தமிழ் அரங்கம்

Sunday, March 8, 2009

எங்களுக்குள் இருப்பதும் ஒரு குட்டிப் புலிதான்…

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வீடுவாசல், வயல்தோட்டம் அத்தனை சொத்துக்களையும் கூலிப்படைகளின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட்டு பக்கத்தில் ஒரு மூலையில் பேரினவாதத்தின் கூடாரத்துக்குள் அகதிகளா…அல்லது அரசியல் கைதிகளா…என்று கூடப் புரியாமல் உயிரையாவதுதக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் வாழவேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய வன்னி மக்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது.

வந்தாரை வாழவைக்கும் வன்னி மண் இன்று தன்னை வாழவைக்க பேரினவாதத்தின் கூடாரத்துக்குள் மற்றவர்களிடம் கையோந்தி நிற்கின்றது. வந்திருப்பவர்கள் புலிகளா என்ற சந்தேகத்திலே பலர் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டு அடையாளம் தெரியாதவாறு அழித்தொழிக்கப்படுகின்றார்கள். அதுமட்டுமின்றி பல இளம் பெண்கள் துன்புறுத்தப்படுவதுடன் சிறிலங்கா கூலிப்படைகளின் காமவெறிக்கு உள்ளாக்கப்பட்டுகின்றார்கள்.

No comments: