தமிழ் அரங்கம்

Thursday, February 12, 2009

இந்திய சிங்கள அரசுகளின் ஈழத் தமிழின அழிப்புப் போர்! தமிழகமே, விழித்தெழு! போராடு!!

இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் கடந்த நான்கு மாத காலமாக சிங்கள இனவெறி இராணுவம், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான கொடிய போரைத் தீவிரமாக நடத்தி வருகிறது. பயங்கரவாதப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் , கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் முல்லைத் தீவைச் சுற்றி வளைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியும், ஒட்டு மொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூர போரை நடத்தி ஈழத்தைச் சுடுகாடாக்கி வருகிறது.

தப்பியோடும் போது கைப்பிடித்து வந்த உறவுகளை குண்டுத் தாக்குதலில் பறிகொடுத்து, பிணமாக வீதியோரங்களில் விட்டுச் செல்லும் அவலம்; தென்திசைக் காற்றில் கந்தக நெடியுடன் வீசும் பிணவாடை; உணவில்லை; மருந்தில்லை; குடியிருக்கக் குடிசையுமில்லை; எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த கணம் உயிரோடு இருப்பதற்கான உத்தரவாதமே இல்லை. வன்னி நிலப்பரப்பெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்த நான்கு இலட்சம் ஈழத் தமிழர்கள், இன்று முல்லைத் தீவின் காட்டுப்பகுதிகளில் விரட்டி முடக்கப்பட்டுள்ளனர். தமிழன் வாழ்விடங்களை அழித்து, தமிழன் உயிர்களைக் குடித்து கிளிநொச்சி, ஆனையிறவு, பரந்தன், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் என விரிந்து ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவம், முல்லைத் தீவு முழுவதையும் தமது...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: