தமிழ் அரங்கம்

Saturday, February 14, 2009

தமிழ் மக்களின் பாதுகாவலன் தானல்ல என்ற நிலையை உருவாக்கும் புலிகள்

சிங்கள பேரினவாதம் தன் சுதந்திரமாக பிரிட்டிஸ்சார் கொடுத்த சுதந்திரத்தையே கருதியது முதல், தமிழினத்தை ஓடுக்குவதன் மூலம் தான் சிங்கள மக்களை ஏமாற்றி வந்தது. தமிழ் தலைமைகள் இதனுடன் ஓத்துழைத்தும், விலகி வந்த நிலையில், சிங்கள பேரினவாத ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடும் ஆயுதப் போராட்டமாக அது மாறியது. இப்படி கடந்த 30 வருடமாக பண்புமாற்றம் பெற்ற இந்த போராட்டத்தை பயன்படுத்தி, ஒரு இன அழிப்பாகவே பேரினவாதம் நடத்திவருகின்றது.

கடந்த காலத்தில் சிங்கள இனவாதத்தை எதிர்கொண்ட தமிழ் தலைமைகள், ஏன் இந்த இனவாதம் என்ற அடிப்படையில் இருந்து அதை எதிர்கொள்ளவில்லை. மாறாக அதை பயன்படுத்தி, அரசியல் செய்யும் தம் சொந்த பிழைப்புத்தனத்தையே தமிழின உணர்வாக்கினர். இதன் அடியில் இருந்து வந்த ஆயுதப்போராட்டம் அதை மீறவில்லை. புலிகள் ஒரு தனி சர்வாதிகார பாசிச மாபியாக் கும்பலாகவே சீரழிந்தது. அரசியல் ரீதியாக செத்துப் போனவர்கள், மக்களிடமும் அரசியல் ரீதியாக தோற்றனர். இதனால் ஆயுதங்கள் மூலம் தமிழ்மக்களை ஓடுக்கியவர்கள், இன்று சிங்கள பேரினவாத எதிரியுடன் தம் ஆயுதங்களைக்கொண்டு மக்கள் மேலான தம் ஓடுக்குமுறையை தக்கவைக்கமுடியாது தோற்று வருகின்றனர்.

இப்படி சிங்கள ஓடுக்குமுறைக்குள் தமிழ் சமூக....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: