தமிழ் அரங்கம்

Monday, July 20, 2009

எம்மைச் சுற்றிய அரசியலில், நாம் எதிர் கொள்ளும் அரசியல் நெருக்கடிகள்

பல விடையங்களை பேசியாக வேண்டும். தோழமையுடனான அரசியல், முட்டி மோதாத அரசியல், இந்தப் போக்குகளுடன் நேரடியாக விவாதிக்க முடியாத தடைகள் இயல்பாக எம்மை பற்றிய எதிர்மறைக் கூறுகளுடன் பயணிக்கின்றது. இன்று இது எமக்கும், எமது அரசியலுக்கும் எதிராக படிப்படியாக மாறுகின்றது.

இன்று இதற்குரிய சூழல். சம காலத்தில் புலிப் பாசிசம் தற்கொலை செய்த நிலையில், அரச பாசிசம் அம்பலமாகும் போதும், பாசிசம் தன்னை மூடிமறைத்துக் கொண்டு எம்மை தம் அரசியலுக்கு எதிராக நிறுத்தி அரசியல் அரங்கில் நுழைய முனைகின்றது. கடந்து 20 வருடமாக நாம் போராடி நிலைநாட்டிய உண்மையை, எதுவுமற்றதாக காட்ட முனைகின்றது. எனது மொழியும், எனது அணுகுமுறையின் குறைபாடுகளும் தான், இதைக் கடக்க, கடந்தகாலத்திலும் இன்றும் தடையாக இருந்தாக, இருப்பதாக காட்ட முனைகின்றது. இதனால் நாம் சந்திக்கும் அரசியல் போராட்டங்கள் பல முனையாகி, அவை கடுமையானதாகின்றது.

ஈழத்து தமிழ் அரசியல் போக்கு என்பது, கடந்த 20 வருடமாக எதிர்ப்புரட்சி அரசியல் ஊடாக நகர்ந்துள்ளது. இது "தேசியத்தின்" பெயரில் ஜனநாயகத்தை மறுத்தது. மறுபக்கத்தில் "ஜனநாயகத்தின்" பெயரில் தேசியத்தை மறுத்தது. இந்தப் போக்கில் புலிப் பாசிசத்தினையும், அரச......
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: