தமிழ் அரங்கம்

Monday, November 10, 2008

சோமாலியா : ஏகாதிபத்தியங்களின் அட்டூழியம்! யுத்தபிரபுகளின் சூரத்தனம்!

அரபிக் கடலின் மேற்கே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உச்சியிலுள்ள ஏடன் வளைகுடாவின் செங்கடலில் இதமாக அலைவீசிக் கொண்டிருந்தது. கடந்த செப்டம்பர் 25ஆம் நாளன்று ஏடன் வளைகுடா வழியாக உக்ரேனிய நாட்டின் ""எம்.வி.ஃபைனா'' என்ற ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் செங்கடலில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. திடீரென அதிநவீன ஆயுதங்களுடன் விசைப்படகுகளில் திரண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கப்பலை வழிமறித்து,

மாலுமிகளைச் சிறைபிடித்து அச்சரக்குக் கப்பலைக் கடத்திச் சென்றனர். கப்பலையும் மாலுமிகளையும் விடுவிக்க வேண்டுமானால், அக்கப்பல் நிறுவனம் 80 லட்சம் டாலர் (ஏறத்தாழ 36 கோடி ரூபாய்) தரவேண்டும் என்றும், இல்லையேல் மாலுமிகளையும் கப்பல் ஊழியர்களையும் சுட்டுக் கொன்று விடுவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

""ஐயோ! கடற்கொள்ளையர்கள்!'' என்று அலறியது அக்கப்பல் நிறுவனம். உக்ரைன் நாட்டு சரக்குக் கப்பல் மட்டுமல்ல; கடந்த ஜனவரியிலிருந்து ஏடன் வளைகுடா பகுதியில் 69 சரக்குக் கப்பல்கள் கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளன. 27 கப்பல்கள் கடத்திச் செல்லப்பட்டு கடற் கொள்ளையர்களின் பிடியில் உள்ளன. 200க்கும் மேற்பட்ட மாலுமிகளும் கப்பல் ஊழியர்களும் பிணைக் கைதிகளாக்கப்பட்டுள்ளனர்.

உக்ரேனிய ஆயுதத் தளவாட சரக்குக் கப்பல் கடத்திச் செல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்னதாக, ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட ""எம்.வி. ஸ்டோல்ட்வலோர்'' என்ற இரசாயன சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இக்கப்பலின் தலைமை மாலுமியான கேப்டர் பிரபாத்குமார் கோயல் இந்தியராவார். அவருடன். ........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: