தமிழ் அரங்கம்

Monday, August 10, 2009

இன்று புலிகளைக் கொண்டே பேரினவாதம் நடத்தும் இனக்களையெடுப்பு

புலிகள் தம் உயிரைக் பாதுகாக்க, வன்னியில் மக்களைப் பணயமாக்கி அவர்களைப் பலியிட்டனர். வெளிப்படையாக புலிகள் மக்கள் மேல் துப்பாக்கியை நீட்டினர். தம் பலியிட்டுக்கு அடங்க மறுத்தவர்களையும், தப்பியோடியவர்களை அடித்தார்கள் சுட்டார்கள் கொன்றார்கள். இதற்கென்று ஒரு லும்பன் கும்பலை, புலித்தலைமை பயன்படுத்தியது.

இன்று சிங்களப் பேரினவாதம் அதே வன்னி மக்களுக்குள் ஒரு பரந்த இனக் களையெடுப்பை நடத்துகின்றது. இதை புலிகளைக் கொண்டே செய்கின்றது என்பது, இங்கு மிக முக்கியமானது. புலிகள் மக்களை பணயம் வைத்து பேரினவாதம் மூலம் படுகொலை செய்த போது, மக்கள் தப்பியோட வண்ணம் புலிகள் யாரை முன்நிறுத்தியதோ, அவர்களைக் கொண்டு இந்த இனக்களையெடுப்பை பேரினவாதம் இன்று நடத்துகின்றது.

வன்னி வதை முகாமில் உள்ளவர்கள் புலிகளா என்பதை கண்டறியும் பொறுப்பு, அண்மையில் கைதான கொலைகாரப் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் மீண்டும் அதே புலி முகங்களை சந்திக்கின்றனர். அதே அவலத்தையும், அதே வேதனைகளையும் சந்திக்கின்றனர்.

அவர்கள் தம் பார்வையில்.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: