தமிழ் அரங்கம்

Thursday, September 7, 2006

தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான் - 2ம் பதிவு

தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்

பி.இரயாகரன்
07.09.06

காலப்பொருத்தம் கருதி ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரை இங்கு மீளவும் வெளியிடப்படுகின்றது.
தமிழரங்கம்

ந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில், அதை வலிந்து புலி அரசியல் வரவழைத்துக் கொண்டேயுள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைப்புவாத அரசியல் பொறுக்கிகளும், கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் தமிழீழக் கனவைக் கவ்விக்கொண்டு ஊரைக் கூட்டி ஊளையிடுகின்றன. இந்தக் கும்பல் தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கிவிட்டு, வெள்ளத்தின் போக்கில் அடித்துச் செல்ல வைத்துள்ளனர். எது நடக்கும் எது நடக்காது என்று தெரியாத ஒரு சூனியத்தில் மக்கள் வாழ்வுக்காக தத்தளிக்கின்றனர்.


சொந்த அரசியல் வேலைத் திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியில் சாதிக்க முடியும், என்ற நடைமுறை ரீதியான சாத்தியமான வேலைத்திட்டத்தை அவர்களால் முன்வைக்க முடியாது போயுள்ளது. மாறாக தன்னிச்சையான தன்னியல்புக்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். உண்மையில் இதை பற்றி அவர்களுக்கே எதுவும் தெரிந்து இருப்பதில்லை.


இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒவ்வொருவரும் தத்தம் நோக்கில் கற்பனை உலகை தாமே படைத்து, அதை கைநீட்டி காட்டி அதுதான் விடிவுக்கான பாதை என்கின்றனர். ஒவ்வொருவரும் தாமாக கற்பனை பண்ணும் தமிழீழக் கனவுக்கு என்று, ஒரு கொள்கை கோட்பாடு என எதுவும் கிடையாது. அதிலும் போராடுவதாக காட்டிக் கொள்ளும் புலிக்கும் இதற்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. புலிகளுக்கு தாம், தமது சொந்த நலன், இதைத் தாண்டிய எதுவும் அவர்களின் நலனாக இருப்பதில்லை. தமிழீழம் என்பது தமது சொந்த நலனை பூர்த்தி செய்யும் ஒரு கருவி மட்டும்தான். அதனால் தான் தமிழீழத்துக்கான அனைத்து சாத்தியமான வழியையும் நாசமாக்கி, அதை அழித்து, அதன் சாத்தியப்பாட்டை இல்லாததாக்கி வருகின்றனர். அவர்களின் அனைத்து செயற்பாடும் இன்று அப்படித்தான் மாறிவிட்டது.


இந்த நிலையில் இது அம்பலமாவதைத் தவிர்க்க, கற்பனை புனைவுகளை கொண்ட நம்பிக்கையையே வாழ்வாக விதைக்கின்றனர். எதார்த்தமான வாழ்வு சார்ந்த நம்பிக்கையை, ஒடுக்கப்பட்ட மனித போராட்டத்தை வாழ்வாக நிறுவிக் காட்டமுடிவதில்லை. வாழ்வுடன் சம்மந்தப்படாத கற்பனையின் விளைவால், இவர்கள் மோசமான மனநோய்க்கு உள்ளாகின்றனர். கனவையே வாழ்க்கையாக கொண்டு சம்பந்தமில்லாத வகையில் புலம்புகின்றனர். கற்பனையான கனவை உண்மையான எதார்த்தமாக காட்டி ஆய்வுரைகளையும், கருத்துரைகளையும் அறிவாளி போல் முன்வைக்கின்றனர். இந்தக் கருத்தின் ஆயுள் மிகக் குறுகியதாக இருப்பதால், அவை உடனுக்குடன் அம்பலமாகின்றது. ஆனால் தமிழீழக் கற்பனை, பலரை அதற்குள் சுயமாக சிந்திக்கவிடாது பேயாக பிசாசாக ஆட்டுவிக்கின்றது.


புலித் தமிழீழம் ஒன்று, வரவே வரமுடியாது. அதற்குரிய அனைத்து சமூக அடிப்படையையும் அது தானாகவே இழந்து, இழிந்து சீரழிந்துவிட்டது. இதை நாம் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் ஆராய்வோம்.


கற்பனையில் கனவாகவுள்ள எல்லைகளை அடிப்படையாக கொண்ட தமிழீழம் கிடைக்க வேண்டும் என்றால், இரண்டு பிரதான வழிகளில் மட்டும் சாத்தியமானது. இவ் இரண்டு வழிகளையும், புலிகள் எப்போதோ தமது சொந்த பாசிச வழிகளால் இழந்துவிட்டனர். ஒரு தனி அரசை உருவாக்கவும், அதன் நீடித்த இருப்பும் சில நிபந்தனைக்கு உட்பட்டது. குறித்த நிபந்தனையின்றி நாடுகள் அல்லது தனித்த பிரதேசங்கள் உருவாவதில்லை. ஒரு தனி அரசை உருவாக்கவும் பாதுகாக்கவும், நாம் ஏதோ ஒரு வகையில் சர்வதேச அமைப்பில் ஒரு அங்கமாக இருக்கவேண்டும். இதில் இருந்து பிரிந்து யாரும் சுயாதீனமாக தனித்து வாழமுடியாது.


1. புலிகளின் பொருளாதார கொள்கை அடிப்படையிலும், அவர்களின் உடன்பாடான உலகமயமாதல் போக்கில், தனிநாட்டுக்கான அங்கீகாரத்தை இந்த அமைப்பில் புலிகள் பெறவேண்டும். இதுவே முதலாவது வழி. அதாவது ஏகாதிபத்தியம் அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்காவில் தம் மீதான தடையை நீக்க இலஞ்சம் கொடுக்கலாம், ஆனால் அங்கீகாரத்தை பெறவே முடியாது. அங்கீகாரம் என்பது சர்வதேச பொருளாதார உறவுகளுக்கு உட்பட்டது. புலிகள் போன்ற மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட பாசிசக் குழுக்கள், அதை நினைத்தே பார்க்க முடியாது. எப்படி அல்கைதா அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து, இன்று அங்கீகாரம் பெறமுடியாத எதிரிகளாகி அழிப்புக்குள்ளாகின்றனர். இதேபோல் தான் புலிகளின் நிலையும். புலிகள் அமெரிக்காவின் நிதியையும் ஆயுதத்தையும் பல்வேறு அமெரிக்கா எஜண்டுகள் ஊடாக பெற்றது முதல், இஸ்ரவேலில் ஆயுதப் பயிற்சி அவர்கள் நாட்டிலேயே பெற்றநிலை இன்று மாறிவிட்டது. மாறாக அவர்களின் எதிரியாக புலிகள் இருப்பதை, அல்கைதவுடன் ஓப்பிட்டு நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


இந்த நிலையில் ஒரு அங்கீகாரத்தை உலகமயமாதல் பொருளாதார நிபந்தனைக்குள் கிடைக்குமா என்ற கேள்வியை விடுத்து, அங்கீகரிப்பார்கள் என்று எடுத்தால், புலியை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். உலகமயமாதலை வழிநாடத்தும் ஏகாதிபத்திய நாடுகள், புலியை தடைசெய்து பயங்கரவாத குழுவாகவே கருதுகின்றது. அதாவது இந்த உலகமயமாதல் அமைப்புக்கு பாதகமான குழுவாகவே கருதுகின்றது. இது புலிகளின் பொருளாதார நோக்கில் இருந்தல்ல. இந்தநிலையில் உலகமயமாதல் அமைப்பில், ஏகாதிபத்தியம் புலிகளை அங்கீகரிக்கவே மாட்டாது. இந்த வகையில் உலகமயமாதல் பொருளாதார அமைப்புக்குள் தமிழீழம் சாத்தியமில்லை.


2. இரண்டாவது சாத்தியமான வழி என்பது, ஒடுக்கப்பட்ட மக்களை முற்றாக சார்ந்திருத்தலாகும். சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, அவர்களின் தலைமையில் ஒரு தேசிய பொருளாதார அமைப்பை கொண்டிருப்பதே அடிப்படையான நிபந்தனையாகும். இந்த வகையில் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றிருத்தல் நிபந்தனையாகும். குறிப்பாக சிங்கள முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை, அனுதாபத்தை பெற்றிருப்பது முக்கியமான அடிப்படை நிபந்தனையாகும். இந்த வகையிலும் தமிழீழம் சாத்தியமில்லை.


இப்படி இரண்டு வழிகளிலுமான புலித் தமிழீழ சாத்தியப்பாட்டை, அவர்கள் எப்போதோ இழந்துவிட்டனர். தற்போது அவர்கள் தங்களை பாதுகாப்பதே மிக முக்கிய பிரச்சனையாக மாறிவிட்டது. இதை அவர்களும் சரியாக உணரவில்லை, அதன் பின்னால் நக்கித் தின்னும் நாய்க் கூட்டமும் உணரவில்லை. ஆனால் எல்லா இராணுவ கட்டுமானங்களும், பிரமைகளும் ஒவ்வொன்றாக மெதுவாக இடிந்து வீழ்கின்றது. அது ஓரேயடியாக சரிந்து தூள்தூளாகிவிடுமா என்ற நிலைமையே, எதார்த்தத்தில் மிகமுக்கியமான பிரச்சனையாகிவிட்டது. ஆனால் இது பெரும்பான்மையான சமூக அமைப்பில் இதுவரை உணரப்படவேயில்லை.


முன்னைய சோவியத்யூனியன் சரிந்து இடிந்து விழ முன், கே.ஜ.பி உலகளாவில் பலமான சதிகளையும் கட்டுமானங்களையும் உசுப்பியது போல், உலுப்பிக்காட்டவே புலிகள் முனைகின்றனர். அதனூடாக இடிந்து கொண்டிருக்கும் கனவை, நிமிர்த்திக்காட்ட முனைகின்றனர். பிழைப்புவாத இந்திய சுயநல அரசியல் செய்யும் பச்சோந்தி கோபாலசாமி முதல் நெடுமாறன் வரையிலான பிழைப்புவாதிகளுக்கு, பணத்தையும் சலுகைகளையும் கொடுத்து தமிழீழத்தையோ அல்லது புலியின் சீரழிவையோ தடுத்து நிறுத்தவே முடியாது. மேற்கில் அரசியல்வாதிகளுக்கு விருந்துகளையும், விமானத் ரிக்கற்றுகளையும், பணத்தையும் இலஞ்சமாக கொடுத்து தமிழீழத்தைப் பெறமுடியாது. விடையங்களை பண உறவாக, இராணுவ வழியிலும் சிந்திப்பது செயலாற்றுவது, சொந்த அழிவின் விளிம்பில் அது பல்லிளித்து காட்சியளிக்கின்றது. இதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது போய்விடுகின்றது. அது சோரம் போன போக்கிரிகளின் சொந்த நலனுக்குள் முடங்கி விடுவதைத் தவிர, எதையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுத்தராது. ஒரு காலத்தில் இவை வெற்றிகரமான பலன் அளிப்பது போல் காட்சி அளிப்பது எப்போதும் தற்காலிகமானது. அது அதற்கென்று சொந்த விதியையும், நோக்கத்தையும் கொண்டது. அது உண்மையில் தொடக்கத்திலேயே கருவறுக்கும் தெளிவான அரசியல் நோக்கை அடிப்படையாகக் கொண்டு, பெரும் ஏகாதிபத்தியங்களே இதை மறைமுகமாக ஊக்குவித்து உதவுகின்றன. இந்தியா புலிகளுக்கு விமானத்தை அழிக்கவல்ல விமான எதிர்ப்பு சாம் ஏவுகணையைக் கூட தனது ஏஜண்டுகள் மூலம் புலிக்கு விற்று, அதை செயற்படாமல் முடக்கிய வரலாறு 1987 இல் நடைபெற்றது. இதன் போது புலிகளின் பணம் முடக்கப்பட்டது மட்டுமல்ல, ஏவுகணையும் செயற்படவில்லை. இப்படி பல நிகழ்ச்சிகள் தெரிந்தும் தெரியாமலும் உள்ளது.


பணம், ஆயுதம் என்ற எல்லைக்குள் புலிகள், வெறும் மாபியாக் குழுவாக, பாசிசக் கும்பலாக சீரழிந்துவிட்டது. தனக்காக மட்டும், தன் நோக்கில் வன்முறையைக் கையாண்டு மேலும் ஆழமாக சீரழிகின்றது. இப்படி சீரழிந்து சிதைந்து கொள்கையும் கோட்பாடுமற்ற ஒரு கும்பல் தமிழீழம் அமைப்பார்கள் என்பதும், அதற்கு அலங்கரித்து நம்பிக்கை ஊட்டுவது குருட்டுத்தனமான அபத்தமாகும்.


மேலே குறிப்பிட்ட இரண்டு அடிப்படையையும் கடந்து, ஒரு தமிழீழத்துகான சாத்தியப்பாட்டை யாரும் முன்வைக்கவே முடியாது. இன்று இலங்கை பேரினவாத அரசாங்கம் முழுமையான பொருளாதார தடையைக் கொண்டு வந்தாலே, குறித்த புலிகளின் பிரதேசத்தைக் கூட பாதுகாக்க முடியாது. விசித்திரமான ஆனால் எதார்த்தமான உண்மை இது. இன்று புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள அரசு ஊழியருக்கான சம்பளம், அங்கு வாழும் மக்களுக்கான உணவு விநியோகத்தையும் நிறுத்தினால், புலியின் பிரதேசத்தில் அவர்களால் தொடர்ந்தும் நின்றுபிடிக்கவே முடியாது. இன்றும் யுத்த அகதிகளுக்கு, அரசு தான் இலவச உணவை அல்லது மலிவு உணவை வழங்குகின்றது. அதிலும் ஒரு பகுதியை மக்களுக்கு தெரியாது உறுஞ்சியும் அபகரித்தும் புலிகள் வாழ்கின்றனர். இப்படி பலவழிகளில் தான் புலியின் தேசிய பொருளாதாரம் நிறைவு செய்யப்படுகின்றது.


உலகில் கொரில்லா மண்டலங்களுக்கு, இலங்கையில் மட்டும் தான் உணவையும் சம்பளத்தையும் பேரினவாத அரசு கொடுக்கின்றது. வேறு நாடுகளின் கடந்தகால, நிகழ்கால போராட்டங்களின் போது, அரசு அதை முற்றாகமுடக்கி பட்டினிச்சாவில் தள்ளி போராட்டத்தை நசுக்கமுனைந்தன. இதை எதிர்கொள்ளும் வகையில் முன்கூட்டியே சொந்த பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி, பொருளாதார தடையை எதிர்கொண்டனர். உண்மையான வெற்றிகரமான போராட்டத்தின் வரலாறுகள் இப்படித்தான், இந்த நிபந்தனையூடாகத்தான் நடந்தன.


இதற்கு புறம்பாக இலங்கையில் ஏன் இப்படியான நிலையை பேரினவாத அரசு கையாளுகின்றது. சுயமானதும் சுயாதீனமானதுமான மக்களைச் சார்ந்த போராட்டம் உருவாகிவிடக் கூடாது என்பதால் தான், தன்னைச் சார்ந்த சமூகப் பொருளாதார இருப்பை தக்கவைக்க அரசு, அவற்றை இடைவிடாது மட்டுப்படுத்தி வழங்குகின்றது. புனர் நிர்மாண பணத்தை வழங்குகின்றது. அரசுசாராத நிறுவனங்களின் நிவாரணங்கள் பாரிய அளவில் செயற்பட அனுமதித்துள்ளது. சொந்த தேசியப் பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி, தனிநாட்டுக்கான சுயாதீனமான தேசிய பொருளாதாரத்தை கட்டிவிடக் கூடாது என்பதால், பேரினவாத சுரண்டல் அரசு மிகக் கவனமாக திட்டமிட்டு புலியை சீரழிக்கும் வகையில் செயற்பட்டது. ஆனால் தேசியத்துக்காக போராடுவதாக கூறியவர்கள், அனைத்து தேசிய பொருளாதாரத்தையும் அழித்தே தீர்வோம் என்று கங்கணம் கட்டி, பாசிச ஆட்டம் போட்டனர். தேசிய பொருளாதாரம் கோரியவர்களை எள்ளி நகையாடி, அவர்களை கொன்றே போட்டனர். தேசிய பண்பில் இருந்து சீரழிந்து, ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் பாசிச எடுபிடிகளாகி, அதை சமூக உறவாகக் கொண்டு சீரழிந்தனர். இதை பேரினவாதம் தனது கொள்கை மூலம், புலிகளைக் கொண்டு வெற்றிகரமாக சாதித்தனர்.


இந்த நிலையில் முற்று முழுமையான பொருளாதார தடையும், கூலி மறுப்பும் சாத்தியமானதா என்றால், ஆம் சாத்தியமானதே. இதை உலகம் கண்டு கொள்ளாது. ஈராக் ஆக்கிரமிக்க முன்னம் ஏகாதிபத்தியம் எற்படுத்திய பொருளாதாரத் தடையில் 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் கொல்லபட்டனர். இவை அனைத்தும் இந்த சமூக அமைப்பில் சாத்தியமானதே. ஏன் அண்மையில் பாலஸ்தீன மீதான பொருளாதாரத் தடையும் அழுல் செய்யப்ட்டது. இப்படியொரு பொருளாதாரத் தடை கொண்டுவரப்படின், புலிகள் தமது கெரிலா பிரதேசத்தில் கூட நின்று பிடிக்கமுடியாது. அதற்கென்று எந்த சுயபொரளாதார சார்ந்த, சுய தேசிய வாழ்க்கை முறை எதையும் புலித் தேசியம் கட்டமைக்கவில்லை. ஏகாதிபத்திய பொருளாதாரதுக்கு இசைவான எலும்புப் பொருளாதாரத்தையே அடிப்படையாக கொண்ட புலிப் பொருளாதாரம், எந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் ஆற்றலற்றது.


இந்த நிலையில் தமிழீழம் வந்திட்டுது இந்தா பிடி, இந்தா வருது, பிடி பிடி, எட்டிப் பிடி என்று நம்பவைக்கின்ற புலம்பல்கள் மட்டும் ஓயவில்லை. இந்தப் பொய்யையும் கற்பனையும் வாழ்வாக கொண்ட கனவு காட்சிகள் அனைத்தும் தகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த எதார்த்தமான சொந்தக் காட்சியை, அவர்கள் கண்ணை மூடிக்கொள்வதால் காண்பதில்லை.


இந்த கற்பனை தமிழீழவாதிகள் வலிந்து செய்யும் யுத்த கோமாளித்தனத்தால், உருவாகும் அகதிகளுக்கு ஒரு நேர உணவைக் கூட போட வக்கில்லாதவராகவே அவர்கள் உள்ளனர். தனி அரசுக்குரிய எந்த அடிப்படையுமற்ற நிலையில், எதைத்தான் சொந்தமாக சுய ஆற்றலுடன் மக்கள் சார்ந்து நின்று நிர்மாணிக்கின்றனர். குண்டுகளை வெடிக்க வைப்பதன் மூலம் மட்டும் தமிழீழம் வந்துவிடாது. கொல்வதால் மட்டும் தமிழீழம் வந்துவிடாது.


சரி, நீங்கள் குண்டுகளை வெடிக்க வைத்து, பலரைக் கொன்று போட்டு தமிழீழ எல்லைவரை பிடித்துவிட்டீர்கள் என்ற வைப்போம். என்ன நடக்கும். முதலில் சர்வதேச நிலையைப் பார்ப்போம்.


1. இந்தியா இதை ஒருநாளும் அனுமதியாது. ஒரு நாளுமே இதை அங்கீகரிக்காது.


2 .சர்வதேச நாடுகள் ஒன்றும் இதை அங்கீகரிக்காது.


3. சர்வதேச நாடு ஒன்று அங்கீகரிக்கின்றது என்று வைத்தாலும், இந்தியா அதை அனுமதிக்காது.


சர்வதேச நிலைமையை சாதகமாக மாற்றக் கூடிய, நிர்ப்பந்தம் கொடுக்கக் கூடிய வகையில், புலியின் சர்வதேச அரசியல் பாதகமாகவே உள்ளது. குறிப்பாக சர்வதேச ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பது என்பது மட்டும் தான் குறைந்த பட்சம் ஒரு நிர்ப்பந்தத்தையாவது கொடுக்கமுடியும்.


மறுபக்கத்தில் எல்லைவரை பிடித்த பின், தமிழீழப் பிரகடனத்தை புலிகள் ஒருதலைப்பட்சமாக பிரகடனம் செய்யவேண்டும். இதன் மூலம் பேரினவாதத்தின் அனைத்து தொடர்பையும் இது இயல்பாக தானாகவே மறுதலிக்கும். முழுக்கமுழுக்க சொந்த நிர்வாகத்தை நிறுவவேண்டும. பேரினவாதிகள் கொடுத்த உணவையும், அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் புலிகளே கொடுக்க வேண்டும். இப்படி பிரச்சனைகளை எதிர்கொள்ள, சொந்த தேசிய ஆற்றல் புலிகளிடம் கிடையாது. புலிகளால் சொந்த தேசிய கட்டமைப்பைச் சார்ந்து நிறைவு செய்யமுடியாது. இது தமிழீழத்தை பிரகடனம் செய்யாவிட்டாலும் கூட இதுதான் நிலைமை.


இதைவிட இன்று வடக்குகிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்கள், வடக்குகிழக்கு நோக்கி செல்ல வேண்டிய சந்தர்ப்பம் உருவாகும். அவர்களின் அடிப்படைத் தேவைகள், வேலைவாயப்புகள், அவர்களின் உணவுத் தேவைகளை பூர்த்திசெய்ய புலிப்பொருளாதாரத்தால் முடியாது. சர்வதேச ரீதியாக எந்த உதவி, எதுவும் வழங்கப்பட மாட்டாது. இது சர்வதேச விதிக்குட்பட்டது. சர்வதேச ரீதியான புலிகள் மீதான தடை, இதை மேலும் அனுமதியாது. புலம்பெயர் தமிழர்கள் உதவமுடியும் என்று சிலர் வாதத்துக்காக கூறலாம், இது சாத்தியமானதா என்ற கேள்விக்கு அப்பால், இதை அந்த நாடுகள் (ஏகாதிபத்தியங்கள்) அனுமதியாது. அது இன்று தொடர்ச்சியாக கடுமையாகவே தடைக்குள்ளாகி வருகின்றது. அதைவிட புலிகள் பணம் சேர்க்க முடியாத அளவுக்கு, மக்களுக்கும் அவர்களுக்குமான உறவு மேலும் சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது. இப்படி நிலைமை உள்ளது. சரி பணத்தை ஏதோ ஒருவழியில் புலிகள் பெறுகின்றார்கள் என்றால், பணப் பேப்பரை வைத்து உண்ணமுடியாது. அது உணவையும், அடிப்படைத் தேவையையும் உற்பத்தி செய்வதில்லை. அது வெற்றுப் பேப்பர் தான். மக்களின் உழைப்புத்தான் அனைத்தும்.


சிலர் புலி மாமா கதை சொல்வது போல், புலிக் கப்பல் பற்றி பேசுகின்றனர். இன்றைய சர்வதேச நெருக்கடியை தாண்டி (குறிப்பாக புலிகளின் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு) இது தப்பிப்பிழைக்க வேண்டும். அப்படி எல்லாம் தப்பிப் பிழைத்து உயிர் வாழ்ந்தாலும், இந்தியாவின் தீவிர கண்காணிப்பை தாண்டி இலங்கையில் உட்புகுவது என்பது முயல் கொம்புதான். அப்படி ஒரு இரு கப்பலை கொண்டு போனாலும், அந்த கப்பலில் எத்தனை பேருக்கு எத்தனை நாட்களுக்கு உணவு கொண்டு போகமுடியும்? இப்படி இதற்குள் நிறைய கேள்வி உண்டு. மக்கள் எலியையெல்லாம் பிடித்து தின்று முடிய, புலியைத்தான் பிடித்து தின்னும் நிலைதான் உருவாகும்.


சரி தமிழீழத்தை அங்கீகரித்து ஒரு நாடாக உருவாகிவிட்டது என்று எடுப்போம். பிறகு என்ன நடக்கும். வெற்றுக் காற்றில் ஊதிச் சாப்பிடமுடியாது. சிலர் தேசியப் பொருளாதாரம் பற்றி பீற்றுகின்றனர். ஏற்றுமதி பற்றியெல்லாம் கதைக்கின்றனர். மீPன் பிடி என்கின்றனர். உப்பு உற்பத்தி என்று இப்படி பலவற்றை குறிப்பிடுகின்றனர். மீனை விற்று உணவை பெற முடியுமா? எந்தனை தொன் மீனை விற்று, எத்தனை தொன் உணவை வாங்குவது? இது எத்தனை பேருக்கு போதும். ஏற்றுமதி பொருளாதாரத்தை நம்பி தேசத்தை தேசியத்தை நிர்மாணிக்க முடியாது. புலம்பெயர் தமிழன் முதலீடு பற்றி பீற்றப்படுகின்றது. முதலில் புலியை நம்பி அவர்கள் வரவேண்டும். மறுபக்கதில் புலம்பெயர் முதலீடு என்பது வெறும் டப்பாதான். புலம்பெயர் தமிழரின் இன்றைய வர்த்தக முயற்சிகளில் 90 சதவீதமானவை பாரிய கடன் நெருக்குவாரத்துக்குள் உள்ள வெற்று டப்பாதான். சொந்த தேசத்தை, தேசியத்தை சொந்தமாக நிர்மாணிக்க முடியாதவர்களின், வெற்று கருத்துகளும் புலம்பலும தான் இவை. தமது வெற்றுத்தனத்தை நியாயப்படுத்த இப்படிக் கூறுவதும், புலிகளின் சமூகக்கூறுகளில் இருந்து அன்னியமாகி நிற்கின்ற ஒரு நிலையில், தன்னியல்பாக சுயவிளக்கமளித்து இப்படி தானே தனக்குள் நம்புவதே இதன் சாரமாகும். உண்மையில் இவையெல்லாம் வெற்று வேட்டுத்தனம்.


புலித்தேசியத்தில் வாழும் மக்கள், பொருள் சார்ந்த கனவில் வாழ்பவர்கள் தான். ஆடம்பரமான கனவுகளும் வேட்கைகளையும், பொருள் சார்ந்த உலக பார்வையையும் புலித்தேசியத்தால் ஈடுசெய்ய முடியாது. புலிக் கப்பல் உணவுக்கு பதில் கொக்கோகோலாவைத் தான் கொண்டுவந்து இறக்கவேண்டிய பரிதாபநிலை. இதுதான் தமிழனின் வாழ்வு சார்ந்த கண்ணோட்டமாகும். புலித்தேசியம் பன்னாட்டு ஆடம்பர பொருள் சார்ந்ததே ஒழிய, மக்கள் சார்ந்ததல்ல.


ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்களின் சொந்தப் பொருளாதார நலன்களை, கீழ் இருந்து கட்டாத வரை தேசியம் என்பது சாத்தியமற்றது. இன்று காணப்படும் பிற்போக்கு பண்பாட்டை கலாச்சாரத்தை மறுதலித்து ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்ததாக முன்னெடுக்காத வரை, ஒரு கெரில்லா பிரதேசத்தைக் கூட பாதுகாக்க முடியாது. பேரினவாதம் தொடர்ந்தும் உணவையும் கூலியையும் வழங்குவதால் மட்டும் தான், புலிகள் இன்னமும் அங்கு புலிகளாக நீடிக்க முடிகின்றது. இந்த உண்மையை புரிந்து கொள்வதும், மக்கள் போராட்டம் என்றால் என்ன என்பதை எதிர்மறையில் புரிந்து கொள்வது, இன்றைய காலத்தின் தேவை மட்டுமின்றி அவசியமான நிபந்தனையுமாக உள்ளது.


Wednesday, September 6, 2006

திருச்சிற்றம்பல மேடையேற தமிழும் தீக்குளிக்க வேண்டுமோ?

திருச்சிற்றம்பல மேடையேற தமிழும் தீக்குளிக்க வேண்டுமோ?



தில்லைவாழ் அந்தணர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சிவபக்தன் நந்தன் வாழ்ந்த தமிழகத்திற்கும், தற்போதைய தமிழகத்துக்கும் எத்தனையோ வேறுபாடுகள். மாற்றங்கள் இருந்தாலும், தில்லைவாழ் தீட்சிதர் பரம்பரை மட்டும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மாறியதாகத் தெரியவில்லை. ஆறுமுகசாமி என்ற சிவனடியார், சிதம்பரம் நடராசர் கோவிலைத் தங்கள் பூணூலில் சுருட்டி வைத்திருக்கும் தீட்சிதர்களின் சாதிவெறியை எதிர்த்து, வழிபாட்டு உரிமைக்காக நடத்தி வரும் போராட்டம் இந்த உண்மையைத் தமிழகமெங்கும் அம்பலப்படுத்தி விட்டது.



ஆறுமுகசாமி, கஷ்டம் வந்தவுடன் இறைவனைத் தேடி ஓடும் சாதாரண பக்தரைப் போன்றவர் அல்லர். இல்லற வாழ்க்கையைத் துறந்து, துறவறம் பூண்டு, சைவத் திருமறையான தேவாரம் திருவாசகப் பாடல்களைப் பாடுவதைக் கற்றுத் தேர்ந்து, சிதம்பரம்அருகேயுள்ள குமுடிமூலை என்ற சிற்×ரில் அமைந்திருக்கும் பசுபதி ஈஸ்வரன் கோவிலில் ஓதுவாராக இறைப்பணி ஆற்றி வருகிறார். இதற்காகத் தமிழக அரசின் நிதி உதவியையும் பெற்று வருகிறார்.



சிதம்பரம் நடராசர் கோவில் கருவறை முன் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நின்று, தேவாரம் திருவாசகம் பாடி நடராசரை வழிபட வேண்டும் என்பதனைத் தனது ஆன்மீக வாழ்க்கையின் இலட்சியமாக, குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார், ஆறுமுகசாமி. 73 வயதான, அந்திமக் காலத்தை நெருங்கிவிட்ட, அந்த முதிய சிவனடியாரின் விருப்பம் நிறைவேறத் தடைக்கல்லாக நிற்கிறார்கள், தீட்சிதர்கள்.



ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, 8.5.2000 அன்று ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முயன்ற பொழுது, தீட்சிதர் கும்பல் கோவிலுக்குள்ளேயே, பக்தர்களின் கண் முன்னாலேயே ஆறுமுகசாமியைக் கொடூரமாகத் தாக்கி, கையை முறித்து, கோவிலுக்கு வெளியே வீசியெறிந்தது. ஆறுமுகசாமி தம்மைத் தாக்கிய ரவுடி தீட்சிதர்களை உடனடியாக அடையாளம் காட்டிப் புகார் கொடுத்த பின்னும் கூட, சிதம்பரம் நகர போலீசார் 55 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். அரசு தரப்பில் வேண்டுமென்றே இவ்வழக்கு விசாரணையை ஒழுங்காக நடத்தாததால், ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றிருக்க வேண்டிய தீட்சிதர்கள், நீதிமன்றத்தால் நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டனர்.



கடலூர் மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம், ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முடியாமல் தடுக்கப்பட்டதை, மனித உரிமை மீறல் வழக்காக சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றது. ஆறுமுகசாமியும், விடுதலை செய்யப்பட்ட தீட்சிதர்களைத் தண்டிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பார்ப்பன உயர் அதிகாரிகள் மத்தியில் தீட்சிதர்களுக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் பணபலம் காரணமாக இவ்விரு வழக்குகளும் உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்பொழுது இவ்விரு வழக்குகளில் மனித உரிமை மீறல் வழக்கு மட்டும் உச்சநீதி மன்றத்தின் விசாரணையில் உள்ளது.



சிவனடியார் ஆறுமுகசாமி, மிகவும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்; தமிழில் பாடி நடராசனை வழிபட விரும்புகிறார் என்ற காரணத்துக்காகவேதான், தீட்சிதர் கும்பல் அவரை திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப்பாட விடாமல் தடுத்து வருகிறது.



திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட தீட்சிதர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; சமஸ்கிருத மொழியில் அமைந்த வேதங்களையும், மந்திரங்களையும் தான் அம்மேடையில் பாட முடியுமேயன்றி, பிற மொழி துதிப்பாடல்களைப் பாடி இறைவனை வழிபட அனுமதிக்க முடியாது எனப் பச்சையாக பார்ப்பன சாதிக் கொழுப்பைக் கக்கி வருகிறது, தீட்சிதர் கும்பல்.



இதனை மரபு, சம்பிரதாயம் என்ற பெயரில் நியாயப்படுத்தி, மயிலாடுதுறையில் உள்ள இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் மூலம், ஆறுமுகசாமியின் வழிபாட்டு உரிமைக்கு எதிரானத் தடையாணையையும் தீட்சிதர்கள் பெற்றுள்ளனர்.



ஆகம விதிகள், மரபு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் புனிதப்படுத்தப்ப டும் இத்தீண்டாமையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆறுமுகசாமிக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தோடு முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காகவே, செப். 2004இல் பல்வேறு ஜனநாயக அமைப்புகளின் ஆதரவோடு ஆறுமுகசாமிக்கு நீதி கேட்டு, மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், நடராசர் கோவிலில் நடைபெறும் ஒவ்வொரு திருவிழாவின் போதும், பொதுமக்கள் மத்தியில் இப்பிரச்சினையின் பின் மறைந்துள்ள தீண்டாமையை விளக்கும் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தீட்சிதர்களின் அச்சுறுத்தலையும் மீறி, ஆறுமுகசாமியே பிரசுரங்களைப் பொதுமக்களிடம் கொடுத்து, ஆதரவு தேடி வருகிறார்.



இந்நிலையில், தி.மு.க. அரசு பதவியேற்று, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் அறிவிக்கப்பட்ட பின், ஆறுமுகசாமி, ""15.7.06 முதல் 20.7.06 முடிய திருச்சிற்றம்பல மேடையில் ஏறி சிவபுராணம் பாடப் போவதாக'' அறிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவித்த கடலூர் மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், இந்த அறிவிப்பின் பின்னுள்ள நியாயம் உரிமைகளை விளக்கி, 12, 13, 14.7.06 ஆகிய மூன்று நாட்களும் விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு, தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட முனைந்தது.



ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடப் போவதாக அறிவித்தவுடனேயே, சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம், ஆறுமுகசாமி பாடுவதை 25.7.06 வரைத் தடை செய்யும் ஆணையைத் தீட்சிதர்கள் பெற்றுக் கொண்டனர். எனினும், இத்தடையுத்தரவை மீறுவது என்ற முடிவோடு, 15.7.06 அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை சிதம்பரம் மேல வீதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து நடத்தியது.



இப்போராட்டத்திற்குத் தலைமையேற்ற மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, வரவேற்புரை நிகழ்த்திய சிதம்பரம் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், மற்றும் வாழ்த்துரை வழங்கிய முன்னாள் (தமிழக) இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு. வி.வி.சாமிநாதன்; பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவர் திரு. வி.எம். சவுந்திரபாண்டியன்; திராவிடர் கழகத்தின் மாநிலத் துணை பொதுச்செயலர் திரு. துரை சந்திரசேகர்; சி.பி.எம்.இன் மாவட்ட விவசாய அணித்தலைவர் தோழர் டி.ஆர். விசுவநாதன்; சி.பி.ஐ.யின் சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் நடராஜன் உள்ளிட்ட பலரும் தீட்சிதர்களின் சாதித் திமிரையும், அவர்களின் ஒழுக்கக் கேடுகளையும் அம்பலப்படுத்தி உரையாற்றினர்.



சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுவதற்குத்தான் தடை விதித்திருந்தது. ஆனால், சிதம்பரம் நகர போலீசோ, சட்டம் ஒழுங்கைக் காட்டி, ஆறுமுகசாமியைக் கோவிலை நெருங்கக் கூட விடாமல் தடுத்து, அவரையும், அவருக்குத் துணையாகச் சென்றவர்களையும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு 80 பேரை நடுத்தெருவிலேயே கைது செய்து, தீட்சிதர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டது.





""உரிய தகுதி இருந்தால் பார்ப்பனர் அல்லாதவர் கூட அர்ச்சகர் ஆகலாம்; கருவறைக்குள் நுழைந்து, இறைவனுக்கு வழிபாடு நடத்தலாம்'' எனக் கூறுகிறது தமிழக அரசின் சட்டம். இதற்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தின் இரண்டு தீர்ப்புகளும் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆனால், தீட்சிதர் கும்பலோ, துறவறம் பூண்டு வாழும் ஓதுவார் ஆறுமுகசாமியை, கருவறைக்கு எதிரே இருக்கும் மேடையில் ஏறுவதற்குக் கூடத் தடை போடுகிறது.



""உச்சநீதி மன்ற நீதிபதிகள் மோகன் மற்றும் சி.என்.ரே ஆகிய இருவர் அடங்கிய பெஞ்ச், கர்ப்பகிரகங்களில் தமிழ் மந்திரத்தில் அர்ச்சனை செய்யலாம் என்று 2.4.1992இல் தீர்ப்பளித்திருப்பதாகவும்; சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன் தமிழ்நாட்டில் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று 17.6.1992இல் தீர்ப்பளித்திருப்பதாகவும்'' முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், கருவறைக்கு எதிரேயுள்ள திருச்சிற்றம்பலத்தில் சமஸ்கிருதம் அல்லாத பிற மொழிகளில் பாடி இறைவனை வழிபடக் கூடாது எனத் தமிழை தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கித் தள்ளுகிறார்கள் தீட்சிதர்கள்.



சட்டத்தின்படியும், நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் பார்த்தால், ஆறுமுகசாமியைத் தடை செய்த தீட்சிதர்கள்; அவர்களுக்குத் துணை நின்ற நீதிபதி, போலீசு அதிகாரிகளைத் தான் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், நடந்திருப்பதோ நேர் எதிராக இருக்கிறது.



1987ஆம் ஆண்டே, சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர புதிதாக விதிகள் உருவாக்கப்பட்ட போதிலும், கடந்த 19 ஆண்டுகளாக இந்தக் கோயிலில் ஒரு நிர்வாக அதிகாரியைப் போட முடியாமல், தமிழக அரசு கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறது.



இந்தக் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசு எடுத்துக் கொள்வதை எதிர்த்து தீட்சிதர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில், ""இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 1000 ஏக்கர் நிலமுள்ளது; உண்டியல் வைக்காமல், பக்தர்களிடமிருந்து தீட்சிதர்களே நேரடியாகப் பணம் பெறுகிறார்கள்; 50 கிலோ மதிப்புமிக்க நகைகள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால், இக்கோவிலில் அரசு நிர்வாக அதிகாரியை நியமிப்பது சரி'' என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கடாசலய்யா 1997இல் தீர்ப்பளித்தார். ஆனால், தீட்சிதர்கள் வழக்கிற்கு மேல் வழக்கு போட்டு இத்தீர்ப்பை நீதிமன்றத்திற்குள்ளேயே பந்தாடி வருகிறார்கள்.



நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீட்சிதர்கள் தொடுத்த ஒரு வழக்கில், ""இந்தக் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமில்லை என்றும், ஒட்டு மொத்த சைவர்களுக்குச் சொந்தம் என்றும் உயர்நீதி மன்ற நீதிபதி முத்துச்சாமி ஐயரும், இன்னொரு வெள்ளைக்கார நீதிபதியும் தீர்ப்பளித்திருப்பதாக'' முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், தீட்சிதர்களோ,""இந்தக் கோயில் எங்களுக்குப் பாத்யப்பட்ட பரம்பரைச் சொத்து'' எனச் சுவரொட்டி அடித்து ஒட்டும் அளவிற்கு, சட்டம் நீதிமன்றம் எதனையும் மதிக்காமல் திமிரோடு நடந்து வருகின்றனர்.



சிதம்பரம் கோயிலின் வருமானம் ஏறத்தாழ 1 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், தீட்சிதர்களோ, ஊர் பெரிய மனிதர்களிடம் 100, 200 நன்கொடை வாங்கித்தான், பூசையே நடத்துவதாக மோசடிக் கணக்கைத் தயார் செய்து, பக்தர்களை ஏமாற்றி வருகிறார்கள். கோயில் நிலத்தில் இருந்து கிடைக்கும் குத்தகை, கடை ஏலம், அபிஷேகம், ஆராதனைக்காக ரசீது கொடுக்காமல் பக்தர்களிடம் பிடுங்கும் பணம், கோவிலுக்குச் சொந்தமான தங்க நகைகள் இவை எல்லாவற்றையும் தாங்களே ஆண்டு அனுபவிக்கும் வண்ணம் ""அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் பொது தீட்சிதர்கள், சிதம்பரம்'' என்ற அமைப்பைக் கட்டி வைத்துக் கொண்டு, அலிபாபா கதையில் வரும் கொள்ளைக் கூட்டம் போலக் கொழுத்துத் திரிகிறார்கள்.



இது ஒருபுறமிருக்க, இரவு நேரமானபின், சிதம்பரம் கோயிலையே தண்ணி அடிக்கும் பாராகவும்; பெண்களோடு சல்லாபம் செய்யும் விடுதியாகவும் தீட்சிதர்கள் மாற்றிவிட்டதாக ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த அசிங்கமான உண்மையை மூடி மறைக்கத்தான் கே.ஆடுரைச் சேர்ந்த செல்வராஜையும்; வீட்டுத் தரகர் ராயரையும் தீட்சிதர்கள் கோயிலுக்குள் வைத்துக் கொன்றுவிட்டதாகவும்; கோவில் வருமானத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி தீட்சிதரை கோயில் கல்தூணில் மோதிக் கொன்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.



இப்படிப்பட்ட கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீட்சிதர்கள், ""திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப்பாட தமக்கு மட்டுமே உரிமையுண்டு; ஆறுமுகசாமியைப் பாட வைத்தால் சட்டம்ஒழுங்கு கெட்டுவிடும்; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்; கோவிலில் உள்ள விலையுயர்ந்த நகைகளின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும்'' எனப் புளுகித்தான் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கேட்டுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கூடப் பார்க்காமல், நீதிமன்றம் தீட்சிதர்களின் கோரிக்கைக்குத் தலையாட்டியுள்ளது. மேலும், ""ஆறுமுகசாமியை நாத்திகர்கள் தூண்டிவிடுவதாகவும்; இதற்குப் பின்னால் பெரிய சதி நடப்பதாகவும்'' தீட்சிதர்கள் பீதியூட்டுகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆறுமுகசாமி திருச்சிற்றம்பலத்தில் ஏறிப் பாடுவதை மறுக்கும் தீண்டாமையை, நாத்திக ஆத்திகப் பிரச்சினையாகத் திசை திருப்ப முயலுகிறார்கள்.



தேவாரம், திருவாசகம் ஆகிய சைவத் திருமறைகளோடு பின்னிப் பிணைந்த சிதம்பரம் நடராசர் கோவிலை; சைவத் திருத்தலங்களிலேயே ஆகாயத் தலமாகக் கருதப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலை, கிரிமினல் பின்னணி கொண்ட தீட்சிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, நாத்திகர்களைவிட, ஆத்திகர்களுக்குத் தான் இரத்தம் கொதிக்க வேண்டும். ஆனால் ஆறுமுகசாமியைத் தவிர, வேறெந்த சைவ மடாதிபதிக்கும் தமிழுணர்வும், ரோசமும் இருப்பதாகத் தெரியவில்லை.



அதனால்தான், இப்பிரச்சினையில் ஆறுமுகசாமியை ஆதரிக்கும் மனித உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடு என்ற கோரிக்கையையும் சேர்த்து முன் வைக்கிறது. இதற்கு ஆதரவாகப் பொதுமக்களைத் திரட்டும் நோக்கத்தோடு, சிதம்பரம் மற்றும் அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையம், பிற ஜனநாயக அமைப்புகளோடு இணைந்து தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி வருகிறது. மேலும், சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம் கொடுத்துள்ள இடைக்காலத் தடையை நீட்டிக்கக் கூடாது; இவ்வழக்கில் உடனடியாகத் தீர்ப்பளிக்க வேண்டம் எனக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்து, வழக்கும் நடத்தி வருகிறது.



இப்பிரச்சினையில் இன்னொரு உண்மையையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். கோவில்களில் பார்ப்பனர்கள் சூத்திரர்கள் மீதும், தாழ்த்தப்பட்டோர் மீதும் திணிக்கும் தீண்டாமையையும்; கிராமப்புறங்களில் ஆதிக்க சாதிகளால் காலனிகளின் மீது திணிக்கப்படும் தீண்டாமையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகர் ஆவது, தமிழ் உள்ளிட்டு அவரவர் தாய்மொழிகளில் வழிபட உரிமை கோருவது ஆகிய கோரிக்கைகள், சாதிதீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களோடு இணைக்கப்படாவிடில், அதில் முழுமையான வெற்றியைக் காண முடியாது. இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த போராட்டம், மக்கள் மத்தியில் எழவில்லையென்றால், வழிபாட்டு உரிமை தொடர்பாகக் கொண்டு வரப்படும் சட்டங்களும், நீதிமன்றத் தீர்ப்புகளும் அரைகுறையானதாக, ஒன்றுக்கொன்று முரணானதாக, நடைமுறைக்கு வராத காகிதக் குப்பைகளாகவே இருக்கும்.



மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்.



Monday, September 4, 2006

வீங்கி வெம்பிப் புழுக்கின்றது

வீங்கி வெம்பிப் புழுக்கின்றது

பி.இரயாகரன்
04.09.06


மிழ்மக்கள் வினையை விதைத்து, விளைவித்த புலிகள் வீங்கி வெம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் தமிழ்பேசும் மக்களின் தலைவிதி. அந்த தமிழ் மக்களுக்கு கூறுவதற்கு அவர்களிடம் பொய்யையும் புரட்டையும் தவிர, வேறு எதுவுமில்லை. தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கினால் புலிகளை அரசியல் அனாதையாக்கிவிடுவார்கள் என்று எப்படி புலிகளால் உத்தியோகபூர்வமாக கூறமுடிந்ததோ, அதேபோல் தான் உண்மைகளும் அவர்களை அரசியல் அனாதையாக்கிவிடும். இதனால் தமிழ் மக்களுக்கு புலிகள் வழங்கும் தகவல், அறிவு, செய்தி என அனைத்தும், உண்மையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுபவையல்ல. மாறாக வளர்ப்பு மந்தைகளுக்கு தீனி போடுவதுபோல், புலிகள் அவியல் போடுகின்றனர். தமது பொய் தகவல் தவிர்ந்த அனைத்து அறிவுகளையும், தமிழ் சமூகத்தில் இருந்தே அகற்றுவதற்காகக் கூட படுகொலைகளையே நம்பியிருக்கின்றனர். இதற்கு ஏற்ப ஆறறிவை இழந்து அங்கவீனமாகி, சிந்திக்க செயலாற்ற மறுக்கின்ற, ஒரு முட்டாள் சமூகத்தின் மேல் தான் புலிகளால் இலகுவாக குதிரை ஓடமுடிகின்றது. இது புலிகளின் இன்றைய வரலாற்றுக்கு முந்திய இயக்க வரலாற்றில், ஒரு அங்கமாகவே உயிர்தெழுந்தது.


1983, 1984 களில் தமிழீழம் பற்றிப் பல்வேறு இயக்கங்களால் வீங்கி வெம்பிய பிரமைகள் விதைக்கப்பட்டது. அன்றும் திகதி குறிப்பிட்டு, தமிழீழப் பிரகடனத்துக்கு ஆட்கள் பிடிக்கப்பட்டனர். எல்லாவிதமான சுயஅறிவையும் பகுத்தாய்வையும் இழந்தநிலையில், குறித்த திகதிக்குள்ளான தமிழீழம் என்னும் மண் குதிரையை நம்பி, அதில் ஏறி முட்டாள்கள் ஓடிக்கொண்டிருந்தனர். இந்த அழகான அப்பட்டமான பொய்யை கேள்வி கேட்டவர்களை, இந்த சாத்தியப்பாட்டை அறிவுபூர்வமாக அணுகியவர்களை எல்லாம், வீங்கிவெம்பிய வக்கிரத்தின் உச்சத்தில் நின்ற எள்ளிநகையாடினர். கொள்கை கோட்பாடியின்றி பயிற்சிக்கு யார் கேட்கின்றனரோ, யார் உடனடியாக இந்தியாவுக்கு ஏற்றிச் செல்லுகின்றனரோ, அதன் பின்னால் தெருநாய்களைப் போல் ஓடிக் கொண்டிருந்தனர். குறித்த திகதியில் தமிழீழம் கிடைத்துவிடும் என்று நம்பி, அதன் பின் வந்து படிக்க முடிவெடுத்து சென்ற அறிவாளிகளும் உண்டு. இப்படித்தான் தமிழ் பரப்பில் தேசியத்தின் பெயரில், முட்டாள்தனமான நம்பிக்கைகள் பிரமைகள் விதைக்கப்பட்டன. 'பெடியள்" பற்றி பெரியவர்களால் வீங்கி வெம்பிய வம்புகளே வினையாக தமிழீழத் பாசிச தேசியமாகியது. இந்த வம்பு நிலை இன்றுவரை மாறவில்லை.


தமிழீழம் என்ற பிரமை சார்ந்த தேசியம், இப்படித்தான் மலடாகி வீங்கிவெம்பியது. அன்று யார் அதிகளவில் இந்தியாவின் கைக்கூலிகளாக செயற்பட்டனரோ, அந்தக் கூலிக்கும்பலே அதிக பயிற்சி பெற முடிந்தது. இந்தியக் கைக்கூலித்தனத்தின் எடுபிடித்தனத்துக்கு ஏற்ப அதிக வள்ளங்களை பெற முடிந்தவர்கள், தமிழீழத்தின் பெயரில் அதிகம் பேரை இந்தியக் கூலிப்பட்டாளமாக ஏற்றியிறக்க முடிந்தது. இப்படி இந்தியக் கூலிப்பட்டாளமாக செயற்படுவதில் புலிகள், புளாட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் வரை விதிவிலக்கின்றி போட்டி போட்டனர். இதில் இந்தியா தனக்கு அதிக விசுவாசமாக எந்த நாய் அதிகம் வாலாட்டும் என்பதை பிரித்தறிந்து, அதிகமாகவும் சிறப்பாகவும் விசேட உணவு போட்டனர். இப்படித்தான் அன்று தமிழீழம் வீங்கி வெம்பிக் கொண்டிருந்தது. இந்தியா கொடுத்த பணம், ஆயுதம் மூலம் மக்களையே எதிரியாக்கி, தறிகெட்ட விசர் நாய்களாக ஊரார் பணத்தில் ஊதாரியாக ஊளையிட்டுத் திரிந்தனர். உதாரணமாக இந்தியா புலிக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து சிங்கள மக்களை கொல்லக் கோரியபோது, அநுராதபுரத்தில் 150க்கு மேற்பட்டவரை கொலை செய்து, தமது தமிழீழத் தாகமான தமிழீழ வெறியாட்டத்தையே நடத்தினர். இதேபோல் இந்திய கூலிப்பட்டாளமாக செயற்பட்ட ரெலோ, பஞ்சாப் சீக்கிய பொற்கோயிலில் தனது கொலை வெறியாட்டத்தையே, யுத்தப் பயிற்சியின் பெயரில் செய்தனர். இப்படி ஏராளம்.


இப்படி வீங்கி வெம்பிய நிலையிலும், இந்தியாவின் தனது நம்பிக்கைக்குரிய நாயாக புலிகளை கருதவில்லை. மாறாக தனது வீட்டு நாயாக, மற்றைய நாயுடன் சேர்த்துக் கருதியது. இது புலிக்கு பிடிக்கவில்லை. இதனால் புலிகள் வேறு வீடுகளிலும் வாலாட்டி, அவர்களின் வீட்டிலும் நக்கியதன் மூலம், அவர்களின் நம்பிக்கையைப் பெற்றனர். இப்படி அதிக சலுகையை பெற்றதன் மூலம், வீங்கி வெம்பிக் கொழுத்தனர். இந்த வகையில் இஸ்ரேலிடமும் கூட புலிகள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். அன்று சோவியத் அமெரிக்க முரண்பாட்டின் அடிப்படையில், இந்தியா அல்லாத அன்னிய நாடுகளுக்கு விசுவாசமாக புலிகளால் வாலாட்டி கைக்கூலியாக முடிந்தது. பணமும், ஆயுதமும் தாராளமாக வழங்கப்பட்டது. இந்தியாவிடம் பயிற்சிபெற்ற கூலிக்குழுக்களை அழிக்க, இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் விருப்பம் புலிகள் என்ற பாசிச குழு மூலம் ப+ர்த்திசெய்யப்பட்டது. சி.ஜ.ஏ உளவாளியாக இருந்த எம்.ஐP.ஆர் மற்றும் மோகனதாஸ் மூலமாக, நிலைமையைப் பயன்படுத்தி பணத்தையும் ஆயுதத்தையும் பெருமளவில் புலிகளுக்கு வாரி வழங்கினர். மற்றைய இயக்க ஆயுதங்களும் பறித்து, அவை சூழ்ச்சிகள் மூலம் புலிகளுக்கு வழங்கப்பட்டது. இப்படி ஏகாதிபதிய சூழச்சிகளின் வழியே வீங்கி வெம்பிக் கொழுத்தனர். இப்படி எங்கும் எதிலும் புலிகள் அதிகளவில் வீங்கி வெம்பினர். போராட்டமே வீங்கி வெம்பியது. மக்களை கால்தூசுக்கு கூட மதிக்க மறுத்தவர்கள், அவர்களையே ஏறிமிதித்தனர்.


இப்படி கூலியாக ஆயுதப் பயிற்சியும் பணமும் பெற்றவர்கள், சமூகத்தின் மேலாண்மையை தமதாக்கி கொண்டனர். இதன் மேல் அறிவுத்தளம் தானாக வெம்பத் தொடங்கியது. இந்த சோரம் போன சமூக இருத்தலையே, சமூக பெருமையாக, வீரமாக, ராஜதந்திரமாக பறைசாற்றினர். பொய்மையும், புரட்டும் தகவலாகி அதுவும் வெம்பத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இராணுவத் தாக்குதலும், அது சார்ந்த புனைவுகளுமே பலம்பொருந்தி கருத்தாக மாறியது. யார் அதிக தாக்குதலை இராணுவம் மீது நடத்துகின்றனரோ, அவர்களை போற்றும் பக்தர்களின் கற்பனைகளில் அவர்கள் வீங்கி வெம்பத் தொடங்கினர். இப்படி சமூகம் இழிந்து நலிந்து சீரழிந்து வந்தது. இதன் மேல் தான் இன்றும், புலிகள் பொய்யான புரட்டான தகவல்கள் மூலம் சவாரிவிட முடிகின்றது. ஆனால் முன்பைப் போல் அல்லாது, அடிக்கடி கவிண்டு குப்புற மூஞ்சைபட விழ்கின்றனர். வீழ்ச்சியின் தொடக்கம் இப்படி தான் ஆரம்பமாகின்றது.


அன்று அவர்கள் எல்லோரும் கூறியது போல், குறித்த திகதியில் தமிழீழம் கிடைக்கவில்லை. முட்டாள் சமூகத்துக்கு இதைப்பற்றி அவர்கள் விளக்கமளிக்க வேண்டிய கவலையும் அவர்களுக்கு இருக்கவில்லை. சமூகம் மேலும் முட்டாளாகியது. அன்று குறித்த திகதியைக் கடந்து 20 வருடம் சென்றுவிட்டது. இப்போது அதே பிரமைகளுக்கு எந்தக் குறைவுமில்லை. இப்போது பிரபாகரனின் ஆயுளுக்குள் தமிழீழம் என்று முன்வைப்பதன் மூலம், அது கிடையாது என்பதை மறைமுகமாக புலித்தளபதிகள் நாசூக்காக அம்பலமாக்கி விடுகின்றனர். பிரபாகரனின் ஆயுள் நாளை முடிந்தால்! தமிழீழத்தின் கதி என்ன? இவர்கள் கூறுகின்றனர் சண்டை தொடங்கினால் ஒரு வருடத்தில் தமிழீழம் என்கின்றார்கள். இது இறுதிச் சண்டை என்கின்றனர். யாழ் குடாவை மீட்க ஐந்து நாள், போனல் பத்து நாட்கள் போதும் என்கின்றனர். இப்படி எத்தனையோ நம்பிக்கைகள் பிரமைகள் கடந்த 30 வருடமாக விதைக்கப்பட்டன, விதைக்கப்படுகின்றன.


மனிதசெயலை மறுத்த ஒரு எல்லையில் தான் இவை எல்லாம் புனையப்படுகின்றது. பொய்கள் மீண்டும் மீண்டும் வீங்கி வெம்பிக் கொண்டிருக்கின்றது. அன்று ஒரு கூலிக் கும்பலாக பெருமளவு இளைஞர்கள் இணைக்கப்பட்டு, இந்தியாவின் கூலிகளாகவே பயிற்சிக்குள்ளாக்கப்பட்டனர். அன்று இதற்கு எதிராக நாம் போராடினோம். அப்போதும் எள்ளி நகையாடப்பட்டோம். இந்த ஆயுத பயிற்சி அலையில், எம்முடன் நின்ற சிலரும் காணாமல் போனார்கள். சிறிது காலத்தின் பின் அவர்களை இயக்கத் தளபதிகளாக, கொலைவெறியுடன் களத்தில் காணமுடிந்தது. இப்படி அலையலையாக வீங்கி வெம்பிக் கொண்டிருந்த போராட்டம், கண்மூடித்தனமான நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு அனைத்தையும் நியாயப்படுத்தியது. தமிழ்மக்களையே கொத்திக்கிளறி, அவர்களை அவர்களின் பெயரில் பலியிட்டனர். இன்றும் அதே நிலைமை, ஆனால் அதைவிட மோசமான நிலைமை.


புலிகளின் பினாமித் தகவல்கள் வீங்கி வெம்புகின்றது தமிழ் மக்களுக்கு இன்று ஒரேயொரு தகவல் தளம் மட்டும்தான் உள்ளது. இதை கேள்வி கேட்க முடியாது. இதை மீறி தகவலை வழங்கல், பெறுதல் இரண்டும் மரணதண்டனைகுரிய ஒரு தேசிய குற்றம். மரணதண்டனையை வழங்குவதன் மூலம், தமிழ் மக்களின் சிந்தனைத் திறனை மலடாக்கி அதில் புலிகள் கொழுப்பாக வாழ்கின்றனர். இன்று புலிப்பினாமிகளின் தகவல்கள் தான், புலிகளின் உத்தியோகபூர்வமான தகவலாகிப் போனது.


புலிகளின் தளபதிகள் பலர் அடிக்கடி ஒன்றைக் கூறுவதை அவதானிக்க முடியும். அதில் அவர்கள் தலைவர் எல்லாம் செய்வார். அனைத்தும் தலைவருக்கு தெரியும். இப்படி ஏன் புலியின் முக்கிய முன்னணி தளபதிகள் கூறவேண்டிய நிலை உருவாகின்றது. பினாமிகளுக்கு வெளியில், புலித் தளபதிகள் இப்படி மட்டும் தான் பேசமுடியும்.


இது ஒரு அரசியல் உண்மையை, அப்பட்டமாக பளிச்சென்று அம்பலமாக்குகின்றது. அதாவது தளபதிகளிடம் நிகழ்காலம் பற்றியும், எதிர்காலம் பற்றியும் சொல்லக் கூடிய எந்த அடிப்படையான தீர்வும், வழிமுறையும் கிடையாது என்பதைத்தான், அவர்கள் உரத்து உரைத்துச் சொல்லுகின்றனர். ஒரு அரசியல் வேலை திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியிலென்ற, எந்த வேலை திட்டமும் அவர்களிடம் கிடையாது. மாறாக தன்னிச்சையான தன்னியல்க்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். இதை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிந்து இருப்பதில்லை, தெரிந்து கொள்வதுமில்லை. எல்லாம் தலைவருக்குள் சர்வமயமாகி அடங்கிப் போகின்றது.


உண்மையில் முன்னணி தளபதிகள் கூட ஒன்றையும் தெளிவாக சொல்லமுடியாது. அப்படிச் சொன்னால், அது அவர்களின் தனிப்பட்ட வேலைத்திட்டமாகிவிடும். இது தலைவருக்கு எதிரான சதியாக கருதப்பட்டு, துரோகியாக முத்திரை குத்தப்பட்டு, மண்டையில் போடும் அளவுக்கு நிலைமை மாறிவிடுகின்றது. இந்த நிலையில் எல்லாம்வல்ல இறைவனின் செயல் என்பதை அடிப்படையாக கொண்டு, எல்லாம் தலைவர் மீது கூறிவிடுவது தான் புலிகளின் உயர்ந்தபட்ச அரசியல் வேலைத்திட்டமாகவுள்ளது. புலிகளின் வேலைத்திட்டம் யாருக்கும் தெரியாத ஒன்றாகவும், தலைவரின் பெயரில் அனைத்தையும் கூறிவிடுவதும் தான். அதாவது அனைத்தையும் தலைவரின் பெயரில் கூறிவிடுவதன் மூலம், கேள்விகளை பிரச்சனைகளை தவிர்த்துக் கொண்டு, நல்ல விசுவாசமான நக்கும் தளபதிகளாக இருக்கக் கற்றுக்கொண்டு விட்டனர். இதனால் பல கேள்விகளுக்கு பதில் தெரியாது போய்விடுகின்றது.


இதனால் தலைவர் கண்ணுக்குத் தெரியாதவராக, எல்லாம் வல்லவராக, சூக்குமமான நிலையில் வாழ்கின்றார். வருடத்துக்கு ஒருக்கால், எழுதப்பட்ட அறிக்கையை, யாரும் காணமுடியாத ஒரு இடத்தில் இருந்து, வாசிப்பதைத் தவிர எதையும் பகிரங்கமாக கூறுவது கூட கிடையாது. பின் அதற்கு கை கால் பூட்டி, தேராக்கி ஓட்டுவதே, பினாமிகளின் தொழிலாகவுள்ளது. இதற்காக அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. வானவேடிக்கைகள் முதல் எல்லாம் சாமபேதமின்றி உண்டு.


எல்லாம்வல்ல, எல்லாம் தெரிந்த தலைவர், மௌன விரதம் காரணமாக பல கேள்விகளுக்கு, பல தெளிவீனத்துக்கு பதில் அளிப்பதில்லை. சுனாமி ஊரைக் கூட்டி அள்ளிச் சென்றாலும், அதைக் கூட காணாத எல்லாம்வல்ல தனது அற்புதத்தின் விளைவாக கண்ணை மூடி இருப்பவர் தான் புலித் தலைவர். இவரை நம்பிப் பிழைக்கும் பினாமிகளும், கூலி எடுபிடிகளும், தமது தொழில் சார்ந்து நம்பிக்கைகளையும் பிரமைகளையும் கண்மூடிக் கொண்டு, நடுவாற்றில் விதைக்கின்றனர். தாம் விரும்பியவாறு உளறி, தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கி வெள்ளத்தின் போக்கில் ஒட வைத்துள்ளனர்.


இவர்களின் தலைவருக்கு தெரிந்தது என்ன? அவரிடம் ஒன்றுமேயில்லை. அதனால் தான், கண்ட கண்ட நாய்கள் எல்லாம் அவரின் பெயரில் குதறுகின்றனர். தமிழ் மக்களின் தலைவராக பினாமிகளால் மகுடம் சூட்டிய பின் (சூட்ட முன் அவர் தானே புலிக்கு தலைவர் என்று அறிவித்துக் கொண்டவர்), அவர் வழங்கிய ஒரேயொரு நேரடிப் பேட்டியும் அதன் பரிதாபமும், அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அவரே நேரடியாக உறுதிசெய்தவர். இது தான் புலிகளின் பரிதாபகரமான நிலைமை. இதனால் தான் தமிழ்மக்களின் பிரச்சனை பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும், யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்பதே உண்மை. இதை மூடிமறைக்க பொய்களையும், புரட்டுகளையும் அடிப்படையாகக் கொண்டு கற்பனைப் பிம்மங்களையும் விதைக்கின்றனர்.


பொய்களையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்துபவர்களை கொல்வதன் மூலம், தமது போலித்தனமான விம்பத்தை பாதுகாக்க முடிகின்றது. இனிமேலும் கொலைகளின்றி, புலிகள் இயக்கம் அரசியல் ரீதியாக உயிர்வாழ முடியாத ஒரு அவலமான நிலை. இந்த புலியின் அவலத்தை பயன்படுத்தி, பினாமிகளும் ஓட்டுண்ணிகளும் அதனுடன் ஒட்டிக்கொண்டு நக்கிவாழத் தொடங்கினர்.


மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்டு பாசிச இயக்கத்தின் பின்னால் ஓட்டிக் கொண்டு வாழும் அற்ப மனிதர்கள், மக்களின் உழைப்பில் இழித்து வாழ்வதே மேன்மையானதாகவும் அதையே தேசியமாக காட்டத்தொடங்கினர். மற்றவர் உழைப்பில் நக்கி தின்னும் இவர்கள், தமது செழிப்பை பாதுகாக்கவே குலைக்கத் தொடங்கினர். சும்மா குலைக்க முடியாது என்பதால், தன்னைச் சுற்றி எதிரிகளைக் காட்டியும், எதார்த்ததையும் திரித்து குலைப்பதே இன்றைய புலித்தேசியத் தகவலாக மாறுகின்றது.


புலிகளின் தலைமைக்கு எதன் மீதும் ஒரு புலித்திட்டத்தின் அடிப்படையில் சொந்தக் கருத்து எதுவும் இல்லாததால், குலைப்பதை அடிப்படையாகக் கொண்டு இயங்கத் தொடங்குகின்றது. புலிகளுக்காக குலைப்பவர்கள், புலியின் இயல்புக்கு ஏற்ப புனைவதும் திரிப்பதிலும் கைதேர்ந்த மோசடிக்காரராகி விடுகின்றனர். 2002 முன்பான யுத்தகாலத்தில், யுத்தகால செய்தியையே அடிப்படையாக கொண்டு செய்திகள் கூறமுடிந்தது. ஆனால் அமைதிக்காலத்தில் செய்திகளுக்கு வங்குரோத்து உருவானது. செய்திகளை புலி அரசியல் மீது உற்பத்தி செய்யமுடியாத அவமானநிலை.


தமிழ்மக்களை தொடர்ந்தும் கற்பனையான மாயையில் வைத்திருக்க, செய்திகளை தொடர்ந்தும் கற்பனையில் உருவாக்கி அதை பெரிப்பித்து காட்டுவதன் மூலம் செய்திகள் உற்பத்தி செய்யப்பட்டன. கற்பனை எதிரிகளை சதா கண்டுபிடிப்பது, அதை வியாபித்துக் காட்டி விடுவதே செய்தியாகியது. தகவல்கள், செய்திகள் புனையப்பட்டு, அவை கற்பனையான பிரமையில் பேய்களைப் போல் உலாவவிட்டனர். சமகாலத்தில் இணையத்தின் வருகையும் அதன் பயன்பாடும் அதிகரித்த நிலையில், இணையத்தின் ஊடாகவே செய்திகளை கட்டுப்படுத்தும் நிலைமையும், செய்தியின் புனைவை சமூகம் முழுவதும் ஒரேமாதிரி விதைக்கமுடிந்தது. தகவல்களை, செய்திகளை சேகரிப்பவர் சுயவறிவிழந்து மலடாகினர். கிளிப்பிள்ளை போல் பார்த்தும், ஓட்டியும் வாசிக்கும் நிலைமைக்கு தமிழ் தகவல்துறை சீரழிந்தது. இந்த இழிநிலையைப் பயன்படுத்தி, புதிதாக பல ஓட்டூண்ணிகள் ஒட்டிக் கொண்டும், இந்த பொய் செய்திகளை பரப்பியதுடன், அதையும் தமது கற்பனையில் உருவாக்கினார்கள்.


சொந்த இணையம் நடத்த விரும்பியவர்களும், தனது நோக்கத்தை விளம்பரம் செய்ய விரும்பிய எல்லாவிதமான பிழைப்புவாத ஐந்துகளும், இந்த ஊதிப்பெருக்கி செய்திகளை காவும் நச்சுக் காவிகளாகினர். தமது இணைய இணைப்பில் அல்லது அச் செய்திகளை செய்தியாக மறுபிரசுரம் செய்தனர். தமிழ் பரப்பு முழுக்க இந்த ஊதிப் பெருக்கிய வீங்கி செய்திகளே, ஒரேவிதமாக மீள மீள ஒப்புவிக்கப்படுகின்றது.


இதையொட்டி வானொலிகள், தொலைக்காட்சிகள் இந்த இணையச் செய்தியையே ஒப்புவிப்பதாக மாறியது. இதை மீறினால் துரோகி பட்டமும், அவதூறும் சும்மா இலவசமாக காத்துக்கிடந்தது, காத்துக்கிடக்கின்றது. சுயமான, சுயாதீனமான செய்தி சேகரிப்பு முறையே மறுதலிக்கப்பட்டது. சுயசிந்தனையுள்ள எந்த அறிவும், அது சார்ந்த செய்தியும் தமிழ் பரப்பில் முற்றாக நலமடிக்கப்பட்டது. இப்படி செய்திகள் புனையப்பட்ட போது, அது எதார்த்த சூழலுக்கு அன்னியமானதாக, உண்மைக்கு புறம்பானதாகவே அமைந்தது.


இந்த சூழலுக்கு தமிழ் சமூகம் பழக்கப்படுகின்றது. தமிழ்சமூகம் வில்லங்கமில்லாத ஜடங்களாகவும், சோம்Nபறிகளாகவும் மாறிவிடுகின்றனர். அப்படியே கண்ணை மூடிக்கொண்டு இவற்றை கேட்பதும், காவிகளாகி பரப்புவதும் பழக்கப்பட்ட ஒன்றாகிவிடுகின்றது. அதாவது வளர்க்கப்படும் மிருககாட்சிசாலை மிருகத்தின் நிலைக்கு தரம் தாழ்ந்து இழிந்து விடுகின்றனர். மணியடித்தால் துள்ளிக்குதிக்கும் நிலைக்கு, செய்திகளைக் கண்டு குதித்தெழுகின்றனர். சுயஅறிவு, சுயசிந்தனை அனைத்தையும் இழந்து, தம்மளவில் இழிந்து, ஆக்கமற்ற மலட்டுக் கூட்டமாக மாறிவிடுகின்றனர். புலம்பெயர் தமிழர் மத்தியில் இதுவே மிக மோசமாகி, ஆக்கமற்ற மனித ஜடமாகிவிட்டனர். பழக்கப்பட்ட செக்குமாடுகள் ஒரே வட்டத்தை, சவுக்கின் அசைப்புக்கு ஏற்ப எப்படி சுற்றி நடக்கின்றதோ, அதே அவலநிலை தான் புலம்பெயர் தமிழனின் வட்டநிலை. இந்த வட்டத்தை தவறவிடாது இருக்கவும், வேறு சிந்தனையில் திசைதிரும்பாது இருக்கவும், கண்கள் அக்கம் பக்கமாக மறைத்துக்கட்டிய நிலையில், முன்னால் காட்டும் உணவுக்கு ஏற்ப அலைபாய்கின்றனர். இது அவர்களின் சொகுசான வாழ்வியல் முறைக்கும், அதற்கு இசைவான சீரழிவு போக்குக்கும் இணங்கியசைகின்றது.


அனைத்து செய்திகளும், தகவல்களும் இப்படித் தான் அசைகின்றது. ஒரு பொய் எப்படி புனையப்படுகின்றது. இதற்கு ஒரு உதாரணம் தான் மாணவிகளின் மீதான குண்டுவீச்சு. இந்த உதாரணத்தை நாம் பாhப்போம்.


மாணவிகள் கொல்லப்பட்ட செய்தியில் உள்ள உண்மையும் பொய்யும் மாணவிகள் கொல்லப்பட்டது உண்மை. ஆனால் அவர்களை வெறும் மாணவிகளாக காட்டியது பொய். இந்த பொய்யை ஊதிப்பெருக்கிய வடிவங்கள் அனைத்தும் தலைகால் தெரியாது வீங்கி வெம்பின. இப்படி வீங்கி வெம்பிய தகவல் தான், பெரும்பான்மை தமிழ் சமூகத்தின் முன் கொடுக்கப்பட்டுள்ளது.


முல்லை வள்ளிபுனத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் எதுவுமறியாத அப்பாவிகள். அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அப்பாவிகளாக இருந்தனரோ, அதேயளவுக்கு அவர்களின் சொந்தப் பிணங்களும் புணரப்பட்டன. பொய்யும் புரட்டுமாக புனையப்பட்டு, பிணத்தை வலிந்து வீங்க வைத்தனர். வீங்கிய அழுகிய இந்த பிணத்தை புலம்பெயர் தமிழரின் ஒருபகுதியினரின் தலையில் கிடத்தி, ஊர்வலம் விட்டனர். பிணத்துக்கு அரோகரா, பிணத்துக்கு அரோகரா என்று கொஞ்ச பிழைப்புவாதிகள் கூறிக் கொண்டு பின்னால் ஓடினர். அன்று சுனாமி பிணத்தை வைத்து நடத்திய வசூல் வேட்டையும், அந்த பணம் அந்த மக்களுக்கு எப்படிக் கிடைக்கவில்லையோ, அதே சோகக் கதை தான் இங்கும்.


வருமானத்தை தருகின்ற இந்த நாய்ப் பிழைப்புக்கு உதவிய மாணவர்கள் விடையத்தை, இணையங்கள் முதல் அனைத்துச் செய்திகளும் குதர்க்கமாக ஒன்றுக்கொன்று முரணாக ஓலமிட்டன. அவர்களே வெளியிட்ட தகவல்கள், செய்திகள் பல குழப்பகரமானவை மட்டுமின்றி நம்பகத்தன்மையற்றவை. ஆனால் இதன் பின்னால் மந்தைக் கூட்டத்தை, செக்குமாடுகளாக ஒரு கும்பலையே சாய்க்க முடிந்தது. இப்படி தமிழ் மக்களின் அவலமான நிலை பரிதாபகரமானது.


இந்த அவலத்தின் பின்னணியில்


1. அவர்கள் செஞ்சோலை குழந்தைகள் என்றார்கள்.


2. எதுவுமறியாத அப்பாவிகள் என்றார்கள்.


3. அநாதைகள் என்றார்கள்.


4. மாணவர்கள் என்றார்கள்.


5. சுனாமியில் தாய் தந்தையை இழந்த அநாதைகள் என்றார்கள்.


6. மருத்துவ முதல் உதவி சிகிச்சை பற்றிய பயிற்சிக்கு வந்தவர்கள் என்றார்கள்.


இப்படிப் பற்பல புனைவுகள். இதில் எது உண்மை? அல்லது வேறு ஒன்றா? இப்படி தமிழ் மக்கள் சார்பாக, நாங்கள் எல்லாமாகவும் நடித்தோம். எல்லாமாகவும் அழுதோம். எல்லாமாகவும் துயரத்தைப் பகிர்ந்தோம். எமது போலித்தனத்தின் மொத்த முகத்தை எல்லாவிதமாகவும் காட்டினோம். நாங்கள் போலிகள் அல்ல, நாங்கள் தான் அசல்கள் என்றும் நடித்தோம். முடிவின்றி நடித்துக் கொண்டு இருக்கின்றோம்.


சரி, அப்படியாயின் உண்மை என்ன? புலித் தலைவர்களே இதில் எது உண்மை என்று சொல்லமுடியாத, அரசியல் அனாதைகளாகிப் போனார்கள். இந்த அனாதையாகிப் போன துயரத்தை, பலரும் தாம் விரும்பியவாறு புணர்ந்து விபச்சாரம் செய்தனர். அவர்கள் விபச்சாரம் செய்தது மட்டுமல்ல, மற்றவர்களை விப்ச்சாரம் செய்யவும் தூண்டினர். முடிவு சுனாமி போல், ஏமாந்த தமிழனை வைத்து இலாபகரமான வியாபாரம் தான்.


நாங்கள் இப்படி இந்த போலித்தனத்தை அம்பலப்படுத்திய பின்பான உண்மை என்ன? இதை ஒட்டி சுய கேள்விகளை, சுய சிந்தனை இன்றி உண்மையைக் காணமுடியாது.


1. இது ஒரு செஞ்சோலை என்றால், யுத்தத்தினால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கென புலிகளால் உருவாக்கப்பட்ட இடம். இப்படித்தான் புலிகளால் கடந்தகாலத்தில் கூறப்பட்டது. சரி கொல்லப்பட்ட செஞ்சோலை குழந்தைகள் எங்கே? எங்கே அந்த அனாதைக் குழந்தைப் பிணங்கள்? இங்கு எந்த சிறு குழந்தையும் கொல்வப்படவேயில்லை. ஒரு உண்மை அம்பலமாகின்றது, செஞ்சோலை குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது தவறானதும், பொய்யானதும், திட்டமிட்டு உருவாக்கிய வீங்கி வெம்பிய செய்தியுமாகும்.


சரி இந்த மையம் முன்பு செஞ்சோலை இருந்து அது கைவிடப்பட்ட இடம் என்றால், அது செஞ்சோலையல்ல. அங்கு தலைவர் கூட தங்கியிருக்க முடியும். நாளை சிங்கள இராணுவம் கூட தங்கியிருக்க முடியும். அங்கு 17 முதல் 19 வயதானவர்கள் புலியின் நோக்கத்துக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்பதும், அங்கு வைத்துக் கொல்லப்பட்டனர் என்பதே உண்மை.


2. சுனாமியால் தாய் தந்தையை இழந்த அநாதைகள் என்றார்கள். அதுபோல் அவர்கள் அநாதைகள் என்றார்கள். அவர்கள் அநாதைகள் அல்ல என்பதும், தாய் தந்தை உள்ளனர் என்ற தகவல் பொய்யர்களை அம்பலமாக்கியுள்ளது. இந்த பொய் உலகம் முழுக்க பரப்பப்பட்டது. இதன் மூலம் இது பொய் என்ற உண்மை, உலகமறிய அம்பலமாகியுள்ளது.


3. அப்பாவி மாணவர்கள் என்றார்கள். இது ஒரு பகுதியே உண்மை. ஆனால் புலிச் செய்திகள் இந்த உண்மையைக் கூறவில்லை. பொய்யையும் புரட்டையும் அடிப்படையாக கொண்டு, இதை பூசி மெழுகினர்.


மாணவர்கள் தாங்களாகவே தாமே தெரிந்துகொண்டு இந்த இடத்தில் கூடவில்லை. அவர்களின் சொந்த விருப்பத்துக்கு புறம்பாக பலாத்காரமாக கொண்டு வரப்பட்டவர்கள். பெற்றோர்கள், பாடசாலை நிர்வாகம் முதல் அனைவரினதும் விருப்பங்களையும் மறுதலித்தே இந்த மாணவர்கள் கொண்டு வரப்பட்டவர்கள். அந்த வகையிலும் அவர்கள் அப்பாவிகள். தாங்களாகவே தோந்தெடுக்காத ஏதோவொரு கட்டாயப் பயிற்சிக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் அல்லது உள்ளாக்கப்படவிருந்தவர்கள். அதுவும் இந்தப் படுகொலை காலையில் நடந்தது என்பதால், அவர்கள் அங்கு முன்கூட்டியே தங்கவைக்கப்பட்டு இருந்தனர். உண்மையில் வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள், அதிலும் கூடுதலாக புலிக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் மக்கள், தாமாக சுயமாக எந்த முடிவையும் எடுக்கமுடியாத அப்பாவிகள். இந்த நிலையில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர் என்ற புலியின் வாதம் பொய்யாகின்றது. இந்த பொய் உண்மையை உணர்த்துகின்றது.


ஏதோவொரு பயிற்சிக்கு என அந்த மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் என்றால், யாரால்? ஏன்? எதற்கு? அதுவும் பாடசாலையல்லாத இங்கு? இதற்கு யாரும் பதில் தரவில்லை. இந்த நிலையில், அரசியல் பிழைப்பு நடத்தப்படுகின்றது. அரசியல் கொள்கைகளை வைத்து அரசியல் செய்யத்தெரியாத பாசிட்டுகள், இப்படி மலிவு விலையில் கோமாளி வேஷம் போட்டு பிணத்தை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். சொந்த தாய், தந்தை, உறவினர், பாடசாலைகள் என்று, இந்த மாணவிகளின் பின்னனி உள்ளது என்ற உண்மைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு அரசியல் கோசிப்பு நடத்தப்பட்டது மட்டுமின்றி, இழிவான மலிவான கேடுகெட்ட அரசியல் விபச்சாரம் செய்யப்பட்டது.


4. பொய்யையும் புரட்டையும் நிறுவ, கண்காணிப்புக்குழு அறிக்கையிலும், யுனிசேவ் அறிக்கையிலும் சரணடைந்தனர். ஆனால் அவர்கள் இதை இராணுவ முகாமில்லை என்று எப்படி கூறினரோ, அதேபோல் புலிகள் கூறியது போல் இதை அனாதை முகாம் என்றும் கூறவில்லை. இதில் புனைவும் பொய்யும் அம்பலமாகிவிடுகின்றது.


இந்தளவுக்கு அந்த பெண்கள் இரவு உடையில் இருக்கவில்லை. சிலர் ஒரேவிதமான கறுப்பு உடுப்பில் இருந்துள்ளனர். சில உடல்களை மட்டுமே சர்வதேச அமைப்புகள் காணமுடிந்தது. அதுவும் இறந்த இடத்தில் அல்ல. இந்த நிலையில் முழுமையாக இறந்தவர்களின் படங்கள் வெளிவரவில்லை. இதைவிட பெற்றோர்களின் சொந்த அபிப்பிராயம், பாடசாலைகளின் அபிப்பிராயம் எதுவும் வெளிவரவில்லை. சில பினாமிகள் மட்டும் தான், இதன் மீது முழு அதிகாரம் பெற்று குலைத்துக் கொண்டிருந்தனர். இப்படித் தான் இன்று அனைத்து பொய்களும் தமிழ் மக்கள் சார்பாக புனையப்படுகின்றது.


இந்த விடையம் மீதான சில கேள்விகள், இதை மேலும் உங்களை தெளிவுபடுத்தும் என்பதால்


1. இதையொத்த வயதுடையவர்களை புலிகள் இராணுவ பயிற்சி வழங்கவில்லையா? அப்படியாயின் எது உண்மை?


2. இதையொத்த பலருக்கு மக்கள் என்ற பெயரில் புலிகள் கட்டாய பயிற்சி வழங்கவில்லையா? இப்படி படங்களை அவர்கள் வெளவிடவில்லையா? அப்படியாயின் எது உண்மை?


3. தாக்குதல் நடக்க முன், இந்த பயிற்சி பற்றி வழமைபோல் புதினம் இணையம் போட்ட படங்களுடன் கூடிய செய்தி உண்மை இல்லையா? அப்படியாயின் எது உண்மை?


4. கொல்லபட்டவர்களை முழுமையாக வெளி உலகத்துக்கு காட்டமறுத்தது ஏன்? முழுமையாக கொல்லப்பட்டவர்கள் பெயரை வெளியிடாமை ஏன்? அப்படியாயின் எது உண்மை?


5. தாக்குதல் நடந்த இடம் முழுமையாக காட்சிப்படுத்தாதது ஏன்? அப்படியாயின் எது உண்மை?


6. ஏதோ ஒரு இடம் என்றால், அதற்குரிய அடிப்படையான உள்ளடகம் இருந்தே இருக்கும். அது ஏன் காட்டப்படவில்லை? அப்படியாயின் எது உண்மை?


7. கண்காணிப்பு குழு இது பயன்பாடு அற்ற இடமாக இருந்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர். புதிதாக ஒரு பயன்பாட்டை அது வெளிப்படுத்தியுள்ளது? அது என்ன? அப்படியாயின் எது உண்மை?


8. கொல்லப்பட்ட சிலர் ஒரேவிதமான ஒரு கறுப்பு சீருடையில் இருந்துள்ளனர்? அப்படியாயின் எது உண்மை?


9. கொல்லப்பட்டவர் எண்ணிக்கை குழப்பகரமானதாக உள்ளது ஏன்? குறிப்பிட்ட எண்ணிக்கை தாண்டி கொல்லப்பட்டவர்கள் யார். இதை வழிநடத்தியவர்கள் கொல்லப்படவில்லையா? அப்படியாயின் எது உண்மை?


10. இதனுள் புலிகள் சம்பந்தப்படவில்லையா? அப்படியாயின் எது உண்மை?


இப்படி பல நூறு கேள்வி எழுப்ப முடியும். சுயஅறிவும் சுயசிந்தனையும் உள்ளவர்களுக்கு, இது போதுமானது. இப்படியான உண்மைகள் தமிழ் மக்களுக்கு உதவாது என்பது, புலிகளின் கொள்கையாகிவிட்டது. தமிழ் மக்களுக்கு எப்படி ஜனநாயகத்தை வழங்கமுடியாது என்று எப்படி புலிகள் கூறுகின்றரோ, அதேபோல் தான் தமிழ் மக்களுக்கு உண்மை செய்திகளை வழங்கக் கூடாது என்பதே புலிதேசியக் கொள்கையாகும்.


உண்மை என்பது மறுக்கப்பட்டு, கற்பனையான செய்திகளை வக்கிரமாக்கி தருகின்றனர். எல்லாம் வெற்றியாக வீங்கி வெம்பிப் போன தகவல், அடிக்கடி அவர்களையும் மீறி பொய்யாக்குகின்றது. மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு செய்திகளும் தமது பங்குக்கு வீங்கி வெம்புகின்றன. செய்தியின் உண்மைத் தன்மையைத் தேடி, நீந்தித்தான் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. இது உண்மையா? என்ற சந்தேகத்தை பலர் இன்று எழுப்புகின்றனர். முன்பைவிட செய்தி மீதான நம்பிக்கையை இழப்போர் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர். எந்த நம்பிக்கையும், சந்தேகத்தைக் கடந்து உயிர் வாழவில்லை. அன்று வீங்கி வெம்பி வெடித்த இயக்கங்கள் போல், தகவல்களுக்கும் இந்தக் கதி நடக்கின்றது. ஒரு இனம் மண்ணோடு மண்ணாக சிதைந்து சின்னாபின்னமாகி அழிகின்றது.


அடுத்து வீங்கி வெம்பவைக்கும் தமிழீழக் கனவுபற்றி தனிக்கட்டுரையாக பார்ப்போம்.


Thursday, August 24, 2006

விவசாயிகளை ஏய்க்கும் இன்னுமொரு மோசடிநாடகம்

பிரதமரின் விதர்பா பயணம்: விவசாயிகளை ஏய்க்கும் இன்னுமொரு மோசடிநாடகம்

காராஷ்டிரா மாநிலத்திலுள்ள விதர்பா பகுதிக்கு, கடந்த ஜூன் மாத இறுதியில் வந்து போன பிரதமர் மன்மோகன் சிங், ""அப்பகுதி விவசாயிகள் கடனில் மூழ்கி நொடித்துப் போயிருப்பதையும்; அப்பகுதி பருத்தி விவசாயம் நாசமாகி வருவதையும்'' ஒப்புக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். ""பொருளாதாரப் புலி'' மன்மோகன் சிங், தன் கண்களால் பார்த்து இந்த உண்மையை ஒப்புக் கொள்வதற்கு, ஏறத்தாழ 650 பருத்தி விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.


விதர்பா பகுதியில் விவசாயிகளின் வாழ்க்கை இயல்பாகப் போய்க் கொண்டிருப்பதாகப் புளுகி வந்த மகாராஷ்டிர மாநில அரசு, மன்மோகன் சிங் விதர்பா பகுதிக்கு வந்து விவசாயிகளைச் சந்திக்கப் போவது உறுதியானவுடன், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுள் சில குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வேகவேகமாக நட்டஈடு வழங்கத் தொடங்கியது. இதில் கூட, அம்மாநில அரசு நாணயமாக நடந்து கொள்ளவில்லை. நட்டஈடு ஒரு இலட்சம்ரூபாய் என அறிவித்திருந்த அம்மாநில அரசு, அவர்களுக்கு வழங்கியதோ வெறும் முப்பதாயிரம் ரூபாய்தான்!


மன்மோகன் சிங் காலடித்தடம் படப் போகும் சில கிராமங்களில் புதிதாகச் சாலைகள் போடப்பட்டன் தெரு விளக்குகள் போடப்பட்டன் மன்மோகன் விரைவாக வந்து திரும்புவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, மன்மோகன் சிங்கைச் சந்தித்துத் தங்களின் குறைகளைக் கூறுவதற்காக 3035 விவசாயக் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பிரதமர் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்படியாக மன்மோகன் சிங்கின் பயணமும், சந்திப்பும் அதிகார வர்க்கத்துக்கேயுரிய வக்கிரத்தோடு நடந்து முடிந்தது.


ஆறு மாவட்டங்களைக் கொண்ட விதர்பா பகுதியில், ஏதோ ஒன்றிரண்டு கிராமங்களுக்குப் போய், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விவசாயக் குடும்பங்களைச் சந்தித்துவிட்டு, மன்மோகன் சிங் தனது கடமையை முடித்துக் கொண்டாலும், ""அவர் ஏதாவது நல்லது செய்வார்'' என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் இருந்தது. குறிப்பாக, ""வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வார்; கந்துவட்டிக் கடன் கொடுமையில் இருந்து தங்களை மீட்க ஏதாவதொரு வழி சொல்வார்; பருத்திக்குத் தரப்படும் ஆதார விலையøக் கூட்டிக் கொடுப்பார்'' என விவசாயிகள் நம்பினார்கள். ஆனால், இந்தப் பொருளாதாரப் புலி அறிவித்துள்ள நிவாரண உதவித் திட்டத்தை, முதலாளித்துவ விவசாய நிபுணர்களால்கூட முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விதர்பா பகுதி விவசாயிகளோ இத்திட்டத்தை ஏமாற்று மோசடி எனக் காரித் துப்புகின்றனர்.


விதர்பா பருத்தி விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பது என்ற பெயரில் மன்மோகன் சிங் அறிவித்துள்ள 3,750 கோடி ரூபாய் பெறுமான உதவித் திட்டத்தில், 2,177 கோடி ரூபாய் விதர்பா பகுதியில் நடந்து வரும் பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும்; 240 கோடி ரூபாய் சொட்டு நீர்ப் பாசனம் போன்ற ""நவீன'' பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும்; 225 கோடி ரூபாய் தோட்டப் பயிர் விவசாயத்தைப் பிரபலப்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


இவை போக, பருத்தி விவசாயிகளுக்குக் கிடைத்தது என்னவென்றால், அரசாங்கம் கொடுத்துள்ள கடனுக்கான வட்டித் தள்ளுபடி; அரசாங்கக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக் கெடுவைத் தள்ளி வைப்பது; மற்றும் புதிய கடன் வழங்குவது, தரமான விதைகள் விநியோகிப்பது போன்ற சில்லறை சலுகை அறிவிப்புகள்தான். அடுத்தவன் இலைக்குப் பாயசம் ஊற்றச் சொல்லும் தந்திரமாக முடிந்து போனது, இந்த உதவித் திட்டம்.


உலக வங்கியின் புரோக்கரான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் செயல்படும் திட்ட கமிசன், ""அப்பகுதியில் நடந்து வரும் பாசனத் திட்டங்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து விட்டால், பருத்தி விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடும்'' என்ற அரிய யோசனையை மன்மோகன் சிங் விதர்பா பகுதிக்கு ""திக் விஜயம்'' செய்வதற்கு முன்பாகவே, முன் வைத்தது. இதன்படிதான், 3,750 கோடி ரூபாய் உதவித் திட்டத்தில், 2,417 கோடி ரூபாய் ஏறத்தாழ 65 சதவீதம் பாசனத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டக் கமிசனின் இந்த அரிய யோசனையின் இலட்சணம் என்ன தெரியுமா?


விதர்பா பகுதியில் பல பத்தாண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்துவரும் 500க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முடிந்து விட்டால் கூட, விதர்பா பகுதி பூஞ்சோலையாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புள்ளி விவரப்படியே, பாசனத் திட்டங்கள் உருப்படியாக நடந்து முடிந்தால் 28.35 இலட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு தான் பாசன வசதி கிட்டும். ஆனால், விதர்பாவில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்போ 97.43 இலட்சம் ஹெக்டேர். பாசன வசதி கிடைக்காத விவசாயிகள் வானத்தையோ, கிணற்றையோ நம்பிதான் விவசாயம் செய்ய வேண்டும். பருத்தி விவசாயிகளுக்குக் கிணறு தோண்ட உதவியோ, மானியமோ தர முன் வராத மைய அரசு, சொட்டு நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக 240 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை வக்கிரத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.


இது ஒருபுறமிருக்க, மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட ""நீர் ஆதார ஒழுங்குமுறைச் சட்டம், அரசாங்கம் அமைத்து வரும் பாசன வசதிகளை, ஏழைநடுத்தர விவசாயிகள் பயன்படுத்தும் உரிமையைத் தட்டி பறித்துவிட்டது. இச்சட்டத்தின்படி, விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஆண்டுக்கு அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பாசனக் கட்டணம் எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஆண்டு பாசனக் கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகமாக 12,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தைக் கட்டத் தவறும் விவசாயிகள் மீது, பாசனக் கட்டணத்தைப் போல 10 மடங்கு அபராதம் விதிக்கப்படுவதோடு ஆறுமாதச் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.


இப்படியொரு பகற்கொள்ளை அடிக்கும் சட்டம் இருக்கும் மாநிலத்தில், விவசாயிகளுக்குப் பாசன வசதி என்பது ஊரை ஏமாற்றுகின்ற வேலைதான். ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் நுழைந்துள்ள தரகு முதலாளித்துவ நிறுவனங்கள்; ஏற்றுமதிக்காக தோட்டப் பயிர்களைப் பயிரிடும் நவீன பணக்கார விவசாயிகள்; அரசாங்க காண்டிராக்ட்காரர்கள் இவர்களின் கஜானாவை நிரப்பத்தான், இந்த 2,417 கோடி ரூபாய் பெறுமான பாசனத் திட்டங்கள் பயன்படும்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி விதைகள் என்றாலே, மான்சாண்டோ நிறுவனத்தின் ""பி.டி.'' பருத்தி விதைகள்தான். ஆந்திராவில் பல நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு இந்த மலட்டு விதைகளும் ஒரு காரணம் எனத் தெரிந்திருந்த போதிலும், இந்த ""பி.டி.'' பருத்தி விதைகளை மகாராஷ்டிராவில் விற்கும் ஏகபோக உரிமையை, ""மாஹிகோ'' என்ற அரசு நிறுவனமே மான்சாண்டோவிடமிருந்து வாங்கி வைத்துள்ளது.


""ஹெச்.4'' என்ற இரக பருத்தி விதை ஒரு கிலோ ரூ. 300ஃக்கு விற்கப்படும் பொழுது, ""மாஹிகோ'' சந்தையின் மீதான தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு, 450 கிராம் பி.டி. பருத்தி விதைகளை ரூ. 750க்கு விற்று, பருத்தி விவசாயிகளை மொட்டையடித்து வருகிறது.


விதர்பா பருத்தி விவசாயிகள் கோருகிறபடி ""பி.டி.'' மலட்டு விதை விற்பனையையும்; பருத்தி விதைகள் இடுபொருட்கள் விற்பனையில் நடந்து வரும் பகற்கொள்ளையையும் தடுத்து நிறுத்த மன்மோகன் சிங் முயலவில்லை. மாறாக, மான்சாண்டோவின் ஏஜெண்டாகச் செயல்படும் மகாராஷ்டிரா அரசிடம், விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை வழங்குவதற்கு 180 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்து, பருத்தி விவசாயிகளின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார்.


""பருத்திக்கு மாநில அரசாங்கம் தரும் ஆதார விலையை ரூ. 2700ஃ ஆக உயர்த்துவோம்'' என காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இக்கூட்டணி சட்டசபை தேர்தலில் வென்று, மாநில ஆட்சியைப் பிடித்த பிறகு, ஏற்கெனவே கொடுக்கப்பட்டு வந்த ஆதார விலையில் (ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,200ஃ) இருந்து


ரூ. 500ஐ வெட்டி விட்டு, 1,700 ரூபாய்தான் ஆதார விலையாகக் கொடுத்து வருகிறது. இந்த வெட்டின் மூலம், கடந்த ஆண்டு மட்டும், மகாராஷ்டிரா மாநில அரசுக்குக் கிடைத்துள்ள இலாபம் ஏறத்தாழ 1,000 கோடி ரூபாய். விதர்பா பருத்தி விவசாயிகளிடமிருந்து 1,000 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு, 712 கோடி ரூபாய் அளவிற்கு வட்டி தள்ளுபடி செய்திருக்கிறோம் என மன்மோகன் கும்பல் பீற்றிக் கொள்வது கடைந்தெடுத்த மோசடித்தனம்.


பருத்தி அறுவடை முடிந்து விற்பனைக்கு வந்த மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்திற்குள் விதர்பாவில் 80க்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள். உற்பத்திச் செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காமல், அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய சந்தையின் சூதாட்டத்திற்குள் விவசாயிகள் தள்ளப்பட்டதுதான் இந்தச் சாவுகளுக்குக் காரணம். மேலும், விதர்பா பருத்தி விவசாயிகளின் அகால மரணத்திற்கும் அமெரிக்காவிற்கும் நேரடித் தொடர்புண்டு.


அமெரிக்கா, தனது நாட்டில் விளையும் பருத்திக்கு, ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 18,000 கோடி ரூபாய் மானியமாகக் கொடுக்கிறது. இதனால், அமெரிக்காவில் இருந்து அடிமாட்டு விலையில் பருத்தி இந்தியாவிற்கு இறக்குமதியாகிறது. இந்த அமெரிக்க பருத்தி மீது வெறும் 10 சதவீத அளவிற்கே சுங்க வரி விதிக்கப்படுவதால், உள்நாட்டில் விளையும் பருத்தியை விட, அமெரிக்க பருத்தி மிக மலிவாக சந்தையில் கிடைக்கிறது. தாராளமயம் என்ற பெயரில் நடக்கும் இந்த நாணயமற்ற வர்த்தக இறக்குமதிதான் இந்தியப் பருத்தி விவசாயிகளைப் போண்டியாக்கி வருகிறது; தற்கொலைக்குத் தள்ளி வருகிறது.


அதனால்தான் விதர்பா பகுதி பருத்தி விவசாயிகள், ""அமெரிக்காவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்வதைக் கைவிட வேண்டும். பருத்திக்கு அரசாங்கம் கொடுக்கும் ஆதார விலையை மூவாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்'' எனக் கோருகிறார்கள். பருத்தி விவசாயிகளின் உயிராதாரமான இந்தக் கோரிக்கைகளை மன்மோகன் சிங் கண்டு கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, சமீபத்தில் அவரின் தலைமையில் கூடிய அமைச்சரவை, விவசாயத் துறை முழுவதிலும் தாராளமயத்தை அமல்படுத்தப் போவதாக முடிவெடுத்திருக்கிறதாம். இந்த முடிவு நடைமுறைக்கு வரும்பொழுது விதர்பாவில் நடந்து வரும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை, காவிரிப் படுகையிலும் நாம் காண நேரிடும்!


மு செல்வம்


Wednesday, August 23, 2006

மதவெறி பயங்கரவாதத்திற்கு அரசு பயங்கரவாதம் தீர்வாகுமா?

மும்பை தாக்குதல்: மதவெறி பயங்கரவாதத்திற்கு அரசு பயங்கரவாதம் தீர்வாகுமா?

மும்பை ஜூலை 11, மாலை 6.24 மணி தொடங்கி 6.31 மணி வரை ஏழு நிமிடங்களில் ஏழு தொடர் வண்டிகளில் நடந்த ஏழு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் 200 முதல் வகுப்பு பயணிகளைப் பலிகொண்டு, 800 பேர்களைப் படுகாயமுறச் செய்த கோரங்களைச் செய்தி ஊடகங்கள் நிறையவே விவரமாகச் சித்தரித்துவிட்டன.


""தேசிய சர்வதேசியத் தலைவர்கள்'' என்று அறியப்பட்ட அனைவரும் கடும் கண்டங்கள் தெரிவித்துவிட்டனர். அரசுத் தலைவர், பிரதமர், ஆளுங்கட்சித் தலைவர், ரயில்வேத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், அதேபோல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோரும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்த இடங்களைப் பார்வையிட்டு விட்டு, இறந்தோர் குடும்பங்களையும் காயமுற்றோரையும் கண்டு ஆறுதல்கள் வழங்கினர். பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு நிதி உதவித் தொகையும் அறிவிக்கப்பட்டு விட்டன.


குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தவுடன், போலீசு மற்றும் சிவில் நிர்வாகத்துக்கு முன்பாகப் பொதுமக்கள் விரைந்து வந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பல்வேறு செய்திகள், சம்பவங்களை நேரில் பார்த்தவர்களின் விவரணைகள், துயரச் சம்பவங்களை மும்பைவாசிகள் எதிர்கொண்ட விதம், துணிவு, மத வேறுபாடுகளைக் கடந்த நிவாரணப் பணிகள், அடுத்தநாளே மும்பை வழமையான நிலைமைக்குத் திரும்பிய வியப்பு, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மதக் கலவரங்கள் ஏதும் வெடிக்காமல் தடுத்து, மும்பைவாசிகள் அமைதிகாத்த பெருந்தன்மை என ஏராளமாகப் பத்திரிகைகளில் நிரம்பி வழிந்தன.


கடந்த சில ஆண்டுகளில் இவை போன்ற பயங்கரவாதச் சம்பவங்கள் பல நடந்தும், குறிப்பாக மகாராட்டிரத்தில் கடந்த ஆறு மாதங்களில் பல இடங்களில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டும், பல தீவிரவாதக் குழுக்கள் பிடிபட்டும் இந்த ஜூலை 11 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கத் தவறிய உளவுத் துறை, உளவுத்துறை எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்திவிட்டு, கோரச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய போலீசு துறை, அரசு நிர்வாகம் ஆகியவை கடும் கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டன.


நியூயார்க், இலண்டன், மாட்ரிட்க், கேசபிளங்கா, பாலி, ரியாத், கெய்ரோ என்று கோரமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பலியான நகரங்களின் வரிசையில் மும்பை மேலும் தனிச்சிறப்பான இடம் பெற்றுள்ளதை ஏடுகள் குறிப்பிடுகின்றன. அதாவது, அங்கெல்லாம் ஓரிருமுறைகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. மும்பையிலோ திரும்பத் திரும்ப பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில், ஆறு இடங்களில் பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து மிக அதிகம் நாசம் விளைவிக்கக் கூடிய வெடிபொருட்கள்ஆயுதங்கள் மகாராட்டிரத்தில் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. 1993இல் 257 பேரைப் பலிகொண்ட தொடர்குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு ஆறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மும்பையில் நடந்துள்ளன.


1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது கிரிமினல் குற்றக்கும்பல் தலைவர்களான தாவுது இப்ராகீம் மமேன் கூட்டணி என்றும், அயோத்தி பாபரி மசூதி இடிப்பைத் தொடர்ந்து 199293 ஆம் ஆண்டில் மும்பையில் ஆர்.எஸ்.எஸ். சிவசேனா இந்து பாசிச வெறியர்கள் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களைப் படுகொலை செய்ததற்கு நடந்த பழிவாங்கும் செயல் என்றும் கூறப்பட்டது. இந்த ஜூலை 11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஸ்கர்இதொய்பா மற்றும் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான ""சிமி'' ஆகியவற்றின் கூட்டுச் செயல் என்றும் செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.


இந்தியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான காரண காரியங்கள், பின்னணி அமைப்புகள் குறித்து இந்திய உளவுத் துறைகளில் உள்ள நம்பகமான நபர்கள் கூறியதாக முக்கியமாக மூன்று கோணங்களிலான ""வதந்திகள் ஊகங்கள் புலனாய்வுச் செய்திகள்'' வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் முதன்மையானது, பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சில பத்து பயங்கரவாத அமைப்புகள் (லஸ்கர், ஜெய்சா, ஹர்கத், ஹிஸ்புல்லா போன்றவை) பாக். அரசு மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் நிதி, ஆயுத உதவி, பயிற்சி தரப்பட்டு இந்திய அரசியல், பொருளாதார, சமூக வாழ்வைச் சீர்குலைக்கவும் மதக் கலவரங்களைத் தூண்டவும் ஏவிவிடப்படுகின்றன. பாக். மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் இளைஞர்களும், இந்தியாவிலுள்ள இஸ்லாம் மதபோதனை நிறுவனங்கள் மதரசாக்களில் பயின்ற மாணவர்களும், கிரிமினல்குற்றக் கும்பல்களும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.


இரண்டாவதாக, உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள். இஸ்ரேலின் ஜியோனிசம், அமெரிக்காவின் கிறித்தவ ஏகாதிபத்தியம், இந்தியாவின் இந்துத்துவம் போன்றவை உலக இஸ்லாத்தை அழித்து வருகின்றன. உலக இஸ்லாமிய மக்களையும் நாடுகளையும், அடக்கி ஒடுக்குவதாகவும் உலகு தழுவிய இஸ்லாமியப் புனிதப் போர் மூலம் அவற்றை எதிர்த்து முறியடிக்க வேண்டும் மேற்கே மொராக்கோ, அல்ஜீரியா, எகிப்து முதல் கிழக்கே பிலிப்பைன்ஸ், பாலி வரை தற்போதுள்ள அரசுகளைத் தூக்கி எறிந்து விட்டு இஸ்லாமிய அரசுகளை நிறுவ வேண்டும் ஈராக், ஆப்கானை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா பிரிட்டன் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அரபு நாடுகளைத் தாக்கி வரும் இஸ்ரேல் காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டு, இந்திய முஸ்லீம்களை ஒடுக்கிவரும் இந்துத்துவ இந்தியா ஆகியவை உடனடி எதிரிகள் இந்நாடுகளோடு பல வகையிலும் கூட்டுச் சேர்ந்துள்ள அரபுஇஸ்லாமியத் துரோகிகளையும் தாக்கும் புனிதப் போர் என்ற முறையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்பதுதான் பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா மற்றும் பல நாட்டு மத அடிப்படைவாதக் குழுக்களின் திட்டம். அவர்களால் ஏவிவிடப்படும் பயங்கரவாதக் குழுக்கள் தாம் ஜூலை 11 மும்பை தொடர்வண்டி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளன என்று செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.


மூன்றாவதாக, அயோத்தி பாபரி மசூதி இடிப்பு அதைத் தொடர்ந்து, குறிப்பாக மும்பை உட்பட நாடு முழுவதும் இந்து மதவெறி சங்க பரிவாரங்கள் நடத்திய படுகொலைகள், அதன் பிறகு ""கோத்ரா'' இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நடந்த கொலைவெறியாட்டம், தடா, பொடா போன்ற கொடிய சட்டங்களால் பல ஆயிரம் இஸ்லாமிய இளைஞர்களை அடக்கி ஒடுக்கும் அரச பயங்கரவாதம் இவையெல்லாம் அல்உம்மா, குஜராத்துக்கு பழிவாங்கும் படை, அஞ்சுமான் போன்ற உள்ளூர் அளவிலான பல பயங்கரவாதக் குழுக்கள் தோன்றக் காரணமாகி உள்ளன. நாட்டிலுள்ள பல மதரசாக்களில் மதபோதனை பெற்று, பாகிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பயிற்சி பெற்று, வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய செல்வந்தர்களின் நிதி உதவி பெற்று, ஆயுதங்களைக் கடத்தி வந்து, தகுந்த தருணம் பார்த்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துகின்றன.


இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை எதுவொன்றையும் அடியோடு நிராகரித்துவிட முடியாது. என்றாலும் இந்தியாவைக் குறி வைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அனைத்துக்கும் இந்திய எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதக் குழுக்களின் சதிவேலைகள் தாம் என்பதை உறுதிப்படுத்தவே இந்திய ஆளும் வர்க்கங்களும், உளவுத்துறைகளும் விழைகின்றன. மதச்சார்பற்றவை என்று கூறிக் கொள்ளும் காங்கிரசு, இடதுசாரி அணி முதல் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. சிவசேனா முதலிய இந்து மதவெறி பாசிசக் கும்பல்கள் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இந்தக் கோணத்திலேயே அணுகி வருகின்றன. இத்தகைய அணுகுமுறைதான் இந்த நாடு இவ்வளவு காலமும் கடைப்பிடித்து வரும் இந்துத்துவ ""இந்திய தேசிய''க் கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கிறது.


அதனால்தான், மும்பை ஜூலை 11 தொடர் வண்டி தொடர் குண்டு வெடிப்புகளை ரயில்வே போலீசு விசாரிப்பதா, பயங்கரவாத எதிர்ப்பு மாநிலப் போலீசு குழு விசாரணை மேற்கொள்வதா என்ற தகராறு தீர்வதற்கு முன்பாகவே, பாகிஸ்தான் ""லஸ்கர் சிமி'' பின்னணிதான் என்று உடனடியாகவே புலனாய்வுச் செய்திகள் வருகின்றன. ஓரிரு நாட்களிலேயே, நேபாளபீகார் எல்லையில் இரு பயங்கரவாதிகள் பிடிபட்டதாகவும், லஸ்கர் தலைவர் ""தண்டா'' கென்யாவில் பிடிபட்டதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், மும்பை புறநகரில் உள்ள சதுப்பு நிலக் குடிசைகளில் வாழும் முசுலீம் ஏழைகள் நள்ளிரவில் சுற்றி வளைக்கப்பட்டு, 200 அப்பாவிகளை இழுத்துக் கொண்டு போய் ""விசாரணை'' நடத்துகின்றது, மும்பை போலீசு.


அடுத்த நாளே மும்பை வந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரு சேர பாகிஸ்தான் நோக்கி குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானை எச்சரிக்கிறார். வாக்குறுதி அளித்தவாறு பயங்கரவாதிகளை ஏவிவிடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும், பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை உடனடியாக மூடவேண்டும். இல்லையென்றால் சமாதானம் பேச்சு வார்த்தைகள் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கிறார். எச்சரித்தவாறே, குண்டு வெடிப்புக்குப் பின் சில தினங்களில் நடக்கவிருந்த இந்தியபாக். அயலுறவுத் துறை செயலர்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது. புஷ்பிளேர் முதலிய தனது எஜமானர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிராக புகார் கூறிய மன்மோகன் சிங், ஜி8 நாடுகளின் மாநாட்டில் மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ச்சியை எழுப்பி பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றச் செய்தார்.


அமெரிக்காவின் மீது பின்லேடன் தலைமையிலான அல்கொய்தாவின் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ""பயங்கரவாதத்துக்கு எதிரான உலகு தழுவிய போர்'' பிரகடனம் செய்து ஆப்கான், ஈராக் ஆக்கிரமிப்புப் போர் உட்பட பல பாசிசத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன அமெரிக்காவும் பிரிட்டனும். உலகின் பல்வேறு ஏகாதிபத்திய அடிவருடி நாடுகள் அதற்குத் துணை போகின்றன. அந்த நாடுகளின் வரிசையில் தானாகப் போய் இணைந்து கொண்ட இந்தியா, தாலிபான் மற்றும் அல்கொய்தாவுடன், பாகிஸ்தானையும் பயங்கரவாத சக்தியாக வைத்து, அதற்கு எதிராக ""அமெரிக்க பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்புப் போரை'' திருப்பிவிடும்படி தொடர்ந்து மன்றாடுகிறது.


ஆனால், அமெரிக்காவும் பிரிட்டனும் தமது ""பயங்கரவாத எதிர்ப்புப் போரின்'' இன்றைய பங்காளியாக பாகிஸ்தானையே சேர்த்துக் கொண்டிருக்கின்றன. ""இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு இசுலாமிய நாட்டுடன் கூட்டு வைத்துக் கொள்வதுதான் சரியான செயல்தந்திரம்'' என்றே ஏகாதிபத்தியங்கள் கருதுகின்றன. அதுமட்டுமல்ல, காஷ்மீர் பிரச்சினை தோன்றிய காலத்திலிருந்தே, இந்தியாவின் நிலையை ஏற்க மறுத்து, பாகிஸ்தான் ஆதரவு நிலையெடுத்து வரும் ஏகாதிபத்தியங்கள், குறிப்பாக பாக்.குடன் நீண்டகாலமாகவே இராணுவ ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு தொடர்ந்து ஆயுதநிதி உதவி அளித்துவரும் அமெரிக்கா, இந்தியாவின் புகார்களை ஏற்று பாகிஸ்தான் எதிர்ப்பு நிலையெடுக்கும் என்று எதிர்பார்ப்பதே முட்டாள்தனமாகும்.


மேலும், பாகிஸ்தான் ஏவிவிட்டு எல்லைக்கு அப்பாலிலிருந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதில் உதவுவதில்லை என்பதோடு, அமெரிக்கா பிரிட்டன் முதலிய ஏகாதிபத்தியங்கள், பாகிஸ்தானுடன் சமாதானமாகப் போகும்படி கடுமையான நிர்பந்தமும் கொடுத்து வருகின்றன. அதனால்தான், இஸ்லாமிய எதிர்ப்புபாக். எதிர்ப்பில் அதிதீவிரம் காட்டும் இந்து பாசிச பயங்கரவாத ஆட்சியாளர்களே கூட வலியப் போய் கார்கில் போருக்கு முன்னும் பின்னும் பாகிஸ்தானுடன் சமாதான உறவை ஏற்படுத்தினர். இந்திய விமானம் ஆப்கானுக்குக் கடத்தப்பட்டபோது பா.ஜ.க. மந்திரியே, இந்தியச் சிறையிலிருந்த இரு பயங்கரவாதிகளோடு தனி விமானத்தில் கந்தகார் போய் அவர்களை ஒப்படைத்துவிட்டு, பணயக் கைதிகளை மீட்டு வந்தார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தபின் எல்லையில் இராணுவத்தை குவித்து போர் மிரட்டல்கள் விடுத்துவிட்டு, அமெரிக்க பிரிட்டன் நிர்பந்தத்துக்குப் பிறகு ஒரு தோட்டா கூடச் சுடாமல் இந்தியா திரும்பிவிட்டது.


ஆக, எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானில் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் உண்மையில் எதிர்க்கவோ, எதிர்த்து முறியடிக்கவோ முடியாது. அது ""சிவபெருமான்'' கழுத்தில் சுற்றிப் பாதுகாப்பாக தவழ்ந்து கொண்டிருக்கும் ""பாம்பு'' போன்றது. இந்தியக் ""கருட''னுக்கு அது அஞ்சுவதே இல்லை. எனவே, எல்லை கடந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்காக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் மீது அதிரடிப் படைத் தாக்குதல்கள் நடத்துவது பாலஸ்தீன, அரபுப் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் பாசிச இராணுவ பயங்கரவாதத் தாக்குதல் போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள ஆர்.எஸ்.எஸ். ஃ பா.ஜ.க. முதல் காங்கிரசு வரை எந்த இந்திய ஆட்சியாளர்களும் ஒருபோதும் துணியப்போவதில்லை.


இந்த நிலையில் உள்ளூர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஒன்றே, மும்பை ஜூலை 11 போன்று, அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை முறியடிக்கக் கூடியது என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் நம்புகின்றன. அதற்கான பிரச்சாரத்திலும் தயாரிப்பிலும் இந்துத்துவ தேசியவாதிகள் முதல் போலி மதச்சார்பற்ற ஆளும் கூட்டணி வரை அனைவரும் இறங்கிவிட்டனர்.


இந்து மதவெறி பாசிச பயங்கரவாதிகளின் எண்ணவோட்டத்தை மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் பார்ப்பன பாசிச குரு ""சோ'' தனது ""துக்ளக்'' வார இதழின் தலையங்கமாக எழுதியுள்ளார். ""நடந்துள்ள அராஜகத்திற்குக் காரணம் தேடி அலைவது, அந்த அட்டூழியத்தை நியாயப்படுத்துவதில்தான் முடியும். அதை விடுத்து, தீவிரவாதம் நசுக்கி, பொசுக்கப்பட வேண்டியது என்ற ஒரே உறுதியை மனதில் கொண்டு, அரசு செயல்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு சங்கடங்களையும், அவர்களுக்கு உதவுகிற பலருக்கு அச்சத்தையும், உளவுத்துறை துப்பறிவதற்குப் பல வசதிகளையும், போலீசு தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிற "பொடா' போன்ற சட்டம் அவசியத் தேவை என்பதை, மத்திய அரசு உணரவேண்டும்.'' (துக்ளக் 26.7.06, பக். 3,4)


பொடாவைத் திரும்பக் கொண்டு வருவது உட்பட ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பாசிஸ்டுகளின் கருத்தை நிராகரிப்பதாகவும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு அது தீர்வல்ல என்று ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிக் கூட்டணிகளும் அவற்றின் அரசும் கூறுகின்றன. ஆனால், பொடா சட்ட நிறைவேற்றம் போன்ற பகிரங்க நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபடவில்லை என்றாலும் அதிகாரபூர்வமற்ற இரகசிய வழிகளில் அரசு பயங்கரவாதத்தை ஏற்கெனவே அமலாக்கி வருகிறது. அதற்காக மத்தியமாநில அரசு உளவுப் படைகளை இறக்கிவிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் என்ற பெயரில் தனிப்படைகள் இயங்குகின்றன. சந்தேகத்துக்குரியவர்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல், வழக்கு விசாரணைகள் நடத்தப்படாமல் சிறையிலடைக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் ஊடுருவல் பயங்கரவாதி என்ற பெயரில் போலி மோதல்கள் நடத்தி பல இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர். காஷ்மீரில் அப்பாவிச் சிறுவர்கள் கூட பயங்கரவாதிகள் என்ற பெயரில் கொல்லப்படுகின்றனர்.


காங்கிரசுத் தலைவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள், ஓய்வுபெற்ற உளவுத்துறை போலீசு உயரதிகாரிகளின் முடிவுகள் ஆகியவை இந்து பாசிச பயங்கரவாதிகளின் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. தடா, பொடா சட்டங்கள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதைப் போலவே, தற்போது கட்டவிழ்த்து விடப்படும் அரசு பயங்கரவாதம், எந்தத் தீவிரவாதத்துடனும் தொடர்பில்லாத ஜனநாயக, முற்போக்கு சக்திகள், பத்திரிக்கையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் என்று பிற பகுதி மக்களையும் பலிவாங்குவதற்கு ஏவிவிடப்படும் என்பதில் சந்தேகமில்லை.


என்னதான், கடுமையான அரசு பயங்கரவாத ஒடுக்குமுறையை ஏவிவிட்டபோதும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இந்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரவே முடியாது. ஏதோ ஒரு சில மாதங்கள் அமைதியாகி விட்டதாகத் தோன்றினாலும், நேரம் குறித்த வெடிகுண்டுகள் நிறையவே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவை மும்பை தொடர்வண்டி தொடர் குண்டுகளைப் போல எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.


அதற்கான அடிப்படையின் கர்த்தாவாக இந்திய ஆட்சியாளர்களே உள்ளனர். முதலாவதாக, இந்த நாட்டில் இஸ்லாமிய பயங்ரவாதம் மட்டும்தான் கோரத் தாண்டவமாடுகின்றது என்ற தவறான தோற்றம் உருவாக்கிப் பாதுகாக்கப்படுகிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்திற்குத் தூண்டுதல் சக்தியாக விளங்குவது இந்து பாசிச பயங்கரவாதம். நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சமூக அடிப்படையாகக் கொண்டிருப்பதால், குஜராத், 199293 ஆண்டுகளில் நடந்த மும்பை இந்து மதவெறிப் படுகொலைகள், 1985 டில்லி சீக்கியர் மீதான கொலை வெறியாட்டம் போன்ற இந்து பாசிச பயங்கரவாதச் செயல்கள் பெருந்திரள் தாக்குதல்களாக இருக்கின்றன. ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் சிறுபான்மை சமூக அடிப்படையைக் கொண்டிருப்பதால், பலமுறை நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர்குண்டு வெடிப்புகள், கடந்த தீபாவளிக்கு முன்பு நடந்த டெல்லி குண்டு வெடிப்புகள், சமீபத்தில் நடந்த வாரணாசி குண்டு வெடிப்புகள் போன்றவை முற்றிலும் சதிச் செயல்களாக உள்ளன. மேலும், காஷ்மீரில் நடத்தப்படும் அரசஇராணுவ பயங்கரவாதப் படுகொலைகள் எல்லாம் தேசிய நலன்களுக்கானது என்று நியாயப்படுத்தப்படுகின்றன. ஆகவே, இந்துமதவெறி, அரச பயங்கரவாதப் படுகொலைகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத எதிர்த் தாக்குதல்கள் என்ற சுழற்சியில் மாறிமாறி இந்த நாடும் மக்களும் சிக்கிக் கொண்டுள்ளனர்.


ஆனால், இந்திய ஆட்சியாளர்களும், பிற அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ""இசட்'' முதல் ""ஏ'' வரை 26 வகை பிரிவுகளின் கீழ் பூனைப்படைகள் புடை சூழ நடமாடி வருகின்றனர். தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குவதற்குரிய காரணங்களை உருவாக்கிக் கொடுத்து வருகின்றனர். மத்திய கிழக்கில் அரபு மக்களுக்கு எதிராகப் பாசிச வெறியாட்டம் போடும் ஜியோனிய இஸ்ரேலுடனான இராணுவ உறவுகளை அதிகரித்து வருகின்றனர் ஆப்கானிலும் ஈராக்கிலும் அமெரிக்கபிரிட்டன் ஆக்கிரமிப்பாளருக்குத் துணையாக (நேரடியாக இராணுவத்தை அனுப்பி வைக்க) பலமுறை எத்தணித்தனர். முடியாத நிலையில் தனியார் படை திரட்டி அனுப்பியுள்ளனர். இங்கேயும் இந்து மதவெறி பாசிஸ்டுகள் குஜராத், ஒரிசா, மராட்டியம் போன்ற கொலைவெறியாட்டங்கள் தங்குதடையின்றி நடத்தப்படுகின்றன.


இந்து பாசிச பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலடிதற்காப்பு நடவடிக்கைகள் என்பதாக மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் இல்லை என்பதும் உண்மையே. வௌவேறு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களின் நோக்கங்கள் வௌவேறானவையாக உள்ளன. அமெரிக்காவின் சி.ஐ.ஏ., பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவுப் படைகளால் இயக்கப்படும் குழுக்களும் உள்ளன. அல்லாவின் ஆட்சியை நிறுவுவதற்கான புனிதப் போர் (ஜிகாத்) நடத்தும் குழுக்களும் உள்ளன. இஸ்லாம் எதிர்ப்பு, பாக். எதிர்ப்பு இந்துத்துவமே இந்திய தேசியம் என்பதும் தவறு அதேபோல, அல்லாவின் ஆட்சியை நிறுவும் புனிதப்போர் (ஜிகாத்) என்பதும் தவறு. இரண்டுமே மதவெறி பயங்கரவாதத்துக்கு இந்த நாட்டையும் மக்களையும் பலியிடுவதாகும். முன்னதற்குச் சான்று குஜராத் பின்னதற்குச் சான்று மும்பை ஜூலை 11. இரத்தத்தை இரத்தத்தால் கழுவ முடியாது என்பதையே இரண்டும் காட்டுகின்றன.


மு ஆர்.கே.


Tuesday, August 22, 2006

ஒரு மக்கள் யுத்தத்தை புலிகளால் நடத்தவே முடியாது

ஒரு மக்கள் யுத்தத்தை புலிகளால் நடத்தவே முடியாது

பி.இரயாகரன்
22.08.20006

நீதியானதும் நியாயமானதுமான ஒரு மக்கள் யுத்தத்தை இனி ஒருநாளும் புலிகளால் நடத்தவே முடியாது. மாறாக அநியாயமான மக்கள் விரோத யுத்தத்தையே புலிகளால் நடத்த முடியும். எப்படி மக்களுக்கான ஒரு பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்த முடியாதோ, அதேயொத்த அரசியல் நிபந்தனைதான் ஒடுக்கப்பட்ட மக்கள் யுத்தத்தையும் நடத்த முடியாமைக்கான காரணமாகும். இன்று புலிகள் நடத்த முனைவது, நடத்தப் போவதாக பசப்புவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான யுத்தத்தையல்ல. புலிகள் இன்று நடத்த முனைவது மக்கள் யுத்தமல்ல, மக்கள் விரோத புலி யுத்தத்தையேயாகும். இதை எந்த அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை யுத்தமாக நியாயப்படுத்த முனைந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமானது இந்த அரசியல் என்ற உண்மையை யாரும் மறுதலிக்க முடியாது. சிங்களப் பேரினவாதம் நடத்துகின்ற மக்கள் விரோத பாசிச யுத்தம் எவ்வளவுக்கு கோரமானதாகவும் இழிவானதாகவும் மாறினாலும் கூட, புலிகளின் யுத்தம் ஒடுக்கபட்ட மக்கள் யுத்தமாக ஒருநாளும் மாறிவிடாது.



எதிர்வன்முறை பற்றி லெனின் 'நாங்கள் வன்முறையை விரும்புவதில்லை. புரட்சியை மிகமிக சமாதான வழிகளில் ஈட்டவே விரும்புகின்றோம். ஆனால் சுரண்டும் வர்க்கம் எமக்கு எதிராக கொடிய அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் போது சுரண்டும் வர்க்கத்தின் வன்முறையை தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வன்முறை மூலம் எதிர்த்து நிற்கின்றோம்" என்றார். போராட்ட நோக்கங்களுடன் கூடிய நியாயத்தை, போராட்ட முறைகளை மனித இனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்வைத்து போராடுவது அவசியம். ரவுடிகள் போல், மாபியா போல் திணிப்பது போராட்டமாகாது. மனித தர்மமும், மனித நேயமுமற்ற எவையும், நியாயப்படுத்த முடியாதவையாக மாறிவிடுகின்றது.



இன்று அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இராணுவ ரீதியாக புலிகள் வென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கைக்குரிய வாதங்களை விதைக்க முனைகின்றனர். இது பொய்மையிலான ஒரு கானல் நீராகும். அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையில் புலிகள் தோற்றது என்பது, பேரினவாதத்தின் அரசியலால் சூழ்ச்சியால் அல்ல. மாறாக புலிகளின் தவறான அரசியலால் தான், அவர்களை இலகுவாக பேரினவாதிகள் தோற்கடிக்கமுடிந்தது. இதே நிபந்தனை யுத்தத்துக்கும் பொருந்துகின்றது. யுத்ததந்திரத்தில் பலர் கருதுவது போல் அரசியல் பேச்சுவார்த்தை வேறு, யுத்தம் வேறு என்பது முற்றிலும் தவறானதாகும். இரண்டும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வென்று எடுப்பதில், இவ்விரண்டு கட்டங்களும் நிச்சயமாக வந்து போகின்றன.



சமாதானம் அதையொட்டிய பேச்சுவார்த்தைகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக நடத்தப்படுகின்றன என்ற ஒற்றைப்பரிமாண வாதம், உண்மையில் ஒரு தலைப்பட்சமானது. சமாதானம் பேச்சுவார்த்தை எதிரியை அம்பலப்படுத்தும், ஒரு புரட்சிகரமான ஒரு யுத்ததந்திரம் கூட. எதிரி பற்றி பரந்துபட்ட மக்களின் சுயாதீனமான சொந்த அனுபவத்தை உருவாக்கிக் கொடுக்கவும், யுத்தத்துக்கான முன்தயாரிப்பாகவும் கூட பேச்சுகளை பயன்படுத்தமுடியும். இதற்கு உலகில் பற்பல உதாரணங்கள் உண்டு. எதிரியை இராணுவ ரீதியாக வெற்றிகொள்ள, மேலும் அவர்களை அரசியல் ரீதியாக பெரும்பான்மை மக்கள் முன் அம்பலப்படுத்த, பேச்சுவார்த்தைகள் உதவுகின்றன. இதை நாங்கள் தவறாக கையாளும் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்வைக்காத போது, அதுவே போராட்டத்தை சிதைத்து சின்னபின்னாமாக்கிவிடுகின்றது. ஒரு பேச்சுவார்த்தையை எப்படி கையாள்வது என்பது எதிரி தீர்மானிக்க முடியாத வகையில், மக்களின் அரசியல் அபிலாசைகள் தீர்மானிக்கும் வகையில் நகர்த்துவது அவசியம். இது மக்களின் எதிரியை மண் குப்பிற கவிழ்க்கும். உண்மையான ஒடுக்கப்பட்ட விடுதலை சக்திகளால் தான், பேச்சவார்த்தை எந்த வழியூடாக எப்படி நகரவேண்டும் என்பதை தீர்மானிக்கமுடியும். மாறாக ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், எமது குறுகிய நோக்கில் தவறாக கையாளும் போது, அதுவே எமக்கு சுமையாக விலங்காகிவிடும். இதுவே புலிகள் விடையத்தில் நடக்கின்றது. இது நேபாளத்தில் நடக்காது.



ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறைக்கான அரசியல் அடிப்படை



ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறைக்கான அரசியல் அடிப்படை, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் கோரிக்கையில் அடங்கியுள்ளது. இதை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாது. பேச்சுவார்த்தை, யுத்தம் இரண்டிலும் இது அக்கம்பக்கமாக, ஒன்றில் இருந்து ஒன்றுக்கு முன்னேறிச் செல்லுகின்றது. ஒன்றில் சறுக்கி மற்றொன்றில் முன்னேறிச் செல்லவே முடியாது. அது வெற்று கானல் நீராகவே வெளிப்படும்.



இதை நிராகரிக்கும் புலிகள், முன்முயற்சி கொண்ட இராணுவ நடவடிக்கையை ஒருதலைப்பட்சமாக நியாயப்படுத்துகின்றனர். பேரினவாதத்துக்கு எதிராக யுத்தம் தவிர்க்க முடியாதது என்கின்றனர். பேரினவாதத்துக்கு எதிராக யுத்தம் எப்படி தவிர்க்க முடியாதோ, அதேபோல் பேச்சுவார்த்தையும் தவிர்க்கமுடியாது. ஒன்றை நிராகரித்து, ஒன்றை செய்ய முடியாது. அக்கபக்கமாக இரண்டையும் சரியான யுத்ததந்திரத்துடன் பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும். அது தான் மக்கள் தலைமையின் கடமை. மக்கள் எதை முதன்மைப்படுத்தி நிற்கின்றனரோ, அதில் ஊன்றி நின்று எதிரியை அதற்குள் இழுத்து தனிமைப்படுத்தவேண்டும். தமிழ் மக்கள், சிங்கள மக்கள் உள்ளிட, இலங்கை வாழ் அனைத்து மக்களும் சமாதானத்தையும் அமைதியையும் கோருகின்றனர். இதை நிராகரித்துவிட்டு நாம் மட்டும் தனித்து யுத்தத்தை நடத்த முடியாது. இது மாபெரும் மற்றொரு அரசியல் தவறாகவும், அழிவாகவும் முடியும். இந்த மனநிலை இரண்டு படைகளினுள்ளும் காணப்படும். அமைதி சமாதானம் என்பதில் நேர்மையான உளச்சுத்தியான செயற்பாடு மூலம், மக்கள் விரும்பும் அமைதியை சமாதானத்தை எதிரி தரமாட்டான் என்பதை நடைமுறையில் அரசியல் ரீதியாக நிறுவவேண்டும். இதைவிட்டு விட்டு நாங்களே சமாதானத்தினதும் அமைதியினதும் எதிரியாக மாறினால், அதன் விழைவு பாரதூரமானது. வரலாறு மன்னிக்க மாட்டாது.



இந்த நிலையில் தான், புலிகள் ஒடுக்கப்பட்ட முழு இலங்கை மக்களும் விரும்பிய அமைதி சமாதானத்துக்கு எதிராக செயற்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, நீட்சியாக யுத்தம் உடன் வேண்டும் என்று வலிந்து தொடங்குகின்றனர். விடுதலை போராட்டத்துக்கு உடனடியாக இராணுவ ரீதியான செயற்பாடு அவசியம் என்கின்றனர். முன்முயற்றி கொண்ட புலிகளின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி பொருத்தமற்ற வகையில் முரண்பாடாகவே ஓலமிடுகின்றனர். புலிகளின் உத்தியோகப+ர்வ இராணுவப் பேச்சாளர், இராணுவமே ஒரு தலைப்பட்சமாக தம்மைத் தாக்குவதாக கூறுகின்றார். இதற்கு எதிர்வினையைத் தான் புலிகள் செய்வதாக கூறுகின்றார். மறுபக்கத்தில் புலிப் பினாமி இணையங்கள், செய்திச் சேவைகள், அனைத்தும் இராணுவ தாக்குதலின் அவசியம் பற்றி சூழுரைத்தனர். மக்கள் விரும்பிய சமாதானம் அமைதிக்கு புறம்பாக, புலிகள் வலிந்து ஒருதலைபட்சமான தாக்குதலை அரசுபடைகள் மீது நடத்தினர். எப்படி ஒரு தலைப்பட்சமாக பேச்சுவார்த்தையில் இருந்து விலகினரோ, அப்படியே யுத்தநிறுத்தையும் ஒருதலைபட்சமாக மீறினார். இன்று இரண்டையும் முழுமையாக செய்யமுடியாத ஒரு அரசியல் நெருக்கடிக்குள் புலிகள் சிக்கித் திணறுகின்றனர்.



புலிகளின் முரண்பாடாக இராணுவ தாக்குதல் பற்றி கருத்துரைகளை முன்வைத்தபடி தான், இராணுவ தாக்குதல்கள் தவிர்க்க முடியாது என்கின்றனர். மக்கள் விரும்பும் சமாதானம், அமைதியை இராணுவ தாக்குதல் ஊடாகவே அடையமுடியும் என்று ஒரு தலைப்பட்சமாக கூறுகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு நிம்மதியான வாழ்வை பெற்றுத் தரமுடியும் என்கின்றனர். பேரினவாதத்தை எதிர்கொள்ள மாற்றுவழிகள் இல்லையென்கின்றனர். ஆனால் இலங்கையில் வாழும் எந்த இன மக்களும், இந்த முடிவுக்கு வரவில்லை. ஒரு இராணுவ கும்பல்களும், யுத்தத்தினால் இலாபமடையும் பொறுக்கிகளும் தான் யுத்தத்தை நோக்கி ஆகாகா என்று ஓடுகின்றனர்.



யுத்த ஆதரவுக் கருத்தை மக்கள் மேல் திணிக்க முடியாது



யுத்த ஆதரவுக் கருத்தை மக்கள் மேல் திணிக்க முடியாது. யுத்தத்தின் அவலத்தை மக்கள் எதார்த்தமாக சந்திப்பதால், அதற்கு ஆதரவு கொடுத்துவிட மாட்டார்கள். யுத்த வெறியர்கள் வேறு, பரந்துபட்ட மக்கள் வேறு. யுத்த வெறியர்களின் நலன்கள் வேறு, மக்களின் நலன்கள் வேறு.



2002 முதலாக உருவாக்கிய அமைதி சமாதானம் நோக்கிய அமைதி ஒப்பந்தம், எப்போது யாரால் ஏன் தூக்கி வீசப்பட்டது என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு சூனிய நிலையில் தான் யுத்தம் திணிக்கப்பட்டது. அமைதி சமாதான ஒப்பந்தம் கையெழுத்திட்ட மை காய முன்பே, அதை மீறுவதும் தொடங்கியது. புலிகள் அதிகளவில் படுகொலைகளைச் செய்து, தமது பாசிச நடவடிக்கையை அமைதிக்கால செயற்பாடாக்கினர்.



அமைதி சமாதானம் நோக்கிய பேச்சுவார்த்தையில், தமிழ்மக்களின் பிரச்சனைகள் எவையும் பேசப்படவேயில்லை. அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைக்குப் பதில், தமது குறுகிய இராணுவ நலன்களை முதன்மைப்படுத்திய இராணுவ கோரிக்கைக்குள் தான் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இராணுவ நலன் சார்ந்த சலுகைகள் பலவற்றை பெற்று அவற்றை புலிகள் அனுபவித்தனர். சிலவற்றில் தொங்கிக் கொண்டு அங்குமிங்கும் இழுக்கப்பட்டனர். இப்படி பேச்சுவார்த்தையை நெருக்கடிக்குள் இட்டுச்சென்றனர்.



பிரச்சனை எங்கே என்பதை புரிந்துகொள்ள முடியாத வகையில், பேச்சுவார்த்தையின் விளைவுகள் அமைந்தன. சில பேச்சுகள் என்ன நடந்தது என்பதே, யாருக்கும் தெரியாத ஒரு விடையமாகியது. இந்த பேச்சுவாhத்தையின் முடிவுகள் என்ன? என்ன நடந்தது? என்று யாரும் திரும்பிப் பார்த்தால் எதையும் புரிந்துகொள்ள முடியாத அரசியல் சூனியம் தான் எச்சமாக எஞ்சிக்கிடக்கின்றது.



கருணா விவகாரம் வந்த போது, இது மேலும் சிக்கலுக்குள்ளாகியது. கருணா குழுவை அழிக்க புலிக்கு உதவிய அரசு, தொடர்ந்தும் புலிகளின் கூலிப்பட்டாளமாக இயங்க மறுத்தனர். புலிகள் இராணுவத்தை தமது கூலிப்பட்டாளமாக இயங்க கோரும் நிபந்தனைகளுடன் தான், பேச்சுவார்த்தை மேலும் நெருக்கடிக்குள்ளாகியது.



இப்படி பேச்சுவார்த்தை வலிந்த நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது. அமைதி சமாதானம் கொலைக்களமாக மாறி, அன்றாடம் கொலை செய்வதே அரசியலாகியிருந்தது. இதில் இருந்து இராணுவ ரீதியான தாக்குதலை நடத்த கூடிய அரசியல் வெற்றியை புலிகளால் முன்வைக்க முடியாது, வெற்றிடத்தில் புலிகள் திகைத்தனர். அரசியல் ரீதியான ஒரு பேச்சுவார்த்தை மூலம், இராணுவ ரீதியான போராட்டம் தவிர்க்க முடியாது என்பதை நிறுவ முடியாது அரசியல் சூனியத்தில், சதிகளை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தையை வெற்றிகொள்ள முனைந்தனர்.



சதிகளையும், சூழ்ச்சியையும் அடிப்படையாக கொண்ட இராணுவ நெருக்கடியை திணித்து, அதன் மூலம் தமது இராணுவ ரீதியான செயற்பாடுகள் அவசியம் என்று நிறுவ முனைந்தனர். ஆனால் எல்லாம் தொடர்ச்சியாக பிசுபிசுத்துப் போனது. தமது முன்முயற்சி கொண்ட இராணுவ ரீதியான தாக்குதல், பேச்சுவார்த்தையின் தோல்வியால் ஏற்பட்டது என்பதை நிறுவமுடியாது போனது. வலிந்த முன்முயற்சி கொண்ட தாக்குதல் மூலம், நீடித்த ஒரு இராணுவ நெருக்கடியை உருவாக்கினர். ஆனால் இதுவும் புலிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. மட்டுப்படுத்தப்பட்டதாக, அதேநேரம் புலிகள் தொடர்ச்சியாக தம்மைத் தாம் வலிந்து அம்பலப்படுத்துவதாக அமைந்தது.



நிலைமையை மாற்ற பாரிய தாக்குதலை குறுகிய அரசியல் நோக்கில் நடத்தினர். குறிப்பாக தண்ணீரைக் கட்டுப்படுத்தியதன் மூலம் சண்டையை வலிந்துகோரினர். அதேநேரம் இதைப் பயன்படுத்தி, முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு இனச் சுத்திகரிப்பு தாக்குதலை நடத்தினர். இப்படி குறுகிய தமது இலாபம், இராணுவ நலன்கள் என்ற அரசியல் எல்லைக்குள், இராணுவ தாக்குதல்கள், புலிகளின் அரசியல் பேச்சவார்த்தை போல் தொடர்ச்சியாக அம்பலமாகியது.



அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாதவர்கள் என்பதை, மறுபடியம் ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை மூலம் நிறுவினர். தமது தோல்வியை மூடிமறைக்க, இராணுவ தாக்குதலை சதிகள் மூலமும் பொய்கள் மூலமும் இட்டுக்கட்டி வீங்கவைத்தனர். இராணுவ தாக்குதல் தொடங்கியவர்களின் குறுகிய நோக்கும், மிக குறுகிய காலத்திலேயே இயல்பாக மீண்டும் தாமாகவே அம்பலமாகி விடுவதை அவர்கள் தவிர்க்க முடிவதில்லை.



பேரினவாதத்தின் நிலையில் வைத்தோ, புலியின் நிலையில் வைத்தோ நாம் பேச்சவார்த்தையை அணுகக் கூடாது



மக்களின் நிலையை வைத்தே பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும். அமைதி சமாதானத்தை பேச்சுவார்த்தை மூலம் அடையமுடியுமா என்பதை, பேரினவாதத்தின் நிலையில் வைத்து மட்டும் மதிப்பிடக் கூடாது. அதேபோல் புலிகளின் நிலையில் வைத்தும் பார்க்கக்கூடாது. மக்களின் நிலையில் நின்று, இன்று இந்தப் பேச்சுவார்த்தையின் வெற்றி தோல்வியை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். புலிகள் ஒடுக்கப்பட்டோருக்கான ஒரு மக்கள் இயக்கமல்ல. அது மக்களை அடிமைப்படுத்தி, தனது சொந்த குறுகிய நலனை அடிப்படையாக கொண்ட ஒரு பாசிச இயக்கம். பேச்சுவார்த்தை சார்ந்து, அமைதி சமாதானம் நோக்கி அவர்களால் மக்கள் நலன் நோக்கில் நகரவே முடியாது. குறுகிய நலனை அடிப்படையாக கொண்டே நகரும் என்பதால், இயல்பாகவே நெருக்கடிக்குள் புகுந்துவிடுகின்றது.



இதன் நீட்சியில் அரசியல் ரீதியான தோல்வியை மறைக்க, இராணுவ ரீதியான வழிமுறையை பிரயோகிப்பதும், அதை கோருவதும் தொடங்குகின்றது. இராணுவ ரீதியான அணுகுமுறையும், அதேபோன்று மீண்டும் தோல்வியடையும். காலநீடிப்பை இது உருவாக்குகின்றது. இதற்கு வெளியில் மனித இழப்புகள், அகதி வாழ்வு, சொத்திழப்புகள் மூலம், தமது குதர்க்கமான நியாயமற்ற யுத்ததைத் மூடிமறைக்க முடியாது.



பொதுவாக பேரினவாதத்தின் கொடூரத்தை எதிர்கொள்ள, மக்களின் பெயரில் சண்டையைத் தொடங்குவதாக கூறுவதும், கருத்துரைப்பதும் அழுகிப் போன புலி அரசியலின் மொத்த வினையாகும். மிக மோசமான அரசியல் பிழைப்புவாதிகளும், வாய்வீச்சுக் கொலைகாரர்களும் மக்களின் பெயரில் சண்டையை திணிக்கின்றனர். வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் கூட சண்டையை விரும்பவில்லை என்ற உண்மையை யாரும் கண்டு கொள்வதில்லை.



யார் இதைத் கோருகின்றனர். அரசியல் ரீதியாக அம்பலப்பட்டுள்ள புலிகளும், புலிப் பினாமிகளும், புலியைக் காட்டி வியாபாரம் செய்யும் வர்த்தகக் கூட்டமும் தான் யுத்தம் யுத்தம் என்று கூக்கூரல் இடுகின்றது. இதை தொடங்கிய பின், அதை நியாயப்படுத்தும் கூட்டம் புலம் பெயர் நாட்டில் வாழ்பவர்களின் ஒரு பகுதியினர்தான். வயதுபோய் எந்த பொழுதுபோக்கு மற்றவர்கள் கதைப்பதற்கும், பொழுதுபோக்குக்கும் தமது வாய்வீச்சை விரும்பியவாறு பினாற்றவும், புலம்பெயர் புலி வர்த்தக கும்பலும், வானொலி தொலைக்காட்சிகளில் மைக்கை விழுங்கும் ஊத்தைவாளி பிழைப்புவாதிகளும், எல்லாவிதமான ஓட்டுண்ணிகளும், புலியைச் சொல்லிப் பணம் வசூலித்த ஏதோ ஒரு வகையில் இலாபம் பெறுபவர்களும், ஏதோ இணையம் ஒன்று நடத்த வெளிக்கிட்டவர்களும் தான், யுத்தம் வேண்டும் என்கின்றனர். மக்கள் விரும்பும் மக்கள் யுத்தம் என்கின்றனர். செத்தவீட்டில் ஓப்பாரி வைப்பது போல், இந்த கும்பல் தமக்காக யுத்தம் வேண்டும் என்ற ஒப்பாரி வைக்கின்றது.



யுத்தத்தில் பாதிக்கப்படும் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. பேரினவாதத்தின் கொடூரமான அரசியல் திட்டத்தைக் கூட இனம் காணமுடியாதவராக, அரசியலற்ற மந்தைக் கூட்டமாக மக்கள் நாயிலும் கீழாக அடிமைப்பட்டு வாழுகின்றனர். நவீன சந்தை சார்ந்த இலக்ரோனிக் பொருட்களுடன் தமது கனவுகளை எல்லைப்படுத்தி மக்கள் கிடக்கின்றனர். பொருள் உலக நுகர்வில் சொக்கிக் கிடக்கும் ஒரு சமூக அமைப்பில், சமூக பண்பாட்டு கலாச்சார சிதைவுகளின் அம்மணமாகி வீழ்ந்து கிடக்கும் மக்களுக்கு, யுத்தம் ஏன் என்ற கேள்விக்கு விடைதெரியாது ஒரு நிலையில் யுத்தம் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிக செல்தொலைபேசிகளை உபயோகிக்கும் யாழ் பிரதேசம், அதிக மோட்டார் சைக்கிளை உபயோகிக்கும் யாழ் மக்கள், இது போன்ற அனைத்து நவீன பொருள் உலகத்தில் மட்டும் வாழ்கின்றனர். இதுவே கிளிநொச்சி முதல் கிழக்கு வரையில் செல்வாக்கு செலுத்துகின்றது. புலிகள் கொக்கோகோலா யாழ் பிரதிநிதியாக இருந்தபோதே, இந்த பொருள் உலக அழுகல் உருவாகியது. யுத்தம் கோக்கோகோலாவை குளிர்சாதன பெட்டியில் இருந்து வழங்க மறுத்தால், அதன் விளைவு என்ன? மின்சாரமின்றி குளிர்சாதன பெட்டியே இயங்காது. இப்படி உருவாக்கிய புலிப் பொருளாதாரம், யுத்தத்தை எப்படி ஆதரிக்கவைக்கும். அனைத்து பொருளுக்கும் வர்த்தக சந்தைசார்ந்து, புலிகள் வரி ஊடாக தேசிய உற்பத்தியை அழித்தே அதை ஊக்குவித்தனர். இந்த சமூகத்தின் முன் யுத்தத்தை திணிக்கும் போது, பொருள் உலகம் சார்ந்தே புலியின் மீதான வெறுப்பாக மாறுகின்றது. இப்படி யுத்த வெறுப்பு பலவடிவமாக பரிணாமமாகின்றது.



தமிழ்மக்கள் தமது உரிமைப் போர் என்னவெனத் தெரியாத நிலை. இந்த மக்கள் கூட்டம் எப்படித்தான் இந்த யுத்தத்தைப் புரிந்து கொள்ளும். நாங்கள் அவர்களை விடுவோம், யுத்தத்தை நியாயப்படுத்தும் புலிப்பினாமி எழுத்தாளர்கள் முதல் செய்திகளை சேகரித்து திரிக்கும் புலிப்பினாமிகளுக்கு கூட, தமிழரின் உரிமைப் போராட்டம் பற்றி எதுவும் தெரியாதவர்களாக உள்ளனர்.



மக்களின் உரிமை பற்றி பேசுபவர்களை, தமிழ்மக்களின் உரிமையுடன் சேர்த்தே கொன்று போடுகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதே தெரியாத அவலநிலை. மாறாக பேரினவாத இராணுவ முகாம்கள் மட்டும் பேரினவாதமாக காட்சி அளிக்கின்றது என்பது உண்மையாக இருந்தபோதும், அதை அரசியல் ரீதியாக புரிந்துகொள்ள முடியாத அரசியல் வறுமையில் மக்கள் மந்தைக்கூட்டமாக வாழ்கின்றனர். அவர்களுக்கு தம்மை யார் மேயந்தாலும் ஒன்றுதான். இது அவர்களின் பரிதாபமான அரசியல் நிலை. பேரினவாதம் இல்லை என்றால் புலி இராணுவம் நிற்கும். எந்த மாற்றமுமின்றி நிற்கும். ஆனால் அது மக்களின் வீட்டினுள் புகுந்து புடுங்குவதை மக்கள் சதா காண்கின்றனர். ஆகவே இராணுவங்கள் மாறவேண்டும் என்று, சிங்கள இராணுவத்துக்குப் பதில் தமிழ் இராணுவம் வரவேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. இப்படி நிலைமை படுமோசமாக, அரசியலற்ற மந்தைக் கூட்டத்தின் மீது எந்த அடிப்படையுமற்ற யுத்தம் திணிக்கப்படுகின்றது.



இப்படி பல கேள்விக்கு பதில் தரமுடியாத மாயையில், உலகைக் தலைகீழாக காட்டி சிலர் மக்களை கொன்றும் கொள்ளையிட்டும் பிழைக்கின்றனர். ஏன் தமிழீழம் தேவை என்று நீங்களே உங்களைக் கேட்டுப் பாருங்கள். அது உங்களுக்கே தெரியாது இருப்பது புரியும். ஏன் தமிழன் ஆள வேண்டும் என்று கேட்டுப்பாருங்கள். பதில் எதுவும் இருப்பதில்லை. சிங்கள பேரினவாத அரசிடம் இருந்து, எதை அவர்களில் இருந்து மாறுபட கோருகின்றீhகள் என்றால் அதுவும் தெரியாது. அந்தளவுக்கு மந்தைக் கூட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, கப்பம், கடத்தல், அடிதடி, தியாகி, துரோகி, சிங்களவன் என்ற சில சொற்களுக்குள் புலித் தேசியம் மலடாகி வக்கிரமாகி புளுக்கின்றது. இதனால் நியாயமான மக்கள் யுத்தத்தை ஒரு நாளும் நடத்த முடியாது. அநியாயமான மக்கள் விரோத யுத்ததையே நடத்தமுடியும்.







Monday, August 21, 2006

அன்னிய தலையீட்டை இலங்கையில் தவிர்க்க முடியுமா?

அன்னிய தலையீட்டை இலங்கையில் தவிர்க்க முடியுமா?

பி.இரயாகரன்
21.08.2006

ந்த கேள்வி இலங்கையின் இன்றைய சூழலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. அன்னிய தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகவே, இன்றைய அரசியல் போக்கு வலிந்திழுக்கின்றது. எப்படி யுத்த வெறியர்களின் யுத்தத்தை இன்று மக்களால் தடுத்து நிறுத்த முடியாதிருக்கின்றதோ, அதேபோல் இந்த அன்னிய தலையீட்டையும் தடுத்து நிறுத்தும் நிலையில் மக்கள் இல்லை. அன்னிய தலையீடு நிகழும் போது மக்களின் சமூக பொருளாதார எதிர்காலம், இன்று உள்ளதைவிடவும் மிக மோசமாகும். இன்று நிகழவுள்ள அன்னிய தலையீட்டை தீர்மானிப்பதில், புலிகள் மற்றும் பேரினவாதத்தின் குறிப்பான நடவடிக்கைகளே தீர்மானகரமான ஒன்றாக மாறியுள்ளது. நாளாந்த மக்கள் மீதான பாரிய படுகொலைகள் முதல் பெரியளவில் அகதியாகும் நிகழ்ச்சிகள் மூலம் இந்த அன்னிய தலையீட்டுக்கான சூழல் சிருஸ்டிக்கப்படுகின்றது. இந்த வகையில் இலங்கை விவகாரத்தில் அன்றாடம் அன்னிய நாடுகளின் தொடர்ச்சியான அரசியல் எதிர்வினைகள் அனைத்தும், சமகாலத்தில் தீர்க்கமான ஒரு தலையீடடுக்கான அரசியல் முடிவை நோக்கி நகர்த்துகின்றது.


இலங்கைப் பிரச்சனையை புலிகளும் இலங்கை அரசும், தமக்கிடையில் சுமுகமாக தாமே பேசித் தீர்க்கத் தவறுகின்ற ஒவ்வொரு நிமிடமும், அன்னிய தலையீடு எதார்த்தமான ஒன்றாக மாறி வருகின்றது. இந்த தலையீடு பேரினவாதத்தின் விட்டுக்கொடுப்புக்கு எதிரானதாகவும், புலிப்பாசிசத்துக்கு எதிரானதாகவும் அமையும். ஆனால் இது மக்கள் சார்பானதாக அமையாது ஏகாதிபத்தியம் சார்பானதாக அமையும். அதாவது இது தமிழ்மக்கள் பெயரில், ஏகாதிபத்தியம் தாம் விரும்பும் ஒரு தீர்வை முன்வைப்பர். இது புலியின் விருப்பத்தையும், பேரினவாதத்தின் பேரினவாத நிலையையும் மறுதலிக்கும். மிகச் சிறந்த உதாரணமாக இந்திய ஆக்கிரமிப்பு 1987 இல் நடந்த போது, இந்தியா தாம் விரும்பிய ஒரு தீர்வை எப்படி முன்வைத்ததோ, அப்படியான ஒரு நிலையில் நிகழும். ஆனால் இந்த தலையீட்டுக்கான சூழல், முன்பு இந்தியா தலையிட்டது போல் அல்லாது, உலகம் தழுவியதாகவே அமையும்.


ஏன் அன்னிய தலையீடு இன்னமும் இலங்கையில் நடக்கவில்லை


இலங்கையில் இன்றுவரை ஒரு அன்னியத் தலையீடு நடக்கவில்லை என்றால், அதற்கு காரணம் பேரினவாதத்தின் பேரினவாத நிலையே ஒழிய, புலிகள் நிலையல்ல. புலிகளின் அன்றாட நடவடிக்கைகள், அன்னிய தலையீட்டை நடத்தும் வகையில், அதை தூண்டும் வகையில் தொடர்ச்சியாக காணப்படுகின்றது. அன்னிய தலையீட்டை நியாயப்படுத்தும் வகையில், அதற்கு பக்கபலமாகவே புலி நடவடிக்கைகள் அமைகின்றது. அதேநேரம் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு தாம் விரும்பிய ஒரு தீர்வைக் கூட முன்வைக்க மறுக்கின்ற ஒரு சூழல் தான், அன்னிய தலையீட்டை பின் போடவைக்கின்றது. இந்த அரசியல் எதார்த்தம் சார்ந்த உண்மை ஊடாகத்தான், நாம் அன்னிய தலையீட்டை எதிர்கொள்ளும் அரசியல் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.


பேரினவாதம் தமிழ் மக்களுக்கு தான் விரும்பும் ஒரு அரசியல் தீர்வை வைத்தாலே, அன்னிய தலையீடு உடனடியாக நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தீர்வை பேரினவாதம் புலிகளுக்கு வைக்க வேண்டிய அவசியத்தை அடிப்படையாக கொண்டதல்ல. அது போல் தமிழ்மக்கள் முன் வைப்பதையும் அது கோரவில்லை. மாறாக ஏகாதிபத்தியத்தின் முன் இதை வைக்க கோருகின்றது. இந்தத் தீர்வை புலிகளுக்கு அல்ல, தமிழ் மக்களுக்கு அவர்களின் பெயரில் வைப்பதன் மூலம், புலிகளை தனிமைப்படுத்தி அதை அமுல்படுத்த அன்னிய தலையீடு நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அன்னிய தலையீடு பேரினவாதத்தின் நிலையால் தடைப்பட்டுள்ளதே ஓழிய, புலியின் நடவடிக்கையால் அல்ல.


பேரினவாதம் தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு தீர்வைத்தன்னும் வைக்க மறுக்கின்ற நிலையில் தான், புலிகளின் அரசியல் இருப்பு தப்பிப் பிழைக்கின்றது. இதுவே அன்னிய தலையீட்டை பின்போடுகின்றது. இதுவே சர்வதேச ரீதியாக புலித்தடையை மென்மையானதாக்குகின்றது. இதற்கு வெளியில் எதுவுமல்ல.


புலிகளின் உப்புச்சப்பற்ற பாசிச அரசியல் இதை தடுத்து நிறுத்தாது. அதனால் ஊளையிடவும், பொய்யையும் புரட்டையும் வக்கிரமாக புனையவும் முடியும். அவையும் உடனுக்கு உடன் அம்பலமாகி தலைவிரி கோலமாகிவிடுவதே நிகழும்.


அன்னிய தலையீட்டை வலிந்திழுக்கும் புலி நடவடிக்கை


அன்னிய தலையீட்டை வலிந்திழுக்கும் வகையில், புலி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. அரசியல் ரீதியாக ஒரு பேச்சுவார்த்தையைக் கூட வெற்றிகரமாக நடத்த தெரியாதவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவியபடி தாமாகவே அம்பலமாகின்றனர். இராணுவ நடிவடிக்கையை மட்டும் நம்பி ஓடுபவர்கள், அதன் மூலம் அன்னிய தலையீட்டை வலிந்து கோருகின்றனர். அதற்கு ஏற்றாற் போல் நடவடிக்கைகளை தொடருகின்றனர்.


தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை பேச புறப்பட்டவர்கள், பேச்சுவார்த்தையில் தமிழர்களின் நியாயமான ஜனநாயக உரிமையையே பேசமறுத்து, தமது குறுகிய சொந்த நலன்களைப் பேசியதன் மூலம், மூக்கு அடிபட விழுந்து மண்ணைக் கவ்வினர். புலியின் நலன்கள் மக்களின் நலன்கள் அல்ல என்ற உண்மையைக் கூட, தமது சொந்த நடத்தை மூலம் நிறுபவர்கள் தான் புலிகள். இந்த நிலையில் மக்களை ஏமாற்றி மக்கள் நலன் பேசுவதாக காட்டும் பிழைப்புவாத கட்சிகளின் நிலையில் நின்று கூட, அரசியல் பேசத்தெரியாதவர்கள் என்பதையும் கூட நிறுவிவருகின்றனர்.


இந்த அவலமான படுதோல்வியான அரசியல் நிலையில், தமிழ் மக்கள் சார்பாக அரசியல் பேச அருகதையற்றவர்கள் தான் புலிகள் என தாமாகவே நிறுவினார்கள். புலிகள் மீதான இன்றைய சர்வதேசத் தடைகள், அமைதிக்கான காலத்தில் பேச்சு வார்த்தையையொட்டி வந்ததே ஒழிய யுத்த காலத்தில் அல்ல. சர்வதேச ரீதியான ஏகாதிபத்திய தலையீட்டுக்கு கம்பளம் விரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பதில், அதை தீவிரமாக ஆணையில் வைத்து செயற்படுகின்றனர். கொலை, கடத்தல், பலாத்காரமாக பணம்திரட்டல்கள், அடாவடித்தனங்கள், இதைத் தவிர வேறு எதையும் புலிகள் அரசியலாக பேசுவதோ செய்வதோ கிடையாது. உலக மக்களை வென்று எடுக்கும் வகையில், ஏகாதிபத்தியத்தை தனிமைப்படுத்தும் வகையில் புலி நடவடிக்கைகள் எவையும் அமையவில்லை. மாறாக இதற்கு எதிரிடையாக ஏகாதிபத்திய தர்க்கத்தை உலக மக்கள் ஏற்கும் நிலைமைக்கு ஏற்ற, புலி நடவடிக்கை தொடர்ச்சியாக அமைந்துள்ளது.


தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைக் கோரும் ஏகாதிபத்தியம்


இதை தமிழ் மக்கள் சார்பாக புலிகள் கோரவில்லை. ஏகாதிபத்தியம் திடீரென இதை முன்னிலைப்படுத்தி கோரத் தொடங்கியுள்ளது. ஆச்சரியம் ஆனால் இதுவே உண்மை. உண்மையில் தீர்வுத் திட்டம் ஒன்றுக்கான மாதிரியை, ஏகாதிபத்தியம் இலங்கை பேரினவாத அரசாங்கத்திடம் முன்மொழிந்துவிட்டது. அதை இலங்கை பேரினவாத அரசாங்கம் தானாக முன்மொழிந்து, அதை பகிரங்கமாக வைப்பதையே ஏகாதிபத்தியம் எதிர்பார்த்து கிடக்கின்றது. கொத்தி கிழித்து குதறித் தின்னும் கழுகாக காத்துகிடக்கும் ஏகாதிபத்தியம், போடும் தமது திட்டத்தின் அடிப்படையில் னெற இலங்கையில் செயல்படுகின்றது. இந்த வகையில் தான் அரசுடனும் எதிர் கட்சியுடனும் சந்திப்புகளை தொடர்ச்சியாக நடத்துகின்றன. இந்தியாவுக்கு அடிக்கடி அழைக்கப்பட்டு திட்டங்கள் திட்டப்படுகின்றன. இதனடிப்படையில் தான் சர்வகட்சி மாநாடு ஊடாக, தீர்வை நோக்கி காய் நகர்த்தப்படுகின்றது.


ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரையான வல்லூறுகள், தமது இராணுவ தலையீட்டை அடிப்படையாக கொண்டே பேரினவாதத்திடம் தீர்வை முன்வைக்க கோருகின்றனர். இதுதான் உடனடியான தலையீட்டின் மையப்புள்ளி. இதற்கு வெளியிலும் உண்டு என்பதை மறுபதற்கில்லை. பேரினவாதம் தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதை வலியுறுத்துகின்ற போது, புலிகளை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துகின்ற வகையில் இந்த விடையம் தெளிவாக வலியுறுத்தப்படுகின்றது. புலிகள் வேறு மக்கள் வேறு என்பதை, அரசுக்கு ஏகாதிபத்தியம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்த தொடங்கியுள்ளது. அந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு எதிரான புலி நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு, ஏகாதிபத்திய சதித்திட்டங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளது.


அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க கோரும் போது, இந்த விடையத்தை நாம் கவனத்தில் எடுக்கத் தவறினால், அன்னிய தலையீட்டுக்கான வலையில் அரசியல் ரீதியாக நாம் சிக்கிவிடுவது நிகழும். பேரினவாதத்துக்கு எதிரான அரசியல் ரீதியான யுத்ததந்திர கோசம் என்ற அடிப்படையில், தீர்வை முன்வைக்கக் கோரும் போது பேரினவாதத்தின் விட்டுக் கொடுப்புக்கு எதிரான ஒரு சூழலில் மட்டும் சரியானது. அதாவது பேரினவாதத்துக்கு எதிராக இதை முன்னிறுத்தம் போது, பேரினவாதத்தை அம்பலப்படுத்தும் எல்லைக்குள் மட்டும் இது ஒரு பொதுக் கோரிக்கையாகின்றது. பேரினவாதம் புலியின் பாசிச சூழலைப் பயன்படுத்தி, தனது பேரினவாத முகத்தை மூடிமறைக்க இனவாதத் தீர்வை புலியின் பாசிச இராணுவவாதத்தின் பின்னால் முன்வைக்கும் போது, அதை தனிமைப்படுத்த வேண்டியது சமூக அக்கறையுள்ளவர்களின் அரசியல் கடமையாகவுள்ளது. இதை புலிகளால் ஒரு நாளும் செய்யமுடியாது.


புலிகள் வேறு மக்கள் வேறு என்பதை, ஏகாதிபத்தியம் தனது கோசமாக்கியுள்ளது


இன்று இதை ஏகாதிபத்தியம் முன்வைக்கின்ற அளவுக்கு, ஏகாதிபத்தியம் புலிப்பாசிசத்தை பயன்படுத்தி முன்னேறிச் செல்லுகின்றது. இதை முன்வைத்து, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வைக்கக் கோருகின்றது. தீர்வு புலிகளுக்கு அல்ல என்பதை மீண்டும் தெளிவாக்குகின்றது. புலிகள் வேறு, மக்கள் வேறு என்ற அரசியல் உண்மையை, நாங்கள் மட்டுமே (சமரும் தமிழ் சேக்கிள் மட்டுமே இதனடிப்படையில் தொடர்ச்சியாக கருத்தை முன்வைத்து எழுதி வந்தது) கடந்தகாலத்தில் கூறிவந்தோம். புலியெதிர்ப்பு தேசியத்தை எதிர்த்து, தேசியமும் புலியும் ஒன்று என்றனர். தமிழ் மக்களின் தேசியத்தை புலிக்கு மாற்றாக முன்னெடுக்க மறுத்தனர். இதன் மூலம் தமிழ் மக்கள் வேறு, புலிகள் வேறு என்பதை மறுத்தனர்.


இதையே பேரினவாத அரசும் கூறியது. புலிகள் தமிழ் மக்களும் தாமும் ஒன்றென்றனர். ஆனால் புலிகள் தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் அவசியமற்றது என்று கூறி அதை மறுத்தனர். தமக்கு மட்டும் தான் ஜனநாயகம் என்றனர். இப்படி தமிழ் மக்களையும் புலியையும் அனைவரும் ஒன்றாக பார்த்தனர். கடந்த காலத்தில் மக்கள் விரோத அரசியல் பலம் பெற்றது இப்படித்தான். மக்கள் சார்பாக இதை வேறுபடுத்தி பார்க்க யாரும் முன்வரவில்லை.


நாங்கள் மட்டும் இதை மறுத்து, அரசியல் ரீதியாக இரண்டையும் வேறுபடுத்தி அரசியல் ரீதியாக கருத்துக் கூறி வந்தோம். அரசியல் ரீதியாக ஜனநாயகம் தேசியம் இரண்டையும் கோரிய பிரிவுகள், புலி வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டனர். இதற்கு வெளியில் பொதுத்தளத்தில் இந்த உண்மையை அனைவரும் மறுத்து நின்றனர். இந்த நிலையில் பொதுத்தளத்தில் மக்கள் வேறு புலிகள் வேறு என்ற அரசியல் அடிப்படை, எமக்கு ஒரு அரசியல் வழியை வழிகாட்டலை வழங்கியது. இதனடிப்படையிலான அரசியல் கருத்தினை முன்னிலைப்படுத்தினோம்.


ஆனால் இன்று நிலைமைகள் அப்படியல்ல. ஏகாதிபத்தியமும் இந்தியாவும் கூட புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறத் தொடங்கிவிட்டது. இதை பின்பற்றி புலியெதிர்ப்புக் கும்பலும் கூட, அதை கூறத் தொடங்கிவிட்டது. அரசும் அதை கொள்கை அளவில் ஏற்று, அதுவும் புலியை தனிமைப்படுத்துவதில் முன்னேறுகின்றது. புலிகளும் புலிப் பினாமிகளும் மட்டும், தமிழ் மக்களும் புலிகளும் ஒன்று என்கின்றனர். புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மை அவர்களுக்கு புரிந்ததே. ஆனால் அதைக் களைய எந்த அரசியல் முன்முயற்சியுமின்றி, தமது சொந்த அரசியல் அழிவுக்கு செங்கம்பளம் விரித்த வண்ணமுள்ளனர். இந்த நிலையில் அன்னிய தலையீட்டுக்கான சூழலை தயாரிப்பதில், புலிகள் வேறு மக்கள் வேறு என்ற அரசியல் உண்மையை, தனக்கு சார்பாக அன்னிய தலையீட்டுக்கு ஏற்ற ஒன்றாக புலிகள் அல்லாத அனைத்து தளமும் வரிந்து கொண்டுள்ளது.


புலி வேறு தமிழ் மக்கள் வேறு என்று நாங்கள் கூறுவதும், அவர்கள் சொல்வதும் ஒன்றா?


இல்லை. யாருமே இந்த உண்மையை சொல்லாத ஒரு அரசியல் நிலையில், நாங்கள் மக்கள் கூறியது அரசியல் பதம் ஜனரஞ்சமாக பொருந்துகின்றது. இதை மக்களின் எதிரிகளும் புலிக்கு எதிராக பயன்படுத்தத் தொடங்கியவுடன், மக்கள் யார் என்ற கேள்வியூடாக எதிரியை தனிமைப்படுத்தி, அரசியல் யுத்ததந்திரத்தை குறிப்பாக்க வேண்டியுள்ளது. மக்கள் வேறு புலிகள் வேறு என்று ஏகாதிபத்தியம் இன்று கூறுவது கூட, மக்களுக்கு எதிரானதே.


நாங்கள் இதை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தும் வகையில், அரசியல் கோரிக்கையின் உள்ளடகத்தில் மிக நுட்பமாக இதை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. அரசியல் மட்டத்தில் தமிழ்சமூகம் வழிபாட்டு முறைக்கும் வால் பிடிப்பதற்கும் அப்பால், எதையும் சுயமாக சிந்திக்கவும் செயலாற்றவும் முடியாத முடக்குவாதத்தில் சிக்கி மந்தைக் கூட்டமாக உள்ளது. இந்த நிலையில் இந்த வேறுபாட்டை விளங்க வைப்பதில் மேலும் கடினமான ஒரு பணியாக மாறிநிற்கின்றது. சிந்திக்கத் தெரிந்தவர்கள் கூட நிகழும் மாற்றத்தை இலகுவாக சுயாதீனமாக இனம் கண்டு, அதை அம்பலப்படுத்தும் வகையில் ஆளுமையற்றவராக உள்ள இன்றைய எமது சமூக நிலைமை, எமது அரசியல் பணியை மேலும் கடினமாக்குகின்றது.


ஏகாதிபத்தியம் இன்று மக்கள் வேறு புலிகள் வேறு என்று கூறுவதை, நடைமுறை ரீதியாக புரிந்து கொள்வதற்கு, காலமும் சொந்த அனுபவமும் பெரும்பான்மை மக்களுக்கு தேவைப்படலாம். ஆனால் அரசியல் ரீதியாக சமூக நல நோக்கில் பார்ப்பவர்களுக்கு, சிந்திப்பவர்களுக்கு, செயற்படுபவர்களுக்கு முன் இதைத் தெளிவுபடுத்துவது அவசரமான அவசியமான பணியாக எம்முன்னுள்ளது.


நிலைமை மிக வேகமாக அதிரடியாக மாறுகின்றது. எதிரி பல தளத்தில் தனது முந்தைய வழிமுறையை கைவிட்டு, புதிய அணுகுமுறையை கையாளுகின்றான். புலிக்கும் மக்களுக்கும் இடையிலான வெளிப்படையான முரண்பாட்டை, தனக்கு சார்பானதாக இயல்பானதாக மாற்றுகின்றான். இதன் மூலம் புலியை மட்டுமல்ல, தமிழ் மக்களை ஒடுக்கிவிட முனைகின்றான். இந்த எதார்த்தம் சார்ந்த அரசியல் உண்மையையும், இதையொட்டிய வேகமான மாற்றங்களையும் நாம் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டியவராக உள்ளோம். புலிகள் மாறமுடியாத பாசிசக் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு, செயலற்ற முடக்குவாதத்தில் மலடாகி நிற்கின்றனர். புலிகள் தமது இராணுவவாத வக்கிரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு, உலகமே கண்ணை மூடி பால் குடிப்பதாக நம்புகின்றனர்.


இந்த நிலையில் நாங்கள் எந்த மாற்றத்தையும் தீர்மானிக்கக் கூடிய நிலையில் இல்லாதவர்கள். ஆனால் அரசியல் ரீதியான முன்முயற்சி உள்ளவர்கள் என்ற வகையில், முன்பு நாங்கள் வைத்த அரசியல் கோசங்களை அப்படியே தொடர்ந்தும் முன்வைக்க முடியாமல் போகின்றது. மக்களின் எதிரிகள் அரசியல் சதிகளை கையாள்வதில் மிகவும் நுட்பமாக வேகமாக முன்னேறுகின்றான். இங்கு எதிரி என்பது ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசு வரையிலான அனைவரையும் நாங்கள் குறிப்பிடுகின்றோம்.


மாற்றம் வேகமாக விரைவாக நடக்கின்றது. புலிகளை தனிமைப்படுத்தி அழிக்கும் எல்லாவிதமான அரசியல் தந்திரத்தையும், உத்தியையும் அரசியல் ரீதியாகவே நகர்த்திய வண்ணம் உள்ளான். இந்த நிலையில் புலிகள் வேறு, மக்கள் வேறு என்று நாம் எதை எப்படிக் கூறுகின்றோம் என்று பார்ப்போம்.


நாங்கள் மக்கள் என்று கூறுவது ஒடுக்கப்பட்ட மக்களைத் தான். ஒடுக்கும் மக்களை அல்ல. ஒடுக்கபட்ட மக்களின் அதிகாரத்தைத் தான் முன்னிலைப்படுத்துகின்றோம். சமூக ஒடுக்குமுறைகளை அங்கீகரிக்கின்ற எந்தப் பிரிவையும், அதன் அரசியல் அபிலாசைகளையும் நாங்கள் மக்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்குவதில்லை. அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் களைகின்ற அரசியலைத் தான், அதை தலைமை தாங்க முனைகின்ற மக்களைத் தான் மக்கள் என்கின்றோம்.


ஒடுக்குமுறைகளை களைய மறுக்கின்ற, புலிகள் அல்லாத எந்த அரசியலையும், அதை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மக்களையும் கூட்டத்தையும் நாங்கள் மக்கள் என்று கூறுவதில்லை. ஏகாதிபத்தியம் தமிழ்மக்கள் என்று கூறுவது, சமூக ஓடுக்குமுறையை அப்படியே பாதுகாக்கக் கூடிய, புலிகள் அல்லாத இன்னுமொரு ஆளும் மக்கள் விரோதக் கூட்டத்தைத் தான் அவர்கள் தமிழ்மக்கள் என்கின்றனர். அவர்களின் மக்கள் விரோத தலைமையை, புலிக்கு மாற்றாக முன்வைக்கத் தான், தமிழ்மக்கள் வேறு புலிகள் வேறு என்கின்றனர். இது டக்கிளஸ்சோ, கருணாவோ, ஆனந்தசங்கரியோ, புதிதாக ஒரு கும்பலோ அல்லது புலியில் இருந்து உருவாகும் மக்கள் விரோத மாற்றுக் கும்பலைத்தான், அவர்கள் தமிழ்மக்கள் என்கின்றனர்.


இன்று நிலவுகின்ற பிற்போக்கான சமூக ஓடுக்குமுறையை இயல்பாக கொண்ட மக்கள் கூட்டத்தைத் தான், ஏகாதிபத்தியம் தமிழ்மக்கள் என்கின்றனர். அதை அப்படியே தலைமை தாங்கக் கூடிய ஒரு மக்கள் விரோதப் பிரிவையே தமிழ்மக்கள் என்கின்றனர். தமிழ் மக்களின் சமூக பொருளாதார அமைப்பில் மாற்றங்கள் எதுவுமற்ற, புலியல்லாத மாற்றுத் தலைமை உருவாக்குவதற்கான அரசியல் அடிப்படையில், தமிழ்மக்கள் வேறு புலிகள் வேறு என்கின்றனர். இது புலியின் அரசியல் அடிப்படையில் இருந்து எந்தவிதத்திலும் வேறுபடாது. ஏகாதிபத்தியம் மக்கள் என்று கூறுவது, புலிகளுக்கு எந்த விதத்திலும் மேன்மையானதல்ல. புலிகள் நிலவுகின்ற இந்த பிற்போகான சமூக அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்க முனைகின்றனர் என்றால், அதையே ஏகாதிபத்தியம் மற்றொரு தலைமையூடாக அடைய புலிகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகின்றனர். புலியின் பாசிசத்துடன் கூடிய மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட இராணுவவாதம் முதன்மைக் கூறாகி, உலகளாவிய ஏகாதிபத்திய போக்கு இணக்கமற்றதாகி விட்டமையால் தான், புதிய தலைமையை மாற்றாக முனவைக்கின்றது. இதனடிப்படையில் தான் தீர்வை ஏகாதிபத்தியம் கோருகின்றனர். நாங்கள் இருக்கின்ற புலிகளின் பிற்போக்கு சமூக அமைப்புக்கு பதில், ஒடுக்கப்பட்ட மக்கள் தமது கையில் அதிகாரத்தை கோருவதை அடிப்படையாக கொண்டு அதை முன்னிலைப்படுத்துகின்றோம். மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி ஒடுக்குமுறையை களைகின்ற, அரசியல் அடிப்படையில் தான் நாங்கள் மக்கள் என்கின்றோம்.


இந்த நிலையில் நாங்கள் மக்கள் என்ற பொதுவான அரசியல் கோசத்தை மேலும் நுட்பமாக்கி, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் என்று அரசியல் கோசத்தை முன்னிலைப்படுத்த வேண்டியுள்ளது. புலிகள் வேறு, ஏகாதிபத்தியம் கூறும் மக்கள் வேறு, ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு என்று தெளிவாக கூறவேண்டியுள்ளது. மக்கள் தமது சொந்த அதிகாரத்தை நிறுவவும், அவர்களின் சொந்த அரசியல் தலைமைத்துவத்தை முன்னிறுத்தி வலியுறுத்துவது இன்று அவசியமாகிவிட்டது. புலித் தலைமைக்கு மாற்றாகவும், ஏகாதிபத்திய தலைமைக்கு மாற்றாகவும் இதை முன்னிலைப்படுத்தி கோரவேண்டியுள்ளது. இதன் மூலம் தான் உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை சாத்தியம். உண்மையான விடுதலைப் போராட்டமும் நடக்கமுடியும்.


இந்த அரசியல் உள்ளடகத்தையும், அதன் அரசியல் நோக்கத்தையும் துல்லியமாக முன்னிலைப்படுத்தி, மற்றய போக்குகளை வேறுபடுத்தி அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இந்த வகையில் தான் ஏகாதிபத்தியம் இந்தியாவும் முன்வைக்கும் தீர்வை இனம் காட்டி அம்பலப்படுத்த வேண்டும். நாம் தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைக்க கோரி இலங்கை அரசை நாம் அம்பலப்படுத்தி வந்தோம். இந்தக் கோரிக்கை பொது அரசியல் தளத்தில், புலிகள் உட்பட யாரும் கோராத ஒரு நிலையில் சரியானதாக இருந்தது. ஆனால் ஏகாதிபத்தியமே இன்று அதைக் கோருகின்ற நிலையில், பொதுக் கோரிக்கையாக அதை தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக கையாள முடியாது. நாங்கள் அரசியல் கோரிக்கையை சுயநிர்ணய அடிப்படையில், ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் குறைந்தபட்சம் முன்வைக்க வேண்டும் என கோரவேண்டும். புலிகள் தெளிவாக தீர்வு என எதையும் கோரவில்லை. இருந்தபோதும் அவர்களின் குறுகிய புலித் தீர்வு வேறு. ஏகாதிபத்தியம் கோரும் தீர்வு வேறு, நாங்கள் கோரும் சுயநிர்ணயம் சார்ந்த தீர்வு வேறு. இந்த சுயநிர்ணயம் என்பதை யாரும் தமக்கு விரும்பியவாறு கொச்சைப்படுத்தி விளக்கமுடியாது. அது அடிப்படையில் தேசிய பொருளாதாரம் என்ற மையமான அரசியல் உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டது. உலகமயமாதலை சுயநிர்ணயம் தனது கோரிக்கையின் ஊடாக அனுமதிக்காது. அனுமதித்தால் அங்கு அது சுயநிர்ணயமாக இருப்பதில்லை.


ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சொந்த அதிகாரத்தையும், தமது சொந்த விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டு போராடுவதை மறுக்கின்ற அனைத்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதுடன், மக்கள் விரோதத் தன்மை கொண்டவையுமாகும். இதைப் புரிந்து இதன் அடிப்படையில் நாம் முன்முயற்சி கொண்ட அரசியல் போராட்டத்தை நடத்துவது, இன்றைய சமகாலத்தில் முதன்மை பெற்ற ஒன்றாகவுள்ளது.