தமிழ் அரங்கம்

Thursday, January 1, 2009

விவசாயத்தை நாசமாக்கும் சாராய ஆலை

காரைக்காலைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தலைமையிலான ஆறுபேர் கொண்ட கும்பல்,புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி, ''போல்ட்நட்'' தயாரிக்கும் ஆலைத் தொடங்கப் போவதாக அறிவித்தது. பின்னர் பாட்டில் தண்ணீர் தயாரிக்கப் போவதாகக் கூறிப் பஞ்சாயத்து அனுமதி பெற்றது. இப்போது ''கால்ஸ்'' என்ற நிறுவனத்தின் பெயரில் சீமைச்சாராய வடிப்பு ஆலைக்கான எல்லா கட்டுமான வேலைகளையும் வேகமாகச் செய்து வருகின்றது. இரண்டு பெரிய ஆழ் குழாய் (சுமார் 480 அடி ஆழம்) கிணறுகளைத் தோண்டி அன்றாடம் 6 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை இப்போதே உறிஞ்ச ஆரம்பித்து விட்டது இந்த ''கால்ஸ்'' கும்பல். இது தவிர, இன்னும் பத்து ஆழ்குழாய் கிணறுகளைத் தோண்டி ஆலையை இயக்கத் தீர்மானித்துள்ளது.

No comments: