தமிழ் அரங்கம்

Thursday, March 26, 2009

காஷ்மீர் சட்டமன்ற தேர்தலும் இந்திய அரசின் பகற்கனவும்

காஷ்மீர் மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முன்வந்ததை தேசிய ஒருமைப்பாட்டின் வெற்றியாகக் காட்டுவது அரைவேக்காட்டுத்தனமானது. காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் இந்திய தேசியவாதிகளை ஆனந்தக் கூத்தாட வைத்துவிட்டது. அமர்நாத் பனிலிங்கக் கோவிலுக்கு நிலம்
ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்குக் குலுங்கியதைக் கண்டு கிலி பிடித்துப் போயிருந்த இந்திய அரசு, அம்மாநிலத்தில் தேர்தலை நடத்தலாமா எனத் தடுமாறிக் கொண்டிருந்தது. தேர்தலை நடத்தினால், மக்கள் வாக்களிக்க வருவார்களா எனச் சந்தேகப்பட்டுக் கொண்டு இருந்தது.

ஆனால், யாருமே எதிர்பாராதவண்ணம் அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 61.23 சதவீத வாக்குகள் பதிவாகின. அம்மாநிலத் தலைநகர் சிறீநகரில் 2002 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெறும் 5 சதவீத வாக்குகள்தான் பதிவாகின. இம்முறையோ அந்நகரைச் சேர்ந்த சட்டசபை தொகுதிகளில் 21.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீரில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பிறகு நடந்துள்ள தேர்தல்களில், இச்சட்டசபைத் தேர்தலில்தான் 1989ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தபடி அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல்கள் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்துள்ளதைக் காட்டி, காஷ்மீர் மக்கள் "தீவிரவாதத்தை''ப் புறக்கணித்துவிட்டதாகவும்; பிரிவினைவாதத்திற்கு டாட்டா காட்டிவிட்டதாகவும் இந்திய அரசு கூறி வருகிறது. நடுநிலையாளர்களோ, "காஷ்மீர் மக்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை கொண்டு வாக்களித்திருப்பதால், இந்திய அரசு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: