தமிழ் அரங்கம்

Saturday, October 4, 2008

தமிழீழத் தேசிய குடிபானம் கொக்கோகோலாவாக .....

மூன்றாவது தமழீழத் தேசிய விளையாடு விழாவை புலிகள் 20.2.2004 கிளிநொச்சியில் நடத்தினர். அந்த தேசிய விழாவில் கொக்கோகோலா விளம்பரங்கள், புலிக் கொடியை விட பெரியளவில், புலிக் கொடியின் பின்னணியில் வடிவமைக்கப்பட்டடிருந்தது. (பார்க்க 21.2.2004 தினக்குரல் பத்திரிகையில்) சாதாரண செய்திப் பத்திரிகையிலேயே இப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. உத்தியோகபூர்வமற்ற வகையில் புலிகளின் ஆதரவுடன், தமிழீழத் தேசிய குடிபானம் கொக்கோகோலாவாக மாறியுள்ளது. இதன் மூலம் துரோகியான தேசிய குளிர்பானத்துக்கு, துரோக தண்டனையாக மரணதண்டனை வழங்கப்பட்டு விட்டது. இதை யாரும் உரிமை கோரவில்லை. இதற்காக வழமைபோல் யாரும் குரல் கொடுக்கவுமில்லை. புலிகள் பன்னாட்டு பொருட்களின் இடைத்தரகராக மாறிவரும் நிலையில், தேசிய பொருளாதாரத்தின் எஞ்சிய மூச்சுகளும் சேடமிழுக்கத் தொடங்கியுள்ளது. புலிகள் கொழும்புத் தரகர்களுக்கு கீழ் இருப்பதை விட, நேரடி தரகராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தான் சிங்கள இனவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்ற கூத்தை நடத்துகின்றனர்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: