தமிழ் அரங்கம்

Saturday, October 17, 2009

குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்

இந்தியநேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம், கடந்த 19.09.2009 அன்று சென்னையில் நடத்திய ""நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்'' என்ற அரங்குக் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்த ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா, ""புதிய ஜனநாயம்'' இதழுக்கு நேர்காணல் தரவும் இசைவு அளித்திருந்தார். பக்க வரம்பின் காரணமாக, நேர்காணலின் பொழுது கேட்கப்பட்ட கேள்விகளுள் முக்கியமானவை மட்டும் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்திருந்த பதில்கள் சுருக்கப்பட்ட வடிவில், இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

பு.ஜ. வாசகர்களும், தமிழக மக்களும் நேபாள நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையையும், அதனையொட்டி ஐக்கிய நேபாளப் பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) எடுத்திருக்கும் முடிவுகளையும், அம்முடிவுகளின் அடிப்படையில் அமைந்த அக்கட்சியின் நடைமுறையையும், அதற்கு நேபாள உழைக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவையும் புரிந்து கொள்ள, தோழர் பசந்தாவின் நேர்காணல் பெருமளவில் உதவும் என நம்புகிறோம்.

...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, October 16, 2009

அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரசியல்

அரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.

தாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்.

இப்படி பேசுபவர்கள்...
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரசியல்

அரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.

தாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்

...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, October 15, 2009

ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது

தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்கால இலக்கிய விமர்சனம் குறித்த அவரது கட்டுரைகள், ""விமர்சனங்கள்'' என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது. தற்பொழுது இலங்கைத் தலைநகர் கொழும்புவில் வசித்து வரும் தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சியலெனினியக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார்.

Wednesday, October 14, 2009

சுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் பிரிய

"இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்" என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய உரையாற்றினார்.

இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவரும், 15 வருட சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அத்துடன் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.

பேரினவாதப் பாசிசம் புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்கியதுடன், சிங்கள புத்திஜீவிகளையும் ஒடுக்கியது. தம்மை விமர்சிக்கும் சிங்கள....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, October 13, 2009

நம்மோடு இருக்கும் எதிரிகள் யார்...? நண்பர்கள் யார்...?

Monday, October 12, 2009

இந்திய இலங்கை அரசுகளின் தொப்புள்கொடி உறவுகள்

இரண்டு தலைமுறைகளை கண்ட முதியவர்
முகாம் கூடாரத்து மூலையில்
யாரிவர்கள் எனக்கேட்கிறார்.....

உலகத்தமிழினத் தலைவரின் தூதுவர்கள்

நேரிடை தகவல் சேர்க்கும் நீதிமான்கள்
இந்திய அரசின் மனச்சாட்சியை தட்டிக்கேட்க .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, October 10, 2009

புலம்பெயர் வாழ் புத்திஜீவிகள் சிந்தனைக்கு

கடந்த காலங்களில் புலத்தில் முன்னணியில் நின்று தமிழ் தேசியம் ஐனநாயகம் பாட்டாளி வர்க்கத் தலைமை மற்றும் அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசிய தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு வேலை செய்த புத்திஜீவிகளில் பலர் இன்று இலங்கை பாசிச அரசை போற்றுவோராகவும் ஒட்டுக் குழுக்களின் பிரமுகர்களாகவும் மேடைகளில் பவனி வருகின்றனர்.

தமிழ் தேசிய விடுதலையின் பேரில் புலிகள் தமிழ் மக்களின் அனைத்து ஐனநாயக உரிமைகளையும் மறுத்து அச்சுறுத்தி தேசத்தை விட்டு வெளியேற்றி படுகொலைகள் செய்து மக்களின் மீது கொரத்தாண்டபம் ஆடினர்.

புலிகளின் அராஜகத்தினால் நாங்கள் நண்பர்கள் உறவினர் மற்றும் விடுதலைக்காய் அனைத்தையும் துறந்து போராட வந்த பல நூற்றுக்கணக்கான தோழர்களை இழந்துள்ளோம்

Friday, October 9, 2009

பாரிஸ் சந்திப்பு தொடர்பாய் எனது அவதானங்கள்

தமிழ் அரங்கத்தால் நடாத்தப்பட்ட இச் சந்திப்பு என்பது ஒரு மிக முக்கியமானதாகவே கருதுகின்றேன். இன்றைய சூழலில் மக்களை புலிகளின் பெயரால் ஏமாற்றிப் பிழைப்பை நடத்தும் பிழைப்புவாதக்கோஸ்டி ஒருபுறமிருக்க தம்மை புலி எதிர்பாளர்கள் என்றும் தற்போது புலிகள் இல்லாது ஒழிக்கப்பட்டதனால் தாமே இன்றைய சமூக சிந்தனையாளர்கள் என்றும் தம்மை காட்டியபடி இலங்கை அரசுக்குப் பின்னால் நிற்கும் மாற்றுக்கருத்தைக் கொண்ட கோஸ்டி என்பவர்கள் மறுபுறமிருக்க மக்களை தனித்தனியாக ஏமாற்றி மக்களின் கருத்துக்களையும், மனங்களையும் மாற்றி அலையவிடும் ஒரு சில சாரார்களுக்கிடையே தொடர்ந்தும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் தவறை தவறு என்று விமர்சித்து, ஒரு கருத்தை அடையக்கூடியவர்களை ஒன்றிணைத்து அவர்களை ஒரு மேடைக்கு அழைத்தது என்பது தமிழரங்கத்தின் வெற்றி என்றே கூறவேண்டும்.

ஒரு கட்டத்தில் றயா என்ற தனிமனிதன் தான் அக்கருத்தை.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, October 7, 2009

பாரிசில் நடந்த கூட்டம் : மக்கள் மேலான அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்களைச் சார்ந்து போராட அது உறுதி பூண்டது.


கடந்தகாலத்தில் தேசியம் என்ற பெயரில் நீடித்த புலிப் பாசிசம், இன்று தன்னைத்தானே பிணமாக்கியுள்ளது. அதன் எச்சசொச்சம், தன் இறுதி மூச்சுடன் சேடம் இழுகின்றது. மறுபுறத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் இருந்த புலியெதிர்ப்பு, அரச பாசிசமாக மாறி நிற்கின்றது. "ஜனநாயக" வேஷம் இன்று அரச பாசிசமாகி நடுரோட்டில் அம்மணமாகிக் கிடக்கின்றது.

இப்படி மாறிய சூழலை தன் கருத்தில் எடுத்த கூட்டம், மக்களை நோக்கி செயல்பட வேண்டியது அனைவரினதும் மையக்கடமை என்பதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இதை மதிப்பிட்ட கூட்டம் அரசுடனும் புலியுடனும் இல்லாத அனைவரையும், கடந்தகால முரண்பாடுகளைக் கடந்து இந்தத் திட்டத்தில் இணைக்கும் வண்ணம் தான் செயலாற்றவும் உறுதிபூண்டது.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, October 6, 2009

நாளைய வாழ்வே பெருவலியாய்.....

பெண்ணின் பெரும்பேற்றில் பிறந்த உலகே
கண்முன்னே
கருவைத் தாங்கும் தாயை
தெருவில் இறக்கிவிடும் பேரினவாதம்.......
தன்மண்ணில் தவளவிடும் கனவுடன்

கருவறையின் உதைப்பில்
பொறு மகவே என்கிறது தாய்மை
பிரசவ வலியல்ல.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, October 5, 2009

கலந்துரையாடல் அறிவிப்பு

கலந்துரையாடப்படும் புள்ளிகள்

1. இலங்கை இனமுரண்பாடு:

அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும்தமிழ்மக்களின் எதிர்காலமும் 2. இடம்பெயர்ந்த பெண்கள் குழந்தைகளின் நிலை
3. பங்குபற்றுவோர் கருத்துகளும் விவாதங்களும்
காலம் : 11.10.09 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணிக்கு
(குறித்த நேரம் ஆரம்பிக்கப்படும். நேரத்துடன் வந்து உதவுங்கள்)

இடம் :
:
Gemeindschaftszentrum, Rebenweg 6, 8041 Zürich

-----------------------
......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இருள் மனிதர்கள்

நடந்து நடந்து இரண்டு பேரும் அய்யனார் கோயிலைத்தான் தாண்டியிருக்கிறார்கள். இன்னும் கரைப் பாதையேறி ஒரு கல் தொலைவு நடந்து கல்வெட்டாங் கிடங்கிற்குள் இறங்கி மேடேறி பனைக்கூட்டம் தாண்டி அப்பண்டு முதலாளி தோட்டங் கடந்து பைபாஸ் ரோடு போக வேண்டும். அங்கிருந்து டவுன் ஆஸ்பத்திரிக்கு குறுக்கும் நெடுக்குமாய் தெருக்களுக்குள் நுழைந்து போனாலும் அந்த தூரம் மட்டும் ஒரு மைல் தாராளமாய் இருக்கும்.
அக்னி நட்சத்திரம் முன்னேழு பின்னேழு முடிந்து ஒரு ஏழுநாள் ஆனபின்னாலும் வெயிலின் உக்கிரம் தீயாய் உடம்பில் விழுந்து எரிந்தது. அறுபதைத் தாண்டிய வயதாகிப் போன பங்கஜத்தம்மாளுக்கு ஈழை நோய் கண்டிருந்தது. முந்திச் சேலையால் தலையை......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, October 2, 2009

மானுடராய் வாழ்தலிற்காய் இணைக

நந்திக்கரைவரை நம்மினத்தை
கூடவே குழிபறித்த கூட்டெல்லாம்
வெட்டிவிடு முள்வேலியை என்கிறது
மெல்லத்தடவி மகிந்தவை
வெல்லலாம் என ஏய்க்கிறது
செல்லக்கண்டிப்பாய்---ஜ.நா பலமுறை சென்று திரும்புகிறது
வல்லவனாய் எழாதிருத்தி
மனஉளைச்சல் கொடுக்கிறது
நல்கூட்டு உலக வல்லவர்கள்
சொல்லெல்லாம் மாயை
கல்லில் நார் உரிப்போமென்கிறது

Monday, September 28, 2009

அடக்குமுறை – வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பள்ளி மாணவர்கள்

திருச்சி, புத்தூர் திரு.வி.க.நகர் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது சி.இ. மேல்நிலைப்பள்ளி. கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கான சலுகையோடு அரசின் நிதியுதவி பெறும் இப்பள்ளியில், தனியாருக்கு நிகராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சாதிரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வன்கொடுமைகளுக்குள்ளாகிறார்கள்.

பள்ளி நிர்வாகி ஜேம்ஸ் ஆபிரஹாம் தனது மகள்கள் மற்றும் மருமகன்களையே ஆசிரியர்களாக நியமித்துக்கொண்டு, வரைமுறையற்ற முறைகேடுகளையும் வன்கொடுமைகளையும் இழைத்து வந்திருக்கிறார்.

இக்கும்பலின் கொடுமைகளை காணச்சகிக்காது, மாவட்டகல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்த குற்றத்திற்காக லாமெக் என்ற ஆசிரியரை, பள்ளிமாணவர்களின் முன்னிலையிலேயே கொலைமிரட்டல் விடுத்துக் கன்னத்தில் அறைந்திருக்கிறார், ஜேம்ஸின் மகளான ஸ்டெல்லா மேரி. தமக்காக வாதாடிய ஆசிரியர் தம் கண் எதிரிலே அவமானப்படுத்தப்படுவதைக் கண்டுகொதித்த மாணவர்கள் உடனே, சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். மனுகொடுத்தும் மறியல் நடத்தியும் கூட நடவடிக்கை எதுவுமில்லை!

இந்நிலையில், இ...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, September 27, 2009

நீதியின் வறட்சியும் பாயும் நிதியும்


இது ஒன்றும் சொடுக்குப் போடும் கணத்தில் நடந்துவிடவில்லைதான். 2004தேர்தல் முடிந்தபோது துவரம் பருப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 34 தான். அதுவே, 2009 தேர்தலுக்கு முன் ரூபாய் 54. தேர்தலுக்குப் பின் அது, ரூபாய் 62 ஆகி, இப்போதோ ரூபாய் 90ஐயும் தாண்டி, மூன்றிலக்கத்தைத் தொட்டுவிடத் துடிக்கிறது.

மாண்டேக் சிங் அலுவாலியாவின் "கஷ்ட காலத்தைக்கடந்து கரையேறிவிட்டோம்'' என்ற சொல்லாடலும் ஜூலைமாதக் கூத்தில் கலந்திருந்தது (இவ்வாறு அவர் சொல்லிவைப்பது முதல்முறையல்ல; ஜூனிலும் இப்படித்தான்சொன்னார். ஏன், அதற்கு முன்பும் சொல்லியிருக்கலாம்). இதையெல்லாம் சொன்னவர், நமக்குக் கஷ்டகாலம் எப்போதிலிருந்து தொடங்கியது என்பதை உரைத்திடாததால், கரையேறித் தப்பித்ததை அறிந்து பாராட்ட நம்மால் இயலவில்லை.

"உள்ளபடியே,...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Saturday, September 26, 2009

வறட்சியின் பிடியில் விவசாயிகள்! கொண்டாட்டத்தில் முதலாளிகள்!!


அக்கிராமத்தைச் சேர்ந்த ராதா என்ற கர்ப்பிணிப் பெண் தினமும் அந்த மரத்தின் அருகே சென்று கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். அந்த மரத்தில்தான் 25 வயதான இளைஞரும் ராதாவின் கணவருமான கோவர்த்தன நேனாவத், கடந்தஆகஸ்ட் 6ஆம் நாளன்று தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

லம்பாடி பழங்குடியினத்தைச் சேர்ந்த கோவர்த்தன், கந்துவட்டிக்குக் கடன் வாங்கி மழையை நம்பி பயிர் வைத்தார். ஆனால், இம்முறை தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போய் வறட்சி தாக்கி, நீரின்றி நிலங்கள் வெடித்து, பயிர்கள் கருகிப் போயின. ஏற்கெனவே அவரது
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, September 25, 2009

பஞ்சாப்: பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக தாழ்த்தப்பட்டோரின் கலகம்!


சீக்கிய மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள் நடத்திவரும் இப்போராட்டங்களைக் கண்டு, சீக்கிய ஜாட் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களும், அவர்களை நத்திப் பிழைக்கும் அகாலிதள், காங்கிரசு, பா.ஜ.க. ஓட்டுப் பொறுக்கிக் கும்பலும் கொஞ்சம் அரண்டுதான் போயுள்ளன.

பஞ்சாப் மாநில அரசும், நிலப்பிரபுக்களும் தாழ்த்தப்பட்டகூலி விவசாயிகளின் இக்கோரிக்கையை, தீவிரவாதமாகச் சித்தரிக்க முயன்று...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, September 24, 2009

இப்படியோர் இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?

அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச்சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபாய். எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபாய் கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

"பருவ மழை பொய்த்து வறட்சி ஏற்பட்டாலும் நமது மக்கள் எவரும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம்'' எனக் கடந்த மாதம் மன்மோகன் சிங் முழங்கிக் கொண்டிருந்த போதே, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பட்டினிச்சாவுச் செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில மட்டும் ஜூலை 2008 முதல் ஜனவரி 2009 வரை, சத்தான உணவின்றி உயிரிழந்த குழந்தைகளின்...
.முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, September 23, 2009

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.கவின் கருணையா? நரித்தனமா?

ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் "பொற்கால' ஆட்சியின் சாதனையாக ""உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ""நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை'' என்றும் ""சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது'' என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் ..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்