தமிழ் அரங்கம்

Tuesday, October 14, 2008

புண் இருந்தால் சீழ் இருக்கும்

அனுபவ ரீதியான வாழ்வில், அனைவரும் அறிந்த சாதாரண உண்மை. ஆனால் சிங்களப் பேரினவாதிகளும் சரி, புலிகளும் சரி இந்த உண்மையை மறுக்கின்றனர். தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை இருவரும் மறுக்கின்றனர். ஒருவர் இதை பயங்கரவாதம் என்கின்றார் என்றால்,
மற்றவர்கள் துரோகி என்கின்றனர். இப்படி புண்ணை வைத்துக்கொண்டு, சீழை நக்குவதே இவர்களின் விபச்சார அரசியலாகும்.

இன்றைய அரசியல் எதார்த்தம் இதுவே. சிங்கள பேரினவாதம் இருந்தால் அதற்கு விளைவு இருக்கும். அதைப் பயங்கரவாதம் என்று கூறவது அடிமுட்டாள் தனமாகும். மக்கள் நலனை முன்னிறுத்தாத இக்கூற்றுகள், தீவிரமான பயங்கரவாதியின் கூச்சலாகும். இந்தவகையில் பேரினவாதிகள், மனித உரிமையை மறுக்கும் பேரினவாதிகள் தான். தமிழருக்கு எதிரான திட்டமிட்ட சிங்கள பேரினவாத அரசியல் சூழ்ச்சிகள், இன்று சிறு குழுவின் இராணுவ சர்வாதிகார பாசிச நிலையை அடைந்துள்ளது. ஆக மொத்தத்தில் மொத்த தமிழ் மக்களையும் சிங்கள மக்களுக்கு எதிரானதாக நிறுத்த முனைகின்றது.

புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் இதையே கூறிக்கொண்டு, இதை வெறும் வார்த்தையாக்கிக் கொண்டு, மக்கள் தான் புலிகள் என்ற சிங்கள பேரினவாதத்தின் பாசிச நடைமுறைகள். சிங்கள பேரினவாத பாசிச இராணுவ சர்வாதிகார வழிகளில், மொத்த தமிழ் மக்களும் குதறப்படுகின்றனர். ஓட்டுமொத்தத்தில் தமிழ்மக்கள் சொல்லொணாத் துயரத்தையும், மனித அவலத்தையும் சந்திக்கின்றனர்.

புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மையை மறுக்கும் புலிகள். மறுபக்கத்தில் பேரினவாதமோ இல்லையில்லை, புலிகளும் தமிழ் மக்களும் ஒன்று என்கின்றனர்....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: