தமிழ் அரங்கம்

Monday, January 4, 2010

தில்லை கோயிலை மீண்டும் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க…உச்சநீதிமன்றத்தில் வழக்கு! நிதி தாரீர்!!

தில்லைக் கோயிலை அரசு மேற்கொண்டதற்கும், சிற்றம்பலத்தில் தமிழ் பாடுவதற்கும் எதிராகத் தடையாணை கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி. மேற்கூறிய இரு கோரிக்கைகளையும் போராடி வென்றவர்கள் என்ற முறையில், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் உச்சநீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்துள்ளோம்.


சட்டப்படி பார்த்தால், தற்போது நடைபெறும் வழக்கென்பது அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையிலானதுதான். மேலோட்டமாகப் பார்த்தால், தில்லைக் கோயிலை அறநிலையத் துறை மேற்கொண்டதை தி.மு.க. அரசின் சாதனையென்றும் சிலர் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால், 2000ஆவது ஆண்டில், தமிழ் பாடிய குற்றத்துக்காக சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுக சாமி தீட்சிதர்களால் அடித்து வீசப்பட்டபோதும் தி.மு.க. ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது என்பதையும்; அப்போது, அடித்த தீட்சிதர்களுக்கு பிணை வழங்கி வழியனுப்பி வைத்தது போலீசு என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்

ம.க.இ.கவின் தமிழ் மக்கள் இசை விழாவில் ஆறுமுகசாமி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான், தில்லைக் கோயிலில் தமிழ் பாட முடியாது என்ற உண்மையையே தமிழகம் அறிந்தது. இப்போராட்டத்தை நாங்கள் தொடங்கியபோது, ""வள்ளலார் முதல் வ.சுப.மாணிக்கனார் வரை பலரும் பார்த்துவிட்டார்கள். இப்போது நீங்களா?'' என்று பலர் பரிதாபப் பார்வை பார்த்தார்கள்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: