தமிழ் அரங்கம்

Wednesday, November 18, 2009

ஹோண்டுராஸ் இராணுவப் புரட்சியும், அமெரிக்காவின் நப்பாசையும்!

தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது; இலவச ஆரம்பக் கல்வி அளிப்பது; போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட சில சில்லறை சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க முயன்றதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதிரடி இராணுவப் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்ட ""அதிசயத்தை'' நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள ஹோண்டு ராஸ் நாட்டில் கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த அதிரடி இராணுவப் புரட்சி அப்படிபட்ட அதிசய நிகழ்வாகும்.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நிகரகுவா, ஈக்வடார், எல்சல்வடார் ஆகிய நாடுகளில் 1980களில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெ ற்று வந்தபொழுது, அத்தேசிய விடுதலைப் போராட்டங்களைச் சீர் குலைக்கவும், ஒடுக்கவும் ஹோண்டு ராஸ்தான் அமெரிக்காவின் கைக்கூலியாகச் செயல்பட்டு வந்தது. குறிப்பாக, நிகரகுவாவில் அமெரிக்கா வுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வந்த சாண்டினிஸ்டா போராளிகளை ஒழிப்பதற்கான மையமாக ஹோண்டுராஸை அமெரிக்கா பயன்படுத்தி வந்தது. அன்று தொடங்கி இன்று வரை ஹோண்டுராஸ் நாட்டு இராணுவத்திற்கும், அதன் தளபதிகளுக்கும் அமெரிக்காதான் பயிற்சியும் நிதியுதவியும் அளித்து வருகிறது. ஹோண்டுராஸ் நாட்டு இராணுவத்திற்கும், அந்நாட்டைச் சேர்ந்த முதலாளிகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இருந்து வரும் பிணைப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தில்தான் அந் நாட்டு அரசியல் சாசனச் சட்டமே உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப் பட்ட பின்னணி கொண்ட நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் எந்த இலட்சணத்தில் செயல்பட்டிருக்கும் என்பதை விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை.

ஹோண்டுராஸில்
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: