தமிழ் அரங்கம்

Friday, October 21, 2005

வாழ வழியற்ற சமூக அவலம்

இனங்களுக்கு இடையிலான மோதல் சமூக அவலத்தில் இருந்து திட்மிடப்பட்டது. அதை பூசி மொழுக குறுந்தேசிய உணர்வு இனம் கடந்து உருவாக்கியதன் மூலம் இனயுத்தம் வித்திடப்பட்டது. அன்று இந்த சமூக அவலத்தின் அடிப்படை என்ன? 1971 இல் வேலை செய்யக் கூடியவர்களில் வேலை இன்மை 19 சதவீதமாக இருந்தது. இது 1974 இல் 24 சதவீதமாக உயர்ந்தது. இதில் இருந்து மீள யுத்தம், யுத்த பொருளாதார, பாசிசச் சட்டங்கள் ஒன்று இனைந்து அவை ஜனநாயமாகி இந்த அமைப்பின் நீடிப்புக்கு கைகொடுத்தது. இந்த யுத்த பொருளாதாரம் உடாக ஏகாதிபத்திய ஊடுருவல் என்று இல்லாத அளவுக்கு இலங்கையில் கால் உன்றியதுடன் அது மேலும் ஆழமாகவே வேகம் பெறுகின்றது. தேசிய அடிப்படைகள், தேசிய பொருளாதாரங்கள் அனைத்தும் ஈவிரக்கமின்றி கற்பழிக்கப்படுகின்றது.

இந்த கற்பழிப்பு புதிய சமூகப் பண்பாட்டை அராஜக வழிகளில் கவர்ச்சி காட்டி திணிக்கின்றது. கற்பழிப்பை எற்க மறுப்பது, அதை எதிர்த்து நிற்பது ஜனநாயக விரோமானதாக விளக்கம் பெற்று உள்ளது. ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிராக நடக்கும் இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியாத ஒரு சமூக நெருக்கடி உருவாகிவிட்டது. உயர்வாழ்க்கைத் தரம் கொண்ட ஒரு தீடீர் பணக்கார கும்பலும், அடிபாதளத்தில் எதற்கும் வழியற்ற பரந்துபட்ட மக்கள் என்ற ஒரு கட்டமைப்பு ஆழமான எற்றத் தாழ்வான சமூகப் பிளவை உருவாக்கிவிட்டது. இது ஒரு சமூக அரசியல் வழியால் தீர்க்கப்பட முடியாத சூழல் உள்ள நிலையில், அராஜகமும், தற்கொலையும் பல்வேறு சமூக வக்கிரங்களும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் இயல்பான அன்றாட நடத்தையாகிவிட்டது.

வறுமை தேசிய கொள்கையாகின்றது. நாட்டில் அடிப்படை உணவான நெல் உற்பத்தி பெருகிய போதும், மக்கள் அதை நுகரமுடியவில்லை. 2002 இல் பெரும் போக நெல் உற்பத்தி 17 லட்சம் மெற்றிக் தொனனாக இருந்தது. இது 2003 இல் 19.3 லட்சம் மெற்றிக் தொன்னாக மாறியது. அமைதிக்கு பின்பான நெற் செய்கை நிலம் 20 சதவீத்தால் உயர்ந்துள்ளது. 6.6 லட்சம் வயல்கள் புதிதாக உற்பத்தி செய்தன. ஆனால் வறுமை அதிகரித்துச் செல்லுகின்றது. எங்கும் மக்களின் வாழ்வியல் சுமை, உற்பத்தி அதிகரிப்பால் தீர்க்க முடியாதாகியுள்ளது. அவை அன்னியனுக்கு மிகக் குறைந்த விலையில் அன்னியனுக்கு எற்றுமதியாகின்றது.

இதை முடிமறைக்க, அந்த உணவில் ஒரு பகுதியை உதவி என்ற பெயரில் சர்வதேச நிறுவனங்கள் திட்டமிட்ட அரசியல் நோக்குடன் களமிறங்குகின்றன. ஐ.நாவுக்கான சர்வதேச உணவு நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில், வடக்கு கிழக்கில் 20 சதவீதமான குழந்தைகள் பாடசாலையில் பசியுடன் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளனர் என அறிவித்துள்ளது. இதனடிப்படையில் யுத்த பிரதேசத்தில் 33000 குழந்தைக்கு உணவு வழங்கப்படுகின்றது. மேலும் அவ் அறிக்கையில் 100000 குழந்தைகள் வறுமை காரணமாக கல்வியை கைவிட்டுள்ளதை அறிவிக்கின்றது. வறுமை நாலுகால் பாய்சலில் முன்னேறுகின்றது. வடக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் உலக உணவுத் திட்டத்தின் கீழ், நடைமுறையில் உள்ள உணவு கொடுத்தல்; செயல்திட்டம் விரிவாக்கப்பட்டு வருகின்றது. 2004ம் ஆண்டு இரண்டாம் தவணை முதல்; 107363 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் புதிய திட்ட அமுழுக்கு வரவுள்ளது. மலையகத்தை எடுத்தால் 18 வயதுக்கு குறைந்த 3.4 லட்சம் குழந்தைகளில் 15 ஆயிரம் போ அங்கவீனர். 64 ஆயிரம் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்கள்;. 80 அயிரம் பேர் 5 வயதுக்கு குறைந்தவர்களாக உள்ள அந்த சமூகத்தின் எதிர்காலம் என்பது சூனியமாகவே உள்ளது. சமூகத்தின் பல படித்தான வடிவங்களில் வெட்டு முகத் தோற்றங்கள் இவை. அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் 80 சதவீதமான பெண்கள் மிக மோசமான கூலியைப் பெறுவதை கண்டறிந்து அதை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆணாதிக்க அமைப்பை ஏகாதிபத்திய நலனுக்கு இசைவாக பயன்படுத்துவதையும், வறுமையை இதனுடாக நிறுவன மயப்படுத்துவதையும் இது காட்டுகின்றது. இன்று இலங்கையில் 45 சதவீதமான உழைப்பாளிகளிள் நாள் வருமானம் 200 ரூபாவுக்கு குறைவாக உள்ளது. இந்த உழைப்பாளியின் வருமானத்தைக் கொண்டு ஒரு குடும்பத்தையே வாழக் கோரும் நிலையில், இதன் சமூக வெடிப்பு அகலமானது. ஒய்வூதியமோ மாதம் 4500 ரூபாவாக உள்ளது. எங்கும் வறுமை விரிவாகியுள்ளது. வடக்கு கிழக்கில் 80 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக அரசு அறிக்கையே உறுதி செய்கின்றது. கொழும்பையும் கொழுப்பைச் சுற்றி வாழும் மக்களில், 40 சதவீதமானவர்கள் சேரிகளில் வாழ்வதுடன்; பரம எழைகளாக இருப்பதை அரசு புள்ளிவிபரங்களே உறுதி செய்கின்றது. திருகோணமலையில் 75 சதவீதத்துக்கு அதிகமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். இந்த திருகோணமலை வறுமையில் வாழப் போராடும் மீனவர்களிடம், மாதம் புலிகள் 1000 ரூபா வரியை அறவிடுகின்றனர். இது மக்கள் பற்றி அக்கறை கொண்ட தமிழ் தேசியம். இலங்கை முழுக்க வாழ்க்கையின் அவலம் நிரந்தரமான விதியாகிவிட்டது. ஒருபுறம் இந்த சமூக அவலம் அடிபாதளத்தில் சிக்கிவிட, மறுதளத்தில் நுகர்வு வெறி உச்சத்தில் தலைவிரித்தாடுகின்றது.

வக்கிரமான சமூக நுகர்வை பூர்த்தி செய்ய, எழைகளின் உணவை எற்றுமதி செய்வது அவசியமாகின்றது. அதாவது வறுமையும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கையும் பெருகிவரும் நிலையில், 2003 இல் இலங்கை ஒரு லட்சம் தொன் அரிசை ஏற்றுமதி செய்தது. கிராமப் புறங்களில் எழை எளிய மக்களின் அடிப்படையாக கிடைத்த இறுதி உணவாக எங்சியிருந்த 26000 மெற்றிக் தொன் பழங்கள், மரக்கரிகளையம் கூட ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் கிடைத்த 318 கோடி ரூபாவை பணக்காரர்களின் அற்ப நுகர்வுக்கும், வட்டி கொடுக்கவும் பயன்படுத்தினர்.

இதை விரிவாக பார்த்தால் 2003 ஆண்டு இலங்கை ஏற்றுமதி 10 சதவீதத்தால் அதிகாரித்தது. இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்கும் ஒரு அங்கமாக இலங்கை இந்தியாவிற்கு இடையில் நடக்கும் பேரங்கள,; பொருளாதார தளத்தில் பாரிய விளைவுகளை உருவாக்கின்றது. இலங்கை இந்திய சுதந்திரவர்த்தக ஒப்பந்ததின் பின் இலங்கையின் எற்றுமதி 142 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2800 பொருட்களுக்கு வரிச் சலுகையை வழங்குகின்றது. 2002 இல் 16 கோடி டொலர் (அண்ணளவாக 1600 கோடி ரூபா) ஏற்றுமதியை இலங்கை செய்தது. சீனாவுக்கும் கொங்கொங்குமான இலங்கை ஏற்றுமதி 2002 இல் 2001 உடன் ஒப்பிடும் போது 27.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதாவது 130 கோடி ரூபாவால் இது அதிகரித்துள்ளது. இலங்கை இறக்குமதி 2002 இல் 730 கோடி ரூபாவாக இருந்தது.

இலங்கை வைர மற்றும் தங்க ஏற்றுமதி 2002 இல் 202 கோடி டொலராக (அண்ணளவாக 20200 கோடி ரூபாவாகும்.) இருந்தது. 2002 இல் இலங்கையின் மொத்த தொழில்துறை எற்றுமதித் தொகை 242 கோடி டொலராகும் (அண்ணளவாக 24200 கோடி ரூபாவாகும்.) இது வெளிநாட்டு ஏற்றுமதி வரவில் 53 சதவீதமாகும்;. இதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கான ஏற்றுமதி மட்டும் 195.2 கோடி டொலராக (அண்ணளவாக 19520 கோடி ரூபா) இருநந்து. இதில் கடைசி ஆறு மாதத்தில் 109.5 கோடி டொலராக (அண்ணளவாக 10950 கோடி ரூபா) யாக இருந்தது. 2003 முதல் மூன்று மாதத்தில் தொழில்துறை எற்றுமதி 141 கோடி டொலராக (அண்ணளவாக 14100 கோடி ரூபா) அதிகரித்துள்ளது.

எற்றுமதி என்பது தேசிய இலட்சியமாகிவிட்டது. அனைத்தையும் எற்றுமதி செய்வது என்ற கொள்கை தேசிய பொருளாதார கொள்கையாகிவிட்டது. மக்களின் சமூகத் தேவை மறுப்பது அரசியலாகிவிட்டது. ஏற்றுமதியின் அடிப்படையான நோக்கம் என்ன? ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு நேரடியாக சேவை செய்வதே. எற்றுமதி பொருளாதாரத்தால் தேசத்தில் வாழும் மக்களுக்கு எந்த நலனும் கிடைப்பதில்லை. ஏற்றுமதி மூலம் கிடைக்கும் செல்வம் கடனின் ஒரு பகுதியை மீள கொடுக்கவும், வட்டியைக் கட்டவும் பயன்படுகின்றது. அதாவது அது இன்னுமொரு விதத்தில், அப்பணமே புதிய கடனாக மீள வழங்கபடுகின்றது. இதற்கு வெளியில் எற்றுமதி பொருளாதாரம் ஏகாதிபத்தியம் உற்பத்தி செய்யும் கவர்ச்சிகரமான ஆடம்பர இன்ப நுகர்ச்சிப் பொருட்களை அதிக விலையில் இறக்குமதி செய்யப் பயன்படுகின்றது. இதில் முக்கியமான மற்றொரு உண்மை ஒன்று உண்டு. அதாவது கடனாக வருபவை கூட ஏகாதிபத்திய உற்பத்தி துறைக்கும் அதன் நலனுக்கு இசைவாக முதலிடக் கோரும் நிபந்தனையின் அடிப்படையில் தரப்படுகின்றது. கடன்கள் எகாதிபத்திய தேசங்கடந்த பன்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தி துறைக்குள் திருப்பிவிடப்படுகின்றது. இவற்றை எல்லாம் மூடிமறைக்க மக்கள் நலத் திட்டங்களை அரசும், தன்னார்வக் குழுக்கள் உடாகவும் செய்கின்றனர். அதாவது அதையும் எகாதிபத்தியம் தனக்கு சார்பான சிந்தனையை உருவாக்கும் தளத்தில் மட்டுமே செலவு செய்ய நிர்ப்பந்திக்கின்றது. ஏற்றுமதி பொருளாதாரம் கடனை தலைகால் தெரியாத எல்லைக்குள் பெருகிச் செல்லுகின்றது.

மொத்த தேசிய வருவாயை விட கடன் 2001 இல் 103 சதவீதமாகியுள்ளது. இன்று அதிகரித்த செல்லும் கடனை தேசிய வருவாயில் 100 சதவீதமாக இது உள்ளதாக பொய்யான புள்ளி விபரம் ஒன்றின் மூலம் அரசு அண்மையில் மக்களின் காதுக்கு பூ வைக்க முனைந்தது. 2002 இல்; இலங்கைப் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் 77 ஆயிரம் ரூபா கடனே இருந்தது. இது 2003 இல் 99 ஆயிரம் ரூபாவாகியுள்ளது. கடனின் தொகை பெருகிச் செல்லுகின்றது. நாட்டை விற்றாலும் கடனைக் கட்டமுடியாது. "சுதந்திர" கொத்தடிமைகளாக வாழவே முடியும

No comments: