தமிழ் அரங்கம்

Monday, May 26, 2008

அவசர வேண்டுகோள் - ஆசிய மனித உரிமைகள் குழு AHRC

இரு இளவயது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுதிய குற்றச் செயலையோ, மறுநாள் மீண்டும் வந்து மூத்த பிள்ளையை வெள்ளைவானில் கடத்திச் சென்ற கடத்தல் சம்பவத்தையோ பதிவுசெய்ய மறுத்தது பொலிஸ். அதுசம்பந்தமான எந்த நடவடிக்கைக்கும் தயாரற்று வாளாவிருந்தது பொலிஸ். கல்முனையில் 10,11 மே 2008 இல் நடந்தேறிய இந்தச் சம்பவத்தை ஆசிய மனித உரிமைகள் குழு (AHRC) பதிவுசெய்திருக்கிறது.


ஒரு மனிதாபிமான வேண்டுகோள்
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் உடனடியான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டும், கடத்தப்படவரை வெளியில் கொண்டுவருவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படியும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்புப் படையினரோ இல்லையோ இவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொள்ளும் படியும், இது சம்பந்தமான செயற்பட மறுத்த பொலிசார்மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரும் கடிதத்தை கீழுள்ள முகவரிக்கு (மின்தபால் மூலமாவது) அனுப்பிவைக்கும்படி மனிதாபிமானமுள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறது யுர்சுஊ. (அனுப்பப்பட வேண்டிய முகவரிகளும், கடிதத்தின் மாதிரி வடிவமும் கீழ் உள்ளது.)
.

No comments: