தமிழ் அரங்கம்

Friday, June 6, 2008

பாராட பார்ப்பனப் பயலே, உங்கள் மூளையில் வக்கிரத்தை - பகுதி 3

இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது, சக்வாரா கிராமம். இங்கு வசித்து வரும் 700 குடும்பங்களில், 70 குடும்பத்தினர் ""பைரவா'' என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இக்கிராமத்திலுள்ள பொதுக்குளம், அரசின் உதவியோடும், மக்களின் பங்களிப்போடும் தாழ்த்தப்பட்டவர்கள் கொடுத்த நன்கொடை, அவர்களின் உடல் உழைப்பையும் பயன்படுத்திதான் கட்டப்பட்டது.

எனினும், இப்பொதுக்குளத்தைத் தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து, பார்ப்பனர்களும், ஜாட் சாதியினரும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்தனர்.

இத்தீண்டாமைக்கு எதிராக மனதிற்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர், டிசம்பர் 14, 2001 அன்று கலகத்தில் குதித்தனர். இத்தீண்டாமையை முறியடிக்கும் அடையாளமாக, பாபுலால், ராதேஷாம் என்ற இரண்டு தாழ்த்தப்பட்டோர் பொதுக்குளத்தில் இறங்கிக் குளித்தனர். ""அக்குளம் எங்களுக்குப் பயன்படுகிறதோ, இல்லையோ, தீண்டாமைக்கு எதிரான கோபத்தின் காரணமாகவே அக்குளத்தில் இறங்கிக் குளித்ததாக''க் கூறினார், ""கலகக்காரர்'' பாபுலால்.

இக்கலகத்தால் இரத்தம் கொதித்துப் போன பார்ப்பன ஜாட் சாதி வெறியர்கள் சாதி பஞ்சாயத்தைக் கூட்டி, தாழ்த்தப்பட்டோர் சாதிக் கட்டுப்பாட்டை மீறியதற்கான தண்டனையாக 50,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனக் கட்டளை போட்டனர்; மேலும், கிராமத்திற்குள் தாழ்த்தப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருட்களை யாரும் விற்கக் கூடாது; அவர்களை வயல் வேலைக்குக் கூப்பிடக் கூடாது; அவர்களுக்கு கடன் தரக் கூடாது எனப் பல்வேறு ""ஃபத்வா''க்களையும் போட்டுச் சமூகப் புறக்கணிப்பும் செய்தனர்.
.

1 comment:

Unknown said...

"பார்ப்பன ஜாட் சாதி வெறியர்கள்"

Jats are not brahmins.They come under OBC cateogry.