தமிழ் அரங்கம்

Thursday, October 16, 2008

ஈழம்: இந்திய மேலாதிக்கத்தை முறியடிப்போம் !

ஒரு இறுதித் தாக்குதலுக்கு உரிய மூர்க்கத்துடன் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது சிங்கள இனவெறி அரசு. புலிகளிடமிருந்து கிளிநொச்சியை கைப்பற்றி விடுவோம் என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கையின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா.
இந்திய அரசு துணை நிற்பதுதான் சிங்கள இராணுவத்தின் இந்தத் திமிருக்கும் வெறிக்கும் மிக முக்கியமான காரணம். இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களும் போர்த்தளவாடங்களும் நிதியும் கொடுத்து புலிகளுக்கு எதிராக சிங்கள இராணுவத்தை ஏவி விட்டிருக்கிறது இந்திய அரசு. புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயம்பட்டு குட்டு அம்பலமான பின்னரும் இவை எதற்கும் பதிலே சொல்லாமல் மவுனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.

கருணாநிதியும் முடிந்தவரை வாய்திறக்காமல் இருந்து விட்டு, பின்பு வழக்கம் போல பிரதமருடன் தொலைபேசியில் பேசிவிட்டார். இலங்கை அரசுக்கு ஆயுதமும் ஆள்படையும் கொடுத்து உதவி வரும் இந்திய அரசு, உடனே இலங்கைத் துணைத் தூதரை அழைத்துத் தனது கவலையை வெளியிட்டிருக்கிறது. இதைவிடக் கேவலமான முறையில் தமிழக மக்களை இழிவு படுத்தமுடியாது.

துவக்கம் முதலே தெற்காசியப் பிராந்திய மேலாதிக்கம் என்ற தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மட்டும்தான் இந்திய அரசு ஈழத்தமிழர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: