தமிழ் அரங்கம்

Thursday, November 8, 2007

அவதூறை லாடமாக்கி ஒட்டும் தேசம்

பி.இரயாகரன்
08.11.2007


தேசம் சஞ்சிகையின் ஆசிரியரும், ஆசிரியரின் இணக்கத்துடன் சில இனம் தெரியாத பொறுக்கிகளும் சேர்ந்து விவாதம் நடத்துகின்றனராம். அந்த விவாதக் கேவலத்தைத் http://www.thesamnet.net/ இல் முழுக்க காணமுடியும். விவாதக் கருப்பொருளுக்கு வெளியில் காறித் துப்புவது என்பது , "தேசத்" துக்கு அவதூறாக இருக்கவில்லை. அவரே விவாதத்துக்கு வெளியில் சென்ற கேவலம் நடந்தது. அவதூறுகளை செய்கின்ற போது, தம்மை மூடிமறைத்துக் கொண்டு செய்வது தேசத்துக்கு அவதூறாக தெரியவில்லை. எம் மீதான எந்தக் குற்றச் சாட்டுக்கும், நாம் பதிலளிக்க தயாராக உள்ளோம். உங்களைப் போல் கேடுகெட்டவர்கள் அல்ல நாங்கள். இப்படிபட்டவற்றுக்கு முன் கூட்டியே பதிலளித்து வந்துள்ளோம். இப்படி கேட்டவனின் ஒழுக்கம், ஊரறிய நாறுகின்றது. கொலைகளை செய்து விட்டு அதை ஆதரித்துக் கொண்டு, இன்றும் உலகளாவிய கைக்கூலிகளாக இருந்தபடி, இனம் தெரியாத நபர்களாக வந்து தாக்குகின்ற அந்த பேடிகளின் நோக்கம், யாரும் அரசியலை கதைக்க கூடாது என்பது தான். மண்ணில் இனம் தெரியாத படுகொலை போல், விவாதம் என்ற பெயரில் இந்த இனம்தெரியாத தெரு நாய்கள் ஊளையிடுகின்றது. எனது முதல் பதிவைத் தொடர்ந்து, அவதூறை சுமத்தி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசியல் ஊரைக் கூட்டியே ஊளையிடுகின்றனர்.

அரசியல் ரீதியாக விவாதிக்க முடியாத, கைக்கூலி இயக்கங்களின் அனாமதேய ஒப்பாரிகள். முகம் தெரிந்து வந்தால், அவர்களின் அரசியல் யோக்கியதை நாறிப்போகும். மற்றவனை குற்றஞ்சாட்டி இழிவாடி, தமது பொறுக்கித் தின்னும் அரசியலை பாதுகாக்க அனாமதேய வழிகளில் இயங்குகின்றனர். இதற்கு தேசம் பாய்விரிக்கின்றது. இந்தத் தொழில், எப்படி அரசியல் ரீதியாக முன்னேறுகின்றது என்று பார்ப்போம். அவதூறுக்கு புதிய இணையங்கள்.

புலிகளை ஏதோ ஒரு எல்லையில் ஆதரிக்கும் சில தரப்பு (உதாரணமாக அற்புதன், பெயரிலி, அமீபா, மயூரன் ... போன்றவர்கள் கூட, இதில் சிலர் தம்மை யார் என்று அடையாளப்படுத்தியுள்ளனர்) ஒரு எல்லைக்குள் கட்டுகின்ற விவாதம் சார்ந்த நேர்மை கூட, புலியெதிர்ப்பு தரப்பிடம் கிடையவே கிடையாது. புலிகளுக்ளுக்குள் இருக்க கூடிய தியாக மனப்பாங்கு புலி அல்லாத தளத்தில் கிடையாது என்ற உண்மையை இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டும். புலியல்லாத தரப்பில் பெரும்பான்மை, தியாகத்துக்கு பதில் பொறுக்கித் தின்பதையே அரசியலாக கொண்டவர்கள். இலங்கை இந்தியக் கூலிக் கும்பலாகவும், இதனுடன் ஏதோ ஒரு வகையில் உறவும் கொண்டவராக உள்ளனர்.

இந்த இனம்தெரியாத நபர்கள், தேசம் இணையத்தில் விவாதம் என்ற பெயரில் தேசத்தின் அனுமதியுடன் அதில் வந்து பேலுகின்றனர். இப்படி என் மீது தாக்குதலை திட்டமிட்டு, அவதூறாக நடத்துகின்றனர். எமது அரசியலை எதிர்கொள்ள முடியாதவர்களின் காழ்ப்பே, இப்படி கொட்டுகின்றது.

இந்தளவுக்கும் தேசம் சஞ்சிகை ஆசிரியருடன், நாம் ஒரு இணக்கமான இணங்கிப்போகும் அரசியல் விவாதத்தை கையாண்ட போதும், அது திட்டமிட்ட தொடர்ச்சியான தாக்குதலாக மாறிச் சென்றது. தேசம் சஞ்சிகை 'ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகள் வெறும் சேறடிப்புகளே. அதனை தேசம்நெற் இணையத் தளம் தவிர்க்கவே விரும்புகிறது" என்றது. இதுவே போலித்தனமானது என்பதும், என் மீதான சேறடிப்புக்கு உட்பட்டதாக, எம்முன் அந்த தளத்தில் நிறுவப்பட்டிருந்தது. இதை ஒட்டிய ஒரு அரசியல் விவாதம் அவசியம் என்பதால், தேசம் இணையத்தின் 'ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகள் வெறும் சேறடிப்புகளே. அதனை தேசம்நெற் இணையத் தளம் தவிர்க்கவே விரும்புகிறது" என்ற, போலித்தனத்தை அம்பலப்படுத்துவதை, நிதானமாக பொறுப்புடன் தவிர்த்து இருந்தோம்.

தேசம் இப்படி கூறியபடி தான், கருணைதாசன் என்ற இனம் தெரியாதவர் வைக்கின்ற ஆதாரங்கள் அற்ற அவதூறையும், தீப்பொறி வெளியிட்ட மற்றைய கட்டுரையில் சிலவற்றை நீக்கியபடி வெளியிட்டு இருந்தது. இதற்குண்டான ஆதாரங்களை தேசம் வைக்கமுடியாது.

தனிமனித குற்றச்சாட்டுகளை சொந்த பெயரில் வைக்க முடியாத போது, அதை அரசியல் சேறடிப்புகளாக செய்யும் போது, தேசத்துக்கு அது அவதூறாகத் தெரிவதில்லை. குற்றச்சாட்டை முன்வைப்பவன் வெளிப்படையாக முன்வராத போது, அதை கருத்தாக அனுமதிப்பது என்பது, இனம் தெரியாதது மட்டுமின்றி அது ஆதாரமற்றதும் கூட.

என்னை அந்த இனம் தெரியாத அவதூறு பேர்வழி (இவர்கள் மண்ணில் கொலையாளிகள்) 'பல்வேறு தனிநபர் தாக்குதல்களை முன்னின்று நடத்திய நீங்கள்" என்று.கூறுகின்றனர். இதற்கு ஆதாரம் எங்கே? ஒரு கருத்தற்ற அனாதைக் கழுதை, அதை ஆதாரமாக வைக்காமல் இப்படி கூறுவது, தேசத்துக்கு அனுமதிக்க கூடிய ஒன்றாக இருக்கின்றது. 'பல்வேறு தனிநபர் தாக்குதல்களை" நடத்தியவர் என்றால், யாரை எப்படி? அதை வையுங்கள். ஏன் ஒழித்து நின்று, தேசத்துடன் சேர்ந்து கல் எறிகின்றீர்கள். தேசம் இது போன்ற பொறுக்கிகளுடன் சேர்ந்து, விபச்சார விடுதியா நடத்துகின்றீர்கள்? அரசியலுக்கு வெளியில், தனிமனித தாக்குதல் எதையும் செய்ய வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. அப்படி செய்ததாக உங்களால் நிறுவ முடிந்தாதல், அதை முதலில் நிறுவுங்கள்.

தேசம் இதை அனுமதிக்கின்றது. இப்படி பலவற்றை அனுமதித்தது. 'மில்லியன் கணக்கில் சாவடிச்ச ஸ்டாலினுக்கு சலாம் போடும் நீங்கள்" என்கின்றனர். இதில் ஸ்ராலின் மில்லியன் கணக்கில் சாகடித்தார் என்பதற்கு, எந்த ஆதாரம் உண்டு. அந்த ஆதாரம் எங்கே? என் மீதான அரசியல் அவதூறு இப்படியும் தெளிவாகின்றது. அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாத அரசியல் கோழைத்தனம், இப்படித் தெளிவானது. இதில் உள்ள மற்றைய அவதூறு, மில்லியன் கணக்கான சாவுக்கு (அதற்கே ஆதாரம் இல்லை), நாம் சலாம் போடுகின்றோம் என்பது. எங்கே? எப்போது? சலாம் போட்டோம். இதற்கு எல்லாம் என்ன ஆதாரம். அரசியல் நோக்கம் சார்ந்த அவதூறே, இதன் அரசியல் பின்னணியாகும். இதை ஸ்ராலின் பற்றிய ஒரு விவாதத்தில் நடத்தியிருந்தால், பரவயில்லை. முன்னாள் இன்னாள் கொலைகார குற்றக் கும்பல் மீது குற்றம் சாட்டுவது, அரசியல் அவதூறு என்ற விவாதத்தில் நடந்தது. உண்மையில் இயக்க குற்றவாளிகளை பாதுகாக்க, அதை அரசியல் ரீதியாக எழுப்புவன் மீதான சேறடிப்பு இது.

இதற்காக குலைக்கும் விதத்தைப் பாருங்கள் 'ரயாகரன் அண்ணர் நிறைய புரட்சியே பேசுவார். ஆனால் ஹற்றன் நசனல் பாங்க் பற்றிக் கேட்டால் அண்ணர் கடும் ரென்சன் ஆயிடுவார்." என்ன அரசியல்? நான் விவாதிக்கும் விடையம், கடும் ரென்சனை உருவாக்குகின்றதோ!

இந்த இனம் தெரியாத பேடி, என்னை நேரில் கேட்டு நான் ரென்சனான கதை, நல்ல வேடிக்கை தான் போங்கள். இதை ஆதாரமாக கொண்டு, அனுமதித்த தேசத்தின் அரசியல் யோக்கியதை வேறு. நீங்கள் கேட்டு, இப்படி கேட்டு, நான் ரென்சன் ஆகிய ஆந்த ஆதாரம் எங்கே? எங்கே? எப்போது கேட்டு, நாம் ரென்சன் ஆனோம்? 'பழசு கொஞ்சம் இழுத்தால் தான் மீண்டும் அமைதி வரும் போல!" என்ன உங்கடை நாற்றல் கோமணத்தையா? கவனம் நன்றாக தேசத்துடன் சேர்ந்து இழுத்து கட்டுங்கள்.

இப்படி அவதூறு என்பது தெளிவானது, அரசியல் உள் நோக்கம் கொண்டது. அரசியல் பேச துப்புக் கிடையாது. நீங்கள் ரென்சனாதாக கூறிய கதையை, உங்கடை ரென்சனை குறைக்க உதவும் என்பதால், உங்களைப் போன்ற அரசியல் அனாதைகள் தெரிந்துகொள்ள இதைப்பற்றி மீளக் கூறுவது அவசியமானது.

என்.எல்.எப்.ரி ஹற்றன் நசனல் வங்கியை கொள்ளை அடித்தது என்பது, அந்த இயக்கம் சார்ந்தது. அந்த இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் என்ற வகையில், அந்த அரசியல் நடைமுறையை ஒட்டி விமர்சனங்கள் சுயவிமர்சனங்கள் எமக்கு உண்டு. அதை நாம் எழுத்தில் வைத்துள்ளோம். இந்தளவுக்கும் அந்த அமைப்பில் இருந்த கட்சியின் மத்தியகுழு உறுப்பினரல்ல. அதன் வெகுஜன அமைப்பான என்.எல்.எப்.ரியின் மத்தியகுழு உறுப்பினரல்ல. அதன் பிரதியீட்டு உறுப்பினராக இருந்து பின்னால் மத்தியகுழு உறப்பினரானவன்.

நான் அந்த அமைப்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, 1988 இன் இறுதியில் அந்த அமைப்பில் இருந்து வெளியேறியவன். இதற்கு முன் இரண்டு தடவை ராஜினாமாவை செய்தவன். ஒரு இயக்கம் சார்ந்த நடவடிக்கைக்கு எனக்கு அவதூறு. நல்ல வேடிக்கை தான் போங்கள். அந்த கணக்கு வழக்கு அந்த அமைப்புடன் தொடர்புடையது. நான் அந்த அமைப்பில் இருந்து அரசியல் ரீதியாக விலக முன், எந்தக் குற்றச்சாட்டையும் யாரும் எனக்கு எதிராக வைத்தது கிடையாது. அதன் பின் அந்த அமைப்பின் நிதிப்பொறுப்பாளர், அப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தது கிடையாது.

ஒரு இயக்கம் செய்த கொள்ளையை அடிப்படையாக கொண்டு, அது மோசடி செய்யப்பட்டு இருக்கும் என்று கருதுவது தவறானது. ராகவன் தேசியம் தலித்துக்கு எதிரானது என்று, தனது பழைய புலித்தேசியத்தில இருந்து எப்படி கண்டுபிடித்தாரோ, அப்படி மற்றைய இயக்கத்தில் நடந்தைக் கொண்டு தூற்றுவது கடைகெட்ட அரசியல். வேறுபட்ட இயக்கங்களின் அரசியல் தன்மை சார்ந்த நேர்மை மீது, அரசியல் அவதூறு பொழிவதற்கு தேசத்துக்கு ஆதாரம் அவசியமற்றதாகின்றது. தேசத்தின் அரசியல் என்பதே, அரசியலற்ற எடிட்டிங்காக காட்டிக் கொள்வது. அரசியலற்ற நடுநிலை பின்பற்றுவதாக காட்ட முனைவது.

எனது முதல் கட்டுரையைத் தொடர்ந்து, இறந்த இராணுவத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறி பேரினவாதத்துக்காக இயங்கும் இனம்தெரியாத அவதூற்றுப் பேர்வழி என் மீது கற்றன் நசனல் பற்றி கதைக்குது. இராணுவத்துக்கு அஞ்சலி, இராணுவம் கொன்ற மக்களுக்கும் அஞ்சலி. எப்படிப்பட்ட போக்கிரி அரசியல். அந்த இராணுவக் கூலி 'புலிகளை தோற்கடிக்கும் முயற்சியில் பலியான மாற்று அமைப்பு போராளிகள், இராணுவீரர்கள் எதனையும் (நான்) கண்டு கொள்ளவில்லை. ...பாசிசப் புலிகளை இராணுவ பலம் கொண்டுதான் தோற்கடிக்க முடியும்." இப்படிக் கூறித் தான், கற்றன் நசனல் பற்றி கதைக்குது. தேசத்தின் விபச்சாரம், இது போன்ற முன்னாள் இயக்க கொலையாளிகளின் உதவியுடன் தான், தன்னை விளம்பரம் செய்கின்றது.

இது கூறுது, 'மக்கள் மக்கள் என அலம்பும் ரயாகரன் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் பாரிஸில் ஜந்து பேரைத்தானும் அணி திரட்ட முடியாத நிலையில் இருக்கிறான்." அப்படித்தான் இருக்கட்டும். உங்களுடன் உள்ளவர்கள் யார். சிங்கள அரசினதும், இந்திய அரசினதும் பணம் வாங்கி கொலை செய்யும் கூலி இராணுவ கொலைகாரக் குழுக்கள் தான். இப்ப அதற்குள் எலும்புச் சண்டை. இதற்கு நடுநிலை அரசியல் பேசும் தேசம் ஒப்பாரிவைக்கிறது.

இப்படிப்பட்ட அரசியல் வங்குரோத்து, அடிப்படையில் அப்பட்டமான அரசியல் அவதூறாகின்றது. அவதூறுக்கே புதிய இணையங்கள். தாம், தாம் சார்ந்த வாழ்வியலில் நடைமுறையில் கெடுகெட்ட வழிகளில் செயல்பட்டதால், செயல்படுவதால், குற்றச்சாட்டை புனைவது அவர்களால் இயல்பாகின்றது.

இப்படிபட்ட ஒரு நிலையில் இதைக் கண்டு கொள்ளாமல், அவதூறு என்றால் என்ன என்று விவாதம் நடத்த முனைந்தோம். அதை தேசம் விரும்பவில்லை. தேசம் ஆசிரியர் தனது நடுநிலை அரசியல் மூலம், புலிப் பாசிட்டுகளையும் எம்மையும் ஒன்று என்று காட்ட முனைந்தார். அதை அவர் 'சாஸ்திரிகளும் ரயாகரன்களும் ஒரே பதிலையே அளிக்கின்றனர்" அறிவித்து விவாதத்தை முடித்து வைத்தார்.

பாசிட்டுகளும், மார்க்சியவாதிகளும் ஒன்று என்றார். இதைத்தான், நபர் வழியாக கூறினார். விவாதத்தை நபர் சார்ந்தாக காட்டி, சேறடிக்க முனைந்தார். நாம் வைப்பது மார்க்சியமல்ல என்றால், அது தவறு என்றால், அதை தவறு என்றும் நிறுவ வேண்டும். தனிநபராக காட்டுவதை தவிர, வேறு என்ன நடுநிலை அரசியலை அவர் செய்யமுடியும்.

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, இருப்பது இது தான். 'தீப்பொறி இணையமும், அதை மீள வெளியிட்ட நிதர்சனச் செய்தியின் உண்மைத் தன்மையும் பற்றி விமர்சிக்கும் றயாகரன் எதுவித பொறுப்பும் அற்று தான் பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் சில விசயங்களை வருணிக்கிறார். குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் வைக்கப்படாததால் அவை இங்கு நீக்கப்பட்டு உள்ளது." இதற்கு முன் 'தலித் மாநாட்டை தொகுத்த விதம் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்திருக்கிறீர்கள். மேலெழுந்த வாரியான இந்தக் குற்றச்சாட்டு அர்த்தமுடையதாககத் தெரியவில்லை. உங்கள் கருத்தை தொகுக்கத் தவறியதாகவும் கருத்தை திரிவுபடுத்தி விடுவதாகவும் வேறு குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த அரங்கில் நீங்கள் வைத்த எந்தக் கருத்தை நான் தொகுக்கவில்லை என்பதையும் அதில் எதை நான் திரிபுபடுத்தி இருந்தேன் என்பதையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டி இருந்தால் அது என்னைத் திருத்திக் கொள்ளவும் உதவியாயிருக்கும். ஆனால் மேலெழுந்த வாரியான குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவையாகப் போய்விடும்." என்றார் தேசம் ஆசிரியர்.

இப்படித்தான் இதற்குள் தான், தொடங்கியது விவாதம். இது படிப்படியாக திட்டமிட்ட தாக்குதலாக தொடங்குகின்றது. எப்படியான வாதம் மீது, என்மீதான காழ்ப்புகள் கொட்டப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள, அவர்கள் நீக்கிய பகுதியைப் பாருங்கள். 'வேடிக்கை என்னவென்றால், அண்மைக் காலமாக புலியின் இணையமான நிதர்சனம் டொட் கொமும் அதனுடன் (அதனுடன் என்பது தீப்பொறியுடன்) இணங்கி செயல்படுகின்றது. சுவிஸ் ஜெயிலில் ராம்ராஜ்சை புலிகள் சந்தித்ததும், ஈ.என்.டி.எல்.எப் ஏகபோக தலைவர் ராஜனின் சகோதரர் கொழும்பில் காணாமல் போன பின்னணியுடன், இந்த தேன் நிலவு இவர்களுக்கு இடையில் நடப்பதுவும் வெளிப்படையானது. இப்படி இந்த இரண்டு இணையமும், ஒன்றுடன் ஓன்று சார்ந்து செயல்படுகின்றது." என்ற பகுதி தான் வெட்டப்பட்டிருந்தது.

இதைத்தான் ஆதாரமற்றதாக தேசம் கூறுகின்றது. வெட்டி நீக்குகின்றது. சரி இதை விவாதிப்போம் என்றால், என்ன நடந்தது என்பதைத தான் நாம் தெரிந்து கொண்டோம்.

உண்மைத்தன்மை என்பது அரசியல் சார்ந்தது. இதை மறுத்து நடுநிலைத் தன்மை ஊடான உண்மைக்கு, எதிரான அரசியலாகின்றது. சரி இதை நீக்கியவர்கள், இதை மற்றவர்களுக்கும் கடைப்பிடித்தனரா?

இல்லை. ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தின் இணையம், ஞானம் பற்றி எழுதியதில் அனுமதிக்கின்ற வரிகளைப் பாருங்கள். '.. இவர் எந்தக் காலத்திலும் தனது சொந்தப் பெயரில் செயற்பட்டது கிடையாது. இவர் புலிகளுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இரட்டை வேடம் போட்டு செயற்பட்டதை தனது கட்டுரையில் அம்பலப்படுத்தியுள்ளார்." இதை எழுதியவன், எப்போது எங்கே சொந்தப் பெயரில் எழுதியுள்ளான். அவனே அனாதை, மற்றவனை அனாதை என்கின்றது. ஞானம் புனைபெயரில் எழுதிய போதும், அவர் யார் என்பது அனைவரும் அறிய அவர் கூறுவதுதான். இதில் யார் போக்கிலி? இந்த விடையத்தை எமக்கு மறுக்கும் தேசம், இதை அவருக்கு அனுமதிக்கின்றது.

தேசம் ஆதாரமாக கண்ட அந்தக் கட்டுரையில், எங்கே எப்படி இந்த இரட்டை வேடம் ஆதாரமாக நிறுவப்பட்டது. நாங்கள் சொன்னோம் 'வேடிக்கை என்னவென்றால், அண்மைக் காலமாக புலியின் இணையமான நிதர்சனம் டொட் கொமும் அதனுடன் (அதனுடன் என்பது தீப்பொறியுடன்) இணங்கி செயல்படுகின்றது." என்று கூறினோம். இது ஆதாரமில்லை. இதுவே தேசத்தின் இரட்டைநிலை. நாங்கள் தொடர்ச்சியான சில அவதானங்களின் அடிப்படையில் கூறியது, எப்படி அவதூறாகும். இதையே முழு சமூகமும், அண்மைக் காலமாக உணருகின்றது.

தேசம் ஆதாரத்துடன் அனுமதித்து, ஞானம் பற்றி ஈ.என்.டி.எல்.எவ் இணையம் கூறுவதைப் பாருங்கள் 'சமூக அக்கறை கொண்ட சில நண்பர்களின் அயராதமுயற்சியினால் உருவாக்கப்பட்டதொன்று. அதனுள் நீங்கள் நயவஞ்சகமான திட்டங்களோடு உட் புகுந்து உங்கள் கிறீமினல் மூளையை பயன்படுத்தி நீங்கள் செய்த திருவிளையாடல்களை பிரான்சில் உள்ள கிழக்கின் மைந்தர்கள் அறிவார்கள்." இதற்கு ஆதாரம் தான் என்ன? அந்த கிறிமினல் மூளை தான் என்ன? தேசம் பதில் கூற முடியாது. இதை சொன்னவனே கூறமுடியாது. அந்த கிழக்கிலங்கை, அந்த மைந்தர்கள் யார்? தேசத்திடம் அதற்கு ஆதாரமிருக்கும் என் நம்புகின்றீர்களா? எம்மிடம் கேட்காமலே வெட்டுகின்ற சர்வாதிகாரம். அரசியலுக்கு வெளியில் எழுதியவர் நடுநிலை நண்பர்கள் என்பதால், இப்படி எழுதுவது அவருக்கு பிரச்சனை இல்லை. அரசியல் ரீதியாக நாம் சொல்வது தான் அவருக்கு பிரச்சனை.

உண்மையில் நாங்கள் இந்த விடையம் தொடர்பாக எழுதிய கட்டுரையில், கட்டுரையை எழுதியவரை மறைமுகமாக பெயர் குறிப்பிடாது குறிப்புணர்த்தி எழுதினோம். அதை இன்னார் என்று, தேசத்தின் அனுமதியுடன், ஒரு அனாமி எழுதியுள்ளது. அதற்கு தேசத்துக்கு ஆதாரம் தேவைப்படவில்லை. நாம் குறிப்புணர்த்தி எழுதிய கட்டுரையை ஒட்டி, எனது நண்பர் ஒருவர், தனது விமர்சனத்தில் மஞ்சள் பத்திரிக்கைக்கு ஒத்தது என்றார். நேரடியாக பெயரை குறிப்பிட்டு எழுதினால் அது ஆதாரமற்ற அவதூறாகிவிடும். இப்படி நன்கு தெரிந்த அந்த நபர் எழுதி கட்டுரை அப்படியே, தேசத்தின் நண்பர் என்பதால் வெளிவந்தது.

அந்த தேசத்தின் நண்பர் எழுதுகின்றார், 'கிழக்கு மக்களுக்கான சேவையென்பது புகலிடத்தில் எங்களை வளம்படுத்திக்கொண்டு சொத்துக்கள் சேர்ப்பதல்ல" ஞானம் இப்படி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டுகின்றது. தேசம் அதை ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்று, அதை வெளியிடுகின்றது. இந்த அளவீடுகளை கணிக்க நியூட்டன் விதியெதும் தேசத்திடம் இருந்தால், அதை நாங்கள் அளந்து பார்க்க தாருங்களேன். கிட்டு திருடி வைத்திருந்த பொக்கற் நாய் போல், அன்று மாற்று இயக்க ஆயுதங்களை அந்த நாய் முகர்ந்து கண்டுபிடித்ததாக வந்த பத்திரிகைச் செய்தி போல், இது உள்ளது. தேசத்தின் மோப்ப சக்தி அதிகம் தான். ஞானம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன? ஆதாரம் இருப்பதால் அனுமதித்த தேசம், இன்று அதற்கான பதிலையும் அவர் தான் தரவேண்டும். இப்படி திட்டமிட்டு நடுநிலைத்தன்மை என்ற போலித்தனத்துடன், தேசம் இதை அனுமதிக்கின்றது. பிறகு எம்முடன் விதண்டாவாதம் செய்கின்றது.

'ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகள் வெறும் சேறடிப்புகளே. அதனை தேசம்நெற் இணையத் தளம் தவிர்க்கவே விரும்புகிறது" என்பது, இதில் மீளவும் எப்படி அம்பலமாகின்றது. தேசம் ஆதாரத்துடன் அனுமதித்த அடுத்த அவதூறின் நுட்பத்தை பாருங்கள். '.. பிள்ளையான் இராணுவ அதிகாரியிடம் கேட்ட கேள்வி ஒன்றின் போது இலண்டனில் புங்குடுதீவு கிருஸ்ணன் ஊடாக கருணா முதலீடு செய்துள்ளது போல் பிரான்ஸில் சின்ன மாஸ்டர் அல்லது ஞானம் என்று அழைக்கப்படும் மாசிலாமணி இராஜேந்திரன் பெயரில் பாரீஸில் வாங்கப்பட்ட வீடுகள் மற்றும் முதலீடு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிள்ளையானால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது தொடர்பாக தனது கட்டுரையில் எவ்வித கருத்துக்களையும் கூறாமல் மறுத்தது ஏன்.?"

இதற்கு ஆதாரம் என்ன? பிள்ளையான் கேட்ட அந்த உண்மைத் தகவலின் அடிப்படை என்ன? யார் சொன்னது? தேசம் இதை எப்படி உறுதி செய்தது? எப்படி இவருக்கு இது தெரியவந்தது? அவதூறை இப்படியும் செய்து, அரசியல் செய்ய அதை அனுமதிக்க தேசத்துக்கு பிரச்சனையில்லை.

தேசம் அனுமதிக்கும் அந்த நண்பர் 'உங்களின் கிறீமினல் தனங்களை தட்டிக் கேட்ட நண்பரொருவரை நீங்கள் புலிகளின் பினாமிகளை வைத்து பிரான்ஸ் லாச்சபலில் தட்டிக் கேட்ட வரலாற்றை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை" ஞானம் தான் பினாமியை வைத்து அடித்தார், என்பதற்கு என்ன ஆதாரம்? இப்படி எல்லாம் நட்பு சார்ந்து அனுமதிக்க முடிகிற தேசத்துக்கு, நாம் சொல்வது மட்டும் அவதூறு. அது தனிநபர் தாக்குதல்.

இப்படி ஆதாரமற்றுக் கொட்டுகின்ற தேசத்தின் நண்பரின் அவதூறை பாருங்கள் 'பிரான்சில் இருக்கும் யாழ் மையவாத வேளாள இந்து சதானிகளோடு உங்களுக்குள்ள கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபார உறவுகளுக்கு என்ன பெயர் நண்பரே" எப்படிப்பட்ட ஆதாரங்கள், இதன் பின்னணியில் தேசத்திடம் உள்ளது. தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டில் ' உங்களின் கடந்த கால வரலாற்றை புரட்டும்போது மேற்கூறிய குற்றச்சாட்டுக்கு நம்பகத்தன்மை கூடுகின்றது. இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் உரிமைப்போராட்டம் உச்சநிலை(?) அடைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஜக்கியதேசியக் கட்சியின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியின் நிதி உதவியோடு "உண்மை" என்ற பெயரில் கொழும்பிலிருந்து மாதா மாதம் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது. தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தை தொடர்பூடக சாதனங்கள் மூலம் (Media as a weapon of power) முயன்ற பாதுகாப்பு அமைச்சின் வெளிப்பாடே உண்மை பிரசுரத்தின் அரசியலாகும். இப் பிரசுர வெளியீட்டுக்கு கொழும்பு துறைமுக கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த ஒரு தமிழ்பேசும் தொழில்சங்கவாதி பொறுப்பாக இருந்தார். இவ் பிரசுர விநியோகப் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சே பொறுப்பெடுத்து தமிழ் பிரதேசங்களுக்கு தபால் மூலம் இலவசமாக விநியோகித்துவந்தது." ஞானம் பற்றிய இந்தக் குற்றசாட்டின் மீது ஆதாரம் என்ன? எந்த ஆதாரத்தையும், அவர்கள் வைக்கவில்லை. தேசத்துக்கு இவை பிரச்சனையில்லை. இரயாகரன் தான் பிரச்சனையாகின்றார்.

தேசம் ஆதாரத்துடன் உறுதி செய்து, இனம் தெரியாத நபர் மூலம் ஞானம் மீதான தொடரும் குற்றச்சாட்டை பாருங்கள். 'புகலிடத்திலுள்ள புளொட் தோழர்கள் வன்முறைகளுக்கு எதிரானவர்களாகவும் (?) ஜனநாயகத்தை கோருகின்றவர்களாகவும் (?) இருக்கும்போது" என்று தனது துரோக அரசியலை வெளிப்படுத்தும் அந்த தேசத்தின் நண்பர், தொடர்ந்தும் கூறுகின்றார் 'குறிப்பாக உங்களின் சந்தர்ப்பவாத சுயநலத்திற்காக புலிகளிடம் தங்கள் உயிரைக் பறிகொடுத்த மட்டக்களப்பு புளொட் அமைப்புத் தோழர்கள் மூவரையும் நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை." நேரடியாக ஞானம் மீது கொலை உடந்தை குற்றச்சாட்டு. இதற்கு தேசத்திடம் ஆதாரம் உண்டு என்ற அடிப்படையில் அதை அனுமதித்துள்ளனர். ஞானம் மீது இந்த கேள்வியை, தேசத்தை ஆதாரமாக கொண்டு நாம் இனி குற்றம்சாட்ட முடியும். அப்படித்தானே, ஆதாரம் எதுவுமின்றி தேசம் எதையும் அனுமதிக்கவில்லை அல்லவா!. இப்படி கேடுகெட்ட போக்கிலி அரசியல் செய்வது தேவைதானா? தவறு இழைத்து விட்டால், அதைத் திருத்துங்கள். ஒருதலைப்பட்சமான, ஒரு சார்பாக எடிட்டிங் சர்வாதிகாரத்துக்கு விளக்கம் சொல்லாதீர்கள்.

மறுபக்கத்தில் இப்படி ஞானம் மீதான தேசத்தின் ஊடான குற்றச்சாட்டுக்கு, தேசத்தின் வரையறையிலேயே ஆதாரமற்றது. இங்கு நாம் ஞானத்தை பற்றிய குற்றச்சாட்டை நாம் மறுக்க முற்படவில்லை. அதற்கு எம்மிடம் ஆதாரம் கிடையாது. அவரின் அரசியல் நிலை, எம்மால் அதை நிராகரிக்க முடியாத எல்லையில், எம்மை நிறுத்துகின்றது. அரசியல் ரீதியாக, இதை எழுப்பும் உரிமையை நாம் மறுக்க முனையவில்லை. அதை சொந்தப் பெயரில், சொந்த அரசியல் நடைமுறை ஊடாக வைப்பதை நாம் நிராகரிக்க முற்படவில்லை.

இதை அனுமதிக்கும் தேசத்தின் உள் நோக்கத்துக்கும், எமது நிலைக்கும் இடையில் உள் தெளிவான வேறுபாடு இதுதான். இந்த உள்நோக்கம் இரயாகரனை அவதூறாக சித்தரிப்பது தான். இரயாகரனின் அரசியலை மறுப்பது தான். அதை சேறடிப்பது தான். துரோகிகளும், இந்திய இலங்கை கைக் கூலிகளும் செய்கின்ற அரசியலை பாதுகாப்பது தான். இதை பிளந்து போராட வேண்டிய பணி தொடரும்.

பின் குறிப்பு

இதே தேசம்நெற்றில் நாவலன் ஏன் தாக்கப்படுகின்றார்? அவர் கட்டுரையை ஒட்டி விவாதிக்காதவைகள் ஏன் அனுமதிக்கப்படுகின்றது?

நாவலன் தாக்கப்படுவது நாவலன் பேசும் மார்க்சியம், மக்களை பற்றி பேசிவிடும் என்ற அச்சம் தான், அவர் மீதான அவதூறாகின்றது. இந்த பொறுக்கி அரசியல், நாவலனின் ஒழுக்கம் பற்றியும் நேர்மை பற்றியும் கேட்கின்றது. நாவலன் தனது சொந்த பெயரில் எழுதுகின்றார். சரி நீங்கள் யார்? இதில் உங்கள் நேர்மை ஒழுக்கம் முதல் அவதூறு வரை நிர்வாணமாகின்றது.

நாவலனை இழிவுபடுத்துவர்கள் ஒன்றைத் தெரிந்த கொள்ளுங்கள். உங்களை போன்று இந்திய இலங்கை கூலிக்குழுவாக, அவர்கள் பின் நாவலன் தவண்டவரல்ல. கடந்த காலத்தில் நீங்கள் செய்யாதவைகளை, அவர் மக்களுடன் நின்று உங்களை எதிர்த்துச் செய்தவர்.

ஜனநாயகத்தைக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் முக்கியமான தலைவர்களில் ஒருவர். ரெலோ இயக்கத்தினை எதிர்த்து உட்கட்சிப் போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவர். இவரும், நேரு (என்.எல்.எவ்.ரி யில் சேர்ந்த போது ரெலோவால் கொல்லப்பட்டவர்), மனோ மாஸ்ட்டர் (புலிகளால் கொல்லப்பட்டார்) நடத்திய அந்த போராட்டம் தான், சென்னை மரினா பீச் உண்ணாவிரதம் வரை சென்றது. இது மட்டுமல்ல பாசறை என்ற அமைப்பின் ஊடாக இயங்கிய அவர், பல வெகுஜன அமைப்புகளில் முன்னணி வழிகாட்டியாக செயல்பட்டவர். அக்கால பல ஜனநாயக போராட்டத்தில் ஊக்கமாக பங்கு பற்றியவர். இப்படி பல.

உங்களைப் போல் இந்திய இலங்கை அரசுகளின் பின் தவண்டு நக்கி திரிந்தவர் அல்ல, நக்குபவருமல்ல. கொலைகளைச் செய்தவரல்ல. முதலில் நீங்கள் வெளிப்படையாக வந்து, உங்கள் அரசியலை வையுங்கள். பின் நாவலனை விமர்சியுங்கள்.

உங்களுக்கு தேசம் பாய்விரிக்கலாம், மக்கள் ஒருநாளும் பாய் விரிக்கமாட்டார்கள்.


No comments: