தமிழ் அரங்கம்

Saturday, June 28, 2008

உள்ஒதுக்கீடு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்

இந்திய சமூகத்தில் சாதிய அமைப்பு இன்னமும் நீடித்திருப்பதற்கும் கட்டிக் காக்கப்படுவதற்குமான காரணங்களில் இது முக்கியமானதாகும். ஆனால், இங்கே ஒவ்வொரு சாதியும் தனது நிலை குறித்துப் பெருமைப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும் பொழுது, தற்போது தலித்துகள் என்றழைத்துக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட பட்டியலின சாதிகளிலேயும் கூட அருந்ததியர்கள் மற்றும் புதிரை வண்ணார் ஆகிய சாதிகள் மட்டும் அத்தகைய வாய்ப்பு இல்லாத அடிமட்டத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

மொத்த சாதிய அமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதிகள் (ஒட்டு மொத்த பட்டியலின சாதிகள்) எப்படி மிகக் கீழான சாதிக் கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ, அதேபோல அவர்களிலும் மிக மிகக் கொடூரமான அவலங்களையும் அடக்குஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்பவர்களாக அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் சாதிகள் உள்ளன. சமூகப் புரட்சியை ஏற்படுத்திவிடும் என்று சொல்லப்பட்ட இடஒதுக்கீடு ஏற்பாடு கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகாலம் அமலில் இருந்தும், அது உண்மையான சமூக நீதியை வழங்கவில்லை என்பதற்கு உயிருள்ள வரலாற்றுச் சாட்சியமாக விளங்குபவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.

கல்வி மற்றும் சமூக உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு முன்னுரிமை வழங்கி தக்க வாய்ப்பளிப்பதற்கானதே இடஒதுக்கீடு என்பது ""சமூகநீதி''க்காரர்களின் நியாயவாதம், கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியவர்களை விட, அந்த வகைகளில் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆயினும் பொருளாதார ரீதியில் மிகமிகப் பின்தங்கியவர்களுக்கும் தக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முற்பட்ட சாதியினர் முன்வைக்கும் எதிர்வாதம். ஆனால், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மட்டுமல்ல, வேறு எந்த ரீதியாகவும் உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் மிகமிக அடிமட்டத்தில் வாழ்பவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கின்படி அல்லாமல், ஒடுக்கப்பட்ட சாதிகள் அனுபவிக்கும் சாதியக் கொடுமைகளின் அளவுகளின் அடிப்படையில் சமூகநீதி வழங்கப்படுமேயானால், இந்த அருந்ததிய மக்களுக்கும் புதிரை வண்ணார்களுக்கும்தான் முதன்மை முன்னுரிமை அடிப்படையில் மிகக் கூடுதலான இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீடு வகுக்கப்பட்டிருக்கும் முறையோ, இம்மக்களை முற்றாகப் புறக்கணித்ததோடு, இம்மக்களின் முதுகிலேறி இச்சாதிகளுக்கு மேலுள்ள சாதிகள் இடஒதுக்கீட்டின் பலன்களை அறுவடை செய்து கொள்ளும்..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

2 comments:

Unknown said...

உள் ஒதுக்கீடு தலித்களிடையே ஒற்றுமைக்கு உலை வைக்கும்,
போட்டி, விரோதம் வலுக்கவே உதவும்.குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அரசியல்வாதிகளுக்கு உதவும்.
அதனால்தான் அவர்கள் இதை
ஆதரிக்கிறார்கள். தலித் ஒட்டு வங்கி
சிதறினால் தலித் அரசியல் வலுவிழக்கும். இதுதான் அவர்களது
விருப்பம். அருந்ததியினர் மீது அவ்வளவு அக்கறை இருந்தால்
அருந்ததியினருக்கு என்று தனியாக இட ஒதுக்கீடு தரலாமே.முஸ்லீம்கள், கிறித்துவர்களுக்கு தந்தது போல்
அவர்களுக்கும் தரட்டுமே. இருக்கிற
18% தலித் இடஒதுக்கீட்டிற்கு வெளியே
அவர்களுக்கு தனியே தரட்டுமே.
தலித் இயக்கங்கள் இதை எதிர்க்காது.

18% இட ஒதுக்கீட்டினை முழுமையாக
நிறைவேற்றுவதில்லை என்று தலித்
அமைப்புகள் சொல்கின்றன.தலித் பார்பனீயம் என்று எழுதி திசை
திருப்பாதீர்கள்.உண்மையான
அக்கறை இருந்தால் தனி இட
ஒதுக்கீடு தரவேண்டும் என்று
கோருங்கள்.

தமிழரங்கம் said...

தலித் பார்ப்பனியம் என்பது, பார்ப்பனியத்தை தலித்தியம் கடைபிடிப்பதைத் தான் குறிக்கின்றது. இது தலியத்தியத்தை பிளக்கின்றது, பிரிக்கின்றது என்றால், இது எதிரியின் சதி என்றால், நீங்க்ள ஏன் தான் சாதிய வேறுபாட்டை கடைப்பிடிக்கின்றீர்கள். நீங்கள் பார்ப்பனிய சாதியத்தை பாதுகாத்த படி இருப்பது தான், பிளவுக்கான அடிப்படை.

இடஒதுக்கீடு யாருக்கு? ஏன்? நாம் தர முடியாது என்று சொல்லும், உங்கள் சாதி மேலான்மை என்ன? தனியான ஒதுக்கீடு என்று நீங்கள் சொல்வது தான், தலித் பார்ப்பனியம்.

தலித் ஒட்டு வக்கியை வைத்து பொறுக்கித் தின்னத் தான் உதவும். தலித் மக்களுக்கு எந்த வித்திலும் உதாவாது.

பார்ப்பனியம் எதை சொல்லுகின்தோ, அதைத் தான் தலித் பார்ப்பனியம் கூறுகின்றது.