தமிழ் அரங்கம்

Sunday, October 16, 2005

உண்மையான சமூக விரோதிகள்

நட்புடன் வசந்தன் மற்றும் டோண்டுக்கு

உங்கள் ஆதாரவக்கும் ஒத்துலைப்புக்கு மனமார்ந்த நன்றிகள். எந்தக் கருத்தையும் நன்றியுடன் தனது சொந்தப் பெயரில் அல்லது புனை பெயரில் போடுவது இட்டு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது எந்தளவுக்கு எவ்வளவு மாறுபட்ட கருத்தாக இருந்தாலும், அது மதிப்புக்குரியதே. முரண்பாடுகள் இன்றி பூமியும் சரி, பூமியின் இயற்கையும் சரி இயங்காது. அதாவது அது உயிர்வாழ முடியாது. இந்த இயற்கையில் உள்ள மனிதர்கள் எந்த மட்டில்.

குறிப்பாக வசந்தன் போட்ட கருத்தினை எனது பெயரில் போட்டபோது, அதில் உள்ள ஒரு தியாகத்தையே கேவலப்படுத்துவது தான். இந்த தியாகம் எதற்காக எப்படி செய்யப்படுகின்றது என்பது பற்றி எனக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்த போதும் கூட, தியாகம் செய்ய முன்வந்த உணர்வு மதிப்புக்குரியதாக உள்ளது. அதாவது தனிப்பட்ட அந்த மனிதன் தியாகம் செய்ய முன்வரும் போது, சுயநலன் சார்ந்த தனிமனித அரசியலையே கேள்விக்குள்ளாக்கி விடுகின்றது. தனிமனிதர்கள் தம்மை தியாகம் செய்யும் போது, அது உண்மையான சமூக விடுதலையை அடையாத வரை, அந்த தியாகம் அர்த்தமற்றதாக இருந்த போதும் கூட, இந்த தியாகத்துக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக போராடி தியாகத்தை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இந்த தியாகத்தை கொச்சைப்படுத்தி வருபவர்கள், தமது சுயநல அரசியல் பயன்படுத்தும் போது, தியாகங்களை மற்றவர் பெயரால் ஒட்டிக் கேவலப்படுத்துவது நிகழ்கின்றது.

இது சமூகத்தின் எல்லா துறைக்கும் பொருந்தும். கருத்தால் கருத்துக்கு பதிலளியுங்கள். மக்கள் மேல் நம்பிக்கை இருந்தால், மக்களை நேசித்தால், உங்கள் சரியான கருத்து வெற்றிபெறும். அதைவிடுத்து கருத்தைச் சொல்பவனை கொல்வது அல்லது இது போன்ற மற்றவன் பெயரால் ஆள் மாறட்டம் செய்பவர்கள சுத்த அயோக்கியர்கள். இங்கு எந்த நேர்மையும் கிடையாது. எந்த மனிதப் பண்பும் கிடையாது. ஒளித்து நின்று கல்லெறியும் கும்பலாகவேயுள்ளது.

இவர்கள் சமூகத்தில் இழிந்துபோன எந்தச் செயலையும் செய்யும் வகையாறுகள். சமூகத்தில் தம்மை அடையாளம் காட்டின் மதிபற்றவர்கள். சமூகத்தில் ஒளித்து நின்ற கொண்டு, சமூத்தையே பிறண்டித் திண்பவர்கள். சமூக பண்பாடுகள், சமூக கலச்சாரங்கள் எதுவுமற்ற உண்மையான சமூக விரோகள் இவர்கள்.

பி.இரயாகரன்16.10.2005

1 comment:

bloggrez said...
This comment has been removed by a blog administrator.