தமிழ் அரங்கம்

Saturday, October 4, 2008

உலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்வி!

"கம்யூனிசம் தோற்றுவிட்டது; தனியார்மயம் தாராளமயம் உலகமயம்தான் ஒரே தீர்வு!'' என்று எக்காளமிட்ட முதலாளித்துவம், அனைத்துலக முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமான அமெரிக்காவிலேயே முதுகெலும்பு முறிந்து மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டு விட்டது. அரசின் தலையீடற்ற சூதாட்டப் பொருளாதாரக் கொள்ளை; கட்டுப்பாடற்ற ஊகவணிகச் சூறையாடல்; எல்லையில்லா தில்லுமுல்லு மோசடிகள் இவற்றால் விபரீத விளைவுகள் நேரிடும் என்று தெரிந்தே "அப்படியெல்லாம் நடக்காது; எல்லாம் எங்களுக்குத் தெரியும்' என்ற ஆணவத்தோடு செயல்பட்ட தனியார் ஏகபோக நிதிக் கழகங்கள், "சப் பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்கு தரப்படும் கடன்களால் ஆதாயமடைந்த பின்னர், நெருக்கடி தீவிரமாகி அடுத்தடுத்து திவாலாகி குப்புறவிழுந்து கிடக்கின்றன.

கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மாக் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியதும் அமெரிக்க அரசு, அவற்றை அரசுடைமையாக்கி நிதிச் சந்தையை தூக்கி நிறுத்த 20,000 கோடி டாலரைக் கொட்டியது. அதைத் தொடர்ந்து, உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின. அதற்கடுத்து, மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி. எனப்படும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குருப் நிறுவனம் திவாலாகி, அமெரிக்க அரசு 8500 கோடி டாலரை இழப்பீடாகக் கொடுத்து அரசுடைமையாக்கியது. தற்போது............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: