தமிழ் அரங்கம்

Monday, September 15, 2008

போலி கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணி: புதிய மொந்தையில் பழைய கள்ளு

காங்கிரசு, பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடன் உறவு இல்லாதவர்களுடன்தான் கூட்டணி என்ற முடிவை தமிழகத்தின் இடது, வலது போலி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தாங்கள் நீடிக்கவில்லை என்று இக்கட்சிகள் உணர்த்தியுள்ளதோடு, ""காங்கிரசா, இடதுசாரிகளா? யாருடன் கூட்டணி என்பதை இனி முடிவெடுக்க வேண்டியது தி.மு.க.தான்'' என்றும் கூறிவிட்டன. பா.ஜ.க. பக்கம் அ.தி.மு.க. சாய்ந்துவிடாமல் கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கும்விதமாக இக்கட்சிகள் இம்முடிவை அறிவித்துள்ளன.

அணுசக்தி ஒப்பந்தத்தையொட்டி காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொண்ட பிறகு, நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசு அரசுக்கு எதிராக வாக்களிப்பதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் போலி கம்யூனிஸ்டுகளும் இணைந்தனர். அதைத் தொடர்ந்து இடதுசாரி கூட்டணிக் கட்சிகளும் தேவேகவுடா, அஜித்சிங், சௌதாலா, சந்திரபாபு நாயுடு, பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையிலான கட்சிகளும் மாயாவதி கட்சியோடு கூட்டணி கட்டிக் கொண்டு, மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என்றும் பேச்சு வார்த்தைகள் நடத்தின. இதனை காங்கிரசு, பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற மூன்றாவது அணி என்னும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என்றும் போலி கம்யூனிஸ்டுகள் நாமகரணம் சூட்டியுள்ளனர்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: