தமிழ் அரங்கம்

Sunday, May 17, 2009

குசேலன் குபேரனான கதை

சி.பி.எம். என்பது ஒரு கட்சியல்ல; அதுவொரு முதலாளித்துவக் கம்பெனி. கம்பெனி என்றால் அதற்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கும். ஆண்டுதோறும் சொத்து விவரங்களைத் தணிக்கை செய்து, வருமான வரி அலுவலகத்துக்குச் சட்டப்படி தாக்கல் செய்யும். சி.பி.எம். கம்பெனியும் இப்படி ஆண்டுதோறும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து வருகிறது. கடந்த 2006 மார்ச் 31ஆம் தேதி முடிய உள்ள நிதியாண்டில் சி.பி.எம். கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 77.27 கோடிகளாகும்.

இழப்பதற்கு ஏதுமில்லாத தொழிலாளி வர்க்கத்தின் கட்சி; பஞ்சைப் பராரிகளின் கட்சி; சொத்துடமை முறையை ஒழித்து சோசலிசத்தைப் படைக்கப் போவதாகக் கூறிக் கொள்ளும் கட்சி இப்படிப்பட்ட கட்சிக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் அதுதான் உண்மை. முதலாளித்துவ கம்பெனிகளின் சொத்து நாள்தோறும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பல்கிப் பெருகுவதைப் போல, சி.பி.எம். கம்பெனியின் சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

No comments: