எங்கே தலைவர்கள்?
கத்ரீனா, லூசியானா ஆர்லீன்சைச் சூறையாடியபோது தலைவர்கள் எங்கே போனார்கள்?
° புஷ் ஓய்வில் இருந்தார் அரபு நாட்டுக் குதிரைச் சவாரி, கோல்ஃப், படகுச் சவாரி. ஆர்லீன்ஸ் மூழ்கிவிட்டதே என்று நிரூபர்கள் கேட்டபோது, 'இப்படி ஆகுமென்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது' என்று திமிராகச் சொன்னார் புஷ். ஆனால், பொறுப்பை எப்படிக் கை கழுவலாம் என்று அவர் உள்ளுக்குள்ளே யோசித்துக் கொண்டிருக்க வேண்டும் பேயறைந்த முகம் போல அவர் முகம் இருந்தது.
° டிக் செனி துணை அதிபர் எங்கே? வையோமிங் என்ற இடத்தில் சாராயத்தில் கிடந்தது அந்த விசித்திர மிருகம். சுமார் 15 கோடி மதிப்புள்ள, நீர் முத்தாய்ச் சொரியும் அருவி கொண்ட பண்ணையை வாங்கும் பேர விருந்தில் 'பிசி'யாக இருந்தாராம். ஜனாதிபதி புஷ் செல்லமாக அழைத்து ஆர்லீன்சுக்கு ஓடச் சொன்னாராம். ஏன் தெரியுமா? ஆர்லீன்ஸ் நகரை மறுநிர்மாணம் செய்யும் ஒப்பந்தத்தை முன்பு, தான் நிர்வாகம் செய்த ஹாலிபர்டன் கம்பெனிக்கே கிடைக்குமாறு உறுதி செய்யவே அந்தக் கடைசி நிமிட நாடகம்.
° வெளியுறவுச் செயலர் காண்டலீசா ரைஸ் அவர் எங்கே? மன்ஹாட்டன் நகரிலே ஊரே கூடி வேடிக்கை பார்க்க, ஒரு ஜோடி ஷீ (Shoe) மூன்றரை லட்சம் எனப் பேரம் பேசி வாங்க ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். பிலிப்பைன்சின் திருமதி மார்க்கோஸ், தமிழகத்தின் செல்வி.ஜெயலலிதா வரிசையில் இப்போது ஒரு காண்டலீசா ரைஸ்.
நன்றி புதியஜனநாயகம்
தமிழ் அரங்கம்
Saturday, October 22, 2005
Subscribe to:
Post Comments (Atom)
 
 
 



 
 Posts
Posts
 
 
No comments:
Post a Comment