தமிழ் அரங்கம்

Saturday, November 18, 2006

போலீசு : சட்டத்திற்கும் மேலான கிரிமினல்கள்

போலீசு :
சட்டத்திற்கும் மேலான கிரிமினல்கள்

போலீசு அதிகாரி பிரேம்குமாரின் அட்டூழியங்களை எதிர்த்து, 25 ஆண்டு காலமாகச் சட்டரீதியாக போராடி வரும் நல்லகாமனின் கதை நிரூரித்துக் காட்டும் உண்மை.

ங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரும், முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருமான பிரேம்குமார் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பிரேம்குமார் மீது திரு.நல்லகாமன் தொடர்ந்த கிரிமினல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஜூலை 2003இல் மதுரை விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினடிப்படையில் அவரை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்வது தொடர்பாக செப்டம்பர் 1ஆம் தேதி தமிழக அரசு பிரேம்குமாருக்கு விளக்கம் கோரும் நோட்டீசையும் ஏற்கெனவே அனுப்பியிருக்கிறது.


பிரேம்குமார் மீதான இந்த நடவடிக்கை, "ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் தி.மு.க. அரசால் எடுக்கப்பட்டிருப்பதாக' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருக்கிறார். ""எந்தக் குற்ற வழக்கிலும் தண்டிக்கப்படும் அதிகாரி மீது நிர்வாக நடவடிக்கை எடுப்பது வழக்கமானதுதான் என்றும், இதற்கு உள்நோக்கம் கற்பிப்பது துரதிருஷ்டவசமானது என்றும்'' தமிழக அரசின் உள்துறைச் செயலர் ஜெயலலிதாவிற்கு மறுப்பு அறிக்கை விடுத்திருக்கிறார்.



பிரேம்குமார் மீதான நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ள நல்லகாமன் என்ற முன்னாள் இராணுவ அதிகாரி (சுபேதார்) நீதிக்காக நடத்திய நீண்ட துயரமிக்க போராட்டம் பற்றியோ, அவருடைய குடும்பத்தைச் சித்திரவதை செய்தது மட்டுமின்றி, கடந்த 25 ஆண்டுகளாக உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதி மன்றம் வரை அவரை அலையவைத்த பிரேம்குமாரின் சட்டவிரோத நடவடிக்கைகளைப் பற்றியோ உள்துறைச் செயலர் தனது அறிக்கையில் எதுவும் கூறவில்லை. தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்குமான மோதலில் நல்லகாமன் என்ற முதியவரின் போராட்டம் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே உண்மை.



மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த நல்லகாமனின் மனைவி சீனியம்மாள், அதே ஊரில் சும்மா கிடந்த ஒரு வீட்டை 5,000 ரூபாய்க்கு ஒத்திக்கு வாங்கி, உரிமையாளரின் அனுமதியுடன் ரூ. 4,000 வரை செலவு செய்து பழுது பார்த்து, கழிப்பறை போன்றவற்றைக் கட்டி 1976 முதல் அங்கே வசித்து வந்தார்.



வீட்டைக் காலி செய்யச் சொன்னார் அதன் உரிமையாளர். காலி செய்வதென்றால் ஒத்திப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்பது ஊருக்கே பொருந்தும் நியாயம். ஆனால் இது போலீசுக்காரனுக்குப் பொருந்துமா? பணம் கொடுக்க முடியாது; காலி செய் என்றார் வீட்டின் உரிமையாளரான பைரவ் சிங் என்ற உதவி சப்இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படைப் பிரிவு).



இந்தப் பிரச்சினையில் வாடிப்பட்டியில் சார்பு ஆய்வாளராக இருந்த பிரேம்குமார் கட்டைப் பஞ்சாயத்து செய்தார். அந்த அநீதியான கட்டைப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட மறுத்த குற்றத்துக்காக நல்லகாமன், அவரது மனைவி சீனியம்மாள் மற்றும் பிள்ளைகளை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து, சங்கிலியால் பிணைத்து நகரம் முழுதும் ஊர்வலம் விட்டார். தன்னைக் கொலை செய்ய முயன்றதாகப் பொய் வழக்குப் போட்டு நல்லகாமனையும் அவரது மகனையும் சிறையிலும் தள்ளினார். இதை எதிர்த்து ஊரே திரண்டு போராடியது. பிரேம்குமார் மீது நல்லகாமன் வழக்குத் தொடர்ந்தார். பிரச்சினை அன்று சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ. ""பிரேம்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்றப்பிரிவுகளில் வழக்கு தொடருமாறு'' அரசுக்கு சிபாரிசு செய்தார். வழக்கும் தொடரப்பட்டது. 1983இல் பிரேம்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனால், கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 1985இல் பிரேம்குமாருக்கு டி.எஸ்.பி.யாகப் பதவி உயர்வு வழங்கியது, (அ.தி.மு.க.) அரசு. அதேநேரத்தில், நல்லகாமன் மீது பிரேம்குமார் போட்டிருந்த பொய் வழக்குகள் காரணமாக, முன்னாள் இராணுவ வீரருக்குக் கிடைக்கக்கூடிய அரசு வேலை வாய்ப்புகள் கூட அவருக்கு மறுக்கப்பட்டன.



இதற்கிடையில், ஆர்.டி.ஓ. அறிக்கை அடிப்படையில் தன் மீது அரசு தொடர்ந்த வழக்கையே தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பும் வாங்கினார் பிரேம்குமார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை அணுகினார் நல்லகாமன். பிரேம்குமார் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று கூறிய உச்சநீதி மன்றம், அதனை உடனே விசாரித்து முடிக்கவேண்டும் என்றும் 7.11.89இல் உத்தரவிட்டது. ஆனால் 2002ஆம் ஆண்டு வரை (13 ஆண்டுகள்) மதுரை நீதிமன்றத்தில் விசாரணையே தொடங்கவில்லை.



""பிரேம்குமார் பிடி வாரண்டுக்கு சிக்காத தலைமறைவுக் குற்றவாளி'' (Absconding) என 16.9.97 அன்று அறிவித்தது மதுரை நீதிமன்றம். வாரண்டுக்குச் சிக்காத இந்தக் குற்றவாளிக்கு 1998இல் கூடுதல் கண்காணிப்பாளராகவும், 1999இல் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கியது அன்றைய (தி.மு.க.) அரசு.



இந்நிலையில் பிரேம்குமார், நல்லகாமனின் வழக்குகள் அனைத்தையுமே தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். 1989 உச்சநீதி மன்றத் தீர்ப்பையே மறைத்துவிட்டு உயர்நீதி மன்றத்தை ஏமாற்றித் தீர்ப்பு வாங்க முயன்ற பிரேம்குமார் மீது, நீதிபதி திரு.கற்பகவிநாயகம் 6.6.2002 அன்று வழங்கிய தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.



""சட்டத்தின் மீதோ, உண்மையின் மீதோ பிரேம்குமாருக்குக் கடுகளவுகூட மரியாதை இல்லை. பொய் சொல்லி இந்த நீதிமன்றத்தை ஏமாற்றி, எப்படியாவது இந்த வழக்கை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம்.... இவர் மீது உள்ள வழக்குகள் முடியும் வரை இவருக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வே தற்காலிகமானதுதான் என்று ஏற்கெனவே உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. அவ்வாறிருக்க இவர் எப்படி பதவி உயர்வு பெற்றார் என்பது தெரியவில்லை..... இவர் மீதான குற்றங்கள் உண்மையானால், இப்படி ஓர் ஆளை போலீசுத் துறையில் இத்தனை நாள் வைத்திருந்ததே மிகப் பெரிய வெட்கக் கேடாக இருக்கும்'' என்று கூறி நீதிமன்றத்தை மோசடி செய்த குற்றத்துக்காக ரூ. 10,000 அபராதமும் விதித்தார்.



இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு பிரேம்குமாரை பதவி நீக்கம் செய்யவில்லை. மாறாக, 2003ஆம் ஆண்டு மதுரை விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியவுடன், பிரேம்குமாரை மதுரை நகரிலேயே காவல்துறை அதிகாரியாக நியமித்தது. எடுபிடிகளும் போலீசு பரிவாரங்களும் சூழ நீதிமன்ற வளாகத்தில் சாட்சிகளையும் வழக்குரைஞர்களையும் மிரட்டினார் பிரேம்குமார். ""பிரேம்குமார் மதுரையில் அதிகாரியாக இருந்தால் இந்த வழக்கில் நீதி கிடைக்காது'' என்று மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகுதான் மதுரையிலிருந்து அவரை மாற்றியது அ.தி.மு.க. அரசு.



கடைசியாக, 1982இல் போடப்பட்ட இந்த வழக்கு 2003ல் விசாரித்து முடிக்கப்பட்டது. பிரேம்குமாருக்கு எதிராக கொலைமுயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஆர்.டி.ஓ.வே பதிவு செய்திருந்த போதும், தற்செயலாகக் காயம் விளைவித்த குற்றத்தை மட்டும்தான் பிரேம்குமார் செய்திருப்பதாகத் தீர்ப்பளித்தது மதுரை விரைவு நீதிமன்றம். அதற்கும் கூடத் தண்டனை ஏதும் வழங்காமல் நன்னடத்தையைக் கடைப்பிடிக்குமாறு பிரேம்குமாருக்கு ""எச்சரிக்கை'' மட்டும் செய்தது.



நியாயமற்ற இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ""கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக பிரேம்குமாரைச் சிறை வைக்கவேண்டும்'' என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் நல்லகாமன். ஆனால், பிரேம்குமாருக்கு எதிராக கொலைமுயற்சி வழக்கு தொடுத்த அரசோ, இந்தக் கணம் வரை மேல்முறையீடு செய்யவில்லை. 25 ஆண்டு காலம் இடைவி டாமல் சட்டபூர்வமான வழிகளில் நீதியைப் பெறுவதற்குப் போராடித் தோற்றிருக்கிறார் நல்லகாமன். இன்று அவருக்கு வயது 74. நல்லகாமனைத் தோற்கடித்தது பிரேம்குமார் மட்டுமல்ல; 25 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. அரசாங்கங்களும், போலீசின் உயரதிகாரிகளும் பிரேம்குமாருக்குப் பக்கபலமாக நின்றிருக்கிறார்கள். எனவே, தற்போது பிரேம்குமாரை வேலைநீக்கம் செய்வதன் மூலம் மட்டும் நீதி நிலைநாட்டப்பட்டு விடும் என்று நாங்கள் நம்பவில்லை.



வாடிப்பட்டியில் பிரேம்குமார் நிகழ்த்திய கொடுமையில் தொடங்கி, 25 ஆண்டு காலம் அவர் நடத்திய தில்லுமுல்லுகள் அனைத்தையும் அம்பலப்படுத்தி அரசு பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும்.



25 ஆண்டுகளாக சட்டத்தை வளைப்பதற்கும், மீறுவதற்கும் பிரேம்குமாருக்குத் துணை நின்ற உயரதிகாரிகள் அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.



நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பி தனது சொத்துக்களையெல்லாம் விற்று வழக்காடி, வெம்பித் தனிமரமாக நிற்கும் நல்லகாமனுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகையை மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அல்லாமல், பிரேம்குமார் மற்றும் அவருக்குத் துணை நின்ற அதிகாரிகளிடமிருந்து தண்டத்தொகையாக வசூலித்துத் தரவேண்டும்.



ஆர்.டி.ஓ. விசாரணையின் அடிப்படையில் தமிழக அரசு பிரேம்குமார் மீது தொடுத்த வழக்கில் மதுரை விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் அரசும் மேல்முறையீடு செய்து கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்கு பிரேம்குமாருக்கு சிறைத்தண்டனை வழங்கக் கோர வேண்டும்.



இன்னொரு பிரேம்குமார் தோன்றாமல் இருப்பதற்கும், இன்னொரு நல்லகாமன் பலிகடா ஆகாமல் இருப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம்.



மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.



(காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் தமிழக அரசால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, மனித உரிமை பாதுகாப்பு மையம் 22.9.06 அன்று சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் வெளியிட்ட பத்திரிகை செய்தியின் சுருக்கமான தொகுப்பு.)

Thursday, November 16, 2006

இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு

இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம்.

இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு


சபேசன்.
கனடா


இலங்கையில் வடக்கு தெற்கு எங்கும் அரசினாலும் புலிகளாலும் காட்டுத்தர்பார் நடாத்தப்படுகின்றது. புலிகளால் நடத்தப்படும் கொலைகளையும் காணாமல் போதல்களையும் பெரிதாக கூறும் அரசும, அதே போன்று அரசும் அரசு சார்பு குழுக்களும் செய்யும் கொலைகளையும் காணாமற்போதல்களையும் புலிகளும் பெரிதாக்கும் பிரச்சாரங்களும் ஒன்றை மட்டும் தெளிவாக புரியவைக்கின்றன. அதாவது எத்தனை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தாலும் நாங்கள் இவற்றை (கொலைகளையும், காணாமல் போதல்களையும்) நிறுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்போம் என்பதையே.


இரண்டு பகுதிகளும் ஒன்றை ஒன்று விட்டுக்கொடாமல் இனவாத அரசின் இருத்தலிற்காக பௌத்த சிங்கள இனவாதமும, தனது சொந்த அதிகாரத்தை வழிசமைப்பதற்காக புலிகளும் தொடர்கின்ற சதுரங்கம். இந்த நிலையில் அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பாக முஸ்லிம் மக்களின் நிலையென்பது மிகவும் சிக்கலான வடிவத்தை அடைந்த பொழுதிலும் தொடரப் போகின்ற(?) சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் கட்சிகள் தனித்துவமாக கலந்து கொள்வதாக இருப்பது முன்னேற்றமான ஒரு விடையமாக பார்க்க முடியும்.


இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மேல் இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆரம்பத்தில் வர்த்தகம், தொழில் முன்னுரிமைக்கான போட்டியாகவும் பின்னர் காலப்போக்கில் சிங்களப் பெரும்பான்மையினரின் வாக்குச்சீட்டிற்காகவும் திட்டமிட்டு இனவாதம் தூபமிடப்பட்டது. இந்தப்பிழைப்பு வாதம் U N P , S L F P , J V P போன்ற கட்சிகளினால் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத உருவேற்றியது. இலங்கையின் வறுமை, வேலையின்மை, பற்றாக்குறை போன்றவற்றின் பிரதான காரணங்கள் நவகாலனித்துவம், காலனித்துவம், ஒவ்வொரு கட்சிகளினதும் தனிநபர்களினதும் சுயநலம் போன்றவற்றை அம்பலப்படுத்தி போராடவேண்டிய சிங்கள அரசியல் கட்சிகள் இதற்குப் பதிலாக குறுகிய அரசியல் இலாப நோக்குடன் தமிழ், முஸ்லிம், மலையக மக்களை இப்பற்றாக்குறைகளுக்கு காரணகர்த்தாக்களாக்கின. வாக்குச்சீட்டிற்காக இனவாதத்தை பயன்படுத்தியது.


இவற்றின் எதிர் மறையான விளைவுகளை தமிழ் தலமைகளின் வரலாற்றிலும் காணலாம. தமிழ் மக்களின் மேல் அழுத்தப்பட்ட இனவாதத்திற்கு சரியான காரணங்களi கண்டுகொள்ள முடியாத தமிழ்த்தலைமைகள் தமது தோல்விகளிற்கான காரணத்தை முஸலிம் மக்களின் மேல் கொட்டியதை இலங்கையின் இனக்கலவர வரலாற்றினை கூர்ந்து நோக்கினால் புரிந்து கொள்ளமுடியும்.


சிங்கள இனவாத கட்சிகள் திட்டமிட்ட முறையில் இனவாதத்தை தமிழ் மக்களின் மேல் கொட்டியது போலவே முஸ்லிம் மக்களின் மேலும் செலுத்தியது. 78ம் ஆண்டு வரையிலும் சிங்களத்தேர்தல் தொகுதிகளில் அரை அரைவாசியாக U N P யும்S L F P யும் இருக்கும் போது மூன்றாவதாக தேர்தல் வெற்றியை நிர்ணயம் செய்யும் சிறு சிறு சமூகப் பகுதிகளாக முஸ்லிம்கள் பல தொகுதிகளில் அமைந்திருந்தனர். இந்த காரணத்தினால் இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளாலும் இவர்கள் விலைபேசப்படும் நிலமை உருவாகியது. இவற்றுக்கெல்வாம் காரணம் இலங்கையின் அரசியலை நிர்ணயிக்கக்கூடிய முஸ்லிம்களின் அரசியல் தலமையானது துர்ப்பாக்கிய வசமாக முஸ்லிம் பணக்காரர்களின் கைவசம் இருந்தததே ஆகும். ஆனால் இந்த நிலமை பிற்காலங்களில் மாறிவிட்டது.


1978ல் சிறு தொகுதிகள் மூலம் தேர்தலில் தெரிவு செய்யும் முறை கைவிடப்பட்டு விகிதாசார தெரிவு முறை நாடாளுமன்றத்தில் அமுல்படுத்தப்பட்டது. இது முஸ்லீம்களின் முக்கியத்துவமான தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் பலத்தை இழக்கவைத்தது.


இந்தப் புதியநிலமையானது இரத்தினக்கல் வியாபாரம் போன்ற வர்த்தகம்களை முஸ்லீம் பணக்காரர்களிடமிருந்து சிங்கள வர்த்தகர்களின் கைகளிற்கு இனவாதக்கட்சிகளால் இடம்மாற்ற உதவியது. தொடர்ச்சியாக முஸ்லீம் ஏழை மக்களின் வாழ்வில் இனரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டன. இவை முஸ்லீம் மக்களின் அரசியல் கொழும்புசார் பணக்கார முஸ்லீம் தலமைகளிடமிருந்து விடுபட்டு இவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலிலுள்ள முஸ்லீம்களிடமும், நடுத்தர விவசாய முஸ்லீம்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.


தொடர்ந்து பாராளுமன்ற உயர் பதவிகளிலிருந்து கூட முஸ்லீம்கள் தூக்கியெறியப்பட்டனர். இக்காலங்களிற்கு முன்னரே முஸ்லீம் எதிர்ப்புணர்வு, வன்முறை வடிவத்தில் சிங்கள இனவாதக்கட்சிகளால் ஏவிவிடப்பட்டன. எழுபதுகளில் நடைபெற்ற முஸ்லீம் விரோத நடவடிக்கைகளில் சிங்கள அரசுதான் பின்னின்றது.


76ம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலும் அதன் அண்டைகிராமங்களும் தாக்கப் பட்டும் எரிக்கப்பட்டும் பல முஸ்லீம்கள் கொலலப்பட்டதிற்கும் S.L. F. P அரசு பின்னின்றது.


82ல் காலி நகரிலும் அரசபயங்கரவாதம் முஸ்லீம் மக்கள் மேல் ஏவப்பட்டது. இதற்கு U.N.P அரசாங்கம் பின்னின்றது.


இந்த நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் கொழும்பில் உருவாகிய யாழ்ப்பாண பணக்காரர்களின் கூட்டம் அங்கே வர்த்தகம், தொழில் முன்னுரிமை போன்றவற்றிற்கு போட்டி போட வேண்டி ஏற்பட்டது. இதற்காக முஸ்லீம்களையும், இந்திய வம்சாவழிகளையும் காட்டிக்கொடுத்தேனும் தமது அபிலாசைகளை நிறைவேற்றியது. ஊதாரணமாக சேர் பொன் இராமநாதன் போன்றோர் முஸ்லிம்களிற்கு எதிரான உரைகளை நிகழ்த்தியிருந்தனர். 48ல் தமிழ்க்காங்கிரஸ் கட்சி தங்கள் சொந்த நலன்களுக்காக, மலையக தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது அவர்களுக்கு பச்கைத் துரோகமிழைத்ததும் குறிப்பிடப்பட வேண்டும்.


1915 ம் ஆண்டு கலவரம் சிங்கள தமிழ் கலவரமாக இல்லாமல், சிங்கள முஸ்லீம் கலவரமாக நடந்து முடிந்ததும் இந்த வரலாற்றுத் துரோகப்பின்னணிகளே ஆகும்.


இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம் ஆகும்.


தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் போது கிழக்கு மாகாண முஸ்லிம்களுடன் மேலோட்டமான ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் சரிவர வெற்றிபெறவில்லை. அதன் காரணத்தினால் நூற்றுக்கணக்கான சதுரமைல் பரப்புள்ள நிலங்கள் முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதிற்கு எதிரான போராட்டம் வலுப்பெறவில்லை.


தமிழ்க்கட்சிகளுடன் பாராளுமன்றம் சென்ற பல முஸ்லிம்கள் பின்னர் சிங்கள இனவாதக்கடசிகளுடன் இணைந்து கொண்டனர். (இதனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் செய்திருந்தார்கள்) ஆனால் அக்காலங்களில் முஸ்லிம்கள் மட்டும்தான் அரசியலில் நம்பத்தகாதவர்கள் என்ற அபிப்பிராயம் தமிழர்களிடம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. அதேசமயம் அறுபதுகளிலிருந்தே முஸ்லிம்கள் பலர் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டங்களிலும், சத்தியாக்கிரகமங்களிலும் பங்கு கொண்டு சிறை சென்ற வரலாறுகள் பலவுண்டு.


ஆனால் தமிழ் பிரதிநிதிகள் தங்களுடன் சேர்ந்து போராடிய முஸ்லிம் இளைஞர்களையோ ஏழை மக்களையோ முதன்மைப்படுத்தாமல் கொழும்புசார் பணக்கார முஸ்லிம்களின் தலமைத்துவத்தின் அரசியல் சூதாட்டங்களையே பெரிதுபடுத்தினார்கள்.


இதன் காரணத்தினால் முஸ்லிம்களை அரசியலில் நம்பமுடியாது என்று தமிழர்களிடையேயும் தமிழர்களை அரசியலில் நம்பமுடியாது என்று முஸலிம்களிடையேயும் கருத்துப் பரவியது. தமிழர் கூட்டணியின் வழியில் தோன்றிய இயக்கங்களும் இக்கருத்தோட்டத்தை மாற்ற பெரிய அளவில் முயற்சிக்கவில்லை.


கிழக்கு மாகாணத்தில் 33 சதவீதமும் மற்றும் அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற மாவட்டங்களில் குறிப்படத்தக்க அளவு கணிசமான தொகையினரும் வாழ்ந்தனர். ஆனால் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் சிங்களப் பிரதேசங்களில் உள்ள தொகுதிகளிலேயே சிதறி வாழ்ந்தனர்.


எது எப்படியிருந்த போதும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கிழக்கு மாகாணம் "தமிழர்கள் மாகாணம்" என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். இது யாழ்ப்பாண நோக்கில் எடுத்த மிகவும் பிழையான மனோபாவமாகும். அன்று புலிகளின் மூத்த உறுப்பினரான யோகியிலிருந்து இன்றைய தமிழ் தேசியகூட்டமைப்பானானாலும் சரி இன்றைய சு.ப தமிழ்ச்செல்வனானாலும் சரி வெளிப்படையாக வெட்கமில்லாமல் "முஸ்லிம்கள் தமிழர்களின் நலன் சார்ந்தே அரசியல் முடிவுகள் எடுக்கவேண்டும்" என்று அவர்களின் ஊடகங்களில் கூறுகிறார்கள்.


இன்று மட்டுமல்ல பழைய தமிழ் கட்சிகளான தமிழரசுக்கட்சி, கூட்டணி போன்றவற்றின் பிரதிநிதிகள் சிங்கள அரசுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளில் கூட முஸ்லிம்களின் அபிலாசைகளிற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இப்படியாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனங்களிடையே காட்டிக் கொடுப்பிற்காகவும் குறுகிய இலாபத்திற்காக சோரம் போவதும் இனங்களிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையையே வளர்த்துள்ளது.


தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக புறப்பட்ட பிரதான இயக்கங்கள் எல்லாம் முஸ்லிம் மக்களை ஒரே இனத்தவர்களாகவோ அல்லது சகோதர மக்களாகவோ நடத்தவில்லை. இது இவர்களின் கடந்தகால அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்பபட்டுள்ளது. முக்கியமாக புலிகளின் அராஜகம் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை இரத்தப்பலி எடுத்தது. இதன் விளைவாலும், இனவாத சிங்கள அரசினால் தூண்டப்பட்டும் முஸ்லிம்கள் சிலரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும் பல அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தனர். இவற்றால் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே குரோத உணர்வு உக்கிர நிலமையடைந்தது.


பழைய தமிழ்த் தலைமைகள் கூட இன ஒடுக்குமுறையை "தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையாக" பேசினார்கள். ஆனால் இன்று குறிப்பாக புலிகளால் "தமிழர்களின் பிரச்சனையாகவே" பார்க்கப்படுகின்றது.


அன்று தொட்டு பிரச்சனைகளை பேசும் போதும், போராடும் போதும் "தமிழ் பேசும் மக்களின் பொதுப் பிரச்சனையாகவே" பேசப்பட்டும் போராடப்பட்டும் வந்துள்ளது. இப்போராட்டங்களில் முஸ்லிம்களும் இணைந்தே போராடிவந்துள்ளனர். ஆனால் பிரச்சனைகளுக்கான தீர்வினைத் தேடும்போது மாத்திரம் தீர்வானது "தமிழர்களுக்கு மாத்திரம்" என்று பார்க்கப்படுகின்றது.


இன்று ஏற்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் குரோதத்திற்கு புலிகளின் பங்கு என்பது பிரதான பாத்திரம் வகிக்கின்றது. சிங்கள அரசாங்கமும் இக்குரோத உணர்வினையே பாவிக்கின்றது. அன்றைய இந்திய இலங்கை அரசுகளின் ஒப்பந்தம் கூட உருப்படியான ஒரு தீர்வினை முஸ்லிம்களுக்கென முன்வைக்கவில்லை. இக்குறைபாட்டினை சில முஸ்லிம்கள் தவிர இலங்கை அரசியலில் எப்பகுதியாலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. இந்திய அரசின் உதவியுடன் வட கிழக்கு மாகாணசபை உருவாகிய போது முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படாத, முஸ்லிம்களின் அபிலாசைகளை பிரதிபலிக்காத ஒரு முஸ்லிம், "அபுயூசுவ்" தெரிவுசெய்யப்பட்டார்.


இது முஸ்லிம்களின் உரிமக்கான உத்தரவாதம் உடைக்கப்பட்ட செயலாகும். அதைவிட முஸ்லிகளின் அபிலாசைகளை நிறைவேற்றியதாக போலியாக காட்டமுனைந்த செயலாகும்.


மாகாண சபையில் உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அலியது உகுமானை மாகாணசபையில் அங்கம் வகித்த E.N.D.L.F இனர் சுட்டுக்கொன்றனர்.


கிழக்கிலும் திருகோணமலையிலும் புட்டும், தேங்காய்பூவையும் போன்று அடுத்தடுத்த கிராமங்களில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் தமக்கிடையே உருவாகிய சிறு பிரச்சனைகளை தம் ஊர்ப்பெரியவர்கள் மூலம் தீர்த்து முடித்தவர்களே. ஆனால் இவை அரசியலுக்காக தமிழ் சிங்கள கட்சிகளால் உருவேற்றப்பட்ட பின்னர் நிரந்தர நம்பிக்கையின்மையையே பரஸ்பரம் உருவாக்கியது. குறிப்பாக இப்பகுதி முஸ்லிம்களின் பாதுகாப்பு உத்தரவாதம் என்பது சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை விடவும் பாதகமான நிலையிலேயே உள்ளது.


சாத்வீக போராட்ட காலங்களிலும் சரி ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி முஸ்லிம்கள் இணைந்தே போராடியுள்ளனர். இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்களது ஆயுதம் திரும்பியது வெட்கக்கேடான விடையமாகும். அதுவும் அரசியல் துரோகிகளாக,


'தொப்பி பிரட்டி" களாக தமிழ் மக்கள் மத்தியில் உருவேற்றப்பட்டு நடாத்தப்படுகின்றது.


பிற்காலங்களில் முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் ஸ்திரநிலமையை உருவாக்க உணர்சிமயமாக பேசிவந்த அஸ்ரப, ஒரு தீவிரமான முஸ்லிம் தோற்றப்பாட்டை உருவாக்கினாh. ஆனாலும் தமிழ்த்தேசியத்தின் மிகைப்படுத்தப்பட்ட தீவிரமான பாசிச தோற்றத்தினை "ஜிகாத்" அடைவதற்கு முன்னர் எல்லைப்படுத்தப்பட்டது. இவர்களின் செயற்பாடுகள் அரசசார்பாகவும், தமிழ்மக்கள் விரோத செயற்பாடுகளாகவும் இருந்தன.


தமிழ் ஈழ்ப் பிரிவினை வாதம் என்பது ஒரு கனவுதான் என்பதை தன்னகத்தே கொண்டிருக்கும் "ஒடுக்கமான யாழ்ப்பாண சுயநல நோக்கத்தை" பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். இது கடைசிவரைக்கும் மத, பிரதேச ஒற்றுமைகளை வென்றெடுக்காது. ஆனால் அஸ்ரப்பினது நோக்கத்தை உற்றுப்பார்த்தால் சிறிலங்காவின் முழு முஸ்லிம்களை இணைக்க எடுத்த முயற்சியானது முற்று முழுதான பிரிவினையை நோக்காது ஒரு ஜனநாயக கோரிக்கையாக அமையவே முற்பட்டது எனலாம்.


முஸ்லிம்களுக்கான தனிமாகாணக் கோரிக்கை, முஸ்லிம்கள் மிக அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்ட தென்கிழக்கு மாகாணக் கோரிக்கை போன்றவை ஒருவகையில் யாழ்ப்பாண முஸ்லிம்களை கருத்தில் கொள்ளவில்லை என்பதால் பரந்த வட கிழக்குக்குள் முஸ்லிம்களுக்கான சுயாட்சி அலகுகள் என்பதாகவும், அதுபோன்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன.


2003 தை மாதத்தில் "ஒலுவில பிரகடனம்" தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் பலலாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தினார்கள்.


தமிழர்களுக்கு 'வட்டுக்கோட்டை தீர்மானம்" எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் கொண்டதே அதேயளவிற்கு "ஒலுவில பிரகடனம்" முஸ்லிம்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.


"முஸ்லிகள் அரசியல் துரோகிகள்" என்பது வெறும் புனையப்பட்ட மாயை என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


இனறைய நிலையில் இலங்கை முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமாக அடையாளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்களா? அல்லது தனித்துவமான இனக்குழுவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எது எப்படியிருந்தபோதும் முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான சமூகக்கூட்டம் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயம். எனவே அவர்களின் அரசியல் ரீதியான உரிமைகளை அவர்களே தீர்மானிக்கும் உரிமை உண்டு. முஸ்லிம் மக்களின் இந்த உரிமையை தமிழ் சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். அத்துடன் அவர்கள் பாரம்பரியமான வாழ்ந்த நிலங்களில் அவர்கள் உரிமையுடன் வாழ்வதற்கான சகல நிபந்தனைகளையும் உருவாக்குவது அவசியமாகும். முஸ்லிம் மக்களின் இந்த உரிமைமையை இலங்கைவாழ் அனைவரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இது ஜனநாயக உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரதும், சிங்களவரதும் கடமையாகும்.


எப்படி சிங்களப் பேரினவாதத்திலிருந்து தேசிய விடுதலை தமிழ்மக்களுக்கு தேவையோ, அதே போல் முஸ்லிம்கள் தமிழ்ப் மேலாதிக்கத்தால் அடக்கப்படாதிருக்க அல்லது எதிர்காலத்தில் மேலும் அடக்குமுறை வளர்ச்சியடையாதிருக்க நாம் விழிப்புடன் செயற்படவேண்டும்.


தேசியரீதியிலான அரசியல் தீர்வில் தமிழ்ப்பகுதிகளால் வலியுறுத்தப்படும் "வடகிழக்கு இணைப்பு" அல்லது இன்று சிங்கள சுப்ரீம் கோட் வலியுறுத்தும் "வடகிழக்கு பிரிப்பு" என்பவை நிபந்தயைற்ற இணைப்பாகவோ அல்லது பிரிப்பாகவோ முன்வைப்பதானால் அது முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யாது.


'வடகிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு' என்பதை தீர்மானிப்பவர்கள் சிங்கள அரசாங்கமாகவோ அல்லது புலிகளாகவோ, யாழ்ப்பாணத் தலமைகளாகவோ இருக்கமுடியாது. மாறாக இந்த இணைப்பினாலும் அல்லது பிரிப்பினாலும் தமது அரசியல், வாழ்வுரிமைகளில் பாதிப்பு என்பதனை யதார்தத்தில் அடையப்போகின்ற கிழக்கு தமிழர்களோ, அதிலும் முக்கியமாக கிழக்கு முஸ்லிகளோ தான் தீர்மானிக்ககூடியதாக அமைய வேண்டும்.


இந்த கிழக்கு தமிழ், முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளடங்கிய "முன்நிபந்தனைகளை" ஏற்காத "இணைப்போ, பிரிப்போ" நிரந்தரமான தீர்வினை கடைசிமட்டும் வழங்கமுடியாது.


அவர்களது அரசியலை அவர்களே தீர்மானிக்கட்டும்.


இங்கே கூறப்படும் "அவர்கள்" என்ற விளிப்பிற்கு காரணம் "நாங்கள்" என்கின்ற தமிழ்ப்பேசும் தேசிய இனத்திற்குள் இருந்து முஸ்லிம்களை தூக்கியெறிந்து பல வருடங்களாகிவிட்டன.


சபேசன்.


தரவுகள் - "கைநாட்டு" "தேடல்"

Monday, November 13, 2006

இலங்கையில் முதன்மைப் பிரச்சனை புலிப் பாசிசமா?

இலங்கையில் முதன்மைப் பிரச்சனை புலிப் பாசிசமா?


பி.இரயாகரன்
13.11.2006



தை சாரமாக கொண்டு, மற்றொரு புலியெதிர்ப்பு அணியும் குலைக்கின்றது. புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு, அதையும் மார்க்சியத்தின் பெயரில் திரித்து குலைக்கின்றது. இந்த புதிய அணி முதலாளித்துவம் என்ற சொற்களைக் கொண்டே மார்க்சியத்தை சாயம் அடித்தபடி தான், புலியெதிர்ப்பில் தன்னை வேறுபடுத்தி நிற்கின்றது. சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும் தேனீ மற்றும் ரீ.பீ.சீல் சிவப்பு கம்பளம் விரித்து, புலியெதிர்ப்பு அரசியலை விபச்சாரம் செய்தவர்கள் தான் இவர்கள். திடீரென்று அதில் இருந்து பிரிந்து, புதிய புலியெதிர்ப்பு அணியாகவே மறுபடியும் வந்துள்ளனர்.



துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விபச்சாரத்தை கைவிட்டு ஓடவெளிக்கிட்டவர்கள், கையில் கிடைத்த சிவப்பு துணியை போர்த்திய படி ஓடி வந்தனர். மறுபடியும் மிக மோசமான அப்பட்டமான பேரினவாதிகள் தான் நாங்கள், என்பதை அடித்துக் கூறுகின்றனர். இதை சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் இந்த ஆபாசத்தை அரங்கேற்றியுள்ளனர். வெட்கக்கேடான ஆபாசமாக சிவப்பு சாயம் அடித்த இவர்களின் அரசியல் படி, தமிழ் மக்களுக்கு என்று தனித்துவமான அரசியல் பிரச்சனைகள் எதுவும் கிடையாது என்பதே இவர்களின் அரசியலாகும். பேரினவாதம் என்பது கற்பனையானது. அது தமிழ் பாசிட்டுகளினது, தமிழ் முதலாளிகளின் சொந்தக் கண்டுபிடிப்பு என்பதே, இவர்களின் அரசியல் முடிவு. அதை பேரினவாதத்துக்காக வாலாட்டி குலைக்கும் போது அதை உதிர்த்து விடுகின்றனர். 'இலங்கை அரச இயந்திரம் பௌத்த சிங்கள இனவாதத்தாற் கட்டுப்படுத்தப்படுகிறது, ... என்பது பெரும் பொய்யாகும்." என்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் மீதான பேரினவாத இனவொடுக்குமுறை பற்றிய திரொக்சிய அரசியல் பார்வை இதுவாகும்.



இதனால் இவர்கள் பேரினவாதிகள் போல், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்று எந்த தீர்வையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. அதேபோல் இவாகள் முன் வைப்பதும் கிடையாது. மக்களை அணிதிரட்ட எதுவுமிருப்பதில்லை. இவர்களின் இந்த பேரினவாத நிலையை, அவர்களின் சொந்த மார்க்சிய வார்த்தையில் சொன்னால் 'சுயநிர்ணய உரிமை" அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது." என்று ஒரே வார்த்தையில் அடித்துக் கூறி விடுகின்றனர். தமிழ் மக்களின் எதிரி கூட இப்படி கூறியது கிடையாது. இப்படிக் கூறி தமிழ் மக்களின் எதிரிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர். இதே அரசியல் நிலையைத் தான் ஜே.வி.பியும் இனவாதமாக கொப்பளித்து அதை தமிழ் மக்களின் முகத்தில் காறி துப்புகின்றது.



சுயநிர்ணயம் என்பது தமிழ் மக்களுக்கு கிடையாது என்பதால், பேரினவாதத்தை ஆதரிக்க கோருகின்றனர். அதை அவர்களின் சொந்த மார்க்சிய நடைமுறை சார்ந்த பேரினவாத அரசியலாகவே கூறுகின்றனர். 'புலிகள் அரசுக்கிடையே இராணுவ மோதல் மூண்ட போது புலிப்பாசிசம் தோல்வியுறவேண்டும் என்ற தெளிவான அரசியல் நிலைக்கு" செல்வது தான் அவசியம் என்கின்றனர். இதைத்தான் அவர்கள் தமது சொந்த அரசியலாக நடைமுறையாக கொள்கின்றனர். இதைத்தான் இவர்கள் மக்களுக்கு மாற்றுவழியாக காட்டுகின்றனர். பாசிச ஒழிப்பு என்ற பெயரில், தம்மையொத்த ஒரு கைக்கூலிகளாக எப்படி இருத்தல் என்பதையே, சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் முதலாளித்துவம் பற்றி பூசைகாட்டியபடி விளக்குகின்றனர். இந்த அரசியல் ஆபாசத்தைத் தான், அவர்கள் திரொஸ்கிய மார்க்சிய நிலை என்கின்றனர். இவர்கள் ஜே.வி.பியின் வலது பேரினவாத 'இடது" நிலையைப் பின்பற்றும், வலது திரோஸ்கிய வாதமே பேரினவாதமாக கொப்பளிக்கின்றது.



தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை ஏற்க மறுக்கும் இவர்கள், எல்லாவற்றையும் புலியாக, புலிப் பாசிசமாக காட்டியே புலியெதிர்ப்பு அரசியலை பிதற்றுகின்றனர். பேரினவாத பாசிட்டுகளுடன், கூடி நிற்க திரொஸ்கியத்தின் பெயரில் அழைக்கின்றனர். இந்த அழைப்பையே 'இலங்கை அரசு புலிகளை இராணுவரீதியில் சாகடிக்கும் எனிற் கூட நாம் அதையும் நிபந்தனைகளோடு ஆதரிக்கலாம்." என்கின்றனர். நல்ல நகைச் சுவையான வேடிக்கை தான், போங்கள். இதை மார்க்சியம் என்றால் கைகொட்டி சிரிப்பார்கள். ஏதோ நிபந்தனையுடனாம்! சரி அந்த நிபந்தனை தான் என்ன? புலிப் பாசிசத்தை அழித்த பின்பு திரோஸ்கிகளிடம் ஆட்சி தரவேண்டும் என்பதோ அந்த நிபந்தனை? ஐயோ பாவம் பரிதாபத்துக்குரியவர்கள்.



இவர்கள் மனதில் நினைக்கும் நிபந்தனையுடன் ஆதரிக்கும் இலங்கை அரசைப் பற்றிக் கூறும் போது 'இலங்கை நேரடியான ஆசியப் பிராந்தியத்தில் இந்திய, சீன, ஜப்பானிய, பாகிஸ்தான் அரசுகளின் பொருளாதார அரசியல் இராணுவ உதவிகட்கு கட்டுப்படும் சக்தியாகி விட்டது. அவைகளின் சொற்கேட்கும் சார்புநிலைச் சக்தியாகிவிட்டது." என்று கூறுகின்றனர். அப்படி என்றால், சார்புநிலை சக்தியாக முன்னம் என்னவாக இருந்தனர்? அது எப்படி எப்போது இல்லாது போனது? உலகத்தை கொள்ளையடித்த களைப்பில், ஏகாதிபத்தியம் இலங்கை கடற்கரையில் பொழுதுபோக்குக்கு படுத்துக்கிடந்து மீன் பிடிக்கின்றனரோ!



ஏகாதிபத்தியம் புலிகளை தடைசெய்த பின்பும், அவர்களை அழிக்காது, சும்மா விட்டிருக்கு என்ற கடுப்பே இப்படி புலம்ப வைக்கின்றது. புலியை அழிக்காது தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வைக்க ஏகாதிபத்தியம் கோருகின்றது என்ற கோபம், அரசின் மனித உரிமை மீறல் பற்றியும் ஏகாதிபத்தியம் முன்வைக்கின்றது என்ற ஆத்திரமே உளறவைக்கின்றது. (ஏகாதிபத்தியம் ஏன் இதை செய்கின்றது என்பது மற்றொரு விடையம்.) ஏகாதிபத்தியத்தை விடவும், இலங்கை அரசு உடனடியாக யுத்தம் மூலம் புலியை அழிப்பதால் நிபந்தனை என்று கூறியபடி ஆதரிப்பதே, இவர்களின் அரசியலாகின்றது. இங்கு என்ன நிபந்தனை என்று மட்டும் தயவு செய்து கேட்டுவிடாதீர்கள். நாங்கள் சொல்லுவோம், ஆனால் அது என்னவென்று இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும்.



இப்படி இலங்கையின் சார்புநிலை பற்றி கூறுபவர்கள் தான், இந்த சார்பு அரசு புலிகளை அழித்தால் ஆதரிக்க வேண்டும் என்கின்றனர். இங்கு அழிப்பது இந்தியா உள்ளிட்ட அன்னிய சக்திகள் அல்லவா? அப்படியாயின் உங்கள் நிபந்தனை இலங்கை அரசுக்கா? அல்லது அதை வழிநடத்தும் அன்னியருக்கா? இப்படி அன்னிய சக்திக்கு பாய்விரிப்பது திரோஸ்கிய விபச்சாரமில்லையோ? இங்கு 'இந்திய, சீன, ஜப்பானிய, பாகிஸ்தான் அரசுகளின் பொருளாதார அரசியல் இராணுவ" உதவிக்கு இலங்கை கட்டுப்பட்டது என்பதே ஒரு திரிபாகும. இது இவர்களின் மற்றொரு அரசியல் திரிபு. உலகமயமாதலை பாதுகாக்க விடையத்தை மேலெழுந்தவாரியாக திரித்து, ஏகாதிபத்தியத்தை உள்ளடக்க ரீதியாக இலங்கையில் பாதுகாப்பதாகும். இப்படி பல. ஆனால் அவற்றை இக்கட்டுரை விவாதிக்க முற்படவில்லை.



இவர்களும் ரீ.பீ.சீ மற்றும் தேனீக்கும் இடையில் என்ன வேறுபாட்டுடன் ஓடிவந்து, சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் என்ன கூறுகின்றனர் என்பதை சுருக்கமாக பார்போம். இதன் மூலம் நுட்பமாக புலியெதிர்ப்பின் பன்மைப் போக்கை தெளிவுபடுத்த முடியும்.



பேரினவாதத்துடன் கூட்டுச்சேர்ந்தே புலிகளை அழிக்கவும், அதை பகிரங்கமாக அங்கீகரிக்க மறுக்கும் ரீ.பீ.சீ மற்றும் தேனீ நிலைப்பாடு தான், இவர்களின் அடிப்படையான அரசியல் முரண்பாடு. இதற்கு முதலாளித்துவம் என்ற சொல்லை உச்சரித்து பசப்புகின்றனர். இந்த ரீ.பீ.சீ மற்றும் தேனீயுடான முரண்பாட்டை 'புலிகள் அரசுக்கிடையே இராணுவ மோதல் மூண்ட போது புலிப்பாசிசம் தோல்வியுறவேண்டும் என்ற தெளிவான அரசியல் நிலைக்கு இவர்களால் போகமுடியவில்லை. இலங்கை அரசு புலிகள் இடையே நடுநிலமை உண்டெனக் கருதிக்கொண்டு இரு பகுதிகளையும் தாக்கத் தொடங்கினர். இலங்கை அரசு வெற்றிபெற வேண்டும் எனக் கூறினால் அது சிங்களத் தேசியவாதத்தை ஆதரிப்பதாய் கருதப்பட்டு விடும் என்று கருதியதால் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பாய்ந்தனர்." இது தான் இந்த புலியெதிர்ப்பின் பின் பூத்துக் குலுங்கும் புதிய அவதாரம். இதற்கு சோபாசக்தியின் சத்தியக்கடதாசி, தனது முந்திய நிலைக்கு மாறாக துணைபோவது அறியாமையா? அல்லது ரீ.பீ.சீ மற்றும் தேனீ மீதான எதிர்ப்பா? இதை மறுபிரசுரம் செய்த தூண்டில் முன்னும் இக்கேள்வி பொருந்திநிற்கின்றது.



ரீ.பீ.சீ மற்றும் தேனீயில் இருந்து பிரிந்தவர்களின் அரசியல, பேரினவாத அரசை நேரடியாக ஆதரிப்பது தான். அரச பயங்கரவாதத்தை புலிப் பாசிச அழிப்பில் அங்கீகரிக்க வேண்டும். இதைச் செய்ய மறுக்கும் மேற்கத்தைய நாடுகளை, இதன் அடிப்படையில் எதிர்க்க வேண்டும். புலியை ஏகாதிபத்தியம் அழித்தால், சூக்குமமான அந்த நிபந்தனையுடன் நாம் மறுபடியும் அரசியல் முலாம் பூசி ஆதரிக்க கோருவோம்.



இதை விடுத்துவிட்டு தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதும், இதை அண்மைக்காலமாக ஏகாதிபத்திய வாலில் தொங்கியபடி முன்வைக்கும் ரீ.பீ.சீ மற்றும் தேனீயின் நிலையை பினாற்றல் என்பது இவர்களின் புலியெதிர்ப்பு நிலை. இதனால் தான் இவர்கள் ரீ.பீ.சீ மற்றும் தேனீயுடன் முரண்பட்டனர்.



இந்த ஒட்டுமொத்த அரசியல் விபச்சாரத்தைத் தான் இவர்கள் 'இலங்கை அரசு புலிகளை இராணுவரீதியில் சாகடிக்கும் எனிற்கூட நாம் அதையும் நிபந்தனைகளோடு ஆதரிக்கலாம். புலிப்பயங்கரவாதம் மேல் தாக்குதல் தொடுக்கப்பட்டால் ஐயோ இது சிங்கள அரசை ஆதரிப்பதாகிவிடும் என்று அரசியலில் களங்கப்படாத கற்புடன் இருப்பதாய் கருதும் சிலர் குரலிடுவார்கள்.." என்ற கூறி வாருங்கள் என்று அழைக்கும் திரொஸ்கிகள், தங்களுடன் சேர்ந்து கற்பழிக்க கோருகின்றனர்.



தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு அவசியம் என்பதை ஏகாதிபத்தியத்தின் பின் நின்று வலியுறுத்தும், ரீ.பீ.சீ மற்றும் தேனீ புலியெதிர்ப்புக் கும்பலுடன் முரண்பட்டு நிற்கின்றனர். இதை மூடிமறைக்கவே, முதலாளித்துவம் என்ற அந்தச் சொல் மட்டும் உதவுகின்றது. புலியை அழிப்பதே இவர்களின் அரசியலாகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க மறுபவர்களுடனும், புலியை அழிக்கும் யாருடனும் கூட்டுச் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே இவர்களின் அரசியலாகும். தேனீ மற்றும் ரீ.பீ.சீயில் இருந்து பிரிந்து வந்த இந்த புதிய கொண்டோடி புலியெதிர்ப்பு அணியில் தமிழரசன், மற்றும் அழகலிங்கமும் கொலுவேற்று இருக்கின்றனர். இதற்கு சோபாசக்தியும் அவரின் சத்தியக்கடதாசியும் எந்தவகையில், எதன் அடிப்படையில் துணைபோகின்றது என்பது மற்றொரு புதியதொரு விடையம்.



மேலே எழுப்பிய கேள்விகளை விடவும், சோபாசக்தியின் முன்னைய திரொக்ஸ்கிய நிலையா இதற்கு மேலும் கூடுதலாக துணைபோகின்றது?. இந்த இருவரும் தமது திரொஸ்கிய அடுக்குமொழியுடன், முதலாளித்துவம் என்ற சொல்லைக்கொண்டு அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இந்த அரசியல் வித்தை அப்பட்டமான ஆபாசமான பேரினவாதமாகவே வெளிப்படுகின்றது.



நீங்கள் இந்த அரசியல் புலியெதிhப்பு ஆபாசத்தை புரிந்துகொள்ள 'சர்வதேச சமூகமும் புகலிட ஜனநாயகச் சக்திகளும் என்ற கட்டுரையை

'தேசிய நலன்கள் பாசிசத்தை அழிப்பதைவிட முக்கியமானவையா?" என்று பிதற்றுகின்றனர். தேசிய நலன்கள் என்ன? பாசிசத்தை எப்படி அழிப்பது? திரோஸ்கிய வாதிகளே! ஸ்ராலினிசம் அது இதுவென்று அலட்டாமல் பதிலை சொல்லுங்கள். தேசிய நலன்கள் என்ன? பாசிசத்தை எப்படி ஒழிப்பது?



தேசியம் பாசிசத்துக்கு எதிராக இருப்பதையும், தேசியம் ஏகாதிபத்தியம் மற்றும் பேரினவாதத்துக்கு எதிராக இருப்பதையும், இவர்களால் ஒரு கணம் கூட ஜீரணிக்க முடிவதில்லை. புலிகளின் பெயரில், புலிப் பாசிசத்தின் பெயரில், தேசிய எதிர்ப்பு இவர்களின் செமியாக் குணமாகி வாந்தியாகின்றது. தேசியம் என்பது சாராம்சத்தில் உலகமயமாதல் எதிர்ப்பையும், அதையொட்டிய ஏகாதிபத்திய எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டது. இதை மறுதலிக்கும் இவர்கள், அன்னிய சக்திகளையும் அரச இயந்திரத்தையும் நம்பி, மக்களை அவர்கள் பின் செல்லக் கோருகின்றனர். மக்களின் சொந்த அரசியல் வழியில் நம்பிக்கையற்ற, ஓட்டுண்ணிகளின் செயல்பாடாக இது வக்கரிக்கின்றது.



இந்த நிலையில் பாசிசத்தை மக்கள் மட்டும் தான் ஒழிக்க முடியும். இதற்கு வெளியில் எதுவுமல்ல. இலங்கை மக்களும், சர்வதேச சமூகத்துக்குமே இந்தக் கடமையுள்ளது. அரசு, அன்னிய அரசுகள், கூலிக் குழுக்களால் பாசிசத்தை ஒழிக்கமுடியாது. அது மற்றொரு பாசிசத்தையே, மாற்றாக கொண்டு வரும். இதன் பின்னால் திரொஸ்கிகள் அன்னக்காவடி எடுத்து அரோகரா போட்டு ஆடலாம், ஆனால் மக்கள் ஆட முடியாது. அதாவது ஆட மாட்டார்கள்.



தேசியத்தை விட பாசிசத்தை அழிப்பதே முதன்மையானது என்கின்றீர்களே? நல்ல பொருத்தப்பாடான புலியின் அதே அரசியல் புளுத்து வருகின்றது. புலிகள் கூறுகின்றனர் நாங்கள் நிரந்தர தீர்வைப் பற்றி பேசமாட்டோம், மனிதாபிமான பிரச்சனையை மட்டும் பேசுவோம் என்றனர். இரண்டையும் ஒன்றுக்குகொன்று எதிராக நிறுத்தி புலம்பியது போன்றதே, பாசிச ஒழிப்பும். பாசிசத்தை ஒழிப்பது மட்டும் தான் முதல் நிகழ்ச்சி நிரல், தேசிய நலன் நிகழ்ச்சி நிரலில் இருக்க முடியாது என்கின்றார்கள். புலிகளுடன் இணங்கிப் போகும் நல்ல வேடிக்கையான இலங்கை அரசியல்.



தேசிய நலனை மறுக்கும் ஏகாதிபத்தியத்துடனும், அதையே அமுல்செய்யும் இலங்கை பேரினவாத அரசுடனும், கூட்டுச் சேர்ந்த புலியை அழிக்க தேசிய நலன்கள் தடையாக உள்ளது. இதனால் தேசிய நலனா! அதுவென்ன என்பதும்! அல்லது அதை பிறகு பார்ப்போம் என்பதும் இந்த புலியெதிர்பாளர்களின் அரசியலாகின்றது. பாசிசத்தை ஒழிக்க அன்னிய சக்திகளுடன் இணைய தடையாக உள்ள, தேசியத்தை இழிவாடி வம்பளக்கின்றனர். மக்கள் சார்ந்து பாசிச ஒழிப்பு பற்றி இவர்கள் கடுகளவு கூட எண்ணுவதில்லை. நாம் முன்பு சுட்டிகாட்டியது போல், முதலில் தமிழீழம் பின் ஜனநாயகம் என்று கூறும் புலிகளின் நிலைக்கும், இதே போல் முதலில் ஜனநாயகம் பிறகு சமூக முரண்பாடுகளை தீர்த்தல், என்ற ரீ.பீ.சீ மற்றும் தேனீ கும்பலின் புலியெதிர்ப்பு நிலைக்கும், முதலில் பாசிச ஒழிப்பு என்பது சமாந்தரமானது. முதலில் புலிப் பாசிச ஓழிப்பு, அதன் பின்பு தான் அனைத்தும் என்பது இந்த இடது வேடமிட்ட வலது புலியெதிர்பாளர்களின் அரசியல் நிலையாகும். மக்களைச் சார்ந்திருப்பதில் இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு அரசியல் ரீதியாக விலகுகின்றதோ, அந்தளவுக்கு இந்த மக்கள் விரோதப் போக்கு அரங்கேறுகின்றது. அது சொல்லும் விதம் மட்டும் நாசுக்காகவே மாறுபடுகின்றது.



பாசிசம் தேசிய நலனை மறுதலிக்கின்றது என்ற அரசியல் உள்ளடக்கம், திரோஸ்கிய மலடுகளுக்கு புரிவதில்லை. மக்களின் நலன்கள் தான் தேசியம். மக்களின் நலன்களை ஏகாதிபத்தியம், பேரினவாதம், புலிகள் என யாருமே ஏற்றுக்கொள்வது கிடையாது. தேசியம் சமன் பாசிசம் என்ற திரொஸ்கிய மலட்டுத்தனம் ஆற்றலற்றது. சொந்த மக்களின் நம்பிக்கையற்றது. மக்களின் எதிரிகளுடன் சேர்ந்து நின்று முரண்பாடுகளை தீர்க்க கோருகின்றது.



பாசிசத்தை ஒழிக்க வேண்டும் என்றால், தேசியத்தை மக்களின் தமது சொந்த நலனில் இருந்தே முன்னெடுக்க வேண்டும். அதையே வழிகாட்ட வேண்டும். அதற்கு துப்பில்லை. பாசிசத்தை ஒழிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்பவர்கள், அதே கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டவர்களின் செயல்பாடுகளின் கோட்பாடுகள், தேசியம் சார்ந்ததாக இருக்காது. இதனால் தான் தேசியத்தை மறுக்கின்றனர். தேசிய மறுப்பின் அனைத்து தளமும் இப்படி தான் எங்கும் உள்ளது.



சாராம்சத்தில் தேசியம் என்பது என்ன? முதலில் அது பாசிசமல்ல. புலிகளின் போராட்டம் தேசிய போராட்டமல்ல. மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளே சாராம்சத்தில் தேசியமாகவுள்ளது. ஓரு தேசத்தில், ஒரு தேசியத்தில் வாழும் மக்கள், தமது சொந்த பொருளாதார தேசிய வாழ்வை பாதுகாப்பது தான் தேசியம். யாரிடமிருந்து பாதுகாப்பது. உலகமயமாதலாக ஒருங்கு திரண்டு வரும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து, அதையே ஆளும் கோட்பாடாக கொண்ட குறுகிய இனவாத மதவாத சக்திகளிடமிருந்து, மக்கள் தமது உழைப்பை, உழைப்பின் ஆதாரத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தையும் எதிரியையும் குறித்து நிற்கின்றது. இதனடிப்படையில் தேசிய பண்பாடு, தேசிய கலாச்சாரம், தேசிய மொழி என அனைத்தையும் சிதைக்கவும், சீரழிக்கவும் முயலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசியம் போராடக் கோருகின்றது. புலிப் பாசிசம் தனித்துவமாக இந்த உலகயமாதலுக்கு வெளியில் அது செயல்படவில்லை என்பதுடன், அது சுயாதீனமாக செயல்படவே முடியாது.



ஏகாதிபத்திய உலகமயமாதல் தேசியத்தின் சகல கூறுகளையும் அழிக்கும் போது, அதை எதிர்த்து நிற்பதன் சாரம்தான் தேசியம். புலிகள் கோருவது தேசியத்தையல்ல. புலிகளின் பாசிசம் தேசியமல்ல. எல்லா மக்கள் விரோதிகளும் விதிவிலக்கின்றி, பாசிசத்தை தேசியம் என்று கூறும் புலியின் நிலையை அங்கீகரித்து, அதற்கு சாதகமாக அல்லது எதிராக தமது மக்கள் விரோத போக்கை அரங்கேற்றுகின்றனர். புலிகளின் பாசிசம் தேசியமல்ல என்று கூறி யாரும் தேசியத்தை முன்வைப்பதில்லை. இதனால் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மக்களின் தேசிய நலனில் நம்பிக்கையற்று, பாசிச ஒழிப்பில் அன்னிய சக்திகளின் கூலிப்பட்டாளமாகின்றனர்.



பாசிச ஒழிப்பில் இவர்கள் ஆதரிக்கும் ஏகாதிபத்திய உலகமயமாதல், தேசியத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் அழிக்கின்றது. ஏகாதிபத்திய உலகமயமாதல் என்பது ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசுவரை உள்ளடங்கியது. இது திரோஸ்கிய மலட்டுத்தன அறிவுக்கும், குருட்டுப் பார்வைக்கும் தெரிவதில்லை. இதனால் புலி அழிப்பு முதல் அனைத்தும் மக்கள் விரோதமாகவே அவதரிக்கின்றது.



இப்படி மக்களின் தேசிய பொருளாதாரத்தை அழிப்பவனுக்கு காவடியெடுப்பவர்கள் தான், 'சுயநிர்ணய உரிமை அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது" என்கின்றனர். நல்ல நகைச்சுவை. ஏதோ புதிதாக சொல்வது போல் சொல்லிக் காட்டுகின்றனர் திரொஸ்கியின் பெயரில் திரொஸ்கிஸ்ட்டுகள். இதையே திரொஸ்கி சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் லெனினுக்கும் ஸ்ராலினுக்கும் எதிராக, அதாவது மக்களுக்கு எதிராகக் திரொஸ்கி கூறியது தான். அதே சரக்கு, இன்று சகாப்தம் முடிந்துவிட்டதாக கூறி தூசுதட்டி, அதே போட்டை புலிப் பாசிசத்தின் துணையுடன் திரும்ப ஊரறிய மாட்ட முனைகின்றனர்.



தேசிய சுயநிர்ணய உரிமையை மறுத்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் தான் திரொஸ்கி. இது மட்டுமல்ல விவசாயிகளின் புரட்சிகர பாத்திரத்தையே மறுத்தவர் தான் இந்த திரோஸ்கி. இப்படி மக்களின் புரட்சிகர பாத்திரத்தையும், மக்களின் அடிப்படை உரிமையையும் எதிர்த்த திரொஸ்கியின் அரசியல் போக்குகளை எதிர்த்து தான், லெனினால் புரட்சியை நடத்த முடிந்தது. திரோஸ்கி லெனின் ஸ்ராலின் தலைமையில் நடைபெற்ற புரட்சியுடன் ஓட்டுண்ணியாக ஓட்டிக்கொண்ட போது, அவரின் தத்துவ ரீதியான எதிர்ப்புரட்சிகர போக்கும் ஓட்டிக்கொண்டது. நடந்த புரட்சியை குழிபறிக்க லெனினுடன் முரண்படாத காலம் எதுவும் திரோஸ்கிக்கு கிடையாது. புரட்சிக்கு பிந்திய லெனின் தத்துவார்த்த நீண்ட போராட்டங்களை, திரொஸ்கிக்கு எதிராகவே நடத்தவேண்டிய துரதிஸ்டம் லெனினுக்கு ஏற்பட்டது. பல்வேறு விடையங்களில் இந்த நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டது. புரட்சிக்கு பிந்திய விடையங்களில் லெனின் அவதானம் செலுத்த முடியாத அளவுக்கு, திரொஸ்கியின் எதிர்புரட்சிகர பாத்திரமே லெனின் நேரத்தையே மட்டுப்படுத்தியது. லெனின் மறைவின் பின் இதே நிலை ஸ்ராலினுக்கு ஏற்பட்டது.



இன்று இதை மூடிமறைக்க ஸ்ராலினிசம் என்று கூறி கொச்சைப்படுத்த முனைவது லெனினிசத்தைத் தான். அதாவது மார்க்சியத்தைத் தான். இதனால் தான் சுயநிர்ணயத்தை மிக மோசமானதாக காட்டி, புலிப் பாசிச துணையுடன் இழிவாடுகின்றனர் திரொஸ்கிகள். இவர்கள் இப்படி என்றால் ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் சுயநிர்ணயத்துக்கு தனது ஏகாதிபத்திய சார்புக்கு ஏற்ப புது விளக்கம் அளிக்கின்றார். 11.11.2006 ஜெர்மனி ஸ்ருட்கார்ட்டில் நடந்த புலியெதிர்ப்பு கூட்டம் ஓன்றில் 'மாற்று அரசியலை நோக்கிய பார்வை" என்ற தலைப்பில் 'சுயநிர்ணய உரிமை என்பது ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கியதாகும். மக்கள் தமது சுயவிருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் சுயமாகவும், சுதந்திரமாகவும், தமது வாக்குகளைப் பகிரங்கமாக தேர்தலில் இணைந்து வெளிப்படுத்துவதும் சுயநிர்ணய உரிமையாகும். மக்களின் விருப்பமும், அங்கீகாரமுமே அரசின் ஆட்சி அதிகாரத்திற்கான இருப்பாகும்." என்கின்றார். மக்கள் வாக்கு போடுவது தான் மக்களின் சுயநிர்ணயம் என்கின்றார். அதை அவர் 'மக்களின் இறைமை அதிகாரம் வாக்குச் சீட்டின் மூலம் பிரயோகிக்கப்படுகிறது" என்கின்றார். சுயநிர்ணயத்தை திரிப்பதில் புலிகளின் தம்பி தான் நாங்கள், ஆனால் ஜனநாயகவாதி என்கின்றனர். சுயநிர்ணயத்தை இப்படி தத்தம் நோக்குக்கு ஏற்ப திரிப்பது, மறுப்பது இவர்களின் கைக்கூலித்தனத்துக்கு ஏற்ப கைவந்த கலையாகின்றது. இதையே தான் மற்றொரு கடைக்கோடியில் நின்று திரொஸ்கிய புலியெதிர்ப்பு கும்பலும் செய்கின்றது.



திரொஸ்கிய லெனினிய விரோத கருத்தை இன்று மறுபடியும் ஓப்புவிக்கின்றனர். சுயநிர்ணயம் என்ற லெனினிய சகாப்தம் முடிந்துவிட்டது என்றால், அதற்கு பதிலாக என்ன வந்துள்ளது. தேசங்களை, தேசியங்களை உலகமயமாதல் பொருளாதாரம் சூறையாடவில்லையா? புலிகள் முதல் இலங்கை அரசாங்கம் வரை தேசத்தை, தேசியத்தை மறுதலிக்கவில்லையா? மக்களுக்கு சுயநிர்ணயம் கிடையாது என்று சொல்வதில், புலிகள் முதல் திரொஸ்கிகள் வரை ஓரே கோட்பாட்டையே கொண்டுள்ளனர். இதையே ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் மற்றொன்றாக திரித்து மறுக்கின்றார். இவற்றை எல்லாம் மறுத்தபடி மக்கள் தமது சொந்த வாழ்வு சார்ந்த, தன்னியல்பாகவே தாம் அறியாமால் இதைக் கோருகின்றனர். இதற்காக சூக்குமமாக தமது சொந்த வாழ்வின் ஊடாக போராடுகின்றனர். இது மிக நுட்பமானது ஆனால் உள்ளடக்க ரீதியானது.



இந்த நிலையில் சுயநிர்ணயத்தைக் கோரும் பாட்டாளிவர்க்கம், தனது வர்க்க நிலை காரணமாக இதற்கு எதிரான அனைத்தையும் எதிர்த்து போராடுகின்றது. அதுவும் குறித்த தேசிய எல்லைக்குள் இது எதார்த்தத்தில் காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்க புரட்சிகள் சாராம்சத்தில் தேசியமாகவே உள்ளது. உலகில் ஓரே நாளில் ஒரே வினாடியில் உலகமயமாதலை எதிர்த்து புரட்சி வந்துவிடாது. இதை வரலாறு காட்டியுள்ளது. எதார்த்தம் இதை நிறுவுகின்றது.



நாடுகளின் ஏற்றத் தாழ்வான பொருளாதாரம், சமூகங்களிடையே வேறுபட்ட முரண்பாடுகள், முரண்பாடுகளின் ஒரு சீரற்ற தன்மை, புரட்சிக்குரிய தயாரிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புரட்சிக்கு தலைமை தாங்கும் தலைமைகளின் சீரற்ற பார்வை, பாட்டாளி வர்க்க கோட்பாட்டு ரீதியான உள்வாங்கல்களிலும் அதை பிரயோகிப்பதிலும் உள்ள குறைபாடு, தலைமைகள் நாட்டின் எல்லைக்குள் இருப்பதும், நாடுகள் தனித்தனியாக பிரிந்து கிடப்பது போன்ற பல்வேறு காரணங்கள் தேசங்களின், தேசியத்தின் தனித்துவத்தை நிர்ணயம் செய்கின்றது. நாடுகளின் சுயநிர்ணயத்தை பாதுகாப்பதை, தற்பாதுகாப்பதை கோருகின்றது. பாட்டாளி வர்க்கம் சர்வதேசிய உணர்வு பெற்று இருப்பதை, அதை நடைமுறையில் செயல்படுத்துவதை இது மறுதலித்துவிடவில்லை. தேசங்கள், தேசியத்தின் உள்ளடக்கத்தை இதை முரணாக்கிவிடுவதில்லை.



சர்வதேசியத்தை தேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது, தேசியத்தை சர்வதேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது முற்றிலும் தவறானதும் உள்நோக்கம் கொண்டதுமாகும். இதை தமிழ் மக்களின் எதிரிகள் அனைவரும் விதிவிலக்கின்றி செய்கின்றனர். தேசியம் இரு கூறுகளாகவே எதார்த்தத்தில் இருந்தது, இருக்கின்றது.



1.பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கூறு



2.முதலாளித்துவ தேசியக் கூறு.



இரண்டுக்கும் தனித்தனி நோக்கம் உண்டு. புலிகள் பாட்டளிவர்க்க தேசியத்தையோ, முதலாளித்துவ தேசியத்தையோ முன்னெடுக்கவில்லை. அது தேசியத்தை மறுக்கும் ஓரு இராணுவ பாசிச மாபியாக் குழு. அது ஓரு இனத்தின் தேசியக் கூறை தான் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டு தான், தன்னைத் தான் நிலை நிறுத்த முடிகின்றது. இந்த உண்மையை இனம் கண்டு, தமிழ் மக்களின் தேசியக் கூறை (பாட்டாளி வர்க்க கூறு, முதலாளித்துவக் கூறு) வேறுபடுத்தி, அதைப் புலியில் இருந்து தனிமைப்படுத்தி போராடாத எமது வரலாறும் எமது கோட்பாடுகளும் தான் புலியின் அரசியல் இருப்பாகின்றது. புலியின் இருப்புக்கு யார் காரணம் என்றால், மக்கள் அல்ல. மாறாக தமிழ் மக்களின் தேசியக் கூறை புலியில் இருந்து பிரித்து, அதற்காக போராடாத பாட்டாளி வர்க்கம் மற்றும் தேசிய முதலாளித்துவ பிரிவுகளின் கோட்பாட்டு தெளிவுமின்மையும் நடைமுறையின்மையும் தான் இன்றுவரை காரணமாக உள்ளது. இதை மறுதலிக்கும் திரோஸ்கிய புலியெதிர்ப்பு, இலங்கை அரசின் பின் விசுவாசமாக கோட்பாட்டு ரீதியாகவே வாலாட்ட வைக்கின்றது.



தேசியத்தில் உள்ள பாட்டாளி வர்க்க சர்வதேசிய கூறே இன்னமும், அடிப்படையான புரட்சியின் முக்கியமான உந்துவிசையாகவுள்ளது. முதலாளித்துவத்தின் தேசியக் கூறு, எதார்த்த்ததில் பலவீனமாகியுள்ளது. முதலாளித்துவ தேசியக் கூறை எந்த மூன்றாம் உலக நாட்டு (கியூபா உட்பட, ஆனால் வேறுபாடு உண்டு) அரசுகளும் பின்பற்றவில்லை. மாறாக அவ் அரசுகள் உலகமயமாதல் அமைப்பின் ஓரு அடியாட்படையாக கூலிக்கும்பலாகவே வீழ்ந்து கிடக்கின்றது. உள்ளுர் உற்பத்தி முறையில் உள்ள தேசிய முதலாளித்துவ கூறுகள், தமது உற்பத்தியில் உலகமயமாதல் உற்பத்திக்கு எதிராக தமது தற்காப்பை அடிப்படையாக கொண்டு போராட முனைகின்றது. ஒன்றில் மரணிக்கின்றது அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரத்துக்குள் உறுஞ்சப்படுகின்றது. இப்படி ஒவ்வொரு கணமும் தேசிய உற்பத்திகள் கடுமையான போராட்டத்தை சதா நடத்துகின்றது.



இந்த நிலையில் தான் பாட்டாளி வர்க்க தேசியம் மிக முக்கியமான புரட்சிகர பாத்திரத்தை வகிக்கின்றது. தேசிய உற்பத்தியை பாதுகாக்க முனைப்பாக முனைகின்றது. தனது சொந்த வாழ்விற்கான சமூக ஆதாரத்தை அழிப்பதை அது மறுதலிக்கின்றது. தனது உழைப்பை பிடுங்கும், அதை மறுதலிக்கும் உலகமயமாதலை எதிர்த்து நிற்கின்றது. உலகமயமாதல் உற்பத்தி தேசிய உற்பத்தியை சுரண்டுவதை, அதை அழிப்பதை மறுதலிக்கின்றது. தனது வாழ்வு சார்ந்து, தேசிய மொழி பண்பாடு என அனைத்தையும் பாதுகாக்க முனைகின்றது. சுயநிர்ணயம் என்பது உலகமயமாதலை எதிர்ப்பதையே சாரமாக கொண்டது. அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதையே சாரமாக கொண்டது. தனி மனிதன் தனது சுயநிர்ணயத்தை கோருவது எவ்வளவு முக்கியமோ, அதுவே தேசத்துக்கும் பொருந்தும். தனிமனித சுயநிர்ணயம் மற்றவர் சுயநிர்ணயத்தை மறுத்தல் அல்ல, மாறாக அங்கீகரித்தலாகும். இதுவே தேசியத்துக்கும் பொருந்துகின்றது. தனிமனிதன் தனது சுயநிர்ணயத்தைக் கோருகின்ற போது, அதை தேசத்துக்கு மறுப்பது அபத்தமாகும்.



அபத்தமாகவே சிந்தித்து அலம்பும் தமிழரசன் 'இன்று இலங்கையில் உள்ள முதன்மையான அபாயம் புலிப்பாசிசமாகும். புகலிட நாடுகளில் தம்மை இடதுசாரிகளென்று கருதிக்கொள்ளும் ஸ்டாலினிச பழந்தேம்பு புரட்டுபவர்கள் தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிப் பாசிசத்தைக் கூட ஆதரிக்கத் தயாராக உள்ளனர்." என்று எங்களையே குறிப்பிடுகின்றார். பாசிசத்தை எதிர்த்து தொடர்ச்சியாக நாங்கள் போராடி வருகின்ற எமது காலத்தில், இந்த திரொஸ்கிய குசும்புகள் எந்த உலகத்தில் இருந்தனர். எங்கே இந்த பாசிசத்தை எதிர்த்து நின்றனர் என்று தேடினாலும், எங்கும் கிடைக்குதில்லை. அண்மைக்காலமாக அன்னக்காவடியாட்டம் தேனீக்கு பின்னால் பிரதிட்டை செய்தவர்கள், இன்று ஆகாகா யுகப் புரட்சி என்கின்றனர். யாருடன் எப்படி என்றால் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து செய்யப்போவதாக பிதற்றுகின்றனர். ஆகவே 'பழந்தோம்பு" என்று கிண்டல் அடிக்கின்றனர்.



'தமிழ் தேசிய விடுதலையின் பெயரால் புலிப் பாசிசத்தைக் கூட ஆதரிக்கத் தயாராக உள்ளனர்" என்ற எதிர்வு கூறலை எம்மை நோக்கிக் கூறுகின்றனர். எப்படித்தான் இந்த எதிர்வு கூறலை கூற முடிகின்றது என்றால், எங்கள் கருத்துகளை விமர்சிக்க முடியாத மொத்த விளைவே எதிர்வு கூறலாகின்றது. இப்படித் தான் அரசியல் சேறடிக்க முடிகின்றது. பிரச்சனையை நேரடியாக விவாதிக்க துப்பேயில்லை. 'தமிழ் தேசிய விடுதலையின் பெயரில்" என்கின்றனர். இது புலிகள் தமிழ் தேசிய விடுதலை நடத்துவதாக, திரொஸ்கிய மதிப்பீட்டின் முடிவில் இருந்து வெளிப்படுகின்றது. நாங்கள் அப்படி மதிப்பிடவில்லை. இது அவர்களுக்கும் எமக்குமான தெளிவான அரசியல் வேறுபாடு. இப்படித் தான் அனைத்து சர்வதேச நிலைபாட்டிலும் வேறுபாடு உண்டு. 'தமிழ் தேசிய விடுதலையின் பெயரில்" என்று கூறுவதன் மூலம், திரோஸ்கிகள் உள்ளடக்கத்தில் ஆச்சரியப்படதக்க வகையில் புலிகளின் கோட்பாட்டு ரீதியான உடன்பாட்டுக்குள் புலிகளின் தேசிய ஆசான்களாகிவிடுகின்றனர். புலிகள் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தவில்லை என்ற எமது அரசியல் நிலை மட்டும் தான், புலியை அரசியல் ரீதியாக விமர்சிக்கின்றது. மற்றவை எல்லாம் புலியெதிர்ப்பை அரசியலாக முன்வைக்கின்றது. ஆகவே மாற்று அரசியல் வழியற்று, அரசு மற்றும் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு துணைபோவதையே அரசியலாக்கின்றது.



நாங்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை உயர்த்துவதால் அதை 'ஸ்டாலினிச பழந்தேம்பு புரட்டுபவர்கள்" என்கின்றனர். திடீரென பாசிசத்தை இலங்கை அரசுடன் சேர்ந்து புரட்ட வந்தவர்கள், இப்படி புலம்பவது நிகழ்வது உண்டு. சுயநிர்ணயத்தை உயர்த்துவதானது, பாசிசத்தை பாதுகாப்பது எனக்கூறி வட்டமடிக்கின்றனர். ஆனால் எதார்த்தம் சார்ந்த எமது போராட்ட வரலாறு, எமது கோட்பாட்டு தெளிவு இலங்கையில் மிகத் தனித்துவமானதும், தெளிவானதுமாகும். யாருக்கும் நாம் சோரம் போனது கிடையாது. கோட்பாட்டு ரீதியாக யாரும் செய்ய முடியாததை 'பழந்தேம்பு"கள் ஆகிய நாம் நடைமுறையில் செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் நாம் கண்ட நெருக்கடிகள், அவதூறுகள், இழிவாடல்கள் எல்லையற்றது. நாம் அதை துணிச்சலாக எதிர்கொண்டு, மக்களின் விடுதலைக்காக தனிததுவமாகவே கோட்பாட்டு துறையில் நிமிர்ந்து நிற்கின்றோம்.



'பழந்தேம்பு" என்று கூறி சுயநிர்ணயத்தை மறுக்கும் நீங்கள், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வை வைக்கின்றீர்கள். தமிழ் மக்களுக்கு தேசியப் பிரச்சனை இல்லை என்பதே, நேர்மையாக சொல்லமுடியாத உங்கள் உள்ளாhந்த நிலை. சுயநிர்ணயத்தை மறுக்கும் நீங்கள், ஜே.வி.பி போல் பதில் சொல்ல முனைகின்றீர்கள். ஆனால் சொல்லும் அரசியல் நேர்மை துணிவு கிடையாது. அலட்டலே எஞ்சிவிடுகின்றது. உங்கள் புலியெதிர்ப்பு தோழமை பூண்டு, ஜே.வி.பியை இனவாதிகள் அல்ல என்கின்றனர். இலங்கையில் இனவாதிகளாக 'சிஹல உருமய போன்ற சிங்கள இனவாதப் போக்கின் அழிவைத் தடுத்து நிறுத்த முயலும் சிறிய இனவாத சக்திகள் தோன்றிய போதும்" என்று கூறி, இனவாத அமைப்பாக எதுவுமில்லை என திரித்து காட்டுகின்றனர்.



இவர்கள் கூறுகின்றார்கள் 'இன்று இலங்கையில் உள்ள முதன்மையான அபாயம் புலிப்பாசிசமாகும்" இதன் சாரம் இலங்கையில் பிரதான எதிரி அரசல்ல, புலி என்பதாகும். நாங்கள் இதைத் தெளிவாக மறுதலிக்கின்றோம். எமது முதன்மையான எதிரி புலியல்ல, பேரினவாத அரசே. இதன் பின்னுள்ள ஏகாதிபத்தியமுமே. ஏகாதிபத்தியம் வேறு இலங்கை அரசு வேறல்ல. 'இலங்கை தழுவிய ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதையும் அடையாளம் காணவில்லை." என்று ஊரையே ஏமாற்ற கரடிவிடத் தேவையில்லை. இலங்கை அரசு ஜனநாயக அரசல்ல. மாறாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஆட்சியாளராக செயல்படும் பேரினவாத அரசு, பாசிசத்தையே அடிப்படையாக கொண்டது.



புலிப் பாசிசம் மக்களின் முன் நேரடியாக அம்பலமாகின்றது. அரச பாசிசம் மறைமுகமாக, ஆனால் கொடூரமாக செயல்படுகின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பேரினவாத பாசிசம் அங்கீகரித்தால் அல்லது ஒரு தீர்வை வழங்கினால் புலிபாசிசத்தின் முடிவு தீர்மானகரமாகவே நிகழ்ச்சிக்கு வந்துவிடும்.



புலிபாசிசத்தை பாதுகாப்பது பேரினவாத பாசிசமே. பேரினவாத அரச பாசிசம் தான், புலிப் பாசிசத்தின் அரசியல் மூலம். இது கூடத் தெரியாத மலட்டு அரசியல் தான் திரொஸ்கியம். மக்கள் பலத்தை சார்ந்து நிற்பதையும், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அங்கீகரிக்க மறுப்பதுவும் திரொஸ்கியத்தின் மையக்கூறாகும். அது 'இலங்கை தழுவிய ஜனநாயக அரசியல் தோன்றியிருப்பதையும் அடையாளம் காணவில்லை." என்று கூறி, மக்களின் ஜனநாயக உரிமையை மறுக்கின்றனர். மக்களின் ஜனநாயக உரிமை என்று நாம் கூறும் போது, திரொஸ்கிகள் அதை தமது திரொஸ்கிய கருத்துக்கு ஏற்ப திரிக்கின்றனர். மக்களின் ஜனநாயக உரிமை என்பது, அந்த மக்கள் தமது சொந்த தேசிய பொருளாதாரத்தைக் கொண்டு வாழ்வை தீர்மானிக்கவும், அது சார்ந்த பண்பாட்டு மொழியை அடிப்படையாக கொண்ட ஒரு தேசமாக இருக்க கோருவதையே உள்ளடக்கியது. இதன் மூலம் மற்றைய சமூகங்களின் பரஸ்பர இருப்பையும், அவாகளின் உரிமையையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கின்றது. எல்லா மக்களைப் போலவும், தேசிய அடிப்படையிலான தேசியத்தைச் சார்ந்து வாழும் ஜனநாயக உரிமையை மறுப்பது என்பதே, திரொஸ்கியத்தின் மைய அரசியலாக உள்ளது.



இந்த திரொக்ஸ்கி முரண்பாட்டில் 'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது? புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை ஜனநாயகரீதியில் மாற்ற முடியுமா?" என்கின்றனர். நல்லது நண்பர்களே. நீங்கள் சரியான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை, மக்களை அதற்காக ஆயுதபாணியாக்கி நடத்த வேண்டியது தானே. இது மட்டும் தான் சரியான வழி. அதைச் செய்ய வேண்டியது தானே. இது மட்டும் தான் புலிப் பாசிசத்தை ஒழிக்கும். ஆனால் இதை கேள்வியாக எழுப்பும் நீங்கள், அதை நடைமுறையில் மறுதலிக்கின்றீர்கள். இந்தக் கேள்வியை எம்மை மடக்க, எமது இன்றைய நிலையைக் கேலிசெய்ய முட்டாள் தனமாக முன்வைக்கின்றீர்கள். இதுவே உங்களுக்கு ஏன் பொருந்தாது?



'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது? புலிகளின் ஆயுத நடவடிக்கைகளை ஜனநாயகரீதியில் மாற்ற முடியுமா?" இப்படி நாங்கள் சொன்னது கிடையாது. எமது கடந்தகால விமர்சனங்கள் முதல், நாங்கள் நடைமுறையில் போராடிய காலங்களில் கூட, இப்படி நாங்கள் ஒரு அரசியல் வழியை பின்பற்றியது கிடையாது. புலிகளை ஜனநாயக உபதேசங்கள் மூலம் மாற்ற முடியாது. இது எங்கள் அரசியல் வழி கிடையாது. நாங்கள் புலிகளை விமர்சிக்கின்றோம் என்றால், விமர்சனம் மூலம் சிந்திக்கத் தூண்டி ஒரு மாற்றத்தை நோக்கிய மாற்று வழிக்காகத் தான். ஒரு விமர்சனம் என்பது மாற்றத்தைக் கோருவதுதானே ஒழிய திருந்துவதையல்ல.



மாற்றத்தை மக்கள் மட்டும் தான் தமக்காக நடத்தமுடியும். மக்கள் தமது சொந்த விடுதலைக்காக ஆயுதத்தை ஏந்துவதன் மூலம் தான், மாற்றம் உண்மையானதாக அமையும். புலிகளே அழிந்தாலும், இதுவே அனைத்தும் சார்ந்த உண்மையாகும். எம் மீதான விமர்சனம் குற்றச்சாட்டு என்ற வகையில், நாம் செய்வது என்பது நடைமுறை சார்ந்த ஓரு போராட்டத்தைத் தான். கடந்தகால இடதுசாரிகளின் தவறுகளால், (எம்மை உள்ளடக்கியது தான்) துரதிஸ்டவசமாக சூழல் சார்ந்து நடைமுறையில் மக்களுடன் நேரடியாக நாம் இல்லையென்ற போதும், நாம் சமூகத்தின் மத்தியில் நடைமுறை சார்ந்த வகையில் நிற்கின்றோம். இதை யாரும் செய்யவில்லை. மக்களின் பிரச்சனைகள் மீது, அவர்களை கருத்தியல் ரீதியாக சூழல் சார்ந்த எல்லைக்குள் மக்களை அணுகுவதை நாம் தள்ளிப் போடவில்லை.



இந்த இடத்தில் 'தமிழ் தேசிய விடுதலையா இன்று நடைபெறுகிறது?" நல்லதொரு கேள்வி. இதற்கு தெளிவான பதிலும், நடைமுறையையும் கோருகின்றது. தமிழ் தேசிய விடுதலை இன்று நடைபெறவில்லை என்று தெரிகின்ற போதே, உண்மையான தேசிய விடுதலைக்கு போராட வேண்டித் தானே அனைவரையும் கோருகின்றது அல்லவா! அதைத்தான் நாங்கள் நடைமுறையில் முன்வைக்கின்றோம். இதைத்தான் திரோஸ்கிகள் முதல் அனைத்து புலியெதிர்ப்பாளர்களும் எதிர்க்கின்றனர். இதுதான் எமக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளில் மையமானது. இதனால் எம்மை புலி என்கின்றனர். நன்றாக உங்கள் எதிர் புரட்சிகர மக்கள் விரோத தன்மைக்கு ஏற்ப உரத்துச் சொல்லுங்கள்.



தமிழ் தேசிய விடுதலையை சரியாக முன்னெடுத்தல் என்பதே, தமிழ் மக்களின் மீதான அனைத்து பிரச்சனைக்குமான சரியான அரசியல் தீர்வாகும். இதற்கு மாறாக கேள்வியிலேயே அதை மறுப்பது தான் 'சுயநிர்ணய உரிமை அரசியலின் சகாப்தம் இன்று முடிவடைந்து விட்டது" என்ற வாதம். இப்படி எதிர்நிலையில் நின்று வள்ளென்று குலைக்க முடிகின்றது.



அடுத்து எம்மை இழிவுபடுத்தவே 'புலிகளின் அடிமட்ட அங்கத்தவர்களை பாசிசத்திலிருந்து விடுவித்து ஜனநாயகப் போதமூட்டி தமிழ்த் தேசியத்தின் பரிசுத்தமான சக்திகளாக்க முடியுமா? இது முடியுமென்று சில ஸ்ராலினிச அரசியல் போதனையாளர்கள் பஞ்சணைக் கனவுகளைக் கொண்டுள்ளனர்." நாங்கள் பஞ்சணை கனவு காண்கின்றோம் என்றால், புலியின் பின் சென்றவர்களை என்ன செய்வது? நீங்கள் வழிகாட்டுவது போல், கொல்வதற்கு துணை செய்யக் கோருகின்றீர்கள்? அதாவது இலங்கை அரசின் வெற்றிக்கு ஆதரவளித்து விபச்சாரம் செய்ய கோருகின்றீர்களா? இது எமது வழியல்ல, இது திரோஸ்கிய விபச்சார வழியாகும். இந்த திரோக்சிய வழி என்ன? 'இலங்கை அரசு வெற்றிபெற வேண்டும்" என்பதே.



புலிகளில் உள்ள பத்தாயிரக்கணக்கான அவர்களின் தியாகமனப்பான்மையை இழிவுபடுத்துவதோ அல்லது அவர்களை அதற்காக கொன்று போட உதவுவதோ எமது அரசியலாக ஒருநாளும் இருக்கமுடியாது. இது உள்ளடக்கத்தில் மக்களுக்கு எதிரான கூலிக் குழுக்களின் படுகொலை அரசியலாகும். புலிகளில் உள்ள ஒவ்வொருவரினதும் தியாக மனப்பான்மையை வென்றெடுக்கும் வகையில், தவறான வழியில் செல்வதை தெளிவுபடுத்தி அவர்களை கொல்வதற்கு பதில், மக்களுக்காக சிந்திக்க தூண்டவேண்டும். சொந்த தாய் தந்தைக்காக, தனது சமூகத்துக்காக போராடுவதன் அவசியத்தை, அந்தக் கடமையை உணரவைத்து வெல்லப்பட வேண்டும். இதை நாங்கள் மட்டும் தான் செய்ய முனைகின்றோம். இது எம்முன்னுள்ள கடுமையான ஆனால் தெளிவான அரசியல் பணியாகும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வாக அனைத்தும் மாற்றம் அடைகின்றது. இப்படித்தான் மக்கள் புரட்சி நடக்கின்றது. மக்கள் புரட்சிக்கு புலியின் அடிமட்ட உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்று, நாங்கள் உங்களைப் போல் கூறும் இயங்கியல் மறுப்பாளர்கள் அல்ல. நீங்கள் கூறுவது போல் 'புலிகள் அறிவுக் குறைபாட்டாலா ஜனநாயகத்தை அறியாததாலா பாசிசவாதிகள் ஆனார்கள்? சாதாரண முதலாளித்துவ ஜனநாயகத்திற்குள் கூட வரமுடியாத பாசிஸ்டுகள்தான் அதில் நிறைந்துள்ளனர்." இது அப்பட்டமான இயங்கியல் மறுப்பாகும். பாசிசம் பற்றிய அறிவுக் குருட்டின் இயலாமை, இயங்கியல் மறுப்பாகின்றது. பாசிசம் என்பது சுரண்டும் முதலாளித்துவ ஜனநாயக வடிவத்தில் ஏற்படும் நெருக்கடியில் ஏற்படும் பண்பு மாற்றம் தான் பாசிசம். இதன் பிரதிநிதிகள் தான் புலிகள். இதற்கு வெளியில் அல்ல. இது கட்டமைக்கப்பட்ட வடிவங்களில் புலிக் குழுவுக்கு என்று சிறப்பு அம்சங்கள் உண்டு. பாசிசத்தின் எல்லா இடங்களிலும் இது காணப்படுகின்றது. இல்லாது 'புலிகள் மக்கள் இயக்கமல்ல. மாறாக இராணுவரீதியிற் கட்டப்பட்ட ஆயுதமேந்திய மக்களுக்குப் புறம்பான குழுவாகும்." என்பதால், அது பாசிசமாக இருப்பதில்லை. மாறாக பாசிசம் சுரண்டல் வடிவத்தின் ஒரு பண்பு மாற்றத்துக்குள்ளான ஒரு வடிவம் தான். அதன் பிரதிநிதிகள் தான் புலிகள். புலிக்கு எதிரான போராட்டம் சாராம்சத்தில் சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டம். இதைப்பற்றி யாரும் பேசுவது கிடையாது. அதனால் தான் பாசிச அரசியல் உள்ளடகத்தையே திரிக்கின்றனர். மக்கள் தமக்காக தாம் போராடுவதைத் தவிர, மாற்று வழிகள் அனைத்தும் அது சார்ந்த கோட்பாடுகளும் அனைத்தும் விதிவிலக்கற்ற வகையில் படுபிற்போக்கானவையாகும். இந்த வகையில் மக்களுக்கான எமது போராட்ட வழி மிகத் தெளிவானது.

http://www.tamilcircle.net


Friday, November 10, 2006

சமூக ஆற்றலற்ற மலட்டுதனம் கொலைகளாகவே தீர்வாகின்றது

சமூக ஆற்றலற்ற மலட்டுதனம் கொலைகளாகவே தீர்வாகின்றது

பி.இரயாகரன்
10.11.2006

கொலைகளையே தமது அரசியல் பரிகாரமாக சிந்திக்கின்ற எமது சொந்த மன உணர்வுகள், மனிதத்தின் சகல கூறுகளையும் மலடாக்கிவிடுகின்றது. எமது சிந்தனை முறையும், வாழ்வியல் முறையும், மற்றவனின் மரணம் மூலம் தீர்க்கப்படலாம் என்று நம்புகின்றது எமது அறிவு. அப்படித்தான் அதை விளக்குகின்றது. அப்படித்தான் அதை நடைமுறைப்படுத்துகின்றது. இப்படி சிந்திக்கின்ற காட்டுமிராண்டிகளைக் கொண்ட ஒரு சந்ததிகளின் காலத்தில், நாம் உயிருடன் வாழ்கின்றோம்.


மக்கள் மேலான கூட்டுப்படுகொலைகள், தனிநபர்கள் மேலான பழிக்கு பழிவாங்கல்கள் என்று எங்கும் எல்லாத் தளத்திலும், இதுவே அரசியலாகி புளுக்கின்றது. புலிகள் முதல் அரசு வரை ஏன் கருணா தரப்பு கூட, இதற்காக சொந்த தர்க்கவாதத்தையே கொட்டித் தீர்க்கின்றனர். மனிதமோ அனுதினமும் செத்து மடிகின்றது.


ஏன் எதற்கு நாம் கொல்கின்றோம், ஏன் அதை நாம் நியாயப்படுத்துகின்றோம் என்றால், அதற்கு எந்த சுயவிளக்கமும் கிடையாது. துரோகி தியாகி, பயங்கரவாதி என்று பல பட்டங்களை மொட்டையாக சூட்டி, கொலைகள் மூலம் தீர்வு காணும் மலட்டு அரசியலே எம் மண்ணில் வக்கரித்து கிடக்கின்றது. காட்டுமிராண்டிகளின் கொலைவெறி தேசத்தில், இதுவே மனிதப் பண்பாகி, அதுவே ஒழுக்கமாகி, அதுவே வாழ்வாகிவிட்டது.


கொலைகளுக்கு எதிரான மனித உணர்வுகளைக் கூட, நேர்மையாக வெளிப்படுத்துவது கிடையாது. ஒன்றை மட்டும் சார்பு நிலையில் கண்டிப்பது, மற்றையதை நியாயப்படுத்துவது, இதுவே இன்றைய அறிவுத்துறையின் ஒழுக்கமாகிவிட்டது. சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் இந்த வக்கிரம் ஆதிக்கம் பெற்ற கருத்தாகிவிட்டது. இதையே பத்திரிகைத் துறையும், ஒளி ஒலி ஊடகமும், ஏன் எழுத்து துறையும் கூட ஆக்கிரமித்துள்ளது. நெருப்பு கொம், நிதர்சனம் கொம் முதல், அந்த அரசியல் பின்னணி இசையில் பிழைக்கும் ஓட்டுண்ணி இணையங்கள் அனைத்தும் இந்த அரசியல் ஆபாசத்தில் தான் பூத்துக் குலுங்குகின்றது.


இதையேதான் பேரினவாத அரசும் செய்கின்றது. வாகரை தாக்குதல் பற்றி அரசின் உத்தியோகப+ர்வ தகவல் அப்பட்டமான பொய்களை அடிப்படையாக கொண்டது. ராடார் மூலமும், உளவுத் தகவல் மூலமும் புலிகள் தாக்கும் நிலையைக் கண்டறிந்து, ஓன்றுக்கு இரண்டு முறை பரிசோதித்த பின் தாக்கியதாக கூறுவது அப்பட்டமான ஆபாசமான பொய்யாகும். ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்த தகவலில், உளவுத் தகவல் அங்கே மக்கள் அகதியாக கூடி வாழ்கின்றனர் என்று கூறவில்லையோ? யாரை ஏமாற்றுகின்றீர்கள்.


இது எந்த விதத்திலும் புலிகள் மக்கள் மத்தியில் இருந்து தாக்கமாட்டார்கள் என்று அர்த்தமாகாது. புலிகள் மக்கள் மத்தியில் இருந்து திட்டமிட்டு தாக்குபவர்கள் தான். மலிவான பிரச்சாரத்துக்கும், இலகுவாக மனித உணர்வுகளை விலைபேசி பணம் திரட்டுவதற்கும் இது போன்ற கொலைகள் உதவுவதால், அதைத் திட்டமிட்டு தூண்டக் கூடியவர்கள் தான் புலிகள். கொலைகள் அனைத்தையும் ஆபாசமான பொய்கள் மூலம் நியாயப்படுத்துவது அல்லது மூடிமறைப்பது பொதுவாக அனைத்து தரப்பிலும் அரங்கேறுகின்றது. இப்படி தான் அரசு என்றால், புலிகள் முதல் கருணா தரப்புவரை பொய்களாலும் புரட்டுகளாலும் கொலைகளை நியாயப்படுத்தி, வக்கிரப்படுத்தி, அதை விளம்பரம் செய்து தமக்கு உரமாக்குகின்றனர்.


மக்கள் மீதும், அரசியலில் ஈடுபடுபவர்கள் மீதுமான படுகொலைகள் கொடுக்கும் விளைவு மிகப்பெரிய மனித அவலத்தையே விதைக்கின்றது. விதைவைகள் கொண்ட ஒரு தேசம் உருவாக்கப்படுகின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் தான் நசிந்தவர்கள், நலிந்தவர்கள். ஒவ்வொரு கொலையும் பெண்ணின் வாழ்வையே நாசமாக்கி அவளையே அழிக்கின்றது. இந்தப் பெண்களின் வயிற்றில் பிறந்த குழந்தைகளின் எதிர்காலமோ சூனியமாகின்றது. எமது தமிழ் இனம் எந்தளவுக்கு சீரழிய முடியுமோ, அந்தளவுக்கு கொலைகாரர்களால் சீரழிகப்படுகின்றது. இதைச் செய்பவர்கள், அதை நியாயப்படுத்துபவர்கள், தாம் தான் தமிழ் மக்களின் பாதுகாவலர் என்று தம்மைத் தாம் பீற்றிக்கொள்கின்றனர். அதற்காகவே கொல்கின்றனராம்.


அரசை ஆதரிப்போரும், புலிகளை ஆதரிப்போரும் விதிவிலக்கின்றி கொலைகளை ஆதரித்து ஆபாசமாக கூச்சலிட்டு கூத்தடிக்கின்றனர். ரவிராஜ் ஆக இருக்கலாம், கேதிஸ் ஆக இருக்கலாம் அல்லது வாகரை படுகொலை முதல் கெப்பிற்றிக்கல படுகொலை எல்லாமே காட்டுமிராண்டித்தனத்தையே தெளிவாக பறைசாற்றுகின்றது. கொலையை புலிகள் செய்தது, அரசு செய்தது, கருணா செய்தது என்று பிரித்து பார்த்து கண்டிப்பது, அதை ஆதரிப்பது என்பதற்கு எந்த அரசியல் தர்க்க நியாயவாதமும் கிடையாது.


அரசியல் ரீதியாக முரண்பட்டவர்கள், மாற்று அரசியலைக் கொண்டவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அரசியல் ரீதியாக அணுக மறுக்கின்றனர். இது கொலை செய்கின்ற அலுக்கோசுகளின் நிலையல்ல. மாறாக அரசியல் பேசும் இவர்கள் தமக்கு இடையில் கூட, அடாவடித்தன பேர்வழிகளாக ரவுடிகளாக, கொலையை தூண்டுபவர்களாக, அதற்கு துணை செய்பவர்களாக, அதை நியாயப்படுத்துபவராகவே உள்ளனர்.


பழிக்குப் பழி என்ற குறுகிய குதர்க்க அரசியல் மூலம், சமூகத்தை இழிவாக இழிவாடி இவர்கள் வழிநடத்துகின்றனர். கொலைகள் மூலம், இதுதான் சமூகத்தின் தீர்வு என்று பறைசாற்ற முனைவதை நாம் ஒருநாளும் மன்னிக்கவே முடியாது.


இது போன்ற தொடர் கொலைகளை கடமைக்கு கண்டிப்பது, பிழைப்புக்கு இதை பயன்படுத்த புலம்புவது, சுயநலத்துக்கு பயன்படுத்துவது, குறுகிய அரசியல் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க விபச்சாரம் செய்து, எல்லாம் எம் மத்தியில் இரத்தமும் சதையுமாகவே அரங்கேறுகின்றது. கொலைகளை சார்புத் தன்மையில் விபச்சாரம் செய்து ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற அரசியல் விபச்சாரம் மிக கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றது.


கொலைகளை உணர்வுபூர்வமாக மனித உள்ளடகத்தில் எதிர்கொண்டு, எதிர்த்துப் போராடும் அரசியல் வளமே எம்முன் அவசியமானது. மக்களை சிந்திக்கவும், மனிதத் தன்மையை கற்றுக் கொள்ளும் வழியில் நாம் போராட வேண்டியுள்ளது. மனிதனை மனிதனாக நேசிக்க கற்றுக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் இதற்கு மாற்றுத் தீர்வாகாது.


துப்பாக்கியும் கையுமாக மட்டுமின்றி கழுத்தை வெட்டிச் முண்டத்தை எடுத்துச் செல்லும் வெறிகொண்ட ஒரு கொலைகாரக் கூட்டம், நன்கு பயிற்றப்பட்டு கொலைக்களத்தில் அலுக்கோசுகளாக இறக்கிவிடப்பட்டுள்ளனர். அன்றாடம் அதிர்ச்சியூட்டும் கொலைகள், விதவிதமான கொலைகள் எல்லாம் எமது தமிழினத்தின் விடுதலையின் பெயரில் நடக்கின்றது. இந்தக் கொலைவெறி பிடித்த அலுக்கோசுகள் தான், தமிழ் சமூகத்தின பாதுகாவலராம். ஆளாளுக்கு நியாயம் தர்க்கம். இதுவே எமது தேசிய வரலாறு முழுக்க வக்கிரமடைந்து கிடக்கின்றது. மனித மூளைகளை மலடாக்கி, அவர்களை கழுவிலேற்றுகின்ற இந்த அலுக்கோசுகளின் உலகத்தில், மனித சிந்தனையை துளிர்விட வைப்பதன் மூலம் தான், நாம் மனிதனாக மீண்டும் மீள முடியும். இதன் மூலம் தான் நாம் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள முடியும். இரத்தமும் சதையுமாகிப் போன எமது சமுதாயத்தில், இதைவிட இதற்கு மாற்று எதுவும் கிடையாது. இது மட்டும் தான் மனிதனைச் சார்ந்ததும், நடைமுறையில் செயல்பூர்வமானதுமாகும்.

Thursday, November 9, 2006

விவசாயிகளை வேட்டையாடும் புதிய கத்துவட்டிக் கும்பல்

சுய உதவிக் குழுக்கள் :
விவசாயிகளை வேட்டையாடும் புதிய கத்துவட்டிக் கும்பல்


காராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில் கடன்சுமை தாளாமல் பருத்தி விவசாயிகள் அன்றாடம் தற்கொலை செய்து கொண்டு வரும் கொடுமை தொடரும் அதேவேளையில், அண்மைக்காலமாக ஆந்திராவிலும் இதேபோல கடன்சுமை தாளாமல் விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு வருகிறார்கள். கடந்த 3 மாதங்களில் மட்டும் குண்டூர், பிரகாசம், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் சுமையாலும் அநியாய வட்டிக் கொடுமையாலும் மாண்டு போயுள்ளார்கள். இது இன்னும் பல மாவட்டங்களுக்குப் பரவுமோ என்ற மரணபயம் ஆந்திரத்தைப் பிடித்தாட்டுகிறது.


தாராளமயத்தால் வாழ்விழந்த விதர்பா விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி வட்டிக் கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆந்திர விவசாயிகளோ, சுயஉதவிக் குழுக்கள் மூலம் நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் வாங்கி வட்டிக் கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். விதர்பாவில் கந்து வட்டிக்காரர்களின் கொள்ளை. ஆந்திராவில் தன்னார்வத் "தொண்டு' நிறுவனங்களின் கொள்ளை. பலியாவதோ ஏழைநடுத்தர விவசாயிகள்!


இந்தியாவிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவனங்களில் ஆகப் பெரும்பாலானவை தன்னார்வக் குழுக்களால் (NGOs) நடத்தப்படுகின்றன. பாதுகாப்புத் தொகையாக கணிசமான சேமிப்பைக் கொண்டுள்ள சுயஉதவிக் குழுக்களைக் கண்டறிந்து, அக்குழுக்களுக்கு வங்கிகளிலிருந்து இத்தன்னார்வக் குழுக்கள் கடன் வாங்கித் தருகின்றன. வங்கிகளுக்கும் சுயஉதவிக் குழுக்களுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் விவகாரங்களை ஒருங்கிணைத்து முறைப்படுத்தும் கங்காணி வேலையையும் இத்தன்னார்வக் குழுக்கள் செய்கின்றன.


சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கிடைக்கும் கடனுதவியை நுண்கடன் என்றழைக்கின்றனர். இக்கடனை வைத்து ஊறுகாய், அப்பளம், மசாலா பொடி, சோப்பு, கைவினைப் பொருட்கள், வீட்டு உள் அலங்கார பொருட்கள், ஊதுபத்தி, கவரிங் நகைகள் முதலான தொழில்களில் சுய உதவிக் குழுக்கள் முதலீடு செய்கின்றன. இத்தகைய தொழில்களே நுண்தொழில்கள் எனப்படுகிறது. இதுதவிர மலர்ப்பண்ணை, மூலிகைப் பண்ணை, கால்நடை வளர்ப்பு முதலான சற்று விரிவான அளவிலும் இக்கடன்கள் சுய உதவிக் குழுக்களால் முதலீடு செய்யப்படுகின்றன.


""போண்டியாகிப் போன விவசாயிகள், சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள ஏழைஎளிய மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் இத்தகைய நுண்கடன் நுண்தொழில் மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும்; சொந்தக் காலில் நிற்க முடியும். வறுமையை விரட்ட முடியும்; எழுத்தறிவின்மை, பெண்ணடிமை, சாதிய ஒடுக்குமுறை முதலான சமூக பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும். தன்னம்பிக்கை, தொழில் முனைப்பு, கூட்டுறவு, நிர்வாகத் திறன் முதலானவை ஒடுக்கப்பட்ட மக்களிடம் வளரும்'' என்றெல்லாம் சர்வரோக நிவாரணியாக இந்த நுண்கடன் நுண்தொழிலை ஆட்சியாளர்களும் தன்னார்வக் குழுக்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தன. ஐ.நா. மன்றத்தின் ஆலோசனைப்படி 2005ஆம் ஆண்டை நுண்கடன் ஆண்டாக அறிவித்து நாடெங்கும் பல கருத்தரங்குகளும் விழாக்களும் கொண்டாடப்பட்டன. கடந்த 2005ஆம் ஆண்டில் நுண்கடன் திட்டத்துக்காக நிதியமைச்சரால் வளர்ச்சி நிதியும் சிறப்புக் கமிட்டிகளும் அமைக்கப்பட்டன.


அத்தனையும் மிகப் பெரிய மோசடி, ஏழை விவசாயிகளைக் கொள்ளையிடுவதற்கான இன்னுமொரு ஏகாதிபத்திய சதி என்பதை ஆந்திர விவசாயிகளின் சாவுகள் மீண்டும் நிரூபித்துக் காட்டி விட்டன. சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினராகச் சேர்ந்து நுண்கடன் பெற்ற விவசாயிகள், அநியாய வட்டியால் அவதிப்பட்டு, அவமானப்பட்டு, விரக்தியுற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். நுண்கடன் மூலம் வறுமையிலிருந்து விடுபடலாம் என்ற தன்னார்வக் குழுக்களின் வஞ்சக வார்த்தைகளை நம்பி ஏமாந்த விவசாயிகள், மேலும் வறுமைக்கும் கடன்சுமைக்கும் தள்ளப்பட்டு வாழ்விழந்து நிற்கிறார்கள்.


தன்னார்வக் குழுக்களின் நுண்நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் 8.5 முதல் 15 சதவீத வட்டிக்குக் கடன் கொடுக்கின்றன. நுண்நிதி நிறுவனங்களோ இக்கடனை வாங்கி 20 முதல் 36 சதவீத வட்டிக்கு சுயஉதவிக் குழுக்களுக்குக் கொடுக்கின்றன. சுயஉதவிக் குழுக்களோ, மேலும் கணிசமான வட்டி வைத்து தமது குழு உறுப்பினர்களுக்குக் கடனாகக் கொடுக்கின்றன. வங்கிகளிடமிருந்து புதிய கடன் வாங்க வேண்டுமானால், வாங்கிய கடனை இச்சுய உதவிக் குழுக்கள் முறையாக வட்டியுடன் திருப்பி அடைக்க வேண்டும். இதனால் கடன் வாங்கிய உறுப்பினர்களைக் கண்காணிப்பதும், கடன் தவணையை வட்டியுடன் முறையாகச் செலுத்த நிர்பந்திப்பதுமாக சுயஉதவிக் குழுக்கள் மாறி விட்டன. கடனை அடைக்கத் தவறிய உறுப்பினர்களின் வீட்டிலுள்ள பொருட்களை ஜப்தி செய்யும் கொள்ளையர்களாக தன்னார்வக் குழுக்கள் வளர்ந்து விட்டன.


இத்தன்னார்வக் குழுக்கள், சுயஉதவிக் குழுக்கள் மூலம் கறாராக வட்டியை வசூலித்து முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதால், வங்கிகளுக்கு உத்தரவாதமான இலாபம் கிடைக்கிறது. வங்கிகள் தரும் இதர கிராமப்புற கடன்களைவிட, நுண்கடன் மூலம் கூடுதலாக இலாபமும் முறையாக கடன் திருப்பிச் செலுத்தப்படுவதும் நடப்பதால், அரசு வங்கிகள் மட்டுமின்றி பன்னாட்டு ஏகபோக வங்கிகளும் நிதிநிறுவனங்களும் கிராமப்புற ஏழைகளைக் கொள்ளையிட களத்தில் குதித்துள்ளன. 1992ல் ஊரக மற்றும் விவசாய வளர்ச்சி வங்கி ஆதரவுடன் 225 சுய உதவிக் குழுக்களுடன் தொடங்கப்பட்ட நுண்கடன் நுண்தொழில் திட்டம் இன்று பூதாகரமாக விரிவடைந்துள்ளது. ஏறத்தாழ ரூ. 50,000 கோடி அளவுக்குப் புரளும் இந்திய நுண்கடன் நுண்தொழில் எனப்படும் கந்துவட்டி தொழிலில், நூற்றுக்கணக்கான வங்கிகளும் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.


உள்ளூர் அளவில் ஆதிக்கம் செலுத்தும் கந்துவட்டிக்காரர்கள், நிலப்பிரபுக்களை போலவே, அதே தன்மையுடன் புதிய வடிவில் கிராமப்புற ஏழை மக்களைச் சுரண்டும் புதிய கொள்ளைக் கூட்டமாக வங்கிகளும், நுண்நிதி நிறுவனங்களும் தன்னார்வக் குழுக்களும் புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளன. 5 வட்டிக்கும் 10 வட்டிக்கும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் வாங்கி, வட்டிக்கு வட்டி பெருகி அவமானத்துக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் ஆளாகி அற்ப உடமைகளும் ஜப்தி செய்யப்பட்டு வாழ வழியின்றிப் போகும் விவசாயிகள், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தன்னார்வக் குழுக்களை நம்பி மோசம் போன ஆந்திர விவசாயிகள், அடுத்தடுத்து நடக்கும் தற்கொலைச் சாவுகளுக்குப் பிறகு மெதுவாக விழிப்புற்று, மாண்டுபோன விவசாயிகளின் சடலங்களோடு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் கோபத்தையும் போராட்டங்களையும் கண்டு பீதியடைந்துள்ள ஆந்திர அரசு, இரு பெரும் நுண்கடன் நிறுவனங்களின் 50 கிளைகளை உடனடியாக மூடுமாறும், கடன் "சேவை'யை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ""நுண்கடன் நிறுவனங்கள் கந்துவட்டிக்காரர்களைவிட மிக மோசமாக நடந்து கொள்கின்றன. 5060 சதவீத வட்டி வாங்கி ஏழைகளைக் கொள்ளையடிக்கின்றன'' என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைப் பற்றி விசாரிக்கத் தனிச்சிறப்பான விசாரணைக் கமிஷனையும் அவர் நியமித்துள்ளார்.


ஆனால், ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்டு சர்வகட்சி ஆட்சியாளர்களின் ஆதரவோடு நடைமுறைப்படுத்தப்படுவதுதான் நுண்கடன் திட்டம். அதற்காகவே ஆந்திராவில் பல லட்சக்கணக்கான சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் செல்வாக்கைக் கொண்டு இக்குழுக்களுக்கு நுண்கடன் வழங்கி, அவற்றை எல்லா கட்சிகளும் ஓட்டு வங்கிகளாக மாற்றிக் கொண்டு ஆதாயமடைந்தன. நுண்கடன் நிறுவனங்களின் அநியாய வட்டிக் கொள்ளையையும் சட்டவிரோத கொடுஞ்செயல்களையும் வாய்மூடி அங்கீகரித்து வந்தன. இப்போது நிலைமை விபரீதமானதும், விவசாயிகளின் காவலனாகக் காட்டிக் கொண்டு ஒப்பாரி வைக்கின்றன. இவ்வளவு சாவுகளுக்குப் பின்னரும் நுண்நிதி நிறுவனங்கள் எவ்வளவு வட்டிக்கு கடன் தரவேண்டும் என்பதற்கான வரைமுறையைக் கூட ஆட்சியாளர்கள் அறிவிக்கவில்லை. விவசாயிகளைக் கொள்ளையடித்து தற்கொலைக்குத் தள்ளிய கொலைகார தன்னார்வக் குழுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.


ஆந்திராவுக்கு அடுத்தபடியாக, அதிகஅளவில் சுயஉதவிக் குழுக்களைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம்தான். ஆந்திராவைத் தொடர்ந்து தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நடக்கும் முன்னே, வஞ்சக வலை விரிக்கும் தன்னார்வக் குழுக்களையும் நுண்கடன் நுண்தொழில் என்ற பெயரில் தொடரும் கந்துவட்டிக் கொள்ளையையும் உடனடியாக உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் இன்னும் விரைவாகச் செயல்பட்டு, தமிழகம் இன்னுமொரு மயானபூமியாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.


பாலன்

Tuesday, November 7, 2006

மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்

மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்

பி.இரயாகரன்
06.11.2006


குற்றவாளிகளும், கிரிமினல்களும், கொள்கைக்காரர்களும் கூட்டாக கொள்ளையடிக்க நடத்திய நாடகம் தான், சதாம்குசைன் மீதான நீதி விசாரணை. அமெரிக்காவின் பாசிச கேலிக் கூத்தே, சதாமின் மீதான மரணதண்டனை. முன்கூட்டியே தண்டனை தீர்மானிக்கப்பட்டு, அமெரிக்காவின் தேர்தல் வெற்றிகளை அடிப்படையாக கொண்டு தீர்ப்புகள் வெளிவருகின்றது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பாளன் நடத்துகின்ற தொடர் கொலைவெறியாட்டத்தில், சதாமின் உயிரும் அடங்குகின்றது. கடந்த மூன்று வருடத்தில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மரணத்துக்கு காரணமான ஆக்கிரமிப்பாளன் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் உரிய தண்டனையைத் தான், சதாமுக்கு வழங்கப்படுகின்றது. ஈராக் எண்ணை வயல்களை சூறையாடும் ஆக்கிரமிப்பாளனின் கொலைவெறியாட்டம், சதாமின் மீதாக பாய்கின்றது. அப்பட்டமான ஒரு படுகொலை தீர்ப்பாகின்றது.


கூலிக்கு மாரடிக்கும் கைக்கூலி பொம்மை நீதிமன்றங்களில், சர்வதேச நீதிக்கு புறம்பான வகையில் தான் சதாம் விசாரணை செய்யப்பட்டார். ஏகாதிபத்தியம் தான் உருவாக்கிய சர்வதேச நீதிமன்றத்தில் கூட, சதாம்குசனை விசாரி;க்க மறுத்தது. நீதிக்கு புறம்பான ஒரு சதியை நீதியாக நடத்தியது. கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் நீதிபதியாக இருக்கவே, இந்தக் கேலிக் கூத்து அரங்கேறியது.


சதாம்குசைனை ஓரு சர்வாதிகாரியாக, மனித விரோதியாக ஈராக்கில் ஆட்சியில் ஏற்றியதே இந்த அமெரிக்கா தான். 10 இலட்சம் பேரைக் கொன்ற ஈரான் யுத்தம் முதல் அனைத்தையும் வழிநடத்தியது இந்த அமெரிக்கா தான். இரசாயன ஆயுதங்களையும், அழிவுகரமான ஆயுதங்களையும் அள்ளியள்ளி வழங்கி, கொலையெறியாட்டத்தை ஊக்குவித்து நடத்துவித்ததும் இந்த அமெரிக்கா தான். மிகப்பெரிய மனிதப்படுகொலைகளை சதாம் நடத்திய போது, அதை உலகுக்கு மூடிமறைத்து பாதுகாத்ததும் அமெரிக்கா தான்;.


குற்றவாளிகள் ஜனநாயக வேஷம் போட்டு படுகொலைகளை ஈராக்கில் நடத்துகின்றனர். ஈராக்கில் கற்பழிப்பு முதல் படுகொலைகள் வரை நடத்தும் அமெரிக்கா எந்த நீதி மன்றத்தின் முன்னாலும் நிறுத்தப்படுவதில்லை. இன்றைய பொம்மை ஆட்சி நடத்தும் கொலைகள் அனைத்தும் ஜனநாயக கொலைகளாக சித்தரிக்கப்படுகின்றது.


ஈராக்கில் அமெரிக்கா பிரிட்டிஸ் எண்ணைக் கம்பனிகள், அந்த மக்களின் தேசிய வளத்தை சூறையாட நடத்தும் பாசிச நாடகங்களே இவை. இந்த எண்ணைக் கம்பனி முதலாளிகளும், ஆயுதக் கம்பனி முதலாளிகளும் தான், அமெரிக்காவின் அதிகாரத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள். அவர்கள் தமது நலன் சார்ந்து ஈராக்கை ஆக்கிரமித்து யுத்தம் செய்கின்றனர். இதில் சதாம் மீதான விசாரணை ஒரு கேலிக் கூத்தாகின்றது.


சதாம் மீதான விசாரணை மூலம் சதாமின் குற்றங்கள் மூடிமறைக்கப்படுகின்றது. சதாம் தியாகியாகி தண்டனையில் இருந்து தப்பிச் செல்லமுடிகின்றது. சதாமின் குற்றத்தினை தூண்டி, அதற்கு துணையான பிரதான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றனர். சதாமுக்கு மரணதண்டனையை வழங்கி, குற்றத்தை எண்ணி வருந்துவதற்குரிய அனைத்துச் சூழலையும் இல்லாததாக்கிவிடுகின்றனர். மக்கள் நீதிமன்றங்கள் மட்டும் தான், உண்மையான நேர்மையான விசாரணையை நடத்தி தண்டனையையும் வழங்கும். இது அல்லாத அனைத்தும் அமெரிக்காவின் எண்ணைக் கொள்ளைக்கான கேலிக் கூத்துதான்.


ஈராக்கில் என்ன நடக்கின்றது? அமெரிக்காவின் ஜனநாயகம் அங்கே எப்படி செயற்படுகின்றது. இதைத் தெரிந்து கொள்ள உள்ளே செல்லுங்கள்.


1. வியட்நாம் மைலாய்! ஈராக்கில் ஹதிதா! அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்


http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2006/july_2006/bam_july_2006_01.html


2 .வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்


http://www.tamilcircle.net/Bamini/puthiyakalacharam/2005/dec_2005/dec_05_2005.htm


3. அமெரிக்காவின் போர் குற்றங்கள:; அன்று வியட்நாம் இன்று ஈராக்


http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2005/dec_2005/Dec_17_05.htm


4.அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு தாயின் போராட்டம்!


http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2005/sept_2005/sept_01.htm


5. அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் அல்லற்படும் ஈராக்கிய மக்கள்


http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2005/june_2005/puthi_13.htm


6.அபு கிரைப் சித்திரவதையின் நோக்கம்


http://tamilcircle.net/puthiyakalasaram_usa/abu_grib.htm


http://tamilcircle.net/iraq/iraq_photos.htm



































Sunday, November 5, 2006

நீதி கிடைக்குமா?

மாலேகான் குண்டு வெடிப்பு :

நிவாரணம் கிடைக்கலாம், நீதி கிடைக்குமா?


காராஷ்ரா மாநிலத்திலுள்ள மாலேகான் நகரில், செப்டம்பர் 8 அன்று அடுத்தடுத்து நடந்த நான்கு குண்டு வெடிப்புகளில் 31 பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். வெள்ளிக்கிழமை தொழுகை முடியும் நேரத்தில், குறிப்பாக, முசுலீம்கள் இறந்து போன தங்களின் உறவினர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நாளில், ஹமீதியா மசூதி, படா காபரிஸ்தான் (முசுலீம்களின் மயானம்) ஆகிய இடங்களில் இந்தக் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதால், இதனை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையாகவே கருத முடியும்.


ஏற்கெனவே, முசுலீம் பகுதி, இந்து பகுதி என மதரீதியாகப் பிளவுண்டு கிடக்கும் மாலேகான் நகரில் நடந்துள்ள இந்தக் குண்டு வெடிப்புகள், மீண்டுமொரு மதக் கலவரத்தைத் தூண்டிவிடுமோ என்ற பீதி மகாராஷ்டிரா மாநிலத்தையே ஆட்டிப் படைத்தது. அந்நகரைச் சேர்ந்த முசுலீம் மதப் பெரியோர்களின் முன்முயற்சியால் கலவரம் மூளுவது தடுக்கப்பட்டுவிட்டபோதிலும், அந்தப் பீதி மட்டும் இன்றும் அந்த நகரைவிட்டு விலகி விடவில்லை.


குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலையில் அரசு மருத்துவமனை இருந்ததால், படுகாயமடைந்த பலரை மாலேகானில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள துலியா நகருக்குத் தூக்கிக் கொண்டு ஓட நேர்ந்தது. குண்டு வெடிப்பை விட, அதிகார வர்க்கத்தின் இந்த அலட்சியம்தான் மாலேகான் முசுலீம்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. சோனியா தலைமையில் மாலேகானுக்கு வந்த காங். கும்பல் நட்டஈட்டை வீசியெறிந்து, அவர்களின் கோபத்தைத் தணித்துவிட முயன்றது. ஆனால், பாதிக்கப்பட்ட பலரும் நட்டஈட்டை வாங்க மறுத்து, ஆட்சியாளர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர்.


இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை என்றும்; இந்தக் குண்டு வெடிப்பை யார் / எந்த அமைப்பு செய்தது என்பது பற்றி சிறிய தடயம் கூட போலீசாருக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


அதேசமயம் முசுலீம்களைக் குறி வைத்து இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றிருப்பதால், இதற்குப் பின்னணியில் இந்து தீவிரவாத அமைப்புகள் இருக்கலாம் என்ற ஊகம் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. ஆனால், மகாராஷ்டிரா போலீசோ, ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளை இயக்கும் அளவிற்கு இந்துமத தீவிரவாத அமைப்புகள் திறன் பெற்றவை அல்ல என நற்சான்றிதழ் வழங்கி, அந்தத் திசையில் விசாரணை நடத்தக் கூட மறுத்து வருகிறது. ஆனால், இந்த ஊகத்தை முன்வைக்கும் பத்திரிகையாளர்கள் கூட, (தி ஹிந்து, 9.9.06,

பக். 13) நந்தேடில் நடந்த குண்டு வெடிப்பையும்; ஜல்னா, பர்பானி ஆகிய சிறு நகரங்களில் மசூதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.


மகாராஷ்டிராவில் நந்தேட் மாவட்டத்திலுள்ள தரோடா கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த ராஜ்கோண்ட்வர் என்பவரது வீட்டில் கடந்த ஏப்ரல் 6 அன்று நடந்த குண்டு வெடிப்பில் ஹிமான்ஷû பான்ஸே, நரேஷ் ராஜ்கோண்ட்வர் என்ற இரு இளைஞர்கள் குண்டு வெடித்த இடத்திலேயே உடல் சிதறி இறந்து போனார்கள். யோகேஷ் தேஷ்பாண்டே, மாருதி வாக், குருராஜ் துப்தேவர் என்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். குண்டு வெடித்த சத்தம் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவிற்குக் கேட்டது.


ஆனால், நந்தேட் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரோ, நடந்தது குண்டு வெடிப்பு அல்ல என்றும்; அந்த வீட்டில் இருந்த பட்டாசுகள் எதிர்பாரதவிதமாக வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட விபத்து என்றும் பூசி மெழுகினார். குண்டு வெடித்த மறுநாள் போலீசாரோடு பொதுமக்களும், பத்திரிகையாளர்களும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றாகச் சென்று, குண்டு வெடிப்பு நடந்த வீட்டைச் சோதனையிட்டபொழுது, ஒரு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பிறகுதான், மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு ஐ.ஜி. அந்த வீட்டில் இருந்த இளைஞர்கள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயாரிக்க முயன்றதை ஒப்புக் கொண்டார்.


காயம் அடைந்தவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பது நீண்ட நாட்களாக நடந்து வருவதும்; பர்பானி, புர்னா, ஜல்னா ஆகிய ஊர்களில் மசூதிகளின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குத் தொடர்பிருப்பதும் தெரிய வந்தது. மேலும், இறந்து போன இளைஞர்களும்; காயம் அடைந்தவர்களும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விசுவ இந்து பரிசத்தின் அமைப்புகளின் தீவிர உறுப்பினர்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைமையே ஒப்புக் கொண்டது.


ஆனால், மகாராஷ்டிரா போலீசோ இக்குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ள இந்து பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தாமல், அக்குண்டு வெடிப்பை, உள்ளூர் கிரிமினல் சம்பவமாகச் சித்தரித்து மூடிவிட்டது. குறிப்பாக, இக்குண்டு வெடிப்பிற்கும், சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை மகாராஷ்டிரா போலீசார் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளவில்லை.


முசுலீம் தீவிரவாதிகள் மீது பொடாபோன்ற பாசிசச் சட்டங்களை ஏவிவிடும் ஆளுங்கும்பல், இக்குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது சாதாரண கிரிமினல் சட்டங்களின் கீழ் தான் வழக்குத் தொடர்ந்தது. குறிப்பாக, கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகள் மீது, மகாராஷ்டிரா மாஃபியா நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரசு கூட்டணி கண்டு கொள்ளவேயில்லை. தனது ""இந்து'' ஓட்டு வங்கியை, பா.ஜ.க. சிவசேனா கும்பல் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவே, காங்கிரசு கூட்டணி அரசு இந்து பயங்கரவாதிகளிடம் மென்மையாக நடந்து கொண்டது.

முசுலீம் தீவிரவாதம் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் பிரவீண் சுவாமி என்ற பத்திரிகையாளர், ""நந்தேட், பர்பானி, ஜல்னா ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளைப் பார்க்கும்பொழுது, இந்துமதத் தீவிரவாத அமைப்புகளின் குண்டு தயாரிக்கும் திறன் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகிறார். ஆனால், மகாராஷ்டிர மாநில அரசின் தீவிரவாத எதிர்ப்பு போலீசு பிரிவோ, மாலேகானைச் சேர்ந்த 20 ""இந்து'' இளைஞர்களைப் பிடித்துப் போய், ஒப்புக்காக ஒரு விசாரணை நடத்திவிட்டு, விடுவித்து விட்டது.


மும்பய் ரயில் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னே, இந்திய முசுலீம் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த முன் னாள் ஊழியர்களைக் கூட விட்டு வைக்காமல், கைது செய்து விசாரணை நடத்திய மகாராஷ்டிரா போலீசார் மாலேகான் குண்டு வெடிப்பில், எந்தவொரு இந்துமத பயங்கரவாதியின் மீதும் கைகூட வைக்கவில்லை.

இது ஒருபுறமிருக்க, மும்பய் ரயில்களில் வெடித்த குண்டுகளும் மாலேகானில் வெடித்த குண்டுகளும் ஒரே மாதிரியானவை; எனவே, முசுலீம் தீவிரவாத அமைப்புகள் கூட, மதக் கலவரத்தைத் தூண்டிவிடும் எண்ணத்தோடு, இந்தக் குண்டு வெடிப்பை நடத்தியிருக்கக் கூடும் என்ற ஆதாரமற்ற ஊகத்தை பத்திரிகைகள் மூலம் போலீசு பரப்பி வருகிறது.


இப்படி எதிரும், புதிருமான சந்தேகங்களை, ஊகங்களை முறையாக விசாரிக்காமல் இழுத்தடித்தால், மாலேகான் நகரைச் சேர்ந்த இந்துக்களுக்கும், முசுலீம்களுக்கும் இடையே நிலவி வரும் பகையும், வெறுப்பும் அதிகரிக்கத்தான் செய்யும்; அந்நகரைப் பிடித்தாட்டும் மதக்கலவர பீதி அணைந்துவிடாமல் ஊதிவிடப்படும். ஆர்.எஸ்.எஸ். இந்து பயங்கரவாதிகள், முசுலீம் தீவிரவாதிகள் மட்டுமின்றி, "மதச்சார்பற்ற' காங்கிரசும் இந்தப் பிளவைத்தான் விரும்புகிறது.


தனபால்

Saturday, November 4, 2006

எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!

வந்தே மாதரம்:
எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!


க மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது ""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.


மைய அமைச்சர் அர்ஜுன் சிங், "வந்தே மாதரம்' பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக "வந்தே மாதரம்' பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது. குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.


இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், ""சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.


"திராவிட நாடு' கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், "பாட வேண்டியது கட்டாயமில்லை' என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் ""கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது'' என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசிய சாக்கடையில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான்.


இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், ""அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை'' என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர்.


முதலில் இந்த ஆண்டு, வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் "போர் பீதி'யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.

கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் ""வீடியோ சிடி''களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. "முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்' என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே "கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்' என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக "வந்தே மாதர' விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா "வந்தே மாதம்' பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி ""சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்'' என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.


வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?


1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.

1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.


""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.


""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.


முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?


வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.

இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.


இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.


1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.


நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.


நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.


வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.


போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?


ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, "வந்தே மாதரம்' பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.


இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் ""ஜெய்ஹிந்த்'' மற்றும் பகத்சிங்கின் ""இன்குலாப் ஜிந்தாபாத்'' 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே "இன்குலாப் ஜிந்தாபாத்'தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.


""புரட்சி ஓங்குக!'' (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.


அன்பு

Friday, November 3, 2006

புலிகளின் கோமாளித்தனமே மேடையேறியது

பேரம் பேசும் எந்த ஆற்றலுமற்ற புலிகளின் கோமாளித்தனமே மேடையேறியது

பி.இரயாகரன்
03.11.2006


ரசியல் தீர்வையும் உடனடிப் பிரச்னையையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கே குழிவெட்டியவர்கள், இதன் மூலம் தமிழ் மக்களின் எதிரிகள் என்பதையே தமது சொந்த அணுகுமுறை மூலம் மறுபடியும் புலிகள் உலகறிய நிறுவிக் காட்டினர்.


இப்படி ஆடிக்காட்டும் கூத்துத்தான் அண்மைய அரசியல் பேச்சுவார்த்தை. குறைந்தபட்சம் பேரம் பேசும் எந்தத் தகுதியுமற்ற, ஒற்றைப் பரிணாமத்தின் மலட்டுத்தனத்தை உலகறிய மறுபடியும் நிறுவிக்காட்டினர். மாபியாத்தனமும் பாசிசமும் வாழ்வியலாக, அதை மேலும் விரிந்த தளத்தில் நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தையையே தமது கருவியாக்க முனைந்தனர். முன்கூட்டிய நிபந்தனைகளுடன் நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை நடத்தி, தமது சொந்த மக்கள் விரோதத்துடன் கூடிய கோமாளித்தனத்தை நிறுவிக்காட்டினர். தமிழ் மக்களின் வாழ்வியல் அவலங்கள் மீது, தமது இழிந்த குரங்குப் புத்தியைக் காட்டி நிற்கும் புலிகள், தமிழ் மக்களின் மகிழ்ச்சிக்கு எதையும் தமது சொந்த பாசிச வரலாற்றில் பெற்றுத் தரப்போவதில்லை. அதேபோல் தாங்களும் எதையும் உருவாக்கப்போவதில்லை.


பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதையும் தராது என்று எப்படி சொல்லுகின்றோமோ, அதுவே தான் புலிகளுக்கும் பொருந்தும். முதலில் தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சனை மீதான தீர்வு என்பதுதான், புலிகள் எல்லாப் பேச்சு வார்த்தையிலும் முன்வைக்கும் முதல் நிபந்தனையாகும். இப்படி கடந்தகால முழுப் பேச்சு வார்த்தையிலும் தமது சொந்த சுயநலம் மூலம் பேரினவாதத்தையே பாதுகாத்தனர். புலிகள் கடந்காலங்களில் நடத்திய தொடர்ச்சியான எல்லாப் பேச்சுவார்த்தையிலும் புலிகளின் சுயநல நோக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவை அமுல் செய்யப்பட்ட போதும், அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியது கிடையாது. அதை புலிகளும் விரும்பவில்லை, பேரினவாதமும் விரும்பவில்லை. தீர்வுக்கு முயலுதல் என்ற நோக்கம் புலிகளுக்கு கிடையாது என்பதே உண்மை. உண்மையில் தமது சொந்த நலன்களை அடைகின்றதும், மீளவும் வளங்களைத் திரட்டிக்கொண்டு யுத்தத்துக்கு வலிந்து செல்வதுமே அவர்களின் பேச்சுவார்த்தை அரசியலாகும.


இந்த பேச்சு வார்த்தையில் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள். இந்தக் கேள்வி புலிகளைத் தவிர அனைவருக்கும் வெளிப்படையானது. அதே போல் பதிலும் வெளிப்படையானது. மக்கள் விரும்பியது யுத்தமற்ற அமைதியையும் சமாதானத்தையும், அதற்கான ஒரு தீர்வையுமே. இதை யாரும் மறுதலிக்க முடியாது. மக்களின் விருப்பம் இது தான். இதைத் தவிர வேறு எதுவுமல்ல. இதை மறுத்துத் தான், புலிகள் தமது கோமாளித்தனத்தை மக்களுக்கு நாடகமாக ஆடிக்காட்டினர். யாருமே மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம். பேரினவாதம் இதை அரசியல் ரீதியாக முன்னிலைப்படுத்தியுள்ளது. அரசு கூறும் தீர்வுகான முயற்சியை மக்கள் நம்புகின்றனர். தமிழ்செல்வனே பி.பி.சி பேட்டியில் இதையொட்டி தடுமாறுகின்றார். இப்படி மக்களின் விருப்புக்கு எதிராக, யுத்தம் தான் தீர்வு என்று புலிகள் உணர்த்தி நிற்கின்றனர்.


யுத்தம் அவசியமா? இல்லையா? என்பதை புலிகள் தீர்மானிக்க முடியாது?. அந்த உரிமை அவர்களுக்கு கிடையாது. மக்கள் தான் எந்த வழியூடாக, எப்படி நாம் போராடுவது என்பதை தீர்மானிக்க வேண்டும். எதை எப்படி அடையவேண்டும் என்று தீர்மானிக்கின்ற உரிமை மக்களுக்குத்தான் உண்டு. இதை புலிகள் என்றும் அங்கீகரித்தது கிடையாது. மக்களை கேவலமாக நடத்தும் புலிகள், தமிழ்மக்களுக்கு ஜனநாயக உரிமையே கிடையாது என்கின்றனர். மாறாக மக்களின் பெயரில், மக்களின் மனிதாபிமான பிரச்சனை என்று கூத்தாடுகின்றனர், புலம்புகின்றனர். யுத்தம் சமாதானம் என்ற நீடிப்பில், மக்களின் மரணங்களின் மேல் புலிகள் தாம் வாழவே விரும்புகின்றனர். மக்களின் அதிக மரணம் அதிக செல்வத்தைத் தரும் என்ற இழிநிலைக்கு, தமிழ் இனத்தின் ஏகபிரதிநிதிகள் மிகக் கீழ்த்தரமாகவே தரம்தாழ்ந்து கிடக்கின்றனர்.


புலிகள் தாங்கள் வாழவேண்டும், தங்கள் சந்ததிகள் செழிப்பாகவும் சிறப்பாகவும் யுத்தத்தைப் பயன்படுத்தி வளம்கொழிக்க வாழ வேண்டும். இதுவே புலித் தலைவர்களின் எதார்த்தமான இன்றைய நிலை. தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும், தம்மளவில் சொந்தமாகவே மூன்று கேள்வியை நீங்களே உங்களவில் கூட கேட்டுபார்க்கலாம்.


1. இந்தப் போராட்டம் மூலம் எனக்கு, எனது குடும்பத்துக்கு எந்த வகையில் என்ன நன்மை கிடைத்தது? அல்லது கிடைக்கும்! இதற்கு பதில் இல்லை என்றால்


2. இந்தப் போராட்டம் எனக்கு வெளியில், எனக்குத் தெரிய எனது சமூகத்தில் யாருக்கு எந்த விதத்தில் நன்மையளித்தது? அல்லது நன்மை அளிக்கும்? இதற்கும் பதில் இல்லையென்றால்


3. சரி நாளைக்கு எந்த வகையில் எப்படி எனக்கு அல்லது எனது சமூகத்துக்கு நன்மையாக அமையும்?


மக்களுக்கு எதுவுமில்லை. மக்களிடம் இருப்பதை அழிப்பதும், புடுங்குவதும் தான் புலிப் போராட்டம். மக்கள் அதிகம் செத்தால் புலிக்கு கொண்டாட்டம். நீலிக் கண்ணீh வடித்துக்கொண்டு பணம் திரட்டவும், மலிவு அரசியல் செய்யவும் அதிக தமிழ் மக்களின் மரணங்கள் புலிகளின் அன்றாட எதிர்பார்ப்பாகிவிட்டது.


இந்த மூன்று கேள்விகளுக்கும் பின்னால் சிலர் நன்மையை அடைந்துள்ளனர். அவர்கள் புலிகளும், யுத்தத்தைப் பயன்படுத்திய சமூக விரோதக் கும்பலுமே. உதாரணமாக ஒரு மாட்டு வண்டில் வைத்து மண்ணெண்ணை வியாபாரம் செய்த மகேஸ்வரன், இன்று இலங்கையிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரன். இப்படி புலிகள் முதல் பலர் மக்களை கொள்ளையிடNட செழித்துள்ளனர். புலித் தலைவர்களின் குழந்தைகளுக்கு ஊரார் பணத்தில் வெளிநாட்டில் சொகுசான வசதியான கல்வி. சொந்த நாட்டில் தேசியக் கல்வியை மேம்படுத்த ஒரு திட்டம் கிடையாது. அதனால் தமது குழந்தைகளுக்கு மேல்நாட்டுக் கல்வி. சரி எந்த தலைவரின் குழந்தை தமிழீழத்துக்காக மண்ணில் போராடுகின்றது, அதற்காக மரணிக்கின்றது. மக்கள் தமது வாழ்வின் அனைத்துக் கூறையும் இழந்து, இழிந்து வாய்பொத்தி அடிமையாகி அனைத்தையும் இழக்கின்றனர். பெண்கள் தமது தாய்மையை இழந்து நிற்கின்ற சமூக அவலம். இவற்றைத் தவிர வேறு எதையும் புலிகள் மக்களுக்கு தரப்போவதில்லை.


இந்த கொடூரத்தில் இருந்து தப்பிப்பிழைக்கவே மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் மக்கள் எதைத்தான் விரும்புகின்றனர். ஒரு அரசியல் தீர்வையும், அமைதியையும், சமாதானத்தையுமே கோருகின்றனர். மக்கள் தெளிவாகவே யுத்தத்தை நிராகரிக்கின்றார்கள். இதுவே வடக்குகிழக்கு மக்களின் இன்றைய நிலையாகும். மக்களின் இந்த விருப்பத்தையே மறுதலிக்கும் பாசிசப் புலிகள், மக்களின் பெயரில் மனிதாபிமான பிரச்சனைக்கு தீர்வு என்கின்றனர். மனிதாபிமானம் என்ற சொல்லையும் அதன் உள்ளடகத்தையுமே, புலிகள் கற்பழித்து கேவலப்படுத்தி அர்த்தமற்றதாக்கினர். மக்கள் விரும்புவது வேறு, புலிகள் மக்கள் பெயரில் கோருவது வேறு. அனைத்தும் மக்களுக்கு எதிரானதே.


ஏ-9 பாதையைத் திற என்ற புலிகளின் நிபந்தனையும், அதையொட்டிய புலிகளின் ஒரு தலைப்பட்சமான பேச்சுவார்த்தை நகர்வும், பேச்சவார்த்தையை ஒரு தலைப்பட்சமாக மறுதலித்ததன் மூலம், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் அளிக்கப்போவதில்லை. மக்களின் அவலத்தை மேலும் அதிகரிக்க வைப்பதற்கு அப்பால், இது எதையும் சாதிக்கப்போவதில்லை. புலிகளுக்கு பேரம் பேசும் எந்தத் தகுதியும் கிடையாது என்பதையே மீளவும் நிறுவிக்காட்டியுள்ளனர். சொந்த நலன்களை முதன்மைப்படுத்திய புலிகளின் குறுகிய நோக்கங்கள், மக்களை நட்டாற்றில் கைவிட்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர இது வேறு எதுவுமல்ல.


பேரினவாதம் இதை திறக்க மறுப்பது அவர்களின் அரசியல் இராணுவ யுத்த தந்திரமாகவே உள்ளது. இதேபோல் புலிகளின் வரி முதல், புலிகளின் அரசியல் யுத்த தந்திரங்களுக்கு அப்பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. மாபியாத்தனதும், பாசிசமும் ஒருங்கே கொண்ட கோரிக்கையாக இது குறுகிக் கூனிநிற்கின்றது. இராணுவ ரீதியான நகர்வுக்கும், பண அறவீட்டுக்கும் அப்பால், இந்தப் பாதையை மீளத்திறக்கக் கோருவதில், மக்கள் நலன் சார்ந்து எதையும் கோரவில்லை. மக்களை யுத்தத்தின் விளிம்பில் தள்ளி, இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தொடர் தாக்குதலை நடத்தவும், அரசியல் படுகொலைகளை செய்யவும், மக்களின் வாழ்வை பதற்றத்துக்குள் இட்டுச்செல்வதற்காகவும் பாதை திறப்பு புலிகளுக்கு அவசியமாகின்றது. இதுமட்டும் தான் புலிகளின் அரசியல் வங்குரோத்துக்கு ஏற்ற, புனர் நிவாரணமாக அவர்கள் காண்கின்றனர். இதற்கு மாறாக மக்களின் விரும்பம் நேர்மாறானது. மக்கள் உடனடியான அமைதியையும், ஓரு தீர்வு ஊடாக நிரந்தரமான சமாதானத்தையும் விரும்புகின்றனர். இதன் மூலம் அனைத்து கொலைகார கும்பலிடமும் இருந்து ஆயுதங்களைக் களைவதையும், குறைந்தபட்சம் நாட்டில் இயல்பான சட்டதிட்டத்துக்கு உட்பட்ட ஒரு அமைதியான வாழ்வையும் விரும்புகின்றனர். இது புலிகளால் ஏற்றக்கொள்ள முடியாத ஓன்று. இதனால் தான் அவர்கள் அரசியல் தீர்வைப்பற்றி என்றும் பேசியது கிடையாது. தீர்வை நிபந்தனையாக விதித்தது கிடையாது. அவர்களின் வருமானத்தை பற்றியும், தொடர்ந்தும் யுத்த சூழலுக்கு ஏற்ற நிலையையும் மட்டும் முன்னிலைப்படுத்தி எப்போதும் எங்கும் பேசுகின்றனர்.


இப்படி குறுகிய இராணுவ மற்றும் நலன்களை அடிப்படையாக கொண்ட யுத்த வெறியர்களிடையே, ஒரு முக்கியபாதை சிக்கி திணறுகின்றது. மக்களுக்காக இரண்டு பகுதியும் பேசுவதாக கூறுவதே நகைப்புக்குரியது. மனித அவலத்தின் மீது நின்று இவர்கள் ஊளையிடுவதாகும்.


தமிழ் மக்கள் அமைதியையும், சமாதானத்தையும், ஒரு அரசியல் தீர்வையும் விரும்புகின்றார்கள் என்றால், அதை மையமாக வைத்து பேச்சவார்த்தையை நடத்த வேண்டும். இது கூட தெரியாதவர்கள் தான், தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்கின்றனர். பேரம் பேசும் ஆற்றலையே இழந்த மலட்டுப் புலிகள், பேரினவாதத்தின் வால்களில் பிடித்து தொங்கியபடியே மக்களை எட்டி உதைக்கின்றனர்.


இந்த பேச்சுவார்த்தையை தமது பாசிசத்துக்குள் மாபியாத்தனத்துக்குள் வெற்றிகரமாக முறியடித்த புலிகள், மாறாக எதை மக்களுக்கு தரப்போகின்றார்கள். இது சுய புத்தியுள்ள ஒவ்வொருவன் முன்னும், ஒரு சிந்தனைக்குரிய அடிப்படைக் கேள்வியாகும். யுத்தம் மட்டுமே தமது மாற்றுவழியாக அவர்கள் காட்டுகின்றனர். சரி யுத்தம் ஏ-9 பாதையை மீளத் திறக்குமா? எப்படி? யுத்தம் பாதையை மீளத் திறக்காது. இதற்கு புலியின் கிறுக்கு வழியில் குறுக்குத் தீர்வு எதுவும் கிடையாது. இன்று இந்த தடைகளுக்குள்ளும், வன்னிக்கு பேரினவாதிகள் அனுப்பும் உணவும் கூட நிறுத்தப்பட்டுவிடும் என்பதும் உண்மை. வன்னிக்கு தாராளமாக உணவு செல்வதால், அது ஒரு கோரிக்கையாகவே முன்வைக்கவில்லை.


புலிகளில் சிலர் ஊளையிடுவது போல், யாழ்குடாவை புலிகள் பிடித்துவிட்டால் என்னதான் நடக்கும். ஏ-9 பாதை நிரந்தரமாகவே மூடிக்கிடக்கும். அப்போது எப்படி வன்னிக்கும் யாழ்குடாவுக்கும் உணவும், அத்தியாவசிய பொருட்களும் வரும். தேசிய பொருளாதாரத்தை இனிமேல் தான் கட்டப் போவதாகவும், அன்னிய தொழில்நுட்பத்தை புலம்பெயர் தமிழன் திருடித்தரும்படியும், அண்மையில் பொருண்மிய மேம்பாட்டு பொறுப்பாளர் கரிகாலன் புலிகளின் தொலைக்காட்சியல் அலம்பி அழுது வடித்தார்.


பார்க்க : புலிப்பொருளாதாரம் என்பது ஊரையே ஏமாற்றும் கானல் நீர் தான்


புலிகளிடம் மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவையை ப+ர்த்திசெய்யக் கூடிய, தேசிய பொருளாதாரக் கூறும் அதற்கான அரசியல் அடிப்படையும் கூட புலிகளிடம் கிடையாது. வியட்நாம் போராட்டத்தை தலைமை தாங்கிய கோசிமின், அமெரிக்காவை யுத்தத்தில் வென்று நாட்டின் தலைவராக பதவியேற்கச் சென்ற போது, அவர் போட்டிருந்த ஒரேயொரு உடுப்பைத்தவிர வேறு எந்த மாற்று உடுப்பு இருக்கவில்லை. மற்றொருவரிடம் இரவலாக பெற்ற உடுப்பை அணிந்து கொண்டே தமது பதவியை ஏற்றவர். மாவோவின் நிலை கூட இது தான். அவரின் போராட்ட காலத்திய படங்கள் அவரின் எளிமையான வாழ்வைக் காட்டுகின்றது. அவர் அணிந்திருக்கும் உடுப்பு, மாற்று உடுப்பின்றி பினாட்டாகவே காட்சியளிக்கின்றது. அந்தளவுக்கு மனவலிமையுடன் மக்களின் அன்றாட எளிய வாழ்க்கையையும், தேசிய பொருளாதாரத்தையும் முதன்மைப்படுத்தி, மக்களின் வாழ்வுடன் ஓன்று கலந்து நின்ற அரசியல் வலிமையை வரலாறு எடுத்துக்காட்டுகின்றது. மாவோ, ஸ்ராலின் ஆட்சிக்கு வந்த பின்பு, யுத்த முனையில் தமது சொந்த குழந்தைகளை யுத்தத்தில் இழந்தவர்கள். அந்தளவுக்கு சொந்த மகனைக் கூட, ஒரு சாதாரணமான மக்களாக, வாழ்வில் அனைத்து கூறுகளுடனும் தான் வாழ வைத்தவர்கள். எந்த சலுகையையும் மக்களிடம் இருந்து வேறுபடுத்தி தனித்துவமாக தனக்கோ, தமது குடும்பத்துக்கோ ஏற்படுத்தியவர்கள் அல்ல. மக்கள் போராட்டத்தில் இது ஒரு அங்கமாக இருந்தது. ஆனால் புலிகள் ஆடம்பரமும், அவர்களின் குடும்பத்தின் சிறப்பு வாழ்க்கையும், மேற்கத்தைய வாழ்க்கையும் கல்வியும், சலுகைகளும், புலிகளின் எடுபிடிகளின் வாழ்க்கை முறையுயே மக்களின் வாழ்வை அழிப்பதாகவே உள்ளது. இதற்குள் தேசிய வாழ்க்கையை, தேசிய பொருளாதாரத்தை நினைத்தே பார்க்கமுடியாது.


இவர்களால் சொந்த தேசியவளத்தை இனம் காணமுடியாது. அவர்களின் வாழ்க்கை முறை அதற்கு எதிரானது. பரந்த வளம்கொண்ட எமது நிலம், காய்ந்து போன தேசிய மறுப்பாளர்களின் குறுகிய சுயநலன் சார்ந்த போர்வெறிக்குள் வரண்டு கிடக்கின்றது. மக்களை நாயிலும் கீழாக, அடிமைகளாக, தாம் விரும்பியவாறு ஏற்றியிறக்குவதே புலிகளின் மலட்டு அரசியல். அந்த மக்களைக் கொண்ட தேசியத்தை ஒருநாளும் கட்டமுடியாது. இந்த மண் புலிகளின் மலட்டுத்தனத்தில் தேசியத்தையோ, தேசிய பொருளாதாரத்தையோ ஒருநாளும் உருவாக்காது. தேசிய பொருளாதாரம் என்பது, தேசிய அரசியலை அடிப்படையாக கொண்டது. தேசிய பொருளாதாரம் என்பது, தேசிய சுரண்டலை அனுமதிக்காத, தனக்குள் சமூக ஓடுக்குமுறைகளற்ற, உண்மையான மக்களின் ஜனநாயகம் சுதந்திரத்தில் அடிப்படையானது. அந்த அரசியலை மாற்றாது, தமது கடந்தகாலத்தை சுயவிமர்சனத்தை செய்யாது, ஒருநாளும் தேசிய பொருளாதாரத்தைக் தலைகீழாக நின்றாலும் கட்டமுடியாது. மக்கள் அதற்குரிய அரசியல் அடிப்படையை கூட நெருங்க, புலிகள் அனுமதிக்க மாட்டார்கள். அதை புலிகள் தமக்கு எதிரானதாகவே, தமது வாழ்வியல் முறைக்கும் எதிரானதாகவே பார்ப்பார்கள்.


இந்த நிலையில் புலிகள் அரசியல் ரீதியாக, தமது சொந்த சுயநலத்தால் பேரம்பேசும் ஆற்றலையே இழந்து கிடக்கின்றனர். தமிழ் மக்களுக்காக எதையும் பேச முடியாதவர்களாக, தமக்கு மட்டும் பேசுபவர்களாக, அதில் மூக்குடைபட்டவர்களாக சீரழிந்து கிடக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பும் அமைதி சமாதானம் பற்றிய ஒரு தீர்வு சார்ந்த தெரிவை முன்னிலைப்படுத்தி, பேச மறுப்பவராக புலிகளின் பாசிசம் இறகுகட்டிப் பறக்கின்றது. மக்களின் முதல்தரமான எதிரியாக, தம்மைத் தாமே மறுபடியும் பிரகடனம் செய்கின்றனர். மக்களுக்கு அமைதியையும், சமாதானத்தையும் புலிகளால் என்றுமே தரமுடியாது.


மறுபக்கத்தில் வடக்குக்கு வெளியில் கிழக்கில் வாழும் மக்களின் குறிப்பான பிரச்சனையை பற்றி யாரும் கவலைப்படவேயில்லை. அமைதியாகவும் சமாதானமாகவும் தமது சொந்த பிரதேசத்தில் வாழ்வதற்காகவும், ஒருநேர உணவுக்காகவும் கையேந்தி நிற்கின்றனர். ஏ-9 பாதை பற்றி தமக்காக மக்களின் பெயரில் சிணுங்கியவர்கள், கிழக்கு மக்களின் அவலத்தையிட்டு சிணுங்கக் கூட அருகதையற்ற இழிபிறவிகளாக கிடக்கின்றனர். கிழக்கு மக்களையிட்டு கதைப்பது தமக்கு எந்தவிதத்திலும் இலாபம் கிடையாது என்பது புலிகளின் சரியான கணக்குத்தான். மக்களுக்காக பேரம் பேசும் ஆற்றலையிழந்த, தமக்காக மட்டும் மூக்குடைபட்டும் பேரம் பேசுகின்றனர்.


கிழக்கு மக்களின் மீள் குடியிருப்பையும், நிவாரணத்தையும் வழங்குவது உடனடியான அவசரமான மனிதாபிமானப் பிரச்சனையாக உள்ளது. கடந்த ஒருசில மாதத்தில் பல பத்தாயிரம் மக்கள் குடியெர்ந்து, ஒரு இடத்தில் அகதியாகக் கூட வாழமுடியாத ஒரு மனித சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதையிட்டு புலிகளுக்கும், தமிழ் தேசியத்தை போலியாகவே வக்கரித்து பிழைப்பவர்களுக்கும், எந்தவிதமான அக்கறையும் கிடையாது. அந்தளவுக்கு யாழ் மையவாதம், தமது குறுகிய நலனுக்குள் குதர்க்கமாகவே குண்டு சட்டிக்குள் தமிழ் மக்களையே குதிரையாக ஓட்டுகின்றனர்.


பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வும், உடனடிப் பிரச்சனைகளையும் சமமாக எடுத்து, ஓன்றை ஓன்று சார்ந்து நின்று பேரம் பேசும் ஆற்றல் ஆளுமை எதுவும் புலிகளிடம் கிடையாது. மாறாக இதை ஓன்றுக்கு ஓன்று எதிராக நிறுத்தி, தீர்வை உடனடி பிரச்சனைக்கு எதிரானதாக நிறுத்துவது, தமிழ் மக்களையே அவலாக இடிப்பதுதான். இப்படி இடித்து இடித்து திணிப்பதுதான் புலிப் பாசிசம். தமிழ் மக்களுக்கான தீர்வு, தமது உடனடி நலனுக்கும், தமது அரசியல் எதிர்காலத்துக்கும் எதிரானதாக புலிகள் கருதுவது தெளிவாக இதன் மூலம் மறுபடியும் உறுதிசெய்யப்படுகின்றது. பேரினவாதம் இதை பயன்படுத்தி வெற்றிகரமாகவே தீர்வை முன்வைக்காதது மட்டுமல்ல, புலிகளை இதற்குள்ளேயே சீரழித்து எந்தவிதமான பேரம் பேசும் ஆற்றலையும் இல்லாதாக்கி விடுவதில் வெற்றி பெற்றுவருகின்றது.


தமிழ் மக்களின் நலன்களை குறைந்தபட்சம் இந்த சமூக அமைப்பில் ஓரு தீர்வு மூலம் அடைதல் என்ற குறிக்கோள், படிப்படியாக சிதைகின்றது. இந்த சமூக அமைப்பில் பேரம்பேசும் ஆற்றல், அதை மக்கள் நலன்சார்ந்து நகர்த்துதல் என்ற அனைத்தையும் தமிழ் இனம் இழந்து நிற்கின்றது. நாதியற்ற ஒரு சமூகமாக, அனாதைச் சமூகமாக இழிகின்றது. சுயநலக் கும்பல்களின் மாபியாத்தனத்துடன் கூடிய சொந்த வாழ்வில், இவை அனைத்தும் பாசிசமாகவே அரங்கேறுகின்றது. தேசியம், தேசிய நலன், மக்கள் நலன் என எதுவும் இந்த பாசிசத்தின் முன்பாக முளைப்பதில்லை.


இந்த சமூக அமைப்பில் ஓரு அரசியல் தீர்வு, மக்களுக்கானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுபவர்கள் அல்ல. இந்த சமூக அமைப்பில் தமிழ் மக்களின் நியாயமான தேசிய அபிலாசைகள் தீர்க்கப்பட முடியாதது என்பது உண்மை. ஆனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில், இன்று நாம் இல்லை. ஆனால் மக்கள் அவலம் எல்லையற்றதாக மாறி நிற்கின்றது. இந்த சமூக அமைப்பில் ஒரு சமரசத்தை வந்தடைவது, உடனடியான அவசரமான தேவையாக உள்ளது. இந்த சமூக அமைப்பின் எல்லைக்குள் புலிகள் உட்பட அரசு வரை செயல்படுவதால், இதற்குள் அவர்கள் ஓரு அமைதியை சமாதானத்தை ஒரு தீர்வை வந்தடைவதை மறுப்பது, மக்களை இழிவுபடுத்தும் மன்னிக்க முடியாத ஒரு மனித விரோதக் குற்றமாகும்.


இந்த அமைப்பில் அவர்கள் வந்தடையும் எந்தத் தீர்வும், மக்களின் அடிப்படை நலன்களை பூர்த்தி செய்யாத போதும், மக்களின் இன்றைய விருப்பு அமைதியை சமாதானத்தை ஒரு தீர்வை காண்பதுதான். இல்லையென்றால் இருப்பதையும் இவர்களிடம் இழந்து விடுவார்கள். இதை மக்கள் அன்றாட வாழ்வில், தமது சொந்த நடைமுறையில் உணருகின்றனார். மக்கள் யுத்தமற்ற ஒரு சூழலில், யுத்தத்துக்கும் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு அமைதியான சூழலில் உடனடியாக வாழ விரும்புகின்றனர். இந்த புலி யுத்தம் எதையும் மக்களுக்கு பெற்றுத்தராது என்பதை, அவர்கள் தமது சொந்த அனுபவத்தில் கற்றுள்ளனர். மனித அழிவையும், அவலத்தையும், சமூக சீரழிவையும், சிதைவையும், இழிவையும், அடிமைத்தனத்தையும் தவிர, வேறு எதையும் இந்த யுத்தம் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காது. யுத்தம் என்று ஊளையிடுபவர்கள், மக்களுக்கு எதையும் தருவதாக ஓரு வரியில் தன்னும் கூற முடியாத பாசிட்டுகளே.


மக்கள் விரும்பும் அமைதி சார்ந்த ஒரு தீர்வை, இந்த சமூக அமைப்பில் பேரம் பேசும் அரசியல் தகுதியை, அந்த ஆளுமையை தமிழ் இனம் புலிகளிடம் இழந்து நிற்கின்றது. புலிகளை நம்பினால், தமிழ் மக்கள் இருப்பதையும் இழக்கின்றதைத் தவிர, வேறு எதையும் அடையப்போவதில்லை. இதுவே இன்றைய எதார்த்தமான நிலைமை. புலிகளின் கிறுக்குப் புத்திக்கு வெளியில், பேரினவாதிகள் இந்த அமைப்பில் ஒரு தீர்வை முன்வைக்கின்ற ஒரு நிலைமைக்குள் அவர்கள் செல்லுகின்றார்கள். புலிகள் இதை பேரம் பேசத்தவறினால், பேரினவாதம் தான் விரும்பிய ஒரு தீர்வை புலியல்லாத புலியெதிர்ப்பு கும்பல் மூலம் அதை முன்வைத்து, தமிழ் மக்களின் பேரம்பேசும் ஆற்றலற்ற எடுபிடிகளின் இழிநிலையில் அதை திணிப்பர். சர்வதேசம் இதை ஆதரிக்கின்ற ஒரு எதார்த்தம், எம்முன்னால் அரங்கேறுவதை தமிழ் மக்கள் தடுக்கமுடியாது. இப்படித்தான் புலிகள் அழிக்கப்படுவார்கள.


இதை மீறிச் செல்லமுடியாத ஒரு சர்வதேச நிகழ்ச்சிக்குள், எமது பிரச்சனை பிணைக்கப்பட்டு விட்டது. பேரினவாதம் செய்யப்போவது தெளிவானது. யாரும் மீற முடியாத இந்த சர்வதேச நிகழ்ச்சியில் புலிகள் ஓத்துழைக்க மறுத்தால், புலிகள் அல்லாத புலியெதிர்ப்பு தரப்பூடாக ஓரு தீர்வு அரங்கில் வரவுள்ளது. அதை சர்வதேச அங்கீகாரத்துடன் தான், பேரினவாதம் முன்வைக்கவுள்ளது. இதன் மூலம் புலிகளை தனிமைப்படுத்துவதும், மக்கள் தமது அவலங்களின் ஊடாகவே இதை தவிர்க்கமுடியாது ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வாகவுமே அது அமையும். புலிகளை மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்துகின்ற அரசியல் நகர்வின் மூலம், பேரினவாதம் புலிகளை வெற்றிகொள்கின்ற பரிதாபகரமான காட்சியை காண்கின்ற ஒரு நிலையை நோக்கி புலிகள் வலிந்து செல்லுகின்றனர். இந்த எதார்த்தமே இன்றைய தமிழ் மக்களின் சொந்தத் தலைவிதியாக உள்ளது.