தமிழ் அரங்கம்

Saturday, October 13, 2007

புலிகளும் சாதீயமும்

பி.இரயாகரன்

"நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசானக் கவிஞர் புதுவை இரத்தினதுரை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி இது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முதலாவது கொள்கை அறிக்கையில் சோசலிச தமிழீழமே எமது இலட்சிய தாகம் எனப் பிரகடனம் செய்தனர். அதையே தமது சொந்தக் கைகளால் புதைகுழிக்குள் அனுப்பிய வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பாத மந்தைக் குணம் கொண்ட தமிழ் சமுதாயத்தில் தான், புதுவை இரத்தினதுரை கதை சொல்லுகின்றார். தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களின் காதுக்கும் பூ வைக்க முனையும் ஒரு மோசடி தான் இது. அன்று அன்ரன் பாலசிங்கம் ரொக்சிய கட்சியில் இருந்து பெற்ற திரிபுவாத அரசியலை அடிப்படையாகக் கொண்டு, புலிக்கு இடதுசாரிச் சாயம் பூச முயன்றவர். புலிகளின் கொள்கை வகுப்பாளராக தன்னைத் தான் பாராட்டிக் கொண்டவர். தளத்தில் புலிகளின் கொள்கை வகுப்பாளராக இருந்த மு.நித்தியானந்தன், புலிகளின் பத்திரிகையில் சொந்த நடைமுறைக்கு புறம்பாகவே மாவோவின் மேற்கோள்களை அச்சிட்டு இடது சாயம் தெளித்து மக்களை ஏமாற்ற முயன்றவர். புலிகளுக்கு ஒரேயொரு ஆயுள் தலைவர் இருப்பது போன்று, கொள்கை வகுப்பாளரும் ஒரேயொருவர் மட்டுமே இருக்க முடியும் என்ற அடிப்படையில், மு.நித்தியானந்தன் கழித்து விடப்பட்டார். இதனால் புலி எதிர்ப்பாளராக வெளிவந்த மு.நித்தியானந்தன், காலத்துக்கு காலம் புலியின் நிலைக்கு ஏற்ப தாளம் போட்டு தனது பிழைப்புக்கு ஏற்ற நிலைப்பாட்டை நடத்தி வருகின்றார்.

இந்த வரிசையில் புதுவை இரத்தினதுரை "நான் இன்றும் மார்க்சியவாதியே" என்று கூறுவதன் மூலம், நக்கிப் பிழைக்கும் தனது நிலைப்பாடு சார்ந்து தான் இருக்கும் அமைப்பை மார்க்சிய இயக்கமாக சித்தரித்துக் காட்ட முனைகின்றார். பிழைப்புத் தனத்தின் கடைக் கோடியில் நின்று இப்படி புலம்புவது நிகழ்கின்றது. 1960 களில் நடந்த சாதியப் போராட்ட வரலாற்றில் அதற்கு ஆதரவாக இருந்த இவர், அதையே மார்க்சிய போராட்டமாக சித்தரிப்பது ஒரு விசித்திரமான விடையம். சண் தலைமையிலான கட்சி முன்னெடுத்த சாதிப் போராட்டமோ, ஒரு வர்க்கப் போராட்டம் அல்ல. வர்க்கப் போராட்டத்தின் உள்ளார்ந்த ஒரு அம்சம் மட்டும் தான். அடிப்படையில் ஒரு ஜனநாயக கோரிக்கை மட்டும் தான். சண் தலைமையில் நடந்த போராட்டம், வர்க்க அடிப்படையிலான கட்சியை கட்டுவதிலும் சரி, வர்க்கப் போராட்டத்தை நடத்துவதிலும் சரி இதில் எதையும் முன்னெடுக்கவில்லை. மாறாக பொருளாதார போராட்டங்களை வர்க்கப் போராட்டமாக காட்டி, வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பிச் சீரழித்தனர்.

அன்றைய ஜனநாயக போராட்டத்தில் கலந்த கொண்ட புதுவை இரத்தினதுரை, ஒடுக்கப்பட்ட சாதியின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இந்த நிலைப்பாட்டை எடுத்து இருந்தார். அதை மார்க்சியமாக நம்பியதும், அதையே மார்க்சியமாக விளக்குவதும், இதுவே அவரின் சித்தாந்தமான போது இயல்பில் புலிகளில் இணைவதை நியாயப்படுத்தியது. ஜனநாயகக் கோரிக்கையில் நிற்கும் ஒருவன் நிலைமைக்கு ஏற்ப ஊசலாடுவது, புதுவை இரத்தினதுரைக்கு விதிவிலக்கல்ல. இந்த நிலையில் தான் புதுவை இரத்தினதுரை, ஜனநாயகக் கோரிக்கையை கைவிட்டு வலதுசாரிகளான புலிகளில் இணைந்தார். வலதுசாரிக் கருத்துக்காக தன்னையும் தனது தோலின் நிறத்தையும் மாற்றிக் கொண்டதுடன், அவர்களின் கருத்துகளையும் அச்சடித்தது போல் பிரச்சாரம் செய்தவர். அன்றாட நிலைமை சார்ந்து வலதுசாரிய கருத்தின் அப்படையில் பல கவிதைகளை புனைந்தவர். இந்த கவிதைகளில் அவர் முன்னர் போராடிய சாதிய அம்சத்தை மருந்துக்கு கூட இணைக்கத் தவறியவர். பிழைப்புக்கும் அந்தஸ்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, மக்களின் தியாகங்களை கேவலப்படுத்திய ஒருவரே புதுவை இரத்தினதுரை.

பிழைப்புக்கு சோரம் போன புதுவை இரத்தினதுரை நேரத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப கவிதை பாடியவர். புலிகளின் தளத்துக்கு ஏற்ப அதற்கு இசைந்து பாடியவர். சொந்த உணர்வில் இருந்து கவிதை படிக்கவில்லை. புலியின் உணர்வுக்கு ஏற்ப கவிதை படித்தவர். மக்களின் அடிப்படை உணர்வு சார்ந்த ஜனநாயகத்தை ஏறி மிதிப்பதில், தன்னைத் தான் இசைவாக்கியவர். புலம்பெயர் சமூகம் பற்றிப் பாடிய கவிதை ஒன்றை உதாரணத்துக்கு எடுப்போம்.

".. பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல

தாயகம் தீயில் எரிகையில் விட்டு

விமானத்தில் ஏறி பறந்தவர்

வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்

சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்

சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்

விட்டுப் பறந்த கோழைகள் நாளையே

வீடு திரும்பினால் காறியே துப்புவோம்

கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்

கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்

அப்பு ஆச்சியை கவனம் கவனம் என்று

அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்

தப்பிப் பிறந்தவர் தம்பியும் வாவென

தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்

துப்புக் கெட்டவர் அகதி லேபலில்

தூசு தட்டியே காசு பிழைத்தனர்

ஓடியவர் ஓடட்டும் ஊழைச் சதையர்

எல்லாம் பேடியர்கள் ஓடட்டும் போனவர்

போகட்டும் பாய்விரித்தால் போதும்

படுதுறங்கும் இவர்கள் எல்லாம் நாய்சாதி

நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்

தப்பிப்பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி

கப்பலிலே எறி கனடாவில் நக்கட்டும் .."


என்று அன்று பாடியவர். இன்று அதுபற்றி வழங்கிய பேட்டியில் என்ன சொல்லி நக்குகின்றார் எனப் பார்ப்போம். "கவிதை எழுதுவதற்காக அந்த நேரத்தில் நான் பெற்றுக் பெற்றுக் கொண்ட மன உணர்வின் வெளிப்பாடு.... அப்போது போராளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் பெருவாரியான இளைஞர்களின் இடம்பெயர்வு எனக்குக் கோபத்தை தந்தது. அதே புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்போது புகலிட நாடுகளிலிருந்து உணர்வு குன்றிவிடாமல், எமது போராட்டத்தைத் தாங்குவதில் பெரும் பலமாக இருக்கின்றார்கள்." என்று இன்று நக்கிப் பிழைத்தபடி பினாற்றுகின்றார். இன்று வெளிநாட்டில் உழைத்து வாழும் மக்களின் பணத்தில் நக்கிப் பிழைக்கின்ற நிலைக்கு புலிகள் தங்கி இருப்பதால் தான், இந்த குத்துக் கரணம். பணம் தருவதைத் தான் கவிஞர் உணர்வு குன்றாதவர்கள் என்கின்றார். பணத்துக்காக தன் நிலைப்பாட்டையே மாற்றிவிடும் இந்தக் கவிஞர், பணத்தை பாயாக விரித்தால் அதையே புணரக் கூடியவர் தான் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. இது கவிஞரின் இன்றைய உணர்வு.

அன்று எண்ணிக்கை குறைந்த நிலையில் தான், இப்படி தூற்றியதாக ஒப்புக் கொள்ளும் இவர் அதை அன்றைய உணர்வு என்கின்றார். அந்த உணர்வு சார்ந்து வெளிநாடு சென்றவர்களை பயந்து பறந்தோடிய கோழைகள் என்று காரணத்தை கற்பிக்கின்றார். உண்மையை புதைகுழிக்கு அனுப்பிவிட்டு அதை துப்பாக்கி முனையில் பாதுகாத்தபடிதான் தூற்றமுடிகின்றது. நாட்டை விட்டு புலம் பெயர்ந்தவர்கள் பயந்து ஒடும் கோழைகள் என்பதாலா, நாட்டை விட்டு வெளியேறினர். இல்லை ஒரு நாளும் இல்லை. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் கொண்டிருந்த மக்கள் விரோத அரசியலே, புலம் பெயர வைத்தது. பிரதானமானது தேசிய பொருளாதார கொள்கை தொடர்பானது. இரண்டாவது மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பானது. இந்த இரு பிரதான காரணத்தினாலும் தான் புலம் பெயர்வு ஒரு விதியாகியது. இன்று வன்னியை விட்டே வெளியேற முடியாத பாஸ் நடைமுறை மூலமே, வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை புலிகள் கட்டுப்படுத்துகின்றனர். சொந்த தேசிய அரசியலால் அல்ல.

வெளிநாட்டை நோக்கிய புலம் பெயர்வில் பொருளாதார ரீதியான தனிமனித முன்னேற்றம் சார்ந்த அன்னிய மோகம், தேசத்தின் தேசியத்தின் அடிப்படைப் பண்பாக கொள்கையாக இருக்கும் வரை, எதையும் தூற்ற புலிகளுக்கு எந்த தார்மிக பலமும் கிடையாது. மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட இளைஞர் குழுவாக, மக்களின் அடிப்படை வாழ்வியலுடன் ஒன்றிணையாத நிலையில், அதற்கு எதிராக செயற்பட்டபடி உருவான ஒரு இயக்கமே. இந்த இயக்கம் இராணுவ தாக்குதலை நடத்திவிட்டு கோழையைப் போல் ஒடி ஒழித்துவிடும் நிலையில், அருகில் உள்ள கிராமங்களை சிங்கள இராணுவத்தின் சூறையாடலுக்கு உள்ளாக்குவதே ஒரு போராட்டமாகியது. தாக்கியவன் கோழையைப் போல் பயந்து ஒடி ஒழித்துவிடும் போது, தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் அங்கிருந்தும் அந்த மண்ணில் இருந்தும் தப்பியோடுவது ஒரு இயங்கியல் விதி.

இதில் பொருளாதார ரீதியாக ஒரு சாண் வயிற்றுக்கு வழி காட்ட முடியாத தேசிய பொருளாதார கொள்கையை பிரகடனம் செய்யும் (இன்று தேசியத்தை அழிக்கும் ஏகாதிபத்தியத்திடம் கையேந்தி நிற்கின்றனர்) புலிகளின் அதிகாரத்தில், சொந்த மண்ணை விட்டு சிங்கள தேசம் நோக்கிய புலம் பெயர்வும், அங்கிருந்தும் புலம் பெயர்வையும் புலிகள் தான் ஊக்குவித்தனர். இது மட்டுமா இல்லை. புலிகள் ஜனநாயகத்தை மக்களுக்கு மறுத்து அதன் தொடர்ச்சியில் அனைத்து அரசியல் அமைப்புகளையும் வேட்டையாடிய போது, ஈவிரக்கமற்ற படுகொலைகளே தேசிய அரசியலாகியது. இந்த நிலையில் மற்றைய அரசியல் பிரிவுகளும், இயக்க ஆதரவாளர்களும் அவர்கள் குடும்பத்தினர் முதல் கொண்டு அனைவரும் படுகொலைகளில் இருந்து தப்ப புலம் பெயர்வை ஒரு நிபந்தனையாக்கினர். எப்படி வாய் மூடி மக்கள் செம்மறிகளாக வாழ வேண்டும் என்பதை புலிகளின் உத்தியோகபூர்வமாக அன்று வெளியிட்ட கருத்தில் நாம் காணமுடியும். "40 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விமர்சனங்களை நிற்பாட்டிவிட்டு உங்களுடைய வாய்களை முடி வைத்துக் கொள்ள வேண்டும்." என்று புலிகளின் மத்திய குழு உறுப்பினர் யோகி கூறியதில் இருந்தே புதுவை இரத்தினதுரை கவிதையின் கருவைத் தேடியவர். இதை அவர் தாண்டவில்லை. சாமி சரணம் போட்டபடி வாயை உண்பதற்கு மட்டும் திறக்க கோரியவர்களுக்கு, அவற்றை இசையாக்கியவர். மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் வழங்கினால், புலிகள் அரசியல் அனாதைகள் ஆகிவிடுவர்கள் என்று தலைவரின் பெயரில் துண்டுப் பிரசுரம் போட்டு, அந்தத் தளத்துக்கு ஏற்ற மெட்டில் தான் இன்று புதுவை இரத்தினதுரையின் சொல் அலங்காரங்களும், அவரின் பிழைப்புச் சார்ந்த செழிப்பும் உயிர் வாழ்கின்றது. மக்கள் மக்கள் என்ற ஒப்பாரிகளும் தொடருகின்றது. எல்லாம் புலிமயமாகி அதுவே துப்பாக்கியின் ஒரேயொரு மொழியான நிலையில், வாய் மூடிய சமுதாயத்தில் பலவீனமான சமூக அறிவியலில் பின் தங்கிய பெண்கள், இளம் குழந்தைகள் புலிகளின் ஆதார சக்தியாகினர். இப்படித் தான் புலிகள் மீண்டும் ஆள் திரட்ட முடிந்தது. தற்போது கட்டாய இராணுவ சேவை மறைமுகமாக அமுலுக்கு வந்துள்ளது.

அன்றும் சரி இன்றும் சரி தேசிய முதலாளிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் சொத்துகளை பலாத்காரமாக அபகரித்தும், மிரட்டியும் கறக்கின்ற நிலையில், அவர்களும் கூட நாட்டைவிட்டே வெளியேறினர், வெளியேறுகின்றனர். இப்படி பற்பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டே புலம் பெயர்ந்தனர், புலம் பெயர்கின்றனர். 1983 க்கு பிந்திய இரண்டு வருட காலமே இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை மிக உச்சத்தில் இருந்த காலம். இந்த நிலையை பின்னால் ஒருக்காலும் அடையவில்லை. புதுவை இரத்தினதுரை காட்டும் காரணம் போலியானது. ஆயிரம் ஆயிரமாக 1983 - 1985 க்கும் இடையில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இயக்கங்களில் இணைந்தனர். ஜனநாயகத்தை துப்பாக்கி முனையில் புதைகுழியில் புதைத்த போது இது தலைகீழானது. புலம் பெயாந்தவனை திட்டி தீர்ப்பதால் உண்மை பொய்யாகாது.

புலம் பெயர்ந்தவனின் உழைப்பைப் பற்றி கொச்சைப்படுத்தும் போது "தூசு தட்டியே காசு பிழைப்பவர்கள்" என்ற உழைப்பின் மீதான வெறுப்பைப் பாடத் தயங்கவில்லை. ஆனால் அவர்கள் வேர்வை சிந்தி சொந்த உழைப்பில் வாழ்ந்தார்கள். ஆனால் உழைப்பில் ஈடுபடாதவர்கள் தூசு தட்டிய காசை இன்று பல்வேறு வழிகளில் வறுகுபவர்களாக மாறியுள்ளனர். அன்று கிண்டல் அடித்த அதே புலிகள் தான், இன்று அதில் தங்கி நிற்கின்றனர். ஆனால் அந்த மக்களுக்காக, அந்த மக்களின் வாழ்வுக்காக அவர்களின் நியாயமான போராட்டம் எதையும் புலிகள் முன்னெடுப்பதில்லை. அதற்கு எதிராக இருந்தபடி மூலதனத்துக்கு சேவை செய்வதில், தம்மைத் தாம் தலைசிறந்தவராக காட்டிக் கொள்கின்றனர். புதுவை இரத்தினதுரை காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்பப் பாடிப் பிழைப்பவர் தான். மக்களின் அடிப்படையான பிரச்சனைகளில் இருந்து பாடியவர் அல்ல.

தமது சொந்த நடத்தையை நியாயப்படுத்த மக்களுக்கு எதிராக பற்பல கதைகள் பல சொன்ன போதும், ஒன்றை மட்டும் தற்போதைக்கு எடுத்துக் கொள்வோம். இவர் வழங்கிய மற்றொரு பேட்டியில் "இனங்களுக்கிடையிலான சமத்துவம் எமது கனவுகளில் ஒன்றுதான். கணிசமான அளவு அது நனவாகி வருகின்றது. இனத்தின் அடையாளத்தின் மீதான அழிப்புக்கு எதிராக ஆரம்பித்த தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இப்போது இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பற்றிச் சிங்கள சமூகத்தை சிந்திக்க வைத்திருக்கிறது. இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தினுள்ளே சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். (உறைந்து போகும் அடக்கு முறையை மீறியும் படுகொலையில் இருந்து தப்பியும் என்பதை சொல்லாமல் சொல்லி விடுகின்றார்.) நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன். தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை" புலம்பி புலம்பி உள்ளடகத்தை மழுங்கடிக்க முனைகின்றார்.

பல்வேறு அடிப்படையான கருத்துகள் மீது உண்மையை குழி தோண்டி புதைக்கின்றார். இனங்களுக்கிடையே ஐக்கியம் பற்றி சிந்திப்பதாக கூறும் இவர், இந்த ஐக்கியத்துக்கு புலிகள் குண்டு வைக்கவில்லையா? ஏன், நீர் சிங்களவன் என்று ஒருமையில் அழைத்து கவிதை பல பாடி, ஐக்கியத்தை வேட்டு வைக்கவில்லையா? அப்பாவி சிங்கள மக்களையும், இனவாதிகளையும் பிரித்தறியும் அரசியலை புலிகள் எப்போது எங்கே எந்த விடையத்தில் கையாண்டார்கள். இதை உங்கள் கவிதையில் எங்கே எப்படி சொல்லியிருக்கின்றீர்கள். அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைளை ஏற்ற சிங்கள மக்களையும் கூட இனம் காண மறுத்த தமிழ் குறுந்தேசியவாதிகள் அல்லவா நீங்கள். எல்லைகளை கடந்து நரைவேட்டையாடியும் குண்டும் வைத்த போதே ஐக்கியம் தூளாகியது. அதை கூட்டி அள்ளி இன்றைக்கு சிங்களவனே என ஒருமையில் அழைத்தபடி, ஒட்டவைப்பதாக கூறுவது நகைப்புக்குரியது. இங்கு ஐக்கியத்தை புலிகள் நாடவில்லை. மாறாக ஏகாதிபத்தியங்கள் தமது தேவைக்கு இசைவாக நடத்துவிக்கும் பேச்சுவார்த்தை மேடையை அலங்கரிக்கும் சொற்தொடர்கள் தான், சிங்கள் மக்களுடன் ஐக்கியம் பற்றி கூறும் வார்த்தை ஜாலங்கள். உண்மையான ஐக்கியத்தை தமிழ் தேசியப் போராட்டம் கையாண்டு இருந்திருந்தால், ஒடிப் போன 60000 சிங்களப் படை வீரர்கள் புலிகளுடன் எப்போதே இணைந்து இந்த இனவாத அரசையே தூக்கி எறிந்து இருப்பார்கள்.

"சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை"

என்ன வக்கிரமான கூற்று. சாதியம் உறைந்தே காணப்படுகின்றது என்பதை மறுக்கும் இவர், அதற்காக போராடத் தேவையில்லை என்கின்றார். அதே நேரம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை என்று கூறுகின்ற போது பிழைப்புவாதத்தின் முரண்பாடு தொங்கி நிற்பதையும், சாதியை பாதுகாக்கும் புலிகளின் அரசியல் நிலைக்கு வக்காலத்து வாங்குவது தொங்கி நிற்பதையும் மறைக்க முடியவில்லை. சாதி அமைப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, புலிகளின் மேல் சாதிய யாழ் ஆதிக்க நிலைக்காக வக்காலத்து வாங்குகின்றார். ஆனால் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை என்று குசு விடும் போது, தன்னையும் மீறி மணத்து விடுகின்றது. ஆனால் இந்த பேட்டியை துணிச்சலாக முரண்பாட்டுடன் வழங்க பின்பலம் உண்டு. இதை புரிந்து கொள்ள சரிநிகருக்கு 1990 களில் வந்த ஒரு வாசகர் கடிதத்தில் நடைமுறை சார்ந்த எதார்த்த உண்மை இதை சுட்டிக் காட்டுகின்றது. "தயவு செய்து புலிகள் பற்றித் தப்பாக எழுதுவதை இன்றுடன் நிறுத்தும்படி மிக மன்னிப்பாக கேட்கிறேன். நீர் எங்கிருந்தாலும் உமது காதுச்சவ்வு விரைவில் துப்பாக்கிக்குண்டு பட்டு வெடித்து நீர் அமெரிக்காவை விட்டு உமது பிள்ளைகளையும் பிரிந்து மேலே போகும் நிலைக்கு ஆளாகிவிடாதீர்கள்" சரிநிகர் பத்திரிகைக்கு இந்துமதி எழுதிய வாசகர் கடிதத்தின் உள்ளடக்கமே, இன்றும் விமர்சனம் மீதான எதார்த்தமாகும். இந்தப் பலத்தில் இருந்தே அனைத்தையும் தலைகீழாக புரட்டி கருத்துரைக்கின்றனர். நாங்கள் விமர்சிக்கும் போதும் எமது காதுச் சவ்வுகளை நோக்கிய துப்பாக்கிகளின் சன்னங்களின் ஊடுருவல் முதல் இரைப்பையை நோக்கி நஞ்சூட்டல் வரையிலான எல்லாவிதமான எதார்த்தமான நிலைமைகளையும் கடந்து கருத்துரைக்கவில்லை. எமது மரணத்தை முகத்துக்கு முன்னால் எதார்த்தத்தில் நாள் தோறும் எதிர்கொண்டே, தமிழ் தேசியம் படைத்த ஜனநாயகத்தில் வாழ்கின்றோம். கருத்துரைக்க வேண்டிய உன்னதமான உணர்வுகளை மற்றவனுக்கு மறுத்தபடி தான், புதுவை இரத்தினதுரை சாதியைப் பற்றி பிதற்றுகின்றார். புலிகள் உயர்சாதிய யாழ் இயக்கம் தான் என்பதும், வலதுசாரி அரசியலால் தன்னை உலகமயமாக்குகின்ற ஒரு அமைப்புதான் என்பதற்கு யாரும் மறுப்புக் கூற முடியாது. இந்த இயக்கம் சாதியத்தை ஒரு நாளும் ஒழிக்காது. சாதியத்தை பாதுகாத்து, அதன் அடித்தளத்தில் உருவான படிமுறையான அடுக்குகளின் உதவியுடன் தான் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இயக்கம் தான். புதுவை இரத்தினதுரை தனது இயக்க அரசியல் சார்ந்த சாதிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்த, சொந்த தனது ஒடுக்கப்பட்ட சாதியின் பெயரால் கூறி நியாயப்படுத்தவும் பின்நிற்கவில்லை. "ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் (சாதி) சோந்தவர்" என்பதால் தலித்துகள் விரும்பின் குண்டியைக் கழுவி விடலாம். ஆனால் சாதியத்துக்கு எதிரான போராட்டம் என்பது, இந்து மதமும் அதனுடன் ஒட்டிப் பிறந்த சாதியமும் உள்ள வரை (மூளை ஒன்றாகவும் உடல் இரண்டாகவும், அதாவது மதமும் சாதியுமாக உள்ளது) தொடர்வதை, எந்தத் தலித்தும் எந்த இயக்கமும் தடுத்து விடமுடியாது.

சாதியம் உள்ளிட்ட ஜனநாயக போராட்டங்களை நடத்த முற்பட்ட, நடத்திய சில நூறு பேர் புலிகளால் கொல்லப்பட்ட போது புதுவை இரத்தினதுரை அதற்கு வெண்சாமரை வீசி அரசனையும் சபையையும் வாழ்த்தி வாழ்த்துப்பா பாடிக் கொண்டிருந்த பெட்டைக் கோழியாவார். இதற்கு பரிசாக அவரை உயர்சாதி நிலைக்கு, கவிதையின் அந்தஸ்து சார்ந்து உயர்த்தப்பட்டார். இதனால் சாதியம் ஒழிந்து விட்டதாகவும், அதற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறும் இவர், சாதிய வேர் இருந்த போதும் பயப்பட வேண்டிய தேவையில்லை என்ற கூவ முயலுகின்றார். இதை அவர் "நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" என்று கூறி அதன் மூலம் கொக்கரிக்க முயலுகின்றார்.

01.07.2003

18 comments:

மாசிலா said...

கட்டுரைக்கு மிக்க நன்றி.

-/பெயரிலி. said...

இரயாகரன்
/"சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த வெப்பிராயம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்குகள் நடத்தி இருக்கிறேன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை"/

இது புலிகள் உயர்சாதி அமைப்பு என்று நிறுவிவிடுகிறதா?

நீங்கள் இந்த இடுகையிலே எழுதியிருப்பதெல்லாம்

1. "தாங்கள் உயர்சாதி அமைப்பு இல்லை" என்று நிறுவ அல்லது உலகுக்குக் காட்ட (எதுவாகினும் சரி இங்குப் பேசப்படும் தேவைக்கு) புலிகள் எத்துணை முயற்சிக்க்கின்றார்கள் என்பதைப் பட்டியலிடுவது

2. அவர்கள் அப்படியில்லை என்று நீங்கள் அறிக்கைவிடுவது. அப்படியில்லை என்பதற்கு நீங்கள் சொல்வது, "புலிகள் உயர்சாதிய யாழ் இயக்கம் தான் என்பதும், வலதுசாரி அரசியலால் தன்னை உலகமயமாக்குகின்ற ஒரு அமைப்புதான் என்பதற்கு யாரும் மறுப்புக் கூற முடியாது. இந்த இயக்கம் சாதியத்தை ஒரு நாளும் ஒழிக்காது. சாதியத்தை பாதுகாத்து, அதன் அடித்தளத்தில் உருவான படிமுறையான அடுக்குகளின் உதவியுடன் தான் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இயக்கம் தான்." என்பதும் 'புலிகள் மற்ற இயக்கங்களிலே உள்ளவர்களைக் கொன்றார்கள் & புலம்பெயர்ந்தவர்களைப் புதுவை இரத்தினதுரை திட்டினார்' என்பவையுமே.

'புலிகள் மற்ற இயக்கங்களிலே உள்ளவர்களைக் கொன்றார்கள் & புலம்பெயர்ந்தவர்களைப் புதுவை இரத்தினதுரை திட்டினார்' என்பவற்றைத் தனியே விவாதிக்கலாம். ஆனால், அவையோ, ஏகாதிபத்திய+வலதுசாரி இயங்கம் என்பதோ புலிகளை உயர்சாதி இயக்கம் என்று விடுமா? இஃதென்ன "அப்படிப்பட்ட பனைமரத்திலே பசுமாட்டைக் கட்டும் வேலை?" உங்களைப் போன்றவர்களிடமிருந்து கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தேன் :-( ஸ்ரீரங்கன் எழுதியதைப் பாருங்கள். அங்கேனும் பேசுவதற்கு ஓரிரண்டு இருக்கின்றன. நீங்கள் எழுதுவதற்கும் தீவுகள் யாழ்ப்பாணக்குடாநாட்டிலேதான் இருக்கின்றன அவற்றிலேயிருக்கும் சாதிப்பாகுபாடும் யாழ்க்குடாநாட்டுச்சாதிப்பாகுபாடுதான் என்பதை விளங்கிக்கொள்ளும் குறைந்தபட்சம் அறிவுகூட இல்லாமல், பன்னிரண்டு வயதிலே இலங்கையை விட்டுப்புலம்பெயர்ந்த ஒருவரின் கருத்தைக் கேட்டு எழுதுவதைப் போலத்தோன்றும் ஒருவர் எழுதுவதுக்கும் வித்தியாசமே தெரியவில்லை :-(

தமிழரங்கம் said...

புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை.

இக் கட்டுரை 2002 இல் எழுதியது. புலிகள் சாதிய அமைப்புத் தான். அதை பாலசிங்கம் கூறியதே ஆதாரம். இதுவும் எனது பழைய கட்டுரையில் இருந்து உங்கள் பார்வைக்கு. கீழே உள்ளது. இதற்கு மேல் நாம் அதை நிறுவ வேண்டிய அவசியமோ, வரலாற்றுத் தேவையோ கிடையாது. அப்படி ஒரு சந்தேகம் யாருக்கும் கிடையாது.

சாதியம் பற்றிய எனது நூல்கள், அடுத்த வருடத்தின் இறுதியில் வெளி வரத்தொடங்கும்;.

பாலசிங்கத்தில் இருந்து

அடுத்து கருணா பிரச்னையை அடுத்து புலிகளின் மதியுரையர் பாலசிங்கம் கூறுவது போல் ~~இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்றப்படுபவர் பிரபாகரன். --- பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாததொன்று அபாண்டமானது.|| இதில் முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வர்க்க பிளவுகள் சமூகத்தில் உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதாகும். சமூகத்தில் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை உள்ளது என்றால், அந்த சமூகத்தால் பிரபாகரன் போற்றப்படுகின்றார் என்றால், அந்த இயக்கம் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டதே. இதுதான் எதார்த்த உண்மை. தனிப்பட்ட பிரபாகரன் என்ன நினைக்கின்றார் என்பதல்ல. இதற்கு வெளியிலும் கூட தனிப்பட்ட பிரபாகரன் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் அறியார். பாலசிங்கம் கூறுவது போல் ~~இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட|| போராட்டம் என்பது இவற்றை களையாது தமிழ் தேசியம் கட்டமைக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றது. அதாவது இவற்றை அடிப்படையாக கொண்ட தேசிய இயக்கம் என்பது, பிரதேச, சாதிய, ஆணாதிக்க, வர்க்க அடிப்படையைக் கொண்டது. காலாகாலமாக யாழ் மையவாதத்தால் இவை கட்டிப் பாதுகாக்கப்படுகின்றது. இது வெறும் பிரபாகரன் என்ற தனிநபர் சார்ந்த பிரச்சனையல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. இதன் பிரதிநிதியாக புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் உள்ளனர் அவ்வளவே.

பாலசிங்கம் மேலும் ஒருபடி மேலே போய் சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை தலைவர் பிரபாகரன் தீர்த்துள்ளார் அல்லது தீர்த்து வைப்பார் என்பது மற்றொரு வேடிக்கையான வாதம்;. பிரதேசவாதம், சாதியம், வர்க்கம் போன்ற சமூகப் பிரச்சனைகளை, எப்படி புலிகளின் தனிப்பட்ட தலைவர் பிரபாகரன் தீர்ப்பார் அல்லது தீர்த்துள்ளார் என்றால், அதை மட்டும் சொல்லமாட்டார்கள்;. இதற்கு எதிரான குரல்களை துப்பாக்கி குண்டுகளால் மட்டுமே தீர்க்க முடியும் என்பது புலிகளின் அரசியல் அகாரதி. மறு தளத்தில் கருணா சுட்டிக்காட்டிய யாழ்பிரதேசவாத உணர்வை, புலிகள் ஒத்துக் கொள்ள மறுப்பதே, இதன் மற்றொரு முக்கியமான சாரமாகவும் உள்ளது. சிவத்தம்பி பி.பி.சி க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் சாதியம், பிரதேசவாதம் போன்ற சமூகப் பிரச்சனைகள் உள்ளது என்று மென்று விழுங்கி ஒத்துக்கொண்ட போது, இதை இத்தருணத்தில் எழுப்பியது தவறு என்று கூறியதன் மூலம், யாழ் பிரதேசவாத பாசிசத்தையே நியாயப்படுத்தினார்.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
தமிழரங்கம் said...

விவாததுக்கு வெளியில் எந்தக் கருத்துக்கும்;, அதை கலந்த பதிவுக்கு அனுமதி கிடையாது.
புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம் இல்லை என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை" என்று நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்வது - இச்சந்தர்ப்பத்திலே- இரண்டாம்பட்சமே. முதலிலே "புலிகள் யாழ் மேலாதிக்க இயக்கம்" என்று சொல்லிக்கொண்டேயிருக்கின்றவர்களுக்குஅதை "நிறுவ வேண்டியது முதலாவது (உங்கள்) கடமை" இல்லையா? நீங்கள் அதை நிறுவின பின்னாலேதானே, தகர்க்கவேண்டியவர்கள் இல்லையென்று நிறுவமுடியும்?

இவை எல்லாம் முன்கூட்டியே எழுதப்பட்டுள்ளது. சாங்கள் எமத கொள்கையை வைக்கம் பொது, அவை முன் கூட்யே அம்பலப்படுத்தியுள்ளேன்;. அதை சமூக நோக்குடன் படிக்க முனையவும்; மேய்வது பதில் அளிப்பது அவசியம் கிடையாது.

பார்வைக்கான இனைப்பு

யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன?
பி.இரயாகரன்
13.02.2007

இந்தக் கேள்விகளும் குழப்பங்களும் திரிபுகளும் மலிந்த ஒரு சமூக அமைப்பில் நாங்கள் வாழ்வதால் இதை தெளிவுற வைப்பது அவசியமாகிவிடுகின்றது. இந்த வகையில்

1.இதை யாழ் மக்களுக்கு எதிரானதாக அர்த்தப்படுத்துவது நிகழ்கின்றது.

2.இதை சாதிய ஆதிக்கம் பெற்ற ஒரு கருத்தாக அதாவது வெள்ளாள சாதி ஆதிக்கத்தைக் குறிப்பதாக கருதப்படுகின்றது.

3.இதை ஒரு பிரதேசரீதியான ஒடுக்குமுறையாக கருதப்படுகின்றது

4.இதை புலிப்பாசிசத்தை குறிக்கும் ஒரு குறித்த சொல்லாடாக கருதப்படுகின்றது.

5.தனிமனிதர்கள் ஊடாக இதை காண்பதும் விளக்குவதுமாக காணப்படுகின்றது

6.எண்ணற்ற சமூக ஒடுக்குமுறைகளின் வடிவில் இதற்கு எதிரான ஒவ்வொரு சமூகப் பிரிவினூடாக காணப்படுவதும் நிகழ்கின்றது.

இப்படி பல வகையில் பலவாக இது அர்த்தப்படுத்தப்படுகின்றது புரிந்து கொள்ளப்படுகின்றது விளக்கப்படுகின்றது. யாழ் மேலாதிக்கம் பற்றிய அலங்கோலமான காட்சிப் படிமங்கள் பொதுவாக இதுவாகவே உள்ளது.

யாழ் மேலாதிக்கம் என்பது யாழ் சமூகத்தினுள்ளான ஒரு சிறிய பிரிவு காலகாலமாக பெற்றுள்ள சமூக பொருளாதார மேலாண்மையை தக்கவைக்கும் கோட்பாடாகும்;. இந்த வகையில் யாழ் மேலாதிக்கம் மொத்த மக்களுக்கும் (குறிப்பாக தமிழ் மக்களுக்கு) எதிராக வினையாற்றுகின்றது. யாழ் மேலாதிக்கம் பல தளத்திலானது. மிகவும் நுட்பமாக சின்னச்சின்ன விடையங்களில் கூட அது வினையாற்றுகின்றது.

சமூகங்களை பிளப்பதும் பிரிப்பதும் இதனை அதனடிப்படையில் இழிவாடுவதும் அதன் மூலம் ஒடுக்குவதும் இதன் குறிப்பான அம்சமாகும். இந்த வகையில் சமூக கோட்பாடுகளை அதை ஒட்டிய பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளையும் கட்டமைக்கின்றது. இந்த வகையில் யாழ் சமூக பொருளாதார மேலாதிக்க நிலையை தக்கவைக்கும் வகையில் எதிர்வினையாற்றுவதே யாழ் மேலாதிக்கமாகும். இது யாழ் பிரதேசத்தில் வாழும் பரந்துபட்ட மக்களைச் சார்ந்து அதன் நலனில் செயலாற்றுவதில்லை. குறுகிய எல்லையில் குறுக்குவழியில் சமூகத்தை பிளந்து தன்னை பாதுகாக்கும் கோட்பாடாகும்.

யாழ் மேலாதிக்கம் என்பது குறித்த சமூக பிரிவுகள் மீதான ஒடுக்குமுறையின் குறித்த சிறப்பு வடிவம் அல்ல. குறித்த ஒரு சமூக ஒடுக்குமுறை தனிச் சிறப்பு வடிவம் கொண்டது என்பதால் அதை எதிர்கொள்ள தெளிவான அடையாளப்படுத்தல்களும் போராட்ட வடிவங்களும் உள்ளது. உதாரணமாக சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்ள சாதியத்துக்கு எதிரான போராட்டமும் ஆணாதிக்கத்தை எதிர்கொள்ள பெண்ணிய போராட்டங்களும் பிரதேசவாத ஒடுக்குமுறையை எதிர் கொள்ள பிரதேசவாதத்துக்கு எதிரான போராட்டங்களும் உள்ளது. அதாவது இது துல்லியமாக தெளிவுபடுத்தப்பட்டு எதிரி பற்றியும் அதன் கோட்பாடு பற்றியும் தெளிவான நடைமுறைசார் போராட்ட வடிவங்கள் உண்டு.

இந்த நிலையில் யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன? ஒட்டுமொத்த சமூக ஒடுக்குமுறையினை ஒரு குறியீடாக கொண்டால் அந்த ஒடுக்குமுறை வடிவத்தை ஒரு சிறிய பிரிவின் நலனுக்காக மட்டும் பயன்படுத்துவதைக் குறிக்கின்றது. அதாவது அனைத்து பரந்துபட்ட மக்களுக்கும் எதிரான வகையிலும் குறிப்பாக இந்த யாழ் மேலாதிக்கம் யாழ் மக்களுக்கே எதிரானது.

இது சுரண்டும் வர்க்க அடிப்படையிலான அனைத்தையும் தழுவிய சுரண்டும் நலன்களைக் கொண்ட போதும் இது அதனிலும் இருந்து மிகவும் நுட்பமாக வேறுபட்டது. சுரண்டும் வர்க்கம் தனது சுரண்டும் ஜனநாயகத்தை சுரண்டும் நலனை தனது வர்க்கத்துக்கு மறுப்பதில்லை. ஆனால் யாழ் மேலாதிக்கம் அப்படிப்பட்டதல்ல. இது எந்த வகையில் என்றால் சுரண்டும் வர்க்க நலன்கள் சுரண்டும் அனைத்து வர்க்க பிரிவினரது நலனையும் பிரதிபலிப்பதில்லை. இதைக் கட்டமைப்பது வாழ்வது தான் மேலாதிக்கமாக உள்ளது. இது ஒரே சுரண்டல் பிரிவுக்கிடையிலான மோதலாகவும் மாறுகின்றது. சமூகத்தை கூறு போடுகின்றது. இந்த கூறு குறுகிய அடிப்படையில் சுரண்டும் வர்க்கத்தின் அனைத்து நலனையும் பேணாது அதற்குள்ளும் மிக குறுகிய ஒரு சிறிய பிரிவின் நலனை முதன்மைப்;படுத்தி தனது குறுகிய நலனை தக்கவைக்க முனைகின்றது. இந்த வகையில் இந்த குறுகிய நலனே யாழ் மேலாதிக்கமாக உள்ளது. உண்மையில் இந்த யாழ் மேலாதிக்கம் சுரண்டும் வர்க்க அனைத்து நலனை அடிப்படையாக கொண்டு அதையும் பிளந்து ஒடுக்குவதன் மூலம் தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றது.

உதாரணமாக பார்ப்பனீயம் என்ற இந்துமதம் சாதியமாக இருக்கின்ற எல்லையில் அது உயர் சாதிய நலனை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. அதிலும் பார்ப்பன நலனை குறிப்பாக முன்னிலைப்படுத்துகின்றது. இந்த பார்ப்பனீயம் அனைத்தும் தழுவிய சமூக முரண்பாடுகள் சார்ந்து சுரண்டும் ஒரு வர்க்க கோட்பாடாகவும் அதை நடைமுறைப்படுத்துவதாகவும் இருக்கின்றது. அதேநேரம் அதற்கு முரணாக சாதி குறைந்த சுரண்டு வர்க்கம் மீது முஸ்லீம் சுரண்டும் பிரிவு மீதும் இது போன்று பலதளத்தில் தன்னளவில் ஒரு ஒடுக்குமுறையைக் கையாளுகின்றது. இது கோட்பாட்டு தளத்தில் பண்பாட்டுத் தளத்தில் நடைமுறைத் தளத்தில் கையாளுகின்றது. இதைப் படிமுறை சமூக ஒடுக்குமுறை ஊடாகக் கட்டமைக்கின்றது. இதனால் மக்களின் எதிரியாக பார்ப்பனீயம் சிறப்பு பெற்று தனித்துவமாகவும் இருக்கின்றது. உண்மையில் சுரண்டும் வர்க்கத்தின் அனைத்தும் தழுவிய தன்மை ஒருபுறம் மறுபக்கத்தில் குறுகிய தன்மையை அதனுள் அது கொண்டு செயலாற்றுகின்றது. இப்படி குறுகிய ஒரு சிறிய வட்டத்தை அது கட்டமைக்கின்றது.

இதை வரையறுத்துக் கூறப்போனால் பொதுவான ஒரு சட்டவிதியை அல்லது கோட்பாட்டை குறித்த பிரிவுகளுக்கு வழங்க மறுப்பது இதன் சாரமாகும். இது அதுவல்லாத பரந்துபட்ட மக்களுக்கும் அதை மறுப்பதே அதன் மற்றொரு சாரமாகும். இது சில வேளைகளில் வெளிப்படையானதாகவும் சில வேளைகளில் மறைமுகமானதாகவும் இருக்கின்றது. கிட்லரின் ஆரிய மேலாண்மை வெளிப்பட்டு அம்பலமானது போல் பார்ப்பனீயம் வெளிப்படையானதாக பொதுவான சமூக மட்டத்தில் உணரப்படுவதில்லை. பார்ப்பனீயம் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கே எதிரியாக உணரப்படாத வகையில் பார்ப்பனீய மேலாண்மை இயங்குகின்றது.

இது பொருளாதார தளத்தில் பண்பாட்டுத் தளத்தில் கலாச்சார தளத்தில் ஆதிக்கம் பெற்ற ஒன்றாக இயங்குகின்றது. பார்ப்பனீயத்தை உயர்த்துவதன் மூலம் குறுகிய ஒரு பிரிவு அதிக சமூக பொருளாதார நலன்களை அடைகின்றது. இது நிச்சயமாக ஒரு சமூகப்பிரிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் பல சமூகப் பிரிவைச் சேர்ந்த குறுகிய பிரிவுகள் இயங்கமுடியும்;.

இந்த வகையில் தான் யாழ் மேலாதிக்கமும். யாழ் மேலாதிக்கம் தமிழர்கள் என்ற பெயரில்; இயங்குகின்றது. ஆனால் அது ஒட்டு மொத்த தமிழர்களையும் பிரதிநித்துவம் செய்வதில்லை. மாறாக குறித்த ஒரு பிரிவின் குறுகிய நலனை முன்னிலைப்படுத்தி தமிழர்களின் அதேயொத்த மற்றைய பிரிவை இழிவாடி தூற்றி வாழ்கின்றது.

உதாரணமாக முஸ்லீம் மக்கள் பிரிவுடன் முரண்பாடு வரும் போது அந்த மக்களை இழிவாடுகின்றது. கிழக்கு மக்களுடன் முரண்பாடு வரும் போது அந்த மக்களை இழிவாடுகின்றது. இயக்கங்ளில் குற்றங்களை அந்த இயக்கத்தில் உள்ள சாதி குறைந்தவர்களின் தலையீடாக குறுக்கி இழிவாடுகின்றது. இப்படி ஆதிக்கம் பெற்ற பிரிவின் இழிவாடு வடிவங்கள் கொச்சைப்படுத்தும் வடிவங்கள் வசைபாடல்கள் அன்றாடம் கட்டமைக்கப்படுகின்றது. இவை சமூக பொருளாதார அரசியல் மேலாண்மை சார்ந்து அன்றாடம் பல்துறை சார்ந்து காணமுடியும். சின்னச்சின்ன வாழ்வியல் அனுபவங்களின் வாழ்வியல் முறைகளில் அன்றாடம் இதை அடிப்படையாக கொண்ட இழிவாடல்கள் சின்னத் தனங்கள் மொழியாடல்கள் வசைபாடல்கள் வாழ்வியல் முறைகளில் சதா பயன்படுத்தப்படுகின்றது இது அரசியல் தளத்தில் மிகப்பெரிய ஒரு ஒடுக்குமுறையாக வெளிப்படுகின்றது.

சமூக பொருளாதார நலன்களை யாழ் மேலாதிக்கம் அனுபவிக்கின்ற போது தமிழரின் அனைத்து சமூக பிரிவுக்கும் ஓரே அடிப்படையைக் கொண்டு அது செயல்படுவதில்லை. சுரண்டும் போது சுரண்டல் வரையறையை பொதுவாக கொள்வதில்லை. குறிப்பாக பண்பாட்டுத் தளத்தை எடுத்தால் சுரண்டலை செய்யும் ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனுக்கும் சுரண்டும் கிழக்கை சேர்ந்தவனுக்கும் சுரண்டும் ஒரு பெண்ணுக்கும் ஒரே அளவுகோலைக் கொண்ட பண்பாட்டு அடிப்படையை யாழ் மேலாதிக்கம் கொண்டிருப்பதில்லை. சமூகங்களை அல்லது மக்கள் கூட்டங்களை இழிவுபடுத்துவதன் மூலம் தனது தனிப்பெருமையை கட்டி பாதுகாப்பதும் அதைக் கொண்டு நுகர்வதும் தான் யாழ் மேலாதிக்கம். மிகவும் நுட்பமானது ஆனால் இயல்பில் அது வெளிப்படையாக உள்ளது.

நாம் அதற்கு இசைவாக பழக்கப்பட்டவர்கள் என்பதால் அதை உணர்வதில்லை. மறுக்க முனைகின்றோம். ஆனால் அது ஒரு முரண்பாடாக சமூகங்களை பிளக்கவும் இழிவாடவும் பயன்படுகின்றது.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் முதன்மை முரண்பாடாகி தமிழர் என்ற பொது அடையாளப்படுத்தல் ஆதிக்கம் பெற்று கருத்தாக அதேநேரம் அதுவே ஒரு மாபெரும் அணிதிரட்டலாக நிலவிய காலத்தில் கூட இது உறங்கிவிடவில்லை மாறாக சமூகங்கள் இழிவாடப்படுகின்றது. கிழக்கான் வன்னியன் தீவான் பள்ளுப் பறைகள் என்ற எண்ணற்ற சமூக ஒடுக்குமுறைகள் சமூகத்தில் மறைந்துவிடவில்லை. மாறாக அவையே ஆதிக்கம் பெற்ற ஒன்றாக சமூக நிகழ்ச்சிப் போக்கில் அவையும் பாரிய பிளவுகளை உருவாக்கியது உருவாக்குகின்றது. இதுதான் யாழ் மேலாதிக்கம்.

இது எந்த வகையில் என்றால் தமிழ் மக்களின் தலைமைகளை பிரநிதித்துவம் செய்யும் அரசியல் உள்ளடகத்தில் இந்த யாழ் மேலாதிக்கத்தை பிரதிநித்துவம் செய்கின்றது. இந்த யாழ் மேலாதிக்கம் புலிகள் அல்லது மற்றைய இயக்கங்களிள் தோற்றத்துடன் உருவானதல்ல. மாறாக தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளை உருவாக்கிய சமூக பொருளாதார யாழ் மேலாதிக்க தன்மை ஊடாகவே கட்டமைக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இதை மாற்றாத போக்குத் தான் இன்று வரையிலான யாழ் மேலாதிக்கமாக அதன் அரசியலாக உள்ளது.

மிக நுட்பமானது ஆனால் வெளிப்படையானது. யாழ் மேலாதிக்கம் என்பது யாழ் மக்களை பிரதிபலிப்பதில்லை. யாழ் மேலாதிக்கம் மிக குறுகிய ஒரு பிரிவை அடிப்படையாக கொண்டது. இது யாழ் பிரதேசத்தை சேர்ந்தவராகத் தான் இருக்க வேணடு;மென்பதல்ல. சிங்கள இனத்தில் பிறந்த ஒருவன் கூட யாழ் மேலாதிக்கத்தைக் கொண்டு இருக்கமுடியும். இது பிறப்புக்குள் உட்படுவதில்லை. ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் கிழக்கைச் சேர்ந்தவன் ஒரு முஸ்லீம் கூட யாழ் மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யமுடியும்.

உண்மையில் இந்த யாழ் மேலாதிக்கத்தை இனம் காணல் என்பது ஒரு ஒடுக்குமுறை சார்ந்ததாக குறுக்கிக் காட்டுவது கூட யாழ் மேலாதிக்கத்தின் ஒரு வால்தான். அதைவிட்டு அது விலகுவதில்லை. யாழ் மேலாதிக்கத்தின் பன்மைக் கூறு மீது செயல்படுவதுதான் யாழ் மேலாதிக்கத்தை உண்மையாக மறுத்து போராடுவதாகும்.

மேலதிகமாக இதை தெரிந்துகொள்ள

யாழ் மேலாதிக்கம் தான் தமிழ் இனத்தைப் பிளக்கின்றது.

தமிழரங்கம் said...

யாழ் மேலாதிக்கம் தான் தமிழ் இனத்தைப் பிளக்கின்றது.
பி.இரயாகரன்
17.08.2006

புலிகள் மற்றும் புலிகள் அல்லாத அனைத்து தளத்திலும், யாழ் மேலாதிக்கம் தான் தமிழ் மக்களையே பிளந்து, அவர்களை தனக்குள் அடிமைப்படுத்துகின்றது. சமூகத்தில் காணப்படும் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட மறுக்கும் உள்ளடக்கம் தான், யாழ் மேலாதிக்கம். யாழ் மேலாதிக்கம் என்பது தனி நபர்கள் அல்லது குழுக்கள் சார்ந்ததல்ல. மாறாக மேலாதிக்கம் பெற்ற வாழ்வியல் மற்றும் சிந்தனை முறையாகும். அது சமூக பொருளாதார ஆதிக்கம் கொண்டது. இது குறித்த ஒரு மக்கள் பிரிவை அடிப்படையாக கொண்ட போது, இந்த மக்கள் அல்லாத சமூக பிரிவிலும் கூட பிரதிபலிக்கின்றது. இதன் மூலம் முழு மக்களையும் தனக்குள், தனது சிந்தனை வாழ்வியல் முறைக்குள் அடிமைப்படுத்தி சிதைக்கின்றது. யாழ் மேலாதிக்க சிந்தனை முறை என்பது, சமூகத்தின் அனைத்து சமூக இழிவுகளையும் ஒருங்கே கொண்டதே யாழ் மேலாதிக்கமாகும்.

யாழ் மேலாதிக்கம் தமிழ் பேசும் மக்களின் மேலான, மேன்மை பெற்ற அதிகாரத்துடன் கூடிய ஒரு அடக்குமுறை இயந்திரமாக உள்ளது. இன்று இந்த யாழ் மேலாதிக்கம் புலிகள் என்ற பாசிச வடிவில், சமூகத்தை பிளந்து அடக்குகின்றது. இதேபோல் தான் புலியெதிர்ப்பு அணியும் கூட, யாழ் மேலாதிக்க உள்ளடகத்தில் தான் தன்னையும் தனது புலியெதிர்ப்பையும் தகவமைத்துள்ளது. 13.08.2006 ரீ.பீ.சீ அரசியல் அரங்கில் புலியெதிர்ப்பு அணி தனது யாழ்மேலாதிக்க குறுக்குப் புத்தியையே அம்மணமாக்கியது. யாழ்மேலாதிக்க உணர்வுடன், மற்றைய சமூகங்கள் மீதான யாழ் மேலாதிக்க ஒடுக்குமுறையை பற்றி பேசுவதை, ஏன் தமது புலியெதிர்பு அரசியல் கலந்துரையாடலில் பேசுவதற்கு கூட அனுமதிக்க மறுத்து, பேசும் போது அடிக்கடி குறுக்கிட்டு அவர்களின் நேரத்தைக் கூட மட்டுப்படுத்தினர். யாழ் மேலாதிக்கத்தைப் பற்றி பேசுவது, புலிக்கு எதிரான யாழ் மேலாதிக்க நிலையை பலவீனப்படுத்தும் என்றனர். இதை ரீ.பீ.சீ வானொலி நடத்துனரும், யாழ் மேலாதிக்க புலியெதிர்ப்பு எடுபிடிகளும் கூட வந்து இதையே குலைத்தனர். யாழ் மேலாதிக்கம் ஆதிக்கம் பெற்ற ஒன்றாகவே புலி மற்றும் புலியெதிர்ப்பிலும் கூட காணப்படுகின்றது. ஆனால் இதை பலரும் புரிந்துகொள்ளாத நிலையில், இதை சிலர் வடக்கு கிழக்குள் மட்டும் பிரித்து பார்ப்பதும் நிகழ்கின்றது.

யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன? இந்த அடிப்படையான கேள்வி மூலம், இந்த விடையத்தை நாம் ஆராய்வது அவசியமாகின்றது. இது கிழக்கு மக்கள் மேலான யாழ் மக்களின் மேலாதிக்கம் என்று மட்டுப்படுத்தி சுருக்கிப் பார்க்கமுடியாது. யாழ் மேலாதிக்கம் என்பது, சமூகத்தில் உள்ள சகலவிதமான ஒடுக்குமுறையையும், மையப்படுத்தி அதற்கு தலைமை தாங்கியாளும் ஒரு அரசியல் சித்தாந்த பொருளாதாரக் கோட்பாடாகும். இது ஒரு வாழ்வியல் முறை. இது தனது அதிகாரம், பண்பாடு, கலாச்சாரம், சிந்தனை முறை, கோட்பாடு என்று, எங்கும் எதிலும் புரையோடி ஆதிக்கம் செய்யும் ஒரு வாழ்வியல் முறையாகும். சமூகங்களைப் பிளந்து மக்களை இழிவாடி மக்களை அடக்கியாள்வதாகும். இது சமூகத்தில் வெவ்வேறு கட்டத்தில், வெவ்வேறு வடிவத்தில் பிரதிபலிக்கின்றது.

சிங்களப் பேரினவாத மேலாதிக்கம் எப்படி தமிழ் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அப்படிப்பட்டதே யாழ் மேலாதிக்கமும். சிங்கள மேலாதிக்கம் மொழி, பண்பாடு, கலாச்சாரம், ஆணாதிக்கம் முதல் இராணுவ வடிவில் கூட தமிழ் மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது, செலுத்த முனைகின்றது. மேலாதிக்கம் என்பது சமூகத்தின் அனைத்து துறையிலும் பிரதிபலிக்கின்றது.

இது போல் யாழ் மேலாதிக்கம் முஸ்லீம் மக்களை இழிவாடுகின்றது. சிங்கள மக்களை இழிவாடுகின்றது. கிழக்கு வாழ் தமிழ் மக்களை இழிவாடுகின்றது. வன்னி மக்களை இழிவாடுகின்றது. தீவு மக்களை இழிவாடுகின்றது. இப்படி இழிவாடல்களின் மொத்த வடிவம் தான் யாழ் மேலாதிக்கம். மக்களை தன்னையொத்த மக்களாக காணமறுத்து, அவர்களை இழிவாடுவதும் இதன் அடிப்படையாகும். இதற்கு எதிராக போராட மறுப்பது தான் யாழ் மேலாதிகத்தினை மேலும் நெருக்கமாக இனம் காணவுதவுகின்றது.

யாழ் மேலாதிக்கம் என்பது மேலும் பல அம்சத்தை ஒருங்கே கொண்டது. அது பிரதேச வேறுபாட்டை, சாதிய மேலாதிக்கத்தை, ஆணாதிக்கத்தை, இனவாதத்தை, உழைப்பை சுரண்டுவதை, சமூக இழிவாடல்களை என அனைத்தையும் ஒருங்கே சேர்ந்து பல்துறை சார்ந்த ஒன்றாக ஒருமித்துள்ளது. இது மனிதவினத்தைப் பிளந்து ஆதிக்கம் செலுத்துகின்றது. மனித பிளவுகளை களைவதையே மறுக்கின்றது. யாழ் மேலாதிக்கம் என்பது சமூகத்தின் ஒடுக்குமுறைகளுடன் ஒருங்கே ஒன்றையொன்று சார்ந்து உயிர்வாழ்கின்றது. சாதி ஒழிய வேண்டும் என்றால் யாழ் மேலாதிக்கம் ஒழிய வேண்டும். கிழக்கு மக்கள் மேலான யாழ் மேலாதிக்கம் ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழியவேண்டும். இதை எல்லாம் மறுப்பவர்கள் தான் புலியாகவும், புலியெதிர்ப்பாகவும் தமது யாழ் மேலாதிக்கவாதிகளாக அரசியலில் உள்ளனர். இதனால் தான் சமூக ஒடுக்குமுறையை ஒழிப்பதை மறுத்து, புலியெதிர்ப்பு அரசியல் பேசுகின்றனர்.

யாழ் மேலாதிக்கம் என்பது மேட்டுக்குடிகளின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, சாதியம், பிரதேச மேன்மை, பொருளாதார மேலாண்மை, சாதிய மேலாண்மை, யாழ் ஆணாதிக்க பலம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அடக்கியாள்கின்றது. மொத்த சமூகத்தையும் அதற்குட்படுத்தி, மற்றயவற்றை இழிவாடி, தம்மை மேன்மையான ஒன்றாக காட்டி மக்களையே அடக்கியாள்வது தான் யாழ் மேலாதிக்கம். மற்றைய மக்களை தம்மையொத்த மக்களாக அங்கீகரிப்பதில்லை.

இந்த மேலாதிக்கம் வெளிப்படும் வடிவம் பலவகைப்பட்டது. அது எப்போதும் ஒற்றைப் பரிணாமத்தில் பிரதிபலிக்காது. அது பன்மை முகத்துடன், மற்றொரு ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவுடன் ஒட்டி நின்றும் அல்லது ஒடுக்கும் பிரிவுடன் சேர்ந்தும் பிரதிபலிக்கும். சேர்.பொன் இராமநாதன் காலத்தில் சிங்கள மேலாதிக்க பிரிவுடன் நின்று தான், யாழ் மேலாதிக்கம் ஆட்டம் போட்டது. தாழ்ந்த சாதிகளை ஒடுக்கவும், முஸ்லீம் மக்களை அடக்கியொடுக்கவும் யாழ் மேலாதிக்கம் சிங்கள மேலாதிக்கவாதிகளுடன் சேர்ந்து முனைந்தது. 1960களில் யாழ் பிரதேசத்தில் நடந்த சாதிய போராட்டங்களின் போது, யாழ் மேலாதிக்கம் சிங்கள பேரினவாதத்துடன் கை கோர்த்துக் கொண்டது. இப்படி யாழ் மேலாதிக்கம் நெகிழ்ச்சி தன்மை கொண்டு, தனது ஆதிக்கத்தை மற்றய சமூகங்களின் மீது தகவமைக்கின்றது.

யாழ் மேலாதிக்கம் தனது இழிவாடலை கிழக்கத்தையான், தீவான், வன்னியான், தொப்பி பிரட்டி, பள்ளன், பறையன், கரையான் என்று பல வழிகளில், தன்னையும் தனது மேன்மையையும் ஊர் அறிய பறைசாற்றுகின்றது. சின்னச்சின்ன விடையங்கள் தொடக்கம் மக்களை இழிவாடி புறந்தள்ளி ஒடுக்குகின்றது. உதாரணமாக கிழக்கைச் சேர்ந்த பெண் யாழ் ஆணைத் திருமணம் செய்யும் போது, பாய்விரித்து வசியம் செய்து ஆண்களை மடக்குபவர்கள் தான் மட்டக்கிளப்பான் என்று யாழ் கண்ணோட்டம், கிழக்கு பெண்களைப் பற்றி ஆணாதிக்க யாழ் மேலாதிக்க சிந்தனை முறை மூலம் இழிவாடுகின்றது. யாழ் அல்லாத மக்கள் கதைக்கும் மொழியைப் பற்றி கொச்சைத்தனமான இழிவாடல்கள் முதல் யாழ் மொழிதான் தூய்மையானது என்ற யாழ் மேலாதிக்க வக்கிரத்தையும் நாம் அன்றாடம் சந்திக்கின்றோம். கருணா விவகாரம் அரங்கில் வந்தபோது, யாழ் மேலாதிக்கம் கிழக்கு மக்களை இழிவாடியாதை நாம், பல தளத்தில் பலவடிவில் சந்தித்தோம். இப்படி ஆயிரக்கணக்கான நடைமுறை சார்ந்த யாழ் மேலாதிக்க இழிவாடல்கள் யாழ் மேலாண்மை சார்ந்து காணப்படுகின்றது.

இதன் மேல் தான் யாழ் தலைமைத்துவம் உருவாகின்றது. இந்த யாழ் மையவாதம் என்பது அரசியல் பொருளாதாரம் மட்டுமின்றி, மொழி பண்பாடு கலாச்சார மேலாண்மையையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த சமூக மேலாண்மை சமூகத்தின் ஆதிகம் பெறுவதால், சமூக அதிகாரம் மீது முழுமையான வேரைக் கொண்டது. இந்த வேர் யாழ் மேலாண்மை சார்ந்து, தன்னை உயர் பண்பாடாக காட்டி மற்றையவற்றை இழிவான பண்பாடாக்குகின்றது. மற்றைய பிரிவில் இருந்து அதிகாரத்துக்கு வரக்கூடியவர்களைக் கூட, இந்த யாழ் மேலாதிக்க பண்பாடு உள்வாங்கி தனக்கு இசைவானவராக மாற்றிவிடுகின்றது.

உதாரணமாக இந்து பார்ப்பனியம் தனது உயர் நிலை சாதியத்தையும் அதன் பண்பாட்டையும் தக்கவைக்க, அடிநிலைச் சாதிகளில் கூட பார்ப்பனிய உணர்வுடைய பண்பாட்டு ஆதிக்க மனப்பான்மையை உருவாக்கி எப்படி இயக்குகின்றதோ அதையொத்தது தான் இதுவும். இது போல் தான் ஆணாதிக்க கருத்தியலும் நடைமுறையும். பெண்ணே ஆணாதிக்கவாதியாக இயங்குவது போல் தான், யாழ் மேலாதிக்க உணர்வும், அதிகாரமும் மற்றைய பிரிவுகள் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது.

சமூக மேலாதிக்கம் சார்ந்த பொருளாதாரம், கல்வி என அனைத்தும் யாழ் மேலாண்மை பெற்றதாக மாறிவிடுகின்றது. மற்றையவற்றை ஒடுக்குகின்றது. சிங்கள இனவாதிகள் கொண்டு வந்த தரப்படுத்தலை எடுத்தால், யாழ் மேலாதிக்கம் அதை தனது நலனில் மட்டும் நின்று எதிர்த்தது. எதிர்த்த போது தனது நலன் பாதிக்கப்படுவதை மட்டும் முன்னிலைப்படுத்தியது. முன்னிலைப்படுத்தும்போது மொத்த தமிழ் மக்களின் பெயரில் அதைக் காட்டிக் கொண்டது. அதற்கு தமிழ் மக்கள் சார்பாக முழுப் புள்ளிவிபரத்தையும் கேடாகவே, தனது நோக்கத்துக்கு பயன்படுத்திக் கொண்டது. தரப்படுத்தல் கிழக்கிலும், வன்னியிலும் அதிக வாய்ப்பை அந்த மண்ணில் பிறந்தவாகளுக்கு உருவாக்கிய போதும், அதை யாழ் மேலாதிக்கம் கண்டு கொள்ளவேயில்லை. அதையும் சேர்த்து தமிழ் மக்களின் பெயரால் எதிர்த்தது. அதை திசை திருப்பி தனது யாழ் மேலாதிக்க கருத்துக்கு கிழக்கையும் பலியிட்டது. யாழ் மேலாதிக்கம் பாரம்பரியமாக தான் பெற்று வந்த சலுகைகள் மூலம் ஆதிக்கம் பெற்ற ஒன்றாக இருப்பதால், இயல்பாக ஆளுமை பெற்ற ஒன்றாக மாறி தனது சலுகைகளையும் ஆதிக்கத்தையும் முதன்னிலைப் படுத்துகின்றது. தன்னைச் சுற்றி சகல வளத்தையும் தக்கவைக்கின்றது.

யாழ் மேலாதிக்கம் சிங்கள மேலாதிக்கத்துடன் முரண்படுவது, தனது குறுகிய மேலாதிக்க நலனை தக்கவைக்கத்தான். யாழ் மேலாதிக்கம் சிங்கள மேலாதிக்கம் ஆளுமை பெற்றதாக உருவாக முன்னமே, சிங்கள மக்கள் மீது கூட தனது மேலாதிக்க அதிகாரத்தை செலுத்தியது. சிங்கள மக்களைக் கூட ஒடுக்கியது. வெள்ளைக்காரனுக்கு துணை போனதன் மூலம், முழு இலங்கையிலும் யாழ் மேலாதிக்கம் பலம்பொருந்திய ஒன்றாக ஆட்சிபுரிந்தது. அரசு நிர்வாகம் முழுமையாக யாழ் மேலாதிக்கத்தின் கையில் காணப்பட்டது. இதன் எதிர்வினையில் தான், சிங்கள பேரினவாத மேலாதிக்கம் உருவானது. இதுவே இனமோதலாக மாறியது. இன்று நடப்பது யாழ் மேலாதிக்கத்துக்கும் சிங்களமேலாதிகத்துக்குமான மோதல் தான். இதனால் தான் மக்களை தமது யாழ்மேலாதிக்க நலனுக்கு கிழே போட்டு ஏறி மிதிக்கின்றனர். இதையே தான் புலியெதிர்ப்புக் கும்பலும் செய்கின்றது.

இந்த யாழ் மேலாதிக்கம் தன்னை தக்கவைக்க, தமிழ் இன மேலாதிக்கத்தினுள் தன்னை தகமைத்துக் கொண்டு, மொத்த தமிழ்மக்கள் மீதான யாழ் மேலாதிகத்தை தக்கவைக்கின்றது. புலி பாசிசமும் சரி, புலியெதிர்ப்பு கும்பலும் சரி சமூக ஒடுக்குமுறையை எதிர்த்து போராட மறுக்கின்றது. அதைப் பற்றி பேசுவதைக் கூட மறுக்கின்றது. இதை மாற்றுக் கருத்தாகக் கூட அங்கீகரிப்பதில்லை. சமூக முரண்பாடுகளை பேசுவது, அதைக் களையப் போராடுவதை யாழ் மேலாதிக்கம் தனக்கு எதிரானதாகவே பார்க்கின்றது. மக்கள் இதை எதிர்த்துப் போராடாத வரை, தமிழ் மக்களின் விடிவு என்பது சாத்தியமற்றது.

தமிழரங்கம் said...

தமிழ் மக்களையும், சுயநிர்ணயத்தையும் எப்படி நாங்கள் ஏமாற்றி மோசடி செய்தோம் என்பதை, பாலசிங்கம் தனது மனைவி மூலமான நூலில் ஒரு சாட்சியமாக முன்வைத்து அதை அம்பலமாக்கியுள்ளார். "ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பதை நியாயப்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகள் தங்களது ஆரம்பகால வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மார்க்சிய லெனினிச தத்துவங்களை பயன்படுத்தினார்கள்.",1 ,என்று தெளிவாக பிரகடனம் செய்துள்ளனர். புலிகளால் வெளியிடப்பட்டதும், பாலசிங்கம் தனது சுயசரிதையாக தனது மனைவி மூலம் வெளியிட்ட இந்த நூலில் இதைக் குறிப்பிடுகின்றார். தமிழ் மக்களின் சுயநிர்ணயம் மார்க்சிய லெனினியத்திலேயே இருப்பதை ஏற்றுக்கொள்ளும் இக் கூற்று, அதை தாம் கைவிட்டு நிராகரித்திருப்பதையும் தெளிவாக ஒத்துக்கொள்கின்றது. இதை பாலசிங்கம் தனது மனைவியூடாக சொல்லியுள்ளது தான், இதில் உள்ள சிறப்பு. இங்கு ,நியாயப்படுத்தல் என்பது, சாராம்சத்தில் மக்களை மோசடி செய்து ஏமாற்றுவதாகும். இன்று இந்த சுயநிர்ணயத்தை புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அணியும் கூட முன்வைப்பதில்லை,

தமிழரங்கம் said...

புலிகள் என்ற பெயரில், பிரபாகரனின் தனிப்பட்ட விருப்பங்கள் தேசியமாகியது. இதற்கு மேல் பூச்சு அடிக்கும் வேலையைத் தான், பாலசிங்கம் செய்தார். பிரபாகரனின் சொந்த மன வக்கிரங்கள் தான், புலிகளின் செயலாகியது. இதை பாலசிங்கத்தின் குடும்பத்தை தவிர, வேறு யாராலும் இதை அனைவரும் ஏற்கும்படி சிறப்பாக சொல்லமுடியாது. "பிரபாகரன் அவர்கள் தமது பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பதாக இருந்தால், அவர் ஒரு துறவிக்கான கோலத்துடனேயே வாழ்ந்திருக்க வேண்டும். அப்படி நடந்தால், அனைத்து போராளிகளும், அப்போதும் சரி, இப்போதும் சரி உணர்ச்சியற்ற மலடர்களாகவும் மனவிரக்தி பிடித்தவர்களாகவும் வாழவேண்டியிருக்கும்"1 ஒரு சர்வாதிகாரி பற்றி, ஒரு சர்வாதிகார பாசிச இயக்கம் பற்றிய, ஒரு தெளிவான துல்லியமான சித்திரம். இது தான் புலி. இதற்கு வெளியில் புலிக்கு வேறு முகம் கிடையாது. மக்கள் நலன், தேசியம், சுயநிர்ணயம் என எதுவும் இதற்குள் கிடையாது. பிரபாகரன் விரும்பம், நோக்கம், நடைமுறை எதுவும், இதற்குள் துளியளவும் கூட கிடையாது.

தமிழரங்கம் said...

இதை பாலசிங்கம் அழகாகக் கூறுகின்றார். ,"... சில பேர் என்னிடம் கேட்டார்கள், செலவநாயகம் ஐயாவும் இதைத்தான் கேட்டார். சமஷ்டியை அவங்கள் கொடுக்கவில்லை. பிறகு நீங்கள் ஏன் இதைக் கேட்கிறியள் என்று. அவர்கள் ஏமாற்றி விட்டால், என்ன செய்வீர்கள் என்று. நான் சொன்னன் ஏமாற்றட்டும், அதைத் தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். செல்வநாயகத்தார் என்ன வைத்திருந்தார். அவர் அகிம்சையை ஆயுதமாக வைத்திருந்தார். நங்கள் பீரங்கிகளை அல்லவா வைத்திருக்கின்றோம்"3 தமிழர் விடுதலை கூட்டணியால் உருவாக்கி வளர்க்கப்பட்ட ஒரு கூலிக் கும்பல், காலம்கடந்தும் அரசியல் ரீதியாக எதையும் மாற்றிவிடுவதில்லை.

தமிழரங்கம் said...

பாலசிங்கத்தின் மனைவி அடேல் "தத்துவம் உலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற மார்க்சிய தத்துவ சிந்தனைக் கீற்று, பாலசிங்கத்துக்கு பிடித்திருந்தது"1 என்கின்றார். வெறும் பிடிப்புத்தான். இப்படிப்பட்ட பாலசிங்கம் மார்க்சிய சமூக மாற்றத்தை எதிர்த்து, நடைமுறையில் ஒரு வலதுசாரியாக வாழ்ந்தவர். இவர் "மார்க்சின் சமூக தத்துவத்தையும் சிக்மன்ட் பிராய்டின் உளவியல் தரிசனத்தையும் இணைத்து இழைக்க முனைந்தார்"1 என்கின்றார். அது ஒரு மோசடிக்காரன் மட்டும் செய்யக் கூடிய ஒரு செயல். இப்படி முரணாகவே சிந்தித்தவர்கள் "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி" , என்ற நூலில் எழுதிய சுயநிர்ணயம் வெறும் நியாயப்படுத்தல் தானே ஒழிய நடைமுறைக்கு அல்ல. "தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் நியாயப்படுத்தினார்."1 இப்படி மக்களை ஏமாற்றும் தனது வாழ்க்கையையே நியாயப்படுத்துவதில் தான், அவரின் தத்துவ விரசல் காணப்பட்டது. இந்த பாலசிங்கம் மாக்சிய-லெனினிச சிந்தனையில் சுயநிர்ணய உரிமையை விளக்கியவர், இதன் பின் அவரே சுயநிர்ணய உரிமை மறுப்பாளரானார்.

தமிழரங்கம் said...

அதை அவரே கூறகின்றார். "சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்று ஐ.நா.சாசனத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து புதிய அர்த்த பரிமாணத்துடன் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடைந்து வரும் கோட்பாடு. முன்பு ஒரு சர்வதேச சட்டரீதியாக இருந்தது. இப்போது அனைத்துலக மக்களுக்கும் பொருத்தமான ஒரு மனித உரிமையாக இந்தக் கோட்பாடு விளங்குகின்றது" இப்படி வேறு யாராலும் கூறமுடியாது. முன்பு மாக்சிய-லெனினிச சிந்தனையில் சுயநிர்ணய உரிமையை கண்டவர், இன்று உலகமயமாதல் எல்லைக்குள், ஐ.நா.சாசனத்தில காண்கின்றார். இப்படி தான் புலியின் அரசியல் சீரழிந்தது. சொந்த தேசிய விடுதலைப் போராட்டத்தையே, சொந்த தியாகத்தையே இப்படி யாரும் இவ்வளவு நேர்த்தியாக கேவலப்படுத்தி ஏகாதிபத்தியத்துக்கு மொத்தமாகவே விற்கமுடியாது. இதை அனைத்துலக மனிதவுரிமை என்பதன் மூலம், அனைத்துலகமும் சுரண்டும் உரிமையை புலிகள் அங்கீகரிக்கின்றனர். ஐ.நாவின் உலக அகராதியிலும், புலிகளின் தேசிய அகராதியிலும், மனிதவுரிமை ஒன்றுபட்டுள்ளது. இது உள்ளடக்கத்தில் மக்களை சூறையாடுவதுதான். இது தான் சுயநிர்ணயம் என்றே புலிகள் வக்காலத்து வாங்குகின்றனர்.

தமிழரங்கம் said...

புலிகளிடம் அமெரிக்கா உங்கள் பொருளாதார கொள்கை என்ன என்று கேட்ட போது, பாலசிங்கம் அசகு பிசகாது, ஐயா நாங்கள் உங்களின் கொத்தடிமைகள் என்றார். அதை அவர் "தாராள ஜனநாயக பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கைக்கே நாம் ஆதரவானவர்கள் என்பதை மட்டும் என்னால் கூறமுடியும்"3 என்றார். எப்படிப்பட்ட தமிழ் தேசியம்! எப்படிப்பட்ட தேசிய விடுதலை! எப்படிப்பட்ட சுயநிர்ணயம்? அனைத்து தியாகத்தையும், புலிகளால் மட்டும்தான் மொத்தமாக விற்கமுடியும். தமிழ் மக்களின் விடுதலையை திறந்த பொருளாதார கொள்கையாக உள்ள உலகமயமாதல் எப்படி ஏற்படுத்தும். யாருக்காவது அறிவும், நாணயமும் இருந்தால் கூறுங்கள்.

தமிழரங்கம் said...

புலிகளின் வரலாற்றை அவர்களின் சொந்த குப்பைத் தொட்டியில் இருந்து தேடும் போது, எவ்வளவு பெரிய மோசடிக்காரர்கள் என்பதைக் காணமுடியும். இதற்கு ஏற்ற கோயபல்ஸ் தான் பாலசிங்கம். 1981 இல் பிரபாகரன் எழுதிய கவிதையில் ,

"---

நாம் செல்லும் இடமெல்லாம் ,

எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்,

மக்களிடம் உள்ள , பிரதேசம் சாதி,

மதமென்னும் பேய்களும்,அலறி ஓடுகின்றன,

எமது படையணி விரைகின்றது,…, ,

எமது தேசத்தை மீட்க,

நாம் செல்லும் இடமெல்லாம் ,

காடுகள் கழனிகள் ஆகின்றன,

வெட்டிப் பேச்சு வீரர்கள்,

மிரண்டோடுகின்றனர்..!,

உழைப்போர் முகங்களில் ,

உவகை தெரிகிறது,

ஏழைகளின் முகங்களில்,

புன்னகை உதயமாகின்றது."

,4, ,

என்ன புல்லரிக்கும் வார்த்தை ஜாலங்கள். இயக்க தலைவரின் பெயரில் இது பதிவாகியுள்ளது. பொதுவாக பாலசிங்கமே பிரபாகரனின் கருத்துக்கள் பலவற்றை எழுதியவர் என்ற வகையில், ஒரு இனத்தை இருவரும் சேர்ந்து இழிவாக எள்ளிநகையாடினர். இந்த கவிதை வரிகளிலுள்ள ஏதாவது ஒன்றை புலிகள் செய்துள்ளனரா? தலைவருக்காக உயிரையே விடத் தயாராக உள்ள நீஙகள், தலைவரின் இந்தக் கூற்றுக்காக போராடி உயிர் விடுவீர்களா? இனப்பற்றாளர்களே எங்கே உங்கள் கைகளை இதற்காக உயர்த்துங்கள்! யாரை ஏமாற்றுகின்றீர்கள்?

தமிழரங்கம் said...

ஒரு சமூகத்ததை எந்தளவுக்கு இழிவாக்கி இழிவுபடுத்த முடியுமோ, அந்தளவுக்கு பிரபாகரன் என்ற தனிமனிதனைச் சுற்றி ஒளிவட்டம் கட்டித்தான் பாலசிங்கத்தால் குழிபறிக்க முடிந்தது. இந்த ஒளிவட்டம் குறுகிய பாசிசத்தால் வக்கிரம் கொண்டது. அதை பாலசிங்கம் குடும்பத்தால் தான் அழகாக கூறமுடிகின்றது. ,"பிரபாகரனைப் பொறுத்த வரையில் துப்பாக்கிகளில் தான் நாட்டம் உண்டு",1, இதற்குள் தான் அவரின் அனைத்து ஆளுமையும், சிந்தனையும். இது தான் அவரின் எல்லையாகின்ற போது, பாசிசத்தைத் தவிர வேறு எதையும் மக்களுக்காக அவரால் கொடுக்க சிந்திக்க முடியாது. இதற்கு வெளியில் அவரின் நாட்டம் என்ன? ,"பிரபாகரனுக்கு அவனுடைய போராளிகளுக்கும் ஆங்கிலப் படங்கள் தான் பிடிக்கும். குறிப்பாக போர்ப் படங்கள்"1 வேறு ,"சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படையில் இன்பங்களில் ஒன்று என்பதும்",1, "அவருடைய அணிகலன் கச்சிதமாக இருக்கும் ஆடை புனைவது பிரபாகரன் அவர்களுக்கு ஒரு நிகழ்வு",1 ,வேறு என்ன தான் இருக்கும். ,"நீண்ட தாடியுடனோ, அழுக்கான உடைகளுடனோ ,, நடமாடவில்லை. அப்படிப்பட்ட தோற்றம் பிரபாகரனுக்கு சகிக்க முடியாத ஒன்று",1, இப்படி உள்ளவர்கள் எப்படி மக்களுக்காக போராடமுடியும். இப்படிப்பட்ட பிரபாகரனும் பின்னால் நின்று பாலசிங்கம் ஒளிவட்டம் கட்ட, தமிழ் மக்கள் கையேந்துவதைத் தவிர வேறு எந்த வழியும் கிடையாது.

தமிழரங்கம் said...

இதற்கு மாறாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் வசனத்தில் மக்களை ஏமாற்றி தாம் மட்டும் வாழமுனைகின்றனர்.

"உழைப்போர் முகங்களில்,

உவகை தெரிகிறது,

ஏழைகளின் முகங்களில்,

புன்னகை உதயமாகின்றது.",4, இதை மக்களின் வாழ்வாக உருவாக்கிப் போட்ட சுவையாக உண்ண முடிகின்றது. கச்சிதமாக ஆடை அணிய முடிகின்றது. நீங்கள் சொல்லுங்கள். மக்கள் நலன் சார்ந்த ஒரு படத்தை பார்க்கும், சமூக ரசனை கிடையாது. வாழ்க்கைக்கு உதவாத மனித வாழ்வை இழிவாடுகின்ற, அமெரிக்க கொலிவூட் வக்கிரங்களில் மூழ்கி எழுகின்றனர். இவர்கள் எப்படி சமூகத்தைப் பற்றி நேசிக்கவும், சிந்திக்கமுடியும்.

பாலசிங்கம் குடும்பம் இதையும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றனர். ,"சோஷலிச தத்துவம் மட்டில் பல போராளிகளுக்கு உள்ளார்ந்த பற்று இருந்தது. ஆனால் யாரும் மார்க்சிய நிலைப்பாட்டை என்றும் தழுவியதில்லை. மாக்சிய புரட்சியாளர்கள் என்ற அந்த மாமூல் தோற்றம் கூட இல்லை",1, தத்துவ பற்றும், தோற்றமும் எப்படித்தான் இருக்கமுடியும். அவை பிரபாகரனுக்கு பிடிக்காத ஒரு விடையம். இதை மீறினால் தண்டனை மரணம் வரை உண்டு. அதையும் நாம் கூறத் தேவையில்லை. "அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை.",1 ,எதைப்பற்றி தான் அவர் அலட்டிக் கொள்வார். சுவையான உணவு, கச்சிதமான உடை, ஆயுதம், சண்டை (ப் படம்) இப்படி ஒரு தனிநபரை சுற்றி உருவான இயக்கம், மக்கள் பற்றி எதையும் அலட்டிக் கொள்வதில்லை. இந்த பாசிச மாபியா இயக்கத்துக்கு, பாலசிங்கம் கோயபல்ஸ்சாக இருந்தவர்.

தமிழரங்கம் said...

இதே பிரபாகரன் 1992 இல் தனது மேதினம் செய்தியில் "போராட்டப் பளுவை ஒரு தோளிலும், பொருளாதாரப் பளுவை மறு தோளிலுமாக, உறுதி தளராது சுமந்து நிற்கும் தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்."5 என்கின்றார். இப்படி கூறியவர், அந்த தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் தொண்டைக் குழியை வெட்டியவர்கள். பிரபாகரன் கீழ்வாழும் தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் இன்றைய நிலை என்ன? "தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்."5 என்றவர், உண்மையில் அதற்கு வெளியில் நின்று செயற்படுவதையும், தமிழ் பாட்டாளி வேறு, நாங்கள் வேறு என்பதையும் அவராகவே உணர்த்தி நிற்கின்றாh. இந்த வகையில் தமிழ் பாட்டாளி வர்க்கத்தையே உதைத்து சுரண்டி வந்தவர்கள், தமது சொந்த அரசியல் திட்டத்தில் என்ன சொல்லுகின்றனர்.

அந்த திட்டத்துக்கு அழகாகவே "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி",6,, என்று இந்த பாசிட்டுக்கள் தலைப்பிட்டனர். அதில் "தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்றனர். இப்படி மக்களை ஏமாற்றி மோசடி செய்ய, பொய்கார கோயபல்ஸ்சுகளால் மட்டும் தான் முடியும்.,

இந்த கோயபல்ஸ் பாசிச கும்பல் அதனுடன் மட்டும் தமது மோசடியை நிறுத்தவில்லை. "தேசிய விடுதலை எனும் பொழுது ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே"6 தமது இலட்சியம் என்றனர். அதுவே "தமிழீழத் தாகம்"6 என்றனர் "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும" ஆட்சியாக அமையும் என்றனர். மேலும் அவர்கள் "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்"6 என்றனர். அத்துடன் விட்டார்களா "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்"6 என்றனர். இப்படி புலிகள் சொன்னார்கள். ஒரு போராட்டத்தை இப்படிச் சொல்லி மோசடி செய்தவர்கள் யார்? ஒரு கணம் சுயமாக உங்களால் சிந்திக்க முடியமா?

எவ்வளவு பெரிய அரசியல் மோசடி. மக்களின் கழுத்தை அறுத்து எறிந்த வரலாறு இது. சுயநிர்ணயயுரிமைப் போராட்டத்தை மோசடி செய்துள்னனர். இன்று இதைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. பேசுபவர்களை அவர்கள் உயிருடன் விடுவதில்லை. அன்று மக்கள் பற்றி பேசுவதற்கு இருந்த குறைந்தபட்ச அக்கறை, இன்று இந்த பாசிட்டுகளிடம் கிடையாது. இதற்கு வழிகாட்டிய கோயபல்ஸ் பாலசிங்கம் எவ்வளவு பெரிய பொய்யனாக, ஒரு மோசடிக்காரனாக இருக்கின்றான். இதைத் தான் நாசி கோயபல்ஸ் செய்தான். ஈழத்து கோயபல்ஸ்சாக பாலசிங்கம் செயல்பட்டார் என்பதோடு, தமிழ் மக்களின் மேலான அரசியல் படுகொலைகள் மூலம் தத்துவவாதியானவர்.

தமிழரங்கம் said...

தமிழ் சமூகத்தையும் உலகத்தையும் ஏமாற்றுவதில் தான் அவரின் போக்கிரித்தனமே இருந்தது. தமது பாசிச அரசியலை மற்றொரு பாசிட்டான எம்.ஜி.ஆர்க்கு பாலசிங்கம் எடுத்துக் கூறுவதே பாசிட்டுகளுக்கேயுரிய ஒரு தனி அழகு. "விடுதலைப்புலிகள் கம்யூனிஸ்ட்டுக்கள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம். ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்"7 என்றார் இந்த ஈழத்து கோயபல்ஸ். அத்துடன் விடவில்லை "நீங்கள் ஏழைகளின் துயர்துடைக்கத் தொண்டாற்றவில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்"7 என்றார். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்துக் காட்டி, மக்களை வாழ்வில் ஏமாற்றினார். நாங்கள் போராட்டத்தில் நடித்து நடைமுறையில் ஏமாற்றுகின்றோம் என்கின்றார். "தலைவர் பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும் வீர வரலாறும் எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்தது"7 இப்படி இரண்டு பேரின் பாசிச நோக்கமும் உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான் ஒன்று என்பதை கூறி கோடிக்கணக்கில் அதற்காக எம்.ஜி.ஆர்ரிடம் பணம் வாங்க முடிந்தது. எம்.ஜி.ஆருக்கு "இல்லாதோருக்கு வாரி வழங்கும் மன வளமும் இருந்தது. ஏழை மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் பூசித்தனர்", அதிசயமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி",7, இப்படிச் சொல்லித் தான் பணம் பெற்றார்கள். எம்.ஜி.ஆர் அப்பன் உழைத்த காசிலேயா உங்களுக்கு பணம் கொடுக்க முடிந்தது? இல்லை மக்களை கொள்ளையிட்ட காசில் தான், இரண்டு பாசிட்டுகளும் ஒன்றாக வண்டில் இழுக்க முடிந்தது. இப்படி மக்களை ஏமாற்றுவது தான் இவர்களின் குறிக்கோளாக இருந்தது. மக்களை மாயாஜாலத்தில் தள்ளி, ஏமாற்றுவதே இவர்களின் கூட்டுக் கொள்கையாக இருந்தது. ஏமாற்றல், மோசடி, பொய், புனைவு, மாயாஜாலம், இழிவு, அச்சுறுத்தல், கொலை மிரட்டல், இழிவான பாலியல் இரசனை என்று, மனிதத்துவத்தை இழிவுபடுத்தி விடுகின்றனர். பின் இவற்றை கூட்டியள்ளி, தமிழ் மக்களின் மேல் ஒரு பாசிசத்தின் குரலாக அறைந்தவர் தான் இந்த ஆன்ரன் பாலசிங்கம்.

தமிழரங்கம் said...

இது அம்பலமாகும் போது ஆன்ரன் பாலசிங்கம் பாசிசத்துக்குரிய கொலை எச்சரிக்கையை தமிழ்மக்களை நோக்கி விடுகின்றாh. அவர் வடக்கில் ஆற்றிய உரை ஒன்றில் "யாழ்ப்பாண புத்திஜீவிகளான நடுத்தர வர்க்கத்தரான நீங்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனின் அங்கிருந்துதான் அதிக விமர்சனம் வருகின்றது",8 ,என்றார். தாம் சொல்வதைத் தவிர, நீங்கள் எதை விமர்சிக்க கூடாது. இதை மீறிய போது, மரணத்தைத் தான் புலிகள் பரிசாக அளித்தனர், அளிக்கின்றனர். மறுபக்கத்தில் இதே பாலசிங்கம் கூறுகின்றார் மாற்றுக் கருத்துடையோர் ,".. தமிழர் தாயகத்தில் அரசியல் பணியில் ஈடுபடும் உரிமை உண்டு என்பதை நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம்",9, என்கின்றார். மாற்றுக்கருத்துடையோர் அரசியல் செய்ய முன்னம், அவர்கள் தமிழ் மண்ணில் உயிருடன் வாழமுடியாது. 30-06-86 இல் இந்தியாரூடே (ஆங்கிலம்) வெளியீட்டில் பிரபாகரனை நோக்கி ஒரு கேள்வி எழுப்பப்படுகின்றது. "தமிழீழத்துக்கு எந்த மாதிரியான அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?" என்று கேட்கப்படுகின்றது. அதற்கு அவர் "மக்களால் ஆதரிக்கப்படும் ஒரே ஒரு அரசியல் கட்சியே அங்கு இருக்கும். பல கட்சி ஜனநாயகத்தை நான் விரும்பவில்லை." என்றார். ஆதரிப்பதும் அவரே, ஆள்பவரும் அவரே. இப்படி ஒரு சர்வாதிகாரி, ஒரு பாசிட் முன்வைக்கும் தேசியம் மக்களுக்கானதல்ல. அதே 1986 இல் இந்த பாசிட்டுகள் தமது பாசிசத்தையே துண்டுப்பிரசுரமாக வெளியிட்டவர்கள். அதில் மக்களின் அடிப்படை உரிமைகள் "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்"10 என்றவர்கள். இதில் வாக்களிக்கும் உரிமை உள்ளடங்கத்தான்.

இவர்கள் எந்த மக்களுக்காக எப்படி போராடுவாhகள்? இவர்கள் ஒரு மோசடிக்காரர்கள். நேர்மையற்றவர்கள். தமது அரசியல் துரோகத்தை ஒன்றுக்கு பின் ஒன்றாக கோயபல்ஸ் பாணியில் புலம்புபவர்கள். உதாரணமாக பாலசிங்கம் "இந்த அரசு அமெரிக்காவுடன் உடன்பாடு செய்கின்றது. இந்தியாவுடன் உடன்பாடு செய்கின்றது. இந்த அரசு சர்வதேச நாடுகளுடன் உடன்பாடுகள், ஒப்பந்தங்களை செய்கின்றது. ஒருபுறம் வர்த்தக ஓப்பந்தங்கள், பொருளாதார ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றது. எதற்கு? புலிகள் இயக்கத்தை சுற்றி, ஒரு பாதுகாப்பு சிலந்திவலை ஒன்று போடப்படுகின்றது. இது எங்களுக்குத் தெரியும்....",10 ,என்கின்றார். இதே பாலசிங்கம், கருணாவின் பிரிவை அடுத்து கருணாவுக்கு பதிலளித்த போது "சர்வதேச உதவியோடு சிங்களவர்கள், முஸ்லிம்கள் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்குமான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனருத்தாரணம் தொடர்பான பாரிய திட்டங்களை மேற்கொள்ளமுடியும்."10 என்கின்றார் "தேசிய குரல்". முந்தையதுக்கு முரணாக பிந்தையது வரும். இப்படித் தான், "தேசியத் தலைவர்" தேசத்தை தேசியத்தை வெல்வார் என்கின்றனர். இஸ்ரேல் என்பர், சிங்கப்பூர் என்பர், அனைத்தும் கனவுகளில் கற்பனையில் சிந்தித்து அதில் சஞ்சரிக்கின்றனர்.