தமிழ் அரங்கம்

Thursday, November 27, 2008

ஆளும் வர்க்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது பம்பாய் 'பயங்கரவாதம்"

பம்பாய் தாக்குதல் செப் 11 இல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலைப் போன்று, மீண்டும் உலகளாவில் பரப்பரப்புக்குள்ளாகியுள்ளது. ஒரு ஈராக்காக, ஆப்கானிஸ்தானாக, பாகிஸ்தானாக இந்தியாவை மாற்றப் போகின்றீர்களா இல்லையா என்பதை, இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

'பயங்கரவாதம்" என்று எதை நீங்கள் கருதுகின்றீர்களோ, அது எதனால் எப்படி ஏன் உருவாகின்றது என்பதை இனம் காணவும், அதற்கு காரணமானவர்களை எதிர்த்து சமூகம் போராடதவரை இது போன்ற 'பயங்கரவாதத்தை" யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. மாறாக 'பயங்கரவாதம்" செய்யும் நபர்களை, சமூக விழிப்புணர்வற்ற நீங்கள் தான் உற்பத்தி செய்கின்றீர்கள் என்ற உண்மை, உங்களையே அழிக்கும்.

இந்த 'பயங்கரவாதம்" போட்டி போட்டு நேரடி ஓளிபரப்பு ஊடாக பரபரப்பாக்கப்பட்டு, ஊடகவியல் வியாபாரம,; விளம்பரம் ஊடாக அரங்கேறுகின்றது. பெண்ணின் சதை முதல் 'பயங்கரவாத" அவலம் வரை, பணம் பண்ணுவதற்குத் தான் ஊடகவியல் சுதந்திரம் உதவுகின்றது. சமூக விழப்புணர்வுக்காக அல்ல.

கொள்ளையடித்த நாகரீக கனவான்களால் நிதிச் சந்தையைக் குப்புறக் கவிழ்த்த போது, இதே ஊடகவியல் பீதியை விளம்பரம் செய்தது போன்று, '
பயங்கரவாதமும் ... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: