும் முசுலீம் குடும்பங்களிடம் தான் இருந்து வந்தது. 1990களில் காசுமீரில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் வெடித்த பிறகு, அதற்கு எதிரான ஆயுதமாக, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வாய்ப்பாக, இந்த யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதோடு, அரசே ஏற்பாடு செய்து நடத்தும் யாத்திரையாக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கும்பலோ, ஹஜ் யாத்திரையைப் போன்று, அமர்நாத் யாத்திரையை புனிதப்படுத்தும் தில்லு முல்லைச் செய்தது; செய்தும் வருகிறது. பார்ப்பனர்கள் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகை, முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிடும் விநாயகர் ஊர்வலமாக மாற்றப்பட்டதைப் போல, அமர்நாத் யாத்திரை, காசுமீர் முசுலீம்களுக்கு எதிரானதாக உருமாற்றப்பட்டது. பக்தி, இந்து பாசிசமாகியது.

கரசேவைக்குத் தொண்டர்களைத் திரட்டி அனுப்புவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கும் "இந்துக்களை'த் திரட்டி அனுப்புவதை ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகவே செய்து வருகிறது. இதனால் பனிலிங்கத்தை வணங்க வரும் "பக்தர்களின்' எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக் கொண்டே செல்லத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காரணமாகக் காட்டி, இரண்டு வாரமே நடந்து வந்த அமர்நாத் யாத்திரையின் காலஅளவு, ஒரு மாத காலமாக நீட்டிக்கப்பட்டது. யாத்திரையை நிர்வகிப்பது என்ற பெயரில் தனியாக வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவராக ஜம்முகாசுமீர் மாநில ஆளுநர் இருப்பார் என்றும்; அதே சமயம் ஆளுநர் இந்துவாக இருந்தால் மட்டுமே வாரியத்தின் தலைவராக முடியும் என்றும் விதிகள் உருவாக்கப்பட்டன. முசுலீம்களின் மேற்பார்வையிலும்; உதவியோடும் நடந்து வந்த அமர்நாத் யாத்திரையை அவர்களிடமிருந்து பறித்து, இந்துமயமாக்கும் சதிகள் 1990க்குப் பிறகு ஒவ்வொன்றாக அரங்கேற்றப்பட்டன.

2 comments:

நல்லதந்தி said...

ஹஜ் யாத்திரை போவதற்கு இந்துக்கள் ஏன் காசு கொடுக்க வேண்டும்.

உங்கள் பதிவு இந்தியர்களைப் பிரித்து காட்டியதால் எனக்குள் வந்த கேள்வி!.
இந்தியர்கள் எல்லோரும் சமமானவர்களே,ஒரு தாயின் புதல்வர்களே,சட்டத்தின் முன்பு எல்லோரும் சமமானவர்களே, என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்!

தமிழரங்கம் said...

1.இந்தியா சட்டம் என்பதே அனைவருக்கும் சமானதல்ல. இது இந்துச் சட்டம். இப்படி சட்டமே காவிமயமானது.

2.கஷ்மீர் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசம். இதனால் அரசே ஒத்துக்கொண்ட சிறப்பு விதிகள் உண்டு.

3.இந்த பனி என்பது இயற்கையானது. மதசார்பற்ற அரசு அதற்கு எப்படி உடந்தையாக இருக்க முடியும்;?

4.சுற்றுலவுக்குரியதை தீடீர் வழிபாட்டுக்குரியதாக்கிய இந்துத்துவ காவிகள் தான், இதை ஊதிப்பெருக்கி மக்களின் பிளவை வித்திட்டவர்கள்.

5.காவிமயமான அதிகார வார்க்கத்தின், தனிபட்ட சாதிய இந்துத்துவ வக்கிரங்கள் தான் மக்களை பிளக்கின்றது

இப்படி பல