தமிழ் அரங்கம்

Sunday, December 28, 2008

புலிகளை மீறிப் போராடும் மக்களும் புலி உறுப்பினர்களும்

மகிந்த சிந்தனையும் பிரபாயிசமும், மனிதத் தன்மையற்ற கெடுபிடியான இரக்கமற்ற ஒரு மக்கள் விரோத யுத்தத்தையே நடத்திவருகின்றது. இதில் சிக்கி தவிக்கும் மக்களையிட்டு எந்த அக்கறையற்ற சுயநலமே, இன்று எங்கும் புரையோடிக்கிடக்கின்றது. இதனால் பாதிக்கப்படும் மக்களையி;ட்ட எமது அக்கறை தான், இதை செய்பவர்கள் இவர்கள் மேலான எமது கடும் விமர்சனமாக மாறுகின்றது.

இதனால் எமக்கு மகிந்த சிந்தனை மேலும், பிரபாயிசம் மேலும் எந்தவிதமான கருசனையும் அக்கறையும் கிடையாது. அதுவோ வெறுக்கத்தக்கது. வெந்த புண் மேல் வேல் பாய்ச்சும் வகையில், வரண்டு போன பாசிசத்தால் வக்கிரமடைந்து கிடக்கின்றது.

இதுவோ, மக்கள் மேல் ஈவிரக்கமற்ற வகையில் இயங்குகின்றது. மற்றவன் அழிவில், தான் வாழ நினைக்கின்றது. இது குறுகிய தன்னல நோக்கம் கொண்டது. அப்பாவி தமிழ் மக்கள் மேல், பலாத்காரமாகவே இந்த யுத்தம் திணிக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தம் ஏன், எதற்கு என்று தெரியாது, மக்கள் அதில் பலியாகின்றனர்.

தப்பிச் செல்ல முனையும் முயல்கள் போல், மக்கள் அங்குமிங்கும் நெளிந்தோட முனைகின்றனர். அவர்கள் அனுபவிப்பதோ சொல்லொணாத் துயரங்கள். தம்...................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: