தமிழ் அரங்கம்

Monday, October 13, 2008

முதலாளிக்கு நிலம்! உழுபவனுக்கு குண்டாந்தடி! – சி.பி.எம்.இன் நிலச்சீர்திருத்தக் கொள்கை!

"கேரளத்தைப் பார்! வங்கத்தைப் பார்! நிலச்சீர்திருத்தம் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது'' எனக் கிளிப்பிள்ளையைப் போல சி.பி.எம். கட்சி ஒவ்வொரு சந்துமுனையிலும் தனது கூட்டங்களில் பெருமை பொங்கப் பேசுவது வழக்கம். இதையெல்லாம் பார்த்து சி.பி.எம். ஆளும் மாநிலங்களில் நிலமற்றவர்களே கிடையாதோ என எண்ணுபவர்களும் உண்டு. ஆனால், சி.பி.எம். ஆளும் கேரளத்தில் நிலமற்ற மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டங்கள், இந்தப் போலிப் பெருமையை அம்மணமாக்கிவிட்டன.

கேரளாவைச் சேர்ந்த நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்கள், சி.பி.எம். கட்சியின் அச்சுதானந்தன் அரசு பதவி ஏற்றபோது, "சாது ஜன விமோச்சன சம்யுக்த வேதி'' எனும் அமைப்பின் கீழ் திரண்டு தாங்கள் மானத்தோடு வாழ நிலம் கேட்டுப் போராடினர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் அரசு தோட்டக் கழகத்துக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான சந்தனப்பள்ளி இரப்பர் எஸ்டேட்டில், 500 குடும்பங்கள் கூடாரங்கள் போட்டு போராட்டம் நடத்தின. இப்போராட்டத்தை "பொதுத்துறை நிறுவனத்தை சிதைக்கும் செயல்' என ஏ.ஐ.டி.யூ.சி. முதல் பி.எம்.எஸ். வரை அனைத்து ஓட்டுக்கட்சி தொழிற்சங்கங்களும் எதிர்த்தன. பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் 5 ஏக்கர் நிலம், ரூ.50ஆயிரம் வரை இழப்பீடு என அரசு உறுதி தந்ததன் பேரில் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஓராண்டுக்குள் நிலமில்லாத மக்கள் அனைவருக்கும் நிலம் வழங்கப்படும் என்று அரசு உறுதிமொழி கொடுத்தது.

அரசு கொடுத்திருந்த ஓராண்டுக் காலக் கெடு முடிந்தும் நிலம் ஏதும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்நிலையில்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: