தமிழ் அரங்கம்

Friday, July 4, 2008

தமிழ் எம்.ஏ:படம் குறித்த விமர்சனம்

பிரபாகரின் தற்கொலைக்குத் தூண்டுதல் எது? போலீஸ் ஸ்டேஷனில் ஜட்டியோடு அமர வைத்த பின்னரும் எப்படி உயிரோடு இருப்பது என்கிற சிந்தனை. சற்று நேரத்திற்கு முன்பாகத்தான். மாணவர்களுக்கு ‘மானம்; நீப்பின்’ எனும் குறளை விளக்கியிருந்தான்.

சேச்சியின் மீதான போலீஸ்காரனின் காமம் தான் பிரபாகர் போலீஸ் ஸ்டேஷன் போவதற்கான அடிப்படை. ஆனால் இது பிரபாகருக்குக் கடைசிவரை தெரியாது. பொது இடத்தில் சிகரெட் பிடித்தல் என்கிற செயலைத் தவறாக தன்மீது சுமத்தி போலீஸ் தன்னை அவமானப் படுத்தியது என்றுதான் பிரபாகர் நினைத்துக் கொண்டிருக்கிறான். படத்தின் இறுதியில் தான் இப்படியானதற்கு; காரணம் இவன் தான் என்று போலீசைப் போட்டுத் தள்ளும் பிரபாகருக்கு போலீஸ் ஏன் அப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை.

பிரபாகருக்கு போலீஸ் சந்திர சேகரின் காமக் கொழுப்புதான் அடிப்படை. ஆனால் அதுவும் இல்லாமலும் போலீசால் அவமானப் படுத்தப்படுபவர்கள் அவமானப் படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், திமிர்தான். அந்தத் திமிருக்கும் காரணம் உண்டு அது, சட்ட பூர்வமான ரௌடிக் கும்பல் என்பது தான். இந்தத் திமிர் அந்தத் துறைக்கு ஊட்டி வளர்க்கப் படுகிறது. ஆக அடிப்படை போலீஸ்திமிர்.
... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: