தமிழ் அரங்கம்

Saturday, May 2, 2009

தமிழ்மக்களைக் கொல்வதையே நியாயப்படுத்துகின்றான் ஒரு ஜனாதிபதி

நீ ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் மக்களை கொல்லலாம் என்றால், நான் ஏன் என் மக்களை கொல்;லக் கூடாது. நீ அதைக் கேட்கக் கூடாது. அதைக் கேட்கும் உரிமை உனக்கு இல்லை என்கின்றான், மாண்புமிகு கொலைகார ஜனாதிபதி. கொல்வது என்பது, ஜனாதிபதியின் உரிமை. இந்தக் கொல்லும் உரிமையை எப்படி செய்வது என்பதில், 'எமக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்" என்கின்றான்.

இப்படி நாங்கள் வரைமுறையின்றி தமிழ் மக்களை கொல்கின்றோம், இதைக் கேட்கும் உரிமை உனக்கில்லை. இது தான் ஏகாதிபத்திய நாட்டுத் தலைவர்களுக்கு, எமது அதி உத்தம பாசிச ஜனாதிபதி வழங்கிய பதில். தம்பி கோத்தாபாய மட்டுமல்ல அண்ணன் ராஜபக்சவும் தன் வேஷத்தைக் களைந்து கர்ச்சிக்கின்றான். கையெடுத்து கும்பிட்டு, இரந்து வாக்கு பிச்சை கேட்டு நடித்த நடிகன், இன்று ஒரு பாசிட்டாகவே கொக்கரிக்கின்றான்.

கொலைகார ஜனாதிபதி உலகுக்கு கூறும் தத்துவம் என்ன, நீங்கள் கொல்லலாம் என்றால் நாங்களும் கொல்லலாம். இது தான் ஒரு நாட்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, May 1, 2009

தமிழினப் படுகொலைக்கு எதிராக மேதின அறைகூவல்: சிறப்பு ஆவணம்

புலிகள் வன்னி மக்கள் அனைவருக்கும் பயிற்சியை வழங்கியவர்கள். அப்படியிருக்க ஏன் அந்த மக்களுக்கு புலிகள் துப்பாக்கிகளை வழங்கவில்லை? இந்தக் கேள்வி, பல விடைகளுக்கு பதில் தருகின்றது.

புலிகள் மக்களை என்றும் நம்பவில்லை. தாங்கள் அழிந்தாலும் பரவாயில்லை, ஆனால் மக்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதுதான், வலதுசாரிய புலிகளின் பாசிசச் சித்தாந்தமாக இருந்தது. இனவழிப்பு உச்சத்தில் இருந்த காலத்திலும், மக்கள் நடைப்பிணமாக ஓடிக்கொண்டிருந்தனர். மக்களை தம் யுத்த எடுபிடிகளாகவே பயன்படுத்தத்தான், புலிகள் விரும்பியிருந்தனர். தாம் பயிற்சி வழங்கிய மக்கள், தமது சொந்த யுத்த நெருக்கடி காலத்தில் கூட அவர்கள் ஆயுதமேந்துவதை புலிகள் விரும்பவில்லை. அது அந்த வர்க்கத்தின் அரசியல். புலிகளின் மிக நெருக்கடியான அரசியல் காலகட்டத்தில், இதை நாம் ஒரு அரசியல் கோரிக்கையாக கூட வைக்கத் தவறியிருந்தோம்.

இந்த நிலையில், இன்று கொல்லப்படும் மக்கள் யார்? இன்று முட்கம்பிக்கு பின் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் யார்? இவர்கள் புலிகள் அல்ல, மாறாக எம் மக்கள்.

இவர்களை யார் கொன்றனர்? யார் அடைத்து வைத்திருக்கின்றனர்? எம் மக்களினதும், இலங்கை மக்களினதும் பொது எதிரிதான்.

இப்படி எம் மக்களின் எதிரி அவர்கள் மேல் நடத்திய இனவொடுக்குமுறையினை, நாம் ஆவணமாக்கிக் தொகுத்துக் கொண்டிருக்கின்றோம். இதில் கீழ் உள்ள இருபகுதிக்கு ஊடாக, பேரினவாதத்தின் சில பக்கத்தை நீங்கள் தெளிவாக இனம் காணமுடியும்..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 30, 2009

மக்கள் மேல் மீளவும் கொலுவேறியுள்ள எதிர்புரட்சி

தமிழ் மக்கள் மீண்டும் ஒரு துயர வாழ்வுக்குள் வீழ்ந்துள்ளனர். தமிழ்மக்களின் சொந்த விடுதலைக்கு எதிராக புலிகளின் எதிர்ப்புரட்சி கடந்த 30 ஆண்டுகள் ஆற்றிய நடவடிக்கைகளால், இன்று இது தன் சொந்த அந்திமத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விடத்தை நிரப்புவது, புலியை விட மோசமான மற்றொரு எதிர்ப்புரட்சி கும்பலாகும். தமிழ் மக்களின் எதிரியும், எதிரியுடன் 30 ஆண்டு காலம் பயணித்து வந்த கூலிக் குழுக்களின் எதிர்ப்புரட்சி அரங்கேறியுள்ளது.

மக்கள் இனி இந்த எதிர்ப்புரட்சி கும்பலின் வக்கிரத்தை, அதன் ஒடுக்குமுறையை புதிய வடிவில் தரிசிக்கவுள்ளனர். கடந்தகாலத்தில் புலியின் பெயரால் இவர்கள் நடத்திய கொடுமைகளை, இந்த மக்கள் அறிந்தவை தான்.

கடந்த காலத்தில் ஒரு இலட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த அரசு தான், மீண்டும் புலியின் இடத்தில் அமருகின்றது. இது தமிழ்மக்கள் மேல் தன் பேரினவாதத்தை திணிக்கவுள்ளது. இது முன்பை விடவும் பாசிச வடிவம் கொண்டு, திமிரோடு எழுந்து நிற்கின்ற...........
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 29, 2009

பேரினவாதத்தின் வெற்றியை தடுத்து நிறுத்துவது எப்படி?

தமிழ் மக்களாகிய எம் கையில் அது உள்ளது. ஆனால் நாம் அடிமைகளாக்கப் பட்டுள்ளோம். செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, நாம் நடைப்பிணமாகியுள்ளோம். தமிழ் மக்களையே அழித்தொழிக்கும் பேரினவாத யுத்தத்தை ஒட்டி, தமிழ் மக்களாகிய நாம் எந்தக் கருத்தையும் சுதந்திரமாக கூற முடியாத அவலம். தமிழ் மக்களாகிய நாம், எம் சொந்தத் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாத வகையில் எமக்கு எதிராக பல துப்பாக்கிகள்.

ஒன்றலல் இரண்டல்ல. பல. புலிகள், துரோகக் குழுக்கள் முதல் பேரினவாதம் வரை, தமிழ் மக்கள் மேல் தம் துப்பாக்கியை நீட்டி வைத்து, இது தான் உங்கள் தலைவிதி என்கின்றன. சாதாரணமான மனித உரிமை முதல் இனத்தின் சுயநிர்ணயவுரிமை வரை மறுத்து, இது தான் தீர்வுகள் என்கின்றனர். இதைத்தான் இன்று தமிழ் மக்களாகிய நாம் அனுபவிக்கின்றோம்.

தமிழ் மக்களாகிய நாம் எம் விடுலை...........
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, April 28, 2009

பேரினவாத பாசிசத் தலைமையின் திமிரும், இந்தியா, சீனா, மேற்கு முரண்பாடுகளும்

நாலு தரப்பு முரண்பாடு, புலியை அழிப்பதன் பெயரால் தமிழரை எப்படி கொல்லுவது என்பதில்; ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் குடும்ப ஆட்சியை பாசிச சர்வாதிகாரமாக நிறுவ, பாசிட்டுகள் உலக 'நாகரிக" ஒழுங்கின் மூக்கணாம் கயிற்றை அறுத்துக்கொண்டு மூசுகின்றனர். பல தரப்பு முரண்பாட்டுக்கு ஊடாக தமிழரைக் கொன்று, அதை இலங்கைக்கான ஜனநாயகமாக காட்ட முனைகின்றது.

இதுவே யுத்த நெருக்கடியாக மாறி நிற்கின்றது. இது ஏற்படுத்தும் மனித அவலத்தை வைத்து, ஏகாதிபத்தியங்கள் முதல் இந்தியா வரை தத்தம் அரசியல் பொருளாதார நலனை இலங்கையில் நிறுவ, தன் முனைப்பு கொண்டு தமக்குள் ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர். இந்த எல்லையில் இந்த யுத்தத்துக்கு யார் அதிகம் தமிழனை கொல்ல உதவுதன் மூலம், இலங்கை அரசை தம் பக்கம் தக்கவைக்க முடியும் என்பதில் சீனா - இந்தியா முரண்பாடு கூர்மையாகியுள்ளது.

மறுபக்கத்தில் இந்த யுத்தத்தை ஆதரித்து நிற்கும் இந்தியா – சீனா நிலையை தனிமைப்படுத்தி, தன்னை நிலை நிறுத்த மேற்கு முனைப்பாக உள்ளது. அதற்கு இந்த யுத்தம் ஏற்படுத்தும் மனித அவலத்தைக் காட்டி, காய் நகர்த்துகின்றது. இந்தியா தன் பிடியை தக்கவைக்க யுத்தத்துக்கு உதவும் அதேநேரம், மேற்கு மனித அவலம் மூலம் ஏற்படுத்தும் தலையீட்டை தடுக்க, அதையும் தான் கவனித்துக் கொள்வதாக பாசாங்கு செய்கின்றது. இப்படித் தமிழர் புலியின் ...........
.முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அந்திய முதலீட்டுக்கு அபாரச் சலுகை

மக்களின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் கூத்துக்களை நோக்கித் திசை திருப்பிவிடப்பட்டிருக்கும் நேரமாகப் பார்த்து, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் முக்கியமான மாற்றத்தை மிகவும் கமுக்கமாக முடிவு செய்து அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்திருந்தால்கூட, அதற்கு எந்தவொரு ஓட்டுக்கட்சியும் முட்டுக்கட்டை போட்டிருக்கமாட்டார்கள்.

எதிர்க்கட்சிகள் என்ற முறையில் பா.ஜ.க.வும், போலி கம்யூனிஸ்டுகளும் முணுமுணுத்திருப்பார்களேயொழிய, அந்நிய முதலீட்டுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவதில் மன்மோகன் சிங்குக்கு வேறு தலைவலி எதுவும் ஏற்பட்டிருக்காது. எனினும், மன்மோகன் சிங் கும்பலோ அந்த வாசூப்பைக்கூட நாடாளுமன்றத்திற்குத் தராமல், அமைச்சரவையை மட்டும் கூட்டி முடிவெடுத்து இம்மாற்றத்தை அறிவித்து விட்டது.

மறுகாலனியாதிக்கச் சூழலில் நாடாளுமன்றத்திற்கு ""ரப்பர் ஸ்டாம்ப்'' என்ற மதிப்புமிக்க தகுதியைத் தருவதற்குக்கூட ஆளும் கும்பல் தயாராக இல்லை என்பதை மன்மோகன் சிங் மீண்டும் எடுத்துக் காட்டிவிட்டார். இப்படிப்பட்ட நிலையில், 15ஆவது.........
.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 27, 2009

மக்களுக்கான நிவாரணம் மூலம், பேரினவாத பாசிச இராணுவ இயந்திரத்துக்கு உதவக்கோருகின்றனர்

மக்களை கொலைவெறியுடன் கொன்றுகுவித்து அவர்களை எதுவுமற்ற பரதேசியாக்கிவர்கள், அதை காட்டி இன்று நிவாரணம் கோருகின்றனர். புலியெதிர்ப்பு பேசிய அரச கைக்கூலிகள், இதை காட்டி தமிழ் மக்களுக்கு பாய் விரிக்கின்றனர். அரசு சார்ந்து நின்று மதம் பரம்பும் கும்பல்கள், இதை பயன்படுத்தி மதத்தை பரப்பி மக்களுக்கு உதவுவதாக காட்ட முனைகின்றது.

அரச கூலிக்குழுக்கள் முதல் மதங்கள் வரை, இலங்கை பாசிச இயந்திரத்தின் ஒரு உறுப்பாக நின்று அதற்கு உதவுகின்றது. இதே போல் சர்வதேச அரசுகள், நிறுவனங்கள் கூட இதைத்தான் செய்கின்றது. பேரினவாதம் தமிழ்மக்களை கொன்று ஒரு இனத்தை அடக்கியொடுக்க, இராணுவமல்லாத சிவில் உறுப்புகளுக்கு பலமாக உதவுவது தான் இந்த உதவி.

இன்று இலங்கையில் பாசிச பேரினவாத இயந்திரமே, அனைத்தையும் கண்காணிக்கின்றது. இதைத் தாண்டி இதற்கு வெளியில் எந்த உதவியும் மக்களுக்கானதல்ல. அனைத்தும் இந்த எல்லைக்குள் தான் நிர்வகிக்கப்படுகின்றது.

மனிதாபிமானத்துடன் உதவ விரும்புபவர்கள், உங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஊடாக உங்கள் சமூகத்துக்கு நேரடியாக உதவுங்கள். அந்த .........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இராணுவ தீர்வு மூலம் தமிழினத்தை பேரினவாதம் அடிமை கொள்ளமுடியாது

தன் மீதான ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடுவதுதான் மனித வரலாறு. இதை ஒடுக்கி, மக்களை யாரும் வெல்ல முடியாது. இந்தவகையில் ஒரு இனத்தின் உரிமையை மறுக்கவே, புலிப் பாசிசத்தைக் காட்டுகின்றனர்.

அதே போல் ஒடுக்குமுறையிலான இராணுவத் தீர்வை மூடிமறைக்க முனைகின்றது. புலிகளின் கொடுமையான, கொடூரமான நடத்தைகளை முன்னிறுத்தி, தன் கொடுமைகளையும், கொடூரங்களையும், தமிழ்மக்களை வகைதொகையின்றி கொல்வதையும் மூடிமறைக்க முனைகின்றது. இதன் மூலம் மிக இலகுவாக ஒரு இனவழிப்பை, இனக்களையெடுப்பை, இனச்சுத்திகரிப்பை செய்கின்றது. மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றும், காயப்படுத்தியும், அங்கவீனராக்கியும், ஒரு தமிழ் சமூகத்தை உற்பத்தி செய்கின்றது. நாலு முட்கம்பிக்கு வேலிகளுக்கு பின்னால், முழு மக்களையும் பலாத்காரமாக சிறை வைத்திருக்கின்றது.

புலியிடம் 'மீட்டவர்கள்" களை, இன்று நாலு முட்கம்பி வேலிகளுக்கு பின்னால் அப்பாவி மக்களை அடைத்து வைத்துள்ளது. புலியை விட கேவலமாக, அடிமையாக இந்த மக்களை நடத்துகின்றது. புலிகள் தமக்காக சண்டைசெய்ய இழுத்துச் .
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, April 26, 2009

அரச கைக்கூலிகள் கூறுகின்றனர், தமிழ்மக்கள் இனி தம் உரிமைக்காக போராட மாட்டார்களாம்!?

இதை எவ்வளவு மகிழ்ச்சியுடன் கூறி இன்று கூத்தாடுகின்றனர் அரச கைக்கூலிகள். தமிழ் மக்கள் பற்றிய இவர்கள் கருசனை, இப்படித்தான் பாசிசமாக கொப்பளிக்கின்றது. தமிழ் மக்கள் தம் உரிமைக்காக போராடமாட்டார்கள் என்று கூறுகின்றவன் என்ன சொல்ல முனைகின்றான்,

மக்களுக்காக போராடாதே அடிமையாக மக்களை இருக்க விடு என்கின்றான். இதை அவன் தன் அறிவு மூலம் நிலைநாட்ட முனைகின்றான். பொய், பித்தலாட்டம், மோசடி, மூலம், மக்களின் வாழ்வு சார்ந்த எதார்த்தத்தை திரித்துக்காட்டி இதை நிறுவ முனைகின்றான்.

இதற்கு புலிகள் தான் உதவினர். தமிழ்மக்கள் அரசியல் அனாதைகளாகி நிற்கின்றனர். பொறுக்கிகளும், துரோகிகளும், சமூக விரோதிகளும், கைக்கூலிகளும் தமிழ்மக்கள் சார்பாக கொக்கரிக்கும் அவலநிலை.

தமிழரின் உரிமையின் பெயரால் புலிகள் ஆடிய பாசிசக் கூத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பேரின
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, April 25, 2009

குண்டு வீசி கொன்றவர்கள் போக, தப்பிவந்தவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்க உதவி கோருகின்றது பேரினவாதம்

ஒரு இனம் இப்படி வதைக்கப்படுகின்றது. எம் மக்களை குண்டு வீசிக்கொன்றவர்கள். அதற்கு அஞ்சி தப்பி ஓடிவந்தவர்களை 'மீட்பின்" பெயரால் வளைத்துப் பிடித்தனர், பிடிக்கின்றனர். பின் அவர்களை நாலு சிறைக்கம்பிக்குள் கொண்டுவந்து சிறைவந்துள்ளனர்.

இதற்குள் நடக்கும் இனச்சுத்திகரிப்பு, களையெடுப்பு, வெளிவர முடியாத கொடுமைகள் பல. இதை இந்த பேரினவாத பாசிச அரசு, திட்டமிட்ட தமிழ்மக்களுக்கு எதிராக செய்கின்றது. இதற்கு அவர்கள் இட்ட பெயர் 'மீட்பு" 'மனிதாபிமான நடிவடிக்கை" என்று பல. இதை தொடர்ந்து செய்ய, அவர்கள் உதவி கோருகின்றனர்.

புலம்பெயர் மண்ணில் தன் சொந்த கைக்கூலிகளாக உள்ள அரச எடுபிடிகள் மூலமும், பேரினவாத அரசின் துணையுடன் இயங்கும் 'டான்" தொலைகாட்சி மூலம், தம் சொந்த அரசியல் பித்தலாட்டங்களை முன்வைத்து கோருகின்றது. வணங்கா முடிக் கப்பலைச் சொல்லி புலம்பெயர் நாட்டில் திரட்டியது போல், உள் நாட்டில் மக்களை காட்டி இந்த கொலைகார பாசிச அரசு திரட்டுகின்றது.

இப்படி செய்திக........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தரகு முதலாளிகளுக்கு மானியம் தொழிலாளிகளுக்கு திருவோடு

ஜனவரி 26, 2009 அன்று மட்டும் ஏறத்தாழ 85,000 இந்தியத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் கருக்கப்பட்ட அதேநேரத்தில்தான், இந்திய அரசு தனது 60ஆவது ""குடியரசு'' தினத்தை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது.

இச் சம்பவம் நடந்து பத்துபதினைந்து நாட்கள் கழித்து நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவு அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்; பிரணாப் முகர்ஜி, ""உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையிலும் இந்தியா ஏழு சதவீதப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதாக''த் தனது உரையில் பீற்றிக் கொண்டார். இதைக் காணும்பொழுது, ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதைதான் நம் நினைவுக்கு வருகிறது.

ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையில் ஏற்படும் இழப்புகள் பற்றி கவலைப்படும் மைய அரச, கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக வேலையிழப்பு ஒரு சுனாமி போல இந்திய உழைக்கும் மக்களைத் தாக்குவது பற்றி அக்கறை கொள்ள மறுக்கிறது.
...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, April 24, 2009

புலம்பெயர் போராட்டங்களும், அதன் தோல்விகளும்

புலியின் தோல்வி போல் தான், புலம்பெயர் போராட்டங்களும் தோற்கின்றது. இரண்டுக்கும், ஒரே அரசியல் காரணம்தான். இளம்தோழர் ஒருவர் எம்மிடம் இதையொட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் அவர்

"பேரினவாத ஒடுக்குமுறையின் உச்சக்கட்டம் தலைவிரித்தாடும் ஈழப்பிரச்சினையில் அவ்வொடுக்குமுறைக்குள்ளாகும் இனமொன்றின் தேசிய உணர்வென்பது, அதன் தேசியப்போராட்டம் என்பது இயல்பாகவே முற்போக்கான அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதுதான்.
புலிக்கொடி, தலைவர் வழிபாடு, அப்படங்களையும் கொடிகளையும் வருகிற மக்களின் கையில் திணிக்கும் சிறு கும்பல் போன்றவற்றை விலக்கிப்பார்த்தால், அச்சமின்றியும், கண்ணீரோடும், எதிர்ப்புணர்வோடும் கோபத்தோடும் திரளும் இலட்சக்கணக்கான மக்களின் எதிர்ப்புணர்வென்பது அவ்வளவு இலகுவாக கண்டும் காணாமல் விடப்படக்கூடியதல்ல என்பதுதான்.
புலிகளின் துரோக அரசியலையோ, மக்களுக்கெதிரான அரசியலையோ அறிந்திராத, புதிய புலம்பெயர் தலைமுறை நண்பர்களுடன் தொலை பேசியதில் தம்மை ஒடுக்குமுகமாக, தமது இயக்கமொன்றைத் தடை செய்து, தமது இயக்கத்தின் சின்னங்க...........
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

திரவியம் தேடிப் போனவர்களின் துயரக் கதை

கொளுத்தியெடுக்கும் கடுமையான வெய்யிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி நிற்கின்றனர். சாப்பாட்டுக்குக் கூடப் போதாத தங்களது சம்பளத்தை உயர்த்தக் கோரியும், தாங்கள் அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப்படுவதை எதிர்த்தும் அவர்களது போராட்டம் தொடங்குகிறது.

போராட்டத்தை ஒடுக்கக் கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இராணுவம் வரவழைக்கப்பட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. ஹெலிகாப்டரிலிருந்து கண்ணீர்ப் புகைகுண்டுகள் வீசப்படுகின்றன. கைது செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை. முன்னணியாளர்கள் நாட்டைவிட்டே வெளியேற்றப்படுகின்றனர்.

பல்லாயிரம் தமிழர்களின் கனவு தேசமாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில்தான் இவையனைத்தும் நடைபெற்றன.............
......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, April 23, 2009

மாறும் அரசியல் சூழலை உள்வாங்கி எதிர்வினையாற்றுவதே, எமது உடனடியான அரசியல் இலக்காகும்

கடந்தகாலத்தில் கடுமையாகப் புலிகளை விமர்சித்து வந்த நாம், இன்று அதை அரசுக்கு எதிராக செய்யத் தொடங்கியுள்ளோம். இந்த அரசியல் நிலைப்பாடு என்பது, உடனடியான அரசியல் இலக்கை இனம் கண்டு கையாளப்படுகின்றது. இந்த வகையில் எமது விமர்சன முறைக்கான அரசியல் அடிப்படை மிகவும் துல்லியமானதும், தெளிவானதுமாகும்.

சமூகத்தை எந்தப் போக்கு ஆதிக்கம் வகித்துக் கொண்டிருந்ததோ, அதற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி நடத்தினோம், நடத்தி வருகின்றோம்.

கடந்தகாலத்தில் புலிகள் தமிழ்மக்களை தம் வலதுசாரிய பாசிசப் பிடிக்குள் கட்டிவைத்திருந்தனர். இந்த நிலையில் மக்கள் முன் அவர்களை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்திப் போராடினோம். இது அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப, மிகச் ச..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 22, 2009

கத்தி விளிம்பில் நடந்தபடி போராட வேண்டியுள்ளது

மிக நெருக்கடியான சூழலில், தமிழினத்தின் உரிமைக்கான குரலை முன்வைப்பது, முன்னெப்போதும் இல்லாத வகையில் சிரமமாகி வருகின்றது. எம்மைச் சுற்றி பல முனைத் தாக்குதல்கள். எதிர்ப்புரட்சி அரசியல் வீறு கொண்டு நிற்கின்றது. பேரினவாதத்தின் பின் வா என்று, சுற்றி சுற்றி மூளைச் சலவை செய்யப்படுகின்றது.

புலியல்லாத அரசியல் தளம் பேரினவாதத்தின் பிரச்சார அமைப்பாகிவிட்டது. மக்களுக்காக யாருமில்லை. பேரினவாதம் தான் மக்களை காப்பாற்றுவதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

இதற்கு எதிரான போராட்டம் என்பது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எம்மைச் சுற்றியுள்ள அரசியல் ரீதியான நண்பர்களுடன் கடுமையான முரண்பாட்டைக் கடக்காமல், இந்த அரசியல் பணியை நாம் முன்னெடுக்கவில்லை. 30 வருட அரசியல் நட்புகள் கூட, இன்று எம்மைச்சுற்றிய அரசியல் நிகழ்வுகளால் அதிருகின்றது. கோபம், பகை, முரண்பாடு, நட்பு என்று எம் உணர்வுகளும், உணர்ச்சிகளும் இன்றி நாம் பயணிக்கவில்லை.

அன்றாட நிகழ்........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தமிழ் மக்களுக்கு எதிரான ஊடக வன்முறையும், மொழி வன்முறையும்

பேரினவாதம் தன் இனவழிப்பை குண்டுகள் மட்டும் போட்டுச் செய்யவில்லை. மொழி மூலமும் அதைச் செய்கின்றது. தமிழினத்தை அழிக்கும் வண்ணம் நடத்துகின்ற யுத்தத்தை, ஏதோ மனித விரோத கும்பலுக்கு எதிராக தாம் நடத்துவதாக காட்டமுனைகின்றது. இதற்கூடாக தன்னை நியாயப்படுத்திக் கொள்கின்றது. இதற்கு மொழியையும் அது தேர்ந்தெடுத்துள்ளது.

புலிகளை மட்டும் கொடுமையான கொடூரமான ஒன்றாகவும், அதை ஒழிக்க தான் புறப்பட்டுள்ளதாகவும் இது சித்தரிக்கின்றது. இதை தமிழ் இடதுசாரியம் வரை, அது ஏற்க வைத்துள்ளது. இப்படி பேரினவாத ஊடகவியல், தன் இனவொழிப்பு அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. இதை தமிழ் ஊடகவியல் அப்படியே வாந்தியெடுக்கின்றது.

நடப்பது இனவொழிப்பு யுத்தம் என்பதை ஏற்றுக் கொள்ளாத தமிழ் ஊடகவியல். புலியெதிர்ப்பு, பேரினவாதத்தை நிலைநாட்டுவதுதான் இன்று.......
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

வங்கதேசத் துணை இராணுவக் கலகமும் இந்தியாவைச் சூழ்ந்துள்ள பேரபாயமும்

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் நாளன்று துணை இராணுவப் படையினர் நடத்திய கலகமும், இராணுவ உயரதிகாரிகள் - அவர்களது குடும்பத்தாரோடு சேர்த்து கொல்லப்பட்டிருப்பதும் இந்திய துணைக் கண்டத்து நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதித் திட்டத்தோடு நடந்துள்ள இக்கலகமும் படுகொலைகளும் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளபோதிலும், அது மீண்டும் நடப்பதற்கான அபாயம் அந்நாட்டைக் கவ்வியுள்ளது.

வங்கதேசத் தலைநகரான டாக்காவில் உள்ள பில்கானா பகுதியில் பங்களாதேஷ் ரைபிள்ஸ் (ஆஈகீ) எனும் துணை இராணுவப் படையின் தலைமையகம் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 25ஆம் நாளன்று அங்கு அப்படையின் ஆண்டு விழாக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அந்த அரங்கைச் சுற்றி வளைத்த சிப்பாய்கள், அப்படையின் தலைமை இயக்குனரான ஷகீல்.............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, April 21, 2009

இனவழிப்பு யுத்தமா அல்லது அரசு-புலி யுத்தமா நடக்கின்றது!?

அரசியலை துறந்தோடிய எம் சமூகத்தில், புலி-புலியெதிர்ப்பு என்று மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைக்குள் ஒரு இனவழிப்பு அழகாக நியாயப்படுத்தப்படுகின்றது. இதுவொரு இனவழிப்பல்ல, அரசு-புலி என்ற தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் சொந்த அழிவு யுத்தம் என்று எம்மை அரசியல் ரீதியாக திருத்த முனைகின்றனர். வெட்கக்கேடானதும், மானம் கெட்ட அரசியலாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதைக் கண்டுகொள்ளக் கூடாது. இந்த அழிவை மௌனமாக அங்கீகரிக்க வேண்டும் என்கின்றனர். சிங்களப் பேரினவாதத்தின் தமிழினம் மீதான ஒடுக்குமுறையின் தொடர்ச்சியில் ஒரு அங்கம் தான் இது என்பதை, மறுக்கின்றனர். எல்லா புலியெதிர்ப்பு அரசியலும் போல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை விடுதலைப் புலிகளின் அழிவின் ஊடாக பார்க்கின்றனர்.

விடுதலைப்புலிகள் அழிந்தால் நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்கின்றனர். இதற்காக அவர்கள் வைக்கும் காரணங்கள் வேறுபட்ட போதும், விடுதலைப்புலிகளின் அரசியல் அழிவை தம் சொந்த அரசியல் முன்னெடுப்புகள் ஊடாக முன்னெடுக்கவில்லை. இன்று பேரினவாதம் தன் இனவழிப்பின் ஒரு அங்கமாக, அதற்கு தடையாக இருந்த புலிகளை அழிக்கின்றனர். இப்படி தம் சொந்த அரசியல் நெருக்கடியில் சிக்கிய புலிகளிடம், ஆயுதத்தை கையளிக்கவும் சரணடையவும் கோருகின்ற அரசியல் முன்வைக்கப்படுகின்றது. இதன் மறுபக்கத்தில் புலிகளே இந்தத் ஒரு துரோகத்துக்கான அரசியல் பேரங்களை ஏகாதிபத்தியங்கள் ஊடாக நடத்துகின்றனர்.

மொத்தத்தில் ஒ......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இனப்படுகொலையை...

காலாகாலமாக ஒரு இனத்தை ஒடுக்கி, உரிமைகளை மறுத்த அரசு, இன்று ஒரு இனப்படுகொலையை நடத்துகின்றது. காலகாலமாக எந்தனையோ இனவழிப்புக்களை நடத்தியவர்கள், இன்று ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்கின்றனர்.

அந்த மக்களின் மண்ணில் வைத்து, அதுவும் அரசு தானாக அறிவித்த யுத்த சூனிய பிரதேசத்தில் வைத்து, இவை அனைத்தும் அரங்கேறுகின்றது. தமிழினம் மீது நடத்திய இன ஆக்கிரமிப்பு யுத்தம் மூலம், தமிழினம் மீதான மனித அவலத்தை அரங்கேறுகின்றனர். இவை அனைத்தும் புலிகளின் பெயரில் நியாயப்படுத்தப்படுகின்றது...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 20, 2009

பேரினவாதம் நடத்திய இனவழிப்பு, இன்று பாரிய மனிதப் படுகொலையாகி வருகின்றது

காலாகாலமாக ஒரு இனத்தை ஒடுக்கி, உரிமைகளை மறுத்த அரசு, இன்று ஒரு இனப்படுகொலையை நடத்துகின்றது. காலகாலமாக எந்தனையோ இனவழிப்புக்களை நடத்தியவர்கள், இன்று ஆயிரக்கணக்கில் மக்களை படுகொலை செய்கின்றனர்.

அந்த மக்களின் மண்ணில் வைத்து, அதுவும் அரசு தானாக அறிவித்த யுத்த சூனிய பிரதேசத்தில் வைத்து, இவை அனைத்தும் அரங்கேறுகின்றது. தமிழினம் மீது நடத்திய இன ஆக்கிரமிப்பு யுத்தம் மூலம், தமிழினம் மீதான மனித அவலத்தை அரங்கேறுகின்றனர். இவை அனைத்தும் புலிகளின் பெயரில் நியாயப்படுத்தப்படுகின்றது.
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்