தமிழ் அரங்கம்

Monday, August 11, 2008

இந்திய அணு உலைகள் பாதுகாப்பு ஒப்பந்தம் தங்க முலாம் பூசிய விலங்கு! : சர்வதேச அணுசக்தி முகாமை, இந்திய அணுசக்தித் துறையை அமெரிக்காவிற்காகக் கண்காணிக்கும

மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப் போயிருந்தால், இந்தியாஅமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒப்பந்தத்துக்கு (123 ஒப்பந்தம்) என்ன நேர்ந்திருக்கும்? அவ்வொப்பந்தம் நடைமுறைக்கு வர இன்னும் சில மாதங்கள் கால தாமதம் ஏற்பட்டிருக்குமேயொழிய, அவ்வொப்பந்தம் காலாவதி ஆகிப் போயிருக்காது. ஏனென்றால், பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் காங்கிரசு கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை.

அதனால்தான், மன்மோகன் சிங், தனது ஆட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்துவிட்டதைப் பற்றிக் கூட கவலைப்படாமல், இந்தியாவிற்கும், சர்வதேச அணுசக்தி முகமைக்கும் இடையே முடிவாகியுள்ள கண்காணிப்பு ஒப்பந்தத்தை, அம்முகமையின் இயக்குநர்களின் ஒப்புதலைப் பெற கடந்த ஜூலை 18 அன்று அனுப்பி வைத்தார். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, இதே தேதியில்தான் (ஜýலை 18, 2005) அமெரிக்காஇந்தியா இடையே இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது; அவ்வொப்பந்தத்தின் மூன்றாமாண்டு நிறைவு நாளில், இந்தியாவிற்கான அணுஉலை கண்காணிப்பு ஒப்பந்தத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்களின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்ததன் மூலம், 123 ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களை எள்ளி.... ...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: