தமிழ் அரங்கம்

Saturday, August 16, 2008

மிதக்கும் சிறைச்சாலைகள்: அமெரிக்க பயங்கரவாதத்தின் புதிய முகம்

இன்றுவரை நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாத 26 ஆயிரம் பேர் இரகசியச் சிறையில் இருப்பதாய் அமெரிக்க அரசு சொல்லி இருப்பினும், 2001 முதல் கைது செய்யப்பட்டவர்கள் 80 ஆயிரம் என்கிறது மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை. அந்த 80 ஆயிரம் பேரும் எங்கே உள்ளனர்? அவர்களின் கதி என்ன? என்பதை அமெரிக்கா முழுமையாகத் தெரிவிக்க வேண்டும் எனும் குரல் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி யுள்ளது. உலகின் கொடூரமான பயங்கரவாதி அமெரிக்காதான் எனும் உண்மையும் பலருக்குப் புரியத் தொடங்கி யுள்ளது.
வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர்களை அந்தமான், மலேயா போன்ற கண்காணாத தீவுகளுக்கு நாடு கடத்தினார்கள், அன்றைய காலனியாதிக்க வாதிகள். அவ்வீரர்களை தாய்நாட்டில் இருந்து நிரந்தரமாய்ப் பெயர வைப்பதன் மூலம் எதிர்ப்புணர்வைக் கருகச் செய்து விடலாம் என்று கணக்குப் போட்டனர். அன்று மட்டுமல்ல, இன்றும் ஆளும் வர்க்கங்கள் உலகெங்கிலும் இதே போன்ற பல ஒடுக்குமுறைகளைத்தான் ஏவி வருகின்றன.

No comments: